-
28th June 2015, 11:19 AM
#3361
Senior Member
Seasoned Hubber
மேலே தரப்பட்டுள்ள Definition of Style 27 முகநூலிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதற்கு நண்பர்கள் அளித்துள்ள பாராட்டிற்கு மிக்க நன்றி. குறிப்பாக பிரணவ மூர்த்தி என்ற நண்பர் மேலும் அவருக்கு விருப்பமான படங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டு அவற்றிலிருந்து சில பாடல் காட்சிகளைப் பற்றி எழுதக் கேட்டுக்கொண்டுள்ளார். அவருடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக் கூறியிருக்கிறேன்.
இன்னோரு நண்பர் - தன்னை என் எழுத்துக்கு விசிறி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் நேரில் கூறினார். அவருக்கும் என் உளமார்ந்த நன்றி.
அனைத்திற்குமே நம் மய்ய இணைய தள நண்பர்கள், முகநூல் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமான சிவாஜி ரசிகர்கள் தரும் ஊக்கமே காரணம். அனைவருக்கும் நன்றி.
எல்லாப்புகழும் நடிகர் திலகத்திற்கே..
திரு பிரணவமூர்த்தி அவர்களின் வேண்டுகோள் பதிவு..
உங்களுடைய வர்ணணையுடன் அந்த பாடல் காட்சியை என் மனத்திரையில் ரீவைண்ட் செய்து பார்க்கிறேன்.......ஹும்
காலம்ஒடி விட்டது.
அந்த பாடல் காட்சியில் ஒரு ஷாட்டில்
அவர் கழுத்தில் உள்ள
..டை..யின் ..நாட்..டை சரி
செய்யும் லாவகம் அதற்கு ஏற்ற கழுத்து தலை அசைவு அப்பப்பா
எதைசொல்ல,எதைவிட.
ஆனால் அந்த பாடல்
காட்சியை முழுமையாக
ரசிக்க அசை போட விடா
மல் தடுக்கிறது,தொடர்ந்து
வரும் காட்சியமைப்பு.
பாடல் காட்சி முடியும்
தருவாயில் நம்மவர்
பாறையிலிருந்து
வழுக்கி விழுந்து விடுவார்.இக்காட்சி
முந்தைய பாடல் காட்சியை அசைபோட
விடாமல்செய்து விடும்.
சார் அவர்களுக்கு ஒரு
விண்ணப்பம்.
பார்மகளே பார்.
காத்தவராயன்
நவராத்திரி(அற்புதராஜ்)
பார்த்தால் பசிதீரும்
இவைகளில் இருந்து
பாடல் அ காட்சியை
போஸ்ட்மார்ட்டம் செய்யும்படி வேண்டுகிறோம்.நன்றி!
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th June 2015 11:19 AM
# ADS
Circuit advertisement
-
28th June 2015, 12:31 PM
#3362
Junior Member
Diamond Hubber
படித்ததில் பிடித்தது
சிவாஜி வந்து நிற்கும் தோரணையைக் கண்டு, அதற்கு முன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள், பேச மறந்து உறைந்து நிற்கும் காட்சிகளைப் பல படங்களில் பார்க்கலாம். ‘முதல் மரியாதை' படத்தில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் சிவாஜியை, சில சிறுவர்கள் வேடிக்கை பார்க்க வந்து நிற்பார்கள். அந்த நிலையிலும் தன் கோபத்தைக் காட்ட ஒரு உறுமு உறுமுவார். அடுத்த கணத்தில் சிறுவர் குழாம் சிதறி ஓடும். படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் இந்தக் காட்சியே, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தனை மரியாதைக்குரியது என்பதை உணர்த்திவிடும். ‘பாசமலர்’ படத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜெமினி கணேசன் எழுப்பும் கேள்விகளைக் கேட்டுக் கொதிப்படைந்து சிவாஜி பேசும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. “யாருடைய துணையுமின்றித் தனியாகவே நான் உழைப்பேன்” என்று கர்ஜித்துவிட்டு, முத்தாய்ப்பாக ‘‘கெட் அவுட்'' என்று மெல்லிய குரலில் சொல்ல சிவாஜியால்தான் முடியும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
28th June 2015, 02:14 PM
#3363
Senior Member
Senior Hubber
Originally Posted by
Murali Srinivas
படிக்காத மேதை பதிவுகளைப் பாராட்டிய அனைத்து நல்லிதயங்களுக்கும் என் மனமார்ந்த சிரந்தாழ்ந்த நன்றி! குறிப்பாக படத்தின் சிறப்பு காட்சிகளை பற்றிய இரண்டாவது பதிவிற்கு அமோக பாராட்டுகளை வழங்கிய அனைவருக்கும் நன்றி! அதில் ஒரு சில விஷயங்களை ஒப்பீட்டு முறையில் எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்த சாரதிக்கும் நன்றி!
சாரதி அந்த பதிவைப் படித்து விட்டு மற்றொரு விஷயத்தை குறிப்பிட்டு அதை நீங்கள் எழுதியிருக்கலாமே என்றார். அதனால் என்ன இப்போது எழுதி விட்டால் போகிறது என்று சொன்னேன்.
அவர் சொன்னது என்னவென்றால் ஒரு சில வினாடி அல்லது நிமிட நேரங்களில் பல வித உணர்வுகளை முகத்தில் காட்டுவதில் நடிகர் திலகம் சமர்த்தர். ஆனால் வெகு சில படங்களில் மட்டுமே ஒரே நேரத்தில் விதவிதமான உணர்வுகளை ஒரு சேர வெளிப்படுத்தியிருப்பார். அந்த வெகு சிலவற்றில் படிக்காத மேதை படத்தில் ரங்காராவ் மறைவிற்கு பின் வரும் அந்த காட்சியும் ஒன்று. ஒரே நேரத்தில் திகைப்பு, மறுதலிப்பு, அதிர்ச்சி, சோகம், அழுகை ஆகிய அனைத்தும் அந்த நிமிட நேரத்தில் முகத்தில் வந்து போகும். ஒவ்வொரு முறை படம் பார்க்கும்போதும் இந்தக் காட்சிக்காக காத்திருப்பேன் என்றார் சாரதி.
உண்மைதான்! நடிகர் திலகத்தைத்தான் எப்படி எப்படியெல்லாம் ரசிக்கலாம் என்பதற்கு நமது ரசிகர்களுடன் பேசினாலே புரிந்துக் கொள்ளலாம்!
நன்றி சாரதி!
அன்புடன்
Thank you very much Murali Ji.
Regards,
R. Parthasarathy
-
28th June 2015, 04:10 PM
#3364
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th June 2015, 04:11 PM
#3365
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th June 2015, 04:14 PM
#3366
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
28th June 2015, 04:43 PM
#3367
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
28th June 2015, 07:17 PM
#3368
Junior Member
Diamond Hubber
(படித்தது)
எப்போதும் மரியாதை
மிகை நடிப்பு என்று அவரை விமர்சிப்பவர்கள்கூட பின்னாட்களில் ‘முதல் மரியாதை', ‘தேவர் மகன்' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை வியக்கின்றனர். குறிப்பாக, தேவர் மகன் படத்தில், முகத்தில் படர்ந்த வீர மீசையும், தோளைச் சுற்றிய சால்வையுமாக அவர் வந்து நிற்கும் கம்பீரம் அலாதியானது. சிவாஜியைப் புகைப்படம் எடுக்கும் கவுதமி, அவர் சற்று திரும்பி முறைத்ததும் தடுமாறும் காட்சியே சொல்லும் சிவாஜியின் கம்பீரத்தை.
திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிந்துகொள்வார். விமான நிலையங்களில் எங்களையெல்லாம் சோதனை செய்வார்கள். அப்பா நடந்துவரும் தோரணையைப் பார்க்கும் விமான நிலையக் காவலர்கள் அவரை ஒருபோதும் சோதித்துப் பார்க்கத் துணிந்ததில்லை.” அதுதான் சிவாஜியின் ஆளுமை
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
28th June 2015, 10:34 PM
#3369
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th June 2015, 10:35 PM
#3370
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks