-
16th June 2015, 11:59 AM
#3071
Gopal,
Let us refrain from talking about other actors in this thread unless and otherwise circumstances warrant it. As we have seen many times, such digressions take away our focus and the sheen of quality postings done by our hubbers is lost Let us enjoy our thread. Hope you are on the same page with me on this.
RKS,
Though I know that you had replied in response to Gopal's post, let us not invoke other actors' names for all wrong reasons.
Thanks for everyone's understaning
Regards
-
16th June 2015 11:59 AM
# ADS
Circuit advertisement
-
16th June 2015, 12:16 PM
#3072
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.
கடந்த பதிவின் இறுதி பகுதி
பட்டிக்காடா பட்டணமாவின் பிரம்மாண்டமான வெற்றி பற்றி பேசிக்கொண்டிருந்தோம்
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
பட்டிக்காடா பட்டணமா சூறாவளியாக சுழன்று அடித்துக் கொண்டிருப்பதை பார்த்தோம். அதே நேரத்தில் வசந்த மாளிகை ரிலீசிற்கு தயாராகி கொண்டிருந்தது. வசந்த மாளிகை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரே வார்த்தை வெற்றி. அன்றைய காலகட்டத்தில் ஒரே நேரத்தில் பல படங்கள் தயாரிப்பில் இருக்கும்போது அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள், படமாக்கப்படும் காட்சி அமைப்புகள், படத்தின் கதையை பற்றி வெளிவரும் தகவல்கள் மற்றும் பத்திரிக்கையில் வெளிவரும் ஸ்டில்ஸ் ஆகியவற்றை வைத்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு படத்தின் வெற்றி வாய்ப்பு ஆகியவை அலசப்படும். அது என்னவோ தெரியவில்லை 1972 ஜனவரியில் தெலுங்கில் வந்து வெற்றியடைந்த பிரேம் நகர் படத்தின் தமிழாக்கமாக வரப் போகிறது என்ற செய்தியுடன் பூஜை போடப்பட்டு வசந்த மாளிகை என்று பெயர் அறிவிக்கப்பட்டபோதே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்பது போலவே அனைத்து ரசிகர்களும் உணர்ந்தனர். படம் வளர வளர அந்த உணர்வு வலுபெற்றுக் கொண்டே இருந்தது.
படம் வெளிவருவதற்கு முன் பாடல்களும் வெளியாகி விட்டன. அதில் ஒ மானிட ஜாதியே இடம் பெறவில்லை. வெளிவந்த பாடல்களில் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் மயக்கமென்ன ஆகியவை பெரும் ஹிட் ஆகும் என்று தெரிந்து விட்டது. படத்தின் கிளைமாக்ஸ் பற்றி விவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. சோகமான முடிவு என்றும் இறுதியில் நடிகர் திலகம் ஏற்றிருந்த ஆனந்த் காதல் தோல்வியால் தான் கட்டிய வசந்த மாளிகையை இடித்து தரைமட்டமாக்கி விட்டு விஷம் குடித்து உயிர் துறப்பதாக கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருந்தனர். வசந்த மாளிகை செப்டம்பர் 29 ரிலீஸ் மதுரையில் நியூசினிமாவில் வெளியாகிறது என்று பத்திரிக்கை விளம்பரம் வந்துவிட்டது
நமக்கு எப்போதும் மகிழ்ச்சி தொடர்ந்து வந்தால் அதன் பின்னாலேயே வருத்தம் வருவது வழக்கம்தானே! இதில் பெரும்பாலான நேரங்களில் இந்த வருத்தமும் கோவமும் நமது ஆட்களாலேயே வரவழைக்கபப்டுவது நாம் வாடிக்கையாக கண்ட ஒன்று. அது வசந்த மாளிகைக்கும் நடந்தது. வசந்த மாளிகை ரிலீஸ் ஆகப் போகிறது என்ற சந்தோஷத்திற்கு நடுவே அது சென்னை சேலம் போன்ற பல ஊர்களில் எந்தெந்த திரையரங்குகளிலெல்லாம் பட்டிக்காடா பட்டணமா படம் மிகப் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்ததோ அதே அரங்குகளில் வசந்த மாளிகை வெளியாகிறது என்பதுதான் அந்த வருத்தத்துக்குரிய கோவத்தை கிளறிய செய்தி.
நமது படங்களைப் பொறுத்தவரை குறிப்பாக சென்னை சாந்தி போன்ற அரங்கில் நடிகர் திலகத்தின் படம் எவ்வளவு நன்றாக ஓடிக் கொண்டிருந்தாலும் நடிகர் திலகத்தின் அடுத்த படம் வரும்போது ஓடிக் கொண்டிருக்கும் படத்தை எடுத்துவிட்டு புதிய படத்தை வெளியிடுவது என்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். சென்னையை பொறுத்தவரை சாந்தி கிரௌன் புவனேஸ்வரியில் பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் தர்மம் எங்கே, தவப்புதல்வன் என்ற இரண்டு படங்களிடமிருந்து தப்பித்ததே பெரிய விஷயம் எனும்போது வசந்த மாளிகைக்கும் எதிராக தாக்கு பிடிக்க முடியும் என நினைப்பதில் அர்த்தமில்லை என்ற போதிலும் பட்டிக்காடா பட்டணமா நான்கு ஊர்களில் [சென்னை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் நகரங்களில்] வெள்ளி விழா காணும் என நினைத்திருக்க வசந்த மாளிகையின் புண்ணியத்தினால் மற்ற மூன்று ஊர்களில் ஷிப்டிங் செய்யப்பட்டு வெள்ளி விழா கொண்டாட மதுரையில் மட்டும் நேரிடையாகவே வெள்ளி விழா கொண்டாடியது. இதற்கிடையில் எம்ஜிஆரின் கடைசி கருப்பு வெள்ளைப் படமான அன்னமிட்ட கை செப்டம்பர் 15 அன்று வெளியானது
செப்டம்பர் 29 படம் என்றவுடன் ஓபனிங் ஷோ போவதற்கான எங்களின் முயற்சிகள் ஆரம்பித்தன. காலாண்டு தேர்வு முடிந்து [Quarterly Exams] விடுமுறை காலம் என்பதனால் ஒரு பெரிய நிம்மதி. ஆனால் அந்த 1972-ஐ பொறுத்தவரை ஓபனிங் ஷோ டிக்கெட்டுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது இந்தப் படத்திற்கும் தொடர்ந்தது.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
16th June 2015, 12:20 PM
#3073
Junior Member
Diamond Hubber
அண்ணாசாலையில் 35 ஆண்டுகள் எனது நிறுவனம்செயல்பட்டு வந்தது.ஒருநாள் மழையினால் அந்தக்கட்டிடம் இடிந்துவிழ,
நான் வெறுங்கையோடு வெளியேற வேண்டியதாயிற்று.என் மனக்கவலையை சிவாஜியின் சகோதரர் சண்முகத்திடம் சொன்னபோதுஅவர் அருகிலிருந்து இன்னொரு வீட்டின் சாவியைகொடுத்து (ராயப்பேட்டையிலிருந்தது)பயன்படுத்திக்கொள்ளச்சொன்னா ர்.
வாடகை எவ்வளவு?என்று கேட்டபோது என்னை முறைத்துப்பார்த்தார்.ஏழெட்டு ஆண்டு காலம் அங்கு வாடகை இல்லாமலேஅதைப் பயன்படுத்தினேன்.
இடுக்கண் வரும்போது நட்பு எப்படி உதவும்என்பதற்கு இது ஒரு உதாரணம்.
பாசமலர் மோகன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
sss liked this post
-
16th June 2015, 12:57 PM
#3074
Junior Member
Veteran Hubber
திரியின் தூங்கா விளக்குகளை தூண்டுகோலாக இருந்து சுடர் விட்டுப் பிரகாசிக்க வைக்கும் பண்பாளர் கோபு அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்
senthil on behalf of NT/GG threads
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th June 2015, 01:00 PM
#3075
டியர் முரளி சார்,
தங்கள் வரலாற்றுப் பதிவுகளுக்காக தவமிருக்கிறோம். நீங்களும் ஏமாற்றாமல் "உள்ளது உள்ளபடி" வரலாற்றுத் தகவல்களை அள்ளித் தந்துகொண்டு இருக்கிறீர்கள்.
சாந்தி தியேட்டர் நிர்வாகம் பற்றி நீங்கள் சொன்னது 100க்கு 100 சரியே.
இறைவனுக்கு நன்றி,
பாலாஜியின் 'நீதி' படத்தை 72 டிசம்பரிலேயே வெளியிட வைத்ததற்கு.
முன்பே திட்டமிட்டபடி 73 ஜனவரி 26 அன்று வெளியிட்டிருந்தால், சென்னையில் வசந்த மாளிகையின் வெள்ளிவிழாவும் அடிபட்டிருக்கும். 100 நாட்களைக் கடந்தது போதும் என்று சித்ராவுக்கோ பாரகனுக்கோ மாற்றி விட்டு நீதியை சாந்தியில் திரையிட்டிருப்பார்கள்.
பின்னர் பாரத விலாசுக்காக நீதியையும் 60 நாட்களில் தூக்கியிருப்பார்கள். தேவிபாரடைசில் திரையிட்டதால் 99 நாட்கள் என்ற கௌரவமான ஓட்டத்தைப் பெற்றது.
சாந்தியால் இரண்டு சங்கடங்கள்..
ஒருபக்கம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை தூக்கி, ரசிகர்களின் வயிற்றெரிச்சலை தேடிக்கொள்வார்கள்.
இன்னொரு பக்கம் 'சொந்த தியேட்டரில் ஒட்டினார்கள்' என்று எதிர்த்தரப்புக்கு தீனி போடுவார்கள்.
உண்மைநிலை நமக்குத்தான் தெரியும்.
-
16th June 2015, 01:33 PM
#3076
வர வர இந்த ஆரூரானின் அழும்பு தாங்க முடியவில்லை.
வசனகர்த்தா என்ற நிலையை தாண்டி நண்பன் என்ற முறையில் அவரிடம் நடிகர்திலகம் பேசியதையெல்லாம் இப்போது பத்திரிகைகளில் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார். இது தன்னை நண்பனாக நினைத்தவருக்கு செய்யும் துரோகம்.
அதுவும் ஸ்டேட்மெண்ட்டில் நடிகர்திலகம் பற்றி குறிப்பிடும்போதெல்லாம் வெறுமனே சிவாஜி, ஆனால் மற்றவர்களை குறிப்பிடும்போது விஜயாம்மா, தேவரண்ணன்.
சின்ன அண்ணாமலையின் மணிவிழாவில் அவர் தலையில் குடம் குடமாக தண்ணீர் ஊற்றியபோது இவரும் நடிகர்திலகமும் எதிரில் அமர்ந்திருந்தார்களாம். இவர் சொல்கிறார். ஆனால் அப்போது பத்திரிகைகளில் வந்த உண்மைசெய்தி என்னவென்றால் நடிகர்திலகம் காலையிலேயே சென்று வாழ்த்தி விட்டு வீடு திரும்பி விட்டார். சிலமணிகள் கழித்து சின்ன அண்ணாமலையின் மரண செய்திவர, அலறியடித்துக்கொண்டு மீண்டும் அவர் வீட்டுக்கு விரைந்துள்ளார். இதுதான் உண்மை.
தவறு உன்மீது இல்லை, உன்னையெல்லாம் நண்பனாக நினைத்து பழகினாரே அவரைச் சொல்லணும்.
-
16th June 2015, 01:34 PM
#3077
Junior Member
Veteran Hubber
அந்தக் காலத்திலேயே அண்ணாத்தை ஆடுறார் ஒத்திக்கோ ....நடிப்பின் முரட்டுப் புலி (வேஷம்)!
4:30 onwards
Last edited by sivajisenthil; 16th June 2015 at 01:41 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th June 2015, 01:49 PM
#3078
Junior Member
Diamond Hubber
27.11.73 அன்று நடைபெற்ற நடிகர் செந்தாமரை அவர்களின் பாராட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரையில்நடிகர்களுக்கு(எதிர்க்கட்சியினராயினும்)வாழ்வ ு கொடுத்த சிவாஜியைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
"நான் பாளையங்கோட்டை சிறையில் இருந்த நேரத்தில்சிவாஜிக்கு எழுதிய கடிதத்தில் செந்தாமரையை அவருடைய நாடக மன்றத்தில் இணைத்துக்கொள்ளச்சொன்னேன்.தி.மு. .க வின் பிரதான எதிரியான காங்கிரஸின் ஆதரவாளராக சிவாஜி இருந்த நேரத்தில் செந்தாமரை சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்தார்.
அந்த அளவிற்கு நடிகர்களிடத்தில்
அவர்களுடைய வாழ்க்கையில்,
முன்னேற்றத்தில் இவர்கள் வாழ்ந்தால் எங்கே தன்னுடைய வளர்ச்சி கெட்டுவிடுமோ என்று எண்ணாத உள்ளப்பாங்கில் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.ஏனென்றால் அவருக்கு ஒரு தைரியம்.
நடிப்பில் தன்னையாரும்வென்றுவிட முடியாது என்று.அந்த அச்சம் வந்தால்தான்மற்றவர்களை
வளரவிட அஞ்சுவார்கள்.
ஆகவேதான் மற்றவர்களை அழித்துவிட வேண்டும்,வீழ்த்திவிட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது கிடையாது.ஏற்படவும் முடியாது.
Last edited by senthilvel; 16th June 2015 at 08:18 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
16th June 2015, 03:21 PM
#3079
Junior Member
Diamond Hubber
மன்னவரு சின்னவரு சூட்டிங்கில்...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th June 2015, 03:51 PM
#3080
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks