-
16th February 2015, 10:32 AM
#51
Senior Member
Senior Hubber
கூற்றுவன் கொண்டுசெல்லும் வரை உயிர் காக்க
ஏற்றவன் ஏற்றவள் துணை கொண்டு வாழ்வதாய்
பெற்றவர் செய்து வைத்த பந்தம் திருமணம். அதை
விற்றவர் வாழ்வில் என்றும் இருக்கும் துன்பம்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
16th February 2015 10:32 AM
# ADS
Circuit advertisement
-
16th February 2015, 01:14 PM
#52
Senior Member
Senior Hubber
முன்னால் எழுதிப் பார்த்த அந்தாதி..
*
எண்ணுகையில் நெஞ்சுள்ளே உற்சாகம் தான்பெருக்கும்
சின்னக் குழவியவன் சீர்மிகுந்த நோக்கினிலே
வண்ணமாய் எல்லோர்க்கும் வாழ வகைசெய்யும்
கண்ணன் கழல்களே காப்பு
காப்பதற் கென்றே குடையாகத் தான்பிடிக்க
ஆக்களுடன் சேர்ந்தங்கு மாக்களும் நின்றுவிட
பேய்மழையைப் பார்த்தே பயந்திருந்த கோகுலத்தைக்
காத்துத்தான் நின்றவன் காண்..
காண்பதோ சின்னக் குழந்தையின் தோற்றமெனில்
தீண்டிய பூதகியைத் தாக்கியே - மண்ணில்
விழச்செய்து வித்தைகள் வேடிக்கையாய்ச் செய்த
குழவிக் கிணையேது சொல்
சொல்ல நினைத்தாலே சோறதுவும் பானையிலே
துள்ளியே ஆர்ப்பரித்துத் தோயாமல் பொங்குதற்போல்
அள்ளிப் பெருகிடுதே கண்ணனவன் லீலையதும்
பள்ளிப் பருவத்தில் பார்..
பார்த்தான் பலவாறாய் பக்குவத்தைத் தானிழந்து
ஆர்ப்பரித்த காளிங்கன் தீச்செயலை – வேர்த்து
விறுவிறுத் தாடியே வெட்கிட வைத்தான்
துறுதுறு கண்ணனவன் தான்..
கண்ணனவன் தானங்கே கட்டிய கல்லிழுத்து
திண்ணமாய் நேர்நோக்கிச் செல்லுகையில் – மின்னலது
பட்டாற்போல் மரங்கள் பிரிந்தங்கே வீழவும்
தொட்டனர் சுட்டியின் தாள்
தாளால் விஷத்துடனே தீண்டிய பூதகியை
மீளா நிலைக்கணுப்பி மீண்டவன் –கேளாமல்
தாயிடம் தப்பித் தளிர்மண்ணைத் தின்னவும்
வாயில் தெரிந்த வுலகு..
உலகங்கள்: சுற்றுவதை ஒன்றாக்க் காட்டி
கலக்கத்தைத் தாயிடம் கூட்டி – படக்கென
அன்னையைக் கொஞ்சம் அணைத்தே அழுதிடுவான்
சின்னஞ் சிறுகண்ணன் தான்
சின்ன்ஞ் சிறுகண்ணன் தானென்று எண்ணாமல்
நன்றாய் இழுத்தே நாலுஅடி போடென்றே
கன்ன ஞ் சிவந்திருந்த கன்னியர்கள் சொல்கையிலே
பின்னலைப் பின்னுவான் பார்..
பார்க்கும் இடமெல்லாம் புன்னகைக்கு முன்வதனம்
ஈர்க்கும் பலவாறாய் என்பதனால் – சேர்த்திழுத்துக்
கண்ணிமை மூடவும் கண்ணா சிரிக்கின்றாய்
விண்ணினைக் காட்டுவா யா..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th February 2015, 02:47 PM
#53
Senior Member
Senior Hubber
கவிதை வரைய கருப்பொருள் வேண்டும்.
கலைவாணியே கருத்தினில் வருவாய்.
வீணை கொண்டவள் கலை விருந்து வைக்கிறாள்.
கவனம் முழுவதும் கவர்ந்து இழுத்த்தவள்
கவிதைக் கலையாய் வெளிப்பட வைக்கிறாள்.
Last edited by kalnayak; 19th February 2015 at 02:25 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th February 2015, 02:21 PM
#54
Senior Member
Senior Hubber
போராட்டம் போராட்டம் எம்மை கொன்று குவிக்கும் மனித இனத்திற்கெதிரான
போராட்டம் குவியல் குவியலாய் கூடி நின்று கூவிக்கூவி போராட்டம்
போரினிலே பாதிக்கப்பட்ட மனிதரை காக்கவென்று இருக்கிறது செஞ்சிலுவை
போதாமல் விலங்குகளை காத்திடவே இருக்கிறது நீலக்கூட்டல் சமூகம்
சுததமின்றி சூழ்நிலையை வைத்து எம்மை வளர்த்துவிட்டு கடித்து உயிர்
சுற்றுகின்ற எம்மையே சுருள் வைத்து சுருட்டினர், மேட் வைத்து மாய்த்தனர்
சுற்றுப்புறம் முழுமையும் மருந்தடித்தது மாநகராட்சி விடிய விடிய கொளுத்தினர் மருந்து
சுவர்களுக்குளே சுற்றி வலை வைத்தனர் எமைத் தடுக்க. விட்டோமா இம்மனிதரை
உயர் அழுத்த மின்சாரம் எம்மில் பாய்ச்சி இரக்கமின்றி எரித்தனர் இவர்களை எதிர்கக
உயர்வான ஒரு மஞ்சள் பெருக்கல் சமூகத்தை எவரேனும் முன்னெடுத்தனரோ
உதிரத்தை குடித்து உயிர் வாழும் எம்மை காக்காத மனிதரை நோய் பரப்பி
உலகத்தில் அவர்தம் எண்ணிக்கை குறைப்போம் இதுவே இக்கொசுக்களின் சூளுரை.
Last edited by kalnayak; 20th February 2015 at 01:18 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
20th February 2015, 08:03 AM
#55
Senior Member
Platinum Hubber
Kalnayak, were you inspired by my story, 'War and Peace'?
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
20th February 2015, 11:31 AM
#56
Senior Member
Senior Hubber
பிபிக்கா இருக்குமா இருக்கும்
மிஞ்சினால் பறந்து மேனியில் தவழ்ந்துதான்
கொஞ்சியே பார்க்கும் கொசு!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th February 2015, 11:55 AM
#57
Senior Member
Senior Hubber
Originally Posted by
pavalamani pragasam
Kalnayak, were you inspired by my story, 'War and Peace'?
மேம், உங்க 'வார் அன்ட் பீஸ்' கதை எங்க இருக்குன்னு சொல்லுங்க. படிச்சிட்டு இன்னும் அந்த கவிதைய இம்ப்ரூவ் பண்ண முடியுமான்னு பார்க்கறேன்.
Last edited by kalnayak; 20th February 2015 at 01:03 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
20th February 2015, 01:36 PM
#58
Senior Member
Senior Hubber
சொந்த ஊர் விட்டு எந்த ஊரிலோ பிழைத்து வருகிறேன்
எந்த ஊரும் சொந்த ஊராய் நினைக்கும் தமிழ் வழிதான்
பந்தங்கள் யாருமின்றி வந்திருந்த போதிலும் இங்கேதான்
நந்தவனமாய் கண்டிருந்து பசியாற்றிக் கொண்டிருப்பேன்
அண்டிவரும் யாவரையும் பிழைக்க வைக்கும் இவ்வூர்
உண்டிகொள்ள வைத்து உறவுகளை உருவாக்கி
பண்டிதராய் மாற்றிடவே பல்லறிவுப் புகட்டியெனை
நொண்டியிருந்த என் வாழ்வு நொடித்திடாமல் காத்திருக்கும்
Last edited by kalnayak; 20th February 2015 at 02:19 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
20th February 2015, 02:43 PM
#59
Senior Member
Platinum Hubber
Originally Posted by
kalnayak
மேம், உங்க 'வார் அன்ட் பீஸ்' கதை எங்க இருக்குன்னு சொல்லுங்க. படிச்சிட்டு இன்னும் அந்த கவிதைய இம்ப்ரூவ் பண்ண முடியுமான்னு பார்க்கறேன்.
In the stories section:
http://www.mayyam.com/talk/showthrea...-War-and-Peace
From old posts:
1.தொல்லை
பாசத்தோட பாக்குறா,
நேசத்தோட நெருங்குறா,
ஆசையோட அலையறா,
அருகில் வர துடிக்கிறா,
பகலில் ஓடி ஒளியறா,
பக்கம் வர வெக்கமோ?
இருட்டு வர காத்திருந்து
இஷ்டம் போல கடிக்கிறா-
எந்த எதிர்ப்பும் பலிக்கலையே,
கொசுத் தொல்லை தாங்கலையே!
2.கடிக்காமல் விடுவேனோ?
முழுதாக மூடிக் கொண்டிருக்கும் மாங்கனியே!
உனை தீண்டாதென் உயிர்தான் தரிக்குமோ?
வலைக்குள்ளே வனப்பான வண்ண மயிலே!
நானின்றி வந்ததுவோ உனக்கு பூந்துயிலே?
எட்டி நில்லென்று கட்டளையோ, தேன்மலரே!
உனைத் தொட்டாலன்றி எந்தன் பசியாறுமோ?
வாசனை பூச்செல்லாம் பூசிய பூங்காற்றே!
வரவிடாதெனை விரட்டுவது தர்மந்தானோ?
நறுமணம் வீசும் வத்தி கொழுத்திய நல்லழகே!
நச்சாலே எனை நசித்தலும் நியாயந்தானோ?
கொல்லும் படை கொண்ட என் இனிய விருந்தே!
வெல்லும் வகையில் வீரியம் வளர்க்கமாட்டேனோ?
என் உயிரின் தாரமே! அரிய காரமே! அன்னமே!
கட்டிக்காவல் தாண்டி வந்து கடிக்காமல் விடுவேனோ?
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th February 2015, 03:54 PM
#60
Senior Member
Senior Hubber
மேம்,
உங்களோட 'வார் அன்ட் பீஸ்' ஸ்டோரி ரொம்ப நல்லாவே இருக்கு. சத்தியமா இப்பத்தான் படிச்சேன். இப்பிடி அநியாயமா நெறய விஷயங்கள் ஒத்துப் போகுதுன்னு பார்த்து அதிர்ச்சியாயிட்டேன். உங்க கதையை முன்னாடியே படிச்சிருந்தா இப்பிடி ஒரு கவிதை எழுதியிருக்க மாட்டேன். இந்த போட்டி உலகத்தில நாம யோசனை பண்ற விஷயத்தை நமக்கு முன்னாடி யாராவது யோசனை பண்ணியிருப்பாங்கன்னு சொல்றது எவ்வளவு உண்மைன்னு இப்போ தெளிவா தெரியுது. நீங்க சொல்லாத சில விஷயங்கள் நான் சொல்லியிருக்கறத்தை பாத்து இது நானா யோசனை பண்ணி எழுதுனதுன்னு ஒத்துகிடுங்க. நன்றி.
இங்க நீங்க எழுதியிருக்கிற இரண்டு கவிதைகளும் நல்லா இருக்கு. பாராட்டுக்கள். இங்கேயும் நீங்க உங்க கவிதைகளை தொடரணும்.
Last edited by kalnayak; 20th February 2015 at 04:00 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
Bookmarks