Page 232 of 397 FirstFirst ... 132182222230231232233234242282332 ... LastLast
Results 2,311 to 2,320 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2311
    Senior Member Veteran Hubber suvai's Avatar
    Join Date
    Nov 2006
    Posts
    2,004
    Post Thanks / Like
    ennaanga ck...romba balama intro ellaam thareenga neenga ennai patri...i am very insignificant nga hub la...ongala maathri neraiya nallavanga periya siriyavanga arivaalinga ellaam..nadamaadum koodam ithu...i am just a bystander...... loving many of my fav sites.. ty when i get the time

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2312
    Senior Member Veteran Hubber suvai's Avatar
    Join Date
    Nov 2006
    Posts
    2,004
    Post Thanks / Like
    vasu nga....loved the picture # 2297..... ty

  5. Thanks vasudevan31355 thanked for this post
  6. #2313
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    veLLaippasuvum Kandrum

    chinnakkaNNan: Here is a kandru (kannu) song for you. No 'kutti' !

    From thaai uLLam

    kadhaiyai keLadaa kaNNe kadhaiyai keLadaa......

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  7. Thanks chinnakkannan, suvai thanked for this post
  8. #2314
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ''முள்ளும் மலரும்'

    தொடர்கிறது....

    மற்றவர் பங்களிப்பு.

    காளிக்குத் தங்கை வள்ளி.

    ஷோபா



    இவரைப் பற்றி என்ன சொல்ல! என்ன ஒரு குழந்தைத்தனமான, வெகுளித்தனமான முகம்! வள்ளியாக அப்பாவித் தோற்றம். எளிமையான கிராமத்துப் பின்னணி அழகு! அறிமுகக் காட்சியில் அப்படியே மீன்காரி போல உட்கார்ந்து மீன் ஆயும் நேர்த்தி, மங்கா குடும்பத்தின் மேல் கனிவு, கரிசனம், அண்ணனின் சட்டைக் காலரை நைசாக சரி செய்தபடியே லேசான குழைவில் மங்காவின் அம்மாவுக்கு வேலை வாங்கிக் கொடுக்கச் சொல்லும் சாமர்த்தியம், அண்ணனிடம் அவசியமற்ற தேவைக்குட்பட்ட அளவான அன்பு, அவன் மேல் பயம் கலந்த மரியாதை, அண்ணனின் முரட்டுக் குணங்களுக்கு உள்ளுக்குள் சில வேதனைகள், சரத்தின் ஜீப்பில் தோழிகளோடு அமர்ந்து "நான்தான் டிரைவரு... நீ டிக்கட்டு' என்று விளையாடும் சிறுபிள்ளைத்தனம், சரத் அங்கு வந்து விட்டவுடன் அப்படியே மருண்ட மானைப் போல விழிப்பது, பின் சரத் 'நீங்கதான் டிரைவரா?' என்று கேட்டவுடன் அப்படியே மிரண்டு, கொஞ்சம் கொஞ்சமாக அழுகையை ஆரம்பிப்பது, அண்ணன் கை போனதை எண்ணி உருக்கம், அண்ணன் சாப்பாட்டைத் தட்டி விட்ட லேசான வருத்தம் கலந்த கோபம், மங்காவைக் கல்யாணம் கொள்ளுமாறு அண்ணனை சாமர்த்தியமாக பொடி வைத்துக் கேட்பது, அண்ணன் கல்யாணத்துக்கு முழு சம்மதம் தரும் முன்பாகவே 'போதும்.. போதும்.. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்' என்று ஒரே வாரத்தையில் அவனை அ(ம)டக்கி (இயல்பாக பேசிக்கொண்டே துணி தைத்துக் கொண்டிருப்பவர் மிக அழகாக பற்களால் நூலைக் கட் பண்ணுவார்) சரத்பாபுவைக் காதலிக்காமலேயே அவர் சொல்லிக் காதல் அரும்பிப் பூப்பது, பொன்னூஞ்சல் ஆடும் இளமையை குளத்தில் கவிதையாய் காண்பிப்பது, அண்ணி மங்கா தன்னிடம் ஏதோ மாற்றத்தைக் கண்டு காரணம் கேட்கிறாள் என்று தெரிந்து கொண்டு அவளிடமே வெட்கம் கொண்டு சரத்தை நினைத்து அவள் நெஞ்சில் முகம் புதைப்பது என்று கவிதையாய் நம் நெஞ்சில் நிறைவார்.



    நடிப்பில் முதிர்ந்த இந்த சின்னப் பெண் சின்ன சின்ன அழகான எக்ஸ்பிரஷன் காட்டுகையில் நிஜமாகவே அற்புதமாகவும், பிரம்மிப்பாகவும் இருக்கும். ஒரு சீன் சொல்கிறேனே!

    சரத் ரஜினியும் பெண் கேட்டு வந்து பாயில் அமர்ந்து பேசும் சூப்பர் காட்சி. ரஜினியும், சரத்தும் அங்கே நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டிருப்பார்கள். (ரஜினியின் கண்கள் அற்புதமாக ஷார்ப்பாக நடிக்கும்.. முன்பு அதை எழுதாமல் விட்டு விட்டேன்) ரஜினி சரத்திடம் 'காதல் கீதல் ஏதாவது?'... என்று முறைப்பாகக் கேட்க 'அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல' என்று சரத் பதில் சொல்ல, "அதானே! என் தங்கச்சியை நான் அப்படி வளர்க்கல!' என்ற நம்பிக்கை கொண்ட திமிரோடு ரஜினி பேசுவார். இந்த இடத்தில் ஒரு வினாடி நேரம் ஷோபாவைக் காண்பிப்பார்கள். 'அண்ணன் தன் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறானே! நாம்தான் ஒரு வேலை தப்பு பண்ணி விட்டோமோ! நல்ல வேளை... அண்ணனுக்குத் தெரியவில்லை' என்ற ஒரு சிறு குற்ற உணர்ச்சியை முகத்தில் தேக்கி 'தப்பித்தோம்' என்பது போலவும் பாவம் காட்டிவிடுவார். எத்தனை பேருக்கு இது சாத்தியம்? என்னை மிகவும் கவர்ந்த இடம் இது. ஒரு வினாடி பாவம் என்பது சாதாரண விஷயமல்ல. அது இந்தப் பெண்ணிற்கு அல்வா மாதிரி வருகிறது. இப்படிப்பட்ட நல்ல நடிகைக்கா இப்படி ஒரு நிலை அந்த வயதில் வர வேண்டும்?

    முருகேசன் உடனான கல்யாணத்தை நிறுத்த தனக்காகப் போராடும் அண்ணியை அண்ணன் மறுத்து அடித்துத் துவைத்ததும் அவளை விலக்கி அண்ணியிடம் "என்னைக் கொல்றதுக்குக் கூட அண்ணனுக்கு உரிமை இருக்கு... நானே சரின்னதுக்கு அப்புறம் நீ ஏன் தடுக்குற? எங்க அண்ணனுக்குத் தெரியாத நல்லது கெட்டது உனக்குத் தெரிஞ்சு போச்சா?' நீ உன் இஷ்டப்படி செய் அண்ணே!" என்று பிடிமானம் இல்லாமல் பேசி அண்ணனை மீற முடியாமல் விரக்தியாக செல்வதும் டாப் ரகம்.

    அண்ணன் இறுதியில் தன்னை நிறுத்தி நெகிழ்ச்சியுடன் பேசும் போது மௌனம் சாதித்து, பின் அவன் கையை விலக்கி, மெதுவாக மற்றவர்களுடன் நடக்க ஆரம்பித்து, மனம் குழம்பிய நிலையில் தனி ஆளாக யாருமே துணை இல்லாமல் நிற்கும் அண்ணனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே (இளையராஜா ஷோபா ரஜினியை விட்டு விலகி நடக்க நடக்க கொஞ்சம் கொஞ்சமாக இசையின் வேகத்தைக் காட்சியமைப்பிற்குத் தோதாக கூட்டுவார். அருமையாக இருக்கும்.) அழுதபடி நடந்து பின் அண்ணன்தான் முக்கியம் என்று ஓடி வந்து அவனை அணைத்து குழந்தை போல தேம்பித் தேம்பி அழுவது நெகிழ்வான அற்புதம்.

    ரஜினி ஆர்ப்பாட்டமாய்க் கவருகிறார் என்றால் ஆர்ப்பாடம் இல்லாமல் ஆர்ப்பரிக்க வைக்கிறார் ஷோபா. கோணங்கித்தனம், செயற்கைத்தனம், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல் இந்த மலர் என்றும் நிரந்தர வாசம் வீசும் மலராக மணம் வீசுகிறது. முரட்டு முள்ளான அண்ணனின் மிருதுவான மலராக, நம் எல்லோர் மனதிலுமே தங்கையாகக் குடி கொள்கிறார் ஷோபா நடிகையர் திலகத்திற்குப் பிறகு.
    Last edited by vasudevan31355; 21st December 2014 at 02:46 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2315
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சரத்பாபு



    இஞ்சினியர் ரோல். பொருத்தம் என்றால் அப்படி ஒரு 'சிக்' பொருத்தம். ரொம்ப கேஷுவலாக. நடிப்பது போலவே தெரியாது. வந்து விட்டு போய் விடுவாரே ஒழிய நெஞ்சை விட்டுப் போக மாட்டார். நிஜமாகவே ஜென்டில்மேன் தான். காளி வீம்பு பண்ணும் போதெல்லாம் அடக்கியபடியே கண்டிப்பது அருமை. டிராலி பாதி வழியில் ரஜினியின் பழி வாங்கலில் நின்றதும் இது ரஜினி வேலைதான் என்று தெரிந்து கொண்டு லேசான புன்னகையுடன் நடக்கத் தொடங்குவது ஜோர். காளியை புரிந்து கொண்டதை ஈஸியாகக் காட்டுவார்.

    ரஜினியைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி ரஜினிக்குப் பதிலாக தன் தம்பிக்கு அந்த வின்ச் ஆபரேட்டர் வேலையைப் போட்டுத் தர வேண்டும் என்று நைசாகக் காதைக் கடிக்கும் அந்த கிளார்க் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு "ஆமாம்! நம்ம ஆபீஸ்ல தம்பியே இல்லாத கிளார்க் யாராச்சும் இருக்காங்களா?" என்று அலட்டிக் கொள்ளாமல் ஒரே போடு போடுவது கலக்கல்.

    "இதெல்லாம் சுத்தமான ரவுடித்தனம் இல்லே" என்று ரஜினியை ஜென்டிலாக வாங்குவதும் சூப்பர். பெண் கேட்கப் போகும் போது அந்த அடக்கம், பொறுமை, நிதானம், படித்த பண்பு எல்லாமே அமர்க்களம். ரஜினி "என்ன சார், என் வீட்டுக்குள்ளேயே வந்து உட்கார்ந்துகிட்டு என்கிட்டே லா பாய்ன்ட் பேசறீங்க?' என்று படு சீரியஸாகக் கேட்டுக் கொண்டிருக்க இவர் அதைவிட படு கூலாக, வாயெல்லாம் பல்லாக "லா பாய்ன்ட்... நீ எனக்கு வச்சிருக்குற பெயர் இல்லே!" என்று ரசித்து சிரிப்பது ரகளை. அதே போல ரஜினியிடம் பெண் கேட்கும் பாங்கும் ரொம்ப நீட். காளி முருகேசனுக்கு தன் தங்கையைக் கொடுப்பதாக பேரதிர்ச்சி கொடுத்தவுடன் ரொம்ப இடிந்து போனது போல் துவளாமல் சமாளித்து செய்வதறியாது டீக் கடை பெஞ்சில் உட்கார்ந்து இருப்பதையும் சொல்லத்தான் வேண்டும்.

    அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அமைதியாக ஸ்கோர் பண்ணி நடிப்பில் அனைவருடனும் போட்டி போடுகிறார் இந்த இஞ்சினியர்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2316
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'படாபட்' ஜெயலஷ்மி



    மங்கா. பட்பட்தான். சாப்பாட்டுப் பிரியை. ஆம்பிள மாதிரி தைரியம். ஆரம்பத்தில். துணிமணியைக் கூட சரி செய்யாமல் 'எனக்கென்ன?' என்று இருக்கும் டைப். ரஜினி முதன் முதல் வீட்டில் தன்னை வைத்து முறைத்துப் பார்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் சரி செய்து விட்டு "ஏன்யா! முன்ன பின்ன பொம்பளைய பார்த்தே இல்லையா? என்று அலட்சிய நடிப்பில் அமர்க்களம் புரிவார். ஷோபா ஆயும் மீனைப் பார்த்து நாக்கு சப்புக் கொட்டுவது ஜோர்.

    ரஜினியை திருமணம் செய்து கொண்டு முதல் இரவில் 'சாப்பாட்டைப் பற்றிதான் எனக்குப் பாடத் தெரியும்' என்று முழுப் பாடலையும் சாப்பாட்டைப் பற்றியே பாடி இம்சை செய்வது தனி சுகம். இந்தப் படத்தில் நடிப்பில் தானும் ஒரு தனித்த ராணி என்று காட்டி விடுவார். (முதலிரவு காட்சியை சி.க அழகாக வர்ணித்து விட்டார். அப்புறம் நான் வேறு எதற்கு? "சூடாக இருக்கறப்போ சாப்பிடவாங்க")

    ரஜினி உறியடிக்க முடியாமல் போக, ஊரார் 'ஒத்தைக் கையா' எற்று கேலி செய்ய, 'படாபட்'வெகுண்டெழுந்து 'என்னை ஜெயிங்கடா பார்க்கலாம்' என்று சீறுவது கொஞ்சம் ஓவர் என்றாலும் பொம்பளை காளி தான்.

    ரஜினி ஒற்றைக் கையில் பேண்டின் ஜிப்பைப் போட முடியாமல் திண்டாட, "உனக்கு எல்லார் தயவும் வேணும்யா இப்ப" என்று ரஜினி மறுத்து வெட்கப்பட, வெட்கப்பட இவர் ஜிப் மாட்டி விடுவது விரசமில்லாத அழகு.

    தீனி மாடு போல வளர்ந்த மங்கா கொஞ்சம் கொஞ்சமாக பாந்தமான, அதே சமயம் புத்திசாலித்தனமான, விவேகமான, பொறுப்புள்ள மங்காவாக படிப்படியாக மாறுவதை நன்றாக உணர்த்தியிருப்பார் 'படாபட்'.

    சரத் வீட்டுக்கு வந்து பெண் கேட்டவுடன் ரஜினிக்கு முன்பாகவே 'அதுக்கு நாங்க குடுத்து வச்சிருக்கணும்" என்று முந்திரிக் கொட்டையாய் முந்தி பதில் சொல்வது அருமை. (இதை சொன்னதும் 'படாபட்'டை ரஜினி ஒரு முறை முறைப்பார் 'என்னை மீறி பேசறியா?' என்று.. அதுவும் அமர்க்களமாக இருக்கும்.)

    இறுதியில் கல்யாணத்தை தடுத்து நிறுத்த போராடுவதும், மூர்த்தியின் கடைக்கு தோழிகளுடன் சென்று மிரட்டிவிட்டு வருவதும், ரஜினியிடம் கிளைமாக்ஸில் "நான் திரும்பி வந்தா என்னை வீட்டுல சேர்க்கமாட்டே! அவ்வளவுதானே!' என்று அலட்சியம் காட்டி வேதனைப்படுவதும் இவருக்கும் இந்தப் படத்தின் வெற்றியில் பங்கு உண்டு என்று நிரூபிக்கும் காட்சிகள்.

    இந்தப் பெண்ணின் உயிரும் அனாவசியமாகப் பறி போனது பெரும் துயரம்.
    Last edited by vasudevan31355; 21st December 2014 at 01:28 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2317
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வெண்ணிற ஆடை மூர்த்தி



    பெட்டிக்கடை முருகேசன் என்ற சற்று முரணான பாத்திரம். அப்பாவியான நல்ல மனம் கொண்ட கேரக்டரே ஒரு கல்யாணமான பெண்ணையும் வைப்பாட்டியாக வைத்திருக்கும் நம்பக் கூடிய நிஜ முரண். படிய வாரிய பாகவதர் கிராப் போன்ற எண்ணெய்த் தலையுடன் மீசையற்ற வழுவழு முகம். (பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குனர்களில் படங்களில் மூர்த்தி இப்படியேதான் வருவார்) காளியிடத்தில் நிஜ பிரியம், உதவும் மனப்பான்மை, இன்னொருத்தன் மனைவியுடன் கறாரான கொ(கெ)ஞ்சல் என்று முக்கியக் கதாபாத்திரமும் கூட. ரஜினிக்கு கடை வைக்க பணம் கொடுத்து உதவி செய்து ரஜினியிடம் பேசும் போது மூர்த்திக்கே உரித்தான ஒரு பஞ்ச் அவர் யாருக்கும் அடங்க மாட்டார் என்று காண்பிக்கும். ("போட்ற கடையை மட்டும் என் கடைக்கு எதிர்த்தா மாதிரி போட்டுறாதீங்க..என் பொழைப்பு போயிடும்")

    பணம் கொடுத்ததை கண்டிக்கும் வைப்பாட்டியிடம் கறாராக பேசுவது டாப். ('அடுப்பங்கரையில் நின்னுகிட்டு கேள்வி கேட்டா பொண்டாட்டி ஆயிடுவியா? நீ எங்க நிக்கணுமோ அங்கேயே நில்லு')

    வள்ளி சரத்பாபுவுக்கா இல்லை தனக்கா என்று பரிசம் போட வந்த இடத்தில் ரஜினிக்கும், படாபட்டுக்கும் நடக்கும் தகராறுகளைப் பார்த்து பயந்தபடியே பம்மி நிற்பதும் அருமை. ரஜினியிடம் ஷோபாவைப் பற்றி தப்பாக பேசி செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டு சட்டை கிழிந்து அலங்கோல நிலையில் ரத்தம் வடிய விழுந்து கிடப்பதும் பரிதாபம்.
    Last edited by vasudevan31355; 21st December 2014 at 01:25 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #2318
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சாமிக்கண்ணு எஸ்.ஏ.கண்ணன் மற்றும் தசரதன்





    ரஜினியின் வலது கர ஒப்புக்குச் சப்பாணி கூலிப் படைகள். 'அண்ணே!அண்ணே! என்று ரஜினியைச் சுற்றும் அவரைவிட வயசு மீறிய, பயந்த, கூழைக் கும்பிடு கோழைகள். ரசிக்கத் தகுந்த ரகங்களே! ரஜினி ஒரு ஆளைப் போட்டு புரட்டி விட்டு வருகையில் அவருக்கு இந்த கோஷ்டி ஜால்ரா போட்டபடி பேசி வருவது அப்படியே அச்சு அசலாக ஜால்ராக்கள் கோஷ்டி செய்வது. ரஜினியின் முடிவில் இஷ்டம் இல்லாமல் ஆனால் அவர் கோபத்துக்கு ஆளாக நேருமே என்று பயந்து விட்டேர்த்தியாக கல்யாண வேலைகள் செய்யவும், ரஜினி இது பற்றிக் கேட்டதும் 'ஒன்னும் இல்லேண்ணே!' என்று சுரத்தே இல்லாமல் கூறுவதும் இயல்பு.

    அதுவும் சாமிக்கண்ணு தன் மனைவி (வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஆள் வேறு) அங்காயியிடம் அங்கலாய்ப்பது அருமை.('என்னை என்ன வயசானவன் வயசானவன்னு குத்திக் காட்ற...தலைவலிக்காக கண்ணாடி போட்டிருக்கேன்...வெயில்ல நின்னது முடி கொட்டிப் போச்சு... இதுக்குப் போயி'..) வாய் முழுக்க சிரிப்பாக அசடு வழிவதும், தூக்கம் வராமல் பினாற்றுவதும், மனைவி அதட்டிய மறுகணமே 'படுத்துட்டேன்' என்று கவிழ்ந்து கொள்வதும். மனிதர் தனியாகப் பின்னுவார்.
    Last edited by vasudevan31355; 21st December 2014 at 01:23 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes kalnayak, Russellmai, Gopal.s liked this post
  14. #2319
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஷோபா, ஃபடாபட், வெ. ஆ.மூர்த்தி, சரத்பாபு// இவர்களுடைய நடிப்பு + கேரக்டர் அலசல்கள் அருமைவாசு சார்.. அதை மேலே வைக்கவும்

  15. Thanks vasudevan31355 thanked for this post
  16. #2320
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Vasu, great work done on a deserving film. keep it up.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. Thanks vasudevan31355 thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •