Page 1 of 10 123 ... LastLast
Results 1 to 10 of 92

Thread: பாசுரம் பாடி வா தென்றலே!

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like

    பாசுரம் பாடி வா தென்றலே!

    பாசுரம் பாடிவா தென்றலே..

    சின்னக் கண்ணன்..

    ஒன்று

    மனித வாழ்க்கையில் சோகங்கள் கலைந்து செல்லும் மேகங்கள் தானோ..

    பாருங்கள்..திடுமென ஒரே சோகமாய் இருக்கிறது.. கொஞ்சம் மனசு வறட்சியாக..கற்பனை எதுவும் வராமல்.. எதைப்பற்றியாவது எழுதிப் பார்க்கலாம் என்று புத்தகங்களைப் படித்தது தான் மிச்சம்.. எழுத விரல் வர மாட்டேன் என்கிறது… காரணம் சோம்பல்.
    .
    இன்று எப்படியும் எழுத வேண்டும் என ஆழ்மனத்திடம் “சமர்த்தோல்லியோ..உன் திறமை உனக்கே தெரியாது..எழுதலாம்பா “என்று சொல்லியும் கூட மறுபடி சோம்பல்.. எனில் அகெய்ன் சோகம்..

    கொஞ்சம் நீட்டி நிமிர்ந்து புத்தகமொன்றைப் புரட்டும் போதே யோசித்தேன்..எப்படியெல்லாம் வருத்தம் சோகம் நம்மைச்சூழ்கிறது..

    பரீட்சைக்குப் படித்துச் செல்லும் போது படித்தது வராத போது.:

    அழகாய் டிரஸ் செய்து செல்கையில் உடன் வேலை பார்க்கும் நண்பனோ நண்பியோ கமெண்ட் எதுவும் அடிக்காததால்..:

    லீவு நாளில் கொஞ்சம் பசி எனக் கிச்சனுக்குள் போனால் நொறுக்ஸ் எல்லாம் தீர்ந்திருப்பது:..ஒரு விருத்தமோ கவிதையோ எழுதலாம் என நினைக்கையில்

    போப்பா உனக்கு வேற வேலை இல்லை என கற்பனைக் குதிரை சோம்பேறியாய் வேறெங்கோ போய் புல்லை மேயப் போய்விடுவது -..இவையெல்லாம் குட்டிக் குட்டிசோகங்கள்

    உறவினரின் இறப்பு, நண்பர்களின் பிரிவு, காதலில் தோல்வி இதெல்லாம் பெரிய சோகங்கள்..

    புத்தகம் புரட்டியதில் விரல் ஒரு பக்கம் நிற்க அட இந்த விருத்தமும் சோகத்தைச் சொல்கிறதே..

    **

    மிகப் பெரிய சக்கரவர்த்தி, தன் மனையாள் கேட்ட வரத்தை நிறைவேற்ற பையன் காட்டுக்குப் புறப்பட்டுப் போய் விடுகிறான்..தசரதர் புலம்புகிறார்…

    வாபோகு வாஇன்னம் வந்தொருகால்
    …கண்டுபோ மலராள் கூந்தல்
    வேய்போலும் எழில்தோளி தன்பொருட்டா
    …விடையோந்தன் வில்லைச் செற்றாய்

    மாபோகு நெடுங்காலம் வல்வினையேன்
    …மனமுருக்கும் மகனே இன்று
    நீபோக என்நெஞ்சம் இருபிளவாய்
    ..போகாதே நிற்கு மாறே…

    ஹே ராமா..உன் தந்தை தசரதன் அழைக்கின்றேன் இங்கே வா..என்னை வந்து ஒருமுறை பார்த்துவிட்டுப்போ.. மறுபடியும் கூப்பிடுகிறேன்..
    ராமா..மறுபடியும் என்னை வந்து பார்த்துவிட்டுப் போ..

    ஓ மை பாய், மகனே…மலர்க்கூந்தலை உடையவளும் மூங்கில் போன்ற தோள்களை உடைய சீதையை மணப்பதற்காக சிவ தனுசை முறித்தவனே..மகா வீரனே..

    கொடிய விலங்குகள் கொண்ட காட்டிற்கு நீ செல்கிறாய் என்னைத் தவிக்க விட்டு.. இதைக் கண்டு என் மனம் இரண்டாகப் பிளக்காமல் இருக்கின்றதே..

    கொடிய வினை செய்த பாவி நான்.. என்னை விட்டுப் போகிறாயே ஓ ராமா ஸ்ரீராமா.. நான் எப்படியடா உயிர் வாழ்வேன்..

    **

    படக்கென தசரதரின் சோகம் நம்மைத் தொற்றிக் கொண்டு விடுகிறது.. எழுதியவர் குலசேகர ஆழ்வார் (ஆழ்வார் ஆகுமுன் சேர மன்னனாய் இருந்தவர் எனப் படித்த நினைவு) எவ்வளவு அழகு..

    டாட் நீங்க கொடுத்த boon நிறைவேத்தத் தான் போறேன்..டேக் கேர் டாட் எனச் சொல்லிச் செல்லும் ராமபிரானுக்கு அந்த சமயத்தில் புத்திர சோகம் தெரிந்திருக்கவில்லை என்பது உண்மை தான்.. கொஞ்சம் அனுபவப் பட்டிருந்தால் தசரதனோடே இருந்திருப்பாரன்றோ ( ராமாயணம் வந்திருக்குமா என்பது வேறு விஷயம்!!).. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இறைவனுக்கும் பொருந்தியிருக்கிறது..பிற்காலத்தில் லவ குசர்களை பிரிந்து தானே இருந்தார்.. பிறந்தது முதல் பார்க்க முடியவில்லையே..

    ம்ம்..இந்த விருத்தத்தையே நானும் எழுதிப்பார்க்க முயற்சி செய்தேன்

    அழைக்கின்றேன் உந்தனையே அருமைராமா
    …அருகில்வா என்று சொல்லி
    தழைக்கின்ற துயரத்தில் தசரதனும்
    ..தயங்காமல் கூவ அங்கே
    விளைகின்ற துக்கமெதும் அறியாமல்
    ..வில்லினையே தோளில் சேர்த்தே
    கலைகின்ற மேகம்போல் கரைந்துசென்றான்
    …கானகத்தே அண்ணல் தானே…

    பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழி உருவானது அப்பொழுது தான் போலும்..

    அவ்வப்போது ஒரு பாடலுடன் வருவேன்….வரட்டா

    (அதான் வந்துட்டியே.. சோகத்தப் பத்திச் சொன்னே சரி..நீ மறுபடி வந்ததுனால மத்தவாளோட சோகத்தப் பத்தி நினச்சியா..

    போ மனசாட்சி..அப்படில்லாம் இருக்காது..

    அப்படிங்கற.. சரி என்ன பண்ணப் போற..இங்க..

    இப்போதைக்கு ஒரு பாட்டுன்னு எடுத்துருக்கேன்.. பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..எல்லாம் அந்த இறைவன் தான் துணை..

    ஆல் த பெஸ்ட்)

    ..தொடரும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,799
    Post Thanks / Like
    தொடரட்டும்!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. Thanks chinnakkannan thanked for this post
  5. #3
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாசுரம் பாடிவா தென்றலே..
    **********************

    இரண்டு..
    *******

    இரண்டு உரையாடல்கள்:

    “ஆமா..உன்னோட ஃபேவரிட் நடிகரோட படம் ரிலீஸாச்சே பாத்தியா..என்ன”

    “பாக்கலை..டிக்கட் மட்டும் ரிசர்வ் பண்ணியிருந்தேன்..இப்ப எந்தப் படத்துக்கும் ரிவ்யூ பாக்காம போறதில்லை..

    அது சரி..ரிசர்வ் பண்ணினதை என்ன செஞ்ச..”

    “’ரெண்டு நூறு ரூவா டிக்கட்.. ப்ளாக்ல வித்துட்டேன்.. லாபம் 195 ரூபா..ப்ளஸ் ஒரு சாக்லேட்”

    “என்னது..

    “ஆமா வித்தது ஒரு ஹோட்டல் காரர் கிட்ட..! அஞ்சு ரூபாய்க்குச் சேஞ்ச் இல்லையாம்..”

    **
    “என்ன ஆச்சுடி.. ஒன்னோட லவ்வுக்கு..”

    இன்னும் சொல்லவே இல்லை..”

    ஏன் இன்னும் டிலே பண்றே.. பார்த்துக்கோ.. சனிக்கிழமை சனிக்கிழமை அவன் எங்கேயோ க்ளாஸஸ் போறானாம்..கூடவே அவனோட ஆஃபீஸ் மாத்வியும் போறா போல இருக்கு.. சொல்லாமேயே இருந்திடாதே..மிஸ் பண்ணிடுவே.. அப்புறம் உங்க அப்பா பார்க்கற மதுரை மாப்பிள்ளையக் கட்டிக்கிட்டு அப்பப்ப வெட்டு குத்து ந்னு நியூஸ் பாத்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்..

    *


    ஆக காதல் சினிமா இன்ன பிற என பல விஷயங்களுக்கு முன்பதிவு என்பது தேவையான ஒன்றாக இருக்கிறது..

    **

    பாபம் செய்தால் என்ன ஆகும் புண்ணியம் செய்தால் என்ன ஆகும்..

    ஆண்டவனே, நான் செய்த பாபங்களுக்கெல்லாம் என்னால் முடிந்த அளவுக்கு தான தர்மம் வழங்கி விட்டேன்.. ஸோ என் பாபத்தைக் குறைத்து விடு” என்றால் குறையுமா என்ன..

    மஹா விஷ்ணுவும் மஹா லஷ்மியும் கொஞ்சம் ஃப்ரீயாக இருந்த சமயம் அது.. மஹாவிஷ்ணுவின் உத்தரீயமும் லஷ்மியின் முந்தானையும் முடி போட்டு வைக்கப் பட்டிருக்கின்றன..

    வைகுண்டத்தில் இருவரும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்… என்ன சதுரங்கம்..

    பூலோகத்தில் மிகப் பெரிய இந்திர பதவிக்கு ஒப்பான பதவியில் இருப்பவனைப் பார்க்கிறார் விஷ்ணு.. அவனை அப்படியே டபக்கென்று எடுத்து நரகத்தில் போடப் போகிறார்..

    மஹாலஷ்மி:: ஓ மை ஸ்வீட் ஹார்ட்.. ஏன் இப்படிச் செய்கிறீர்கள்
    இத்தனை நாட்களாக போகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தானே..இப்போ நரகம்னா சிரமப்படுவானே

    விஷ்ணு:: தேவி உனக்குத் தெரியாதா.. இத்தனை காலம் புண்ணீயம் பண்ணியிருக்கிறான்.. அதன் பலன் சுகம்.. அனுபவித்தான்.. பாவமும் நிறைய பண்ணியிருக்கிறான் அதற்கு நரகம்

    லஷ்மி எவ்வளவு புண்ணியம் எவ்வளவுபாவம்

    விஷ்ணு அறுபது சதவிகிதம் புண்ணியம் நாற்பது சதவிகிதம் பாவம்..

    லஷ்மி: சரி ஓய் அறுபதுல நாப்பது கழிச்சுட்டு இருபது பர்சண்ட் புண்ணியம் இருக்கறதால இவனுக்கு சொர்க்கம் கொடுமேன்..

    விஷ்ணு சிரித்து” அப்படி இல்லை லஷ்மி புண்ணியத்திலிருந்து பாவத்தைக் கழிப்பதெல்லாம் சாஸ்திரப்படி கிடையவே கிடையாது..புண்ணியத்திற்கும் ஒருவன் அனுபவிப்பான் செய்த பாவங்களுக்கும் ஒருவன் அனுபவிப்பான்” எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே நாராயணா” எனக் குரல் வர..பார்த்தால் இந்திரத்யும்னன்.. முற்கால ப் பாண்டிய அரசன்..அகத்திய முனிவரின் சாபம் பெற்று கஜேந்திரன் என்னும் யானையாக மாறி முதலை யானையின் காலை பிடிக்க கதறும் ஓசை..

    விஷ்ணுவுக்கு படபடப்பு கூடிக் கிளம்ப லஷ்மி தடுக்கிறாள் “ ஓய்..உம்முடன் லெஷரா இருக்கற நேரம் கிடைக்கறதே அபூர்வம்.. நான் என்ன சொன்னேன்.. ரெண்டு பேரும் செஸ் ஆடலாம்னு தானே.. அதுக்காக த் தானே ஆட்டம் முடியறவரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுப் போகக் கூடாதுன்னு தானே முடிச்சுப் போட்டுக்கிட்டு உட்கார்ந்துருக்கோம்.. கம் லெட்ஸ் ஃபினிஷ் த கேம்”

    விஷ்ணு ஒரு கள்ளத்தனமான கண்ணச் சிரிப்பு சிரித்து முடிச்சை அவிழ்க்காமலேயே ஓட பின்னால் சேலையைப் பிடித்துக் கொண்டே லஷ்மியும் ஓட,எதிரில் கருடன் வர, ஸ்டாப் சொல்லி அதில் ஏற, லஷ்மியும் உடன் ஏறப் பறந்து கஜேந்திரன் இருக்கும் இடத்தை அடைகிறார்..

    பின் என்ன..

    கஜேந்திரனின் ஆபத்தைக் கண்டதும் சக்ராயுதத்தை எடுக்கவெல்லாம் இல்லை.. தொட மட்டும் செய்ய அது சென்று முதலையை சம்ஹரிக்கிறது..

    எனில் பாப புண்யக் கணக்குக்கு மேலாக ஒன்றிருக்கிறது..பகவானின் திருவடி பற்றினாலே போதும் என்பது தான்..

    **

    இந்த முன்பதிவு, பாவ புண்ணிய சமாச்சாரங்களைப் பற்றி பெரியாழ்வார் ஒரு பாடலில் சொல்லியிருகிறார்..

    துப்புடையாரை அடைவதெல்லாம்
    ..சோர்விடத்துத் துணையாவா ரென்றே
    ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
    .. ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
    எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு
    ..ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
    அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
    ..அரங்கத் தரவணைப் பள்ளியானே..!

    ஆண்டவனே.. வயதாகி முதுமை வந்து தளர்வடையும் போது தம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற எண்ணத்தில் –தம்மைக் காப்பாற்றும் தகுதி கொண்டவர்கள் என்ற எண்ணத்தில் பிள்ளையோ பெண்ணோ அவர்களை அண்டி வாழுதல் உலக இயல்பு..
    எனக்குத் தகுதி எதுவும் இல்லை.. இருந்தாலும் உன்னையே சரணடைந்தேன் ஏன் தெரியுமா..

    ஆதிமூலமே என ஓலமிட்ட யானையை நீ காத்தது உலகிற்குத் தெரியுமே..

    வயதானால் என்ன ஆகும்.. சர்க்கரை,, கொழுப்பு, இருதய பலவீனம் என சொல்லாமலேயே நோய்கள் வந்து தாக்கும்.. டயட்டில் எல்லாம் இருக்க வேண்டியிருக்கும்.. உடல் சோர்வாகி நலியும்..அப்போது பசி என்ற நினைப்பு மட்டும் தான் மேலோங்குமோ என்னவோ..உன்னை நினைக்கவும் சக்தியற்றவனாகி விடுவேன்..

    ஸோ.. என் கண்ணோல்லியோ.. அப்போதைக்கு – அந்த சமயத்திற்கு..இப்போதே சொல்லிவைத்துவிட்டேன் உன்னிடம்..


    திருவரங்கத்தில் கண்வளரும் பெருமானே..என்னுடைய இந்த அப்ளிகேஷ்னை மறவாமல் நான் இறக்கும் காலத்தே வந்து அருள்புரிவீராக..” என்கிறார் பெரியாழ்வார் தன் பெரிய திருமொழியில்..

    ம்ம்.. நாமும் அப்படியே சொல்லி வைத்து விடுவோம்.. லெட் அஸ் கண்டின்யூ டு டூ வர் ஸின்ஸ்.. ஏனெனில் நாளைக்கு வொர்க்கிங்க் டே ஆச்சே..ஆஃபீஸ் போகணுமே..!


    (தொடரும்)

  6. #4
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,799
    Post Thanks / Like
    உவமானங்கள் ஜோர்! ரொம்ப நல்ல யோசனையாயிருக்கே-முன் பதிவும் பாவ வாழ்வும்!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  7. Thanks chinnakkannan thanked for this post
  8. #5
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    >>ஆமா வித்தது ஒரு ஹோட்டல் காரர் கிட்ட..! அஞ்சு ரூபாய்க்குச் சேஞ்ச் இல்லையாம்..”<<<
    ஐந்து சதத்திற்கும் இதே "
    ஒரு சாக்லேட்" தான் ,,
    பிழைக்கத் தெரிந்த
    "ஹோட்டல்" காரர்கள்

    என்னடா சாரத்தை விட்டிட்டு சக்ககையை எடுக்கிறனே ;;

    "அன்பே சிவம்.

  9. Thanks chinnakkannan thanked for this post
  10. #6
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாசுரம் பாடி வா தென்றலே

    **

    மூன்று
    **************

    அ’னாவில் ஆரம் பித்து
    …அழகுற பாடங் கற்று
    ’வ’னாவில்’ தொடங்கும் வண்ண
    …வாலையாம் பருவம் கொண்டு
    ’ம’னாவில் வந்து அங்கே
    ..மங்கையாம் பருவந் தன்னில்
    ’’க’னாவில் மதிம யங்கி
    ….காதலுங் கொள்வ தேனோ....

    இது நான் சொல்லவில்லை பக்கத்து ஃப்ளாட் மாமி., ஒரு பெண்ணின் அம்மா சொல்கிறார்.. அவர் என்ன சொல்கிறாரென்று கேட்போம்..

    என்னத்த சொல்றது போங்க.. அழகாப் பொண்ணு பொறந்துச்சேன்னு போற்றி வளர்த்தேன்..எல்லாத்துக்கும் நான் வேண்டும்.அவளுக்கு பள்ளிப்பருவத்துல ஹோம் வொர்க், கொஞ்சம் பருவமடைஞ்சப்போ சினேகிதியா அவளுக்குச் சொல்லிக் கொடுத்தேன்.. கிடுகிடுன்னு வளர்ந்து காலேஜ் போய்ட்டு முடிச்சு ஒரு வேலையும் தேடிக்கிட்டா..

    அப்பப்ப நட்சத்திரத்தப் பாக்கறா, மொட்டை மாடில்ல ஒக்காந்துக்கிட்டு தானா பேசறா.. என்னடின்னா போம்மா செல்ஃபோன்ல தான் பேசிக்கிட்டிருந்தேன்னு புருடா விடறா.. பாத்தா கீழ சார்ஜர்ல போட்டிருக்கா..

    திடீர்னு சிரிப்பு சிரித்துக்கறா.. சரி.. போனாப் போவுது.. நமக்கா தெரியாது..இவ வயசக் கடந்து வந்தவ தானே நானு..இவர்கிட்ட சொல்லி ஜாதகம் எடுக்கலாம்னா ஷ்.. கொஞ்சம் ஃப்ரீயா இருக்க விடேன்ங்கறா.. சரின்னு இருக்கலாம்னு பார்த்தா..
    அவ படிக்கற புத்தகத்தில இருந்து ஒரு புள்ளையாண்டான் ஃபோட்டோ விழுது..ம்ம் இதானா சமாச்சாரம்..

    ஏட்டி.. யாருடி இவன்.. ம்ம்ம் கூட வொர்க் பண்றவர்.. என்னடீ விஷயம்.. ம்ம் அதான் பாத்தேல்ல ஹேண்ட்ஸம்மா இருக்காரில்லை.. ஹீ ஈஸ் மை வுட்பி.. அடிப்பாவி உங்க அப்பா கேட்டார்னா.. ஸோ வாட்.. மம்மி நீ தான் அவரக் கன்வின்ஸ் பண்ணணும் ப்ளீஸ் ப்ளீஸ்..

    இதான் எனக்குப் புரியலை.. நீயே சொல்லு கண்ணா..இந்தக் காதல் எப்படி பொண்ணுங்க மனசுல புகுந்துக்கிட்டு விளையாடுது..

    ம்ம் பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லுன்னு பழமொழி சொல்வாங்க.. இவ பொண்ணு தானே.. ஒருவேள கிராமத்து பாஷையில புள்ளன்னா பொண்ணு..அந்த மாதிரி சொல்லியிருப்பாங்களோ”

    ***..

    அந்த மாமியின் நிலை கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது.. காதலிக்கும் பெண்கள் எல்லாம் தன்னைப் பெற்ற அம்மாவும் ஒரு பெண் என்பதை மறந்து விடுகிறார்களோ. என்னமோ.. புத்திரன் பிரிந்த சோகம் தசரதனை முன்பு சொன்னபாடலில் பற்ற.. புத்திரி புரியாமல் காதலில் அலமலத்து இருப்பது பார்த்து இந்த அம்மாவிற்கு சோகம் ஏற்பட்டிருக்கிறது..

    இதே போல வேறு ஒரு தாய்க்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது ஒரு பாடலில்..

    கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
    …கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்
    பார்வண்ண மடமங்கை பத்தர்; பித்தர்
    …..பனிமலர்மேல் பாவைக்கு; பாவம் செய்தேன்
    ஏர்வண்ண என்பேதை என்சொல் கேளாள்
    …எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்
    நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்’ என்னும்
    …இதுவன்றோ நிறையழிந்தார் நிற்குமாறே..

    (தலைவியின் நிலை குறித்து பெற்ற தாய் இரங்குவதாக உள்ள பாசுரம் இது)

    “என்ன சொல்வதென்று தான் தெரியவில்லை.. என் மகளோ எம்பெருமானையே தலைவனாக நினைத்துக் கொண்டு பித்துப்பிடித்தவள் போல் புரியாத விதமாக ஏதேனும் பேசிக்கொண்டே இருக்கிறாள்..கார்மேகத்தின் கரிய நிறம் கொண்டது பெருமானது திருமேனி..திருக்கண்கள்,திருவாய்,திருவடிகள்,தி ருக் கைகள் எல்லாம் தாமரைப் பூவைப் போல சிவந்த நிறமுடையன..

    என்னடீ ஆச்சு உனக்கு என்ன பைத்தியமா என்றால்..அடபோம்மா.. நான் ஒண்ணும் பித்துப் பிடிச்சவள் இல்லை..இந்த எம்பெருமான் இருக்கிறாரே அவர் தான் பூமிப்பிராட்டியின் அன்பர்.. அதுக்குமேல.. திருமகள்பால் பித்தர்.. என்கிறாள்..

    என்னடி சொல்ற..

    போம்மா..ஒண்ணு சொல்லு..திருவரங்கம் எங்கே இருக்கு? நீர்வண்ணன் கோயில் கொண்டிருக்கும் திரு நீர் மலைக்குப் போகப் போகிறேன்”

    என்ன செய்வது நான் சொல்லுங்கள்.. அழகான என் பெண் என் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறாள்.. நான் என்ன பாவம் செய்தேனோ..என் மகளுக்கு இப்படி மன அடக்கம் இல்லாதவாறு அவள் எம்பெருமான் மீது கொண்ட காதல் செய்துவிட்டதே..அதனால் தான் இந்த நிலையோ” எனச் சொல்லி அந்த தாய் புலம்புவதாக திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரத்தில் வருகிறது..

    என்ன தான் சொல்லுங்கள்... லவ்னா;லே கஷ்டம் தான்.. எந்தக் காலத்திலயும்!!!

    வரட்டா..

    (தொடரும்..)
    Last edited by chinnakkannan; 14th September 2014 at 10:26 PM.

  11. #7
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    பாசுரம் பாடும் தென்றலே
    தமிழ் கொஞ்சுகிறது
    சற்று தாமதமாக தான் கவனித்தேன்
    மன்னிக்கவும்
    gkrishna

  12. Thanks chinnakkannan thanked for this post
  13. #8
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,799
    Post Thanks / Like
    காலத்திற்கேற்ற மாடர்ன் விளக்கம்! மிக்க நன்று!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  14. Thanks chinnakkannan thanked for this post
  15. #9
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாசுரம் பாடிவா தென்றலே..

    நான்கு

    நிலா தெரியும்.. வான்மதி..வானில் சிரிக்கின்ற சந்திரன்..

    உலாசெய்தே அங்கு உவகை கொண்டே
    நிலாப்பெண் சிரிக்கிறா ளே..

    சரிதான்.. அப்போ வெண்ணிலா.. வெள்ளை நிறத்தில் இருக்கும் நிலா..ஹையா என்ன கண்டு பிடிப்பு.. இல்லையே… நிலாவில் களங்கம் இருக்கிறதே..

    வெண்ணிற கிரணங்களை இடுவதால் வெண்ணிலா.. வழக்கமாய் வெண்ணிலவு என்றாலே பெண்ணைத் தான் ஒப்பிடுவார்கள்..


    வெண்ணிலவு தனையுருக்கிப் பொன்னுடலில் தான்வார்த்து
    …மின்னிவரும் பெண்ணழகுப் பெட்டகமோ – இவள்
    மேதினியில் ஆழ்கடலின் நித்திலமோ

    கண்ணழகு கண்டுவிட்டால் வெண்ணிலவும் நாணியங்கு
    …கார்முகிலின் பின்சென்று நோக்கிடுமோ – பின்பு
    *கொண்டலினை விட்டகன்று சென்றிடுமோ

    நுண்ணியதாய் நுதலழகு நோக்கிவிடில் வான்மதியும்
    …நோய்கொண்டு தானகன்று ஓடிடுமோ – இவள்
    கண்ணசைவில் தான்மயங்கி வந்திடுமோ..

    மென்மையெனப் புன்சிரிப்பு மோவாயில் தேங்கிவிட
    …மென்னிலவும் தன் நிறத்தை எண்ணுதடி – உந்தன்
    மேல்கோபம் கொண்டுகொண்டு நாணுதடி..

    என்று ஒரு வாலிபன் பாடுவதாக ஒரு ஆன்றோர் எழுதியிருக்கிறார்!


    பெண்களை வெண்ணிலாவிற்கு ஒப்பிட்டு ஆண்கள் செய்வது டூ மச்சோ த்ரீ மச்சோ..அதே பெண்கள் கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் பெற்றுவிட்டால் என்ன செய்கிறார்கள்..

    நிலாவைக் காண்பிக்கிறார்கள்..அதோ பார் நிலா எவ்வளவு ப்ரகாசமா இருக்குல்ல வட்டமா இருக்கு உன் மூஞ்சியாட்டமா .. ஆ காமிம்மா.. என்ற அம்மாக்கள் அந்தக் காலத்தில் இருந்தார்கள்.

    இன்று டிவிடியில், பாரேன் அந்த மூன் பின்னாடி எப்படி டோரா போறா பாரு எனச் சொல்லி ஊட்டி விடும் – ராசாத்தி நைட்டி போட்ட அம்மாக்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்..

    இப்படித் தான் ஒரு அம்மா நிலாவைக் காட்டி ஊட்டியெல்லாம் விடவில்லை.. நிலாவையே கூப்பிடுகிறாள்.

    சொல்பவள் யார் யசோதா..பிள்ளை வேறு யார் தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன் தான்..

    ”ஓ மை டியர் மூன்..இங்கே வந்து பாரேன் என் பிள்ளை அடிக்கும் கூத்தினை -.

    என் மகன் நீல வண்ணக் கண்ணன் தன் முகத்திலே கட்டிய நெற்றிச் சுட்டியானது டபக் டபக்கென்று பலதடவை அசையுமாறும், திருவடிகளில் கட்டிய கிண்கிணிகள் – காற்சதங்கைகள் ஒலிக்கும்படியாகவும் தபக் தபக்கெனத் தவழ்ந்து கொண்டு போய் அங்கே இருக்கும் புழுதியில் கைகள் விட்டு அளைந்து கொண்டு இருக்கிறான்.. ஓ இளமையாய் இருக்கும் சந்திரனே.. உன் முகத்தில் கண்கள் இருந்தால் என் செல்லப் பிள்ளையின் அழகிய கூத்தைக் காண்பாய்..”

    பெரியாழ்வார் திருமொழியில் அம்புலிப் பருவத்தில் வருகிற முதற்பாடல் இது..

    தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
    பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்
    என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ
    நின்முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப் போ

    அப்படியே கொஞ்சம் கொஞ்சியும் கெஞ்சியும் தன் பிள்ளையாண்டோனோட விளையாடக் கூப்பிடறாளா யசோதை.. வெண்ணிலா வரலை.. அம்மாக்குக் கோபம் வருது.. உருட்டி முழிக்கறா..இவ்ளோசொன்னாலும் அந்த வெண்ணிலா இறங்கி வரமாட்டேங்கறதே..என்னசெய்யலாம்..

    தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர்விழுங்கிய
    பேழை வயிற்றெம் பிரான் கண்டாய்; உன்னைக் கூவுகின்றான்
    ஆழிகொண்டு உன்னை எறியும், ஐயுறவு இல்லை காண்
    வாழ உறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா..

    அழகிய பெரிய ப்ரியமேயில்லாத சந்திரனே..வெண்ணிலவே.. உனக்குத் தெரியுமா…மண்பானையிலிருந்து கை முழுக்க முழுக்க எடுத்து சொப்பு வாய் முழுக்க இட்டு பின் அதை முழுங்க முடியாமல் முழுங்கி அதனால் தொம்மென்று பெரிய வயிறு கொண்ட என்னோட கண்ணன் உன்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான்.. நீ என்னடான்னா வரவே மாட்டேங்கற.. இப்போது நீ வராவிட்டால் தன் சக்ராயுதத்தால் உன் தலையை அறுத்து விடுவான்.. இதில் சந்தேகமே இல்லை..ஸோ நீ வாழ விரும்பினால் இந்தக் கண்ணனிடத்தே அன்பு கொண்டு ஓடி ஓடி வா நிலா..

    என்கிறாள் யசோதை..என்கிறார் பெரியாழ்வார்..

    ம்ம் இந்த அம்மாக்கள் குழந்தைகளை மிரட்டறது பத்தாதுன்னு நிலாவை எல்லாம் மிரட்டி இருக்காங்களே..

    சரி..அப்புறம் வரட்டா…


    (தொடரும்)

  16. #10
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,799
    Post Thanks / Like
    ம்ம்ம்...
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  17. Thanks chinnakkannan thanked for this post
Page 1 of 10 123 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •