-
7th October 2014, 02:08 PM
#31
குருஜி ராகவேந்தர் அவர்களுக்கு மதிய வணக்கம்
இன்று காலையில் மதுரகானம் திரியை படிக்கும் போது உங்கள் புதிய கீற்று கொட்டகை பற்றி படித்தேன். ஆனால் அதற்குள் கிளிக் செய்து உள்ளே சென்று பார்கவில்லை .இப்போது தான் பொறுமையாக எல்லா பதிவுகளையும் படித்தேன். அட்டகாசமான ஆரம்பம் சார் வாழ்த்துகள் .
-
7th October 2014 02:08 PM
# ADS
Circuit advertisement
-
7th October 2014, 02:19 PM
#32
Junior Member
Platinum Hubber
TOURING TALKIE- FROM NET
-
7th October 2014, 02:20 PM
#33
Junior Member
Platinum Hubber
-
7th October 2014, 02:21 PM
#34
Junior Member
Platinum Hubber
-
7th October 2014, 02:22 PM
#35
Junior Member
Platinum Hubber
-
7th October 2014, 02:23 PM
#36
Junior Member
Platinum Hubber
-
7th October 2014, 02:31 PM
#37
திரு வீயார் அவர்களே உங்கள் இழை அருமையானது ... வாழ்த்துக்கள்...
பாவமன்னிப்பு படம் திரையிட பட்ட தூத்துக்குடி லக்ஷ்மி தியேட்டரில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி தமிழ்நாடு தீயணைப்பு துறை கொடுத்துள்ள தகல்கள் இதோ :
LAKSHMI TOURING TALKIES, TUTICORIN
(29 JULY 1979)
An example of a Cinema Hall fire that took place in Tamil Nadu was a fire in Lakshmi Touring Talkies at Lourdhammalpuram, Tuticorin. On 29.07.1979 about 4.30 p.m fire broke out in this touring talkies on the outskirts of Tuticorin. The construction was of inflammable material (thatched leaves) and hence the fire spread very quickly. Several persons escaped, but several other persons were unable to escape and were burnt to death within the theatre itself. Some others who escaped had sustained injuries and some of them succumbed to injuries. Over a hundred persons reportedly died in the disaster. One of the main point of controversy was how the gates other than the entrance which were admittedly closed, were fastened. Licensee contented that thattis were fastened by twine using a “sulukku” (k]a). Others contended that the thattis were fixed to supporting poles by iron wires so tightly that they could not be unfastened. This prevented the spectators from opening the closed thattis when fire broke out and escaping through apertures which were intended to be the exits in such emergencies. There were only one entrance for women and children. Most of the bodies were heaped one over the other at this point. The picture ran properly for the first half an hour. Then there was an interval and after about 5 mts the picture resumed, when there was a small fire. This spread rapidly. The fire was from behind the screen. It rose up and shot to the roof. Short circuiting behind the screen was the cause of the fire. Even though there were 12 places, where power could have been taken from the distribution board, it was taken only from 7 and dummy fuses were inserted in the other 5, while regular fuse were inserted in 7. From the evidence of the Electrical Inspector, short circuit in the 230-v line leading to the speaker must have caused the fire. The wire to the speaker came from the roof and without any support. The wire freely moved about and so must have come together. The wires were not changed after they were fitted on October ’77. The insulation wore out. The last inspection was done by Electrical Inspector on 23.08.78. Some of the fuse wires had not blown off because they were thicker than the permitted size. None of the fuses recovered from the cabin room had blown off. 9 fuses had not blown from the power room and 7 from the distribution board. As per the practice in the Electrical Department, the officers do not verify whether the defects said to have been rectified were actually rectified or not. In this case many defects were pointed out during inspection on 23.08.78. Sufficient buckets of water as prescribed under the regulation were not even kept.
Number persons lost their lives is 73 and 88 were injured. Property lost is Rs. 20,000/- and saved is Rs. 60,000/-
http://www.tnfrs.tn.nic.in/major-incid.htm
-
7th October 2014, 03:05 PM
#38
Junior Member
Platinum Hubber
from net
நான் சென்னையில் இருந்து காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறைகளுக்கு மட்டுமின்றி சனி, ஞாயிறு விடுமுறைக்கும்கூட எங்கள் ஊருக்குப் போய்விடுவேன். எங்கள் ஜெகநாதபுரம் கிராமத்துக்கு காரனோடையில் ஒரு டூரிங் டாக்கிஸும் ஜனப்பன் சத்திரம் கூட்டுசாலையில் ஒரு டூரிங் டாக்கிஸும் இருந்தன. முறையே நாகு டாக்கீஸ். வெங்கடேஸ்வரா டாக்கீஸ் இது இரண்டுமே சுமார் நான்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில். "ஒளிவிளக்கு', "எங்க வீட்டுப் பிள்ளை' போன்ற படங்கள் என்றால் பெரிய பாளையம், ஆரணி, பொன்னேரி என்று போய் வருபவர்கள் உண்டு. இப்போது பர்மா பஜாரில் "ஒளிவிளக்கு' சி.டி.யை பிளாட் பாரத்தில் பரப்பி விற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது ஏனோ மனசு கனக்கிறது.
எங்கள் வீடுகளில் படம் பார்ப்பது மிகுந்த ஆட்சேபகரமான விஷயமாக கருதப்பட்டு வந்ததால் (ரேடியோவில் சினிமா பாடல்கள் கேட்பதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது) எல்லோரும் தூங்கிய பின் செகண்ட் ஷோ பார்ப்பதுதான் ஒரே வழி.
அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக பம்பு ஷெட்டு காவலுக்குப் போகிறோம் என்று மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு சொல்லுவோம். ஆரம்பத்தில் வீட்டிலும் அதை நம்பினார்கள். பம்பு ஷெட் காவல் என்பது இரவு பத்து மணிக்கு மேல் த்ரி பேஸ் கரண்டு வந்த பிறகு மோட்டரை ஆன் செய்கிற வேலை.
இரவில்தான் பம்பு ஷெட்டுக்கான கரண்டு வரும். பத்து மணிக்கு மோட்டரை ஆன் செய்துவிட்டு படத்துக்கு ஓடுவோம். பத்தே காலுக்குப் படம். ஒரு சைக்கிள் இருக்கும். ஆனால் பெரும்பாலும் அதில் மூன்று பேருக்கு மேற்பட்டவர்தான் பயணிக்க வேண்டியிருக்கும். சீட்டில் உட்கார்ந்து இருப்பவன் தவிர, பின் பக்கம் கேரியரில் அமர்ந்திருப்பவனும் இரண்டு பக்கமும் கால் போட்டு அமர்ந்து ஒப்புக்கு சப்பாணியாக பெடல் மிதிப்பான். சைக்கிள் என்பது சும்மா பெயருக்குத்தான். அதில் எப்போதும் பெடல் கட்டை இருக்காது. ட்யூபில் காற்று எந்த நேரத்திலும் கம்மியாகத்தான் இருக்கும். பிரேக் இல்லாமல் இருப்பதை நாங்கள் ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை.
டபுள்ஸ் போனாலே சோழவரம் போலீஸ்காரர்களுக்குக் கொண்டாட்டம். பிடித்துவைத்து கையில் இருப்பதைக் கறந்துவிடுவார்கள். ட்ரிபில்ஸ், ஃபோர்பில்ஸ் எல்லாம் போனால்? "கண்ணா... ரெண்டு லட்டு தின்ன ஆசையா?' என்று விளம்பரப்படத்தில் வருவதுபோல குதூகலமாகிவிடுவார்கள். போதாததற்கு லைட் இல்லையென்றால் பிடிக்கலாம் என்றுவேறு அவர்களின் குதூகலத்தை எண்ணை விட்டு வளர்த்தார்கள். ஒவ்வொரு நாள் படம் பார்த்துவிட்டு வரும்போதும் எங்களுக்கு எமகண்டம்தான். ஜி.என்.டி. ரோடை கடந்து கிராமத்துக்குச் செல்லும் சாலைக்குத் திரும்புகிறவரை உயிரே போகும். சில நேரங்களில் அவர்களின் விசிலை கவனிக்காததுபோல வேகமாக ஓட்டிச் செல்ல முயற்சி செய்வோம். மூன்று பேரை நான்கு பேரை வைத்துக் கொண்டு தப்பிப்பது சாமானிய வேலையில்லை. மாட்டிக் கொண்டால், செவுள் பிய்ந்து கொள்கிற அடி கிடைக்கும். "சி.ஐ.டி. சங்க'ரோ, "பாகப்பிரிவினை'யோ பார்த்துவிட்டு வந்த திருப்தியில் அந்த அடியெல்லாம் எங்களுக்கு உரைத்ததே இல்லை.
சந்தேக கேஸ் சிஸ்டம் இருந்ததால் போலீஸ்காரர்களுக்கு செகண்ட் ஷோ பார்க்கிற மக்களைச் சந்தேகப்படுவது இயல்பாக இருந்தது.
மாதத்திற்கொருமுறை சந்தேக கேஸில் யாரையாவது பிடித்ததாகக் கணக்கு காட்ட வேண்டும் என்பது போலீஸ்காரர்களுக்கு எழுதப்படாத சட்டம். என் நண்பர்கள் சிலர் லாக்கப்பில் அடைபட்டு மறுநாள் கோர்ட்டில் பைன் கட்டவிட்டெல்லாம் திரும்பி வந்தார்கள்.
இன்னொரு தொல்லையும் மின்வாரிய ஊழியர்களின் மூலம் ஏற்பட்டது. அப்போது விவசாயத்துக்கு இலவச மின்சாரம் நடைமுறையில் இருந்ததால், பத்து மணிக்கு கரண்ட் கொடுப்பார்கள். பெரும்பாலோர் மோட்டரைப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போய் படுப்பார்கள். கொஞ்ச நேரத்தில் மீண்டும் கரண்ட் போய்விட்டு திரும்ப வரும். மீண்டும் மோட்டர் போட்டால்தான் ஓடும். நிறைய பேர் தூங்கிவிட்டதால் மோட்டர் போடாமல் விட்டுவிடுவார்கள். மின்வாரியத்துக்கு கரண்ட் மிச்சம்.
ஆனால் நாங்களோ பம்பு ஷெட் காவலுக்குப் போவதாகக் கிளம்பி வந்தவர்கள். ஏன் கரண்ட் வந்ததும் மோட்டர் போடவில்லை என்று கேட்பார்கள். பம்பு ஷெட்டுக்குப் போவதற்கு சைக்கிள் எதற்கு? போன்ற சந்தேகங்கள் வந்து, நாங்கள் படம் பார்ப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். போலீஸிலும் மாட்டிக் கொண்டு குடும்ப மானத்தை வாங்கிவிட்டதால் நாங்கள் கெரவமாக படம் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டே வந்து இறுதியில் நிறுத்திவிட்டோம்.
சொல்லி வைத்தது மாதிரி நாங்களும் கொஞ்சம் பெரிய மனிதர்களாக ஆனோம். எனக்கும் என் மைத்துனருக்கும் ஒரே நாளில் திருமணம். இருவருக்கும் 21 வயது ஆரம்பித்துவிட்ட ஒரே சட்ட ரீதியான தகுதியின் காரணமாக அந்தத் திருமணம் நடந்தது. எப்போது வேண்டுமானாலும் படம் பார்க்கும் தகுதி எங்களுக்கு வந்துவிட்டதால் செகண்ட் ஷோவை முற்றிலுமாக விட்டுவிட்டோம்.
"டெண்ட் கொட்டாயில்' படம் பார்ப்பது சமூகத்தின் பார்வையில் ஒரு மாத்து கம்மியான விஷயமாக இருப்பதும் எங்களைப் படம் பார்ப்பதில் இருந்து விலக்கிவிட்டது. பெரும்பாலும் அதில் படம் பார்ப்பவர்கள் கடும் உழைப்பாளிகள், ஏழைகள், தாழ்த்தப்பட்ட சாதியினர்...
டூரிங் டாக்கீசைப் பற்றி இப்போது நினைவுபடுத்த முடிந்தவை..
டெண்ட் கொட்டாயில் "சேர் } 50' என்றும் "தரை }30' என்றும் தாற்காலிகமாக சுண்ணாம்பில் எழுதியது போன்றதொரு போர்டு நிரந்தரமாக பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்தது. விலைவாசி ஏற்றம் காரணமாக "சேர் }50', "சேர் - 60' என்று ஆன போதுகூட சேர் என்பதை மாற்றாமல் எண்ணை மட்டும்தான் மாற்றினார்கள்.
எங்களூருக்குச் சற்று தள்ளி, பூச்சி அத்திப்பேடு, தாமரைப்பாக்கம், மேலப்பேடு, கரலப்பேடு போன்ற இடங்களில் டெண்டு கொட்டகைகள் இருந்தன. டெண்ட் கொட்டகை என்பது நீளவாக்கில் ஒரு கோழிப்பண்ணை கொட்டகை போல இருக்கும். கோழிகள் வெளிவராமல் இருக்க அடைக்கப்படும் கம்பி வேலி மட்டும் அதில் இருக்காது. பெரிய துணி கட்டி திரையில் படம் காட்டுவார்கள். பின்னால் அமர்ந்திருப்பவர்கள் புரஜெக்டருக்கு நேராக தலையைக் காட்டினால் திரையில் சரோஜா தேவி மறைந்து பெரிய நிழல் தலை மட்டும் திரையில் தெரியும். அந்த ஒரு வினாடி சரோஜா இழப்புக்காக அந்த மறைத்தவனை அடிப்பதற்கு ஆள்கள் கோஷமிட்டபடி ஆர்ப்பரிப்பார்கள்.
மணலில் உட்கார்ந்து படம் பார்ப்பதுதான் மிகவும் பிடிக்கும். காலை நீட்டி உட்காரலாம். காலியாக இருந்தால் படுத்துக் கொண்டே படம் பார்க்கலாம். முன்னால் இருப்பவர் தலை மறைத்தால், மண்ணைக் கோபுரமாகக் குவித்து உயரமாக உட்கார்ந்து கொள்ளலாம். சிலர் பெண்களுக்கான தடுப்போரமாக உட்கார்ந்து சில்மிஷங்களில் ஈடுபடுவார்கள். அதன்மூலம் சின்ன சந்தோஷங்களோ, சின்ன சண்டைகளோ நேரத்துக்கு ஏற்ப, ஏற்படும்.
ஃபிலீமை மாற்றி ஓட்டினால், கரண்ட் போனால், பிலிம் கட்டாகி வெண்திரையாக காட்டப்பட்டால் சவுண்டு விடலாம். அந்தக் கலகக் குரலுக்குப் பணிந்து பாதி காசை திருப்பித் தருமாறு உரிமைப் போரில் குதிக்கலாம். சில நேரங்களில் முதலாளி வந்து மறுநாள் இலவசமாக படம் பார்ப்பதற்கு அனுமதிக்கலாம். அப்போதெல்லாம் எங்களுக்கு நிறைய நேரம் இருந்தது போல இருந்தது. கிணற்றில் பொழுதெல்லாம் குளித்து, பக்கத்துத் தோட்டங்களில் மாங்காயோ, நாவல் பழமோ திருடித் தின்றுவிட்டு, பள்ளிக்கும் போய் வந்து, இரவெல்லாம் சினிமா பார்த்து, கோலியோ.. பம்பரமோ அந்தந்தப் பருவ விளையாட்டில் ஈடுபட்டு... அதன் பிறகும் என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்டுவதற்கு நேரம் இருந்தது. இப்போது காலையில் கண் விழித்த உடனேயே பசங்களுக்கு நேரம் போதாமல் போய்விட்ட டென்ஷனை பார்க்கிறேன். படிக்கிறார்கள். பள்ளிக்குப் போகிறார்கள். டி.வி. பார்க்கிறார்கள். நாள் மிகவும் சிறியதாக ஆகிவிட்டது. அவர்களின் நேரங்களைக் களவாடியது யாரென்று தெரியவல்லை.எதற்கு இந்தக் கட்டுரைக்குத் தேவைப்படாத வீண் கவலை? என் விஷயத்துக்கு வருகிறேன்..
பின்னாள்களில் பகலிலேயே படம் பார்த்துவிட்டு வருவதற்கும் ரெட்ஸில்ஸ் நடராஜா தியேட்டரிலும் அம்பிகா தியேட்டரிலும் பொன்னேரி வெற்றிவேல்} கெளரி தியேட்டரிலும் நாற்காலியில் அமர்ந்தே படம் பார்க்கிற வாய்ப்புகள் அமைந்தன. டூரிங் டாக்கிஸில் தடுப்பு அரண்கள் இல்லாமல் இரண்டு பக்கமும் காற்றோட்டம் இருக்கும். தியேட்டரில் பகல் ஷோக்களில் எல்லா கதவும் அடைத்து புழுக்கமும் ஃபிலிம் சுருள் ஓடும் இடத்தில் இருந்து வரும் புகையின் காரணமாக ஏற்படும் பிராணவாயு பற்றாக்குறையும் எனக்குத் தொடர்ச்சியான தலைவலிக்குக் காரணமாக அமைந்து படம் பார்க்கிற ஆசையே போய்விட்டது.
இப்போதும் இரவில்தான் விவசாயத்துக்கான கரண்ட். ஆனால் கரண்ட் வந்தால் மோட்டார்கள் அதுவாகவே ஓடுகிற வசதிகள் வந்துவிட்டன. சைக்கிளுக்குப் பதில் பெரும்பான்மையானவர் வீட்டில் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் இருக்கின்றன. எங்கும் டெண்ட் கொட்டகைகள்தான் இல்லை. டெண்ட் கொட்டகைகளின் இடத்தை சன் டிவி பிடித்துவிட்டது. எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்த டாக்கீஸஸுகளின் வேலையை இப்போது விஜய்க்காகவும் பரத்துக்காகவும் சன் டிவி செய்து கொண்டிருக்கிறது.
சினிமா நிருபராக பணியாற்றிய நேரங்களில் 50} 60 பேர் படம் பார்க்கக் கூடிய சிறிய ஃப்ரிவியூ தியேட்டர் முதல் சத்தியம் ஸ்ரீ போன்ற திரையரங்குகள் வரை ஏஸியில் உட்கார்ந்து பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே படம் பார்க்கிற போதும் எப்போதாவது ஒரு தரம் சந்தேக கேஸஸுக்குச் சிக்காமல் தப்பித்து ஓடி படம் பார்த்த நினைவு மனதுக்குள் புகைந்து கொண்டுதான் இருக்கிறது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th October 2014, 03:06 PM
#39
திரு ராகவேந்தர் அவர்களுக்கு
கீழ்க்கண்ட வேண்டுகோள் இங்கே பதிவிடுவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்கள் என்ற எண்ணத்துடன் பதிவிடுகின்றேன்
இங்கே கீற்று கொட்டகை திரியில் நண்பர் திரு வென்கிராம் அவர்கள் இரண்டு கருத்துகள் சொல்லி இருக்கிறார்.
திரு வாசு அவர்கள் கடந்த 1ம் தேதி நடிகர் திலகத்தை பற்றி நிறைய பதிவுகள் மதுர கானம் பகுதியில் பகிர்ந்து கொண்டு சிவாஜியை சிலாகிக்கும் திரியாக மாறி விட்டது என்று சொல்லி இருக்கிறார் .மதுர கானம் திரியின் இரண்டாவது பாகம் ஆரம்பித்த பணியை செய்த காரணத்தாலும் நடிகர் திலகத்தின் ஒரு நீண்ட நாள் ரசிகர் என்ற முறையிலும்,சினிமாவை ஆழமாக நேசிப்பவன் என்ற உரிமையிலும் ஒரு கருத்தை மட்டும் திரு வென்கிராம் அவர்களுக்கு சொல்லி கொள்ள ஆசைபடுகிறேன் . மதுர கானம் திரியை எடுத்து கொண்டால் எல்லா கலைஞர்களின் பிறந்த நாள் மற்றும் சில சமயம் நினைவு நாளை கூட நினைவு கூர்ந்து உள்ளோம். (அந்த நாள்கள் தெரிந்த பட்சத்தில்) . சில சமயம் மறந்து இருக்கலாம். நடிகர் திலகம் அவர்கள் தமிழ் மற்றும் உலக சினிமாவின் ஒரு மிக சிறந்த ஆளுமை. அவரை கொண்டாடுவதில் அதுவும் வேறு எந்த திரியிலும் வெளி வராத சில நல்ல அபூர்வ புகைப்படங்கள் மற்றும் சில நிகழ்வுகளை திரு வாசு அவர்கள் வெளி கொணர்ந்து உள்ளார். அதை வெளியிடுவதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதே நேரத்தில் திரு வாசு அவர்கள் இன்றைய ஸ்பெஷல் என்ற தலைப்பில் கிட்டத்தட்ட 90 அபூர்வ பாடல்களை வெளி கொண்டு வந்து உள்ளார். அதில் நடிகர் திலகம் படத்தின் பாடல்கள் என்று எடுத்து கொண்டால் 5 கூட தேறாது. திரு வாசுவுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு பேசுவதாக தயவு செய்து நினைத்து விட வேண்டாம். மேலும் திரு வாசு அவர்கள் எல்லா நடிகர்களையும் (நடிகர்திலகத்தின் பரம சீடர் ஆக இருந்து பின்னாட்களில் போக் ரோடு நம்பி நான் இல்லை என்று சொன்ன திரு ஸ்ரீகாந்த் அவர்களை பற்றி கூட) நிறைய பாடல்களும் தகவல்களும் வெளியிட்டு உள்ளார். மேலும் முதன் முதலில் மக்கள் திலகத்தின் பறக்கும் பாவை பாடலை ஆரம்பித்து வைத்தவரும் அவர் தான். எஸ்வி அவர்கள் முன்னமே மக்கள் திலகத்தின் பாடல்களை வெளியிட்டு இருந்தாலும் நடிகர் திலகத்தின் சிறந்த தீவிர ரசிகர் மக்கள் திலகத்தின் பாடலை பதிவு இட்டு சிறப்பிப்பது என்பது திரு வாசு அவர்களின் பரந்த மனபான்மைக்கு சான்று. இதே போன்று நடிகர் திலகத்தின் இன்னொரு தீவிர ரசிகர் திரு கார்த்திக் அவர்கள் இதய வீணை திரை படத்தில் இடம் பெற்ற 'பொன் அந்தி மாலை பொழுது' பாடலை பதிவு இட்டு சிறப்பு செய்தார். ஆக மதுர கானம் நடிகர் திலகத்தின் புகழ் மட்டும் பாடும் திரி என்று கருதாமல் நடிகர் திலகத்தின் புகழையும் பாடும் திரி என்று தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள் .
இரண்டாவதாக மதுர கானம் திரி பாடல்களுக்காக என்று ஆரம்பிக்க பட்டு இப்போது அதன் நோக்கம் மாறிவிட்டதாக கூறி உள்ளீர்கள். நிச்சயமாக அப்படி இல்லை. வெறும் பாடல்கள் மட்டும் நிரப்பி மதுர கானம் திரியை இன்னும் ஒரு youtube தளம் போன்று இல்லாமல் சினிமா பற்றிய ஒரு பன்முக திரியாக விளங்க வேண்டும் என்பதற்காக தான் கலை துறையில் உள்ளவர்களின் பேட்டிகள் ,அவர்களை பற்றிய துணுக்குகள் இடம் பெற்றன. அவற்றில் பல தகவல்கள் சிலருக்கு புதிதாக இருந்து உள்ளதாக பிரைவேட் மெசேஜ் அனுப்பி இருந்தார்கள். எல்லோருமே வலையில் பல்வேறு தளங்களுக்கு செல்பவர்கள் ஆக இருப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது என்பதால் அந்த தகவல்கள் பரிமாற்ற பட்டன.மற்றபடி திரியின் நோக்கத்தை மாற்ற வேண்டும் என்றோ,மற்றவர்களின் பாடல்கள் வெளி வராமல் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ கிஞசித்தும் கிடையாது .
இந்த தருணத்தில் திரு எஸ்வி அவர்களுக்கு மிக்க நன்றியை சொல்லியாக வேண்டும் . அவர் வெளியிட்ட பல்வேறு ஆவணங்கள் அனைத்தும் மிக அருமையானவை. ஒரு புகைப்பட கண்காட்சி நடத்தும் அளவிற்கு தகவல்கள் அவரிடம் கொட்டி கிடக்கின்றன .அவை எல்லாம் வெளி வருவதற்கு நமது திரிகள் நல்லதொரு ஊடகமாக விளங்க வேண்டும் என்பது தான் எல்லோரின் ஆசையாக இருக்க முடியும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது என்பது எனது எண்ணம்
திரு மது,திரு ராஜேஷ்,பேராசிரியர் ராஜ் ராஜ்,திரு சின்ன கண்ணன்,திரு.எஸ்எஸ்எஸ் போன்ற மூத்த பதிவாளர்கள் எத்தனையோ பாடல்களையும் அவர்களது மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு உள்ளார்கள். ஏன் நீங்களே கூட மன்மத லீலை ஹலோ மை டியர் ராங் நம்பர் பாடலை மிக சிறப்பாக ஆயுவு செய்து வேறு ஒரு பாணியில் வெளி கொண்டு வந்தீர்கள். அந்த பாடல் (ஏற்கனவே திரு கார்த்திக் அவர்களால் முதல் பாகத்தில் ஆயுவு செய்யப்பட்டு இருந்த போதும் ) உங்கள் எழுத்து திறமைக்கு ஒரு சான்று.அதே போல் சாருகேசி ராகத்தின் தொடர் பாடல்களை வெளியிட்டு வந்த போது ராகதேவன் இளையராஜாவின் சாருகேசி ராக பாடல்களை வெளியிட்டு மிக அழகாக பூர்த்தி செய்தவர் நீங்கள் தான் .சேவல் கூவி பொழுது விடிய போவது இல்லை . நான் சொல்லி உங்கள் திறமை வெளியில் தெரிய போவது இல்லை. ஏற்கனவே உங்கள் திறமை நமது திரியில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். .
எழுதியதில் ஏதாவது பகுதி உங்களை காயபடுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் .
இறுதியில் ஒரு வேண்டுகோள்
மதுரகானம் திரியில் தொடர்ந்து வருகை தந்து பாடல்களையும் மேலும் அது சம்பந்தமான ஆக்க பூர்வ விவாதங்களையும் ,மேல் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்ளும்
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
-
7th October 2014, 05:29 PM
#40
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் கீற்றுக் கொட்டகை புதிய இழைக்கு என் மனப்பூர்வமான இதயபூர்வமான வாழ்த்துக்கள். பதிவுகள் அனைத்தும் அருமை.
Bookmarks