Page 128 of 401 FirstFirst ... 2878118126127128129130138178228 ... LastLast
Results 1,271 to 1,280 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1271
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks J.Radhakrishnan thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1272
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எதனால் சிம்மக்குரலோன்?

    Last edited by senthilvel; 22nd April 2015 at 07:59 PM.

  5. #1273
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1274
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1275
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1276
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திலக சங்கமம்



    மக்களைப் பெற்ற மகராசியைத் தொடர்ந்து நடிகர் திலகம் - கே.சோமு - கே.வி.எம். கூட்டணியில் வெளிவந்த அடுத்த திரைக்காவியம் சம்பூர்ண ராமாயணம் . பெரும் வெற்றி பெற்றதோடு மூதறிஞர் ராஜாஜி பரதனைக் கண்டேன் என நடிகர் திலகத்தை வியந்து பாராட்டிய பெருமை பெற்றது. திரை இசைத் திலகம் கே.வி.எம். அவர்களும் இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களும் கர்நாடக இசை அடிப்படையில் இசையமைத்து தங்கள் சிறப்பை வெளிக்காட்டிய கால கட்டம். சம்பூர்ண ராமாயணம், கே.வி.எம். அவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. இதை அவர் மிகச் சரியாகவும் சிறப்பாகவும் பயன்படுத்திக் கொண்டார். இன்றளவும் சம்பூர்ண ராமாயணம் படம் மக்களிடம் பிரபலமாக இருப்பதற்குக் கே.வி.எம். அவர்களின் பங்களிப்பும் முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாது.

    இதற்கு சான்றாக விளங்குபவை, இரு பாடல்கள், இசைச்சித்தர் பாடிய இன்று போய் நாளை வாராய் என்ற பாடலும், சங்கீத சௌபாக்கியமே என்ற பாடலும் ஆகும்.

    நடிகர் திலகத்தைப் பொறுத்த மட்டில் பாதுகையே துணையாகும் பாடல் மிகவும் சிறப்பான பாடலாகும். ஏனோ சி.எஸ்.ஜே. பாடிய பாடல்கள் ஹிட்டான அளவிற்கு இந்தப் பாடல் பிரபலமாகவில்லை. என்றாலும் நெஞ்சை அள்ளும் இனிய ராகத்தில் மறக்க முடியாத மெட்டில் அருமையான பாடல். பாடல்களை மருதகாசி இயற்றியிருந்தார்.



    பாடல் காட்சியில் பெருமளவிற்கு நடிகர் திலகத்தைப் பக்கவாட்டிலேயே படம் பிடித்திருப்பது வித்தியாசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் டைட்டில் கார்டு வித்தியாசமாக இருந்தது. சம்பந்தப்பட்ட கலைஞர்களின் நிழற்படங்கள் இடம் பெற்றன. அதன் ஒரு தொகுப்பு நிழற்படம் இதோ நம் பார்வைக்கு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1277
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பாவமன்னிப்பு - 51 - பாகம் 4

    . "காலம் பல கடந்து" எனத் தொகையறாவில் தொடங்கி "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்" எனப் பாட்டாகும் போது நம் ஐம்புலன்களும் பார்க்கின்ற திரையோடு ஐக்கியமாகி விடும். "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்" சரிதான். ஆனால் இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் சிரித்துக் கொண்டே அழுவதற்கும், அழுது கொண்டே சிரிப்பதற்கும் ஒருவர் தானே இருக்கிறார். பாடல் முழுமையுமே நடிகர் திலகம் தனது performanceஸால் பார்ப்போரை புரட்டிப் போட்டு விடுவார். இந்தப் பாடலையெல்லாம் பாடகர் திலகம் டி.எம்.எஸ்ஸைத் தவிர இவ்வுலகில் வேறு எவரால் பாட முடியும். அன்றும், இன்றும், என்றும் பல கோடி உலக மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும், விளங்கப் போகும் வரிகளை கவியரசர் எத்தனை தீர்க்கதரிசனத்தோடு எழுதியிருக்கிறார் பாருங்கள்:

    "காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும்!
    வருவதை எண்ணி சிரிக்கின்றேன்! வந்ததை எண்ணி அழுகின்றேன்!"

    சிவாஜி, சௌந்தரராஜன், விஸ்வநாதன், கண்ணதாசன் - பொற்காலப் படைப்பாளிகள். இவர்களின் பங்களிப்புக்கு ஒவ்வொருவருக்கும் எடைக்கு எடை தங்கம் கொடுக்கலாம்.

    23. 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்' பாடல் காட்சியில், ஒரே ஃப்ரேமில் மூன்று சிவாஜிகள் தெரிவார்கள். ஒருவர் சிரிப்பார், ஒருவர் அழுவார், ஒருவர் சிரித்து-அழுது பாடிக் கொண்டே வருவார். இப்படி இந்தப் பாடல் காட்சியை எடுக்கச் சொல்லி பீம்சிங்கிற்கு ஐடியா கொடுத்ததே அய்யன் சிவாஜி தான்.

    24. "பாவமன்னிப்பு" படத்தில் பல இடங்களில் பல காட்சிகளில் விட்டல் ராவின் கேமரா விளையாடியிருக்கும். ஆர்ட் டைரக்ஷனை ஹெச்.சாந்தாராம் செய்து கொடுக்க, எடிட்டிங் மேற்பார்வையை கவனித்தார் பீம்சிங்.

    25. நடிகர் திலகத்தின் தாயாக இதில் நடித்திருப்பவர் எம்.வி.ராஜம்மா. முதலில் அந்தப் பாத்திரத்தில் நடித்தவர் பி.கண்ணாம்பா. அவர் நடித்து 6000 அடிகளுக்கான காட்சிகள் படமாகியிருந்த நிலையில் திடீரென்று அவர் உடல்நலம் குன்றி மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுக்க நேர்ந்தது. எனவே, மீண்டும் முதலிலிருந்து கண்ணாம்பா நடித்த காட்சிகளையெல்லாம் எம்.வி.ராஜம்மாவைக் கொண்டு படமாக்கப்பட்டது.

    26. "பாவமன்னிப்பு", நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியமாக, 66வது கருப்பு-வெள்ளைக்காவியமாக. 16.3.1961 புதனன்று சென்னையில் சாந்தி, ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி முதலிய 3 திரையரங்குகளிலும் மற்றும் இந்தியாவெங்கும் வெளியானது.

    27. ஏவிஎம் நிறுவனத்தினர் தங்களது திரைப்படங்களுக்கு வித்தியாசமாக விளம்பரங்கள் செய்வதில் வல்லவர்கள். அவர்கள், "பாவமன்னிப்பு" திரைப்படத்திற்கு, மிக மிக வித்தியாசமான - அதுவரை யாரும் செய்திராத - நூதன விளம்பரயுக்தியாக, ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு ராட்சத பலூனில், "AVM" என்று ஆங்கில எழுத்துக்களில் பெரிதாக எழுதி, பலூன் வாலில் "பாவமன்னிப்பு" என்ற எழுத்துக்களை ஒன்றன்கீழ் ஒன்றாக தமிழில் அமைத்து, சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தின் மேல் வானில் பறக்க விட்டனர். ரசிகர்களும், பொதுமக்களும் இந்த பலூனை அதிசயத்துடன் அண்ணாந்து பார்த்து வியந்தனர். இந்த ராட்சத பலூன் சிறந்த காட்சிப்பொருளாகவும், படத்திற்கு நல்ல விளம்பரமாகவும் அமைந்தது.

    28. "பாவமன்னிப்பு" பாடல்கள் அனைத்தும் ஒலிப்பதிவு ஆன உடனேயே, ஏவிஎம் நிறுவனத்தார் அதனை இலங்கை வானொலிக்கு அனுப்பி வைத்தனர். இலங்கை வானொலி இப்பாடல்களை அனுதினமும் ஒலிபரப்பியது. படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்.

    நன்றி பம்மல் R. சுவாமிநாதன்

    (தொடரும்)

    அன்புடன்

  10. Thanks sivank, Gopal.s, eehaiupehazij thanked for this post
  11. #1278
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    "சாரங்கதாரா " வுக்கு லைக் போட்ட உங்கள் அனைவருக்கும் என் நன்றி - இதை அந்த படத்திற்கு கிடைத்த வெற்றியாகத்தான் கருதுகிறேன் - தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைத்ததாக நினைக்கவில்லை - இப்பொழுது அடுத்து, தேடி எடுத்த முத்தான படமான "ராணி லலிதாங்கி " யை பார்க்கலாமா ??

    ராணி லலிதாங்கி

    நடிகர் திலகத்தின் 41வது படம் - அவதாரம் எடுத்த நாள் 21-09-1957. இந்த படத்தின் சிறப்பு அம்சம் , படம் முழுவதும் ஒரு தெய்வீகத்தன்மையுடன் அவர் வருவார் - நமக்கும் ஒரு கோயிலுக்குள் சென்று படம் பார்ப்பதைப் போன்ற எண்ணம் தோன்றும் . இந்த படம் பின்னால் வந்த "திரு விளையாடல் "க்கு அடி போட்டது என்றால் அது மிகையாகாது . அமைதியான நடிப்பு , ஆழமான கருத்துக்கள் , ரம்மியமான காட்சிகள் , மனதை கொள்ளைகொள்ளும் பாடல்கள் , இதமான காதல் காட்சிகள் , காதலும் , வீரமும் போட்டிப்போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் மிஞ்சும் அழகை இந்த படத்தில் கண் கூட காணலாம் - படத்துடன் ஒத்து போகும் நகைச்சுவை காட்சிகள் , ராஜா ராணி படங்களில் மட்டுமே வரக்கூடிய திருப்பங்கள் இந்த படத்தை ஒரு வித்தியாசமான படம் என்று ஒப்புக்கொள்ளவில்லை - சில தலைகளை எடுத்துவிட்டால் போதும் அது ஒரு புதிய படம் என்று சொல்ல- என்று அந்த காலக்கட்டத்தில் இருந்த ஒரு எழுத படாத சட்டம் .

    ராஜா ராணி கதை - படங்களில் குதிரைகள் வேகமாக ஓடுகின்றன - ஆனால் அந்த வேகம் கதைக்கு இல்லை - என்ன சொல்ல வருகிறார்கள் என்று சிந்தித்து நாம் ஒரு முடிவுக்கு வரும் முன் படம் முடிந்து விடுகின்றது . படத்தை இழுத்து நிறுத்துபவை நடிகர் திலகத்தின் நடிப்பும் , அவர் ஆடும் ருத்ர தாண்டவமும் ( இனி ஒருவன் பிறந்தால்தான் உண்டு !!) , பானுமதியின் ஈடுகொடுத்த நடிப்பும் , சிறந்த பாடல்கள் மட்டும் தான் . ராஜ சுலோசனா இந்த படத்திலும் உண்டு , இளவரசரை (NT ) காதலிக்கிறார் - தன் சில தவறுகளால் காதலை இழக்கின்றாள் - இழந்த காதல் ராணி லலிதாங்கி ( பானுமதி ) யிடம் செல்கின்றது -ஒரு தலை ராகமாக . இதன் நடுவில் வாழ்க்கையில் சிறிதும் நாட்டம் இல்லாமல் தற்கொலை செய்யும் முடிவுக்கு வரும் இளவரசரை ஒரு சாமியார் ( இந்த கால சாமியார்கள் அல்ல ) காப்பாற்றி தனது ஆஸ்ரமத்தில் அவனுக்கு ஆன்மீகத்தை போதிக்கிறார் . ஆன்மீகத்தின் உச்சிக்கு செல்லும் இளவரசர் , காதலை வெறுக்கின்றான் , காதலைத்தரும் பெண்களை வெறுக்கின்றான் , கடவுளை காணும் எண்ணங்களில் ஆழ்கிறான் --- அதே சமயத்தில் பலர் புத்திமதிகள் சொல்ல , அந்த நாட்டை ஆளும் அரசராகவும் இருக்க சம்மதிக்கின்றான் . ராணி லலிதாங்கி இளவரசரை அடைய எல்லா முயற்சிகளையும் எடுத்த வண்ணம் இருக்கின்றாள் - அவள் ஆவலுடன் காத்திருந்த நாளும் வந்தது - இசைபோட்டியில் கலந்துக்கொள்ள ----- போட்டியில் பல கேள்விகள் அம்புகள் போல பல திசைகளில் இருந்து வந்த வண்ணம் உள்ளது - குறிக்கோள் திடமாக இருந்தால் 'Impossible " - " I'm possible " என்றாகிவிடும் என்பதை அவளின் பதில்கள் உறுதி படுத்துகின்றன . முடிவில் இளவரசர் தன்னை மறந்து ஆடும் ருத்ர தாண்டவம் ஆனந்த தாண்டவமாகின்றது - அந்த மகிழ்ச்சி திருமணத்தில் முடிவடைகின்றது . ஆன்மீகத்தின் உச்சகட்டம் இரு மனங்கள் காட்டும் அன்புதான் - அந்த அன்புதான் சிவம் என்பதை உணர்த்தும் ஒரு உன்னத காவியமாக இந்த படம் இன்றும் திகழ்கின்றது .

    நிஜங்களை அனுபவித்த நான் , வெறும் நிழல்களை விமர்சிக்க விரும்பவில்லை - P .S வீரப்பா இருக்கிறார் , அவருடைய சிரிப்பும் இருக்கின்றது , அவரும் அதிகமாக இந்த படத்தில் தனது வில்லத்தனத்தை காட்ட வில்லை ....

    பாடல்கள் : பல - நெஞ்சை தொடும் ஒன்று " ஆண்டவனே இல்லையே - நெகடிவ் இல் ஆரம்பித்து "பாசிடிவ் இல் முடியும் பாடல் ....

    ருத்ர தாண்டவம் ஆடும் அந்த அழகை நீங்களும் பருகவேண்டி இந்த கிளிப்பை பதிவிடுகிறேன் .




    அன்புடன்
    ரவி

  12. #1279
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி சார்
    பாவ மன்னிப்பு மீள் பதிவு, பம்மலார் மற்றும் வாசு இருவரும் இணைந்து அசுர வேகத்தில் இரவு பகலாய் உழைத்து அபூர்வ ஆவணங்கள், நிழற்படங்கள் மற்றும் தகவல்கள் என நமக்களித்த அந்த நாட்களை நினைவுக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றன. எந்த அளவிற்கு நமது நடிகர் திலகம் திரி நண்பர்கள் பாடுபட்டு இத்திரியில் தம் பங்கை அளித்துள்ளார்கள் என்பதை எண்ணினால் மிகவும் நெகிழ்ச்சியூட்டுகிறது. மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும் என்று தான் தோன்றுகிறது. பம்மலாரும் வாசுவும் மீண்டும் வரவேண்டும். அதற்கு தடைக்கல்லாக இருப்பது தேவையில்லாத குத்தலான விமர்சனங்கள் அவ்வப்போது இங்கு வைக்கப்படுவதுவே. இதற்கு இடம் தராமல் நடிகர் திலகத்தின் மேன்மையை உரைக்கும் விதத்தில் பதிவிடும் நண்பர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் எப்போதும் உண்டு என்பதை நாம் உணர்த்தினாலே போதும்.

    வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளுக்கு இடம் தராமல் இங்கு பங்கேற்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும், அவரைப் பற்றிய சிறப்பான தகவல்களைத் தரும் மற்ற நண்பர்களுக்கும் உளமார்ந்த வரவேற்புத் தருவோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, Russellmai liked this post
  14. #1280
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சாந்தி...பொன்விழா

    முரளி சார்,
    நேரில் இல்லாத குறையைத் தீர்த்து வைக்கும் அளவிற்கு நிகழ்வைப் பற்றிக் கூறுவதில் தங்களுக்கும் பம்மலாருக்கும் ஈடு இணையில்லை. எந்தவொரு சின்ன விஷயத்தையும் விட்டு விடாமல் தங்களின் அபார நினைவாற்றல் கொண்டு அப்படியே தங்கள் எழுத்தில் கொண்டு வந்து விடுகிறீர்கள். எதிர்பாராத விதமாக என்னால் வரவேற்புரையின் போது வர முடியாமல் போய் விட்டது. இருந்தாலும் அந்தக் குறையைத் தங்கள் எழுத்து தீர்த்து விட்டது.
    அபூர்வ ஆவணங்கள் பொருட்கள் மூலம் நிகழ்ச்சிக்கு சிறப்பூட்டிய ஏஎல்.எஸ். நிர்வாகி திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த நன்றி.
    தங்களுடைய சிறப்பான தொகுப்புரைக்கு மீண்டும் பாராட்டுக்களும் நன்றியும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •