-
1st April 2015, 12:59 PM
#3201
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் சமீப காலமாக இனிய நண்பர்கள் திரு கலிய பெருமாள் , திரு ஜெய்சங்கர் , திரு ராமமூர்த்தி , மற்றும் சில நண்பர்கள் பதிவுகளை காண முடிய வில்லையே ?
திரு கலை வேந்தனின் நேற்றைய பதிவுகள் எல்லாமே நன்றாக இருந்தது .
-
1st April 2015 12:59 PM
# ADS
Circuit advertisement
-
1st April 2015, 01:58 PM
#3202
Junior Member
Diamond Hubber
http://dinaethal.epapr.in/469976/Din...2015#page/13/1
For saving/records purposes only, do not read small letters.
-
1st April 2015, 02:48 PM
#3203
Junior Member
Seasoned Hubber
சொக்குதே மனம்… சுத்துதே ஜெகம்!
எம்.ஜி.ஆர். வைஜயந்திமாலா இணைந்து நடித்த பாக்தாத் திருடன் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடலின் பல்லவியில் நிச்சயம் ஒரு மயக்கம் உண்டு!
ஜி.கோவிந்தராஜுலு நாயுடு இசையில் கட்டுண்ட நாகம்போல் நாமும் மாறலாம்! இனிமை அதிலுண்டு! இயற்றியவர் மருதகாசி பி.சுசீலாவின் குரலில் …சொக்குதே மனம்!!
அந்தப்புர சங்கதிகளின் அடிநாதமாய் விளங்கும் பெண்மையை வைத்தே காய்கள் நகர்த்துவதும் ஒருவித ராஜதந்திரம் என்றது அந்தக்காலம்!
எந்த காலத்திலும் ஆட்சியிலிருப்பவர்களும் அதிகாரத்திலுப்பவர்களும் எளிதில் அகப்பட்டுக்கொள்வது இந்த போதையில்தானே!
திரைப்படங்களில் இந்தக் காட்சியில் பாடல் இடம்பெறுவது எழுதப்படாத விதியாகவே அன்றுமுதல் இன்றும் தொடர்கிறது!
ஆட்டம் பாட்டம் … அதற்கிடையில் கதையின் நகர்வு… இசையின் துள்ளல் நம்மைக் கிறங்க வைக்க… எழுத்தில் வடித்துவிடும் கவிஞர்களின் கற்பனா சக்தியில்… திரைக்கதை… மூலக்கதை எல்லாம் முன்மொழியப்படும்…
சொல்லப்போனால் திரைப்படத்தின் முடிவு வருவதற்கு முன் வருகின்ற பாடலாகவே இதுபோன்ற பாடல்கள் இடம்பெறும்!
திருமதி.பி.சுசீலா அவர்களின் குரலில் இந்தப் பாடல் எனக்கென்னவோ… சொல்லத் தெரியாத இன்பத்தை தந்துவிடுகிற பாடல் என்றே சொல்லத் தோன்றுகிறது!
அமர்க்களம்… அட்டகாசம்… என்பதெல்லாம் நிறைவுபெறாத வார்த்தைகள் என்றே நினைக்கிறேன்!
பூத்து குலுங்குதே புது உணர்வு காணுதே… ஏ…
காத்திருந்த என் பருவ காலமிதே… ஆ…
எதிர் பார்த்திருந்த
இன்ப நாள் வந்ததே தன்னாலே
பார்வையிலே காதல் அலை
பொங்குதே உன்னாலே…
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
கொலைகார வேடன் வலை கண்டதாலே
நிலை மாறி வந்த இள மானும் நானே
என்னாசைத் தங்கமே அஞ்சாத சிங்கமே
நீ தஞ்சமே
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
கருவண்டின் முன்னே களிப்போடு ரோஜா
கண்ணாலே பேசி செய்யுதே தமாஷா
எண்ணாதே லேசா என் காதல் பாதுஷா
ஏன் தாமதம்
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
அழகின் கஜானா உந்தன் ஜனானா
அதற்கேற்ற மைனா வந்ததே தானா
மௌனம் ஏன் வீணா திரும்பாதே போனா
ஆலம்பனா
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
படம்: பாக்தாத் திருடன்
பாடல்: மருதகாசி
இசை: ஜி.கோவிந்தராஜுலு நாயுடு
எம்.ஜி.ஆருடன் டி.ஆர்.ராமச்சந்திரன் இசைகோஷ்டியாக வேடமிட…நம்பியாரை நோக்கி நாட்டியமாடுகிற நங்கையாக திருமதி. வைஜயந்திமாலா வேகம்காட்டி ஆடும் ஆட்டம் சிறப்பானது!
பலமுறை கேட்டிருந்தாலும் பாக்தாத் திருடன் பாடல்.. மறுமுறை கேட்கத்தூண்டும் அதிசயம் என்ன?
Courtesy -கவிஞர் காவிரிமைந்தன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st April 2015, 06:59 PM
#3204
Junior Member
Platinum Hubber
இன்று மறக்க முடியாத நாள் .
பெங்களுர் ஜக்கூர் விமான நிலையத்தில் 1.4.1975 அன்று மக்கள் திலகத்தின் நாளை நமதே - கிளைமாக்ஸ் காட்சி
படமாக்கப்பட்டது .கொளுத்தும் வெயிலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் , நாகேஷ் சந்திர மோகன் , நம்பியார் , கண்ணன் ,ராமதாஸ் நடிகை லதா , கலந்து கொண்டார்கள் ,படப்பிடிப்பை காண ஏராளமான பொது மக்களும் ரசிகர்களும்
கூடியிருந்தார்கள் .கூட்டத்தை கட்டுபடுத்த காவல் துறையினர்கள் மிகவும் சிரமபட்டார்கள் ..படபிடிப்பிற்க்கு இடையே
மக்கள் திலகம் மக்கள் குழுமியிருந்த இடத்திற்கு வந்து வணக்கத்தை தெரிவித்து சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் பட பிடிப்பிற்கு சென்றார் .
PL WATCH 2.17.00 onwards- BANGALORE -JAGUR AIRPORT SCENES
-
1st April 2015, 07:02 PM
#3205
Junior Member
Platinum Hubber
Now Makkal Thilagam MGR in ''Thirudathe '' @ Sun Life channel .
-
1st April 2015, 07:11 PM
#3206
Junior Member
Seasoned Hubber
விடைபெறுகிறேன்! நன்றி!
அனைவருக்கும் வணக்கம்.
அன்னை மடியை விரித்தாள் எனக்காக.. பதிவுக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
கடந்த ஓராண்டாக்கும் மேலாக பதிவுகள் இட்டு வந்திருக்கிறேன். தலைவர் பற்றிய தவறான விமர்சனங்களுக்கு மறுப்பும் என்னால் முடிந்த அளவுக்கு விளக்கங்களையும் பதில்களையும் அளித்திருக்கிறேன். மாற்றுக் கருத்து கொண்ட நண்பர்களோடு நட்புறவையும் ஏற்படுத்தி சுமூகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறேன்.
இப்போது எனக்கு வேலை பளு அதிகமாகிவிட்டதால் அடிக்கடி திரிக்கு வரமுடியாத நிலைமை. எனவே, விடைபெறுகிறேன். ஆதரவு கொடுத்த, சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
என்னுடைய இந்த அறிவிப்பால் வருத்தப்படுவோருக்கு எனது பணிவான நன்றிகள்.
என்ன? மகிழ்ச்சியா?... பரவாயில்லை. உங்களுக்கும் நன்றிகள்.
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் வணக்கம். நன்றி.
...இப்படியெல்லாம் சொல்லலாம் என்றுதான் பார்த்தேன். ஆனால், இன்று ஏப்ரல் 1-ம் தேதி என்பது நினைவுக்கு வந்ததால் மேலே சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொண்டு திரியில் தொடரலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என்ன, சரியா?
திரியில் ஒரு கலகலப்பு வேண்டாமா? எப்போதும் சீரியஸா இருக்கக் கூடாதுங்க! என்னத்தக் கொண்டு போகப் போறோம்? இருந்தாலும் யாரும் கோபிக்க வேண்டாம். மன்னிக்கவும் என்று அன்போடு கோருகிறேன்.
இதைத்தான் தலைவர் அடிமைப் பெண் படத்தில், ‘ஏமாற்றாதே, ஏமாற்றாதே, ஏமாறாதே, ஏமாறாதே’ என்று நமக்கெல்லாம் பாடல் மூலம் பாடமாக சொல்லியிருக்கிறார்.
அந்தப் பாடலில் ‘நிழல் பிரிவதில்லை தன் உடலைவிட்டு...’ அருமையான வரி. நான் உங்களை விட்டு பிரியமாட்டேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st April 2015, 08:16 PM
#3207
Junior Member
Platinum Hubber
மதுரை மீனாட்சி பாரடைசில் , நாளை முதல் (02/04/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
"அன்பே வா " என ரசிகர்களை , தினசரி 4 காட்சிகளில் அழைக்கிறார்.
தகவல் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.
-
1st April 2015, 09:34 PM
#3208
Junior Member
Diamond Hubber
கலாநிதி- தயாநிதியின் ரூ.742 கோடி சொத்துக்கள் முடக்கம்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1220379
Marans' Assets Seized in Aircel-Maxis Case Include Fixed Deposit Worth 100 Crores
http://www.ndtv.com/india-news/maran...-lateststories
தேசிய செய்திகள் கிரிராஜ் சிங் வீடு நோக்கி முட்டை வீச்சு: இளைஞர் காங்கிரஸ் போராட்டம்
http://www.dailythanthi.com/News/India
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: தயாநிதி மாறனின் ரூ.700 கோடி சொத்துகள் முடக்கம்
http://tamil.thehindu.com/
=================================
http://www.dinakaran.com/
http://www.murasoli.in/
NOTHING TO SAY AS OF NOW.. Did anyone stop you from publishing this news?
பத்திரிக்கை சுதந்திரம் இல்லை [ நான் சொல்லவில்லை]. இப்போ யாரு தங்களை தடுத்து?
Last edited by saileshbasu; 1st April 2015 at 09:49 PM.
-
1st April 2015, 11:42 PM
#3209
Junior Member
Diamond Hubber
கேப்டன் டோணிக்கு ஆயிரத்தில் ஒருவன் என்று வாத்தியார் பெயரை வைத்துள்ளனர்.
-
1st April 2015, 11:44 PM
#3210
Junior Member
Diamond Hubber
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எங்க வீட்டுப் பிள்ளை....
Bookmarks