Page 94 of 397 FirstFirst ... 44849293949596104144194 ... LastLast
Results 931 to 940 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #931
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Hi Rajesh: Here is another one of தேனிசை தென்றலின் முத்துக்கள்!

    From the 1991 movie புது மனிதன்...



    வலைக்கு தப்பிய மீனு மாமு
    ஓலைக்கு வந்தது பாரு ஹோய்
    வலைக்கு தப்பிய மீனு மாமு
    ஓலைக்கு வந்தது பாரு
    பொறந்தது தண்ணீரிலே
    மீனு அழிவது வெண்ணீரிலே
    பொறந்தது வெண்ணீரிலே
    மனுஷன் அழிவது கண்ணீரிலே
    அட மீனும் நானும் ஒன்னல்லவோ
    அந்த ஞானம் சேர்ந்ததின்ரல்லவோ...

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #932
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi - 7

    From Neengaadha Ninaivu (1963)

    Chinnan chiru malarai marandhuvidaadhe.........



    The original tune from Deedar(1951)(Hindi)

    O Bachpan ke Din Bhula Na Dena......



    bachpan ke din bhula na dena -> Don't forget childhood days

    Who will forget childhood days? That is why I posted this song.

    My childhood summers in my ancestral village included horseback riding. The ride was from one end of the street to the other end a few times. It was fun. Surprisingly where we live now some families own horses and go for a ride in the weekends. A few miles from us there is a barn where they let you ride horses. I am yet to try !

    The Hindi version has a line about people like me: " door des Ek mahal banaye" -> build a house (palace) in a distant country. I thought of going to America when I was in 9th grade! I suppose that was also childhood!

    In the Tamil version it is " pudhu vidhamaana ulagathil naame pon mayamaana veedamaippome"

    I have a house. Not sure it can be called a palace !








    .............
    Last edited by rajraj; 1st November 2014 at 06:28 AM.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  5. Likes chinnakkannan liked this post
  6. #933
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இசைக்கலைஞர்கள் இறைவனின் தூதர்கள் - டி.ஆர்.பாப்பா

    இன்று நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களி்ல் ஒன்றான ரங்கோன் ராதா திரைப்படம் வெளியாகி 58 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கேஸ் லைட் என்ற ஆங்கிலப்படத்தின் கதைக்கருவை வைத்து பேறிஞர் அண்ணா எழுதிய புதினம் கலைஞர் கதை வசனத்தில் வெளியாகியது. அனைத்துக் கலைஞர்களின் அற்புதப் பங்களிப்பில் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகத் திகழும் ரங்கோன் ராதா, டி.ஆர்.பாப்பா அவர்களின் இசை வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாகும்.

    அனைத்துப் பாடல்களும் நம் நெஞ்சைக் கொள்ளை கொள்ளுபவை. பானுமதி அவர்களின் குரலில் இனிமையான பாடல்கள் இப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் அம்சமாகும். பாரதியாரின் ஒளிபடைத்த கண்ணினாய் பாடல் பானுமதியின் குரலில் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.





    பம்மலாரின் ஆவணப் பொக்கிஷத்திலிருந்து...
    பானுமதியின் குரலில் வான் மலர் சோலையில் உலாவி வருவோமா

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks kalnayak, chinnakkannan, Russellmai thanked for this post
  8. #934
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    'ரங்கோன் ராதா' 59 ஆவது ஆண்டு தொடக்கத்தை நினைவு படுத்தியதோடு நில்லாமல் எனதருமை டி.ஆர். பாப்பா தொடருக்கும் சிறப்பு சேர்த்து விட்டீர்கள். நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes rajeshkrv liked this post
  10. #935
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 12)





    ஸ்பெஷல் பதிவு

    இன்று மிக மிக ஸ்பெஷலான, இளையராஜா இசையமைத்து 'ஸ்டைல் ராஜா' நடித்த 'தீபம்' திரைப்படத்தின் பாடல். கே.பாலாஜி அவர்களின் 'சுஜாதா சினி ஆர்ட்ஸ்' தயாரிப்பில் வந்த மாபெரும் வெற்றிப்படம். நடிகர் திலகத்தின் சகாப்தம் முடிந்தது என்று கொக்கரித்தவர்களின் முகத்தில் கரியைப் பூசிய படம்.



    நடிகர் திலகம் படத்திற்கு முதன் முதலாக இளையராஜாவின் இசை. விடுவாரா ராஜா? நடிப்பின் ஏகபோக சக்கரவர்த்திக்கு இசை ராஜா அருமையான பாடல்களைக் கொடுத்து இன்றளவும் ஆச்சரியப்பட வைக்கிறார். டைட்டிலிலேயே ராஜாவின் கை ஓங்க ஆரம்பித்துவிடும். படத்தின் டைட்டில் முடிந்ததுதான் தாமதம். கடற்கரை ரிசார்ட்ஸ் நீச்சல் குளத்தின் நடப்பு விளிம்புகளில் செடி மறைவிலிருந்து சட்டென்று வாயில் புகையும் பைப்புடன் எழுந்திருக்கும் நடிகர் திலகம். அந்த எழுச்சிக்கும், அடுத்து வரும் ராஜ நடைக்கும் இளையராஜா தன் இசை வாத்தியங்கள் மூலம் அந்த உலக நடிகனுக்கு அளிக்கும் ராஜ உபச்சார கம்பீர இசை மரியாதை. கால்முட்டி வரை பரிமளிக்கும் அந்த பூக்கள் வேலைப்பாடுள்ள பிரவுன் கலர் நைட் கவுன். கால்களில் அணிந்திருக்கும் அந்த பெரிய பிரவுன் கலர் ஷூ. ராஜாவின் அருமையான பின்னணி இசைக்குத் தக்கவாறு அலட்டாமல் ராஜ நடை போட்டு வரும் நடிகர் திலகம். நீச்சல் குளத்தின் அருகில் பிகினியுடன் ஒரு நங்கை சிகரெட் பிடிக்க, இன்னொரு மங்கை குளத்தில் குளித்து எழுந்திருக்க, இவர்களை சைடில் லுக் விட்டபடியே நடக்கும் 'பிளேபாய்' நடிகர் திலகம் பிச்சு உதறும் ஸ்டைலில்.

    ஒரு ஃபிகர் எதிரே வந்து வழி மறிக்க, அப்படியே நின்று செம லுக் ஒன்று விட்டு, இடது ஷோல்டரால் லேசாக ஒரு இடித்து செல்வாரே அழகு நடிகர் திலகம். அப்படியே இளமை அள்ளுமே! அந்த ஹேர் ஸ்டைல், அந்த கூலிங் கிளாஸ், கோட்டின் உள்ளே அணிந்திருக்கும் எல்லோ கலர் ஷர்ட், கைவிரல்களில் ஜொலிக்கும் மோதிரம் எல்லாமே பெர்ஃபெக்ட்.

    அப்படியே அந்த ஸ்டைலிஷ் பாடல் தொடங்கும். நடிகர் திலகத்திற்கென்றே பிறந்த 'பாடகர் திலகம்' பட்டை கிளப்பிய பாடல்


    ராஜா யுவராஜா
    நாள்தோறும் ஒரு ரோஜா
    சரசா ரீட்டா கங்கா ரேகா பாமா
    சரசா ரீட்டா கங்கா ரேகா பாமா

    ராஜா யுவராஜா
    நாள்தோறும் ஒரு ரோஜா


    பல்லவி முடிந்து சரணத்தில் வரும் ஷெனாய் ஒலி இழையும். நடிகர் திலகம் வேறு உடைக்கு மாறியிருப்பார். வயலட் கலரில் வெள்ளை கட்டம் போட்ட கோட்டும் உள்ளே ரவுண்ட் நெக் ஒயிட் பனியனும், செம மேட்சாக அதற்கு ஒயிட் பேண்ட்டும் அணிந்திருப்பார். உலகின் மொத்த அழகும் அந்த ஐந்தரை அடி உருவத்துக்குள் வந்து குடிகொண்டிருக்கும். ஒரு ஃபிகர் சைட் குளோசப்பில் தெரிய, தூர லாங் ஷாட்டில் நடிகர் திலகம் சற்றே கால்களைத் தாங்கியவாறு அழகாக நடந்து வருவார்.

    நித்தம் ஒரு புத்தம் புது நெஞ்சில் உறவாடும்
    பழக்கம் எனதல்லவா


    (கால்களை அகட்டி ஒரு சிறு துள்ளல் போடுவார்)

    நேரம் ஒரு ராகம் சுக பாவம் அதில் நாளும்
    மிதக்கும் மனதல்லவா
    தினம் ஒரு திருமணம் நடக்கலாம்
    சுகம் அதில் உலகினை மறக்கலாம்
    என் தேவை பெண்பாவை கண்ஜாடை


    சும்மா ஸ்டைல் அதம் பறக்கும்.

    அடுத்த சரணத்தின் முன் இடையிசைக்கு சத்யப்ரியாவிடம் வருவார். (அழகான பூக்கள் பூத்துக் குலுங்கும் இயற்கை சூழல் பூங்காவில் காட்சி படமாக்கப் பட்டிருக்கும்) இப்போது எல்லோ கலர் புளூ ஸ்ட்ரைப்ட் கோட்டும், வயலட் கலர் பேண்ட்டும்.


    தங்கம் அது தங்கம்
    உடல் எங்கும் அதைக் கண்டால்
    கடத்தும் நினைவு வரும்
    தஞ்சம் இளநெஞ்சம் ஒரு மஞ்சம் அது தந்தால்
    எதிரில் சொர்க்கம் வரும்


    இப்போது ஒரு அமர்க்களம் நடக்கும் பாருங்கள். பாருங்கள் சொல்கிறேன். எவ்வளவோ பேர் எப்படி எப்படியோ ஆடலாம். பார்த்திருப்பீர்கள். இப்போது வரும் வரிகளுக்கு நடிகர் திலகம் பின்னாலேயே சில ஸ்டெப்ஸ் வைத்துச் செல்லும் அழகை வைத்த கண் வாங்காமல் பாருங்கள்.



    அடிக்கடி வலது கண் துடிக்குது
    புதுப் புது வரவுகள் இருக்குது
    எந்நாளும் என் மோகம் உன் யோகம்


    கைகளையும் கால்களையும் மாற்றி மாற்றி பின் புறம் தலையை ஆட்டியபடியே போடும் அந்த ஸ்டெப்ஸ். சான்ஸே இல்லை. அற்புதமோ அற்புதம். (சத்யப்பிரியா நடிகர் திலகத்தைப் பார்த்தபடியே திணறுவார்)



    அடுத்து மூன்றாவது சரணத்திற்கு ப்ளூ அண்ட் ப்ளூ சஃபாரி. ஐயோ! இந்த மனிதருக்கு என்னமாய்ப் பொருந்துகிறது! சஃபாரிக்கேன்றே பிறந்த புருஷரய்யா! இப்போது பீச்சில். டிரைபல் டிரெஸ்சில் சந்திரலேகா கடற்கரை மணலில் செக்ஸியாக நடந்து வர, நடிகர் திலகம் படு அமர்க்களமாக பார்த்துக் கொண்டே வருவார். அப்படியே லுக் விட்டபடி சிகரெட்டை ஸ்டைலாக சுண்டிவிடுவார் பாருங்கள். செத்தான் அவனவனும். பார்வையைப் பார்க்க வேண்டுமே. காதலும், காமமும் பார்வையில் விளையாடும். குறும்பு கொப்பளிக்கும்.


    ஒன்றா அது ரெண்டா
    அது சொன்னால் ஒரு கோடி
    ரசித்துச் சுவைப்பவன் நான்
    உன்போல் ஒரு பெண்பால்
    விழி முன்னால் வரக் கண்டால்
    மயக்கிப் பிடிப்பவன் நான்.


    இப்ப பாருங்கள். இதுதான் உச்சக்கட்ட ஸ்டைல். அந்த கூலிங் கிளாஸ். வழுவழுவென்று ஷேவ் செய்யப்பட்ட முகம். சபாரியின் உள்ளே சாண்டல் கலர் ரவுண்ட் நெக் பனியன்.

    அப்படியே கைகளை உயர்த்தி விரல்களால் சிட்டிகை போட்டுக் கொண்டே,


    'நடிப்பிலே எவரையும் மயக்குவேன்'

    என்று முகத்தில் பெருமிதம் தெரிய, அப்படியே நம்மை மந்திரித்து விட்ட கோழி போல, தன் ஈடு இணையில்லா ஸ்டைலால் மயங்கச் செய்து விடுவார்.

    'அணைப்பிலே கலைகளை விளக்குவேன்
    என் ராசி பெண்ண ராசி நீ வா வா'


    (என்ன அழகாக அந்த அம்மணியைப் பிடித்துக் கொண்டு ஓடி வருவார்!)

    அப்படியே சந்திரலேகாவுடன் சிறிய ஓட்டமும் நடையுமாக 'ராஜா யுவராஜா' பாடி நடந்து வந்து பாடலை முடிப்பார்.



    ஸ்டைல்... ஸ்டைல்... ஸ்டைல்... ஸ்டைல் பாடல் முழுக்க ஸ்டைல்.

    அழகு... அழகு... அழகு... அழகு பாடல் முழுக்க அழகு. கொள்ளையோ கொள்ளை அழகு

    'பிளேபாய்' பாடல்களில் எக்காலத்திலும் முன்னணியில் நிற்கும் பாடல். இளையராஜாவுக்கு ஒரு பெரிய சபாஷ்.

    நடிப்பின் ராஜாவும், இசையின் ராஜாவும் ஒருவரை ஒருவர் புரிந்து தந்த உலகின் ஒன்பாதவ்து அதிசயப் பாடல்.


    ஒன்று ஒத்துக் கொள்கிறேன். என் தோல்வியை மனதார ஒத்துக் கொள்கிறேன். ராஜாவின் இசையைப் பற்றிச் சொல்ல போய் நடிகர் திலகத்தின் நடிப்பில், ஸ்டைலில் மயங்கி விழுந்து தொடரில் தோற்றேன். அடுத்தவர்களை கெளரவமாகத் தோற்கச் செய்வது நடிகர் திலகத்துக்குப் புதிதா என்ன?

    எதைப் பற்றியும் கவலை இல்லை. சர்வமும் நடிகர் திலகமே.

    Last edited by vasudevan31355; 1st November 2014 at 11:59 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks Russellmai thanked for this post
    Likes JamesFague, kalnayak, chinnakkannan liked this post
  12. #936
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான தேடல் இருக்கிறது… பிறப்பு முதல் மூச்சு நிற்கும் வரை இந்த த் தேடல் மட்டும் முடிவதே இல்லை..

    ராமாயணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.. அரண்மனையில் ஐஸ்வர்யத்தில் திளைத்தவள் , வனவாசம் முடிந்து திளைக்கப் போகிறவள் தான் சீதை.. அவள் பார்க்காத செல்வமா..

    தகதகத்து வெயிலில் மின்ன பொன்மேனியுடன் துள்ளித் துள்ளி த் தாவித்தாவி மயக்கி மயக்கி குறுகுறு விழிகளுடன் பார்த்த மான்விழியில் இந்த மான்விழிப் பாவை விழுந்து விட்டாள்.. ஆசையும் கொண்டு ராமனையும், அதன் பின் லஷ்மணப் பெருமாளையும் அனுப்பி விட்டாள்..

    அம்மானை ஆடும் அழகுவிழிப் பாவையும்
    பொன்மானைத் தேடிப் போவென்க – பெம்மானும்
    கோடு கிழித்துவிட்டுக் கொண்டுவரச் செல்லவங்கே
    ஊடிச் சிரித்த விதி..

    ஆக இந்தப் பொன்மான் என்பது மாயம்..மாயாவியான மாரீசனின் தோற்றம்.. இது போன்ற மாயையைத் தான் நாமெல்லாரும் தேடிக் கொண்டிருக்கிறோம்..சிலபேருக்குச் சிக்குகிறது..சிலபேருக்குக் கிடைக்காமலேயே போய் விடுகிறது..

    ஆக என்ன சொல்ல வருகிறேனென்றால்

    (வாசு, கிருஷ்ணா, ராஜேஷ்,ராஜ்ராஜ் ராகவேந்தர் கோரஸாய் – பொன் மான் பத்திப் பாட்டுப் போடப் போறியா போட்டுத் தொலை! )

    ஹை.. கண்டு பிடிச்சுட்டீங்களே!

    முதலில் வரும் பொன்மான் நம்ம சொர்ண புஷ்பம் அமலா..டி.ராஜேந்தர் தான் கவிஞர்..இசையும் அவரே..பாடகர் எ?ஸ்.பி.பி..

    டி. ராஜேந்தர் நல்ல ரசனை மிக்க ஒரு கவிஞர்..(அடுக்கு மொழிப்பாடல்கள் ஒரு விதி விலக்கு) இந்தப் பாடலின் வர்ணனைகளில் அது தெரியும்..

    முதலில் எழுதிய சீதைப் பாட்டில் அம்மானை ஆடும் விழிகள் என எழுதியிருந்தேன்..இங்கு அம்மானை நான் பாட த் தகதிமி தோம்.. என்கிறார் டி.ஆர். அது என்ன அம்மானை..

    அம்மானை என்பது மூன்று பெண்கள் கூடி விளையாடும் விளையாட்டு.. விளையாடும் போது பந்துகளோ காய்களோ போட்டு விளையாடுவார்க்ள்..அத்துடன்பாட்டும் உண்டு..முதலில் பொதுவான பொருள் பின் கேள்வி பின் விடை என வரும்..

    எளிமையாகச் சொல்வதானால் கல்பனா கவிதா காயத்ரி அம்மானை விளையாடுகிறார்கள்..

    கல்பனா இரண்டு வரிகளில் ஒன்றைச் சொல்லிக் காய் வீசுகிறாள்

    கண்களிலே ஒளிகொண்டு கருத்தினிலே மின்னி
    எண்ணுகையில் இன்பத்தை தருவானாம் அம்மானை?

    கவிதா.. இவளும் இருவரிகள் சொல்லிக் காய் வீசுகிறாள்

    எண்ணுகையில் இன்பத்தைத் தருவானா கள்ளனவன்
    புண்ணாக்கி மறைந்தவனும் போய்விடுவான் அம்மானை?

    காயத்ரி: ஒரே வரி சொல்லி விடையும் கூறி காயைப் பிடிக்கிறாள்..

    மண்தின்னும் சிறுகண்ணன் மாயமிதே அம்மானை…!

    (முதன்முதல் எழுதிப் பார்க்கும் அம்மானைப் பாட்டு சரியாய் வந்திருக்கிறதா தெரியவில்லை!)

    *

    இனி டி.ராஜேந்தரின் பொன்மான் பாடல் வரிகள்..


    ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
    ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு
    சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில் ஒரு பழரசம்
    அதை காண்பதில் எந்தன் பரவசம்

    தடாகத்தில் மீன் இன்று காமத்தில் தடுமாறி
    தாமரை பூ மீது விழுந்தனவோ
    இதைகண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
    படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ

    காற்றில் அசைந்து வரும் நந்த வனத்துகிளி
    கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்

    ஜதி என்னும் மழையினிலே
    ரதி இவள் நனைந்திடவே
    அதில் பரதம் தான் துளிர் விட்டு
    பூபோல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது
    எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது

    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு

    சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
    அரங்கேற அதுதானே உன் கன்னம்
    மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
    நடத்திடும் வானவில் உன் வண்ணம்

    இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட
    புதிய தம்பூராவை மீட்டி சென்றாள்
    கலை நிலா மேனியிலே
    சுளை பலா சுவையை கண்டேன்

    அந்த கட்டுடல் மொட்டுடல்
    உதிராமல் சதிராடி
    மதி தன்னில் கவி சேர்க்குது
    எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது

    சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

    ***
    http://www.youtube.com/watch?feature...&v=x2MtVeDHJgw



    **

    ஒரு பொன் மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்
    நான் வந்த நேரம் அந்த மானங்கு இல்லை
    அந்த மான் போன மாயமென்ன

    சுதாகர் ராதிகாவைக் கேட்கும் பாடல்.. உன்னை மறக்க முடியுமா உயிரை வெறுக்க முடியுமா என ராதிகாவின் பதில்…



    இன்னும் ஒரு பொன்மான்..

    பொன்ன் மானே கோபம் ஏனோ கமல் ரேவதி இன் கைதியின் டைரி..அழகிய பாட்டு தான்..

    வேறென்ன பொன் மான் இருக்கு..எனக்குச் சிக்க மாட்டேங்குதே..

  13. #937
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பேரறிஞர்
    அண்ணா கதை வசனம்
    எழுதி புரட்சி நடிகர் m.g.r.நடித்து
    அந்நாளில் வெளிவந்த
    வரலாற்று
    சிறப்பு மிக்க படம்தான்
    "நல்லவன்
    வாழ்வான் " எனும்
    அதியற்புதமான
    திரைக்காவியம். அந்தப்
    படத்தில்தான்
    வாலிக்கு முதன்
    முதலாக பாடல் எழுதுகின்ற
    வாய்ப்பு கிடைத்தது. படத்தின்
    இயக்குனர்
    காலஞ்சென்ற
    ப.நீலகண்டன் வாலியைப்
    பார்த்து,
    என்னப்பா,
    உம்..,நல்லா பாட்டு
    எழுதுவியா? உன்னையை
    நம்பித்தான் இந்த
    வாய்ப்பை
    உனக்கு தருகிறோம்.
    என்ன..சரியா...
    என்று சொல்லிவிட்டு
    பாடலுக்கு
    உரிய காட்சியைப் பற்றியும்
    எந்த
    சூழ்நிலையில் அந்த பாடல்
    வருகிறது என்பது பற்றியும்
    எந்த
    கருத்துக்களை அந்த பாடலில்
    பதியம் செய்திடல்
    வேண்டும்
    என்பது பற்றியும் வாலிக்கு
    விளக்கம் தரப்பட்டது.
    அத்தனையையும் மிகப்
    பொறுமை
    நிறைந்த அவருக்கே உரிய
    இயல்பான குணத்தோடு
    கேட்டுக்கொண்ட
    வாலி ஒரு பத்து
    நிமிடத்தில் பாடல்
    தருகிறேன்என்று
    சொல்லி தனது
    ஜோல்னா பையில்
    வைத்திருந்த வெள்ளைப்
    பேப்பரை
    எடுத்து மளமள என பாட்டினை
    எழுதி சமர்பித்தார்.அந்த
    வரலாற்று
    சிறப்புமிக்க பாடல்
    இதோ உங்கள்
    அனைவரின் கவனத்திற்கு:-
    (mgr.வாயசைக்க
    tms.பாடுகிறார்):-
    சிரிக்கின்றாள்இன்றுசிரிக்கின்
    றாள்!!
    சிந்திய கண்ணீர்
    மாறியதாலே !!
    சிரிக்கின்றாள்இன்றுசிரிக்கின்
    றாள்!!
    (ராஜசுலோச்சனாவாயசைக்
    கஇசை--
    -க்குயில்
    p.சுசீலா பாடுகிறார்):-
    அன்புத் திருமுகம்
    காணாமல்
    நான்துன்பக்கடலில்
    நீந்திவந்தேன்!!
    Tms.:-காலப் புயலில்
    அணையாமல்
    நெஞ்சில் காதல்
    விளக்கை
    ஏந்தி வந்தேன் !!
    சுசீலா:- உதயசூரியன் எதிரில்
    இருக்கையில்உள்ளத்தாமரை
    மலராதோ ?
    Tms.:- எதையும் தாங்கும்
    இதயம்
    இருக்கையில் இருண்ட
    பொழுதும்புலராதோ!
    இருண்ட
    பொழுதும்
    புலராதோ !!
    (சிரிக்கின்றாள்)
    சுசீலா:-
    தென்மலராடும் மீன்
    விளை--
    - யாடும் அருவியின்
    அழகைக் காணீரோ !!
    Tms. :- நான் வரவில்லை
    என்பதனால் உன்
    மீன்விழி
    சிந்திய கண்ணீரோ ?
    சுசீலா :- மலர்மழைபோலே
    மேனியின் மேலே குளிர்நீர்
    அலைகள்
    கொஞ்சிடுதோ ?
    Tms.&சுசீலா இருவரும்
    சேர்ந்து:-
    சிரிக்கின்றோம் !! இன்று
    சிரிக்கின்றோம் !!சிந்திய
    கண்ணீர்
    மாறியதாலே
    சிரிக்கின்றோம் இன்று
    சிரிக்கின்றோம் !!
    (இத்துடன் பாடல் நிறைவு
    பெறுகிறது)
    மறைந்த வாலிபக் கவிஞர்
    வாலி
    பாடலை ஒரு 1௦ நிமிடத்திற்குள்
    எழுதி முடித்து இயக்குனர் வசம்
    ஒப்படைக்கிறார். அவர் இந்தப்
    பாடலை பேரறிஞர்
    அண்ணா வசம்
    ஒப்புதலுக்கு அனுப்புகிறார்.
    வாலி
    நெஞ்சில் பயம். முதல்
    முதலாக
    எழுதிய பாட்டு. அண்ணா
    ஒருவேளை ஏற்க மறுப்பாரோ ?
    என
    அண்ணா பார்வை இட்ட
    பிறகு
    மீண்டும்
    அந்தக்கவிதை காகிதம்
    இயக்குனர் கைக்கு வருகிறது,பல
    இடங்களில்
    சிவப்பு மையினால்
    அண்ணா வட்டமிட்டும்
    கீழே கோடு
    இட்டும்
    குறியீடு செய்து இருப்பதை
    வாலி கண்டு மன வேதனை
    அடைகிறார்.
    பாட்டு மறுக்கப்பட்டு
    விட்டதோ என அவரே ஒரு
    முடிவெடுத்து முகத்தை
    சோகமாக
    வைத்திருக்க இயக்குனர் வாலி
    அருகினில் வந்து அவரை முதுகில்
    ஒரு சபாஷ்போட்டு
    தட்டிக்கொடுத்து
    முதல் பாடலை அண்ணா
    மனதாரப்
    பாராட்டி இருக்கிறார்.
    சிவப்பு
    மையினால் வட்டமிட்டதும் கோடு
    இட்டதும் பாட்டுக்கு மிக
    முக்கியமான வார்த்தைகள்.
    எனவே
    எக்காரணமும்
    கொண்டு இந்த
    வார்த்தைகள் விடுபடக்கூடாது
    என்பதற்காகவே அண்ணா
    குறியீடு
    செய்துள்ளார் என
    இயக்குனர்
    சொல்லியதற்குப்
    பிறகுதான் வாலி
    நிம்மதிப் பெருமூச்சு
    வெளியிட்டார்.
    அந்த வார்த்தைகள்
    இவைதான் :-
    1)உதயசூரியன் எதிரில்
    இருக்கையில்
    2)எதையும் தாங்கும் இதயம்
    இருக்கையில

  14. #938
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கையிலே வளவியெல்லாம் கலகலன்னு ஆடையிலே ஒன்
    காலுலே கொலுசு ரெண்டும் ஜதி தாளம் போடையிலே
    கஞ்சிப் பான தூக்கிகிட்டு கண்டும் காணாமே
    சுண்டு நடை போட்டுக்கிட்டு போறவளே ..........
    போறவளே போறவளே பொன்னுரங்கம் என்னெ
    புரிஞ்சுக்காமே போறியே என் சின்ன ரங்கம் ரங்கம்.......
    காடு வயலப் படைச்சு கலப்பையே ஏன் படைச்சான்?
    இந்தக் கன்னிப் பொண்ணையும் படைச்சு ஒன்
    கண்ணு ரெண்டை ஏன் படைச்சான்?
    நேச மச்சான் சொல்லு மச்சான்
    என்ன மச்சான் அப்புடிப் பாக்குறீங்க?
    ஏறு ஓட்டி சோறு காட்டும் ஆசே மச்சான் மச்சான்
    யாரு ஒன்னே தாறுமாறாப் பேச வச்சான் மச்சான்
    தாறுமாறாப் பேசவல்லே பொன்னுரங்கம் ரங்கம்
    பொன்னுரங்கம் கஞ்சி
    ஆறிப் போனாப் புளிக்குமாயென் சின்ன ரங்கம் ரங்கம்
    ஆறிப் போனாப் போகட்டும் என் ஆசே மச்சான் மச்சான்
    ஆசே மச்சான் கஞ்சி
    அப்பனுக்குக் கொண்டு போறேன் அருமே மச்சான் ...
    தன்னந்தனியாப் போறியே என் பொன்னுரங்கம் போனா
    தைரியமா திரும்பி வருவா சின்ன ரங்கம் ரங்கம்
    மண்ணே நம்பி மரமிருக்கேன் பொன்னுரங்கம் அந்த
    மரத்து நெழலில் குடியிருப்பா சின்ன ரங்கம் ......
    - கவிஞர் மருதகாசி .

  15. #939
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு,

    இளையராஜா தொடர் என்றதும் நான் இதை பற்றி யோசித்தேன், எதைப் பற்றி என்றால் நடிகர் திலகம் - ராஜா combination பாடல்கள் பற்றி. அதுவும் அன்னக்கிளி, பாலூட்டி வளர்த்த கிளி, உறவாடும் நெஞ்சம், பத்ரகாளி என்று படங்கள் வெளியான அதே வரிசையில் அந்தப் படங்களிலிருந்து பாடல்களை நீங்கள் வழங்கியபோது அதே வரிசையில் தீபம் படமும் இடம் பெறும் என நினைத்தேன். ஆனால் அதை bypass செய்து அதற்கு அடுத்த படமான அவர் எனக்கே சொந்தம் [1977 பிப்ரவரி], பின் 1977 டிசம்பரில் வெளியான ஆளுக்கொரு ஆசை பின் 1977 செப்டம்பரில் வந்த புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்களிலிருந்து பாடல்கள் வரவே நீங்கள் எதற்கோ காத்திருக்கிறீர்கள் என தோன்றியது. தீபம் படத்திலிருந்து ஒன்று இந்தப் பாடல் அல்லது பூவிழி வாசலில் யாரடி வந்தது இடம் பெறும் என நினைத்தேன். நீங்கள் நடிகர் திலகத்தின் பாடலையே கொடுத்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். உங்களுக்கே உரித்தான நடையில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் பற்றி எழுதியதைப் படிக்க படிக்க ஒன்று உறுதியானது. அவரவர்கள் தங்கள் மனதிருப்திக்கு எதாவது சொல்லிக் கொள்ளலாமே தவிர ஸ்டைல் சக்ரவர்த்தி என்றென்றும் நமது நடிகர் திலகம்தானே! அதனால்தானே ஒரு நடிகனுக்கு நடிப்புக்கு கைதட்டல் விழுந்து பார்த்திருப்பீர்கள் ஆனால் நடைக்கு கைதட்டல் வாங்கிய ஒரே நடிகன் உலகத்திலேயே நமது நடிகர் திலகம் மட்டும்தானே என்ற வாக்கியமே புழக்கத்தில் வந்தது!

    பாடலுக்கும் வர்ணனைக்கும் ஓராயிரம் நன்றிகள்!

    அன்புடன் .

  16. Likes kalnayak, JamesFague, Russellmai liked this post
  17. #940
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு

    தீபம் படத்தின் சூப்பர் ஹிட் பாடலை இளையராஜாவின் முதல் சிவாஜி பாடல் இன்றைய ஸ்பெஷல் ஆக மலர்ந்து இருக்கிறது. நம்மவருக்கு 1977 மறக்க முடியாத ஆண்டு. 75 மற்றும் 76 அவ்வளவாக வெற்றி ஆண்டுகளாக இல்லாத போது 77 ஆம் ஆண்டில் வெடித்த மிக பெரிய 10000 வாலா சர வெடி தீபம்.

    டைட்டில் முடிந்த உடன் இசைஞானி கொஞ்சம் triumphat ,பங்கோ,violin,drum எல்லாம் கலந்து ஒரு ஆரம்ப prelude இசை உடனே நம்மவர் மினி நீச்சல் உடை கோட் உடன் கீழ் இருந்து எழுந்து இருக்கும் போஸ் . நெல்லை பார்வதி திரை அரங்கமே அதிர்ந்தது. குடி அரசு தினம் விடுமுறை முதல் காட்சியில் பார்த்து வெளியில் வரும் போதே படத்தின் வெற்றியை பறை சாற்றிய படம். இந்த படத்தில் இளையராஜாவின் பின்னணி இசை அமர்களமாக இருக்கும் . படம் முழுவதும் அந்த சாக்ஸ் ,triumphat கலந்து ஒரு பின்னணி இசை அடிகடி வரும். கேட்டு கொண்டே இருக்கலாம். நம்மவரின் பைப் ஸ்டைல் கேட்கவே வேண்டாம் .

    ஒரு சிறு நினைவலையை பகிர்ந்து கொள்கிறேன்

    என் கூட இந்த படம் பார்க்க என் கல்லூரி நண்பர்கள் இருவர் உடன் வந்தார்கள்.ஒருவர் பெயர் ஸ்ரீதர் இன்னொருவர் ராமச்சந்திரன் இருவரும் சகோதரர்கள் . 1976-1977 PUC அப்பத்தான் அவங்க தனி ஆக முதல் முதலாக திரைப்படம் பார்க்க வருகிறார்கள். அதுவும் முதல் நாள் முதல் காட்சி. அது வரை அவர்கள் அவர்களுடைய பெற்றோர் உடனேயே சினிமா பார்த்து உள்ளார்கள். அதுவம் அவர்களின் தந்தை அப்போதைய ttes (திருநெல்வேலி தூத்துக்குடி எலெக்ட்ரிசிட்டி சிஸ்டம் பின்னாளில் தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போர்டு) அலுவலகத்தில் பொறியாளர்.அதனால் நிறைய படங்களுக்கு பாஸ் டிக்கெட் இல் தான் படம் பார்த்து இருக்கிறார்கள். அதுவும் ஒரு திரை படம் நிறைய நாள் ஓடி கல்கி அல்லது விகடன் 'நல்ல படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்' என்ற விமர்சனம் இருந்தால் மட்டுமே பார்த்த அனுபவம். அதனால் அவர்கள் இருவருக்கும் முதல் நாள் முதல் காட்சி ரசிக்கிற அனுபவம் அன்று தான் கிடைத்தது. அவர்கள் தயவால் அது வரை தரை டிக்கெட் (45 பைசே ) படம் பார்த்து கொண்டு இருந்த நான் முதன் முதலில் 1.15 குஷன் சேர் டிக்கெட் பார்த்த படம் . காட்சிக்கு காட்சி விசில் கைத்தட்டு என்ற அனுபவத்தை பார்த்து இருவருமே அதிசயத்து போனார்கள்.மஞ்சள் முகமே வருக சத்யப்ரியா (ஆஷா) வில்லியாக வருவார் . ஒரு காட்சியில் கண்ணன் (விஜயகுமார்) ஆஷாவிடம் தனது மனைவி ராதா (சுஜாதா),ராஜா (நடிகர் திலகம்) உறவை தவறாக புரிந்து கொண்டு மனவருத்த படும் போது சத்யப்ரியா 'ராதா நல்ல நடிகை ' என்று சொல்வார் . உடனே கண்ணன் 'எங்க முதலாளி ராஜா சார் ' என்ற உடன் ஆஷா 'அவரும் சிறந்த நடிகர் ' என்று சொல்லும் போது திரை அரங்கம் அதிர்ந்த காட்சி என் நண்பர்களுக்கு அப்போது 8வது உலக அதிசயம் .

    நமக்கு இந்த முதல் நாள் தனியாக பார்த்த அனுபவம் சிவந்தமண்,நம்நாடு 1969 இரண்டிலும் ஆரம்பம் .அவங்களை விட 7 ஆண்டு சீனியர் .அதனால் தனி மரியாதை கொடுத்தார்கள் .ஆனால் தீபத்திற்கு பிறகு நிறைய படங்கள் அவங்களாகவே வந்து முதல் காட்சிக்கு ரசிகர் மன்ற டிக்கெட் வாங்க நம்மை தேட ஆரம்பித்து விட்டார்கள் என்றால் எந்த அளவிற்கு அவர்களை முதல் நாள் காட்சி பாதித்து இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். மேலும் தியாகம் (அதுவும் நெல்லை பார்வதி) நடிகர் திலகம் கோயில் திரு விழா டான்ஸ்க்கு அவங்க இருவரும் ஆடிய நடனம் இன்னும் கண்ணில் இருக்கிறது

    பின்னாட்களில் திரு ராமச்சந்திரன் B .Sc physics , MIT production முடித்து டெல்லியில் செட்டில் ஆனார் .திரு ஸ்ரீதர் திருச்சி REC B E முடித்து US சென்றார் .

    நம்ம வழக்கம் போல் நெல்லையில்

    நம்மவரின் அந்த மினி கோட் போஸ் இருந்தால் எடுத்து போடவும் .



    இதே தீபம் க்ரிஷ்னமராஜு நடித்து தெலுங்கில் அமரதீபம் என்று வந்தது
    இரண்டு பைப் ஸ்டைல் வித்தியாசம்

    thanks vaasu
    gkrishna

  18. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •