Page 52 of 397 FirstFirst ... 242505152535462102152 ... LastLast
Results 511 to 520 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #511
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பராசக்தியைப் பற்றி சில தகவல்கள்.

    1. பராசக்தி படத்தில்தான் முதன் முதலாக டைட்டிலின் போது பின்னால் பாடல் ஒலிக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது.

    2. சிவாஜி ஒல்லியாக இருந்ததினால் நேஷனல் பிக்சர்ஸ் கம்பெனி மேக்கப் மேனிடம் நிர்வாகத்தால் பணம் வழங்கப்பட்டு சிவாஜிக்கு 'தயார்த் தீனி' அளிக்கப்பட்டது. அதாவது இறைச்சி வகைகள், முட்டை, மீன் இதர மாமிச வகைகள் சிவாஜிக்கு ஒரு கிராமத்தில் இரண்டுமாத காலம் கொடுக்கப்பட்டு அவருடைய உடம்பு கதாநாயகனுக்குத் தக்கபடி ஓரளவிற்கு உருமாற்றப்பட்டது.

    3. 1951-இல் 'பராசக்தி' ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னால் சிவாஜியை வைத்து ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஆக்டிங் டெஸ்ட் எடுக்கப்பட்டது. சிவாஜி நடித்த 'என் தங்கை' என்ற நாடகத்தில் அவர் குடிகாரனாக அதகளம் செய்வாராம். அந்த குடிகாரன் பாத்திரத்தையே சோதனை நடிப்பாக சினிமா காமெரா முன்னால் சிவாஜியை செய்ய வைத்தார்களாம். சிவாஜி பிரமாதமாக நடித்துக் காட்ட அனைவருக்கும் பரம திருப்தி ஏற்பட்டதாம்.

    4. பின் பராசக்தி ஷூட்டிங்கின் முதல் நாளில் கையில் இரண்டு சிகரெட்டுகளைப் பிடித்தபடி சிவாஜி பேசி நடித்த முதல் வசனம் என்ன தெரியுமா. 'சக்சஸ்' அந்தக் காட்சியின் புகைப்படத்தைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.



    5. அந்தக் காலத்தில் ஒரே படத்தில் ஒரு நடிகரே வெவ்வேறு இரண்டு அல்லது மூன்று வேடங்கள் போடுவதுண்டு. 'அய்யா தெரியாதய்யா'
    புகழ் ராமாராவ் பராசக்தியில் கல்யாணியின் பக்கத்து வீட்டுக் காரராகவும், கல்யாணிக்கு கடன் கொடுத்து அதை வசூல் செய்யும் சேட்டாகவும் இரண்டு வேடங்கள் செய்திருப்பார். அந்தக் காலங்களில் கம்பெனி ஒப்பந்தங்களின்படி ஒருவரே நாடகத்திலும் சரி, திரைப்படங்களிலும் சரி இரண்டு மூன்று வேடங்கள் போடுவதுண்டு. ஆனால் எளிதில் கண்டு பிடிக்க இயலாது. மேக்கப்பும், நடிப்பும் அவ்வளவு தத்ருபமாக இருக்கும்.

    6. படம் இரண்டாயிரம் அடி எடுக்கப்பட்டு சிவாஜி பராசக்தியின் கதாநாயகனா இல்லையா என்ற இழுநிலை நீடித்தபோது சிவாஜி அவர்களின் மனநிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தான் பராசக்தியின் கதாநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுவோமா இல்லையா என்று அந்த மனிதர் எப்படியெல்லாம் துடித்திருப்பார். இதோ அவர் சொல்வதைக் கேளுங்கள்.

    "பராசக்தியில் என்னை கதாநாயகனாக ஆக்குவார்களா இல்லையா என்று நான் துடித்துப் போனேன். அழுது அழுது என் கண்ணீர் வற்றியது. இன்று ஏவி
    எம் ஸ்டுடியோவில் வானுயர வளர்ந்த வேப்ப மரங்கள் அனைத்தும் அன்று என் கண்ணீரால் வளர்ந்தவை"

    அதே ஏவி எம் ஸ்டுடியோவில் தற்சமயம் உலகப்பெரு நடிகர் சிவாஜி கணேசனுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் புகைப்படத்தைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.('பராசக்தி' பட வடிவில்)



    7. முதன் முதல் ஒரு திரைப்படத்தின் வசனங்கள் இசைத்தட்டாக வெளிவந்து தமிழ்நாடு முழுதும் எதிரொலித்ததே அவ்வளவு ஏன்? இன்றளவும் கூட மார்கழி மாத அதிகாலைகளில் கோவில்களில் குணசேகரன் கல்யாணித் தங்கைக்காக நீதிமன்றத்தில் கோர்ட்டாருடன் வாதிடுவது நமது ஆழ்ந்த உறக்கத்தையும் மீறி நம் காதுகளுக்குக் கேட்டு நம்மில் உணர்ச்சிப் பிரவாகத்தை உண்டு பண்ணுகிறதே!

    8. முதன்முதலில் வெளிநாட்டில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் பராசக்திக்கு உண்டு.

    9. அதுவரை தமிழில் கதாநாயகர்களாகக் கோலோச்சிய நடிகர்கள் தியாகராஜா பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், கே.ஆர்.ராமசாமி, எம்.கே.ராதா, ரஞ்சன், இன்னும் நிறைய பேர் பராசக்தி சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். தெலுங்கு நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி ஆர் கூட தமிழில் நிறைய நடித்துக் கொண்டிருந்த நேரம்.அவர்களும் நடிகர் திலகம் என்ற நடிப்புப் புயலில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆந்திராவில் சென்று கரையேறினர்.

    10. அதுவரை திரைப்பட விநியோகஸ்தராக இருந்த பி.ஏ.பெருமாள் முதலியார் அவர்கள் தயாரித்த முதல் படம் 'பராசக்தி'.

    11. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அறிமுகமும் பராசக்தியில்தான் என்று நினைக்கிறேன்.

    12. .கலைஞரும், சிவாஜியும் இணைந்த முதல் படம் என்பதை பட்டி தொட்டியும் அறியும்.

    13. கவிஞர் கண்ணதாசன் நீதிபதியாக பராசக்தியில் சில காட்சிகள் விருப்பத்துடன் ஏற்று நடித்தாராம். இறுதிவரை நடிகர் திலகத்துக்கு உறுதுணையாய் இருந்த சிவாஜி நாடக மன்ற இயக்குனர் எஸ். ஏ. கண்ணன் இறுதி நீதிமன்றக் காட்சிகளில் வக்கீலாக நடித்திருப்பார்.

    14. 'பராசக்தி'யில் சிவாஜி நடிப்பதைப் பார்க்க அப்போதே பெரிய நடிக நடிகைகள் மற்றும் இதர கலைத்துறையினர் ஏ.வி.எம்.ஸ்டுடியோ வளாகத்திற்கு வந்து விடுவார்களாம். 'யார் இந்தப் புதுப் பையன்? போடு போடு என்று போடுகிறானே!' என்று சத்தமில்லாமல் தங்களுக்குள் பேசிக் கொள்வார்களாம்.

    15. தனக்கு வாழ்வளித்த பெருமாள் முதலியார் அவர்களை தன் வாழ்நாள் முழுதும் நன்றி மறக்காமல் ஒவ்வொரு பொங்கலன்றும் முதலியாரின் சொந்த ஊரான வேலூருக்கு குடும்பத்துடன் சென்று, அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, அவருக்கு மரியாதைகள் செய்து விட்டு வருவது நடிகர் திலகத்தின் வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தது. இப்போதும் அவர் பிள்ளைகள் மூலம் தொடர்கிறது.

    'பேசும்படம்' சினிமா இதழ் 'இம்மாத நட்சத்திரம்' என்ற தலைப்பில் 1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிவாஜி அவர்களைப் பற்றி வெளியிட்ட பெருமைமிகு கட்டுரை. இக்கட்டுரை ஆவணத்தை நமக்குத் தந்த திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி!

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks Russellmai, JamesFague thanked for this post
    Likes JamesFague, Richardsof liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #512
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்



    ஓ ரசிக்கும் சீமானே வா



    புதுப் பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks Russellmai, JamesFague thanked for this post
    Likes JamesFague, Richardsof liked this post
  6. #513
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் வாசு சார்.. பூக்கடைபக்கம் படத்தில் பார்த்ததோடு சரி..படக்கதை கூட நினைவிலில்லை..

    பாரதியின் இடையில் வரும் சின்ன ட்விஸ்ட் அழகாய் இருக்கிறது..ஸாரி டைப்போ பாட்டின் இடையில் வரும் சின்ன ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது.. தாங்க்ஸ்..ஐ திங்க் பாவாடை சட்டை தாவணி போட்டு ட்விஸ்ட் ஆடுவது இந்த ஒரு பாட்டு தான் என நினைக்கிறேன் (ஹையா வெடி போட்டாச்சு)

    //எது எதிலே பொருந்துமோ
    உருவம் பார்த்துப் பருவம் பார்த்துப் பழகும் காதல் ஒன்று

    தொட்டுத் தொட்டுப் பார்த்தபின்பு ஆசைகொள்ளும் மனது
    தொட்டபின்பு ஆசை விட்டு விட்டு விடும் சிறகு…// குமாரி பத்மினிக்கு பளபள ட்ரஸ் அவ்வளவாய்ப் பொருந்தவில்லை..கொஞ்சம் டைட்!

    ஆனாக்க எனக்கு செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் ரொம்ப்பப் பிடிக்குமே..

  7. Thanks vasudevan31355 thanked for this post
  8. #514
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    1988 ல் வெளியான 'அதுக்காகப் பிறந்தவள்' என்ற அபூர்வ படத்தின் அபூர்வ பாடல்.

    'எந்த நேரம் தூக்கம் வராது'

    வாணி ஜெயராம் பாடும் பாடல்.இப்படத்தைப் பற்றி நண்பர்களுக்கு ஏதாவது தெரிந்தால் பகிரவும். சின்னக் கண்ணனார் ஆதரவு இருக்கும் வரை நமக்கென்ன கவலை?

    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes Russellmai liked this post
  10. #515
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    காலை வணக்கம் நண்பர்களே

    மதுண்ணா என்ன தேனிசை தென்றலின் முத்துக்கள் பற்றி மூச்சு விடவில்லையே .. பாடல்கள் கேட்டீர்களா ??
    ரெண்டு தடவை எழுதி போஸ்ட் செய்யும் முன்னாலே சர்ர்ரியா கரண்ட் கட். ரெண்டு வாட்டியும் காப்பாற்றி வைக்கவில்லை. மீண்டும் எழுதுகிறேன்.

  11. Likes rajeshkrv liked this post
  12. #516
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    சொல்லடி அபிராமி .... ஆதிபராசக்தி
    நான் போட்ட புள்ளி ..ஒரு மாற்றம் ... வீட்டுக்கு ஒரு பிள்ளை

    இதோ எந்தன் தெய்வம் ..... பாபு

    கடவுள் வாழ்த்து பாடும் .... நீரும் நெருப்பும் .

    இந்த 4 பாடல்கள் 18.10.1971 தீபாவளி அன்று வெளிவந்த படங்களில் இடம் பெற்ற பிரபலமான பாடல்கள் . பாடகர் திலகத்தின் மாறுபட்ட குரலில் ஒலித்த இனிமையான பாடல்கள்

  13. Likes rajeshkrv, Russellmai liked this post
  14. #517
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அன்பளிப்பு படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் பாட்டு..

    வாசு ஜி... இந்தப் பாட்டைப் போன்ற டியூனில் வேறொரு பாட்டு இருக்குதா ?


  15. Likes Russellmai liked this post
  16. #518
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மிட் நைட் மசாலா

    பகுதி மூன்று..

    கண்களிலே கொஞ்சம் கவலை,பயம் எதிர்பார்ப்ப்பு... மேலே வானத்தில் மதி.. இரண்டாம் பிறையோ என்னவோ கொஞ்சம் வட்டம் கம்மியாய்ப் போனாலும் கீழே நிற்கும் அவளைப் பார்த்து ஹலோ சொல்லிவிட்டு பின் திருத்தி ஏய் புள்ள செளக்கியமா எனக் கேட்பது போல் பளீரெனச் சிரித்துக் கொண்டிருந்தது..
    அவள்..ஸ்ரீ திவ்யா ..சினிமா ஷ்டார் கணக்காய்த் தான் அழகு.. கிராமத்து நங்கை.. வந்துவிட்டாள் அந்த ஊரின் கோடியில் இருக்கும் மாந்தோப்பில்.. மாமர நிழலில்..

    காரணம் திவா.. அவளது முறைப்பையன்..முறைமாமன்.. அவளை சின்னவயதிலிருந்தே முறையாக முறை கொண்டாடிப் பாசம் வைத்திருப்பவன்..பக்கத்து டவுனில் தான்கல்லூரிப் படிப்புப் படித்தவன்.. இவளும் சும்மா இல்லை..ப்ளஸ்டூ முடித்தவள் தான்.. கர்ரெஸ் (கரெஸ்பாண்டன்ஸில்) இல் மதுரை காமராசர் யுனிவர்சிட்டியில் பிகாம் இரண்டாம் வருடம்..

    சென்னையில் வேலை கிடைத்துப் போய்விட்டு எட்டுமாதம் கழித்து நேற்றுத்தான் ஊருக்குவந்தான்..

    ஊருக்கு வந்தவன் திவ்யாவின் அம்மா அப்பாவிடம் ஆசி வாங்கவும் வந்தான்..”மாப்ள தீர்க்காயுசா இருங்க” எனச் சொல்லி திவ்வு மாடில்ல இருக்கு என அனுப்பியும் வைக்க மாடிக்கு வந்தவன் திவ்யமான அழகில் சொக்கியதென்னவோ நிஜம்..

    ஸ்ரீக்குட்டி (அவன் அவளை அப்படித்தான் அழைப்பான்) இந்த இடைவெளியில் எப்படி ஆகிவிட்டாள்.. எட்டுமாதம் தான் இருக்கும்..உயர்ம் கூடினாற்போல இருக்கிறது..இளைத்திருமிருக்கிறாள்..போட்டுக்கொண்டிர ுந்த பாவாடை சட்டையில் அழகாய்த் தான் இருக்கிறாள்..இல்லை இல்லை இன்னும் அவள் முகம் பார்க்கவில்லையே..

    காரணம் மொட்டை மாடியில் அந்த மாலைவேளையில் கொடியில் இருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீ யின் கூந்தல் மற்றும் பின்னழகுதான் அவன் கண்ணில் பட்டது.. மெல்ல “ஸ்ரீ”

    துணியெடுத்த அவள் காதிலும் அந்த்க் குரல்.. ம்க்கும்..மாமன் இங்க எங்க வரப்போகுது..எஸ்ஸெம்மெஸ் அனுப்பிச்சுருக்குமே.. வாஸ்ஸப்புலயும் வரலை..பிஸியோ என்னவோ.. ஆனாலும் ஸ்ரீ ஒனக்கு ரொம்பவும் தான் பிரமை..

    மறுபடி “ஸ்ரீ” எனக் குரல் கொஞ்சம் சத்தமாக.. திரும்பினால்..அட மச்சான்…மாமா..

    “என்னங்க” என்றாள் நாக்குழற.. அவளுக்கு உடல் உயிரெல்லாம் பதறியது..”இப்படியா ஷாக் குடுப்பாவ”

    “ச்.. ஒரு சர்ப்ரைஸ் தான் ஸ்ரீ” எனக் கரம் பற்றினான் திவா.. என்ன நீ நாளுக்கு நாள் அழகாய்கிட்டு தான் இருக்க.. ஒரு நிமிஷம் இரு.. என முகம் நிமிர்த்தி,” தலை முடிக்கு ஷாம்ப்பூ போட்டிருக்க.. கொஞ்சம் பஃப்னு இருக்கு..கொஞ்சம் சுருளா நெத்தில விழறது ரொம்ப அழகா இருக்கு.. நெத்தில இருக்கற நெளிப்பொட்டு ஜோர்.. கண்ணில என்ன கருவளையம்.. உதடு ஏன் இப்படி ட்ரையா இருக்கு லிப் க்ளாஸ் போடறதில்லையா…” கொஞ்சம் தள்ளி நின்று “ஒடம்பும் இளச்சுப் போன மாதிரி இருக்கு புள்ள…சில ப்ளேஸஸ் தவிர!”

    “மாம்மா” கையை உதறினாள்.. ” நீங்களும் தான் இளச்சுட்டீங்க..எத்தனை நாள் லீவு..ஒருவாரமா”

    ஒரு வாரமா.. கெட்டது போ.. நான் இன்னும் ரெண்டு நாள்ல கெளம்பணுமாக்கும்..ஹேய் ஒண்ணு செய்யலாமா..இன்னிக்குப் பெளர்ணமி.. நாளைக்கும் நிலா இருக்கும்.. நம்ம மாந்தோப்புக்கு வர்றியா..சும்மா வீட்டுல சொல்லிட்டே கூட வா..

    நா வரமாட்டேம்ப்பா.. அதுவும் சொல்லிக்கிட்டா.. அம்மா வையும்..

    முறை மாமன் தானே புள்ள.. அங்கிட்டு வா.. நிறையப் பேசலாம் நிறைய விஷயமும் ஒனக்குக் கத்துத் தாரேன்..

    “சரி” என அரை மனதாய்த் தான் வந்தாள் அவள்.. ஆனால் அடிவயிற்றில் கொஞ்சம் பயம்..

    முறைமாமன் தான்..படிச்சவன் தான்..வான்னுகூப்பிட்டான்னு வந்தாச்சு.. ஆசையாத்தான் இருக்கு..இது வரைக்கும் எதுவும்கேட்டதில்லை..அப்பப்ப லைட்டா டச்சிங் டச்சிங்க்..கைமட்டும் பிடிச்சிருக்கான்.. ஒரே ஒரு தடவை எதையோ காட்டறதுக்காக தோளைத் தொட்டிருக்கான்.. சிலிர்ப்பாத் தான் இருந்துச்சு.. அதுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.. ஆனா ஒண்ணும் எக்ஸ்ட்ராவாக் கேட்டதிலலை. இப்ப என்னடான்னா இங்க வரச் சொல்லியிருக்கானே..செல்வி வீட்டுக்கு போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு ஸ்கூட்டிய எடுத்துட்டு அவவீட்டுல விட்டுட்டு ரகசியமா சொல்லிட்டு இங்க வந்தாச்சு. ஏதோ சொல்லித் தாரேன்னு சொன்னானே.. ஏடாகூடமா ஏதாச்சும் பண்ணிடுமோ..இங்கிட்டும் ஆள் நடமாட்டம் எதும் இல்லை.. காத்து வேற ஜில்லுனு வீசுது...ஆளை வேற காணும்..செல்ல போன் பண்ணிப் பார்க்கலாமா..

    கைப்பையிலிருந்து செல்ஃபோன் எடுக்கையிலேயே தொலைவில் அவ்ளைப் பார்த்ததும் இன்னும்பதற்றம் கூடுகிறது அவளுக்கு..

    அவன் வந்து இழுத்தணைத்து இடைதொட்டிழுத்து ஏதாவதுகேட்டால் என்ன செய்வேன் நான்.. ஸ்ரீயின் மனதில் எப்போதோ கேட்ட நாட்டுப் பாடல் ஒலித்தது..

    கள்ளத்தை கண்களிலே காட்டி மச்சான்
    ..காணாத இடத்திற்கே கூப்பி டாதே
    உள்ளதெலாம் உனக்கெனவே தானே மச்சான்
    …உள்ளத்தை வாட்டாதே போப்போ நீயும்
    வள்ளலெனத் தருவேனே ஆசை மச்சான்
    …வாகாக வேளைவந்தால் உனக்குத் தானே
    எள்ளிடுவார் யாரேனும் பார்த்தால் மச்சான்
    ..இன்னுமெனைத் தூண்டாதே சொல்வேன் கேட்பாய்..

    ஸ்ரீயின் அருகில் திவா நெருங்கி விட்டிருந்தான்..

    **
    இதே மாதிரி சிச்சுவேஷன் தாங்க இந்தப் பாட்டிலும்.. ஹீரோ ஹீரோயினைத் தனியாக் கூப்பிட்டுட்டார் போல.. ஹீரோயினும் வந்துடறா.. பயம் மனசுல.. பாட்டும் பாடிடறாளாக்கும்
    மெல்ல..மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல.. சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல...

    மெல்ல.. மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..
    சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல...

    உச்சி முதற்கொண்டு பாதம் வரை இன்று ஓடிடும் மின்னலை என்ன சொல்ல...
    மிச்சம் இருப்பதை நாளை என்று...
    மிச்சம் இருப்பதை நாளை என்று நெஞ்சில் மின்னிடும் ஆசையை என்ன சொல்ல..


    அத்திப் பழத்துக்கு மேலழகு உந்தன் ஆசை பழத்துக்கு உள்ளழகு...

    தத்தித் தவிக்கின்ற பொன்னழகு...
    உன்னைத் தழுவ துடிக்கின்ற பெண்ணழகு..


    தாமரை பூவினில் வண்டு வந்து தேனருந்த மலர் மூடிக்கொள்ள...
    உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்...
    உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்... ஆடுகின்றாய்... ஆடுகின்றாய்..


    மேலை திசையினில் போயுறங்கும் கதிர் மீண்டும் வரும் வரை நம் உலகம்...
    காலை பொழுதினில் சிந்தனைகள்.....
    மறு மாலை வரும் வரை கற்பனைகள்..


    ஒன்றிலிருந்தே ஒன்று வரும் அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்....
    ஒன்றிலிருந்தே ஒன்று வரும் அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்....
    ஒன்று பிரிந்தபின் ஒன்றுமில்லை...
    நாம் ஒன்று இரண்டென்பதென்றுமில்லை...

    மெல்ல.. மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..
    சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல...

    **

    படம் தான் தெரியுமே பணமா பாசமா..பாடியவர்கள் திரையில் ஜெமினி சர்ரோஜாதேவி.. பின்னால்.. டி.எம்.எஸ்.. பி.சுசீலா..

    இதோ வீடியோ..


    **
    அது சரி என்ன ஆச்சு திவாவுக்கும் ஸ்ரீக்கும்.

    திவா நெருங்கி வர.. ஸ்ரீ “எவ்ளவு நேரமா காத்திருக்கேன் தெரியுமா”

    திவா சிரித்து..வா..அப்படி உக்காந்துக்கலாம்..

    “மாமா.. நீ வரச் சொன்னயேன்னு வந்தேன்..வீட்லயே பேசியிருக்கலாம்ல.. “

    “ச் சும்மா பந்தா பண்ணாத புள்ள ஒக்காருங்கறேன்ல” அதே மாமரத்தின் கீழே அவன் உட்கார அவளும் உட்கார..

    “சொல்லு மாமா..”

    “ஏய் எப்படி இருக்க நீ..என்னை நினைக்கறியா..”

    “யோவ் அதான் நிதைக்கும் குட்மார்னிக்க் மாமோய் வாஸ்ஸப்ல அனுப்பறேன்ல”

    “ச் நானும் நினைக்கேன் தெரியுமா எப்போதும் உன்னை ஸ்ரீ.. கொஞ்சம் கிட்ட வாயேன்..”

    “வேணாம்யா. ஏதோ ஜனவரில்ல நாள் குறிக்கலாம்னு அப்பா பேசிக்கிட்டிருந்தார்.. உங்கப்பா சொன்னாரா.” பக்கத்தில் நகர்ந்துகொண்டே கேட்டாள்..

    “சொன்னாரு.. நான் சரின்னுட்டேன்… இந்தா உனக்காக புதுசு வாங்கிட்டு வந்தேன்..சார்ஜ் ஆகும்னு பார்த்தேன் ஆகலை..வீட்டுக்குப் போய் போட்டுரு…சார்ஜ் ஆகியிருந்தா இங்கயே சொல்லிக் கொடுத்திருப்பேன்..”

    “என்னாது இது..”

    “ஸாம்ஸங்க் நோட் 4 புள்ள..செல்ஃபோன்..இனிமே எனக்கு மெஸேஜோட ஒன்னோடா செல்ஃபியும் அனுப்பிச்சுடு..சரியா..”

    “ஹையோ மாமா ஒன்னைத் தப்பா நினைச்சுட்டேனே” என மனதுள் நினைத்தவள் துள்ளி அவனுக்குகுட்டி முத்தா தர திவா முழித்தான்.. பின் அவர்கள் பேச்சும் தொடர்ந்தது.. லெட் தெம் டாக் த ஸ்வீட் நதிங்க்ஸ்.. நாம அவங்கள விட்டுறலாம்..என்னாங்கறீங்க..
    *
    பிடிச்சுருக்கா ராகவேந்தர் சார்..
    அடுத்த பாட்டு டெடிகேடட் டூ மதுண்ணா.. நோ க்ளூஸ்..க்ளூ கொடுத்தா கண்டு பிடிச்சுருவார்….இருந்தாலும் ஒரு இல்லவே இல்லாத க்ளூகொடுக்கலாமா..(?!) her eyes wont tell any lies.!

    ( நா போய்ட்டு அப்புறம் வாரேன்)

  17. Likes Russellmai, rajeshkrv liked this post
  18. #519
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    ரெண்டு தடவை எழுதி போஸ்ட் செய்யும் முன்னாலே சர்ர்ரியா கரண்ட் கட். ரெண்டு வாட்டியும் காப்பாற்றி வைக்கவில்லை. மீண்டும் எழுதுகிறேன்.
    Time to get an iPad and keep it fully charged? Or a battery backup?
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  19. Likes rajeshkrv, chinnakkannan liked this post
  20. #520
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    இதோ இன்னும் கொஞ்சம் பாட்டொன்று கேட்டேன் பாடல்கள்

    நிலவே நீ வா - சுசீலா



    நினைப்பது நடப்பதில்லை - சீர்காழி கோவிந்தராஜன், சுசீலா


  21. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •