-
1st March 2015, 05:48 PM
#2991
Senior Member
Seasoned Hubber
திரை இசைத் திலகத்தின் இசையில் மிகவும் அருமையான பாடல்கள் நிறைந்த படம், ஜெய்சங்கர் கே.ஆர்.விஜயா நடித்த தங்க வளையல். அதிகம் அறியப்படாத படம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு நண்பர் இப்படப்பாடல்களை இணையத்தில் தரவேற்றி புண்ணியம் கட்டிக் கொண்டுள்ளார். அவருக்கு உளமார்ந்த நன்றியுடன் பாடல்கள் இங்கே..
வார்த்தை விளையாட்டில் சொல்லத் தெரியவில்லை..
எது வந்தாலும் வரட்டும் சந்தித்து விடு என்று கூறும் பாடல்
அருமையான பாடல் பூவா காயா சொல்லுமய்யா.. ஈஸ்வரியின் குரலில்..
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல், தங்க வளையல் படம் என்றால் உடனே நினைவுக்கு வரும் பாடல் சூலமங்கலம் குரலில் சொன்னாலே வாய் மணக்கும், நெஞ்சினிலே பக்தி மணக்கும் பாடல்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st March 2015 05:48 PM
# ADS
Circuit advertisement
-
1st March 2015, 05:50 PM
#2992
Senior Member
Seasoned Hubber
சில நண்பர்கள் கேட்பது காதில் விழுகிறது.. எல்லாம் ஓ.கே.. அந்தப் பாடல்... எங்கே என்று.. நிச்சயம் வாசு சார் கேட்பார் இந்தக் கேள்வியை..
வாசு சார் இதோ உங்களுக்காக ...
தாழை மடல் சிரிப்பு..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd March 2015, 09:24 AM
#2993
Senior Member
Veteran Hubber
Jugalbandi 24 ( ChinnakkaNNan style)
Originally Posted by
chinnakkannan
ஹை..அப்படி எல்லாம் ரிட்டயர் ஆக விடமாட்டோமே ராஜ் ராஜ் சார்!
*
OK ! Here is one your style !
From Yezhai padum paadu (1950)
kaNNan mana nilaiyai thangame thangam.......
From Deivathin deivam
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd March 2015, 09:54 PM
#2994
Senior Member
Senior Hubber
ராகவேந்திரரே..வாங்க வாங்க. நன்றி தங்க வளையல் பாட்டுக்களுக்கு. நான் கேட்டதில்லை இதுவரை..
கேட்கும்போதே லிரிக்ஸை டைப்படிக்கத் தோன்றியதா அடித்துவிட்டேன்..
**
சொல்லத் தெரியவில்லை உள்ளத்தில் உள்ளதை தெள்ள்த்தெளிவாய் சொல்லத் தெரியவில்லை
சொல்லித்தெரிவதில்லை
மெட்டியிலே சத்தம் வந்தால் – மெல்ல மெல்ல பாடமெல்லாம் சொல்லச் சொல்லும்
தங்கவளை கைகளில் என்னசொல்லும்
தங்கிவிட கைக்குள் வளை என்று சொல்லும்
இரவும் விடிந்துவிட்டால் என்ன செய்வாய்
வரவுக்கும் செலவுக்கும் வாழ்த்துச் சொல்வேன்
யாராக்கும்லிரிக்ஸ்.
*
கொஞ்சம் ரொமாண்டிக் மூட்ல தான் இருந்திருப்பார் போல இருக்கு பாடலாசிரியர்..
பூவா காயா சொல்லுமய்யா வில் எல் ஆர் ஈஸ்வரிகொடுக்கும் அழுத்தம் ம்ம்
*
சொன்னாலே வாய் மணக்கும் வேல் முருகா பக்திப்பாட்ட அடுத்த பாட்டப் பார்த்துட்டுப் பார்த்துக்கறேனே.
*
தாழை மடல் சிரிப்பு
வாழை உடல் விரிப்பு
நடையினில் நடனத் தேர்வருது
இடையினில் பருவ ஊர் வருது
தடையில்லை இன்னும் தயக்கமா
விடையில்லை நெஞ்சில் மயக்கமா
தொடல் பள்ளிக் கூடம் தொட்டதும் துவங்கும் பாடம்
பற்றிட வெட்கமும் மோதும்பின் பெற்றிட பெண்மை நாணும்
இதழும் விழியும் கொஞ்சும்
இன்னொரு முறை எனக் கெஞ்சும்
அலையென வளரும் நெஞ்சம்
கலையினில் உருகும் மஞ்சம்
கண்களும் உன்னைத் தேடும்
ஒரு கவிதையில் உன்னைப் பாடும்
அன்பினில் ஆவல் கூடும்
உன் அழகினில் ஆசை ஆடும்
வாலை தந்த சிகப்பு
சோலை தந்த வனப்பு
காளைகொண்ட கோலமல்லவா நீ
காளைகொண்ட கோலமல்லவா.
**
ஹையாங்க்.. அந்தக் கால்த்திலேயே இப்படியா.. பாடல் கண்ணதாசனா..இல்லை என நினைக்கிறேன்.. நல்ல பாட்டு
நடுவில் வருவது வரட்டும்மும் நல்ல பாட்டு.. மிக்க நன்றிங்க ராகவேந்திராசார்..
*
ராஜ் ராஜ் சார் இரண்டு பாடல்களுக்கும் தாங்க்ஸ் நன்னி.. முத்ல பாட் நான் பார்த்ததில்லை.. யெளவனப் பருவத்தில் குமிழ் சிரிப்போடு பத்மினி.. நைஸ்.
சரி சரி நான் என்ஸ்டைலை மாத்திக்கிட்டு அடுத்த போஸ்ட்ல வர்றேன்..
**
இந்தப்பாடல்கள் பார்த்து ரசிச்சுக்கிட்டிருக்கறச்சே சந்தடி சாக்கில இந்தப்பாட்டும் பார்த்தேனாக்கும். ரவிச்சந்திரன் ராஜஸ்ரீ.படம்?
https://www.youtube.com/watch?featur...&v=N6A2e2oYqvg
யாரடி வந்தார் என் எண்ணத்தைக் கொள்ள ஏனடி வந்தார் என் கன்னத்தைக் கிள்ள ஹைலல்லோ
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd March 2015, 09:59 PM
#2995
Senior Member
Senior Hubber
காதல் வயப்பட்டாலே போதும் ஆணுக்கு ஒரு கவலை என்றால் பெண்ணுக்குப் பலகவலை…
ஆணாகப் பட்டவன் மேலும் மேலும் தன் மனம் கவர்ந்தவளைக் கவரப் பார்ப்பான்..அவளுக்கோ கல்யாணம் குடித்தனம் பின் வாரிசுகள் என முன்னோக்கி வரப்போவதை நினைந்து மனதுக்குள் யோசித்துக் கொண்டிருப்பாள்..
எனில் மெல்ல ஆடவன் வனிதையை அணுக அவளுக்குள் விருப்பம் பட் இந்த நாணம் அச்சம் மடம் எல்லாம் படைக்கறச்சயே ஒரு பேக்கேஜாட்டம் வைச்சுட்டானே பிரம்ம தேவன்.
எனில் அவன் மெல்ல மெல்ல சொல்ல வர இவளோ விலகி விலகி விளக்கம் சொல்வதாய்ப் பாடல் போகிறது.எப்படி.கலரிலும் கறுப்பு வெள்ளையிலும் !
அன்பு மனம் கனிந்த பின்னே கலரில் அச்சம் தேவையா..
https://www.youtube.com/watch?featur...&v=fOUnGcHGdt4
கறுப்பு வெள்ளையில் கனிந்த அன்பு மனம்..
https://www.youtube.com/watch?featur...&v=lsJq6PI_7R0
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd March 2015, 10:36 PM
#2996
Senior Member
Senior Hubber
பளபளத்து வெய்யிலிலே பட்டாக தகதகக்கும்
..பொன்னில்லை என்றீக பெண்நான்னு சொன்னீக
தழதழத்து நெஞ்செல்லாம் இளகித்தான் நெக்குருகி
..தவித்துநான் வந்தப்போ தயங்காம பாத்தீக
கலகலப்பா மேகமுன்னும் மயிலுன்னும் தானிந்தக்
..கன்னியத்தான் சொன்னீக கண்ணால கொன்னீக
சலசலக்கும் ஓடையிலே சின்னப்பூ செல்லுதற்போல்
..தத்தித்தான் சாயுதய்யா எம்மனசு ஒம்மேல..
சிவகுமாருக்காக எஸ்பிபி விகுமார் இசையில் சாய்கின்ற சின்னப் பூ லத்தூ!
பொன்னை நான் பார்த்த்தில்லை பெண்ணைத் தான் பார்த்ததுண்டு..
-
2nd March 2015, 10:56 PM
#2997
Senior Member
Senior Hubber
சிச்சுவேஷன் ஒன்று பாடல் இரண்டு..
ஸ்ரீதேவி மதுரையில் ஓடிய படம் இது.. மாணவன் நினைத்தால் பாடல் மட்டும் தெருமுக்கில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கொஞ்சம் போடுவார்கள்..படம் என்ன காரணமோ கூட்டிச் செல்லவில்லை.. நானும்பார்க்கவில்லை.பார்த்ததுமில்லை..இதுவரை.. இப்போது தான் பாடலைப் பார்த்தேன்..அவ்வப்போது ஒலிச்சித்திரம் கேட்டிருப்பதாக புகையாய் நினைவு (வந்திருந்ததா என்ன)
பாவம் ஸ்ரீகாந்த் சுபா கடும் வெயிலில் ஓடி ஓடிப் பாடினால் வேர்க்கத் தான் வேர்க்கும்.ரொமான்ஸா வரும்.. ஸ்ரீகாந்த் சமாளித்திருக்கிறார்.
தேவன் வேதமும் கண்ணன் கீதையும் இந்தப்பாடலிலும்…..
இந்தப் பாடலிலும் சங்கமம்
கொஞ்சம் லேட்டா வந்த படம் தான்.. வாலிபமே வாவா என ஒரு சொதப்பல் படத்தை எடுத்த பாரதிராஜா எ.இ.த மக்களுக்காக எடுத்து ஓடோ ஓடென்று ஓடிய படம். மிக்ஸியில் கருங்கற்களை அரைத்தாற்போன்ற குரலில் தியாக ராஜன், உள்ள கொதிக்குதுங்க என குணச்சித்திர நடிப்பிற்கு முயன்றிருக்கும் சில்க் ஸ்மிதா மற்றும் புதுமுகங்களாக கார்த்திக் ராதா இருந்தும் வைரமுத்துவும் இளையராஜாவும் தான் தாங்கிப்பிடித்திருப்பார்கள் படத்தை..என ஆன்றோர்கள் சொல்வார்கள் ( கண்ணா நைஸா நழுவிட்டடா நீ!)
காதல் ஓவியம் காணும் காவியம்… கொஞ்சம் பார்க்கலாமா
-
3rd March 2015, 11:53 PM
#2998
Senior Member
Senior Hubber
உன் கண்ணுக்கு நான் பட்ட கடன் தீர்க்கவோ..
ஏதோ லோன் விஷயம் போல இருக்கு. ஜெமினி விஜயகுமாரி விமன் என்றால் விமன் படத்திலிருந்து...
**
-
3rd March 2015, 11:54 PM
#2999
Senior Member
Senior Hubber
பறந்து வா வா வா பாடலொன்று பாடு
கருந்தேள் கண்ணாயிரத்தில்(கண்) கொட்டாத லஷ்மி ஜெய்ஷங்க்கர்..
-
3rd March 2015, 11:57 PM
#3000
Senior Member
Senior Hubber
**
ஹச்சோ தலைப்பே கொடுக்கலையே..ரேர் சாங்க்ஸா..இந்தப் பாட்டு வாசு சார் போட்டாரா
**
இந்த நெஞ்சம் யாரை க் கண்டு ஓடுமோ
எப்போது ஒன்றை ஒன்று தேடுமோ
ஜெய் வாணி காதலித்தால் போதுமா ஜின்க்கிலாலா ஜிங்கிலாலா லா… டிஎம் எஸ் எல் ஆர் ஈஸ்வரி…
Bookmarks