Page 127 of 401 FirstFirst ... 2777117125126127128129137177227 ... LastLast
Results 1,261 to 1,270 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1261
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    உழைப்பாளர்களை மகான்களாய் பெருமை படுத்திய உயர்ந்த காவியம் பாபு.உழைப்பாளர் தினத்தில் நினைவு கூர்வதை பெருமையாய் நினைத்து உங்களுக்கு சமர்பிக்கிறேன்.

    பாபு- 1971.


    சிவாஜி ரசிகர்களுக்கு நினைக்கும் போதே கண்களை குளமாக்கி இதயத்தை கசிய வைக்கும் படங்களில் முதல் சில இடங்களில் இருப்பவற்றில் முக்கியமான படம் பாபு.அதுவரை உழைப்பவரை அலட்சியம் செய்யா விட்டாலும் ,அவர்களை தேவை படும் மனிதர்களாய் மட்டும் எண்ணி கொண்டிருந்த மனப்பாங்கை, திருப்பி போட்ட படம்.இந்த படம் கண்ட பிறகு,ஒவ்வொரு முறையும் ரிக்ஷா இழுப்பவரையோ அல்லது கூலி தொழிலாளர்களையோ பார்க்கும் போது ,இவர்கள் ஏதோ பிற குடும்பத்தையோ அல்லது தன குடும்பத்தையோ காப்பாற்றவோ அல்லது யாரையாவது படிப்பிக்கவோ,தன சுக துக்கம் கருதாது ,தன்னை வருத்தி பிறரை வாழ வைக்கும் உன்னதர்களாய் பார்க்கும் பார்வையை எனக்கு அளித்த உயர்ந்த படம்.எண்ணத்தில்,செயலில்,வாக்கில்,உருவாக்கத்தி ல் எல்லாவற்றிலும்.மனிதம் வாழ்வதே ,ஜீவித்திருப்பதே ,பாபு போன்ற படங்களின் பங்களிப்பால்தான் சாத்தியமான ஒன்று.

    உருக்கமான கதையமைப்பை கொண்டிருந்தாலும், சிவாஜியின் உழைப்பால் மட்டுமே உயரத்தை அடைந்த படம் பாபு.கேசவ தேவ் 50களில் எழுதிய பிரபலமான ஓடையில் நின்னு (சாக்கடை அல்லது குட்டை)என்ற கதையை அதே பெயரில் மலையாளத்தில் சத்யன் கதாநாயகனாய் 1965 இல் சேது மாதவன் இயக்கத்தில் வந்து வெற்றி கண்ட படம். தமிழில் ஒரு நட்சத்திர நடிகர் நடிப்பதால்,இன்னும் உயரங்களை தொட சாத்யகூருள்ள இந்த மொழிமாற்று படத்திற்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இன்னும் அர்த்தத்தை,சுவாரஸ்யத்தை கூட்டினார் திருலோகசந்தர். தமிழில் இடை வேளைக்கு முன்பு ஏராள மாற்றங்கள், இடைவேளைக்கு பிறகு சிறிதே மாற்றங்கள்.கதாநாயகன் குண விசேஷங்கள்,காதல்,அந்த சிறு பெண்ணின் மேல் விளையும் அன்பு இவற்றில் சிறிதே அர்த்தமுள்ள தமிழுக்கேற்ற மாற்றங்கள் கண்டது.பல வண்ணங்களை மண்ணை கவ்வ வைத்து பிரம்மாண்ட வெற்றி கண்டு ,சாதனை புரிந்தது.

    சுருங்க சொன்னால் நூறு நூறாய் கொட்டி கொடுத்தும் கடவுள் கைவிட்ட குடும்பத்தை, ஒரு வேளை சோறு போட்ட மனித கடவுள் தனியொருவனாய் போராடி வென்று தன்னையே தேய்த்து கொள்ளும் துன்பியல் மனிதம். பாபு ஒரு தன்மானம் நிறைந்த சிறுமை கண்டு பொங்கும்,உழைத்தே உண்ண விரும்பும் அநாதை மனிதன்.பல வேலைகள் பார்த்தும் நிலைக்க முடியாமல்,தற்செயலாய் ஒருவனுக்க உதவ கை ரிக்ஷா இழுக்க ,அதுவே அவன் ஜன்ம பிழைப்பாக மாறுகிறது.ரிக்ஷா நிறுத்தத்தில் சோறு கொண்டு வரும் கண்ணம்மாவுடன் காதல்.ஒரு நாள் ஒரு வேளை ஒரு அதிசய மனிதர் மற்றும் அவர் குடும்பத்தை தற்செயலாய் சந்திக்கும் பாபு ,அவர்களின் மனித தன்மையால் ஈர்க்க படுகிறான்.பிறகு காதலியை கற்பழித்த கொன்றவனை தற்செயலாய் கொலை செய்து ,இரண்டு வருட தண்டனை பெற்று திரும்ப,நண்பர் பிள்ளை அவன் முற்கால சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு சொந்த கைரிக்ஷா வாங்கி தர,தான் சந்தித்த குடும்பத்தின் சிறுமி மற்றும் அவள் அன்னையை வறுமையில் சந்திக்கும் பாபு(குடும்ப தலைவரின் அகால மரணத்தால்),அந்த குடும்பத்திற்கு உதவ ஆரம்பிக்கிறான்.ஒரு சந்தர்பத்தில் ரௌடிகளால் சிறுமியின் அன்னைக்கு தொல்லை விளைய ,அந்த குடிசை வீட்டின் திண்ணையில் குடியேறும் பாபு,அந்த சிறுமியை நன்கு படிக்க வைத்து அந்த குடும்பத்தை முன்னேற்ற மெய்வருத்தம் பாராது,பசி நோக்காது,கண் துஞ்சாது தன்னையே வருத்தி ,ஒரே நோக்கில் உழைத்து, வயதுக்கு மீறி முதுமை கண்டு ,சயரோகம் பிடியில் அவதியுற்று(மருத்துவம் காணாமல்), சிறுமியை பட்டதாரியாக்கி ,அவள் உயர்ந்த இடத்தில் வாழும் நிலையில் ,அவள் திருமண தினத்தன்று மரிக்கிறான்.

    பாபுவின் சிறப்பு அம்சங்களில் மிக முக்கியமானது நடிகர்திலகத்தின் அபார நடிப்பு. ஒரு சுயமரியாதையுள்ள உழைப்பாளி ,சிறுமை கண்டு பொங்கும் போராளி, அன்பு கண்டு நெகிழ்ந்து நெக்குருகும் அநாதை,வெளிப்படையான நேர்மனிதன்,மற்றோர் அலட்சியங்களை உதாசிக்கும் ஞானி,பின்னாட்களின் ஒரே நோக்கம் கொண்ட வயதுக்கு மீறி உழைப்பாலும்,தன் உடலை பேணா மடந்தையாலும் ,தளர்ந்த வியாதி காரனாய்,லட்சியத்தில் தளரா ,உயர் நோக்கு கொண்ட மேன்மையடைந்த(மென்மையும் ) மனிதனாய் என்று அற்புதமான பாத்திரம்.

    பாபுவின் லட்சிய பிடிப்பு அவனை எந்த தொழிலிலும் நிலைக்க விடாத தருணங்களிலும்,காதல் சிறிதே இளக்கும் தருணம் விபத்தில் தன் ஒரே பிடிப்பையும் இழக்க, இந்த அநாதை தேர்ந்தெடுப்பதோ(வாழ்க்கையை அர்த்த படுத்தி கொள்ள) தன்னை ஒரு நாள் சமமாக நேசித்த வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் நலம் என்று ஒரே நோக்கு.தன் தகுதிக்கும் மேலாய் வளர்க்க படும் வளர்ப்பு மகளின் உதாசீனம்,போலி கௌரவ மனப்பான்மை, விடலை வயதுக்கேற்ற விலகல் மனப்பான்மை எல்லாவற்றையும் ஒரு துறவு மனத்தோடு அணுகும் மேன்மை.எதுவுமே ,அந்த குடும்ப மனிதர்களின் நேசத்தையும் சிதைக்காமல்,பாபுவையும் வதைக்காமல் உடனுக்குடன் தீரும் அற்புத அணுகல். பாபுவின் கடைசி நிமிட விலகல் (தன் வளர்ப்பு மகளால் கடந்து வந்த தாழ்வு மனப்பான்மை தந்ததாய் இருக்கலாம்) என்று இந்த படத்தில் ,ஒரு சமகால தமிழ் படங்களில் அன்று காண கிடைக்காத அதிசய முத்துக்கள் ஏராளம்.

    நடிகர்திலகத்தின் ஒப்பனை,சிகை அலங்காரம் எல்லாமே புதுசாய் .... வழித்து முன் தள்ளி வாரிய தலை முடியுடன் ஒல்லி உடம்புடன் ,அவ்வளவு cute திராவிட மன்மதன் முற்பாதியில்.பின் பாதியில் ரோகம் கண்டு ,வயதுக்கு மீறிய தளர்ச்சி கண்டு சிக்கான தாடி மீசையுடன் என்று முற்றிலும் புதிசு. இடை வேளை வரை யதார்த்த நடிப்பு. இடைவேளைக்கு பின் எப்படி விவரிக்க? இந்த மாதிரி படங்களுக்குத்தான் நடிகர்திலகம் போன்ற மேதையே தேவை படுகிறார்.நோக்கம்,செயல், எல்லாவற்றிலும் அசாதாரமான மனிதனான பாபு,தன்னை வருத்தி அழித்து கொள்வதிலும் அசாதாரணம் தான். மிகை யதார்த்தமாய் மாறும் பாத்திரத்தில் (சாதாரண குப்பன் சுப்பன் முனியன் போன்றதல்ல )இந்த உணர்வை, மாறு நிலையை ஒரு mystic கலந்த ,நோக்கம் தளரா,உடல் தளர்ந்த,உதாசீனம் மட்டுமே கண்டு ஒடுங்கிய மனிதனை ,சிவாஜி சித்திரிக்கும் நடிப்பு ஒரு மந்திர செயல்.

    பாபு என்ற இந்தியா ஜெயிக்க ,சிவாஜி என்ற கவாஸ்கர் நடிப்பில் போட்டிருக்கும் செஞ்சுரியே காரணம் (அன்று இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றிருந்தது புதுமுக கவாச்கரால்)என்று விமரிசித்த துக்ளக் வாயில் சர்க்கரை போடலாம்.(உதிரி பூக்கள் புகழ் மகேந்திரன் விமரிசகர்).முக்கியமாக, ரிக்ஷா இழுத்து உழைக்கும் காட்சிகள், குடும்பத்திடம் ஈடு படும் காட்சிகள், பள்ளிக்கு சென்று வகுப்பறையில் தான் கஷ்டப்பட்டு பீஸ் கட்ட சேர்த்த பணத்தை அம்முவிடம் கொடுக்க ,அம்முவின் சங்கடம் அறியாது நகைக்கும் குழந்தைகளை வாழ்த்தி செல்வது,அம்முவின் drift புரிந்தாலும் அதீத ஈடுபாட்டால் அவளையே சாரும் கட்டங்கள்,அவள் நலனுக்காக என்று போராடும் கட்டங்கள்,லட்சியத்தை நிறைவேற்றி காணும் திருப்தி,நேரடியாக பங்கேற்காமல் தன் வளர்ப்பு மகளின் திருமணத்தில் மறைமுக பங்கேற்ப்பு,சிகிச்சை இல்லாமல் நோயுடன் போராடி உழைக்க முயன்று தோற்கும் இடங்கள் என்று அப்படியே மனதை பிசைந்து புண்ணாக்கி விடுவார். கதற வைத்து ,மனிதம் வளர்ப்பார் இந்த பிறவி மேதை.

    தன்னை இவர் வருத்தி கொண்டது சொல்லி மாளாது. ரிக்ஷா இழுக்கும் கட்டத்தில் ,(கோடம்பாக்கம் பாலம் அருகே)மார் வலியால் அவதியுற்று ரத்தம் கக்கி நடிப்பாராம். ரிக்ஷாவை காலால் தூக்கும் சத்யன் ஸ்டைல் வர ஒரு மாதம் ஒத்திகை பார்த்தாராம்.(எம்.எஸ்.வீ உபயம் ,மெகா டீவீ)

    சிவாஜி-திருலோக் கூட்டணியில் தெய்வ மகனுக்கு அடுத்த அற்புதம் இந்த காவியம்.
    "அலசல் ஆதவன்" கோபால் அவர்களின் பதிவு - ஒளி கதிருக்கு பஞ்சம் உண்டா என்ன !

    அருமையான விமர்சனம் !

    rks

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1262
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 1960 பொங்கலுக்கு வந்து வெள்ளிவிழா கொண்டாடி வெற்றி வாகை சூடிய காவியம் இரும்பு திரை படத்தின் விமரிசனம் மீள்பதிவு செய்ய படுகிறது..

    தொழிலாளர் பிரச்சினையை தீவிரமாய் பேசிய படம்.

    இரும்புத்திரை (iron curtain )- 1960



    அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.
    நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1954,1958,1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள்.


    இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),




    நெஞ்சில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.



    நடிகர் திலகத்தின் ஆண்மை நிறைந்த கம்பீரமான அழகு.....அப்பப்பா...அந்த தேங்காய் எண்ணெய் தடவி வாரிய கரு கரு சுருள் கேசம்.....தெளிந்த நீரோடையான அந்த கண்கள் ....மாம்சளமான அந்த மொழுக்கேன்றிருக்கும் முகத்திற்கு ஏற்ற உடலமைப்பு..உடலுக்கேற்ற அந்த நடை... இறைவன் கலையுலகில் படைத்திட்ட ஒரே ஒரு அரிதாரம் பூச தகுதிகொண்ட அவதாரம் ....நடிகர் திலகம்....காண கண் இரண்டு போதாது !

    RKS
    Last edited by RavikiranSurya; 22nd April 2015 at 08:04 AM.

  4. Thanks Gopal.s thanked for this post
  5. #1263
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரவி,



    சமீப காலங்களில் ,நாம் பழைய கசப்புகளை மறந்து நட்பு காணும் திசையில் பயணிக்கிறோம். உங்கள் எழுத்துக்களில் அசாத்திய மெருகு தென்படுகிறது. உங்கள் பணி ,இந்த திரியில் தேவை படுகிறது. உங்கள் மன வருத்தத்திற்கு காரணமான நானே, மனப்பூர்வமாக அழைப்பு விடுக்கிறேன். உங்கள் மனமும், விருப்பமும் இங்குதான் என்பதை அறிவேன்.



    இங்கே வாருங்கள் .உன்னத விஷயங்களை எழுதும் போதுதான் உங்கள் எழுத்தின் உன்னதம் ஊருக்கு தெரியும். .பாடுபொருளை பொறுத்தே , எழுத்துக்களின் உண்மையும் ஒளி பெறும்.. ராமபிரானை பாடியதால் கம்பர் நினைக்க பெற்றார்.



    வாருங்கள். நான் உங்கள் தலை ரசிகனாக இருப்பேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. Likes ifohadroziza, RAGHAVENDRA, kalnayak liked this post
  7. #1264
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    RARE STILL.


  8. #1265
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    எல்லோருக்கும் இனிய வணக்கம் - திரியை சாந்தப்படுத்தின, திரிக்கு போதிய "சாந்தி"யை தந்து கொண்டிருக்கும் ( பார்ட் 1 & 2) திரு முரளிக்கும் , சிவாஜி ஒருவரையே சுவாசிக்கும் மூச்சாக நினைத்து , நடிகர்திலகம்.காம் 9வது அடி எடுத்து வைக்க founding father ஆக இருக்கும் திரு ராகவேந்திரா அவர்களுக்கும் , புதிய முயற்ச்சியில் நடிகர் திலகத்தை அலசும் திரு சிவாஜி செந்தில் அவர்களுக்கும் - அருமையான பதிவுகளை அசர வைக்கும் வேகத்தில் பதிவிடும் திரு சுந்தரராஜன் அவர்களுக்கும் , அருமையான ஆவணங்களை பதித்து , பம்மலார் இங்கு வருவதில்லை என்ற குறையை தீர்க்கும் திரு செந்தில்வேல் அவர்களுக்கும், நக்கீரர் திரு RKS அவர்களுக்கும் ஏனைய என் நெருங்கிய தோழர்களுக்கும் (திரு கோபால் உட்பட ), மக்கள் திலகம் திரியை சேர்ந்து இருந்தாலும் ஒற்றுமையை வளர்க்க வேண்டி இங்கு வந்து பதிவுகள் இடும் அன்பு சகோதர்களுக்கும் இந்த இரு பதிவுகளை அன்புடன் சமர்ப்பிக்கின்றேன் .

    பல நாட்களாக ஆசைப்பட்டது சமீபத்தில் தான் நிறைவேறியது - நடிகர் திலகம் என்ற கடலின் ஆழத்தில் செல்லும் பொழுது அந்த நடிப்பு என்னும் கடலின் அடியில் தான் எவ்வளவு முத்துக்கள் சிதறிக்கிடக்கின்றன - சில முத்துக்களைத்தான் நம்மால் பொறுக்கி எடுத்துக்கொள்ள முடிகின்றது - எல்லா முத்துக்களுமே என்னையும் அள்ளிக்கொள்ளேன் என்று சொல்லும் போது , கைகளின் அளவுகள் நமக்கு தடையாக வருகின்றன - மீண்டும் வருவேன் உங்களை அள்ளிக்கொள்ள என்று எடுக்கமுடியாத முத்துக்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்பவும் கறைக்கு வர வேண்டியதாக உள்ளது - அப்படி எடுத்து வந்த இரண்டு முத்துக்களைத்தான் இங்கு ஒரு புதிய கண்ணோட்டத்தில் அலச விழைகின்றேன் ....

    முதல் முத்து - சாரங்கதாரா
    இரண்டாவது முத்து - ராணி லலிதாங்கி

    சாரங்கதாரா - NT யின் 50 வது படம் என்ற சிறப்பு உடையது . வெளியான தேதி 15-08-1958. திரை படங்களில் தோன்ற ஆரம்பித்த 6 வருடங்களில் 50 வது இலக்கை வேறு எவரும் அடைந்திருக்க முடியாது - 6 வருடங்களில் எதுவுமே ஏனோ தானோ படங்கள் அல்ல - ஏன் தான் அப்படிப்பட்ட படங்கள் இப்பொழுது வருவதில்லை என்று இன்றும் நம்மை எங்க வைக்கும் முத்துக்கள் - ஒவ்வொரு படமும் தனிப்பட்ட சிறப்பு , நடிப்பு என்று வெளி வந்த வண்ணம் இருந்தன - ஒரு வேளை உண்ண உணவில்லாதவனுக்கு , வடை பாயாசத்துடன் மூன்று வேளைகளிலும் விருந்து கிடைத்தால் எப்படி இருக்கும் ! - தமிழ் பசியுடன் இருந்தவர்களுக்கு - அந்த பசியை அறவே ஒழித்த படங்கள் , சண்டை காட்ச்சிகள் இப்படித்தானா இருக்கும் என்று வீர பசியுடன் இருந்தவர்களுக்கு , இப்படித்தான் சண்டை காட்ச்சிகள் இருக்க வேண்டும் என்று உணர்த்திய படங்கள் , காதல் காட்சிகள் இன்று வருவதைப்போல அல்ல , விரசம் அல்லாமால் அதே சமயம் விவேகம் நிறைந்த , கண்ணியம் நிறைந்த , மென்மை நிறைந்த , மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் காதல் காட்ச்சிகள் , நாம் மறைந்த பின்னும் வாழப்போகும் இனிய இசையுடன் கலந்த பாடல்கள் , முகம் சுளிக்க வைக்காத நகைச்சுவைகள் ,இத்தனை அம்சங்களுக்கும் , உணர்ச்சி , உயிர் கொடுக்கும் அம்சமான நடிப்பு, அழகான தோற்றம் - இப்படி அமைந்தன அவர் நடித்து காட்டிய படங்கள் - படம் எடுத்தவர்களின் முகத்தில் ஆனந்தம் , படம் பார்த்தவர்களின் முகத்தில் , இப்படியும் ஒரு நடிப்பா என்ற ஆச்சிரியம் , படம் பார்க்காதவர்களின் முகத்தில் ஒரு பரபரப்பு , சொல்ல முடியாத சோகம் , பார்க்க விரும்பாதவர்கள் முகத்தில் ஒரு கேள்விக்குறி -- இப்பத் நகர்ந்தன அந்த இனிய நாட்கள் - இன்று நினைத்தாலும் அன்று அடைந்த சுகம் அதே அளவில் மீண்டும் நமக்கு கிடைக்கின்றது - அந்த அக்ஷய பாத்திரத்தில் இருந்து வெளி வந்த ஒரு துளி அமிர்தம் தான் " சாரங்கதாரா " .

    (தொடரும் )

  9. #1266
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த படத்தைப்பற்றிய அலசலை ஒரு கேள்வி - பதில் முறையில் தந்துள்ளேன் சற்றே புதிய முறையில் .

    1. நீங்கள் இவ்வளவு பழைய படத்தை அலச காரணம் ? 70, 80, 90 இல் வந்த படங்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டிருக்கலாமே ??

    Nt படங்கள் எல்லாமே சுவையில் தேனைக்காட்டிலும் இனியவை - எதை விடுவது , எதை எடுப்பது என்று ஒரு குழப்பம் - அதிகமாக பேசப்படாத , ஆனால் பேசப்படவேண்டிய படங்கள் சில வற்றை பற்றி சிறிது பேசலாமே என்ற ஒரு ஆசைதான் காரணம் .

    2. இந்த படம் சுதந்திர தினத்தன்று வெளிவந்து nt க்கு 50வது படம் என்ற சிறப்பை தந்ததாமே - உண்மையா ? மேலும் தெலுங்கில் வந்த இதே படம் (ntr ஹீரோ ) இறுதி கட்டத்தில் கதையில் மாறுப்பட்ட படமாமே ?

    இமயத்தின் சிகரத்தை தொட்டவருக்கு - 50வது படத்தை 6 வருடங்களில் தொடுவது என்பது நாம் ஒருமுறை கண்ணை மூடி திறப்பதுபோல ----- தெலுங்கில் கதையின் இறுதியில் விரும்பத்தக்காத சில காட்ச்சிகளை திணித்திருப்பார்கள் .

    3. இந்த படத்தின் கதையை உங்களிடம் கேட்பதற்கு முன் , இப்படத்தின் வில்லன் யார் ? P .u சின்னப்பாவா ?

    இந்த படத்தில் இரண்டு வில்லன்கள் - ஒன்று இப்படத்தின் கதை , மற்றும் ஒருவர் m .n நம்பியார் . கதை mnn யை வில்லத்தனத்தில் இருந்து பல படிகள் கீழே இறக்கி விடுகின்றது .

    4. வில்லன் -கதையை பற்றி சுருக்கமாக -------

    அதிகமாக நானும் விளக்க விரும்பவில்லை - ராஜா ராணி கதை - இளவரசர்- சாரங்கதாரா (nt ) அழகிலும் , பாடும் திறமையிலும் , போரிலும் , மற்றவர்களை மதிக்கும் பண்பாட்டிலும் , அமைதியாக பேசுவதிலும் , மற்றவர்களை பாராட்டி நட்ப்பை வளர்த்துக்கொள்வதிலும் சிறந்தவர் - விளையாடுத்தனமாக தன் உற்ற நண்பனுடன் புறமுது கொண்டு போரில் திரும்பி வந்த சேனாதிபதியை ( mnn ) கிண்டல் செய்கிறார் - அந்த கிண்டல் அவருக்கு எதிராக ஒரு சதி திட்டத்தை உருவாக்க காரணமாகின்றது . அடுத்த நாட்டின் இளவரசி - சித்ராங்கி ( பானுமதி ) எதேர்ச்சையாக இளவரசரை சந்திக்கின்றாள் - எவரையும் மயக்கும் மன்மதனின் அழகில் தன்னை பறிகொடுக்கின்றாள் . இளவரசரோ தனது நாட்டில் இருக்கும் ஒரு கவியின் மகளை ( ராஜசுலோசனா ) விரும்புகிறான் . இளவரசரின் தந்தை - நாட்டின் மன்னர் - ராஜராஜ நரேந்திரா ( ரங்கராவ் ) மன்னர் இரு நாட்டிற்கும் வெகு நாட்களாக இருக்கும் சண்டையை , இவர்களை இணைத்து வைப்பதின் மூலம் தீர்த்து விடலாம் என்று நினைத்து இளவரசனை திருமணம் செய்துகொள்ள கட்டாயம் படுத்துகின்றார் - என்றுமே தனது கொள்கையில் உறுதியாக இருக்கும் சாரங்கன் இந்த திருமணம் இந்த ஜென்மத்தில் நடக்காது என்று திட்டவட்டமாக தன் தந்தையிடம் சொல்லி விடுகிறான் - இந்த சண்டையை சேனாதிபதி தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்கிறான் - மன்னரரின் மனதை மாற்றி , இரு நாட்டுகளின் ஒற்றுமைக்காக என்று சொல்லி சித்ராங்கிக்கும் , சாரங்கனுக்கும் தான் திருமணம் என்று சொல்லிவிட்டு , மன்னரையே சித்ராங்கிக்கு தாலி கட்டும் படி செய்து விடுகிறான் . முதல் இரவில் உண்மை தெரிந்து சித்ராங்கி எரிமலை என வெடிக்கின்றாள் - தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு இளவரசரும் ஒரு காரணம் என்று நினைக்கின்றாள் - இருந்தாலும் அவனை அடையும் மோகம் அவளை விட்டு விலக மறுக்கின்றது - புறாக்களின் பந்தயம் என்ற ஒரு போட்டியின் மூலம் தனது தனி இடத்திற்கு சாரங்கனை அழைக்கின்றாள் - தன் புறாவை திரும்ப பெற , அவளை சந்திக்க சம்மதிக்கின்றான் சாரங்கன் - ஒரு பேசாத புறாவினால் என்ன பயன் - பேசும் இந்த புறாவை எடுத்துக்கொள்ளுங்கள் என்று இளவரசரிடம் மன்றாடுகின்றாள் . எதற்கும் இளையாத சாரங்கன் அவளை தன் சிற்றன்னை என்று சொல்லி வணங்குகின்றான் - அந்த இடத்தில் இருந்து வெறுப்புடன் வெளியேறுகிறான் - சற்று நேரத்தில் அங்கு வரும் மன்னர் சித்ராங்கியின் சோகத்தையும் , அங்கு விடப்பட்ட சாரங்கனின் சில தடயங்களையும் இணைத்து சாரங்கன் தவறான முறையில் அங்கு வந்து , சித்ராங்கியை மான அவமானம் செய்திருப்பான் என்று தப்பு கணக்கு போட்டு அவனுக்கு சேனாதிபதியின் தூண்டுதல் மூலம் மரண தண்டனை விதிக்கிறார் . சேனாதிபதிக்கு அவன் திட்டம் நிறைவேறுவதில் மிகவும் மகிழ்ச்சி -- இதன் நடுவில் இளவரசர் உண்மையாக காதலிக்கும் கவியின் மகள் சித்ராங்கியை சந்தித்து இளவரசர் ஒரு நிரபராதி என்றும் , தனக்கு வாழ்வு கொடுக்கவேண்டி உண்மையை மன்னரிடம் சொல்லி , இளவரசரை மரண பிடியிலிருந்து விடுவிக்க கெஞ்சுகிறாள் - இறுதியில் சித்ராங்கியின் மனம் தெளிவடைகின்றது - இளவரசரை காப்பற்ற , அவனை கொல்ல இருக்கும் பட்டறைக்கு ஓடுகின்றாள் - சேனாதிபதியின் கத்திவீச்சுக்கு பலியாகுகிறாள் - மன்னர் தன் தவறை உணர்ந்து இளவரசரை விடுவிக்க ஆட்களை அனுப்புகிறார் - அவர்கள் சேனாதிபதியை கொன்று இளவரசரை மீட்கிறார்கள் - முடிவு கவியின் மகளை மணந்துகொள்கிறான் இளவரசன் - சந்தோசம் , மகிழ்ச்சி திரும்புகின்றது அவன் ஆட்சி செய்யும் நாட்டில் -------

    (தொடரும் )

  10. #1267
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    5. இந்த படம் உங்களை கவர காரணங்கள் ----

    பல காரணங்கள் - ஒன்று , இரண்டு மட்டும் குறிப்பாக சொல்கிறேன் - தன்னை விட மூத்த , திறமையான நடிகையுடன் நடிப்பதாகட்டும் , கதை பலவீனமாக இருந்தால் என்ன , நான் இருக்கிறேன் , என்னை நம்புங்கள் என்று சொல்லும் நடிப்பு , வயதிற்கும் மீறிய சவால்கள் - அவைகளை சமாளிக்கும் விதம் - காதலில் ஒரு மென்மை - பாடலில் ஒத்துபோகும் உதடசைவுகள் - போர் வாள்களுக்கும் வீரம் சொல்லித்தரும் அழகு --- இப்படி எத்தனையோ இந்த படத்தில் --

    6. முத்திரை பதித்த சில இடங்கள் ( எல்லாம் இடங்களும் தான் என்று சொல்லாதீர்கள் )--------

    பானுமதியை சிற்றன்னை என்று சொல்லும் அந்த இடம் - கல்லையும் கரைய வைக்கும் - அந்த உயர்ந்த பண்பு - காமத்திற்கு இணங்காத உள்ளம் - அந்த காட்ச்சியை நீங்களும் பாருங்களேன் !



    7. பானுமதியின் நடிப்பு -----

    அருமை - தனது ஏமாற்றத்தை எவ்வளவு அழகாக வெளிபடுத்துகின்றார் - சாரங்கனை தனது இடத்திற்கு வரவழைக்கும் திட்டம் - தனது செய்கையிலும் ஒரு நியாயம் உள்ளது என்று அடித்து சொல்லும் விதம் - பேசும் அழகு - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .

    8. மற்றவர்களின் நடிப்பை பற்றி ------

    உங்கள் அடுத்த கேள்வி ..

    9. பாடல்கள் எப்படி ???

    பாடல்கள் நிறைந்த படம் - மனம் நிறைந்த பாடல்கள் - இரண்டு பாடல்கள் இன்றும் புறாக்கள் போல நம்மை சுற்றி வருபவைகள் - இந்த புற ஆடவேண்டுமானால் --- இளவரசர் பாட வேண்டும் ---- இரண்டாவது பாடல் - " வேறு என்ன வேண்டும் !" - மனதை சாந்தபடுத்தும் வார்த்தைகள் ...

    10.இந்த படம் உங்களுக்கு பிறகு வெளிவந்த படங்கள் எதையாவது நினைவுபடுத்துகின்றதா ?

    ஆமாம் . "எதிர்பாராதது "- தனையன் மணக்க வேண்டியவளை தந்தை மணந்து கொள்வது . இரண்டாவது படம் நடிகர் திலகத்தின் 175வது படம் - "அவன் தான் மனிதன் " - அதிலும் ஒரு புறாதான் கதையை முடிக்கின்றது - இதில் அந்த புறா கதையை மாற்றுகின்றது . இரண்டிலும் புறாவின் நிறம் "வெள்ளை " அவரின் மனதை போல - அவரின் ரசிகர்களின் மனதை போல ...

    11. கடைசி கேள்வி - எல்லோருக்கும் பிடிக்கும் ஒருவரை ஏன் சில பேர் வெறுக்கிறார்கள் - அவரை மாதிரி நடிக்க யாருமே இன்று இல்லை, இனியும் பிறக்கப்போவதில்லை என்று தெரிந்தும் ஏன் அந்த உண்மையை ஒப்புக்கொள்ள அவர்கள் மனம் இடம் தருவதில்லை ?

    இந்த உங்கள் கேள்விக்கு இந்த ஒரு சின்ன உதாரணம் போதும் என்று நினைக்கிறேன்

    இறைவனிடம் ஒருவன் ஒரு வரம் கேட்டானாம் - " எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி நான் இருக்கணும் " என்று .

    இறைவன் சிரித்துக்கொண்டே சொன்னானாம் " எனக்கே அந்த வரம் இன்னும் கிடைக்கவில்லை என்று "


    12. விடை பெரும் முன் உங்கள் அடுத்த அலசல் ----?

    முன்பே சொன்னதைப்போல சிறிது இடைவெளி விட்டு எடுத்துக்கொள்ளப்போகும் படம் சிறப்பான நடிப்பையும் , நடனத்தையும் , பாடல்களையும் கொண்ட "ராணி லலிதாங்கி "

    13. வணக்கம் - உங்களுடன் உரையாடியதில் , ஒரு நல்ல படத்தை பற்றிய கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி - நான் வேகமாக விடை பெற்று செல்லும் காரணம் உங்களுக்கு தெரிந்திருக்கும் - ஆமாம் - " சாரங்கதாராவை " கண் கொட்டாமல் இன்றே , இப்பொழுதே பார்க்கத்தான் ..

    14. வணக்கம் - எனக்கு புரிந்த வகையில் , எழுத தெரிந்த வகையில் என் கருத்துக்களை பதித்துள்ளேன் - அதை பொறுமையுடன் படிப்பதற்கு உங்கள் எல்லோருக்கும் என் நன்றி . மீண்டும் "ராணி லலிதாங்கி யில் " சந்திப்போம் - அதுவரை --

    அன்புடன்
    ரவி

  11. #1268
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    சில technical questions யை கேட்டவுடன் சற்றும் யோசிக்காமல் உடனே உதவிக்கு ஓடிவந்த திரு வாசுதேவன் ( நெய்வேலி ) , திரு வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி .

  12. #1269
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  13. #1270
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •