Page 235 of 400 FirstFirst ... 135185225233234235236237245285335 ... LastLast
Results 2,341 to 2,350 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #2341
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர் records 64


    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
    Last edited by MGRRAAMAMOORTHI; 31st October 2014 at 11:02 AM. Reason: added

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2342
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    தங்களின் பல்லாண்டு வாழ்க ஜோதி திரையரங்கு அனுபவம் மற்றும் தலைவரின் நடிப்பு விமர்சனம் மிகவும் அருமையாக உள்ளது திரு செல்வகுமார் சார்
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    [ 31-10-1975 அன்று வெளியான மக்கள் திலகத்தின் ‘பல்லாண்டு வாழ்க காவியத்தை, முதல் நாளே, பரங்கிமலை ஜோதி திரையரங்கில், எங்கள் மன்ற அன்பர்களுடன் கண்டு களித்தேன்.

    ஜோதி திரையரங்கம் திறந்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுவே என்பது என் நினைவு.

    சென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற தலைவராக அப்போது விளங்கிய எங்கள் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, எங்கள் திருவொற்றியூர் பொன்மனசெம்மல் அன்பர் குழுவினை சார்ந்த தோழர்கள் அனைவரும் ஜோதி திரையரங்கை, ஆலந்தூர் எம். ஜி. ஆர். மன்றத்தினருடனும், அப்போதைய கழக அடலேறுகளுடனும் இணைந்து திரையரங்க வளாகத்தினை நன்கு அலங்கரித்தோம்.

    புதிய திரையரங்கில் மக்கள் திலகத்தின் “பல்லாண்டு வாழ்க” காவியத்தை காணப்போகும் உற்சாகத்தில் எங்கள் மன்ற நண்பர்கள் அனைவரும் திளைத்தோம்.

    எங்கள் மன்றத்தினர் சார்பில், நாங்கள் எங்கள் பங்கிற்கு, சென்னை பூக்கடையில் வாங்கிய பெரிய கூடை நிறைய உதிரிப்பூக்களை எடுத்துக்கொண்டு திரையரங்கில் பெயர் காட்டத் துவங்கியது முதல் புரட்சித்தலைவரின் இன்முகத்தை காண்பிக்கும் வரையில், திரை நோக்கி வீசிக்கொண்டே இருந்தோம்.

    புரட்சித் தலைவரின், வழக்கமான இயல்பான நடிப்பில் அருமையனா கதையமைப்பில் உருவான இப்படம் வி. சாந்தாராம் அவர்களின் “தோ ஆங்கோன் பாரா ஹாத்” இந்திப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது அறிந்த செய்தியே ! புரட்சித் தலைவர் நடித்தால் மட்டுமே, இப்படத்தின் தமிழ் உரிமையை தர முடியும் என்று வி. சாந்தாராம் அவர்கள் தெரிவித்ததாக ஒரு பரபரப்பு செய்தி அப்போது வெளியாயின. திறமையை எங்கிருந்தாலும் அதனை போற்றக்கூடிய நம் பொன்மனச்செம்மல், தி. மு. க. வில் இருந்தபோதே, 1972ம் ஆண்டு கால கட்டத்தில் வி. சாந்தாராம் அவர்களை, விழா ஒன்றின் மேடையில் அவரது காலில் விழுந்து வணங்கினார்.

    அவரது காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், உலக சினிமா வரலாற்றில் நம் இந்திய படங்களுக்கு தனி ரியாதையையும், விருதுகள் பல பெற்று தந்தவருமான சாந்தாராம் அவர்களின் திறமையை மதித்தார் நம் மக்கள் திலகம் அவர்கள். பின்னாளில் அவரது திரைப்படத்தை தழுவி தமிழில் எடுக்கும் ஒரு திரைப்படத்தில் தான் நடிப்போம் என்று கனவில் கூட கருதியிருக்க மாட்டார் நம் புரட்சித்தலைவர்.

    புரட்சித்தலைவரின் கண்களில் தென்படும் அந்த ஒளியின் சக்தியில் வில்லன்கள் மட்டுமா வீழ்ந்தனர். ரசிகர்களாகிய நாமும் அல்லவோ சேர்ந்து வீழ்ந்து விட்டோம். வேறு எந்த நடிகர்களின் கண்களுக்கு இந்த ஈர்ப்பு சக்தி கிடையாது என்பதை உறுதியாக சொல்லும் அளவுக்கு நம் பெருமை மிகுந்த வரலாற்று நாயகன் எம். ஜி. ஆர். அவர்களின் கண்களுக்கு அந்த சாந்த, கருணை ஒளி பொருந்தியிருக்கிறது.

    பேரறிஞர் அண்ணா அவர்களை, அதிக அளவில் பெருமைப்படுத்தி வெளிவந்த இந்த புதுமைக் காவியத்தில் ஆறு வில்லன்கள் வித்தியாசமான பாணியில் நடித்திருந்தனர். அந்த கொடூர வில்லன்களின் அறிமுக காட்சி பயங்கரமாக இருந்தாலும், நமது பொன்மனச்செம்மல் தனக்கே உரிய மனிதாபமான உணர்வில் அவர்களை திருத்தும் நோக்கத்தில், சிறையிலிருந்து விடுவித்து தனியாக அழைத்து செல்லும் தைரியத்தை, வெகு அழகாக வெளிப்படுத்தி தனக்கே உரிய தனி கம்பீரத்தை நிலைநாட்டும் காட்சி மிகவும் ரசிக்கத்தக்கதாய் அமைந்துள்ளது.

    பேரறிஞர் அண்ணா அவர்களின் ஒன்றாம் தம்பி, இரண்டாம் தம்பி, மூன்றாம் தம்பி என்று வரிசைப்படுத்திக் கொண்டு, வில்லன்கள் தங்களை முன்னிறுத்தி கொள்ளும் காட்சியில், தன்னடக்கத்துடன் கடைசி தம்பி என்று நம் புரட்சித்தலைவர் கூறும் காட்சி உண்மையிலேயே ஒரு நெகிழ்ச்சி ஏற்படுத்தும் காட்சியாக தென்படும்.

    என்றைக்குமே என் லட்சியம் தோற்றது கிடையாது என்று சொல்லும்பொழுதும், ஜீப்பின் வேகத்துக்கு ஈடு கொடுத்து, அந்த 57 வயதிலும் நம் எழில்வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் வேகமாக ஓடி வரும் காட்சிக்கும், விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளுக்கும், எழுந்த ரசிகர்களின் கர ஒலி அடங்க வெகு நேரமாயிற்று. தேசத்தின் வரைபடத்தை வைத்து விளக்கமளிக்கும் காட்சி மிகவும் ரசிக்கத்தக்கது.

    நாட்டுப்பற்று, மனிதாபிமானம், அறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்ட அளவற்ற பற்று, கொண்ட கொள்கை, இலட்சியம் இவை அனைத்திலும், பேரறிஞர் அண்ணா அவகர்களின் அண்ணாவின் மீது ஆணை, அண்ணாவின் மீது ஆணை என்று கூறிக்கொண்டே ஆறு வில்லன்களும் அடி வாங்கிகொண்டு திரும்பும் காட்சியும், அந்த ஆறு வில்லன்களின் ரேகைகள் அடங்கிய தாள்களை, நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் கிழித்து போடும் காட்சியிலும், மனோகர் தன் தாயையும், தன பிள்ளைகளை அடித்து விரட்டும் காட்சியிலும், ரசிகர்கள உணர்ச்சியின் எல்லைக்கு சென்று கண்கள் கலங்கி விடுவர்.

    இந்த காவியத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் இனிய பாடல்களே. குறிப்பாக “ ஒன்றே குலம் என்று பாடுவோம், ஒருவனே தேவன் என்று போற்றுவோம்” என்ற பாடலை,, மக்கள் திலகம் படப்பாடல்களை பாடும் இசைக்குழுவினர், இறைவணக்கம் பாடலாக இன்றும் முதல் பாடலாக பாடுவர்.

    சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் 1௦௦ நாட்களை வெற்றிகரமாக கடந்து, இதர நகரங்கள் பலவற்றில் 5௦ நாட்களை கடந்த, 1975ம் ஆண்டின் வெற்றிச்சித்திரம் “பல்லாண்டு வாழ்க”

    மக்கள் திலகத்தின் காவியங்களில் இடம் பெற்ற காட்சிகள் ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக எழுத ஆரம்பித்தால் ஒவ்வொரு காவியத்துக்கும் ஒரு திரியின் ஒரு பாகம் அளவுக்கு எழுதிக்கொண்டே இருக்கலாம்.

    [/b]

  4. Likes ainefal liked this post
  5. #2343
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    நமது திரியில் நண்பர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது திரு வினோத் .செல்வகுமார் ,சைலேஷ், இரவிச்சந்திரன் ,கலியபெருமாள் ,லோகநாதன் ,ரூப்,யுகேஷ்,ஜெய்ஷங்கர் , கலைவேந்தன்,பிரதீப், சுகாராம் ,முத்தையன் ,கோவிந்தராஜ்,வெங்கடரமணி,சந்திரசேகர் அனைவருக்கும் எனது நன்றி

    புதிய வரவு செல்வா cpcl அவர்களை திரியின் சார்பாக வரவேற்கிறேன்
    Last edited by MGRRAAMAMOORTHI; 31st October 2014 at 11:25 AM. Reason: added

  6. Likes ainefal liked this post
  7. #2344
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    Director P.VASU being honoured - presented Aayirathil Oruvan 175 days Momento - FB.

  8. #2345
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    பல்லாண்டு வாழ்க




    Shri. V.Shantharam was one very very ordinary Director [I am not saying so]!
    Last edited by saileshbasu; 31st October 2014 at 11:54 AM.

  9. #2346
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  10. Likes Russelldvt liked this post
  11. #2347
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

    மக்கள் திலகத்தின் ''பல்லாண்டு வாழ்க '' படத்தை சென்னை - பரங்கிமலை - ஜோதி அரங்கில் கண்டுகளித்த உங்களின் அனுபவ கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது .


    பல்லாவரம் - லக்ஷ்மி -1971 - குமரி கோட்டம்

    குரோம்பேட்டை - வெற்றி - 1974- நேற்று இன்று நாளை

    பரங்கிமலை - ஜோதி - 1975 - பல்லாண்டு வாழ்க

    மூன்று திரை அரங்கிலும் முதல் படமாக மக்கள் திலகத்தின் படங்கள் திரையிட்டது குறிப்பிடத்தக்கது .

  12. Likes ainefal liked this post
  13. #2348
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    அன்னை இந்திரா காந்தி நினைவு நாள்




    திரையில் அன்று

    ஒளிவிளக்கு படத்தில் தலைவர் தீ காயங்களோடு உயிருக்கு போராடும்பொழுது படத்தில் வரும் குருட்டு பாட்டி தன்னுயிர் கொடுத்து தலைவரை பிழைக்க வைக்கும் காட்சி நெஞ்சை உருக்குவதாக இருக்கும் .

    தலைவர் தான் கடவுளின் மறு அவதாரம் அல்லவா இதே போல் ஒரு சம்பவம் தலைவரின் வாழ்க்கையிலும் வருகிறது . ஆம் 1984 ஆம் ஆண்டு தலைவர் உடல் நலம் பாதித்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அபாய கட்டடத்தில் இருக்கும் பொழுது இந்திரா அவர்கள் தலைவரை அமெரிக்காவிற்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்கிறார் ஒரு விமானத்தை நவீன ரக மருத்துவமனையாக மாற்றி மருத்துவர்களையும் , செவில்யர்களையும் உடன் வைத்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு தலைவர் மக்களின் ஆசியோடு மறு பிறவி எடுத்து வருகிறார் ஆனால் தலைவருக்கு இதனை ஏற்பாடு செய்த இந்திரா அவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லபடுகிறார் .விசயம் தெரிந்து தலைவர் புழுவாக துடித்தார் .

    ஒளிவிளக்கு படத்தில் கூட அந்த குருட்டு பாட்டி இறந்தவுடன் தலைவர் அம்மா என்று கத்தி அழும் காட்சி தான் ஞாபகம் வருகிறது அன்னை இந்திரா அவர்கள் தலைவரை பார்த்து விட்டு சென்று மறைந்த செய்தினை கேட்டவுடன்

  14. Likes Russelldvt liked this post
  15. #2349
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  16. #2350
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •