-
27th November 2014, 11:08 AM
#1671
Junior Member
Platinum Hubber
THANKS VASU DEVAN SIR
SUPER POSTING ABOUT MAKKAL THILAGAM MGR IN NAAN ANAYITTAL MOVIE .
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
27th November 2014 11:08 AM
# ADS
Circuit advertisement
-
27th November 2014, 11:08 AM
#1672
Senior Member
Senior Hubber
Originally Posted by
vasudevan31355
வணக்கம் ராஜேஷ்ஜி !
நேத்து நைட் செம ஜாலியா இருந்துச்சு. ஆனா தூக்கம் வந்து கெடுத்துடுச்சே. ஒத்தயடிப் பாதையிலே பார்த்தீர்களா?
ஆம் நல்ல ஜாலியான அரட்டை..... பார்த்தேன் பார்த்தேன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th November 2014, 12:56 PM
#1673
Senior Member
Senior Hubber
எஸ்.பி.வி.வி -1
(சொல்லோடு பொருளேந்தி விளையாட வந்தேன்..)
// இசையும் கதையும் என இலங்கை வானொலியில் வரும் ஒரு நிகழ்ச்சி..அதே போல இங்கு தரலாம் என்றிருக்கிறேன்..ஒரு படக்கதை..அல்லது என்கதை/ கட்டுரை ..பின் படத்தின்பாடல்கள்..அல்லது கதை/கட்டுரைக்குச் சம்பந்தமான பாடல்கள்..பழைய படங்கள் என்றில்லை..கொஞ்சம் புதிய படங்களும் கூட வரலாம் வேற்று மொழி.. தமிழும் வரலாம்.. வாரத்திற்கு ஒன்று என...(இப்ப மட்டும் என்னவாக்கும் செய்றே நீ… ஷ்ஷ் மனசாட்சி..)
கொஞ்சம் சீரியஸாகவே எழுதப் பார்க்கிறேன்..முகத்தை உம் மென்று வைத்துப் படிக்கவும்...//
-
ஒன்று – ஏழு படிகள்..
*
அவன் இளைஞன்.அழகன். வேத பாடங்களில் வல்லுனன். சிறு வயது முதலே கோவிலில் அம்பாளை பூஜிப்பவன்.. அவனது தாத்தா அந்த கிராமத்தில் மிகப் பெரிய வேத வித்து. அவரது மகனும்(இவன் அப்பாவும்) அப்படியே..
அந்த இளைஞனுக்கு அன்று மிகச் சிலிர்ப்பாக இருந்தது. காரணம் அவனுக்கு அன்று முதலிரவு..
.என்ன தான் சின்ன வயதிலிருந்து அம்பாள் உபாசனை என்று இருந்தாலும் அவனும் மானிட ஜென்மம் தானே...எனில் பலப் பலக் கனவுகள், எண்ணங்கள் சுமந்து அறையினுள் நுழைந்து ஆவலாய் காலையில் தான் தொட்டுத் தாலி கட்டிய அத்தை மகளை, அவளின் அள்ளக் குறையாத அழகை, அவளது அகலக் கண்களின் எழிலைப் பருகுவதற்காக ஏறெடுத்துப் பார்த்தால் அதிர்ச்சி அவனைத் தாக்குகிறது…
காரணம் முதலிரவு மணவறையில் அமர்ந்திருப்பது… அத்தை மகளின் வடிவில் அமர்ந்திருப்பது சாட்சாத் அம்பாள் தான்..
என்ன இது..என முதலில் தோன்றினாலும் பரவசமாய்ப் பாட ஆரம்பித்துவிடுகிறான்..
அயிகிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வ வினோதினி நந்தனுதே
கிரிதர திவ்ய சிரோஸி நிவாஸினி விஷ்ணு விலாசினி ஜிஷ்ணு நுதே
பாடல் முடிவில் அவளை அப்படியே விழுந்து நமஸ்கரித்துவிட்டுப் போய்விடுகிறான்..மறு நாளும் இரவு வருகிறது..அவளும் அறையில். அவனும் நுழைகிறான்..மறுபடியும் அம்பாள் தோற்றம்..
அப்போது தான் அவனுக்கு உறைக்கிறது. அம்பாள் உபாசகனல்லவா அவன்..பரஸ்த்ரி அம்பாளின் சொரூபம்.. எனில் அறையில் அமர்ந்திருக்கும் தொட்டுத் தாலி கட்டிய மனைவி பரஸ்த்ரி என அம்பாள் தன் ரூபத்தில் காட்டுகிறாளா.. குழப்பம் மனதில் உந்த வெளியில் அவன் சென்று விட…
அறையில் சர்வாபரண பூஷிதையாய் அமர்ந்திருக்கும் சபிதாவிற்கும் குழப்பம்.. அழகிய நீலக்கடல்போல பரந்து விரிந்த கண்களின் ஓரம் நீர் குளம் கட்டுகிறது..கட்டிலில் அவள் சாய கண்களில் நீர் பொங்கி கன்னங்களில் முன்னோக்கி ஓட அவளது எண்ணங்கள் பின்னோடுகின்றன..
*
-
27th November 2014, 12:57 PM
#1674
Senior Member
Senior Hubber
*
ஆர்வத்துடன் நாட்டியம் காண்பதற்கு வந்திருக்கும் கூட்டம்.. அமைதியாய் இல்லாமல் .கொஞ்சம் சில சிறு சலனங்களாய் சலசலப்புகள் இருக்க திடீரென சலங்கை ஒலி ஒலிக்க மேடையில் ஒரு மயில் வந்து கம்பீரச் சிரிப்பு சிரிக்க அரங்கமெங்கும் அமைதி..
வந்தது மயிலில்லை.. மயில் போன்ற அலங்காரத்தில் வனிதை.. சபிதா..கம்பீரமாக வந்து கூட்டத்தினரைப் பார்க்கையில் பின் பாட்டுப் பாடுபவர் பாட ஆரம்பிக்க அவளது மயிலாட்டமும் ஆரம்பிக்கிறது..
நெமிலிக நர்த்தன நடதளிரே..முரளிகி அந்தன படுகுளிரே…
உற்சாகமாய் தாவித் தாவி மயிலாக மாறி அவள் ஆடுகையில் குறுக்கே குழப்பமில்லாமல் தாளத்துடன் கலந்த ஒரு இசை ஒலி.. புல்லாங்குழல்..அமர்ந்திருப்பவர்களிடம் இருந்து..
மயில் நின்று கர்வத்துடன், அலட்சியக் கண்களுடன் அரங்கத்தினுள் பார்க்க மூலையில் அந்த வாலிபன்.. முகத்தில் இளமை கண்களில் சிரிப்பு.. வாயில் புல்லாங்குழல்..
அவனிசை முடிந்தபின் மயிலாட்டம் ஆரம்பிக்க பின் குழலிசையும் ஆட்டத்துடன் கலந்து கொண்டு போட்டி போட பாடல் முடிகிறது..
ஆனால் அந்தப் புல்லாங்குழலிசை நாட்டியத் தாரகை அவளை மயக்கித் தான் விட்டது எனச் சொல்ல வேண்டும்..
அந்தப் புல்லாங்குழலிசைக்குச் சொந்தக் காரன் முரளி..அவனுடைய அறிமுகமும் அவளுக்குக் கிடைக்கிறது… நட்டுவனார் ஆன சபிதாவின் தந்தை அவனையும் தன் குழுவில் சேர்த்துக் கொள்கிறார்..
வெவ்வேறு ஊர்கள்..வெவ்வேறு அரங்கங்கள்.. சபிதாவின் நாட்டியமும் புகழும் வளர்கிறது..அவளுடைய காதலும்..
அவள் அப்பா நட்டுவனார் ஒரு நாள் சொல்கிறார்.. அவளுடைய தாத்தா ஊரில் நாட்டியம் ஊர்ஜிதம் ஆகியிருப்பதாக..
“தாத்தா ஊரா..”
“ஆமாம் அம்மா..உன் தாத்தா அந்தக் கிராமத்தில் மிகப் பெரிய வேதவித்து..அவருடைய மகளை..அதாவது உன் அன்னையை நான் காதலித்து மணம் புரிந்து விட்டேன்..வேற்று ஜாதி எனில் அவருக்குப் பிடிக்கவில்லை…நாங்கள் ஊர் விட்டு வந்தகதை தான் உனக்குத் தெரியுமே..உன் அன்னையும் நமை விட்டுச் சென்று விட்டாள் ஒரேயடியாக..இத்தனை வருடம், கழித்து நமக்கு அவர் ஊருக்கு உனது நாட்டியம் பார்க்க அழைப்பு வந்திருக்கிறது.. நம் குடும்பம் இணைய ஒரு வாய்ப்பு..”
அவள் எதுவும் சொல்லவில்லை..
*
-
27th November 2014, 12:58 PM
#1675
Senior Member
Senior Hubber
*
ஆயிற்று படகில் ஆற்றைக் கடந்து தாத்தாவின் கிராமத்தின் கரையை அடைந்தாயிற்று..
இறங்குகையில் அவளது கொலுசு கழன்று விழ, முரளிகட்டி விடுகின்றான்..அவளது கலைக் கால்களை அவனது பார்வை வீச்சுகள் அன்புடன் வருடுகின்றன..
“என்னை மறந்து விடுவாயா..உன் புதிய உறவுகளைக் கண்டவுடன்..”
“ம்ஹூ ஹும்.. என்ன பேச்சு இது முரளி” அவள் பேசவில்லை..அவளது விழி பேசியது..
ஊருக்குள் நுழைந்தால் கோவிலில் நாட்டிய அரங்கேற்றம்..
தாத்தாவின் பையன் வெங்கடேசன் தன் சகோதரியின் மகளையும் சகோதரியின் கணவனையும் வரவேற்றுத் தங்க வைக்கிறான்..தாத்தாவை நாட்டியம் பார்க்க அழைக்க தாத்தாவின் கண்களில் கோபம்.
” நமை மதிக்காமல் ஓடிப் போனவள் உன் சகோதரி..எனக்குத் தெரியாமல் என் நண்பன் கோவில் தர்மகர்த்தா எனக்கு நல்லதுசெய்வதாக நினைத்து உன் சகோதரியின் மகளின் நாட்டியத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறான்..அது அவன் இஷ்டம்..என்னால் வர இயலாது”
“அப்பா மன்னித்தல் தெய்வ சுபாவம்”
:”நீயே சொல்லிவிட்டாய்.. நான் சாதாரண மனுஷன்..வேண்டுமென்றால் நீ குடும்பத்துடன் போய்வா..”
ம்ம் எனச் சொல்லி கோவிலுக்கு வெங்கடேசன் தன் மனைவி மகனுடன் செல்ல நாட்டியம் ஆரம்பமாகிறது..
சபிதாவிற்கு மேடை மட்டும் தான் கண்ணில் பாடல் மட்டும் நெஞ்சில்.. எல்லாம் பதித்து அவள் கால்கள் ஆட ஆரம்பிக்கின்றன அந்த மேடையில்
அகிலாண்டேஸ்வரி சாமுண்டீஸ்வரி பாலயமாம் கெளரி..
வெகு அழகாக அவள் ஆட ஆட அங்கே காண்போர் மனம் ஆடுகிறது..
பாடல் முடிவில் அவையினரை வணங்கி நிமிர்ந்து ஓரக்கண்ணால் பார்க்கையில் இது என்ன அதிசயம்..
அவளது தாத்தா…கம்பீரம் குலையாத, முகத்தில் தண்ணொளி பொங்கும் கண்களுடன் இதழ்களில் சற்றே தேங்கிய சிரிப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.. இவர் எப்போது வந்தார்.. இடையில் வந்திருப்பாராயிருக்கும்..
கண்களாலேயே தாத்தா தன் மகன் வேங்கடேசனைக் கூப்பிட அவனும் தாவிப் போய் “அப்பா”
“அவளையும் அவள் தகப்பனையும் நாளைகோவிலுக்கு வரச்சொல்லு” சிங்கம் சொல்லிவிட்டு எழுந்து சென்று விடுகிறது..
*
-
27th November 2014, 12:58 PM
#1676
Senior Member
Senior Hubber
*
மறுநாள்..
ஆலயம்..
வேதம் கற்பிக்கும் சிறார்கள் குழுமியிருக்க, தாத்தா, பையன் வேங்கடேசன், பேரன் மூவரும் கனகம்பீரமாய் நின்றிருக்க பேத்தி சபிதா அங்கு வரவும் துர்கா அஷ்டகத்தை வேதகோஷ்டிகள் தாளம் பிசகாமல் முழங்குகின்றனர்..
ஓம் ஜாதவே புனஸீ…
அந்த வேத சப்தத்திற்குப் பிசகாமல் வெகு அழகாய் நேர்த்தியாய் ஆடுகிறாள் சபிதா..
பாடல் முடிய, தாத்தா பேத்தியை அழைத்து உச்சி முகர்ந்து தன் முடிவைத் தெரிவிக்க, சபீதாவின் கண்களில் கடல்..
“இவளை என் பேரனுக்கு மணமுடிக்கத் தீர்மானித்திருக்கிறேன்..உமக்குச் சம்மதமா”
சபிதாவின் தந்தைக்கோ சந்தோஷம்..இதை இதைத் தானே எதிர்பார்த்து ஏங்கியிருந்தேன்.. நம் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்வதற்கென
கோவில் வெளியில் ஸ்தோத்திரப் பாடலுக்கு அழகாய் ஆடும் சபீதாவின் கால்களை க் கவனித்துக் கொண்டிருந்த முரளிக்கும் அது கேட்கிறது..அவனிடமும் சோகம் குடியேற மெளனமாகத் திரும்பி நடக்கிறான்..
*
பின் பின்..பின்..
எல்லாம் ஒருகனவு போல.. வேக வேகமாகத் திருமணம் நடக்கிறது பேரனுக்கும் சபிதாவிற்கும்..
முதலிரவு..
அதற்கு மறு நாள் இரவு
அதற்கு மறு நாள்…
பேரன் அறையுள் நுழைவதும் துணுக்குற்று விலகி கோவிலே கதியென்று கிடப்பதுமாக…
சபீதாவிற்கும் புரியவில்லை.. தன் மனதுள் முரளி யிருப்பதை வெளியிட வாய்ப்புமின்றி மனதினுள்ளேயே மருகி மருகி மருகி பின் ஒரு தீர்மானத்துடன் அந்த இரவின் அமைதியில் கோவில் பிரகாரத்திற்குச் செல்கிறாள்..
அங்கு எடுக்கிறாள் விஸ்வரூபம்..
அகமழுத கண்ணீரால் ஆர்ப்பரித்த மேகங்கள்
இகத்தில் பொழிந்ததே இன்று..
அவளது உள்ளம் அழுகிறது வானுக்குப் புரிகிறது..அவள் மெல்லிய சருகாய், மிளிரும் கண்கள் தேக்கியிருக்கும் சோகத்தைக் கால்கள் வெளிப்படுத்த மென்மையாய் வீணை இசையுடன் ஆரம்பிக்கும் நடனம் சூறைக்காற்றாய் சுழ்ன்று சுழன்று மாற, வானம் இடி இடிக்க மின்னல் வெட்ட..
காற்று நிற்கவில்லை....இடி நிற்கவில்லை..ஆடும் அவளது கால்களும் நிற்கவில்லை.. அசுர ஆட்டம்…...
வேறிடத்தில் படுத்திருக்கும் முரளி புரிந்துகொண்டதாலோ என்னவோ புல்லாங்குழலில் இசைக்க அவளது சீற்றம் சற்றே அடங்கி மெல்ல மெல்ல நிலைக்கு வருகிறாள்..
எதேச்சையாக க் கோவில் வரும் தாத்தா அவளது ஆடலைக் கண்டு அதிர்ச்சியுறுகிறார்..
”என்ன தான் நடக்கிறது இங்கே”
*
-
27th November 2014, 12:59 PM
#1677
Senior Member
Senior Hubber
*
சிலதினங்கள் முன் கல்யாணம் செய்து கொண்ட பெண் சுழன்றாடுகிறது கோவிலில். புதுக் கல்யாண மாப்பிள்ளையோ முன்னிலும் கொஞ்சம் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அம்பாளைத் தியானித்துக் கொண்டிருக்கிறான்..என்ன விஷயம்..
தாத்தா துருவித் துருவி விசாரிக்கிறார்.. அவருக்குத் தெரியவருகிறது…அவரது பேத்தி சபிதா, முரளியின் காதல்.. பேரனும் தன் மனைவியின் காதலைத் தெரிந்துகொள்கிறான்..
தாத்தாவும் பேரனும் சேர்ந்து முடிவெடுக்கிறார்கள்.. சபிதாவை முரளியிடம் சந்தோஷமாகச் சேர்ப்பிக்கிறார் தாத்தா.. அதுவும் கல்யாண காலத்தில் சொல்லப்படும் சப்தபதி மந்திரத்தின் அர்த்தம் சொல்லி..
*
இது கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த “சப்த பதி” திரைப்படத்தின் கதைச் சுருக்கம்..கே.வி. மகாதேவன் இசை..
தாத்தாவாக சோமயாஜுலு, சபிதாவாக சபிதா பொம்மிடிப்பட்டி என்ற அழகிய நாட்டியம் தெரிந்த நடிகை ( இவர் நடித்த முதலும் கடைசியுமான படம் இதுவே).. பின் பலர்..
பாடல்கள் வெகு அழகு.. நாட்டியமும் மிக அழகு.. படம் தான் வெளியான போதில் தோல்வியைக் கண்டது..
*
இனி பாடல்கள்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th November 2014, 12:59 PM
#1678
Senior Member
Senior Hubber
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
பேரன் முதலிரவு அறையுள் நுழைய அங்கே அம்பாளின் தோற்றத்தில் சபிதா காட்சியளிக்க உணர்ச்சிமிகுந்த அர்ச்சனை....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th November 2014, 01:00 PM
#1679
Originally Posted by
rajeshkrv
ஆம் நல்ல ஜாலியான அரட்டை..... பார்த்தேன் பார்த்தேன்
நேற்று இரவு மற்றும் இன்று காலை நல்லதொரு நிகழ்வுகளாக பல பதிவுகள் போடப்பட்டு உள்ளன நமது மதுர கானம் திரியில் .வாயு வேகம் மனோ வேகம் என்பார்கள் அது போல் பக்கங்கள் மிகவும் வேகமாக பறந்து உள்ளன
அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்
-
27th November 2014, 01:00 PM
#1680
Senior Member
Senior Hubber
மயிலாட்டமும் புல்லாங்க் குழலாட்டமும் கண்களுக்குள் புகுந்து மயக்கம் தரும்..புல்லாங்குழல் குறுக்கிட்ட சபிதாவின் கண்களில் தெரியும் அலட்சியம்..
நெமிலிகி நெர்பின நடதளிரே…
http://www.youtube.com/watch?feature...&v=hb0j7N7a6fA
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks