Page 1 of 13 12311 ... LastLast
Results 1 to 10 of 126

Thread: கவிதை எழுதுவோம் வாருங்கள்.

Hybrid View

  1. #1
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like

    கவிதை எழுதுவோம் வாருங்கள்.

    நண்பர்களே, நண்பர்களே!!!

    தமிழ் இலக்கிய வரிசையில் கவிதை எழுத ஆர்வம் கொள்பவர்களுக்காக ஒரு புதிய திரி இது. இது போன்ற திரியை (அதாவது கவிதையை மட்டுமே எழுதுவதற்கான திரியை) நான் காணவில்லை இங்கே. அதணால் இந்த புதிய திரி. பல திரிகளிலும் பலரும் கவிதை எழுதுகிறார்கள். அவைகளை, அவர்களை ஒருங்கிணைப்பதற்கே*இத்திரி. உங்கள் கவிதை எழுதும் திறனை இங்கே பறை சாற்றுங்கள். என்ன வழக்கம் போல் ஒரே ஒரு வேண்டுகோள் எல்லோரும் இணக்கமாக சென்றிட மாறுபட்ட கருத்துககளை வலிந்து திணிக்காதீர்கள். நல்ல தலைப்பு உங்களால் தேர்ந்தெடுக்கப்படுவதே.

    இதோ எனது முதற்கவிதை, கணித வார்த்தைகளை கொண்டு:

    சதுரங்க போட்டியில் பலவிதமாய் காய்களை பெருக்கி
    அவைகளை கட்டங்களில் முன்னேற்றிச்செல்லும் விதி வகுத்து
    எதிரியின் காய்களை வகைவகையாய் பின்னாமாக்கும் முறைசாற்றி
    நீட்டிய வேளையுடன் நிறுத்தாமல் இழுத்தடிக்கும் போதினிலே
    அகல மறுக்கின்றார் அவனியுலோர் முடிவு தெரிவதற்கு
    காய்களை கழித்தாயிற்று, கூட்டமாய் கட்டங்களை இழந்துமாயிற்று
    திறங்களை கனமாய் பெறவேதம் சிப்பாயை முன்னேற்றுகிறார்
    எக்கணமும் ஒருவர் வெல்லக்கூடுமில்லையேல் இருவரும் சமமாவர்
    எவர் வெல்வர் என அறிய காத்திருப்போம், முடிவிலி எவருமிலர்.

    நீங்களும் உங்கள் கற்பனை குதிரையின் சிறகை தட்டுங்களேன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாழ்த்துக்கள் கல்நாயக், இப்போதுதான் பார்த்தேன். கவிதைக்கென்று தனியே நீங்கள் திரி ஆரம்பித்திருப்பதை. நீங்கள் நன்றாக எழுதுவீர்கள் என்று தெரியும். ஆனால், கவிஞரும் கூட என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ஆனால், ஸாரி. என்னால் இங்கு பங்கேற்க முடியாத நிலைமை. எனக்கு கவிதை எழுத வராது. உங்கள் முயற்சி சிறப்பான வெற்றியடைய மீண்டும் வாழ்த்துக்கள். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  4. Thanks kalnayak thanked for this post
  5. #3
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கயிற்றுப் போட்டி

    ஒரு முனையில் அவள்
    மறு முனையின் அவன்

    இழுக்கையில் கோட்டைத் தாண்டி
    கால்கள் சென்றுவிட

    ஜெயித்தது நான்
    வெற்றிப் பூரிப்பில் அவன்

    தோற்றது நீ
    மனதுக்குள் புன்னகையுடன் அவள்..

    விட்டுக் கொடுப்பதும்
    சிலசமயம்
    சுவாரஸ்யம் தான்!

    ( ரொம்ப நாள் முன்னால எழுதினதுங்ணா)

  6. Likes kalnayak liked this post
  7. #4
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அக்கா தங்கை..
    ***

    என் அகத்துக்காரர் ஸ்டேட் பேங்க்
    என் அகத்துக்காரர் சிட்டி பேங்க்

    என் அகத்துக்காரர் சீனியர் மேனேஜர்
    என் அகத்துக்காரர் அஸிஸ்டெண்ட் வைஸ் ப்ரசிடெண்ட்

    என் இரண்டு பெட்ரூம் ஃப்ளாட் அடையாறில்
    என் ஒன்றரை க்ரவுண்ட் குடிசை வளசரவாக்கத்தில்

    என் பையன் சர்ச் பார்க்
    என் பெண் டான் பாஸ்கோ

    என் அம்பாஸடர் தான் எனக்கு செளகர்யம்
    இவருக்கு எப்போதும் புதுக்கார் தான்

    அருகில் வா அருமைத் தங்காய்...
    என்ன கண்ணில் கலங்கல்...

    ஒண்ணுமில்லேக்கா...தூசு!

    (ரொம்ப நாள் முன்னால எழுதினதுங்ணா)
    Last edited by chinnakkannan; 29th January 2015 at 10:29 AM.

  8. Likes kalnayak liked this post
  9. #5
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சின்னக்கண்ணன்,
    இது உங்களுக்கான திரி. உங்கள் அளவிற்கு நான் கவிதை எழுத மாட்டேன். இருந்தாலும் அவ்வப்போது முயற்சிக்கிறேன். அதற்குள் இரண்டு கவிதைகளை பதித்து விட்டீர்கள். அழகு.
    உங்களிடம் இன்னொன்றை கற்றுக்கொள்ளவேண்டும்.கவிதை எழுதுவதற்க்கான டாபிக். முதல் கவிதை ஒரு சின்ன அற்புதமான காதல் கதையே!!!
    இரண்டாவது அக்கா தங்கை வாழும் வளமான வாழ்க்கையை பற்றியது. நல்ல சுவாரசியம்தான். புதுக்கவிதை.
    மரபுக் கவிதைகளைப் பற்றி சொன்னீர்கள். புதுக்கவிதைகளைப் பற்றியும் சொல்லுங்களேன். நானும் முயற்சிக்கிறேன்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  10. Likes chinnakkannan liked this post
  11. #6
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    புதுக்கவிதைக்கு இலக்கணம்னு எதுவும் கிடையாது..ஒரு சின்ன ட்விஸ்ட்..அல்லது ஏராளமான சிந்தனைகளைப் பொதிந்து இருக்கறாமாதிரியான காட்சி. இருக்கணும்.. எனக்கு மரபுக்கவிதை கொஞ்சம் நிறையவேபிடிக்கும்..

  12. Likes kalnayak liked this post
  13. #7
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கல் நாயக் வாழ்த்துக்கள்.. இதைப் போயம்ஸ் கவிதைகள் த்ரெட்ல போட்டிருக்கலாமே..

    வர்றேங்க்ணா..மறுபடி..

  14. #8
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    கலைவேந்தன்,
    உங்கள் தூண்டுகோளுக்கு நன்றி. நான் கவிஞனுமில்லை, நல்ல ரசிகன். என் மனத்திலும் தமிழ்நாட்டின் பெரும்பாலானவர்களைப் போல அவ்வப்போது எதையாவது கவிதையாக எழுத தோன்றுகிறது. சமீபத்தில் நண்பர் சின்ன கண்ணன் வேறு என்னை கவிதை எழுத தூண்டி விட்டாரா, மனத்தில் ஒரே சிந்தனை - கவிதையாக. அதுதான் இந்த திரி. நீங்கள் கவிதையாக எழுதாவிட்டாலும் பரவாயில்லை. இங்கே எழுதப்படும் கவிதைகளை ஆதரித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன். அதுகூட போதும். இல்லையென்றால் சற்றே முயற்சித்து கவிதையாக கூடஎழுதுங்களேன். நன்றி.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  15. #9
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    குரு, நாளைக்கு வெள்ளிக்கிழமை..லீவ்..கொஞ்சம் விலா வாரியா புதுக்கவிதை பத்தி எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.. தைரியமா எழுதுங்க.. கொஞ்சம் இந்தக் கவிதைகள் த்ரெட்ல கவிதைக்குக் கவிதை பாட்டுக்குப்பாட்டு என ஒரு த்ரெட் இருக்கு..அங்கயும்வாங்க..இறுதிச் சொல் வைத்து எழுதணும்..(ம்ம் சட்டைக்கையை மடக்கி இறங்குங்க..ஒண்ணும் ப்ராப்ளமில்லை..)

  16. Likes kalnayak liked this post
  17. #10
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க. நீங்கள் சொன்ன புதுக்கவிதை கருத்த்தினையே ஒரு கவிதையாக்கி மகிழ்கின்றேன்.

    புதுக்கவிதை இலக்கணம் இல்லா கவிதை மற்றும் அது
    மதுக்கவிதை இருப்போர் இல்லையோர் எவரும் இயற்றும் கவிதை
    அது இது என எதையும் பாடவைக்கும் கவிதை. சிந்தனை
    எதுவும் பொதிந்திருக்கும், படித்தவுடனே புரிந்திருக்கும்.

    அசாதாரணங்களும் அநாயசமாய் சொல்லப்பட்டிருக்கும்.
    இயல்பான விடயங்களும் இயல்பை மீறி எடுக்கப்பட்டிருக்கும்.
    பாரதியென்ற பெரும்புலவன் காட்டிவிட்ட பாதைதனில்
    பாமரரும் பயணித்திருக்கும் பாடைஏறா பாட்டுவழி.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  18. Likes chinnakkannan liked this post
Page 1 of 13 12311 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •