Page 2 of 13 FirstFirst 123412 ... LastLast
Results 11 to 20 of 126

Thread: கவிதை எழுதுவோம் வாருங்கள்.

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கல் நாயக் குட்.. இது பற்றி வெகுகால முன் மரபில் எழுதிப் பார்த்தது.. (ஒரிஜினலின் கடைசி நாலுலைன்ஸ் மறந்து போச்..இப்போ திருப்பி எழுதினேன்..)

    புதுக்கவிதை எழுததற்கு என்ன வேண்டும்
    …புவியினிலே கற்பனையின் வளந்தான் வேண்டும்
    வதுவைகொளக் காத்திருக்கும் வயதுப் பெண்ணின்.
    …வளமான சிந்தனைகள் பற்ற வேண்டும்
    பதுமையெனத் திகைக்காமல் பாரில் எல்லா
    ..பல்வண்ணக் காட்சிகளை நெய்ய வேண்டும்
    இதுகவிதை எளிமையெனப் போற்றும் வண்ணம்
    …எழுச்சிகொள வைக்கு(ம்)புதுக் கவிதை தானே

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #12
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கல் நாயக்,

    பலவருடங்களுக்கு முன் நான் ஆரம்பித்த ப்ளாக்கில் எழுதிப் பார்த்த கட்டுரை..(அப்புறம் ப்ளாக்கைத்தொடரவில்லை)

    //எழுதுவது என்று எடுத்துக் கொண்டால் எதைப் பற்றி வேண்டுமானாலும், எந்த வடிவிலும் (தெரியாத விஷயமாய் இருந்தால் தெரிந்து கொண்டு) எழுத இயலும் என நினைக்கிறேன்..தேவை கொஞ்சூண்டு கற்பனை.


    பாருங்களேன். இங்கு சுட்டெரிக்கும் வெய்யில் - ச்சும்மா 44 டிகிரி தான்..மதியம் வீட்டிற்கு உணவருந்தப் போவதற்குள் நாக்கு வெளித் தள்ளுகிறது.. ஹ்யுமிடிட்டி எனத் தமிழில் சொல்லப் படும் புழுக்கம்,அனல் காற்று பாடாய்ப் படுத்துகிறது..இரவிலும் கூட..அப்படி இருக்கையில் நேற்று வீட்டிற்குச் சென்றால் அகத்துக்காரி வடை செய்து வைத்திருந்தாள்..ஒன்றுமே தோன்றாமல் எழுத ஆரம்பித்து எழுதி விட்டேன்.
    .
    **

    ஆடி அசைந்தே அருகில் வருமெலியால்
    வாடி வதங்கும் வடை.

    **

    கூண்டைத் திறந்து விட்டதும்
    பாய்ந்த எலியைக்
    கவ்விச்சென்ற பூனையைக்
    கண்டதும்
    ஏனோ நினைவுக்கு வந்தது
    முந்தா நாள் ருசித்த
    ஆமை வடை..

    ****

    எலி கவ்விய வடை
    வடை கவ்விய பூனை
    எல்லாம் மண்ணில்..

    **

    முந்தாநாள் பாட்டி;
    நேற்று அம்மா;
    இன்று மனைவி
    நாளை மகள்.
    வடையும் ருசியும்
    மாறவில்லை தான்
    மாறிப்போனதென்னவோ
    தலைமுறை நாக்கு..

    **

    வடை வைத்து வெண்பா, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீன கவிதை என்றுமட்டுமல்ல.. வடையையே சரித்திரக் கதையின் ஆரம்பமாகவும் வைக்கலாம்..!

    சித்திரா பெளர்ணமி முடிந்து இரு நாட்களானாலும் கூட வானில் உலா வந்து கொண்டிருந்த சந்திரன் சற்றே பிரகாசமாகத் தான் தனது நிலவினை கீழே அந்தப்புரத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த கொடி வீட்டின் விதானத்தில் பரப்பிக் கொண்டிருந்தான்.அதன் மூலம் கொடிவீட்டினுள் நுழைந்த கிரணங்களானது அங்கே ஏற்கெனவே திண்ணையில் ஒருக்களித்து அமர்ந்திருந்த செந்தமிழ்ச்செல்வியின் மீது பட்டும் படாமலும் விழுந்து அவளை ஒரு விதமான உயிர்ச்சிற்பமாக அடித்திருந்தன.

    அந்த சமயத்தில் அவளது தோளை யாரோ தொட, சற்றும் திடுக்கிடாமல் திரும்பிய செல்வி, 'ஏனாம் இவ்வளவு நேரம் பாண்டியரே.. நான் ஒருத்தி இருப்பது நினைவிருக்கிறதா என்ன..வெற்றி மயக்கத்தில் மற்ற அரண்மனைக்குச் சென்று விட்டீரா.."

    அவளது ஊடலை ரசித்த பாண்டிய மன்னன் சுந்தர வதன பாண்டியன்.,' செல்வி.. கோபத்திலும் நீ மிக மிக அழகாயிருக்கிறாய்...சரீ..இதைப்பார்..சமர்க்களத் தி லிருந்து நான் கொணர்ந்தது..வைர ஒட்டியாணம்- சுத்தமான அசல் வைரத்தினால் செய்யப் பட்டது..உனது இடைக்குச் சின்னதாக இருக்குமா எனத் தெரியவில்லை.." என்றான்.

    அதைப் பார்த்து பிற்காலத்தில் ஒளிரப் போகும் பாரதத்தைப் போல முகமொளிர்ந்த செல்வி, 'போர்க்களத்துக்குப் போவதற்குமுன் நீங்கள் ஆசைப் பட்டு அருந்தினீர்களே..அதை உங்களுக்காக வைத்திருக்கிறேன்.' என வெள்ளித்தட்டொன்றை நீட்ட அதிலிருந்த பதார்த்தத்தை வாயிலிட்டுக்கொண்ட சு.வ பாண்டியன் முகஞ்சுளித்தான்.

    'என்ன செல்வி இது..வடை மாதிரி இருக்கிறது..ஆனால் நிறைய வேறுவிதமான வாசனை வருகிறதே.."

    'என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்.. நீங்கள் ஊருக்குச் செல்வதற்கு முன் ஆசைப் பட்டு சாப்ப்ட்ட அதே வடை தான்..நெடு நாள் வைத்தாலும் கெடாமல் இருக்குமாம்..எனது பாட்டியார் சொன்னபடி செய்திருக்கிறேன்..இதைப் பற்றி நமது அவைப் புலவர் கூட ஒரு காவியம் எழுதியிருக்கிறார்.. நெடு நாள் வடை என்ற தலைப்பில்' என்றாள் செந்தமிழ்ச் செல்வி..

    'அசடே..அது நெடு நாள் வடை இல்லை. நெடு நல் வாடை!" என்றான் சு.வ.பா.

    **

    இப்படியே கதையைக் கொண்டும் செல்லலாம்..சரி.. அப்புறம் வரட்டுமா..//

    கவிதை பத்திச் சொல்லுங்கன்னா கதை வுடறேங்கறீங்களா !

  5. Likes kalnayak liked this post
  6. #13
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ஆஹா. அருமை. அருமை.

    நாம் இருவர் மட்டும் தான் இங்கே கும்மிக் கொட்டிக்கொள்ளவேண்டும் எனத் தெரிகிறது. நீங்கள் சொன்ன திரிகளுக்கும் சென்று வந்தேன். அங்கேயும் பதியலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம்.

    நீங்களும் என்னைப் போலவே நகைச்சுவைப் பாதையில் இறங்கி விட்டீர்கள். அட்டகாசம்தான் போங்கள்.

    இப்படி வடையைப் பற்றி கவிதை எழுதியதைப் படித்தவுடன் நேற்று 'த ஹிந்து'-வில் (தமிழ்) படித்த நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது.

    ஒருவர் சொல்கிறார்: "இந்த ஏரியாவல எலித்தொல்லை இப்படி அதிகமாக இருக்கே?"

    மற்றவர் பதில் இது: "இதுதான் 'வட'சென்னை ஆச்சே!!!"
    Last edited by kalnayak; 30th January 2015 at 11:47 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  7. Likes chinnakkannan liked this post
  8. #14
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நாம் இருவர் மட்டும் தான் இங்கே கும்மிக் கொட்டிக்கொள்ளவேண்டும் எனத் தெரிகிறது.

    கல்நாயக்,

    உங்கள் உவமையை ரசித்து சிரித்தேன். எனக்கும் கும்மி கொட்ட ஆசைதான். ஆனால், நான் என்ன செய்யட்டும்.கவிதை வராத கையறு நிலையில் இருக்கிறேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  9. #15
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    கலைவேந்தன் நன்றி.
    நானும், சின்ன கண்ணனும் கும்மி கொட்டிக் கொள்கிறோம். நீங்கள் பார்வையாளராகவாவது வந்து எங்களுக்கு ஆதரவு அளித்து கொண்டிருங்கள்.*
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  10. #16
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மு.எ. ஹைக்கூ..

    **

    கடைசி நாள் சம்பளம்
    மேஸ்திரி வாங்க
    கையசைத்தது வீடு

  11. Likes kalnayak liked this post
  12. #17
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    எழுதுவதை நிறுத்திவிட்டேன் என்று
    எவருக்கும் தெரியவில்லை.
    அதை தெரிவிக்க எழுதினேன்.
    இப்போது எழுதுவதை நிறுத்தவில்லை என்று
    எவருக்கும் தெரிவதால் இன்னும்
    எழுதுவதை நிறுத்தவில்லை.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  13. Likes chinnakkannan liked this post
  14. #18
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கொய்யா..
    ***

    நேரே வெட்டி
    கூறுகளில் உப்பிட்டு
    காய வைத்து உண்டால்
    பலம் வருமென
    கிழம் வாங்கிச் செல்ல
    விருத்தியானது
    வியாபாரம்..

    (romba naalaikku munnaal ezhuthiyathu may be 15 yrs)
    Last edited by chinnakkannan; 4th February 2015 at 11:56 AM.

  15. Likes kalnayak liked this post
  16. #19
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    புதிதாய் எழுத கருவைத் தேடினேன்
    புதிராய் முளைத்த கருவை எழுதினேன்.
    விதியாய் விளைந்த வாழ்வைத் காண்கிறேன்.
    கதியாய் எதிரே கடவுளை தேடுகிறேன்.

    சொல்வதற்கு என்ன இருக்கிறது
    சொல்லாமலே எல்லாம் நிகழும்போது.
    வல்லமை எதற்கு வான்மீது செல்லவா
    வலியோரை வறுமையில் காத்து நிற்கவா.

    எல்லோரும் போலவே நானும் ஒருவன்.
    என்னை ஏமாற்றி செல்லவே எவனோ ஒருவன்
    ஏங்கிச் சாவான் இவனென நினையாமல்
    எள்ளி நகையாட விட்டுவிட்டான்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  17. #20
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரொம்ப வருத்தம் எதுக்கு கல் நாயக்.. தாராளமா எழுதுங்க.. இறைவன் எல்லா நலமும் தருவான்

    **

    புதிராய் முளைத்த கருங்கறது வாழ்வா..

    **

Page 2 of 13 FirstFirst 123412 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •