-
30th October 2014, 11:20 AM
#881
Junior Member
Seasoned Hubber
M r ராதா டூயட் பாடினால் பார்க்க முடியுமா ஆனால் நடிகர்திலகம் அப்படியல்ல. எந்த வேடம் நடித்தாலும் நம்மால் ரசிக்க முடியும். எதுவே
அனைத்து நடிகருக்கும் நடிகர் திலகத்திற்கும் உள்ள வேறுபாடு. எனவே
கலைகட்வுள் என்றால் அது நடிகர் திலகம் தான்
-
30th October 2014 11:20 AM
# ADS
Circuit advertisement
-
30th October 2014, 11:46 AM
#882
Last edited by gkrishna; 30th October 2014 at 11:48 AM.
gkrishna
-
30th October 2014, 12:14 PM
#883
Originally Posted by
rajeshkrv
தேனிசை தென்றலின் முத்துக்கள்-14
90களில் சில படங்களில் வருண்ராஜ் என்ற நடிகர் நடித்தார். பாவம் அப்புறம் என்னா ஆனாரோ.. இதோ வருண்ராஜ் மற்றும் ரூபஸ்ரீ பாடும் பாடல்
தேவாவின் அழகான இசையும், பாலுவும் சித்ராவும் இசைக்கும் காதல் கீதம்.
டியர் ராஜேஷ் சார்
இந்த வருன்ராஜ் தான் சபீக் என்று மலையாளத்திலும்,சஞ்சய் என்ற பெயரில் தமிழ்லும் ரவுண்டு அடித்து பார்த்தார்.
ஓடங்கள் என்ற தமிழ் படத்தில் சஞ்சய் என்ற பெயரில் நடித்தார்
நினைவு கூர்ந்ததற்கு நன்றி
GK
-
30th October 2014, 12:30 PM
#884
Originally Posted by
gkrishna
வாலி பிறந்த நாள் -
ரகசிய போலீஸ் 115 படத்தில் வாலி எழுதிய கண்ணே கனியே என்ற பாடலில் நாயகியின் அழகு பற்றி வரும் வரிகள்
ஒரு நாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ
செம்மாதுளையோ பனியோ மழையோ உன் சிரித்த முகம் என்ன
சிறு தென்னம் பாளை மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன
This song 'kanne kaniye' was written by KANNADHAASAN.
-
30th October 2014, 12:49 PM
#885
நன்றி ஆதிராம் சார்
இது போன்று நிறைய பாடல்கள் கண்ணதாசன் எழுதியதா வாலி எழுதியதா என்று குழப்பத்தை ஏற்படுத்தும் .
ஒரு சிறு விண்ணப்பம்
ரகசிய போலீஸ் 115 டைட்டில் கார்ட்
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்,கவிஞர் வாலி என்று உள்ளது.
எந்த பாடல் வாலி எழுதியது என்று சொல்ல முடியுமா ?
-
30th October 2014, 01:07 PM
#886
படித்ததில் பிடித்தது
ஆனந்தவிகடன் 10.8.1969கேள்வி: திரைப்படங்களில் நீங்கள் நடிக்க வராமல் இருந்திருந்தால் வேறு என்ன செய்திருப்பீர்கள்?
ஜெயலலிதா: எனக்கு ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் வாங்க வேண்டுமென்று ஆசை. ஒருவேளை படித்து பட்டம் வாங்கி ஆங்கில இலக்கியத்தை கரைத்துக் குடித்துக் கொண்டிருப்பேன். ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படம் போட கற்றுக் கொள்ள வேண்டுமென்று ஆசை. ஒருவேளை அப்படியிருந்தால் இன்று பல நல்ல ஓவியங்களை தீட்டித் தள்ளிக் கொண்டிருப்பேன். பிரபல சரஸ்வதி-யாமினி கிருஷ்ணமூர்த்தி இவர்களைப் போல கிளாசிகல் நடனத்தில் உலகப் புகழ் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அரசியலில் தீவிரமாக இறங்கி பெரிய அரிசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஒருவேளை நான் சினிமாவுக்கு வராமலிருந்திருந்தால், இன்று தேர்தலுக்காக எங்காவது மேடையில் பேசி வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பேன். ஆனால் ஒன்று இப்படி சினிமாவிற்கு வந்து நடிப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை. தலைவிதிதான். ஆனால் கொஞ்சம் அதிர்ஷ்டமான தலைவிதி.
-
30th October 2014, 02:21 PM
#887
Senior Member
Senior Hubber
காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது - என்ற இந்த வாக்கியம் மற்ற நாட்டு வானங்களுக்கெல்லாம்(?!) சகஜமாக இருக்கலாம்.. மஸ்கட்டை ப் பொறுத்தவரை அபூர்வம்.. நடுவில் - எதையோ ஆசைப்பட்டுக் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தை யே என்று அழுது கிடைத்ததும் டபக்கென நிறுத்தி விடுவதைப் போல - ஒரு ச்சின்ன க் குட்டி மழை பெய்து சாலைகளை நனைத்தது..
சாயந்திரம் அலுவல் முடித்துச் சென்றால் ரோடெல்லாம் காய்ந்து மழை சுவடே இல்லாமலிருக்கும்..அதற்குள் இன்னொரு மழை வந்தால் நன்றாக இருக்கும்..
என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்..மழை..யெஸ் ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்ததால் வானமே ஏதோ கல்யாணப் பந்தலில் நின்று கொண்டு இங்கு ஹாய் விஷ் யூ ஆல் ஹேப்பினஸ் எனச் சொல்லி பன்னீர் தூவுவதைப் போன்ற சில பல தூற்றல்கள்..ஹப்பாடி பாட்டுக்கு வந்தாச்சு..
தூக்கு மர நிழலில் என்ற நாவல் எழுதிய சி.ஏ.பாலன் எழுதிய இன்று நீ நாளை நான் நாவல் படமாக்கப் பட்டு சிவகுமார் லஷ்மி ஜெய்சங்கர் சுலோச்சு (அதானே!) நடிக்க வெளியானது..அதில் லஷ்மி பாடும் பாடல் நினைவுக்கு வந்தது தவறில்லை தானே..
லஷ்மியின் கணவர் ஜெய்சங்கர் மரித்து விடுகிறார்..லஷ்மி விதவை ஜெய்சங்கரின் தம்பி (தான் என நினைக்கிறேன்) சிவகுமாரிடம் மனம் பேதலிக்கிறார்..அண்ட் ஸாங்க் இஸ் கமிங் யா..
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா...
தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா…
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
**
வரிகள் வைரமுத்து.. வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா..ம்ம்
**
இன்று நீ நாளை நான் படத்தைப்பொறுத்த வரை கொஞ்சம் வித்தியாசமான படம் என மட்டும் நினைவில் இருக்கிறது..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th October 2014, 06:04 PM
#888
Senior Member
Diamond Hubber
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 10)
அடுத்து 'புவனா ஒரு கேள்விக்குறி'. அனைவருக்குமே பிடித்த பாத்திரப் படைப்புக்கேற்ற ரஜினியின் நடிப்பு. வித்தியாச கள்ளத்தனம் கொண்ட பாத்திரத்தில் சற்றே வழக்கத்துக்கு மாறான சிவக்குமார். குணச்சித்திர நடிப்புக்கு ரஜினிக்கு இருக்கும் ஒருசில படங்களில் இதுவும் ஒன்று. பொதுவாகவே ரஜினி இந்தப் படத்திலும், 'ஆறிலிருந்து அறுபது வரை' படத்திலும் நன்கு நடிப்பில் சோபித்திருப்பார் என்ற பெயர் உண்டு. இன்றளவிலும் நடிப்பைப் பொறுத்தவரையில் ரஜினியின் பெயர் சொல்லும் படம். 1977-ல் வெளிவந்தது. இயக்கம் எஸ்.பி.முத்துராமன்.
இந்தப் படத்தில் ரஜினி அவர் காதலியாக வரும் மீராவுடன் பாடும் ஒரு மனதை வருடும் மெல்லிசை மோகப் பாடல். வேட்டி, சட்டையில் ரொம்ப சிம்பிளாக ரஜினி. பாடல் வரிகள் அனுவித்து எழுதப்பட்டவை. ஆனால் பாடல் வரிகளின் புகழ்ச்சிக்கேற்றவாறு நடிகை மீராவின் உருவ அமைப்பு இல்லாதது ஒரு பெரிய குறை.
'விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது'
ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாக, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குழையும் குரலில் நம் நெஞ்சத்தை மயக்கும் கானம். எளிமையான பஞ்சு அருணாச்சலத்தின் வரிகள். மெல்லிய கிடார் இசையுடன் ஆரம்பிக்கும் பாடல் அப்படியே வைகைக் கரையின் புதுத் தென்றல் போல நெஞ்சுக்குள் நுழைந்து சுகம் தரும். ராஜாவின் மிகச் சிறந்த மெலடிக்கு எடுத்துக்காட்டு இந்தப் பாடல்.
'பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை'
என்ற எவரும் நினைக்க முடியாத கற்பனை வரிகள் அற்புதம்.
பாடலின் முழு வரிகள்.
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும்
புது உலகின் வழி தெரியும்
பொன்விளக்கே தீபமே
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப்போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப்போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி
கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
கையளவு பழுத்த மாதுளை
பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை
பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோகமழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
Last edited by vasudevan31355; 30th October 2014 at 06:12 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
30th October 2014, 06:16 PM
#889
Senior Member
Diamond Hubber
'புவனா ஒரு கேள்விக்குறி' ரஜனி.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th October 2014, 07:09 PM
#890
Senior Member
Seasoned Hubber
சி.க.சார்
இன்று நீ நாளை நான் ... பொன் வானம் பாடல் தமிழ் சினிமாவின் இசை வரலாற்றில் மறக்க முடியாத பாடலாகும். இசையமைத்த இளையராஜாவிற்கும் பாடிய எஸ்.ஜானகி அவர்களுக்கும் வரிகளின் சொந்தக்காரருக்கும் என்றென்றும் நிலைத்த புகழை அளித்த பாடல்
நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks