Page 5 of 10 FirstFirst ... 34567 ... LastLast
Results 41 to 50 of 92

Thread: பாசுரம் பாடி வா தென்றலே!

  1. #41
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாசுரம் பாடி வா தென்றலே…

    ஒன்பது – c)

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)

    *
    முன்னுரை – தொடர்ச்சி

    கிழியறுத்தான் வளர்த்த கிளி

    ***

    “ நான் அழகாய் இருக்கிறேனா”

    பதில் மெளனம்

    “சரி, இந்தப் பட்டுப் புடவையில் எப்படி இருக்கிறேன்” மறுபடியும் மெளனமே பதில்.

    “சரி, இப்பொழுதாவது சொல். இந்த நெற்றிச் சுட்டி, காதுகளில் கம்மல்கள், மூக்குத்தி, ஒட்டியாணம், கழுத்தில் காறை எனும் நகை, காற்கொலுசுகள் அணிந்து, கழுத்திலும் கொண்டையிலும் அணிந்திருக்கும் மலர்மாலையுடன் நான் எப்படி இருக்கிறேன்? அவரது அழகிற்கு இணையாக இருக்கிறேனா?” – கேள்வி கேட்டவள் கோதை. கேட்டது தன் எதிரே இருந்த கண்ணாடியை.

    நிலைக்கண்ணாடி என்ன சொல்லும். ஏற்கெனவே எதிரில் நின்றவளின் அழகில் திகைத்து “ஏய், இன்னும் சற்று நேரம் என் முன்னேயே இரேன். உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேனே” என மனதிற்குள் வேண்டிக்கொண்டு “இன்னும் சற்று நேரத்தில் அவள் அகன்று விடுவாளே” என நினைத்ததால் பெருமூச்சும் விட்டுக் கொண்டு நின்றிருந்தது.

    “என்ன காரியம் செய்தாய் அம்மா?” பதற்றக் குரல் பின்னால். திரும்பினாள் கோதை. விஷ்ணு சித்தர் என்றும் கிழியறுத்தான் என்றும் அழைக்கப் பட்ட பெரியாழ்வார் பதற்றமாய் நின்றிருந்தார்.

    யார் இந்தக் கோதை? யார் இந்தப் பெரியாழ்வார்?

    மஹா விஷ்ணுவிற்கு மூன்று தேவியர்கள் என்கிறது உப நிஷத். – ஸம்வதி, ஸந்தினி, ஹலாதினி.

    ஸம்வதி – ஞான சக்தி – மஹாலஷ்மி

    ஸந்தினி – க்ரியா சக்தி – பூமிப் பிராட்டி

    ஹலாதினி – ஆனந்த சக்தி – ராதை

    கலியுகம் பிறந்த போது விஷ்ணு லஷ்மியைக் கேட்டார். “ நீ ஏன் இப்பொழுது பூலோகத்தில் அவதரித்து நல்லது செய்யக் கூடாது?”

    லஷ்மி சொன்னாள், “போப்பா. உங்களுக்கு வேறு வேலை இல்லை. ஆசையாய் பூமிக்கு வா என்று கூப்பிடுவீர்கள். வந்தால் வா காட்டுக்கு என்பீர்கள். குளிப்பதற்கு நீரைத்தராமல் தீயைத் தருவீர்கள். நான் வரவிலலை இந்த ஆட்டத்திற்கு!”.

    பிறகு விஷ்ணு பூமிதேவியிடம் கேட்டுஒப்புதல் வாங்கிவிட பூமிதேவியின் அம்சமாய் ஆடி மாதம் வளர்பிறையில் பூர நட்சத்திரத்தில் தோன்றியவள் தான் ஆண்டாள் என அறியப் பட்ட கோதை. (கோதாவரி ஆற்றின் குணங்கள் கொண்டவள் என்பதால் கோதை எனச் சொல்பவர்கள் உண்டு.

    கோதையைப் பற்றியும் அவளை வளர்த்த பெரியாழ்வார் பற்றியும் அவள் எழுதிய திருப்பாவையைப் படித்துக் கொண்டே பார்ப்போம்.

    மாடம்கொள் மேல் நிலைக் கோபுரமும் உயர்
    …மாமதிலும் திரு மாளிகையும்
    நீடும்பொன் ஆலயம் மேவியகோதையை
    … நேர்ந்து கும்மி அடிப்பம் அடி! (புலவர் அழகிய சொக்க நாத பிள்ளையின் கும்மிப் பாட்டிலிருந்து)

    (தொடரும்)

  2. Likes aanaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #42
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாசுரம் பாடி வா தென்றலே…

    ஒன்பது (d)

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)

    *

    திருப்பாவைப் பாசுரம் – ஒன்று.

    ****

    கோகுலத்தில் ஒரு நாள் கூட்டங்கூடி கோபியர்கள் பேசிக் கொண்டிருந்தனர். “அவன் அழகன், கருமை நிறத்தோன். குறும்புக்காரன். நம் எல்லார் மனங்களையும் கவர்ந்தவன் அவன். அந்தக் கண்ணன். ஓய்வுமொழிதலும் இல்லாமல் அவனது உறவையே வெறுமனே நினைத்து ஏங்கியிருந்தால் என்ன பிரயோஜனம். அவனை அடைவது எப்படி?.”. அப்போது அங்கு வந்த சாண்டில்ய மகரிஷி “ என்ன விஷயம் கோபிகாள்?” எனக் கேட்டு விஷயம் அறிந்தார்.

    “மாயக் கண்ணனை அடைய வேண்டுமா கன்னியரே. கேளுங்கள்..தேவர்களின் வைகறைப் பொழுதான மார்கழி மதத்தில் அதிகாலை எழுந்து நீராடி அவனைத்தொழுது பாவை நோன்பிருங்கள். அவனது அருள் பெறலாம்” எனச் சொன்னார். (பூலோகத்தில் ஒருவருடம் என்றால், தேவ லோகத்தில் ஒரு நாள். – அதிலும் தேவர்களின் விடியற்காலை (வைகறை) மார்கழியில் துவங்குகிறது)

    ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை இவ்வாறு தான் ஆரம்பிக்கிறது. ஆண்டாள் ஸ்ரீ வில்லிப் புத்தூரை ஆயர்பாடியாகவும் அங்கே இருக்கும் பெரிய கோவிலைச் சுற்றியுள்ள தோட்டத்தை பிருந்தாவனமாகவும் கோவில் எம்பெருமான் வடபத்ர சாயியைக் கண்ணனாகவும் தன் தோழியரைக் கோபியராகவும் வைத்துமார்க்ழி மாதம் பாவை நோன்பு நூற்க அதிகாலை வேளையில் அழைக்கிறாள்..


    *

    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்
    ..நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
    சீர்மலும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
    ..கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
    ஏரார்ந்தக் கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
    ..கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
    நாராயணனே நமக்கே பறை தருவான்
    ..பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்..

    *

    ” இது மார்கழி மாதம். இந்த நாள் மனதெல்லாம் நிறைந்த நன்னாள். இந்த நாளில் நாம் விடியற்காலை எழுந்து யமுனை நதிக்கரையில் நீராடச் செல்வோம்.

    ஓ. அழகிய நீலமேக சியாமளன் விளையாடல் நடத்தும் பெருமை கொண்ட, ஆயர்பாடியைச் சேர்ந்த – செல்வச் செழிப்பில் மூழ்கியிருக்கும் தோழியரே,

    மிகக் கூர்மையான வேலை வைத்துக் கொண்டு நந்தகோபனால் காக்கப்படுபவன், நீண்டு அழகாய் விரிந்த, **பாக்கியம் பெற்ற கண்களை உடைய யசோதையின் இளைய மகன், அவனுக்கோ கருமை நிற மேனி, கண்களோ சிவந்த நிறம். அவனது முகம் நல்லவர்களுக்குச் சந்திரனைப் போலக் குளுமையாகவும், தீயவர்களுக்குச் சூரியனைப் போலச் சுட்டெரிப்பதாகவும் இருக்கும். அவன் தான் கண்ணன் என்னும் நாராயணன். அவனே அவனை எண்ணி நாம் நோற்கும் நோன்பிற்குத் தகுந்த பரிசுகள் கொடுப்பான். உலகம் அவனைப் புகழுதற்கும், நாமும் உய்யவும் அவன் புகழைப் பாடிக் கொண்டே இருப்போம். வாருங்கள்.”

    ***

    ’* ஆண்டாள் பாவை நோன்பைத் துவக்கிய போது – அந்த மார்கழி முதல் நாளன்று பெளர்ணமி. எனில் “மதி நிறைந்த” என்கிறாள்.

    ** யசோதையின் கண்கள் குழந்தை முதலே கண்ணனைப் பார்த்து மகிழ்ந்திருந்தன. எனவே “பாக்கியம் பெற்ற கண்களைஉடையவள்” என்கிறாள்.

    (தொடரும்)

  5. Likes aanaa liked this post
  6. #43
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    .தினம் ஒருகவிதை என்ற மின்னஞ்சற்குழுவில்..

    .
    ஹரி கிருஸ்ணன் என்பவர்....
    "அன்பே சிவம்.

  7. #44
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாசுரம் பாடி வா தென்றலே…

    பத்து

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)

    *

    திருப்பாவைப் பாசுரம் – இரண்டு

    உலகத்தில் ஆதாயம் இல்லாத காரியங்கள் இருக்கிறதா என்ன?

    ஒரு நாள் குருவிடம் சீடன் கேட்டான்; குருவே எனக்கு நீங்கள் இவ்வளவு கற்றுத் தருகிறீர்களே. இதனால் உங்களுக்கு ஏதாவதுலாபம் உண்டா?

    குரு சொன்னார் “ நீ என்னைக் கேள்விகேட்குமளவுக்குக் கற்றுத் தெளிந்திருக்கிறாயே. இதை நினைத்து நான் அடையும் பெருமிதம் தான் எனக்கு மிகப் பெரிய லாபம்”

    500 ரூபாய் முதல் போட்டு 50 ரூபாய் லாபம் எடுக்கின்ற சிறு கறிகாய் வியாபாரி முதல் லட்சக் கணக்கில் செலவு செய்துகோடிகளைக்குவிக்கும் அரசியல் வாதி வரை லாபம் ஒன்றே குறி. சரி. அப்படி உடனடியாக லாபம் கிடைத்து விடுகிறதா என்றால் இல்லை. எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதற்குக் கடின உழைப்பு அவசியம். அப்படி உழைத்தால் லாபம் தானாய்த் தேடிவரும்.

    இதைத் தான் இன்றைய பாடலும் சொல்கிறது. ஆண்டாள், கோபியரிடம் கண்ணனை அடைவதற்கான பாவை நோன்பைப் பற்றியும், அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறாள்.
    ****
    வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
    ..செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
    பையத் துயின்ற பரமனடி பாடி
    … நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
    மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
    …செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
    ..உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்

    ***

    “ இந்த உலகத்தில் இன்பத்திலும் துன்பத்திலும்கிடந்து உழலப் பிறந்து விட்டவர்களே,

    நாம் நம் பாவை நோன்பிற்கு என்னவெல்லாம் செய்வோம் என்பதைக் கேளுங்கள்.

    திருப்பாற்கடலில் ஆதிசேஷன் என்னும்பாம்பின் மீது தலைவைத்துத் துயிலுகின்ற நாராயணனின் திருத்தாள்களைப் போற்றிப் பாடுவோம்.

    இந்த மார்கழி மாதத்தில் உணவில் நெய் சேர்க்க மாட்டோம், பால் அருந்த மாட்டோம். அதிகாலையில் எழுந்து நீராடுவோம். அழகிய கண்களை மேலும் அழகூட்டும் மை இட மாட்டோம். கருங்கூந்தலில் மலர்கள் சூட மாட்டோம். செய்யக் கூடாது என ஒதுக்கப் பட்ட விஷயங்களைச் செய்ய மாட்டோம். கண்ணனைப் போற்றும் பாடல்கள் தவிர வேறு எந்தப் பாடலையும் எங்கும் பாட மாட்டோம்.

    எவ்வளவு தான் தானம் செய்தாலும் அதைப் பற்றி கர்வப் படாமல் ‘ஏதோ நாம் தான் கைகாட்டினோம்’ என அடக்கத்துடன் இருப்போம். இந்த மார்கழி மாதம் முழுதும் நோன்பிருக்கும் பொழுதுகளில் கண்ணனையே நினைத்துக் கசிந்துருகிக் காலம் கழிப்போம். அதிலேயே நமக்கு, நம் வாழ்க்கைக்கு நாம் எண்ணியது கிடைத்து விடும்”

    **

    மனதை ஒருமுகப் படுத்தி விரத நியமங்கள் அனுஷ்டித்தால் இறைவன் தானே தேடி வருவான். நமக்கு வேண்டியவற்றைத் தானே தருவான் என்பது இந்தப் பாடலின் உட்பொருள்..

    (தொடரும்)

  8. Likes aanaa liked this post
  9. #45
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அன்பு நண்பர் சி கே அவர்களுக்கு

    கீழே உள்ள ஒரு பகுதியை இங்கே பதிவிட அனுமதி தருவீர்களா ?

    சுஜாதா 90களில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி

    பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் "இந்தியா நூறு வருஷத்துக்கு முன்" என்கிற மறுபதிப்பு புத்ததகம் இருக்கிறது. டபிள்யூ உர்விக் ( W.Urwick ) என்னும் பாதிரியார் எழுதியது. ஸ்ரீரங்கம், திருவானைக்கா, திருச்சி, சிதம்பரம், மாகாபலிபுரம் போன்ற இடங்களில் நூறு வருஷத்துக்கு முந்தைய தோற்றத்தின் வர்ணனை கிடைக்கிறது. சில அரிய வுட்கட் போன்ற படங்களும் பிரமிக்க வைக்கின்றன. ஸ்ரீரங்கம் கோயிலுன் ஆயிரங்கால் மண்டபத்தையும் சேஷராயர் கோயிலுன் ஆயிரங்கால் மண்டபத்தையும் வர்ணித்துவிட்டு வேல்ஸ் இளவரசர் 1875-இல் இந்தியா விஜயத்தின் போது இங்கு வந்திருந்து கோபுரத்தின் மேல் ஏறினதையும் ஐந்நூறு ரூபாய் கோவிலுக்கு அளித்ததையும் சொல்லியிருக்கிறார்.

    அதன் பின் வருகிறது ஓர் அதிர்ச்சி. "கோயிலின் பிரம்மாண்டமும் பெருமையும் அதன் பிரகாரங்களின் விஸ்தாரமும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் திறமையும் வருஷக் கணக்கான உழைப்பையும் காட்டும் போது இதற்கு ஏறுமாறாக உள்ளே ஒளியிழந்த இருட்டில் எண்ணெய் வழியும் அச்சம் தரும் பிம்பம் மிக வினோதமாக நம்மை தாக்குகிறது. வெறுக்கத்தக்க மோசமான உருவவழி பாட்டுக்கு உலகிலேயே விஸ்தாரமான ஒருகோயில் அமைப்பு எழுப்ப்ப பட்டுள்ளது.

    லண்டனில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள் எத்தனை தப்பாக விபரீதமாக நம் முறைகளையும் விக்கிரக வழிபாட்டையும் புரிந்து கொண்டார்கள் என்பதற்கு சரியான சாட்சி.

    மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களோ மத இயலாளர்களோ ஒரு பொழுதும் நம் திருத்தலங்களின் வழிமுறைகளை முழுவதும் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு விளக்கிச் சொல்லுவது விரயம் எப்படி நம்மால் அவர்கள் 'ஓப்பெரா' சங்கீதத்தை ஒரு அளவுக்கு மேல் புரிந்து கொள்ள முடியாதோ அதே போல்.

    "நந்தா விளக்கே அளத்தற்கரியாய் நர நாராயணனே கருமுகில் போல் எந்தாய்" என்று திருமங்கையாழ்வார் திருநாங்கூரின் கருவறையின் இருட்டில் பாடியதின் உருக்கத்தை எப்படி பாதிரியார்களுக்கு விளக்க முடியும் ? நம் வழிபாடு வெளிப்புற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது என்பது மத மாற்ற அவசரத்தில் இருந்தவர்களுக்கு புரிந்ததே இல்லை.
    gkrishna

  10. Thanks chinnakkannan thanked for this post
    Likes aanaa liked this post
  11. #46
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    thanks ck/aanaa

    regards

    gk
    gkrishna

  12. #47
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாசுரம் பாடி வா தென்றலே…

    பதினொன்று

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – மூன்று

    *

    இறைவனிடம் பக்தி செலுத்துவது எப்படி?

    கோவிலிலிருந்து வெளியே வந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன், “ இறைவனிடம் என்ன வேண்டிக் கொண்டீர்கள்?”

    “மைத்துனிக்கு நல்ல வரன் அமைய வேண்டும். கடைக்குட்டிப் பெண்ணுக்கு பத்மா சேஷாத்ரியில் இடம் கிடைக்க வேண்டும். அலுவலகத்தில் பதவி உயர்வு சீக்கிரம் வர வேண்டும். நான் பார்க்கும் நீண்ட தொலைக்காட்சித் தொடரில் எனக்குப் பிடித்த கதா பாத்திரம் சாகடிக்கப் படக் கூடாது “ என நீண்டு கொண்டே சென்றது அவர் பட்டியல்.

    “இறைவனிடம் ஒன்றுமே கேட்காமல் இருக்க வேண்டியது தானே. அவருக்குத் தெரியாதா நமக்கு என்ன வேண்டுமென்று?” எனக் கேட்டேன்.

    நண்பர் “அப்படியும் இருந்தேன் சில நாள். என்ன ஆயிற்று தெரியுமா?” என்றார்.

    “என்ன நடந்தது?”

    “எனக்கு இப்போது இரு மனைவிகள்” என்றார் நண்பர்.

    சிரிப்பதற்காகச் சொல்லவில்லை இதை. நண்பர் ஆசைப்பட்டதை இறைவன் நிறைவேற்றியிருக்கிறான். அவ்வளவே! அவர் அவஸ்தைப் பட்டால் அவன் என்ன செய்வான்!

    இறைவனிடம் வணங்கும் போது எப்படி வணங்க வேண்டும்?

    நீரில் மூழ்கும் போது ஒருவன் வாழ்வதற்காகக் காப்பாற்றும் படி கதறுவானே அதைப்போல மனதுக்குள் கதற வேண்டும். சரி, அப்படிச் செய்தால் என்ன பயன்? அட, அதைத் தான் இந்தப் பாடலில் ஆண்டாள் கோபியர்க்குச் சொல்வது போல நமக்கும் சொல்கிறாள்.


    *

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
    நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
    ஓங்கு பெருஞ்செந் நெல் ஊடுகயலுகள
    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
    வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

    *

    இந்திரனின் துயர் தீர்ப்பதற்காக வாமன அவதாரம் எடுத்து, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் தானம் கேட்டு, பின் நெடிதாய் உயர்ந்து உலகையே அளந்தவர் எம்பெருமான் மஹாவிஷ்ணு! அவனுடைய திரு நாமங்கள் பாடி நாம் நோன்பு நூற்றால் அருள் நமக்கு மட்டுமின்றி இவ்வுலகிற்கே கிடைக்கும்.

    நாடெங்கும் மாதம் மும்முறை மழை பெய்யும்., நெற்பயிர்கள் உயரமாக வளர்ந்திடும், நெற்பயிர்களின் நடுவே உள்ள நீரில் மீன்கள் துள்ளி விளையாடும்., அப்படி விளையாடுகின்ற மீன்களால் அந்தப் பயிர்களிடையே பூத்திருந்த குவளை மலர்கள் அசைக்கப்பட, தேன் குடித்த வண்டுகள் கண்ணூஞ்சல் ஆடிக்கொண்டே கண்ணயரும். எனில் ஊர் என்னாகும்?

    ஊரும் செழிக்கும். கண்ணனின் கை படும்பாக்கியம் பெற்ற ஆயர்பாடியின் பசுக்கள் அளவில்லாமல் பாலைச் சொரியும். ஆயர்கள் பசுக்களின் மடியைப் பற்றியிழுத்துக் குடம் குடமாய்ப் பாலை நிறைத்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு அளவில்லாத செல்வம் ஆயர்பாடி எங்கும் நிறைந்திடும். எனவே வாருங்கள்”

    ***

    இந்தப் பாடலின் உட்கருத்து என்னவெனில், எம்பெருமானின் பாடல்களை மனமுருகிப் பாடினால் பாடுகிறவர் மட்டுமின்றி, நாடு முழுமையும் செழிப்படையும். தன்னலம் மட்டும் எண்ணாமல் உலகனைத்தும் வாழ வேண்டும் என நினைப்பவனே எம்பெருமானின் உண்மையான அடியவன் ஆகிறான்…

    **
    (தொடரும்)

  13. #48
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாசுரம் பாடி வா தென்றலே…

    பன்னிரண்டு

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – நான்கு.
    நல்ல மழையைப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?

    கவிஞர்களுக்குக் கற்பனை மழை, கன்னிப் பெண்களுக்கு மனம் கவர்ந்தவனை நினைத்த மாத்திரத்தில் மனதுக்குள் பூமழை பொழியும். ஆதி சங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் சொன்ன போது ‘பொன் மழை’ பொழிந்தது. இப்படி சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லா தரப்பிரனாலும் பார்த்து அனுபவிக்கத் தக்க விஷயம் இந்த மழை.

    மழையைப் பிடிக்காதவர்களும் உண்டு – வானிலை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்தவர்கள். “என்னப்பா இது. நாம் கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து மிதமான மழை பெய்யும் எனச் சொன்னால் இருக்கிற மேகங்களும் கலைந்து விட்டதே! – என நினைத்து அவர்கள் விடுகின்ற பெருமூசில் மேகங்கள் உருவாகி மழை பெய்யும்!

    அதென்ன நல்ல மழை? கெட்ட மழை?

    மனிதர்கள், பயிர்கள் தாவரங்கட்குத் தேவையான அளவு நீர் நிலைகள் நிரம்பும் வண்ணம் பெய்வது நல்ல மழை! தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தால் கோபம் கொண்ட பெண்ணைப் போல் வெள்ளம் பெருக்கெடுத்து எல்லாவற்றையும் அழித்து விடும். இது கெட்ட மழை.

    இந்தப் பாடலில் வருண பகவானை அழைத்துக் கட்டளை இடுகிறாள் ஆண்டாள். எதற்கு? உலகனைத்தும் வாழும்படியாக நல்ல மழை பொழிய வேண்டும் என்று.


    *

    ஆழிமழைக்கண்ணா ஒன்று நீ கை கரவேல்
    ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து
    பாழியத் தோளுடையப் பத்ம நாபன் கையில்
    ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
    தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்..

    *

    மழைக்குத் தலைவனான வருணனே..

    உனது திறமையை நீ சிறிதும் குறைத்துக் கொள்ளக் கூடாது. எங்களுக்கு மழை பொழிவதற்காக மிகப் பெரிய கடலின் ஆழத்தில் புகுந்து அங்குள்ள நீரைக் கொண்டு வரவேண்டும். அவ்வண்ணம் நீரை எடுத்து வானத்தில் வரும்போது செய்கின்ற ஆராவாரத்தைக் கேட்டு அந்த முழக்கத்தைக் கேட்டு நாங்கள் மகிழ வேண்டும்.

    வானத்தில் நீ வரும்போது உலகைப் படைக்கும் காலத்தில் எம்பெருமான் கொண்ட கரிய நிறத்துடன் வரவேண்டும். அவனைக்காணாத குறை தீர நாங்கள் உன்னைக் கண்டு குறை தீர வேண்டும். அழகுபொருந்திய அவனது திருத் தோள்களில் மின்னி ஒளிவிடும் சக்ராயுதத்தைப் போலவும், அவனது திருவாய்ப்படும் பாக்கியம் பெற்ற ”பாஞ்ச சன்னியம்” என்ற சங்கைப் போல முழங்கிகொண்டும் நீ வர வேண்டும். அவனை நினைத்து நோன்பினால் வாடியிருக்கும் எங்களைத் தேற்றுவிக்கும் வண்ணம் நீ ஓடி வரவேண்டும்.அவனது சாரங்கம் என்ற வில்லினின்று புறப்படும் அம்பு மழை போல நீ வரவேண்டும். ஆனால் ஒன்று அவனது அம்பு மழை அசுரர்களை அழிக்கும். உன் மழையோ உலகினையும் எங்களையும் காத்திடவேண்டும்.!

    எனில் வேகமாய் வருவாய்.. நாங்களும் இந்த மார்கழியில் நீராட வேண்டுமல்லவா”

    *

    எம்பெருமானிடம் உள்ளன்பு கொண்ட அடியார்க்ளுக்கு தேவதைகள் கட்டுப்படும், அவர்கள் பெய்யெனச் சொன்னால் மழை பெய்யும் என இப்பாடலில் உட்கருத்தாக ஆண்டாள் கூறுகிறாள்.

    *

  14. Likes aanaa liked this post
  15. #49
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி
    சி கே சார்

    ஆண்டாள் பாசுரத்தில் விஞ்ஞானத்தை கவனித்தீர்களா?

    வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர் மழையாக பெய்கிறது. அது அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவி ஆகி இப்படி ஒரு சுழற்சியாக நடைபெறும் இந்த நிகழ்வை நீர் சுழற்சி (The Water Cycle) என்று குறிப்பிடுவர்.



    மழை பெய்வதினால் உயிரினங்களுக்கு பலவகையான நன்மைகள் உள்ளன, மழை உயிர் வாழ்வதற்கான ஆதாரம், ஆனால் இந்த மழை சிலகாலம் இல்லையெனிலும் உணவு பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை நாமே கண்ணெதிரே பார்க்கிறோம். மழை என்பதே இல்லையெனில் அதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று சொல்லதேவை இல்லை அனைவரும் அறிந்ததே உயிரினங்கள் வாழவே முடியாத அளவிற்கு பூமியின் வெப்பம் அதிகமாகிவிடும். ஒரு பக்கம் முழுவதும் வெப்பமாகவும் ஒரு பக்கம் முழுவதும் கடல் நீராகவும் இருக்கும், அதாவது தற்போது இருக்கும் படியான சமநிலை படுத்தப்பட்ட பூமி இருக்கவே இருக்காது.

    உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நீரில் மூழ்கி அழியவும் கூடாது ஆனால் அவை அனைத்திற்கும் இன்றி அமையாத தேவைக்காக நீரும் தரப்படவேண்டும் என்ற நிலையில் இந்த மழையை தவிர வேறு எது சிறந்த வழி என்னவென்று கூறுங்கள் பாப்போம். இது ஏனோ தானோ வென்று நடைபெறுகிறது என்ற சந்தேகமின்றி அனைத்தும் தீர திட்டமிட்டே நடைபெறுகிறது.

    இது உண்மையில் மாபெரும் சக்தியின் உன்னதமான அருட்கொடை
    gkrishna

  16. #50
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சின்ன கண்ணனாரே

    உண்மையில் நீவிர் மழை (மழலை) கண்ணன். அவ்வாறே அழைக்கவும் ஆசை படுகிறேன் .

    Last edited by gkrishna; 23rd December 2014 at 09:50 AM.
    gkrishna

Page 5 of 10 FirstFirst ... 34567 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •