Page 354 of 401 FirstFirst ... 254304344352353354355356364 ... LastLast
Results 3,531 to 3,540 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #3531
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு இனிய அநுபவத்தை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் . நேற்று "பாபநாசம் " படம் பார்த்தேன் - அந்த படத்தைப்பற்றிய ஒரு சின்ன அலசல் தான் இந்த பதிவு .

    நேரம் கிடைக்கும் போது இந்த பதிவைப்படியுங்கள் , படத்தையும் குடும்பத்துடன் தியேட்டருக்கு ச் சென்று பாருங்கள் .

    இந்த படம் மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி , தமிழ் என்று பல மொழிகளில் வெளிவந்து வெற்றிக்கொடியை நாட்டி . ஹிந்தி யில் படம் உருவாகிக்கொண்டு இருக்கிறது . உலக நாயகனனின் நடிப்புக்கு நீண்ட நாட்களுக்குபிறகு நன்றாக தீனி போட்டப்படம் .

    படத்தின் சிறப்புக்கள்

    நீரோட்டம் போல தெளிவாக ஓடும் படம் - ஒரிஜினல் கதையை சிறிதும் சிதைக்காமல் , நிஜ வாழ்க்கையிலும் இணைந்த அந்த ஒரிஜினல் ஜோடியையே போட்டு படம் எடுத்திருக்கிறார்கள் . அதனால் நெருங்கி நடிக்கும் சில காட்சிகளில் செயற்கைத் தெரியவில்லை .

    ஒரு நடுத்தர குடும்பம் எப்படி இருக்கும் என்பதை கமல் மிகவும் அழகாக தன் நடிப்பின் மூலம் புரியவைப்பார் .

    அதிகம் படிக்காத தந்தை - வீட்டில் anchor ஆக இருக்கும் அவனுடைய மனைவி , பள்ளிக்குச்செல்லும் இரண்டு அழகான பெண் பிள்ளைகள் - அவனுடைய உலகம் மிகவும் சிறியது . ஆனால் அவன் மனம் ஒரு பெரிய பாசக்கடல் . படம் பார்க்கும் போது நாமும் நம்மை அறியாமலேயே அந்த குடும்பத்தில் ஒருவராகி விடுவோம் . அவன் எப்படி தன் மகளை ஒரு பழியிலிருந்து பாதுக்காக்கிறான் என்பதுதான் படத்தின் மீதி பாதி .

    நடிகர் திலகத்தின் பெருமை

    ந .தி யின் உண்மையான ரசிகன் என்பதை கமல் ஆத்மார்த்தமாக சொல்லும் சில வார்த்தைகளில் புரிந்துவிடும் .

    " பாசமலரைபார்த்து அழாதவன் ஒரு மனிதனே இல்லை " என்று அழுதுகொண்டே சொல்வதும் , சிவாஜியின் நடிப்பை புரிந்துக்கொள்ளாதவன் ஒரு நல்ல ரசிகனும் இல்லை இன்று அவருடைய assistant யைப்பார்த்து கோபத்துடன் சொல்வதும் , கண்ணாடியில் , சிவாஜி ஸ்டைலில் முடியை முன்னுக்கு சுருட்டி விடுவதும் , அதையே பெருமையாக தன் மகளுடன் பகிர்ந்து கொள்வதும் , கமலின் உண்மையான ஆதங்கத்தில் ஒரு முத்திரை .

    பல இடங்களில் அவரின் நடிப்பு நடிகர் திலகத்தின் பாணியிலே இருக்கும் - கடைசியில் அவர் குமறும்போது அந்த மாமேதையின் நடிப்பைத்தான் நமக்கு ஞாபகப்படுத்தும் .

    கருவின் கரு :

    தந்தை- மகள் பந்தம் ; தாய் -மகன் பந்தம் இப்படி கருவின் கருவை 3மணி நேரம் அருமையாக எடுத்துச்சொல்லும் படம்.

    மகன் கெட்டவனாக ஆனதிற்கு எங்கள் கவனக்குறைவு தான் காரணம் - அவன் கேட்க்காமலேயே பல கெட்ட பழக்கங்கள் அவனுக்குள் வருவதற்கு எங்கள் பொறுப்பின்மைத்தான் காரணம் - என்று புலம்பும் ஒரு பெற்றோர் ஒரு பக்கம் ; என்ன ஆனாலும் , எது வந்தாலும் தான் பெற்ற குழந்தைகளை காப்பற்ற வேண்டும் - இதில் பொய் சொல்வதில் தவறு இல்லை என்று போராடும் பெற்றோர் ஒருபக்கம் - இவர்களை பார்த்துக்கொண்டே வாயடைத்துப் போகும் நாம் ஒருபக்கம் - இந்த எல்லா பக்கங்களையும் சேர்த்து வைப்பது இந்த படத்தின் வெற்றி , கமலின் நடிப்பு.

    சில குறைகள் - படத்தின் நீளம் அதிகம் - குறைத்திருக்கலாம் - பாடல்கள் சட்டென்று மனதில் பதிய வில்லை - மலையாளம் நிறைந்த வாடைகள் அதிகமாக உள்ளன .. மீனா இன்னும் சிறப்பாக செய்திருப்பாள் கெளதமியை விட என்றே எண்ண தோன்றுகின்றது சில இடங்களில் .

    "நாயகன்" கமலையும் , நடிகர் திலகத்தையும் மீண்டும் சேர்ந்து ஒரு படத்தில் பார்த்த திருப்தி - படம் தந்த பாடம் அதிகம் ...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3532
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சத்யம் தொலைக்காட்சியில் திரைப்படம் தோன்றியவரலாறுகளைப்பற்றியும்,
    ஆரம்ப காலத்தில் மக்களுக்கு திரையிட்ட திரைப்படங்களைப் பற்றியஆவணப்படம் ஒன்று காட்டப்பட்டது.உலகில் முதன்முதலில் காட்டப்பட்ட படங்களில் ஒன்று.,ரயில் நிலையத்தில் ரயில் வந்து நிற்பது போல் எடுக்கப்பட்ட படம்.இதில் வேடிக்கை என்னவென்றால் ரயில் வரும்போது நம்மீது வந்து மோதிவிடுமோ என்ற பயத்தில் மக்கள் ஓடி விட்டனர் என்பது செய்தி. இதைஎல்லோரும் படித்திருக்கலாம்.இது எப்படி சாத்தியம் என்பதேஅப்போது மக்களின் கேள்வியாக இருந்தது.சிறிது சிறிதாக பொழுது போக்குவிஷயமாக திரைப்படம் உருவெடுத்தது.சாதாரணமாக வந்த காட்சி அமைப்புகளே பெரிய விஷயமாக மக்கள் ரசித்து வந்து கொண்டிருந்த காலகட்டம் அது.
    தமிழ் திரையுலகிலும் 1952 வரை இதே நிலைதான்.தெருகூத்து போன்ற கலைகளைபார்த்து பொழுது போக்கி வந்த தமிழ் மக்களுக்கு திரைப்படம்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் என்ன? உப்பு சப்பில்லாத சாதம் சாப்பிடுவது போல்இது தான் உயர்ந்தது என்ற சிந்தனையுடன் 1952 க்கு முன் வந்த திரைப்படங்களைபார்த்து வந்தனர்.
    சிவாஜியின் நடிப்பாற்றலும்,வசன உச்சரிப்புகளும் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்ததது.மேலும் தமிழ் மக்களுக்கு நடிப்பின் புதிய பரிணாமங்களை
    உ ணரவைத்தது.தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதுடன்புதிய புதிய தொழில் நுட்பங்களுக்கும் வழி வகுத்தன.அதற்கெல்லாம் காரணம் அவருடைய அவருடைய விதவிதமான, வித்தியாசமான நடிப்பாற்றல் தான்.
    தொழில் நுட்பங்கள் தான் பிற்கால சினிமாவைவளர்ச்சி அடைந்தாக காட்டின. ஆனால் அவருடைய நடிப்புக்கு முன்னால் எந்த தொழில் நுட்பங்களும் எடுபட முடியாதஅளவுக்குஅவரின் நடிப்பாற்றல் விளங்கியது.தொழில்நுட்பங்கள் எல்லாம் அவர் படத்தில் ஒரு கருவிகள்மட்டுமே.



    தொடரும்...
    Last edited by senthilvel; 7th July 2015 at 01:53 PM.

  4. #3533
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    NT QUOTES - 1 ..

    In this series what Nadigar Thilagam has said about acting and on life will appear (in image format as much as possible).

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3534
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy Mr. Sudhangan Face book
    செலுலாய்ட் சோழன் – 82
    `புதிய பறவை’ படம் வந்து ஐம்பது வfருடங்களாகப்போகிறது!
    ஆனாலும் இன்றுவரை அந்தப் படத்தின் பாடல்கள் மக்கள் மனதைவிட்டு அகலவில்லை!
    தொலைக்காட்சிகளாலும் அந்த பாடல்களை தவிர்க்க முடியவில்லை!
    `உன்னை ஒன்று கேட்பேன்; உண்மை சொல்ல வேண்டும்!
    `பார்த்த ஞாபகம் இல்லையோ! பருவ நாடகம் தொல்லையோ!
    `சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து’
    `ஆஹா! மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்’
    `எங்கே நிம்மதி’
    பாடல்கள் அமைந்த விதம்!
    எழுதப்பட்ட கவியரசு கண்ணதாசன் வரிகள்!
    கதாபாத்திரங்களின் உடைகள்!
    எல்லாமே அருமையாக அமைந்திருக்கும்!
    ஆனால் சிவாஜி சொல்லி எழுதப்பட்ட அவரது சரிதையில் இந்த படத்தைப் பற்றியே குறிப்பே இல்லை!
    அது சிவாஜியின் கவனக்குறைவா?
    அல்லது எழுதியவர் அதை நினைவு படுத்த தவறிவிட்டாரா என்பது தெரியவில்லை!
    வியப்பாகவே இருந்தது!
    கண்ணதாசனின் ஒரு பேட்டியில் நான் இதைப்படித்திருக்கிறேன்
    `புதிய பறவை படத்திற்கு எல்லா பாடல்களும் தயாரானது!
    ஒரு பாடல் மட்டும் சிக்கித் தவித்தது!
    அதுதான் ` எங்கே நிம்மதி’ பாட்டு!
    கதாநாயகனின் மனவேதனையை விளக்கும் பாட்டு அது!
    டியூன் சரியாக அமையவில்லை!
    விஸ்வநாதன், கண்ணதாசனிடம் `நீங்கள் ஏதோ சில வரிகளை சொல்லுங்கள் அதிலிருந்து ஏதாவது ட்யூன் வருகிறதா என்று பார்ப்போம்’ என்றார்
    கண்ணதாசனுக்கும் வார்த்தை பிடிபடவில்லை!
    இருவருமாக ஒரு முடிவெடுத்தார்கள்!
    இந்தப் பாடலுக்கு சிவாஜி எப்படி நடிப்பார் என்று அவரை கேட்கலாம்!
    அதிலிருந்து ஏதாவது சங்கதி வருகிறதா பார்க்கலாம் என்று முடிவு செய்தார்கள்.
    சிவாஜி வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது!
    இயக்குனர் காட்சியை விளக்கினார்!
    சிவாஜி சற்று யோசித்து நடந்து காட்டினார்!
    உடனே கவிஞருக்கு ` எங்கே நிம்மதி!’ என்கிற வார்த்தை வந்து விழுந்தது!
    உடனே அந்தப் பாடல் பிறந்தது!
    பாடல்களில் தான் எத்தனை வயலின்கள்!
    கீ போர்டுகளை வைத்துக் கொண்டு அந்த பாடலை மேடையில் கேட்கும்போது நாராசமாக இருக்கும்!
    இந்த படத்தில் சிவாஜி மெலிதாக ஒரு சட்டையை பயன்படுத்தியிருப்பார்!
    உள்ளே பனியன் இருக்காது!
    அவரது உடல் தெரியும்!
    இதே மாதிரி சட்டையை அவர் இரண்டு பாடல்களில் பயன்படுத்தியிருப்பார்!
    `ஆஹா மெல்ல நட’ பாட்டில் மஞ்சள் நிற சட்டை அதே நிறத்தில் பேண்ட்!
    `எங்கே நிம்மதி’ பாடலில் வெள்ளை நிற சட்டை, நீலநிற பேண்ட்!
    அந்த சட்டைக்கு பெயர் டெலிலின் சட்டை என்று பெயர்!
    அந்த படத்தை பார்த்து விட்டு பனியன் வியாபார்கள் கோபித்துக் கொண்டார்களாம்!
    காரணம் படத்தைப் பார்த்தபின் சிவாஜி ரசிகர்கள் டெரிலீன் சட்டைக்கு பனியன் போடுவதை நிறுத்திவிட்டார்கள்.
    அப்படி நிறுத்திய பிரபல ரசிகர் நடிகர் சிவகுமார்! இதை அவரே எழுதியிருப்பார்!
    பாடலைப் பற்றி சொல்லும் போது இந்த இடத்தில் இன்னொரு பாட்டையும் சொல்லியாக வேண்டும்.
    சிவாஜியும் எம்.எஸ். விஸ்வநாதனும் மிகச் சிறந்த நண்பர்கள்!
    விஸ்வநாதனின் மிகப்பெரிய ரசிகர் சிவாஜி!
    தன் பாடல்களுக்கு சிவாஜி இசையமைக்கும் போது , அந்த ராகம், மென்மை, நளினம் தேவைப்படும்போது வீரம், கோபம் என்று பலவித உணர்வுகளைப் பாடல் சுமந்து வரும்.
    அப்படிப்பட்ட பாடல்கள் அந்த காட்சியில் நடிப்பின் பல்வேறு புதுப் பரிமாணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை தனக்கு அளிப்பதாக நம்பினார் சிவாஜி!
    `சாந்தி’ படம்!
    அதில் ` யார்ந்த நிலவு’ என்கிற பாடல்!
    இந்த பாடல் மிகவும் வித்யாசமான இசை!
    இந்த டியூனை கேட்டவுடன், கண்ணதாசன் மிரண்டுவிட்டார்!
    ` என்னடா ட்யூன் இது! சாவடிக்கிறே; என்றார்!
    பல நாட்கள் அந்த ட்யூனுக்கு சரியான வார்த்தைகள், அதுவும் அந்த காட்சிக்கேற்ப வந்த விழுவில்லை!
    அந்த ட்யூனைப் போடவே எம்.எஸ்,விக்கு பல நாட்கள் ஆயிற்று!
    இப்போது எம்.எஸ்.வி, வரிகளுக்காக கண்ணதாசனை விரட்டிக்கொண்டிருந்தார்.
    `நீ மட்டுமே ட்யூன் போட பத்து நாள் எடுத்துப்பே? நான் மட்டும் உடனே தரணுமோ’ இது கண்ணதாசன்!
    ஒரு வழியாக கண்ணதாசன் எழுதிக் கொடுத்துவிட்டார்!
    பாடலில் காட்சியோ வித்யாசமானது!
    குருட்டுப் பெண், விஜயகுமாரியை படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன் திருமணம் செய்து கொண்டிருப்பார்!
    முதல் இரவு நடப்பதற்கு முன்பே எஸ்.எஸ். ஆர் இறந்துவிட்டதாக செய்தி வரும்!
    இப்போது அந்த விஷயம் விஜயகுமாரிக்கு தெரியாது.
    எஸ்.எஸ். ஆரின் நண்பர் சிவாஜி!
    சிவாஜி அந்த குருட்டுப் பெண் கணவனாக நினைத்துக் கொண்டு விடுகிறாள்
    சிவாஜி துடிக்கிறார்!
    அந்த சூழலுக்காக பாட்டு இது!
    யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவும்!
    யாரோ சொல்ல யாரோ என்று
    யாரோ வந்த உறவு!
    காலம் செய்த கோலம் இங்கு நான வந்த வரவு!
    மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
    மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
    தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ உன்
    கோயில் தீபம் மாறியதை நீ அறியாயோ?
    ஆடிய நாடகம் முடியவில்லை ஒரு நாளில்!
    அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே!
    தெய்வமே யாருடம் மேடையில் நீ நின்றாயோ – இன்று
    யாரை யாராய் தோளில் நீ கண்டாயோ ?
    வாழ்வது போலொரு பாவனை காட்டும் நெஞ்சமே –கண்
    பாராதிருந்தால் நிம்மதியாவது மிஞ்சுமே
    ஐயோ கானலை நீரென நீ நினைத்தாயோ – உன்
    ஏழை நெஞ்சில் உண்மை ஏதென அறியாயோ?
    இந்தப் பாடலை கேட்டவர்களுக்கு அந்த இசையும், இந்த வரிகளின் ஆழமும் தெரியும்.
    பாடல் பதிவாகி சிவாஜிக்கு அனுப்பப்பட்டது!
    சிவாஜி ஆழ்ந்து பாடலை கேட்டார்!
    எத்தனை நாளில் இந்த பாடல் உருவானது என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.
    இந்தப் பாடல் பதிவாக கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது.
    உடனே படப்பிடிப்புக்கு தேதி குறித்தார்கள்.
    வழக்கமாக சிவாஜியால் எந்த படப்பிடிப்பும் தள்ளி போனதேயில்லை.
    தன்னால் தயாரிப்பாளருக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது என்று நினைப்பார்!
    அதே போல் தன்னால் படப்பிடிப்பு தாமதாமகக் கூடாது என்பதால் எல்லோருக்கும் முன்னால் மேக்கப்புடன் படப்பிடிப்பு தளத்தில் முதல் ஆளாக இருப்பவரும் அவர்தான்.
    ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை!
    இந்தத் தேதி படப்பிடிப்புக்கான தேதி குறிக்கப்ட்ட நாளிலிருந்து, எப்போது சிவாஜி இந்தப் பாட்டையே கேட்டுக்கொண்டிருந்தார்.
    இந்த பாடலுக்கு நடன இயக்குனர் கிடையாது!
    ஆனால் பாடலோ அருமையாக வந்திருக்கிறது!
    படப்பிடிப்புக்கு முதல் நாள் சம்மந்தப்பட்டவர்களை அழைத்து, `ஷீட்டிங் தேதியை தள்ளிப் போடச் சொல்லு!
    நான் பின்னால சொல்றேன்’
    சிவாஜியின் இந்த முடிவு எல்லோரையும் திகைக்க வைத்தது!
    (தொடரும்)
    (நெல்லை தினமலர் வாரமலரில் 5.07.2015 அன்று வெளிவந்தது)

  6. Likes KCSHEKAR, Russellmai, J.Radhakrishnan liked this post
  7. #3535
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    Quote Originally Posted by g94127302 View Post
    ஒரு இனிய அநுபவத்தை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் . நேற்று "பாபநாசம் " படம் பார்த்தேன் - அந்த படத்தைப்பற்றிய ஒரு சின்ன அலசல் தான் இந்த பதிவு .

    நேரம் கிடைக்கும் போது இந்த பதிவைப்படியுங்கள் , படத்தையும் குடும்பத்துடன் தியேட்டருக்கு ச் சென்று பாருங்கள் .

    இந்த படம் மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி , தமிழ் என்று பல மொழிகளில் வெளிவந்து வெற்றிக்கொடியை நாட்டி . ஹிந்தி யில் படம் உருவாகிக்கொண்டு இருக்கிறது . உலக நாயகனனின் நடிப்புக்கு நீண்ட நாட்களுக்குபிறகு நன்றாக தீனி போட்டப்படம் .

    படத்தின் சிறப்புக்கள்

    நீரோட்டம் போல தெளிவாக ஓடும் படம் - ஒரிஜினல் கதையை சிறிதும் சிதைக்காமல் , நிஜ வாழ்க்கையிலும் இணைந்த அந்த ஒரிஜினல் ஜோடியையே போட்டு படம் எடுத்திருக்கிறார்கள் . அதனால் நெருங்கி நடிக்கும் சில காட்சிகளில் செயற்கைத் தெரியவில்லை .

    ஒரு நடுத்தர குடும்பம் எப்படி இருக்கும் என்பதை கமல் மிகவும் அழகாக தன் நடிப்பின் மூலம் புரியவைப்பார் .

    அதிகம் படிக்காத தந்தை - வீட்டில் anchor ஆக இருக்கும் அவனுடைய மனைவி , பள்ளிக்குச்செல்லும் இரண்டு அழகான பெண் பிள்ளைகள் - அவனுடைய உலகம் மிகவும் சிறியது . ஆனால் அவன் மனம் ஒரு பெரிய பாசக்கடல் . படம் பார்க்கும் போது நாமும் நம்மை அறியாமலேயே அந்த குடும்பத்தில் ஒருவராகி விடுவோம் . அவன் எப்படி தன் மகளை ஒரு பழியிலிருந்து பாதுக்காக்கிறான் என்பதுதான் படத்தின் மீதி பாதி .

    நடிகர் திலகத்தின் பெருமை

    ந .தி யின் உண்மையான ரசிகன் என்பதை கமல் ஆத்மார்த்தமாக சொல்லும் சில வார்த்தைகளில் புரிந்துவிடும் .

    " பாசமலரைபார்த்து அழாதவன் ஒரு மனிதனே இல்லை " என்று அழுதுகொண்டே சொல்வதும் , சிவாஜியின் நடிப்பை புரிந்துக்கொள்ளாதவன் ஒரு நல்ல ரசிகனும் இல்லை இன்று அவருடைய assistant யைப்பார்த்து கோபத்துடன் சொல்வதும் , கண்ணாடியில் , சிவாஜி ஸ்டைலில் முடியை முன்னுக்கு சுருட்டி விடுவதும் , அதையே பெருமையாக தன் மகளுடன் பகிர்ந்து கொள்வதும் , கமலின் உண்மையான ஆதங்கத்தில் ஒரு முத்திரை .

    பல இடங்களில் அவரின் நடிப்பு நடிகர் திலகத்தின் பாணியிலே இருக்கும் - கடைசியில் அவர் குமறும்போது அந்த மாமேதையின் நடிப்பைத்தான் நமக்கு ஞாபகப்படுத்தும் .

    கருவின் கரு :

    தந்தை- மகள் பந்தம் ; தாய் -மகன் பந்தம் இப்படி கருவின் கருவை 3மணி நேரம் அருமையாக எடுத்துச்சொல்லும் படம்.

    மகன் கெட்டவனாக ஆனதிற்கு எங்கள் கவனக்குறைவு தான் காரணம் - அவன் கேட்க்காமலேயே பல கெட்ட பழக்கங்கள் அவனுக்குள் வருவதற்கு எங்கள் பொறுப்பின்மைத்தான் காரணம் - என்று புலம்பும் ஒரு பெற்றோர் ஒரு பக்கம் ; என்ன ஆனாலும் , எது வந்தாலும் தான் பெற்ற குழந்தைகளை காப்பற்ற வேண்டும் - இதில் பொய் சொல்வதில் தவறு இல்லை என்று போராடும் பெற்றோர் ஒருபக்கம் - இவர்களை பார்த்துக்கொண்டே வாயடைத்துப் போகும் நாம் ஒருபக்கம் - இந்த எல்லா பக்கங்களையும் சேர்த்து வைப்பது இந்த படத்தின் வெற்றி , கமலின் நடிப்பு.

    சில குறைகள் - படத்தின் நீளம் அதிகம் - குறைத்திருக்கலாம் - பாடல்கள் சட்டென்று மனதில் பதிய வில்லை - மலையாளம் நிறைந்த வாடைகள் அதிகமாக உள்ளன .. மீனா இன்னும் சிறப்பாக செய்திருப்பாள் கெளதமியை விட என்றே எண்ண தோன்றுகின்றது சில இடங்களில் .

    "நாயகன்" கமலையும் , நடிகர் திலகத்தையும் மீண்டும் சேர்ந்து ஒரு படத்தில் பார்த்த திருப்தி - படம் தந்த பாடம் அதிகம் ...

  8. Thanks eehaiupehazij, uvausan thanked for this post
    Likes Russellmai liked this post
  9. #3536
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #3537
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அதி விரைவில் !!!

    கொங்கு மண்டலத்தை சேர்ந்த கோவை நகரை தனது வாதத்திறமையால் ஆர்பரிக்க வருகிறார் நமது கலை கடவுள் பாரிஸ்டர் ரஜினிகாந்த் !



    பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களை சிறந்த முறையில் வரவேற்க அனைவரும் தயாராவோம் !

    RKS

  11. Thanks eehaiupehazij thanked for this post
    Likes J.Radhakrishnan, ifohadroziza liked this post
  12. #3538
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. Likes J.Radhakrishnan, Russellmai liked this post
  14. #3539
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  15. Likes Russellmai liked this post
  16. #3540
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  17. Likes J.Radhakrishnan, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •