Page 8 of 10 FirstFirst ... 678910 LastLast
Results 71 to 80 of 92

Thread: பாசுரம் பாடி வா தென்றலே!

  1. #71
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நன்றி ஆவன்னா நானா புத்தாண்டிலயாவது நல்ல பெயர் சொல்ல மாட்டீர்களா

    //பொதுவா ஆனைச்சாத்தன் = கருங் குருவி/தவிட்டுக் குருவி/வலியன் குருவி டைப்பில் ஒரு குட்டிப் பறவை! கிராமத்துல கரிச்சான் குஞ்சு// இது தான் கருங்குருவி.. பழைய பாடலில் வருவதோ..

    வாலாட்டிக் கருங்குருவி வலமிருந்து இடம் சென்றால்
    கால் நடையாய்ச் சென்றவரும் கடிகையிலே திரும்புவரே..

    //இது குலசேகர ஆழ்வாரை போன்ற பெண்ணை எழுப்புதல் வகையான பாசுரம் .இதற்க்கு முன் அமைந்த புள்ளும் சிலம்பின காண பாசுரம் பெரியாழ்வார் போன்ற பெண்ணை எழுப்புவதாக அமைந்த பாசுரம் என்றும் பெரியவர்கள் விளக்கம் சொல்லி கேட்டு இருக்கிறேன் சி கே // இது எனக்குத்தெரியாது கிருஷ்ணா ஜி.. நன்றி.. படங்கள் அழகு

    //மற்ற பாவைகளில் இருந்து ஆண்டாளின் பாவை சற்றே மாறுபட்ட ஒன்று! அவள் பாவை-யும் மாறுபட்டது! பார்-வையும் மாறுபட்டது! அது ஆன்மீகப் பாவை மட்டும் அல்ல! வாழ்க்கைப் பாவை!// மிகச் சரி

    //கீசு கிிசு - கிசு கிசு// கீசு கீசு என்ற் சத்தம் வெளியில் கேட்கும். கிசுகிசு என்பது யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் ஒலியெழுப்பாமல் பேசும் ஒலி அவற்றிலிருந்து தான் கிசுகிசு - வதந்தி வந்திருக்கும் என நினைக்கிறேன்

    நன்றிங்க்ணா.

  2. Likes aanaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #72
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாசுரம் பாடி வா தென்றலே…

    இருபத்து ஐந்து

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – பதினேழு

    01.01.15

    *
    உறக்கத்திலிருந்து விடியற்காலை எழுந்திருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

    விடிகாலை எழுகின்ற வழக்கம் உள்ளவர்களுக்குக் கவலை ஏதும் இல்லை. (யார்ப்பா அது?), தானாகவே விழிப்பு வந்து விடும். அப்படி வழக்கம் ஏதும் இல்லை எனில் என்ன செய்யலாம்? கடிகாரத்தில் நேரம் வைத்து விடிகாலை மணி அடிக்க வைக்கலாம். தொலைபேசியில் சொல்லி காலை எழுப்பும்படி சொல்லலாம். மனைவியிடமும் சொல்லலாம். “மறக்காம எழுப்புடீ இவளே! காலையில் ஒரு வேலை இருக்கு, கண்டிப்பாகப் போயாக வேண்டும். நான் எழுந்திருக்கவில்லை எனில் தலையில் தண்ணீர் ஊற்றினாலும் பரவாயில்லை” என்று சொன்னால் விடிகாலையில் கண்டிப்பாக அபிஷேகம் நடக்கும்!


    பள்ளியில் +2 படித்துக் கொண்டிருந்த சமயம்; மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு முதல்வகுப்பு தமிழ். கண்கள் தானாகவே மூடி மூடி விழுந்தன. வகுப்பாசிரியர் வரச் சற்று தாமதமாயிற்று. அருகில் இருந்த பையனிடம், “ஆசிரியர் வந்த உடன் என்னை எழுப்பு” என்று சொல்லிப் பலகையில் சாய்ந்து கொண்டேன். உடனே அவன் அவனுக்கு அருகில் இருந்தவனிடம் “ டேய், ஆசிரியர் வந்த உடன் எழுப்பு. இவனை எழுப்பணும்!” என்று சொல்லி அவன் பலகையில் சாய்ந்து கொண்டான். எனக்கு உறக்கம் போயிற்று!

    இன்றைய அம்பரமே என்கிற பாடலில் பள்ளியறையில் சயனித்திருக்கும் நந்த கோபர், யசோதை, கண்ணபிரான், பலராமன் ஆகிய நால்வரையும் கோபிகைகள் எழுப்புகிறார்கள்.

    **

    அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
    கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குல விளக்கே
    எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
    அம்பரமூஉத்தோங்கி உலகளந்த
    சம்பர் கோமானே உறங்காதெழுந்திராய்
    செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
    உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.

    *

    எல்லோருக்கும் ஆடைகளையும் தண்ணீரையும் அன்னத்தையும் அள்ளி அள்ளிக் கொடுக்கும் நந்த கோபாலா, எழுந்திராய்! மற்றவர்களுக்கெல்லாம் வேண்டுவதெல்லாம் கொடுக்கின்ற நீங்கள் எங்களுக்கு உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாமுமான கண்ணபிரானைத் தரவேண்டாமோ?

    வஞ்சிக் கொடியின் கொம்பு போன்ற, பெண்களுக்கெல்லாம் கொழுந்தைப் போன்ற யசோதையே! எங்களுக்கு ஒரு வருத்தம் உண்டானால் முதலில் வருந்துவது நீ தானன்றோ! எங்கள் குலத்திற்கு விளக்குப் போல வழி காட்டுபவளே, நீ உணர வேண்டும்!

    ஆகாயம் அளாவ உயர்ந்த திருவடிகளால் உலகை அளந்து கொண்ட தேவ தேவனே, கண்ணனே, உறங்காமல் எழுந்திருப்பாயாக! வாமன அவதாரத்தில் பிறருக்காக ஒரு யாசகனாய்ச் சென்று உதவி செய்தாயே, நாங்கள் உன்னை யாசிக்கின்ற போதும் அருள் புரியாமல் இருக்கலாமா?

    கண்ணன் பிறப்பதற்கு முன்னே பொன்னிறக்கால்கள் மின்னிடப்பிறந்த பலராமனே, நீயும் உன் தம்பி கண்ணனும் சீக்கிரமாக எழுந்திருங்கள்!

    **

  5. #73
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பாசுரம் பாடி வா தென்றலே…

    நீயும் உன் தம்பி கண்ணனும் சீக்கிரமாக எழுந்திருங்கள்!

    **
    முட்டாள் தனமான ஒரு சின்ன சந்தேகம்

    ஆமா அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது எம்மைக் காப்பாற்றுபவர் யார்?
    ஏன் இந்த ஐதீகம்?
    "அன்பே சிவம்.

  6. #74
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆமா அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது எம்மைக் காப்பாற்றுபவர் யார்?
    ஏன் இந்த ஐதீகம்?// aanaa.. நாளைக்குப் பாட்டுல ஆன்ஸர் இருக்கே

  7. #75
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    பாசுரம் பாடி வா தென்றலே…

    இருபத்து ஆறு

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – பதினெட்டு

    02.01.15
    கோகுலத்தில் ஒரு நாள் நல்ல மழை. யமுனை ஆற்றின் இக்கரையில் தம் பரிவாரங்களுடன் வந்திருந்த கோபியர்களினால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. முற்றும் நனைந்து விட்டார்கள். என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துக் கண்ணனைப் பிரார்த்தித்த வண்ணம் நின்றிருந்தார்கள்.

    அப்போது வியாச முனிவர் அங்கு வந்தார். கோபியர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவிப்பதைப் பார்த்தார்.

    “கோபியரே, எனக்குப் பசிக்கிறது. எனக்கு ருசிகரமாய் அன்னம் சமைத்துக் கொடுத்தீர்களானால் உண்டு விட்டு உங்களுக்கு ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்கிறேன்.” என்றார்.

    கோபியரும் ஒரு நிழலிடத்தில் நெருப்பு மூட்டி சமையல் செய்து அவருக்குக் கொடுக்க, நன்றாக வாழை இலையில் வயிறு நிரம்ப சாப்பிட்டார் வியாசர். பின் யமுனையாற்றின் கரையில் நின்று “ ஏ யமுனையே, நான் உண்ணாமல் உறங்காமல் இறைவனையே தியானம் செய்வது உண்மை என்றால் எங்களுக்கு வழி விடு!” என்று கேட்டார். யமுனையும் வழி விட்டது!

    கோபியர்கள் ஆச்சர்யம் கொண்டு எதுவும் பேசாமல் யமுனை விட்ட வழியில் நடந்து ஆற்றைக் கடந்து அக்கரைக்கு வந்தார்கள். வந்தவுடன் வியாசரிடம்,” ஸ்வாமி. பெரியவர்கள் என்றால் மட்டும் பொய் சொல்லலாம் போலிருக்கிறது” என்றார்கள். வியாஸர்., “ நான் என்ன பொய் சொன்னேன்?”

    “இப்பொழுது யமுனையிடம் சொன்னது என்னவாம்? நன்றாக உண்டு விட்டு, நான் உண்ணாமல் இருக்கிறேன் என்று சொன்னீர்களே இது நியாயமா?”

    “அடி பெண்களே, நான் எங்கே உண்டேன்? என்னுள் அரூபமாக மறைந்திருக்கின்ற “அந்தர்யாமி” எனப்படும் இறையன்றோ உண்டான்!” என்றாராம் வியாஸர். பகவானைத் தனக்குள்ளே வைத்திருக்கிறாராம் அவர். அவர் செய்வது எல்லாம் அவனுக்கே போய்ச் சேர்கிறது என்பது கருத்து.

    இன்றைய பாடலில் ஆண்டாளும் கோபியர்களும் நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள். நப்பின்னையும் ராதையும் ஒன்று எனச் சொல்பவரும் உண்டு. நப்பின்னை ராதை அம்சம் என்று சொல்பவரும் உண்டு. கோகுலத்தில் ராதை. ஸ்ரீவில்லிப் புத்தூரில் நப்பின்னை. – கண்ணனுடைய மனைவி,

    கண்ணனையே நேசித்து அவனையே தன்னுள் கொள்ளும் பாக்கியம் பெற்றவள், பல ராமனை எழுப்பிய பிறகும் கண்ணன் எழுந்திராமல் உறங்குவதால் நப்பின்னையையே புருஷகாரமாகப் பற்றி அவளை எழுப்புகிறார்கள்.

    **

    உந்து மதகளிறனோடாத் தோள் வலியன்
    நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
    கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
    வந்தெங்கும் கோழி யழைத்தனகாண் மாதவிப்
    பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
    பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
    செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

    **

    “எப்படிப் பற்ற வலிமை பெற்றவன் நந்த கோபன்?

    மதங்கொண்டு வருகின்ற யானையை உந்தித் தள்ளும் அளவுக்கு வல்லவன்! பகைவரைப் போரில் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் அளவுக்கு மிக்க தோள் வலிமை பெற்றவன்!

    அப்படிப்பட்ட நந்த கோபனின் மருமகளே, நப்பின்னையே, உன் அழகிய கருங்கூந்தலில் எழுகின்ற நறுமணம் நீ இருப்பதைக் காட்டிக் கொடுத்து விடுகி’றதே. உள்ளே வெள்ளமெனப் பரவியிருக்கிற அந்த மணத்தை நாங்களும் அனுபவிக்கும் படி கதவைத் திறந்து விடுவோமாக! எங்கும் கோழிகள் எழுந்து எங்களைப் போலவே உன் வாசலில் வந்து நின்று கூவி அழைக்கின்றனவே! உன் காதில் விழவில்லையா? பொழுது விடிந்ததற்கு இந்த அடையாளங்கள் போதாதா? குயிலினங்கள் தங்களுக்கு மிகவும் பிடித்தமான மாதவிக் கொடியின் பந்தல்களின் மேல் படுத்திருந்தும் விடிந்ததற்கு அடையாளமாகக் கூவுகின்றது உன் காதில் விழவில்லையா? இனியும் நீ உறங்கலாமா?

    கண்ணனுடன் சுகமாய் நிறைவாய் விளையாடிய பந்து விளையாட்டில் வெற்றி கொண்டு, ஒரு கையில் பந்தையும், மறு கையில் கண்ணனையும் அணைத்துக் கொண்டு படுத்திருப்பவளே! நீ அவனுடன் ஊடல் கொள்ளும் போது உன்னுடைய கணவனான கண்ணனின் தோல்வியைப் பற்றிப் பாடவே நாங்கள் வந்தோம்! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற கையால், அழகிய வளைகள் ஒலிக்க வந்து, உன் காரியம் செய்வதாக மகிழ்ந்து நீயே கதவைத் திறக்க வேண்டும்.

    **

    எம்பெருமானைப் பற்றும் போது பிராட்டியை முன்னிட்டுக் கொண்டே பற்ற வேண்டும் என்ற முக்கியமான கோட்பாடு இந்தப் பாடலில் உணர்த்தப் படுகிறது.

    ஸ்ரீ ராமானுஜரின் ஆச்சார்யர் பெரிய நம்பிகள், ஒரு நாள் ஸ்ரீ ராமானுஜர் திருப்பாவையைப் பாடிக் கொண்டு அவரது திரு மாளிகை வாயிலில் நின்ற போது பெரிய நம்பிகளின் மகள் அத்துழாய் கீரார் என்னும் நங்கை தனது கைவளைகள் கலகலக்க வந்து கதவைத் திறக்க ஸ்ரீ ராமானுஜரின் கண்களுக்கு அவள் நப்பின்னைப் பிராட்டியாகவே தென்பட்டாளாம், அவர் அப்படியே விழுந்து அவளை வணங்கினாராம். எனில், ராமானுஜருக்கு மிகவும் உகந்த பாசுரம் இது எனக் கூறப் படுகிறது.

    **

  8. Likes aanaa liked this post
  9. #76
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    பாசுரம் பாடி வா தென்றலே…

    இருபத்து ஆறு

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – பதினெட்டு

    02.01.15

    கோகுலத்தில் ஒரு நாள் நல்ல மழை. யமுனை ஆற்றின் இக்கரையில் தம் பரிவாரங்களுடன் வந்திருந்த கோபியர்களினால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. முற்றும் நனைந்து விட்டார்கள். என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துக் கண்ணனைப் பிரார்த்தித்த வண்ணம் நின்றிருந்தார்கள்.

    அப்போது வியாச முனிவர் அங்கு வந்தார். கோபியர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவிப்பதைப் பார்த்தார்.

    “கோபியரே, எனக்குப் பசிக்கிறது. எனக்கு ருசிகரமாய் அன்னம் சமைத்துக் கொடுத்தீர்களானால் உண்டு விட்டு உங்களுக்கு ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்கிறேன்.” என்றார்.

    கோபியரும் ஒரு நிழலிடத்தில் நெருப்பு மூட்டி சமையல் செய்து அவருக்குக் கொடுக்க, நன்றாக வாழை இலையில் வயிறு நிரம்ப சாப்பிட்டார் வியாசர். பின் யமுனையாற்றின் கரையில் நின்று “ ஏ யமுனையே, நான் உண்ணாமல் உறங்காமல் இறைவனையே தியானம் செய்வது உண்மை என்றால் எங்களுக்கு வழி விடு!” என்று கேட்டார். யமுனையும் வழி விட்டது!

    கோபியர்கள் ஆச்சர்யம் கொண்டு எதுவும் பேசாமல் யமுனை விட்ட வழியில் நடந்து ஆற்றைக் கடந்து அக்கரைக்கு வந்தார்கள். வந்தவுடன் வியாசரிடம்,” ஸ்வாமி. பெரியவர்கள் என்றால் மட்டும் பொய் சொல்லலாம் போலிருக்கிறது” என்றார்கள். வியாஸர்., “ நான் என்ன பொய் சொன்னேன்?”

    “இப்பொழுது யமுனையிடம் சொன்னது என்னவாம்? நன்றாக உண்டு விட்டு, நான் உண்ணாமல் இருக்கிறேன் என்று சொன்னீர்களே இது நியாயமா?”

    “அடி பெண்களே, நான் எங்கே உண்டேன்? என்னுள் அரூபமாக மறைந்திருக்கின்ற “அந்தர்யாமி” எனப்படும் இறையன்றோ உண்டான்!” என்றாராம் வியாஸர். பகவானைத் தனக்குள்ளே வைத்திருக்கிறாராம் அவர். அவர் செய்வது எல்லாம் அவனுக்கே போய்ச் சேர்கிறது என்பது கருத்து.

    இன்றைய பாடலில் ஆண்டாளும் கோபியர்களும் நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள். நப்பின்னையும் ராதையும் ஒன்று எனச் சொல்பவரும் உண்டு. நப்பின்னை ராதை அம்சம் என்று சொல்பவரும் உண்டு. கோகுலத்தில் ராதை. ஸ்ரீவில்லிப் புத்தூரில் நப்பின்னை. – கண்ணனுடைய மனைவி,

    கண்ணனையே நேசித்து அவனையே தன்னுள் கொள்ளும் பாக்கியம் பெற்றவள், பல ராமனை எழுப்பிய பிறகும் கண்ணன் எழுந்திராமல் உறங்குவதால் நப்பின்னையையே புருஷகாரமாகப் பற்றி அவளை எழுப்புகிறார்கள்.

    **

    உந்து மதகளிறனோடாத் தோள் வலியன்
    நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
    கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
    வந்தெங்கும் கோழி யழைத்தனகாண் மாதவிப்
    பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
    பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
    செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

    **

    “எப்படிப் பற்ற வலிமை பெற்றவன் நந்த கோபன்?

    மதங்கொண்டு வருகின்ற யானையை உந்தித் தள்ளும் அளவுக்கு வல்லவன்! பகைவரைப் போரில் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் அளவுக்கு மிக்க தோள் வலிமை பெற்றவன்!

    அப்படிப்பட்ட நந்த கோபனின் மருமகளே, நப்பின்னையே, உன் அழகிய கருங்கூந்தலில் எழுகின்ற நறுமணம் நீ இருப்பதைக் காட்டிக் கொடுத்து விடுகி’றதே. உள்ளே வெள்ளமெனப் பரவியிருக்கிற அந்த மணத்தை நாங்களும் அனுபவிக்கும் படி கதவைத் திறந்து விடுவோமாக! எங்கும் கோழிகள் எழுந்து எங்களைப் போலவே உன் வாசலில் வந்து நின்று கூவி அழைக்கின்றனவே! உன் காதில் விழவில்லையா? பொழுது விடிந்ததற்கு இந்த அடையாளங்கள் போதாதா? குயிலினங்கள் தங்களுக்கு மிகவும் பிடித்தமான மாதவிக் கொடியின் பந்தல்களின் மேல் படுத்திருந்தும் விடிந்ததற்கு அடையாளமாகக் கூவுகின்றது உன் காதில் விழவில்லையா? இனியும் நீ உறங்கலாமா?

    கண்ணனுடன் சுகமாய் நிறைவாய் விளையாடிய பந்து விளையாட்டில் வெற்றி கொண்டு, ஒரு கையில் பந்தையும், மறு கையில் கண்ணனையும் அணைத்துக் கொண்டு படுத்திருப்பவளே! நீ அவனுடன் ஊடல் கொள்ளும் போது உன்னுடைய கணவனான கண்ணனின் தோல்வியைப் பற்றிப் பாடவே நாங்கள் வந்தோம்! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற கையால், அழகிய வளைகள் ஒலிக்க வந்து, உன் காரியம் செய்வதாக மகிழ்ந்து நீயே கதவைத் திறக்க வேண்டும்.

    **

    எம்பெருமானைப் பற்றும் போது பிராட்டியை முன்னிட்டுக் கொண்டே பற்ற வேண்டும் என்ற முக்கியமான கோட்பாடு இந்தப் பாடலில் உணர்த்தப் படுகிறது.

    ஸ்ரீ ராமானுஜரின் ஆச்சார்யர் பெரிய நம்பிகள், ஒரு நாள் ஸ்ரீ ராமானுஜர் திருப்பாவையைப் பாடிக் கொண்டு அவரது திரு மாளிகை வாயிலில் நின்ற போது பெரிய நம்பிகளின் மகள் அத்துழாய் கீரார் என்னும் நங்கை தனது கைவளைகள் கலகலக்க வந்து கதவைத் திறக்க ஸ்ரீ ராமானுஜரின் கண்களுக்கு அவள் நப்பின்னைப் பிராட்டியாகவே தென்பட்டாளாம், அவர் அப்படியே விழுந்து அவளை வணங்கினாராம். எனில், ராமானுஜருக்கு மிகவும் உகந்த பாசுரம் இது எனக் கூறப் படுகிறது.

    **

  10. Likes aanaa liked this post
  11. #77
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கந்தம் கமழும் குழலீ

    நண்பர் சி கே

    இன்று காலை இந்த வரிக்கு திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் ஓர் விளக்கம் கூறினார் . 'பெண்களுக்கு இயற்கையில் மனம் உண்டா ' என்று பாண்டிய நாட்டில் நக்கீரன் தருமி சிவபெருமான் இடையே நடைபெற்ற திருவிளையாடல் பற்றி குறிப்பிட்டு பார்வதி தேவி லக்ஷ்மியிடம் மனம் வருந்தி முறையிட அந்த குறை போக்க லக்ஷ்மி தேவியே ஆண்டாளாக அதே பாண்டிய நாட்டில் (ஸ்ரீ வில்லி புத்தூர்) அவதரித்து நக்கீரனின் கூற்றை மறுக்கவே இந்த வரியை எழுதியிருப்பதாக தோன்றுகிறது. பெண்களுக்கு கூந்தலில் இயற்கையிலே மணம் உண்டு .(It is natural fragrance)

    "வாச நறுகுழல் ஆச்சியர்" என்ற வரியின் மூலம் பூலோக பெண்களுக்கும் கூந்தலில் மணம் உண்டு ,"கந்தம் கமழும் குழலி" என்பதன் மூலம் நப்பின்னைக்கும் (அதாவது தேவலோக பெண்களுக்கும் ) கூந்தலில் மணம் உண்டு என்றும் கூறினார். மேலும் நீங்கள் சொன்னது போல் திருப்பாவை ஜீயர் ஸ்ரீ ராமானுஜர் இந்த பாசுரத்தை மனனம் செய்து கொண்டே அவரது குரு பெரியநம்பி இல்லத்தின் கதவை தட்ட அவரது மகள் அத்துழாய் (என்ன ஒரு பெயர்) கதவை திறக்க அதனால் ஸ்ரீ ராமானுஜர் மூர்ச்சை அடைந்ததாகவும் அது கண்டு அத்துழாய் திகைப்புற்று தனது தந்தையிடம் வினவ அதற்கு குரு பெரியநம்பி எனது குரு ஸ்ரீ ஆளவந்தார் அவர்களே மூர்ச்சை அடைந்த போது எனது சிஷ்யர் ஸ்ரீ ராமானுஜர் மூர்ச்சை அடைவதில் என்ன ஆச்சர்யம் ! என்னே எம்பெருமானின் திருவிளையாடல் என்று விளக்கமும் சொன்னார்

    உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபாலன்

    என்பதற்கு . எவ்வளவு பெரிய பொறுப்புகள் வந்தாலும் அதை கண்டு ஆஞ்சாது அதை எதிர்த்து என்று தன தோளிலே அதை தாங்கும் நந்தகோபாலன் என்று management principle ஒன்று இந்த பாசுரத்தின் ஆரம்பத்தில் மிக இயல்பாக சொல்லப்பட்டு இருக்கிறது என்று ஒரு விளக்கம் படித்தேன்

    ஆன்மிக அனுபவத்தில் திளைக்க வைத்ததற்கு மிக்க நன்றி

    gkrishna

  12. Thanks chinnakkannan thanked for this post
    Likes aanaa liked this post
  13. #78
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    பாசுரம் பாடி வா தென்றலே…

    இருபத்து ஏழு

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – பத்தொன்பது

    03.01.15

    படுக்கை அறை என்பது எப்படி இருக்க வேண்டும்?

    காலை முதல் மாலை வரை ஒரு மனிதன் வேலை செய்து உடல் களைத்து வீட்டிற்கு வந்தால் இரவு உணவை முடித்துக் கொண்டதுமே கண்கள் செருக ஆரம்பிக்கும். அந்தச் சமயத்தில் அழகான கட்டில், பஞ்சணையில் படுத்து ஒரு பக்கம் மனைவி, மறுபக்கம் குழந்தைகள் எனப் படுத்துக் கொண்டு மெல்லிய விளக்கின் ஒளிபடர்ந்திருக்க உறங்குவது சிற்றின்பத்திலேயே பெரிய சுகம் என்பர்.

    பாரதி தாசன் தனது குடும்ப விளக்கில்,

    “சரக்கொன்றை தொங்கவிட்ட பந்தலின் கீழ்த்
    தனிச்சிங்கக் கால் நான்கு தாங்கும் கட்டில்
    இருக்கின்ற மெத்தை தலையணைகள் தட்டி
    இருவீதி மணமடிக்கும் சந்தனத்தைக்
    கரைக்கின்ற கலையத்துட் கரைத்துத் தென்றல்… “

    என்று தொடர்கிறார்.

    சரி, உடல் களைத்திருக்கும் போது படுக்கையறையில் உறங்கலாம். மனது களைத்தால் என்ன செய்ய?

    அதற்காகத் தான் எப்போதும் கோவிலுக்குப் போக வேண்டும் என்பார்கள் பெரியவர்கள்.

    எதற்காக க் கோவிலுக்குச் செல்ல வேண்டும்? ஒவ்வொரு மனத்துள்ளும் இறைவன் இருக்கின்றானே! பின் ஏன் குளித்து நெற்றியில் அடையாளமிட்டு பயபக்தியுடன் செல்ல வேண்டும்? எனக் கேட்கலாம்.

    நமக்கு நல்லது கொடு என்று கேட்பதற்குத் தினம் சென்று தொழுது வந்தால், அந்த நல்லது நமக்கு நடக்கும் போது அது நம்மால்கிடைத்தது என்ற கர்வம் இல்லாமல் இருக்கும். கெட்டது நடந்தால், தினம் கோவில் செல்லும் பழக்கத்தில் அன்றும் சென்று “ இறையே ஏன் சோதிக்கிறாய்? எப்படி இதிலிருந்து மீள்வேன்?” என அழுகை வரும். அவ்வாறு மனம் விட்டு நாம் துக்கப் படுவதால் மனதில் அமைதி வந்து எந்தத் துன்பத்தையும் தாங்கிக் கொள்வோம். இதுவும் கடவுள் கொடுத்தது என்று தெம்பு வரும். அப்படி மனது களைத்துப் படுக்கிற இடம் கோவில்! (பாலகுமாரன் ஒரு நாவலில் சொன்னதைச் சற்று மாற்றியிருக்கிறேன்)

    இன்றைய பாடலில் சயன அறை வரை செல்லும் கோபிகா ரத்தினங்கள் – கண்ணனும் நப்பின்னையும் படுக்கை அறையில் சயனித்து இருக்கிறார்கள். ஒரு மெல்லிய திரை சுற்றிலும் மூடியிருக்க அவர்கள் துயில்வது நிழற்படமாகத் தெரிகிறது கோபியருக்கு – இருவரையும் எழுப்புகிறார்கள்.

    **

    குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டிலின் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தில் மேலேறிக்
    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
    வத்துக் கிடத மலர்மார்பா வாய் திறவாய்
    மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
    எத்தனையேனும் பிரிவாற்ற கில்லாயால்
    தத்துவமென்று தகவேலோ ரெம்பாவாய்.

    **

    உயரமான குத்து விளக்கில் தீபங்கள் மெல்லிய ஒளியைத் தந்து கொண்டிருக்கின்றன. அங்கே யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கட்டிலின் மேல் கொத்துக் கொத்தான பூக்களைச் சூடிய நப்பின்னையின் அழகிய கூந்தல் கலைந்து, பூக்கள் சிதறிக் கிடக்க அவளது மார்பகங்களில் நெஞ்சம் பதியுமாறு அணைத்துப் படுத்திருக்கும் கண்ணனே! வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?

    அழகாகக் கண்களில் மை தீட்டியிருப்பவளே! நப்பின்னைப் பிராட்டியே, நீ உனது கண்ணனை எழுந்திருக்கவே விட மாட்டாயா? எங்களுடன் நீ கண்ணனை அனுப்பினாலும் ஒன்றும் ஆபத்து வந்து விடாது! எள் கூட நுழையா வண்ணம் அவனை இறுக அணைத்தவாறு படுத்திருக்கின்றாயே, அவனது பிரிவை உன்னால் பொறுக்க முடியாதோ?

    ஆனால் நீ அப்படிப் பட்டவள் அல்லவே, உனக்குச் சுய நலம் என்பது எதுவுமே கிடையாதே, இது உன்னுடைய தத்துவம் தானே? எனில் அவனைத் தழுவுவதை விட்டு எழுந்திரு, அவனையும் எழுப்பு!”

    **

  14. Likes aanaa liked this post
  15. #79
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கிருஷ்ணாஜி.. நன்றி உங்களதுபின்னூட்டத்திற்கு+ அழகிய படங்களுக்கும். நேற்று தமிழ் ஃபாண்ட் கோவித்துக் கொண்டதால் உடன் இட முடியவில்லை..!

  16. #80
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    பாசுரம் பாடி வா தென்றலே…

    இருபத்து எட்டு

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – இருபது

    04.01.15

    கருணை என்பது என்ன?

    தெருவில் பசியால் சோர்ந்து போயிருக்கும் ஒரு நாயைப் பார்க்கிறோம். பாவமாய் இருக்கிறது. வீட்டினுள் சென்று ரொட்டி எடுத்து வந்து அதற்குப் போடுகிறோம். அதற்கு ப் பெயர் கருணை! அது அதைச் சாப்பிட்டு விட்டு வாலை ஆட்டினால், அதற்குப் பெயர் பாசம்! மறு நாளும் நம் வீட்டின் வாசலில் வந்து நிற்கும். ரொட்டி போடவில்லை எனில் பற்களைக் காட்டி “வள்” என்று குலைக்கும். அதற்குப் பெயர் கோபம். ஒரு பிச்சைக்காரனைப் பார்க்கிறோம். அவன் மீது பரிதாபப் பட்டு பத்து பைசா போட்டுவிட்டு அவன் திட்டுவதற்குள் ஓடி வந்து விடுகிறோம்! இதற்குப் பெயர் பயம் கலந்த கருணை!

    கிழங்கில் கூட கருணை இருக்கிறது. ( மசியல் செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும்!) மனிதனிடமும் அவ்வப்போது கருணை தென்பட்டுக் கொண்டு தானிருக்கிறது.- பூகம்ப நிதி, வெள்ள நிவாரண நிதிக்காகக் குவியும் செல்வங்களைப்பார்க்கும் போது.

    இன்றைய பாடலிலும் மீண்டும்கருணைக் கடலான கண்ணனையும் நப்பின்னையையும் சேர்த்து எழுப்புகிறார்கள்.

    **

    முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
    கப்பம் தவிக்கும் கலியே துயிலெழாய்
    செப்பமுடையாய் திறனுடையாய் செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
    செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்கும்
    நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
    உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
    இப்போதே எம்மை நீ ராட்டேலோ ரெம்பாவாய்

    *

    முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் துன்பம் வருவதற்கு முன்னமேயே சென்று அவர்களது நடுக்கத்தைப் போக்கும் அருளும், பலமும் பெற்றவனே, கண்ணா! உனது பலமே எங்கள் பலம்! அது இருப்பது எங்களைக் காப்பதற்குத் தானே!

    அடியவர்கள் விஷயத்தில் நேர்மை உடையவன் என உனைச் சொல்வார்கள். உனது நேர்மை மிக நன்றாக இருக்கிறது. எங்களை வரும்படிச் சொல்லிவிட்டுப் பேசாமல் படுத்துக் கிடப்பது தான் உனது நேர்மையோ?

    உன்னுடைய பலத்தை உன்னையே எண்ணி நிற்கும் அபலைகளான எங்களிடமா காட்டுவது? எதிரிகளை பயம் என்னும் நெருப்பால் கொளுத்துபவனே. இப்போது எங்களுக்காக விரோதிகல் மீது அம்பு மற்றும் ஆயுதங்கள் எறிந்து எதுவும் செய்ய வேண்டாம், நீ துயில் எழுகின்ற காட்சியைக் காட்டினாலே எங்களுக்குப் போதும்!

    ஸ்வர்ண கலசங்கள் போன்ற மார்புகளையும், சிவந்த வாயையும் நுண்ணிய இடையையும் கொண்ட நப்பின்னைப் பிராட்டியே, கண்ணனுடைய கோபத்தை அகற்றி எங்களை அவனது திருவடிகளிலே சேர்ப்பதற்கு அன்றோ உனது அழகுக்கே இலக்கணம் வைத்த அழகு பயன்பட வேண்டும்? இந்தக் கிருஷ்ணாவதாரத்தில் திருமகளின் இடத்தில் இருந்து எங்களைக் கண்ணனிடம் சேர்க்க வேண்டியது உனது பொறுப்பு அல்லவா? பெண்ணாய்ப் பிறந்தவள் நீ! நீ எங்களது வருத்தத்தை உணர்ந்து எழுந்து எங்களை உயிர் தரிக்கச் செய்வாயாக!

    உனக்குத் தெரியுமா, கண்ணனுக்கு எங்களிடம் கண்ணாடி காண்பிப்பது மிகப் பிடிக்கும். அதைப்பார்த்து நாங்கள் தலை வாரிக் கொள்வோம். அவ்வப்போது பனை விசிறியால் விசிறி மென்காற்றை எங்களது உடலில் வருட வைத்துச் சிலிர்க்க வைப்பான்! எனில், நோன்புக்குத் தேவையான இந்தப் பொருட்களையும்கொடுத்து, உனக்கு வசப்பட்டிருக்கும் கண்ணனையும் தந்து உங்கள் இருவருடைய கருணை வெள்ளத்தால் எங்களை நீராட்டுவாயாக”


    **

    உட்கருத்து: ஒருகுழந்தை எப்படித் தாய் மூலமாகவே தகப்பனை அணுகுகிறதோ – அது போலப்பிராட்டியை முன்னிட்டுக் கொண்டே எம்பெருமானைப் பற்ற வேண்டும் என்பது இந்தப்பாடலில் உணர்த்தப் படுகிறது..

    **

  17. Likes aanaa liked this post
Page 8 of 10 FirstFirst ... 678910 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •