Page 297 of 397 FirstFirst ... 197247287295296297298299307347 ... LastLast
Results 2,961 to 2,970 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2961
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாடினார் கவிஞர் பாடினார்..
    **
    அத்தியாயம் ஒன்று
    **
    கோவிலில் சென்றால் தெய்வத்தைக் கும்பிடவேண்டும் என்பது நியதி..அந்த வாலிபனுக்கும் அவ்வண்ணமே நினைப்பு தான்..இருப்பினும் அவனோர் கவிஞன்..கவிஞன் கண்களில் கட்டெறும்பு தட்டுப்பட்டால் என்னாகும்

    விட்டுவிட்டுச் செல்லாமல் வேகத்தைக் கூட்டியே
    எட்டிநீ செல்வதெங்கு ஏஎறும்பே – வட்டிலிட
    பெண்ணொன்று காத்திருக்க பேதைநீ செல்வதைக்
    கண்ணிலே கண்டுவிட்டேன் காண்..

    இப்படி எறும்பைக்கூட கவியாக்கும் சின்னக் கவிஞர்கள்(ம்க்கும்.. நான் தான்) இருக்கையில் அந்த இளைஞனோ மகாகவி.. கண்ணில் தட்டுப் படுகிறாள் ஒரு நங்கை.. உடன் ஒரு மங்கை..உடன் ஒரு ஆள்.. முறையே மான் மயில் நரியெனச் சென்றாலுங் கூட முதல் நங்கையின் எழில் முகம் மனதில் பல அலைகளை எழுப்பிப் பொங்க வைத்துக் கவியாக வெளிப்படுகிறது..

    தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுக்க
    குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
    பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
    பொங்கியேபூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே!

    மரபுக்கவிஞன் தான் மகாகவி காளிதாஸன்.. பெண்ணுக்காக கொஞ்சம் மரபை மீறி மரபுக்குள்ளேயே கவிதை பாடிவிட்டான்..அதுவும் என்ன மரபு.கட்டளைக் கலித்துறை..கொஞ்சம் சிரமமான விஷயம் தான்..

    வெண்டளை பயில வேண்டும் நேரசையில் ஆரம்பித்தால் ஒவ்வொரு வரியிலும் 16 எழுத்துக்கள் (புள்ளி வைத்த எழுத்துக்களை கணக்கிலெடுத்துக் கொள்ளக் கூடாது) முடியும் போது ஏகாரத்தில் முடியவேண்டும்.. இதை எல்லாம் எழுதிப்பார்க்க பேனா பேப்பர் (அந்தக்காலம்) ஒரு கம்ப்யூட்டர் எம் எஸ் வேர்ட் அண்ட் தமிழ் ஃபாண்ட் ப்ளஸ் விரல் (இந்தக்காலம்) வேண்டும்..

    என இருக்கையில் ,மனதுள் உதித்துப் பாடினால் எப்படி இருக்கும்..அதுவும் இரண்டு விதமாய்த் தென்படும் வண்ணம்..

    ஒரு விளக்கம்: ”அடி பெண்ணே.. இந்த உலோகம் தங்கம் இருக்கிறதே அதுவே தாமரை மொட்டுக்கள் போல ஆனது போன்ற நிறத்தில் உனது நகில்கள் நிமிர்ந்து நிற்க, குங்குமச் சாறு ஊறியதாற்போன்ற சிவந்த நிறங்கொண்ட உன் முகத்தில் குறு குறுவென இருக்கும் கருவண்டுகள் என உன் கண்கள் காட்சியளிக்க தாமரை மலரின் மேல் அமர்ந்திருக்கும் பங்கய னான பிரம்மனின் வியப்புக்குரியதான படைப்பாகி பசுங்கொடி போல் துவண்டிருக்கும் நீ – உன் மேல் பகுதியில் அப்படியே பொங்கியே பூரித்து புறப்படு வரும் முழு நிலவென உன் முகம் இருக்குதடி.. நீயும் புறப்பட்டு விட்டாய்..”

    இன்னொரு விளக்கம்” “ஓ நிலவே..தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுத்து நிற்க குங்கும நிறம் போன்ற மின்னும் தாமரை மலர் முகப்பினில் கருவண்டுகள் சுற்றிச் சுழன்று கொண்டிருக்க, தந்தைத் தாமரையின் மகளாகிய பெண் தாமரை எழுகிறது..அதன் மேல் நீயும் பொங்கி எழுந்து புறப்படுகிறாய்..”

    கேட்ட வனிதை அதிர்ச்சியில் ஆனந்தக் களிப்பில் நிற்க அவளைத் தவிர அந்தப் பாடலைக் கேட்டது இன்னொருவர்..அரசன்..அவனும் கவிஞன்..

    இந்தக் கவிஞர்களுடைய சுபாவமே கவிதை நன்றாக இருந்தால் ரசித்துவிட்டு மெளனமாக இருப்பார்கள்.. கொஞ்சம் ஏதாவது தென்பட்டால் உண்டு இல்லை தான் ஆக்கிவிடுவார்கள்..

    அது போல அந்த அரசனான கவிஞனுக்கும்.. “ ஓய்..பாடல் நன்னாத் தான் இருக்கு”

    காளிதாஸன் வணங்கி “ நன்றி “

    “ஆனாக்க ஒம் பாட்டில ஒரு பிழை இருக்கு ஓய்..”

    “என்ன அது”

    “ கவி முரண் இல்லியோ.. பாடறது நிலாபத்தி அப்படியே தாமரையையும் கோத்து விட்டிருக்கீங்களே.. தாமரை பகல்லன்னா மலரும்..

    “ இல்லீங்க்ணா.. தாமரைன்னு சொல்லலியே தாமரை மொட்டுன்னா சொன்னேன்..”

    மன்னனுக்கு உடன் தன் பிழை புரிந்தாலும் உடனிருந்தவர்கள் ஒப்பாமல் டெஸ்ட் வைக்க அதில் காளிதாஸன் பாஸானது வேறு கதை..

    இந்த கட்டளைக் கலித்துறைப்பாடலை எழுதியவர் கு.மா.பாலசுப்ரமணியம்..

    மகாகவி காளிதாஸில் வரும் பல மரபு க் கவிதைகளை எழுதியவர் அவர். பிறந்தது 1920 அண்ட் காலமானது 2004.. திரைப்பாடலில் மரபுக்கவிதையைப் புகுத்தியவர்களுள் ஒருவர் எனலாம்.. வெகு அழகான பல பாடல்கள் எழுதியிருக்கிறார்.. சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசு கழகத்தில் இருந்தவர்.. பாரதிதாசன் மீது மிகப் பற்று வைத்திருந்தவர்..

    வீரபாண்டிய கட்டபொம்மனில் அனைத்துப் பாடல்களும் எழுதியவர் இவர் தான்.
    .
    மற்ற சில பாடல்கள்

    யாரடி நீ மோகினீ

    சித்திரம் பேசுதடி

    அமுதைப் பொழியும் நிலவே

    நெஞ்சினிலே நினைவு முகம்

    இன்பம் பொங்கும் வெண்ணிலா

    இன்னும் பல..

    **

    நாதஸ்வரத்தில் வாசிக்கப் பட்டிருந்த அந்த தேவாரப் பாடலைப் பாடப் பலரையும் அணுகினார் இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு.வருடம் 1962..அந்த தேவாரப் பாடல் மந்திராமவது நீறு

    அந்தப் பாடலை நாதஸ்வரத்தில் வாசித்திருந்தவர் திருநெல்வேலியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காருகுறிச்சி என்ற கிராமம் உலகப் புகழ் பெறுவதற்குக் காரணமாயிருந்த நாதஸ்வர மேதை அருணாசலம்.

    இப்படித் தேடுகையிலேயே ஒன்று தோன்றியது எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிற்கு..இதற்கு – இந்த நாதஸ்வர இசைக்கு ப் பொருத்தமாக வேறு பாடல் எழுதினால் என்ன..

    அப்படியே கவிஞரைக் கூப்பிட கவிஞரும் எழுதிக் கொடுக்க பல பேரைப் பாடவைத்தால்..என்னமோ.. அந்த மரபிசைப் பாடலுக்கும் நாதஸ்வர இசைக்கும் அந்தப் பாடகிகளின் குரலுக்கும் ஏதோ ஏதோ.. நல்லாத் தான் இருக்கு ஆனால்..

    கடைசியில் அப்போது அவ்வளவு பிரபலமாயிராத எஸ்.ஜானகியைப் பாட வைத்தார் .

    கொஞ்சும் சலங்கை படத்தில் வந்த இன்றும் அழியாப் புகழுடன் விளங்கும் 'சிங்கார வேலனே தேவா ' என்ற பாடல் அது.

    ஆபேரி' ராகத்தில் அமைந்திருந்த அந்தப் பாடல் அந்த ராகத்தில் அமைந்துள்ள எல்லாப் பாடல்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது.இப்பாடலை எழுதிய கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்


    **

    கு.மா.பாலசுப்பிரமணியத்தின் க.க து பாடல்காட்சி – மகாகவி காளிதாஸ்..


    https://www.youtube.com/watch?featur...&v=gr7jj-RtXLE

    இனி என்ன ..இன்னொரு காதல் பாட்டு தான்..

    ஆமாம் காதல்னா என்னங்க.. காதலே மாயை..ஒரு சின்னக் கனாலோகம் தானே..
    கனவின் மாயா லோகத்திலே நாம்
    கலந்தே உல்லாசம் காண்போமே நாம்
    கலந்தே உல்லாசம் காண்போமே

    தீங்கனியே உன்னாசை போலே நாம்
    இணைந்தாடுவோம் இந்நாளே

    ரொம்ப எளிமையாக கு.மா.பாலசுப்பிரமணிய ம் எழுத பாடியவர்கள் டி.எம்.எஸ் பி.சுசீலா..இளமை ந.தி, நடிகையர் திலகம் சாவித்ரி ( ஒல்லியாய் இருக்கிறார்) படம் அன்னையின் ஆணை..

    https://www.youtube.com/watch?featur...&v=wzkXoR41lOE

    **

    அடுத்து வரும் கவிஞர் தாவணி போன்ற ஒன்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார்..கொஞ்சம் யூனிக்கான கவிஞர்.. தனக்குப் பிடித்தவருக்காக தன் பெயரையே மாற்றிக் கொண்டவர்..

    அவர் யாரென்றால்….

    (ஹி ஹி..இன் நெக்ஸ்ட் அத்யாயம்)

    தொடரும்..

    // கல் நாயக் ஹேப்பி அண்ணாச்சி?//
    Last edited by chinnakkannan; 24th February 2015 at 11:05 AM.

  2. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2962
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi 23 - A Lullaby

    From Nalla PiLLai, Tamil dubbed version of Albela ((1951)

    Ekaantha raja nee aanandhame......



    From the Hindi original Albela

    Dheere se aajaa re ankhiyan mein........




    May be, ChinnakkaNNan can sleep well with this lullaby !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  5. Likes kalnayak, chinnakkannan liked this post
  6. #2963
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,
    உங்க 'பாடினார் கவிஞர் பாடினார்' முதல்அத்தியாயத்திற்கு நானே கவிஞரை எடுத்து கொடுத்தேனோ!!! பெருமையாக இருக்கிறது. வழக்கம் போல கலக்கி விட்டீர்கள்.

    அப்புறம் என்னமோ கட்டளை கலித்துரை அப்பிடினெல்லாம் ஏதோ சொல்லி இருக்கீக. அப்படின்னா என்னன்னு சொல்லி என்னை மாதிரி ஒண்ணும் தெரியாதவங்களுக்கு உறைக்கிற மாதிரி சொல்லலாமே.

    ஆபேரி ராகத்தில் அமைந்த மற்ற பாடல்களையும் சொன்னால் என்னை மாதிரி ஆட்கள் 'ஆஹா இதுதான் ஆபேரி ராகமா?' என்று தெரிந்து கொள்ள ஏதுவாக இருந்திருக்கும். சரி பரவாயில்லை. அடுத்த கவிஞர் பத்தி சொல்றப்போ இதெல்லாம் ஞாபகத்தில் வச்சிக்கோங்க.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  7. Likes chinnakkannan liked this post
  8. #2964
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கல் நாயக்.. நன்றி..முதல் அத்தியாயத்துக்கு நினைத்திருந்தவர் வேறு..கு.மா.பா பின்னால் வைத்திருந்தேன்..கேட்டவுடன் முதலில் எழுதிவிட்டேன் (ஆம் நீர் தானெடுத்துக் கொடுத்தீர்..இல்லையென்றால் உட்கார்ந்து எழுதியிருக்க மாட்டேன்..லேஸினஸ் தான் காரணம்!)
    பின்ன வாரேன்
    Last edited by chinnakkannan; 24th February 2015 at 01:41 PM.

  9. Thanks kalnayak thanked for this post
  10. #2965
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Rajraj sir thanks. I will see that in the evening.

  11. #2966
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    kal nayak..kavithaikku kavithai comments threadla evening pOdarEn..about venpa and ka ka thu..

  12. Thanks kalnayak thanked for this post
  13. #2967
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நிலாப் பாடல் 26: "அள்ளி அள்ளி வீசுதம்மா"
    --------------------------------------------------
    S.ஜானகியம்மா குரலில் கங்கை அமரன் இசையில் ஒரு பெண் பாடுவதாக அமைந்த ஒரு பெண் பாடுவதாக அமைந்த அரிதான ஒரு காதல் பாடல். நிலா இங்கு அன்பை அள்ளி அள்ளி வீசுவதாக வருவது நல்ல இனிமையாகவே இருக்கிறது. செல்வா (Dr. ராஜசேகரின் தம்பி) மற்றும் ரஞ்சிதா நடித்திருக்கிறார்கள். பாட்டை எழுதியவர் தகவல் கிடைத்தால் கொடுங்கள்.

    பாடல் வரிகள்:
    ----------------------
    அள்ளி அள்ளி வீசுதம்மா
    அன்பைமட்டும்
    அந்த நிலா நிலா
    மாளிகை மாடம் மட்டும் வீசாம
    ஓலைக்குடிசை என்னும் பாக்கம
    அள்ளி அள்ளி வீசுதம்மா
    அன்பை மட்டும்
    அந்த நிலா நிலா

    என் கோயிலில் தீபம் ஏற்றி
    நான் வாழ்கிறேன் உன்னாலே உன்னாலே
    என் நெஞ்சிலோர் ராகம் உண்டு
    நாளும் பாடுவேன் அன்பாலே அன்பாலே
    என் நேசமும் என் ஆசையும் உன்னோடு உன்னோடு
    பூமாலையும் நீ சூடவா
    பூமாலையும் நீ சூடவா
    பாராட்டவா சீராட்டவா

    (அள்ளி அள்ளி)

    பூந்தென்றலாய் உன்னை நானும்
    நான் வாழ்த்துவேன் பூப்போலே பூப்போலே
    தாய்போலவே உன்னை நானும்
    சீராட்டுவேன் தேன்போலே தேன்போலே
    என் சொந்தமும் உன் பந்தமும்
    என்னாளும் நீங்காது
    என் ஜீவனே என்னாளுமே
    என் ஜீவனே என்னாளுமே
    உன் பேரையே கொண்டாடுமே

    -----------------------------------------------------
    ஒளியும் ஒலியும்:



    அத்தை மக ரத்தினமேன்னு சொன்னால் இப்படி பாடிடுவாங்களா? உதைதான் விழும் மாமன் கிட்ட இருந்து.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  14. Likes chinnakkannan liked this post
  15. #2968
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நிலாப் பாடல் 27: "நிலவுக்கு என் மேல் என்னடி*"
    ----------------------------------------------------------
    கிடைத்தது பாருங்க ஒரு ஸூபர் ஹிட் பாட்டு. மெல்லிசை மன்னர்கள் இசையில் P.B.ஸ்ரீநிவாஸ் பாடிய அற்புதமான பாடல். இதுவும் காதல் பாடல்தான். காதலி கோபத்தை நிலாவின் கோபமாக பாடுவது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. பாலாஜி, புஷ்பலதா நடித்திருக்கிறார்கள்.*பாடல் வரிகள் கண்ணதாசன் என்று சொல்லவும் வேண்டுமோ!!!

    சரி பாடல் வரிகளை பாருங்கள்: *
    --------------------------------------
    நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்*
    நெருப்பாய் எரிகிறது...இந்த மலருக்கு *என் மேல்*
    என்னடி கோபம் முள்ளாய் மாறியது (2)
    கனி மொழிக்கென் *மேல் என்னடி கோபம்*
    கனலாய் காய்கிறது...உந்தன் கண்களுக்கென் மேல் என்னடி கோபம்*
    கணையாய் பாய்கிறது*

    .........நிலவுக்கு........

    குலுங்கும் முந்தானை சிரிக்கும்*
    அத்தானை விரட்டுவதேனடியோ (2)
    உந்தன் கொடியிடை இன்று படை*
    கொண்டு வந்து கொல்லுவதேனடியோ
    திருமண நாளில் மணவரை மீது *
    இருபவன் நான் தானே*
    என்னை ஒரு முறை பார்த்து*
    ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே*

    .......நிலவுக்கு.........

    சித்திரை நிலவே அத்தையின் மகளே*
    சென்றதை மறந்து விடு (2)
    உந்தன் பக்தியில் திளைக்கும் *அத்தான்*
    எனக்கு பாதையை திறந்துவிடு (2)

    .......நிலவுக்கு.........

    __________________________________________________ _____________________
    ஒளியும் ஒலியும்:



    __________________________________________________ _____________________

    போலீஸ்காரன் மகள் கிட்டயே இப்பிடி துணிஞ்சுட்டாரே. என்ன ஆயிரிந்திருக்கும்?
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  16. Likes chinnakkannan liked this post
  17. #2969
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கரஹரப்ப்ரியா ராகத்திலிருந்து பிறந்த ஜன்ய ராகம் தான் ஆபேரியாம்.. நகுமோமு…. கார்த்திக்கின் குரலில்..

    https://www.youtube.com/watch?featur...&v=Xw9ECuN4z98

    கவலைகள் நிறைந்து அமைதியை இழந்து தவிக்கும் மனதிற்கு அமைதியும் ஆறுதலும் தந்து குணமாக்கும் ராகம் இது. அடிநாதத்தில் இலேசான சோகம் இழையோடுமாம்

    இன்னும் சில பாடல்கள்…
    ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு

    சிந்து நதிக்கரை ஓரம்,
    இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை,
    சின்னஞ்சிறு வயதில்..
    கங்கைக் கரைத் தோட்டமும் ஆபேரியாம் (சரிதானா..)

    எனில்..

    https://www.youtube.com/watch?featur...&v=t09r97wbLMg

  18. Thanks kalnayak thanked for this post
  19. #2970
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராத்திரி தூங்கறதுக்காக சுத்த தன்யாசில ஒரு பாட்டுப் போட்டுடலாமா...

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
    இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
    அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்துவிடு

    அந்தக் காலத்தில் கேஸட்டில் கேட்டுக் கேட்டு ரசித்தது நினைவுக்கு வருகிறது...


    https://www.youtube.com/watch?featur...&v=NE2iEEQdSkw

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •