Page 5 of 13 FirstFirst ... 34567 ... LastLast
Results 41 to 50 of 126

Thread: கவிதை எழுதுவோம் வாருங்கள்.

  1. #41
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாட்டெழுத வந்துவிட்டுப் பாதியிலே நின்றுவிட்டேன்
    ..பாவையவ்ள் ஈரவிழிப் பார்வையினால் வந்தவினை
    கூட்டிவிடும் ஆவலினை கூர்விழியின் தன்மையது
    ..கூப்பிட்டுப் பேசத்தான் நினைப்பதுவும் தெரியலையே
    நோட்டமிடும் உள்மனசு நோகவைத்தே சொல்வதுவோ
    ..நொந்தபடி ஏதேனும் சொல்வதற்கே கண்பேச்சு
    வாட்டமிலை வஞ்சிமுகம் மறுபடியும் காணையிலே
    ..வண்ணவிதழ் புன்னகைக்க வந்ததுவே பூக்கவிதை..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    கனிந்தது காலம் கவிதை வரைய
    சிந்தனையில் தேடினேன் கருவினை
    எடுக்கப்போனேன் எழுதுபொருள்
    துணையானவள் மறித்து நின்றாள்
    கண்டுகொண்டேன் கருப்பொருள்
    அனைவருக்கும் வரும் எதிர்ப்பொருள்.
    Last edited by kalnayak; 11th February 2015 at 12:58 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  4. #43
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    அசிங்கம் செய்ய யாருமில்லா தைரியத்தில் இயற்கை
    வானம் என்னும் சுவற்றிற்கு நீல வண்ணம் பூசுகிறது
    நிலைமை பார்த்து மேகப் பஞ்சுகளால் ஓவியம் வரைகிறது
    மழையைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டு வானவில் எழுகிறது.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  5. Likes chinnakkannan liked this post
  6. #44
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நாளை நாளைமறு நாள் காதலர் தினம் முன்னிட்டு காதல் பாடல்கள் வடிக்கவும்..


    **
    பெரியமுள் சின்னமுள்ளை சுத்திசுத்தி வாரதுபோல்
    ..பேதையென் நெஞ்சுவொன்னை நெனச்சபடி இருக்குதய்யா
    கரியநிறக் கரடியொண்ணு காட்டுவழி போகுதின்னு
    ..கலங்காமப் போனமக்கள் கதறித்தான் திரும்பவர
    சரியாத்தான் பாத்தீரா மிருகந்தான் கண்டீரா
    ..சாக்கெனவே சொன்னீரா எனச்சொல்லிப் போனவரே
    கரியாட்டம் ஒடம்புலதான் காத்திரமா இருப்பீரே
    …கரடிவுமை அடிச்சதுவோ கன்னிமனம் துடிக்குதய்யா.

  7. Likes kalnayak liked this post
  8. #45
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    உயிர்களை காக்கும் கதிரவன் ஆண்பால்
    உயிர்களை கொண்ட பூமியோ பெண்பால்
    புதன், வெள்ளி முதலான கிரகங்கள் ஆண்பால்
    புவிப் பெண்ணை சுற்றும் திங்கள் அவன்
    சந்திரனென்று ஆணாய் திரிகிறான்
    புலவருக்கோ காதலியின் சகோதரியாய்
    நிலாப் பெண் தெரிகிறாள். என்ன
    திங்கள் ஒரு திருநங்கையோ இல்லையதை
    சுடராய் அணிந்து கொண்ட அர்த்தநாரியோ?
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  9. #46
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கண்ணுக்குள் நீரோட காமாட்சிப் பாட்டியவ
    ..கலங்கித்தான் பார்த்திருந்தா தொலைக்காட்சிப் பெட்டியதை
    என்னாச்சோ ஏதாச்சோ சீரியலில் சோகமென்ன
    …என்றபடி எச்சுமியும் எட்டித்தான் பார்க்கையிலே
    வண்ணவண்ண சேலைதனை வாகாகக் கட்டிக்கிட்டு
    ...வக்கணையா மீன்கொழம்பு செய்முறையைச் சொல்லிநிற்க
    நன்னாத்தான் இருக்குதுடி ஏதுக்குக் கலங்குறவ
    . நன்றாகச் சொல்லிவிடு என்றேதான் கேட்டுவிட

    மென்சிரித்தாள் காமாட்சி ஒண்ணுமிலை எச்சுமியே
    …மேலாக ஒருநினைவு என்றுசொலி நிறுத்தியவள்
    கண்குளமாய்ப் போனகதை நெஞ்சுக்குள் பொங்கியெழ
    …காலையிலே மார்க்கெட்டு வெரசாத்தான் தாம்போயி
    சின்னமீனு பெரியமீனு நல்லமீனாப் பொறக்கிவந்து
    … சிட்டெனவே குழம்புவைக்க மகன்விரும்பி சாப்பிடவும்
    பின்னதொரு நாளிலிந்த முதியோரின் இல்லத்தில்
    …பிள்ளையவன் சேர்த்ததையும் சொல்லவில்லை அக்கிழவி..
    Last edited by chinnakkannan; 13th February 2015 at 03:55 PM.

  10. Likes kalnayak liked this post
  11. #47
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    தோற்றவர் வெல்வதும், வென்றவர் தோற்பதும் காதலில் மட்டும்தானே
    தோற்றம் பார்த்து மட்டும் வரும் காதல் தொடர்ந்து வெல்வது இல்லையே
    தோகையாக வருடும் காதல் நினைவு காதலித்து தோற்றவர்க்கு சாத்தியம்
    தோணும் வரியை எழுதினேன் காதலர் தினத்தில் தோற்றவர் ஆதரவிற்கு
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  12. #48
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    காணி நிலங்கேட்டேன் கண்டுவந்தே தந்தாய்
    நாணி வணங்கி நலமாய் - வாணியுனைப்
    பக்குவமாய் நான்வணங்கிப் பாதம் பணிகின்றேன்
    சொக்கும் எழுத்தெனக்குச் சொல்..

  13. #49
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நாணும் பலசெயல்கள் நற்புவியில் செய்திருந்து
    காணும் காட்சிகளே உண்மையெனப் - பேணித்
    தானிருந்தேன் நீக்கினாய் தக்கபடி வாணிநீ,
    ஆணியே ஆயிற் றது..

  14. #50
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நற்றமிழில் பாட்டெழுத நாட்டமுடன் தாளெடுத்தால்
    கற்பனையோ ஓடுதே காதத்தில் - உன்பதத்தில்
    வாணியே வீழ வரந்தந்தாய் இங்கெனக்கு
    ஆணியே சொல்லுக் கது..

Page 5 of 13 FirstFirst ... 34567 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •