Results 1 to 7 of 7

Thread: இளையராஜா- King of Vibrating Veenai

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    இளையராஜா- King of Vibrating Veenai

    இப்பதிவில் இளையராஜாவின் சினிமா பாடல்களில் இசைக்கப்படும் வீணை நாதங்களை பார்க்கப்போகிறோம்.









    வீணை இசைக் கருவிகளின் ராணி என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.இதன் முன்னோடி யாழ் என்ற இசைக்கருவி. திருவள்ளுவர் “குழல் இனிது யாழ் இனிது” என்று ஒரு குறளில் சொல்லி இருக்கிறார். ”மாசில் வீணையும்”அப்பர் பாடி இருக்கிறார்.



    கல்வி கடவுள் சரஸ்வதியும் கையில் வீணையுடன். நாரதர் கையிலும் வீணை உண்டு.ராவணன் வீணை சாம கானப்ரியன்.அகஸ்தியரும் வீணை வாசிப்பார்.





    சில எண்ணங்கள்:



    பொது வழக்கில் கருவிகள் "வாசிக்கப்பட்டாலும்" வீணையின் நாதம் ஸ்பெஷலாக “மீட்டெடுக்கப்படுகிறது”

    இதயத்தின் அருகே வைத்து மீட்டுவதால் ஆத்மார்த்தமாகவும் ஆழமாகவும் நாதம் வருகிறதோ?
    பழைய படங்களில் பொதுவாக இது பரத நாட்டியத்திறகும், பக்திக்கும் நிறைய வாசிக்கப்பட்டிருக்கிறது.அடுத்துதான் டூயட் வருகிறது.


    இளையராஜாவிற்கு முன்பு எல்லாம் 90%நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கும். fusion கம்மி.

    பொது வழக்கில் பெண்ணுக்கு வீணையும் ஆணுக்கு புல்லாங்குழலும் தொடர்புப்படத்தப்படுகிறது
    இதிலும் சோகம்,மகழ்ச்சி,தியானம்,புல்லரிப்பு,கனிவு இத்யாதி உணர்ச்சிகள் மீட்டெடுக்கப்படுகிறது
    நேரடியாக,சந்தில் சிந்து,மின்னல்,நீண்ட,துளி எல்லா அளவுகளிலும் வீணை நாதம் ராஜா இசையில் கோர்க்கப்படுகிறது.

    வயலினை exploit செய்தார் போல் இதை செய்யமுடியாது என்று என் கணிப்பு.முடிந்தவரை exploit செய்திருக்கிறார்
    இளையராஜாவின் வீணை நாதம்............


    பேசுதல்/நெகிழ்தல்/உருகுதல்/சிரித்தல்/வெட்கப்படுதல்/புலம்புதல்/சிலிர்த்தல்/அழுதல்/விரகதாபம் எல்லாம் இசைக்கிறது.

    எல்லாவற்றிலும் “ஆத்மா” இருக்கிறது.








    வீணையில் வாசிக்கப்படும் கர்நாடக இசையைக் கேட்பது ஒரு தனி சுகம்.அது ஒரு கடல்.கேட்பது எனக்கு சுலபம். எழுதுவதற்கு பண்டித ஞானம் இல்லை.





    போவதற்கு முன்......

    Veenai Ennule.mp3


    துணை இருப்பாள் மீனாட்சி(1977)-சுகமோ ஆயிரம்
    Veenai Sugamoaayiram.mp3

    ஆறிலிருந்து அறுபதுவரை (1979)-கண்மணியே காதல்
    VeenaiKanmaniye.mp3

    தீபம்(1977) -அந்தப்புரத்தில் ஒரு மகாராணி
    சாமந்திப் பூக்கள் மலர்கிறது.இரு சந்தன தேர்கள் அசைகிறது வீணையின் மீட்டலில்.0.21-0.24 வீணை வயலின் நாதப் பின்னல்கள் அருமை.இதுதான் மேஸ்ட்ரோவின் கற்பனை வளம்.
    Veenai Anthapurathill.mp3

    கண்ணே கலைமானே(1988)-நீர்விழ்ச்சி தீ மூட்டுதே
    வித்தியாசமான மீட்டல்,தாளம்.அளவெடுத்து வீணையும் தாளமும் இசைக்கப்படுகிறது.
    VeenaiNeervizhchi-KanneKalai.mp3

    இசைஞானிக்குப் பிடித்த பழைய பாடல்.பாக்கியலஷ்மி(1961)
    மாலைப்பொழுதில் மயக்கத்திலே.இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

    இதில் 0.07-.10 அண்ட் 0.11-0.14 மீட்டல்களை கவனியுங்கள்.இதில் இன்ஸ்பயர் ஆகிறார் மேஸ்ட்ரோ.
    VeenaiMalaipozhuthin.mp3

    பிறகு தன் இசையில் கற்பனை கலந்து fusion ஆகி வருகிறது.
    அது பகவதிபுரம் ரயில்வேகேட்(1983)- காலை நேரக்காற்றே
    இதில் 0.02-0.04 அண்ட் 0.07-0.08 கவனியுங்கள்.மற்றொரு கருவி என்ன பெயர்? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
    Veenai Kalainera katre.mp3



    நீங்கள் கேட்டவை(1984)-ஓ வசந்த ரோஜா
    இசைப் பூச்சரத்தில் மூன்று இடங்களில் அழகாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
    Veenai-O Vasantha Raja.mp3

    சிந்துபைரவி(1985)-பூமாலை வாங்கி வந்தேன்
    VeenaiPoomaalai-Sindhu.mp3

    புதிய வார்ப்புகள்(1978)-தம்தனனம் தனனம்
    வீணையும் வயலின்களும் உரையாடுகிறது. வித்தியாசமான துளிகள். வயலின் இசை உணர்ச்சிக்களுக்கு தோதாக வீணையின் நாதமும்.
    Veenai thamthananam.mp3

    கன்னிராசி(1985)-சுக ராகமே சுக போகமே
    VeenaiSugaRagame.mp3

    அலைகள் ஓய்வதில்லை(1981)-காதல் ஓவியம்
    அட்டகாசமான Fusion.இசையின் போக்கு வெஸ்டர்ன் கிளாசிகலாக போகிறது.ஆனால் இடையே நம்ம ஊர் வீணை நாதம் இணைக்கப்பட்டு மீண்டும் வெஸ்டர்ன் கிளாசிலாக போகிறது.வேறோரு உலகத்திற்கு தூக்கிச் செல்லும் இசை.பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ.
    Veenai NathiyiladumKathal Oviyam.mp3

    இரண்டாவது ஆடியோ(இதில் துண்டாகிவிட்டது)
    Veenai Kathal Oviyam.mp3

    பழசிராஜா(2009)-குன்னத்தே
    நாதத்தில் எத்தனைக் கனிவு.வயலினும் கனிவுக்கு பணிகிறது.அபாரம்.
    VeenaiPazhazi-Kundrathu.mp3

    இளமைகோலம்(1980)-ஸ்ரீதேவி என் வாழ்வில்
    VeenaiSridevienvazhvil.mp3

    மீண்டும் கோகிலா(1981)-சின்னஞ்சிறு வயதில்
    0.06-0.09 மீட்டல் ஏதோ சொல்கிறது.
    VeenaiChinnachiru-Vaya.mp3

    எத்தனை கோணம் எத்தனைப் பார்வை(1983)-அலைப்பாயுதே கண்ணா
    Veenai- Alaipayuthe Kanna.mp3

    நிழல்கள்(1980)தூரத்தில் நான் கண்ட
    Veenai Dhooraathil.mp3

    வைதேகி காத்திருந்தாள்(1984)-இன்றைக்கு ஏனிந்த
    நாட்டியத்திற்கு ஏற்ப வீணை இசை. 0.19-0.31 வரும் ஒரு நாதம் (வீணை அல்ல) உருக்குகிறது.வயோலா என்று யூகம்.

    Veenai Indraikkuenintha.mp3


    ராஜபார்வை(1981)-அழகே அழகே
    VeenaiAzhake azhake.mp3

    வியட்நாம் காலனி(1994) - கைவிணையை ஏந்தும் கலை
    சிதார் மாதிரி இருக்கிறது. வீணை?
    VeenaiVietnam Colony.mp3

    மோகமுள்(1995) சொல்லாயோ வாய் திறந்து
    எனக்குப்பிடித்த ஒன்று.Full of emotions.0.18ல் சொட்டும் வீணை நாதம் stunning
    Veenai-Sollaayo-Moga.mp3

    பயணங்கள் முடிவதில்லை(1982)-தோகை இள மயில் ஆடி
    "அன்னமே இவளிடம் நடைபழகும்..இவள் நடை அசைவில் சங்கீதம் உண்டாகும்...”இசையில் காட்டுகிறார்.

    VeenaiThogaiIlamayil.mp3

    நான் பாடும் பாடல்(1984)-பாடும் வானம்பாடி
    VeenaiPaadumVanam.mp3

    உனக்காவே வாழ்கிறேன்(1986)-இளம்சோலை பூத்ததோ
    தமிழ்ப்படங்களில் காதலியை பரத நாட்டியம் ஆட விட்டு கதாநாயகன் ஜிப்பா சால்வையோடு (ரொமப் அனுபவித்து)பாடுவது ஆயிரம் காலத்துப் பயிர் ஆகிவிட்டது. மாத்துங்கப்பா..!

    VeenaiThogaiIlamayil.mp3

    பத்ரகாளி(1977) - கண்ணன் ஒரு கைக்குழந்தை
    Veenai-KannanOru.mp3

    தீர்த்தக்கரையினிலே(1987)-விழியில் ஒரு கவிதைப் படித்தேன்
    சின்னத் துளிகள் அருமை.
    Veenai- Vizhiyil Oru.mp3

    கோயில்புறா(1981) வேதம் நீ
    Veenai Vedham nee.mp3

    நாயகன்(1987)-நீ ஒரு காதல் சங்கீதம்
    Veenai Neeorukathal.mp3

    காதல் ஓவியம்(1981)நதியில் ஆடும் பூவனம்
    Veenai NathiyiladumKathal Oviyam.mp3


    எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையில் “வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு”படம்: வாழ்வு என் பக்கம்(1976).ரசிப்பது இதன் மெலடி/பாட்டின் கவித்துவம்/ஒரு ஹம்மிங்.
    Veena(MSV) Veenai Pesum.mp3


    டெயில் பீஸ்


    பைனாகுலர் வைத்துப்பார்க்கிறேன் கடந்த 12 வருடத்தில் எவ்வளவு பாட்டுக்களில்(ராஜாவையும் சேர்த்து)வீணை நாதம் வந்திருக்கிறது என்று.சினிமா கதையெல்லாம் மாறிப் போய்விட்டது.நல்லதோர் வீணை செய்தேன்.அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ..சொல்லடி சிவசக்தி?

    Thanks to RA

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையராஜா - King of Mellifluous Flute

    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் இளையராஜாவின் புகழ் பாடுங்களேன் என்று பாடத்தான் வேண்டும். பிரபஞ்சத்தில் புல்லாங்குழலுக்கு இந்த அளவிற்கு திரை இசையில் அணி (அழகு) சேர்த்தவர் மேஸ்ட்ரோ ஒருவராகத்தான் இருக்க முடியும்.








    பிரமிக்கத்தக்க அளவில் புல்லாங்குழலுடன் விதவிதமாக லீலைப்புரிந்திருக்கிறார்.அதே பிரபஞ்சத்தில் முதலில் தோன்றிய இசைக்கருவி புல்லாங்குழலாகத்தான் இருக்கும் என்பது என் யூகம்.

    குழல் பேசும் மொழிகள் பல.ஓவ்வொன்றும் வேறுபட்டவை.சில
    ரகசியமானது.சில புரியாதவை.ரசிக்கக்கூடியவை.வேற்று பிரபஞ்ச மொழிகளும் இதில் அடக்கம்.



    இந்த நாதங்கள் மனதில் ஊடுருவி கிளர்த்தும் காட்சிகள்/தீட்டும் ஓவியங்கள் விவரிக்க முடியாதவை.

    He is a dictionary for cinema light music flute.Magic Flute magician.

    ஒரு இசைக்கலைஞனின் உன்னதம் அவன் இசைக்கும் இசையில் மட்டுமில்லாது தன் வசப்படுத்திய(mastering instruments) இசைக்கருவிகளின் மேன்மைகளும் வெளிப்படவேண்டும் அவன் இசையில்.

    அந்த வகையில் All the musical instruments are at Ilaiyaraja"s delight.

    இவரின் இசை மனதின் அடியில் வண்டல் போல் படிவதற்குக் காரணம் emotions....emotions ... emotions ... full of emotions!போதை அடிமை போல் ஆகிவிடுகிறோம்.ஒரு நவீன தொனியில் ஆத்மா கலையாமல் கொடுக்கப்படுகிறது.

    உயர்தர சைவ உணவகம் மாதிரி உயர்தர இசை.You name it. I music it.

    போவதற்கு முன் இசைஞானியின் விதவிதமான வேணுகாணத்தில் நனைந்தபடி போவோம்.










    Flute-Ooranjaaram-Kakkaisirakinile.mp3

    Flute-Sollividu Vellinilave-Amaithi Padai.mp3

    Flute-Orampo Orampo.mp3

    Flute-Aur Ek Prem Kahani - Naina.mp3

    Flute-Gnan Gnan Paada-Poonthalir.mp3

    Flute-Shri Eadukondalaswami.mp3

    Flute-Unnaivazhathi Paadukiren-OhoKaalaiKuyilgale.mp3

    Flute-Madhuramari.mp3

    Flute-Sharadendupaadi-Kaliyoonjalu.mp3

    Flute-Pularkindrapozhuthu-Uliyin Oosai.mp3

    Flute-84-Oh Vasantha Raja-Neengal Kettavai.mp3

    Flute-Chinnakannan Azhaikiran-Kavikkuyil.mp3

    தன் புல்லாங்குழல் இசைப் பயணத்தை அன்னக்(குயில்)கிளியுடன்தான் ஆரம்பித்திருக்கிறார்.முன்னால் இசை மேதைகளிடமிருந்து வாங்கி அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

    முதல் கட்டம்:

    நதியைத் தேடிவந்த கடல்-1980- எங்கேயோ ஏதோ
    ராஜாவிற்கு முன் இசையில் புல்லாங்குழல் இந்தப் பாடலில் (இதுவும் ராஜாதான்)வருகிற மாதிரிதான் சம்பிரதாயமாக இருக்கும். சில விதிவிலக்குகளும் இருக்கிறது.



    Flute-NathiyaiThediVandhaKadal-Engeyo.mp3

    அடுத்தக் கட்டங்கள்முதலில் நாம் நனைந்ததும் அடுத்தக் கட்டம்தான்)

    இந்த மனதை வருடும் உணர்ச்சிகள் நவீன தொனியுடன் இசைக்கப்பட்டு அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது.

    புல்லாங்குழல் -1
    அன்னக்கிளி-1976-அன்னக்கிளி உன்ன தேடுதே
    0.12-0.18க்குள் இரண்டு தடவை குழல் நாதம் வருகிறது.வருவதற்கு முன் இரண்டுக்கும் எப்படி ஒரு இசை பில்ட் அப் கொடுக்கிறார் பாருங்கள்!

    “தேடுதே” (0.24)என்று முடிக்கும் இடத்தில் மெலிதாக குழல் வருடிக்கொடுக்கிறது.
    Flute-Annakkili Unna Theduthu1.mp3

    புல்லாங்குழல்-2








    ஜானி-1980 -காற்றில் எந்தன் கீதம்
    Flute-KaatrilEnthan.mp3

    புல்லாங்குழல் -3
    ஹே ராம் - 2000-நீ பார்த்த பார்வை
    பின்னணியில் புல்லாங்குழல் சிறு சிறு விரகதாப அலையாக எழுவது அதீத கற்பனை.Out of the world flute interlude!
    Flute-Neepaartha-Hey Ram.mp3

    புல்லாங்குழல்-4
    சாதனை-1986 -ஓ வானம்பாடி
    இசைத்துளியை கவனமாக கேளுங்கள்.0.03 இருந்து இசைக்கப்படும் ஷெனாய் நாதத்தில் 0.08-0.09லும் மற்றும் 0.11-0.12லும் பு.குழல் இசைத் துளிகள் தொடுக்கப்படுகிறது.இது என் யூகம்.

    முக்கால் ஷெனாய்யும் கால் புல்லாங்குழலும் (இசை)கூட்டணி.
    Flute-Saadhanai-OhVaanampaadi.mp3

    புல்லாங்குழல்-5
    கடவுள்- 1997 -ஆதிசிவன் தோளில்
    குழலின் நாதத்தில் ஜீவகளை சொட்டுகிறது.
    Flute-Kadavul-AadhiSivan.mp3

    புல்லாங்குழல்-6
    மண்வாசனை -1983- பொத்திவச்ச மல்லிகமொட்டு
    பட்டாம்பூச்சிகள் படபடத்தபடி பூவில் தேனை உறிஞ்சுவது போல் ஒரு நாதம்.ஆச்சரியப்படுத்துகிறார்.பாரதிராஜா இந்த மாதிரி இசைத்துளிகளுக்கு காட்சி அமைக்கத் தடுமாறுவாராம்.

    வித்தியாசமான சின்னச் சின்ன அசட்டுத்தனம் இல்லாத hifi ஊதல்கள்.
    Flute-PothiVechcha.mp3

    புல்லாங்குழல்-7
    இது நம்ம பூமி -1992 - ஆறடி சுவருதான்
    0.17/0.21/0.25/0.29ல் நாதம் உச்சஸ்தாயில் போய் நம்மிடம் பேசுகிறது. ஆனால் உச்சஸ்தாயில் வேறு ஒரு இசைக்கருவியும் கலவையாக வாசிக்கப்படுகிறது என்பது என் யூகம்.உச்சஸ்தாயில் அதன் ஜீவனே மாறுகிறது.
    Flute-AaradiChuvarthan.mp3

    புல்லாங்குழல்-8
    நிழல்கள் - 1980-பூங்கதவே தாழ்திறவாய்
    0.11 பிறகு மென்மையான புல்லாங்குழல் படபடக்கப்போகிறது என்பதை யூகிப்பது கஷ்டம்.
    Flute-PoongathaveThazh.mp3

    புல்லாங்குழல்-9
    ருசிகண்ட பூனை-1980 - என் நெஞ்சம் உன்னோடு
    Flute-80Rusikanda Poonai--EnNenjamUnnodu.mp3



    புல்லாங்குழல்-10
    தம்பி பொண்டாட்டி -1992 - என் எண்ணம்
    Mind blowing romantic musical Flute! எவ்வளவு வர்ணங்கள் காட்டுகிறார் ராஜா.
    Flute-Un Ennam-Thampi Ponndatti.mp3

    புல்லாங்குழல்-11
    தீர்த்தக்கரையினிலே -1987- விழியில் ஒரு கவிதை படித்தேன்.
    அடுத்தக் கட்டம் என்பதற்கு பல பல உதாரணங்களில் ஒன்று. கதம்ப இசையில் குழல் சிறிதாக ஒத்தப்பட்டு அலங்காரப்படுத்தப்படுகிறது.

    0.03-0.10 பிரமிக்க வைக்கிறார்.real stunner!தேஷ் ராக சுரங்களும் தெறிக்கிறது.
    Flute-Vizhiyil Oru Kavithai-Theerthakkaraiyinile.mp3


    கிட்டத்தட்ட முதல் 15 வருட மேஸ்ட்ரோவின் முக்கால்வாசிப் பாடல்களில் வயலினுக்கு அடுத்து புல்லாங்குழல் நாதத்தில் தடுக்கி விழுவீர்கள்.இதில்நிறைய கிராமம் சார்ந்தப் படங்கள்.

    மேஸ்ட்ரோவின் இசையின் எப்பவுமே ஆச்சரியப்படுவது :-
    ஒரு இசையிழையும் அதனுடன் துரிதகதியில் இன்னொரு இசையிழை சேரும்போது அசட்டுத்தனம் இல்லாமல் இணைவது... இசைவது...
    அபஸ்வரம் தட்டாமல் இணைவது
    ”ஆத்மா”(soul) கலந்து இந்த இணைவதும் இசைவதும்

    வெஸ்டர்ன் கிளாசிகல் பின்னணியில் ஒரு பு.குழல் நாதம்:
    அஜந்தா-2007 -தூரிகை இன்றி.
    Flute-Thoorigaiindri-Ajantha.mp3

    முதல் மரியாதை-1985:
    மேஸ்ட்ரோ புல்லாங்குழலை இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரமாக உலவ விட்டுள்ளார்.அத்தனை புல்லாங்குழல் நாதங்கள். தமிழ்நாடு மறக்கவே முடியாது இந்தப் புல்லாங்குழல் நாதங்களை.







    ராசாவே வருத்தமா! கூ கூ!

    நவீனப்படுத்தப்பட்ட கிராமிய சாயல் கொடுக்கப்பட்டுள்ளது.குழலின் துளைகளினிடையே கசியும் உணர்ச்சிகள் விவரிக்க முடியாதவை.

    Flute-Antha Nilavathan-Mudhal Mariyathai.mp3

    Flute-Vettiveru Vaasam-Mudhal Mariyathai.mp3

    Flute-Mudhal Mariyathai-PoongatruThirumbuma.mp3

    பிரமிக்கத்தக்க விஷயம்:

    63 வகையான புல்லாங்குழல் இடையிசைகள்(interludes) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.ஒன்றின் சாயல் மற்றதில் இல்லை.back to back xeroxம் இல்லை. It is a amazing achievement!

    காரணம்:
    பல வித கலவைகளில் (combinations) இசை கோர்க்கப்படுகிறது.

    எப்படி சாத்தியமாகிறது இந்த கலவைகள்?

    இசைக்கருவிகளைப் பற்றிய நுண்ணிய அறிவு
    நோட்ஸ் எழுதும் வேகம்/திறமை
    வெஸ்டர்ன் கிளாசிகல்/கர்நாடக இசை/கிராமியம்,இந்துஸ்தானி.. எல்லாம் விரல் நுனியில்
    மாற்றிப்போடும் தாளங்கள்/இசைக்கருவிகள்
    permutation & combination
    மாத்தி யோசி கான்செப்ட்
    காட்சியமைப்பு
    சில வித்தியாசமான இயக்குனர்கள்
    அனுபவம்
    டூயட்டில் புல்லாங்குழல்:
    சின்னத்தாயி-1992- நா ஏரிக்கரைமேலிருந்து.
    மனதுக்கு நெருக்கமான பாட்டு.
    Flute-Naan Eraikkaraimel-Chinnathayee.mp3

    கோபுர வாசலிலே-1991- காதல் கவிதைகள்
    அமர்க்களமான அரேஞ்மெண்ட்.0.46-0.47 ல் கலக்கல்.054-1.18 பரந்த வானில் ஏகாந்தமாக கூவிக்கொண்டுச் செல்லும் ஒற்றைப்பறவையின் மொழி.
    Flute-Kadhalkavithaigal-Gopura Vaasalile.mp3

    ஆராதனை-1981 - ஒரு குங்கும செங்கமலம்
    காட்டில் இந்த இசையை இசைத்தால் பதிலுக்கு சத்தியமாக கூவத்தான் செய்யும் பெயர் தெரியாத பறவைகள்.
    Flute-Oru Kunguma-Aaradhnai.mp3

    கனிவு உணர்ச்சி:
    உதிரிப்பூக்கள்-1979-அழகிய கண்ணே
    Flute-UthiriPookal-AzhagiyaKanne.mp3

    கண்ணே கலைமானே-1988-நீர் விழ்ச்சி தீமூட்டுதே
    Flute-Neervizhchi-Kanne Kalaimane.mp3

    வித்தியாசமான உணர்ச்சிகள் வித்தியாசமான நாதங்களில்:

    மோகமுள்-1995-கமலம் பாத கமலம்
    Flute-KamalamPaadha-Mogamull.mp3

    பாக்யாதேவதா - 2009-அல்லிப்பூவே மல்லிப்பூவே
    Flute-Allipoove-Bhagayadevatha.mp3

    மணிப்பூர் மாமியார்-1982 -ஆனந்த தேன்காற்று
    Flute-Aanandhathenkaatru-ManipurMamiyar.mp3

    வருஷம்-16 -பூ பூக்கும் மாசம்
    ராஜாவின் மாஸ்டர் பீஸ்.வீணையும் புல்லாங்குழலும் தனியாக உரையாடிபடியே கடைசியில் இணைவது அருமை.Awesome maestro! He is music magician.இந்த மாதிரி இசைக்கோர்ப்புகள் அனாசியமாகப் போடுகிறார்.
    Flute-Varusham-16-PooPookkum.mp3

    முரட்டுக்காளை-1980- மாமன் மச்சான்
    தாளம் புல்லாங்குழலை தோற்கடிக்கிறது.
    Flute-MamanMachan-Murattu Kalai.mp3

    அரண்மனைக்கிளி-1993-ராசாவே உன்னை விட


    ”அன்னக்கிளி உன்ன தேடுதே”வின் 1993 வெர்ஷன். ரெண்டுமே ஜானகிதான்.0.35-0.54 அட்டகாசம்.இந்தப் பாட்டின் மெட்டை மிகவும் ரசிப்பவன்.
    Flute-Raasave Unnai-Aranmanaikili.mp3

    சிங்காரவேலன் - 1992 -தூது செல்வதாரடி.
    புல்லாங்குழலோடு தபலாவும் தட்டப்படும் இடம் 0.10 அருமை ரம்யம்.
    Flute-ThoodhuSelvadharadi-Singaravelan.mp3

    என்றும் அன்புடன் - 1992 - நிலவு நிலவு வந்தது

    Flute-Nilavuvandhadhu-Endrum Anbudan.mp3

    மெல்லத் திறந்தது கதவு -1986 - குழலூதும் கண்ணனுக்கு
    Flute-KuzhaloothumKannanukku.mp3

    மோகமுள்-1995-சொல்லாயோ
    Flute-Sollayoo-Mogamull.mp3



    Flute-Sevanthipoomudicha-16Vayathinile.mp3

    Flute-80Rusikanda Poonai--EnNenjamUnnodu.mp3

    Flute-SalangaiOli-VaanPole.mp3

    Flute-Bharathi-EthilumIngu.mp3

    Flute-ThendraNeePesu-Kadavul Amaitha Medai.mp3

    Flute-SandhyavukkuVirinja-Manjum Kulirumi.mp3

    ரோசாப்பூ ரவிக்கைக்காரி-1979-என்னுள்ளில் எங்கோ
    இந்தப்பாட்டின் ஒரு துளியும் அதன் உணர்ச்சிகளும் மனதைக் பிசையக் கூடியது.b>0.36-0.55 இரு புல்லாங்குழல் பேசும் மொழி ரகசியமானவை.அதன் அந்தரங்கம் புனிதமானவை.

    இளையராஜாவின் முதல் ஐந்து பாடல்களில் இது கட்டாயம் இடம் பிடிக்கும்.


    Flute-Ennullilengo-Rosappu Ravikaikari.mp3

    மெட்டி-1982-சந்தக்கவிகள் பாடிடும்
    புல்லாங்குழலுக்கு இணையாக கோரஸ் வயலின்கள் டால்பின் மீன்கள் போல துள்ளி விளையாடுகின்றன.
    Flute-Sandhakavigal-Metti.mp3

    Flute-KalaKalakkum-Eramana Rojave.mp3

    கிளாசிகல் ரொம்ப ஸ்டைலாக(மல்லுவேட்டி).
    Flute-MalluvettiMinor-Kathiruntha Malli.mp3

    செந்தாழம் பூவில் வந்தாடும் புல்லாங்குழல் நாதங்கள்.
    Flute-Senthazham Poovil-Mullum Malarum.mp3

    வித்தியாசமான சின்னச் சின்ன நாதங்கள்:-

    லேடிஸ் டெய்லர்-1986(தெலுங்கு)-பொரப்பட்டித்திதி
    Flute-Ladies Tailor-Porapaatidhi.mp3

    ஆ ராத்திரி -1983-நீலிமதன்(மலையாளம்)
    Flute-Aa Rarathri(movie)-Ee Neelimathan.mp3

    மகளிர் மட்டும்-1994 கறவ மாடு மூணு
    Flute-KaravaiMaadu-Magalirmattum.mp3


    மரகதவீணை-1986 -மரகதவீணை இசைக்கும்
    Flute-MaragathaVeenai.mp3

    உள்ளம் கவர்ந்த கள்வன் - 1988
    Flute-Ullam Kavarntha Kalvan-Naadirukkum Nilamai.mp3

    குணா-1991 - உன்னை நானறிவேன்
    Flute-Unnainanariven-Guna.mp3

    குருசிஷ்யன் -1988 - உத்தமபுத்திரி நானு
    Flute-Uthama Puthiri-GuruShishyan.mp3

    உதிரிப்பூக்கள்-1979-ஹேய் இந்த பூங்காற்று
    Flute-UthiriPookkal-HeyIndhaPoonkaatru.mp3

    கோடை மழை-1986 -துப்பாக்கி கையிலெடுத்து
    Flute-KodaiMazhai-ThupakiKayil.mp3

    என் அருகில் நீ இருந்தால் - 1991
    Flute-Udhayam Neeye-En Arugil Nee.mp3


    டெயில் பீஸ்:
    (30-03-11)ஆ.விகடன் கேள்வி:“ மத்த இசையமைப்பாளர்களை ரசிப்பீர்களா?”









    இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பதில்: “ ஒரே ஒரு இசையமைப்பாளரை ரசிப்பேன். அவர் இளையராஜா. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவருக்கு “மாஸ்ட்ரோ”னு சின்ன பட்டத்தைக் கொடுத்திருக்காங்க. அந்த யானை சாப்பிட்டுப் போட்ட மிச்சத்தை வெச்சுத்தான் நாங்க விளையாடறோம்!’


    Thanks to RA

  4. #3
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையராஜா- King of Heavenly Hummings"




    சினிமாவில் ஹம்மிங் பற்றி இந்தப் பதிவில் சினிமா ஹம்மிங தேவதைகள் பார்த்தோம்.அதில் இளையாராஜாவுக்கு முன்/பின்/சமகாலத்திய இசை ஜாம்பவான்களின் பாடலில் ஹம்மிங் பயன்படுத்தலைப் பற்றி பார்த்தோம்.

    இளையராஜா புதுமை ஸ்பெஷலிஸ்ட் என்பதால் ஸ்பெஷலாக அவருக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு.மேஸ்ட்ரோ எதையுமே வித்தியாசமாகக் கொடுப்பவர்.ஹம்மிங்கை விட்டுவைப்பாரா?

    இது தேவதைகளின் மொழி.பாடலை உணர்ச்சிகளால் ஒப்பனைச் செய்பவை.அதிலும் புதுமை புகுத்தி இருக்கிறார்.ஹம்மிங்கை ஒரு இசைக்கருவியாக உபயோகிக்கி்றார்.

    உணர்ச்சிகள் கலையாமல். எந்த வித gimmicks இல்லாமல் அழகாக ஹம்மிங்கை spray paint செய்திருப்பார்.


    ஜென்சி ஹம்மிங்கில் முன்னணி. பின்னுகிறார்.பிறகு ஜானகி/வாணி/சசிரேகா/ஷைலஜா/உமா/சித்ரா/சுஜாதா/ராதிகா/பூரணி/சுசிலா.

    HUmm_AnnaiUnnaThed.mp3


    ”அன்னக்கிளி உன்னத்தேடுதே”-1976-அன்னக்கிளி
    முதல் படம்.முன் இருந்த ஜாம்பவான்களின் சாயல் இல்லாதலட்சணமான ஹம்மிங்.இவர் யார் என்று தெரியாமலேயே மனதில் படிந்தது.

    HUmm_RasaveUnnaNambi.mp3

    ”ராசாவே உன்னை”-1985-முதல் மரியாதை
    ஜானகியின்ஆரம்ப கிராமத்து வெகுளி ஹம்மிங்.மனதில் “பச்சக்” என்று ஒட்டிக்கொள்ளும். வித்தியாசம் அன்ட் அட்டகாசம்.

    ”மஞ்சள் நிலாவுக்கு”-1979 -முதல் இரவு
    Humm_manjalnilavukku.mp3

    “ஊஊ......................” என்று ரயிலை கட்டி இழுத்துச்செல்வது மாதிரி ஹார்ன் பெண் ஹம்மிங் சூப்பர்.

    ”என் இனிய பொன்”-1980-"மூடுபனி”
    Humm-EnIniya Pon.mp3

    கிடாரைத் தொடர்ந்து தேவதைகள் அடுத்து புல்லாங்குழலைத் தொடர்ந்து தேவதைகள் வேறுவிதமாக. சூப்பர்.ஸ்டைல் ஹம்மிங்.

    ”ராத்திரியில் பூத்திருக்கும்"”--1983-தங்கமகன்
    Humm-Rathiriyil Poo.mp3

    இந்த ஹம்மிங் வருவதற்கு முன்/பின்/சேர்ந்து இசையை வாரி இறைக்கிறார்.stunning! அடுத்ததும் அசத்தல்.

    "பூவில் வந்து”-1982-காதல் ஓவியம்
    Humm_Poovilvandu.mp3

    பாலுவின் ஆரம்ப மோகனராக ஹம்மிங் அருமை.ஹம்மிங் முடிந்தவுடன் வரும் இசையில் நம்மை வேறு உலகத்தில் மிதக்க விடுகிறார்.சின்னசாமி என்றால் ராசய்யா ஸ்பெஷல் உழைப்பு?











    கிழ் வரும் ஹேம் ராம் பாட்டின் ஹம்மிங்கை கேட்காமல் போகாதீர்கள். மிகவும் வித்தியாசமானது.பிரமிக்க வைக்கும் இசைக்கோர்ப்பு. Mindblowing composition by Isai Jnani Ilayaraja!

    Humm - Neepaartha.mp3

    ”நீ பார்த்த பார்வை” -2000-ஹே ராம்
    முன்னணியில் ராணி முகர்ஜி மனதை அள்ளும் குரலில் ஏதோ பெங்காலியில் பேசுகிறார்.பின்னணியில் மெலிதான பியானோ இசை. இரண்டும் இனிமையாகப் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு தேவதை குரல் வருடிவிட்டுப் போகிறது. பிரமிப்பு.

    பின் வரும் ஹம்மிங்கை கவனி்யுங்கள். இரண்டு விதமாக வருகிறது.அடுத்த பிரமிப்பு.

    "செந்தாழம் பூவில்”-முள்ளும் மலரும்-1978

    Humm_SenthaPoovil.mp3

    யேசுதாசின் வித்தியாசமான hill station driving humming?. ஞானி சார் அட்டகாசம்!.என் பாட்டி(இப்போது உயிரோடு இல்லை) ஹம்மிங்கை ரசித்துக் கேட்பார்.பெண்களால் அதிக அளவில் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் பாட்டு.

    ( மென்மையானஹம்மிங்கும், இதன் காட்சியும், பாடல் இனிமையும்,இசைக்கோர்ப்பும், ஹோம்லி ஷோபா/சிவப்பு கலர் புடவைப் பெண்/சரத்பாபுவின் ஆளுமைகள் மனஇயல்ரீதியாக பெண்களை ஒன்ற வைத்தன என்று சிலோன் ரேடியோவில் சொல்லக்கேட்டிருக்கிறேன்)

    "காளிதாசன் கண்ணதாசன்”-1983-சூரக்கோட்டை சிங்கக்குட்டி
    Humm-KalidasanKanna.mp3
    ஆரம்பம் ஹம்மிங்.அட்டகாசம்.மேஸ்ட்ரோவின் குரலும் இழைகிறது.

    ”மெட்டி...மெட்டி”-1982-மெட்டி

    Humm-Mettimetti.mp3
    அற்புதமானஆண் ஹிந்துஸ்தானி டைப் ஹம்மிங் . இதே படத்தில்”மெட்டி ஓலி” பாட்டின் ஆரம்பத்தில் “கவுண்டர் பாயிண்ட்”ஹம்மிங் ராஜா ஒரு மெட்டிலும் ஜானகி வேறொரு மெட்டிலும் வித்தியாசமான ஹம்மிங்

    "ஆனந்த தேன் காற்று”-1982-”மணிப்பூர் மாமியார்”
    எஸ்.பி.ஷைலஜாவின் இந்துஸ்தானி ஹம்மிங் இனிமையோ இனிமை.
    24Humm_anandthen.mp3


    "என்னுள்ளே”-1993-வள்ளி Heavenly humming
    Humm-ennulle ennule.mp3

    "ஒரு ராகம்”-1982-ஆனந்தராகம்
    Humm_OruRagam1.mp3

    வித்தியாசமானக் கற்பனை. இதன் ஆரம்ப ஹம்மிங்கில் இதனுடன் பின்னி வரும் ”கும் கும்”தாளக்கட்டு இந்தப் பாடலுக்கு ஒரு சோக/ஏக்க effect கொடுக்கிறது.வேண்டிய இடங்களில் ஹம்மிங்கை அழகாக spray paint செய்திருக்கிறார் மேஸ்ட்ரோ.

    "தெய்வீக ராகம்”-1980-உல்லாசப்பறவைகள்

    (ஒலிப்பதிவு சரியில்லை) இதுவரைக் கேட்காத புதுமையான மனதை வருடும் தேவதை ஹம்மிங். It is absolutely out of the world humming!.எனன ஒரு அதீத கற்பனை!ஜென்சி சூப்பர்.

    0.05-0.16 ஒரு வகையும் 0.45-1.04ல் வேறு வகையும்(ஹம்மிங் மற்றும் அதன் எதிரொலி)1.05 -1.10(ரிபீட்). “நீராட்டவா”2.20-2.23ல்கொஞ்சமாக 2.30-2.35 மீண்டும் பழைய ஹம்மிங்கிற்கு திரும்பும் தேவதைகள்.3.11 -3.20 ”தந்தானான”.

    ”தெய்வீக ராகம்” (0.51)என்ற வரியை ஜென்சி உச்சரிக்கும்போது பின்னணியைக் கவனியுங்கள்.”தெய்வீக....” என்ற எதிரொலி வரும்.ஆனால் 2.36ல் மீண்டும் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது எதிரொலி வராது.ஆனால் மறுபடியும் 4.04ல் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது வரும்.

    ரூம் போட்டு உண்மையாக இசை(யோசி)க்கிறார் ராஜா.

    3.45-3.54 ல் 2.20-2.23 ஹம்மிங் ரிபீட் ஆகும் என்று நினைப்போம்.ஆனால் அதேதான் ஆனால் கால அளவு மாறுபட்டு வித்தியாசமாக வரும்.அதான் மேஸ்ட்ரோ! பாடல் முடியும் போது மீண்டும் பழைய ஹம்மிங்.வளையம் முற்றுப்பெறுகிறது.

    ஆடியோ சரி இல்லாததால்.பாட்டின் வீடியோவைப் பார்க்கவும்.



    ”ஆயிரம் மலர்களே”-1979-நிறம் மாறாத பூக்கள்
    ஜென்சியின் மனதை உருக்கும் ஹம்மிங்.நேரடியாக கேட்காமல் எங்காவது காற்றில் மிதந்து வரும்போது கேட்டால் அள்ளிக்கொண்டு போகும்.
    I love you Jency!
    Humm-AayiramMalargale.mp3

    ”நான் ஒரு பொன்னோவியம்”--1980-கண்ணில் தெரியும் கதைகள்
    Humm-Nan oru pon.mp3

    இதில் குரூப் ஹம்மிங் இரண்டு அடுக்குகளாக வரும்.ஒரு நீண்ட அருமையான கிளாசிகல் ஹம்மிங்கும் உண்டு.

    ”ABC நீ வாசி”-1984-ஒரு கைதியின் டைரி
    ”வரைமுறை என உண்டு வாய் பொத்தி கேளு ”ஆரம்பிக்கும் முதல் சரணத்தில் வாணி/யேசுதாஸ மாறி மாறி பாடும்போது ”ஆஆஆஆஆ” பின்னணி ஹம்மிங்கும்,அடுத்து வரும் வரிகளில் இவர்கள் மாறி மாறி ஹம் செய்வார்கள்.

    ஆரம்ப இசையை கவனியுங்கள் இசையோடு இசையாக ஹம்மிங்கும் ஒரு இசைக் கருவியாக பின்னிக்கொண்டுவரும்.

    ”கேளடி கண்மணி”-1989-புது புது அர்த்தங்கள்
    Humm_KeladiKancom.mp3

    எவ்வளவு வித்தியாசமான ஹம்மிங். அட்டகாசம்.எப்படியெல்லாம் ஹம்மிங்கு யோசிக்கிறார்.

    இன்னும் பல அவற்றில் சில
    1.தம் தம் தன்னம்
    2.உறவெனும் -நெஞ்சத்தைக்கிள்ளாதே
    3.பொன்வானம் பன்னீர்
    4.எனதுவிழியில்
    5.காற்றில் எந்தன் கீதம்


    Thanks to RA

  5. #4
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையராஜாவின் -நாத உரையாடல்கள்



    மேஸ்ட்ரோவின் பாடல்கள் ஆரம்பம் முதல் முடியும் வரை மெலடியான வர்ணஜாலம்தான்.மிக முக்கியமானது இசைக்கருவிகளுக்குள் நடக்கும் இனிமையான நாத உரையாடல்கள். “கலகல” வென்று இவைகளின் இடையில் நடக்கும் பல வித ரசங்கள் படர்ந்த உரையாடல்கள் மனதை வருடும். Full of emotions and soul stirring!

    சின்ன சின்ன நாதங்கள் ஆச்சரியமாக சந்தில் சிந்து பாடி கண்ணாமூச்சி ஆடும்.எலக்ட்ரானிக்சில் எழுப்பப்பட்ட செயற்கையான நாதம் கிடையாது.ஆதமார்த்தமாக பார்த்துப்பார்த்து இயற்கை இசைக்கருவிகளில் மீட்டெடுத்தது.உரையாடல்களில் மியூசிகல் சேர் இசை போல் அமெச்சூர் நெடி அடிக்காது.

    இசைக்கோர்ப்புகள் இணையும் இடங்களில் அசட்டுத்தனம் இருக்காது.

    எண்பதில் வந்த பாடல்களின் உரையாடல்கள் முக்கியமானவை.ஏன்? எல்லாம் நேரலை ஒலிப்பதிவுகள்.தப்பு செய்தால் மீண்டும் இசைக்க வேண்டும்.அடுத்து சிங்கிள் மைக்(?).

    சில உரையாடல்கள் eternal bliss!

    புதுப்பட்டி பொன்னுத்தாயி
    ஊர் அடங்கும் சாமத்திலே (உமாரமணன்-ஸ்வர்ணலதா)

    இதமான தாளக்கட்டு..”யாரு அது யாரு யாரு” ஸ்வர்ணா கேட்க பதிலாக உமாவின் ஹம்மிங் அருமை.1.05 - 1.16 வரை ஹிந்தோள சாயலில் புல்லாங்குழலும் வயலினும்(செல்லோ?)நடத்தும் பேச்சுவார்த்தை பிரமிக்க வைக்கிறது.
    அமானுஷ்யமாக வரும் வயலினின் மேற்கத்திய நாதம் வித்தியாசம்.

    தாளத்தின் ரிதத்திலேயே ”நீ தந்த பட்டுச் சேலை” என்று உமா முதல் சரண வரிகளை எடுப்பது அருமை.

    கிழே படத்தில் இருக்கும் காயத்ரி ஆரம்பகாலத்தில் ராஜாவுக்கு வீணை வாசித்தவர். ..!ராஜா off the trackல் வாசிக்கச் சொல்லுவாரமே!)










    படம்:பூந்தளிர்
    பாடல்-ஞான் ஞான் பாடனும் ( ஜென்சி)

    பாடல் 1979.இன்னும் கமகமவென இப்போது பறித்த கறிவேப்பிலை மணம்.இது ஒரு வித்தியாசமான கலர்புல் கம்போசிங்.ஜென்சியின் இளசான ரம்மியமான குரல்.

    மலையாளமும் தமிழும் கலந்து வருவது ஒரு வசீகரம்.இந்த பாட்டில்இசை நாதங்கள் பூத்துக்குலுங்கியபடிதொங்கிக்கொண்டிருக்கும்.

    ஆரம்பமே ரொமாண்டிக் தபலா.. 00.00-0.23 முதல் 0.10ல் வயலினில் அழகு படுத்தி 0.23ல் பாடகி பல்லவி வரும் என்று நினைப்போம் ஆனால் 0.24ல் வேறு ஒரு நாதத்தில் (synth)ஒரு பைனல் டச் கொடுத்துவிட்டுதான் பல்லவியில் சேச்சி பாட்டு படிக்கும் .அடுத்து 1.10 -1.39 வர்ணஜால உரையாடலைக் கவனியுங்கள்.அதுவும் 1.31 -1.36 புல்லாங்குழல் - வயலின் உரையாடல் சுகந்தம்.அடுத்த பேச்சு வார்த்தை 2.31 -3.07











    படம்:புதிய வார்ப்புகள்
    பாடல்-தம்தனனம் (ஜென்சி/வசந்தா)










    பாடகி வசந்தா(”மணமாலை வரும்..! சுப வேளை வரும்..!மண நாள் திருநாள்)





    சின்ன சின்ன சந்தங்களில் ஒரு இனிமை கம்போசிங்.

    முதலில் வீணையில் மீட்டெடுத்த ராகம் ஷண்முகப்ரியாவின் நாதங்கள் அலையாக அலையாக வரும்.இதில் குரல் உரையாடல்கள் ஒன்றை ஒன்று இனிமையாக பின்னியபடி வரும்.இதில் ஜென்சியின் மூக்கிசை சூப்பர்அடுத்து முதல் 1.08 -1.44 வரை ”ஒரு ரூம் போட்டு” நாதங்களின் வயலின்,வீணை,புல்லாங்குழல்,synth,பெலஸ்,ஹம்மிங் கலந்த ுரையாடலைகவனியுங்கள்.ஆச்சரியமாக மேற்கத்திய talkக்கும் வரும்.

    தெலுங்கச்சி(வசந்தா) vs மலையாளச்சி (ஜென்சி)உச்சரிப்பையும் கவனியுங்கள்.

    படம் -மோகமுள்பாடல் :சொல்லாயோ வாய் திறந்து -ஜானகி

    ”தம்தனனம்” மெட்டும் இந்தப் பாட்டின் மெட்டும் ஒரே சாயல் அடிக்கும்.காரணம் ரெண்டுமே ஷண்முகப்பிரியா ராகத்தில் கம்போஸ் செய்யப்பட்டது.”தம்தனன”பாட்டின் எமோஷன் ஒரு விதம்.

    இது ஒருசோகஎமோஷன்.எப்படி?.அதான் மேஸ்ட்ரோ.

    இந்த ராகம் பல உணர்ச்சிகளைப் பிரதிபலிக்ககூடியது.பிரித்து மேயலாம்?1.08 -1.34 சோக உரையாடலில் வீணை(சிதார்?)யின் நாதத்திற்கு எக்கோவாக வயலின் நடுவே புல்லாங்குழலின் சந்தில் சிந்து. உருக்கும் பாடல் வரிகள்.

    படம் வந்த போது தி.ஜானகிராமன் உயிரோடில்லை.


    பாடம்: நீங்கள் கேட்டவை(ஜானகி/எஸ்பிபி)
    ஒ.. வசந்த ராஜா!

    ஆரம்பமே ராஜா கம்பீர ட்ரம்சில் குமுறல்.1.03 - 1.35 இந்திய இசையில்மிருதங்கம்,சிந்தசை,புல்லாங்குழல்,வயலின ்,
    வீணை (மிருதங்கம் -புல்லாங்குழல் ஸ்டைல் உரையாடல் அட்டகாசம்)உரையாடல்.

    2.39 -3.14 மேற்கத்திய இசையில் உரையாடல்.ஒரு இடத்தில் நின்னு பேசுவார்.ஓ ... ராஜா சூப்பர்!


    படம்: தம்பிக்கு எந்த ஊரு
    பாடல்:என் வாழ்விலே வரும் அன்பே

    0.00 -0.44 பிறகு 1.08 -1.28 தபலா vs கிடார் 1.28 -1.55 வயலின் -சிந்தசை-கிடார் வயலின் -வீணை-புல்லாங்குழல்-ட்ரம்ஸ் அடுத்து 3.33 -3.55ஊட்டி டிரெயினுக்கு உரையாடலில் ஒரு பிஜிஎம்.அசத்தல்!

    படம்:தீர்த்தக்கரையினிலே
    பாட்டு::விழியில் ஒரு கவிதை மனோ-சிதரா


    ஆரம்பமே ஷெனாயின் நாதக் கிளர்ச்சியில் வயலினின் உரையாடல் பிறகு கிடார்....1.20 -1-29 என்ன ஒரு மங்களகரமான இசை சங்கமம்? stunning! தேஷ் ராகத்தின் ஸ்வர சாயல்கள் (?) தெறித்தப்படி .........

    அடுத்த இசை அதிர்ச்சி அண்ட் கவுண்டர் பாயிண்ட்ஸ் 2.40 - 3.03 .

    தபலா அசத்தல்.சித்ரா குரல் இனிமையோ இனிமை.! அட்டகாசம்.

    நெருடல் “இத”ளி”ல் ஒரு அமுதம் குடித்தேன் - மனோ

    சோகத்திற்கு ஷெனாய். ஆனால் இதில் மகிழ்ச்சிக்கு வாசிக்கப்பட்டிருக்கும். தல! லொள்ளு ஜாஸ்தி!இது மாதிரி நிறைய லொள்ளு பண்ணுவார்.

    ஹெட்போனில் கேட்டால் வேறு சில கருவிகளின் நாதங்களும் கேட்கலாம்.













    இவர்தான் அருண்மொழி பாடுவார்.ராஜாவுக்கு புல்லாங்குழல் வாசிப்பார்


    காதல் ஓவியம்

    பூவில் வண்டு - SPB

    முதலில் ரம்மியமான ஹம்மிங்கைத் தொடர்ந்து மோகன சாயலில் 0.27.....................0.56 ?.அடுத்து 2.56 ...3.10 ?

    Thanks to RA

  6. #5
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    டைரக்டர் மகேந்திரன் தமிழ்த்திரையுலகில் (1978-90)ஒரு முக்கியமான ஆளுமை.சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியவர்களுள் ஒருவர்.

    முக்கியமாக சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை காட்சிகளினூடே பார்வையாளனை பயணிக்க வைத்துக் கதைச் சொல்பவர்.காட்சிகளே கதாபாத்திரமாக,ஓவியமாக திரையில் தீட்டப்பட்டு உணர்ச்சிகள் பார்வையாளனைத் தீண்டும்.அவன் கதாபாத்திரங்களுடன் உலாவுவான்.

    மிக முக்கியமாக காட்சிகளில் விரவிக்கிடக்கும் மெளனம் அர்த்தபுஷ்டியானது.





    இப்படிப்பட்ட படைப்பைப் படைப்பவன்தான் உண்மையான படைப்பாளி. சிருஷ்டி கர்த்தா.டைரக்டர் மகேந்திரன் ஒரு சிருஷ்டி கர்த்தா.பார்த்துப் பார்த்துச் செதுக்கும் ஓவியர்.இப்படி இவருடன் இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் கைக்கோர்த்து ஒரு கவிதையை ஓவியமாக தீட்டி இருக்கிறார்கள் அல்லது ஒரு ஓவியத்தைக் கவிதையாக எழுதி இருக்கிறார்கள்.

    அந்தக் கவிதை ஜானி திரைப்படத்தில் வரும் “என் வானிலே ஒரே வெண்ணிலா” என்ற பாடல் காட்சி.இவருடன் இணைந்த மற்ற இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் இசைஞானி இளையராஜா ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.







    இந்தப் பாடலின் காட்சி உள்ளும் புறமுமாக விரிக்கப்படுவதில் அசோக்குமாரும் ராஜாவும் தங்கள் கற்பனைத் திறனை அள்ளித்
    தெளித்திருக்கிறார்கள்.பாடலை எழுதிய கங்கை அமரனும் பாராட்டுக்குரியவர்.நேரடியாக எதையும் சுட்டாமல் கவித்துமாக உள்ளது.

    காட்சி நேர்த்தியாக romanticize செய்யப்பட்டு இருக்கிறது.








    இந்தக் கவிதைக்கு யதார்த்தமான பின்னணி உண்டு.

    குற்றப் பின்னணி உள்ள கதாநாயகன் ஜானி ஒரு இசை ரசிகன்.பிரபல பாடகி அர்ச்சனாவின் ரசிகன்.அன்று கேட்ட”ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்” பாடல் இவனுக்காகவே பாடப்பட்டதுபோல் உணர்கிறான்.மனம் குதூகலிக்கிறது.இசை நிகழ்ச்சி முடிவில் அவளைப் பாராட்டி பூங்கொத்து கொடுக்க முடியாமல் கூட்டம் இவனை தடுத்து விடுகிறது.

    மறு நாள் அவள் வீட்டிற்கு தொட்டி தொட்டியாக வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டமே அனுப்பி வைக்கிறான்.மற்றொரு நாள் இருவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.கடற்கரையில் அர்ச்சனா உலா போகையில் தான் பாடிய “ஒரு இனிய மனது” பாடல் காற்றில் அலைந்து வருகிறது.அதை நோக்கி போகையில் ஒரு படகில் ஜானி மெய் மறந்துப் பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறான்.பரஸ்பர அறிமுகத்தில் இவன்தான் பூக்கள் அனுப்பியவன் என்று தெரிகிறது.தானும் அர்ச்சனாவைப் போல தனி இருவருக்கும் தங்களைத் தவிர யாரும்இல்லை என்பதில் இருவருக்குள்ளும் மெலிதான பிணைப்பு ஏற்பட்டு ஒரத்தில் ஒரு மொட்டு அவிழ்கிறது.

    ”ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை... எனக்கு மட்டும் எனக்காக மட்டும்.. தனியாக நீங்க பாடனும்.தனியா கேட்கனும்.எல்லார்கிட்டயும் சொல்லி பெருமைப் படனும்” ஜானி ஆர்வத்துடன் கேட்கிறான்.

    ”நிறைவேறுவது கஷ்டம்தான்...மாட்டேன்னா என்ன செய்வீங்க....” செல்லமாக சீண்டிவிட்டு ...”நாளைக்கு வீட்டுக்கு வாங்க" புன்னகையுடன் சம்மதிக்கிறாள்.ஜானியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

    (ஒரு பாமர ரசிகனின் வெகுளித்தனமான ஆசையை நிறைவேற்றுவதில் அர்ச்சானவுக்கு ஒரு fatal attraction இருக்கிறது)


    மறுநாள்: ஜானி சட்டைக்குள்ளே “MUSIC THE LIFE GIVER" என்ற வாசகம் எழுதிய மஞ்சள் பனியன் (பாமரத்தனமாக??) அணிந்து அவளை சந்திக்கச் செல்கிறான்.

    வீட்டில் நுழைந்ததும் ஒருஅழகான பியானவும் அதைச் சற்றி அவன் கொடுத்த வண்ணப் பூக்களும் பார்வையில்பட்டு ”பியூட்டி புல்... பியூட்டி புல்...” நெகிழ்ந்துப்போய்விடுகிறான்.








    பியானோ வாசிக்க முயற்சிக்கச் சொல்லி அவனும் மொன்னையாக மெட்டுவாசிக்க முயற்சிக்க ” no.. no... just listen..!" என்று பியானவில் அவள் விரல்கள் மீட்ட நாதங்கள் மீன்களாய் துள்ளி கவிதையாக எழ ஆரம்பிக்கிறது.

    பாடல் முழுவதும் அவன் உடல்மொழி இயல்பாக இருக்கிறது.

    காட்சி......







    கேமரா ஊர்ந்து தூரிகையால் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்க உயிர் துடிப்புடன் இயங்க ஆரம்பிக்கிறது காட்சி.இசை மென்மையான வெஸ்டர்ன் கிளாசிகலில் காட்சியை நகர்த்துகிறது.அர்ச்சனாவின் வானில் வெண்ணிலாவும் காதல் மேகங்களும் கவிதை தாரகைகளும் ஊர்வலம் போக ஆரம்பிக்கிறார்கள்.

    அர்ச்சனாவின் உடை ஒரு தனி மொழியே பேசுகிறது.காட்சியின் பின்னணி ஒரு பாத்திரமாக பரவசப்படுத்துகிறது.காட்சிகள் உள்ளேயும் வெளியேயுமாக வழுக்கிக்கொண்டு பயணித்தப்படி போகிறது.ஜானி ” எல்லாம் எனக்குத்தான் எனக்குத்தான் ... எனக்குத்தான்...”கற்பனைச் சிறகடித்துப் பறக்கிறான்.

    அர்ச்சனாவின் குரலில்(ஜென்சி) இருக்கும் மழலைத்தனத்தில் காதல் இருக்கிறது.காட்சியை ஆழப்படுத்துகிறது.


    முதல் இடை இசையில் ரஜினி மனம் குதூகலித்தப்படி மேகத்தில் பறக்கிறது. உச்சக்கட்டமாக 1.22 ல் சொர்க்கத்திலிருந்து ஆசிர்வதிக்கப்படுகிறான்.Absolutely bliss..!

    முதல் சரணத்தில் ”நீரோடை போலவே’ 1.30 -1.56 ஆரம்பித்து முடியும் வரை ரஜினி,ஸ்ரீதேவி,பிரேமி மூவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.
    குறிப்பாக 1.46-1.47ல் கேமரா திரும்ப, படிக்கட்டில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தபடி பிரேமி ஸ்ரீதேவியைப் பார்க்கும் (பெருமிதம்?) பார்வை யதார்த்தம்.

    அடுத்து 1.56ல் ”நீராட வந்ததே என் மென்மை” என்று ஸ்ரீதேவி தன் குண்டு விழிகளில் எதையோ தேக்கி (காதல்?காமம்?)புன்சிரிப்போடு காட்டிவிட்டு தலைகுனிவது அருமை.

    3.26ல் வாசித்துக்கொண்டே பிரேமியை எட்டிப்பார்க்கும் இடம் ரொம்ப சுட்டி.







    இளையராஜாவின் வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்/பியானோ இழைகள் காட்சி முழுவதும் சில்லென்று வீசிக்கொண்டே இருக்கிறது.

    பாட்டை அதன் பரிமாணத்தில் உள்வாங்கி மகேந்திரனும் அசோக்குமாரும் கவிதையாக செதுக்கி இருக்கிறார்கள்.

    காவியக் காதல்களில்இரவு, நிலவு,பூஞ்சோலை, அருவி,அன்னம், புறா,மயில்,உப்பரிகை என்று காதலர்கள் உலா வருவார்கள்.

    தமிழ் திரையுலகில் இப்படி உணர்வுபூர்வமாக மென்மையாக மிகைப்படுத்தாமல் இருவருக்கும் இடையில் இருக்கும் காதலை பின்னணியுடன் பின்னி பினைந்து இசை வழியாக சொல்லி காட்சியை ஆழப்படுத்தியது அபூர்வமான ஒன்று.

    Thanks to AR

  7. #6
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையராஜா- King of Sweet Shehnai:


    தமிழ்நாட்டுக்கு நாத(க)ஸ்வரம் எப்படி மங்களகரமான வாத்தியமோ அதேபோல் வட இந்தியாவிற்கு ஷெனாய்.வட இந்தியாவின் நா(க)தஸ்வரம்.






    அங்கு திருமணம், திருவிழா,ஊர்வலம் போன்றவைகளுக்கு வாசிக்கப்படும்.ஆனால் நமக்கு இது யாராவது தேசத் தலைவர்கள் இயற்கை எய்தினால் ரேடியோவில் வாசிக்கப்படும் சோக இசைக்கருவி என்று ஒரு மைண்ட் செட். காரணம் இதன் உணர்ச்சி ஒப்பாரி அல்லது புலம்பல்.

    பூம் பூம் மாட்டுக்காரர் கையில் இருக்கும் ஒன்று என்ற ஒரு எண்ணம் வேறு உண்டு.

    வட இந்திய குதூகல ஷெனாய் :-



    ஷெனாயில் இரக்கம்/கருணை உணர்ச்சியும் நிறைய வெளிபடுவதாக என் எண்ணம்.

    மேஸ்ட்ரோ சில சமயம் புத்திசாலித்தனமாக மற்ற இசைச் கருவிகளுடன் சேர்த்து வாசிக்கிறார்.இதனால ஷெனாயின் சோக உணர்ச்சிகள் மழுப்பபட்டு தேவையான உணர்ச்சிகள் கிடைக்கிறது.

    உதாரணம்:
    புல்லாங்குழல் vs ஷெனாய்.

    இரண்டும் வெவ்வேறு உணர்ச்சிகளில்.புல்லாங்குழல் மென்மையாக.ஷெனாய் கொஞ்சம் பச்சையான சோகம்.
    Shehnai-1-Kadhal Oviyum-82-KuyileKuyile.mp3

    0.20-0.29 ஷெனாய் இசை வயலின் கலந்த வித்தியாசமான உணர்ச்சிகள்.
    Shehnai-1-Raasa Magan-94-kaathirunthen.mp3

    ஷெனாய் நாதத்தின் மெட்டு ஒரே பாணியில்(pattern) வந்து அசத்துகிறது.
    Shehnai-Sakkalathi-79-Ennapattu Paada.mp3



    0.13-0.22 குழந்தைத்தனமான ஷெனாயின் இடையே மேகங்களாக கடந்துச் செல்லும் வயலின் கவிதை. Hats off Maestro! பாமரத்தனமாக மெட்டமைக்கப்பாட்டில் இடையிடையே வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்கள்.
    Shehnai-1Mullum78 Malarum-Senthazham Poovil.mp3



    தமிழ்ப்படங்களில் சோகக் காட்சிகளில் ஒப்பாரியாக இசைக்கப்படும்.90க்கு பிறகு மிகவும் குறைந்து
    விட்டது.முஸ்லீம் கதாபாத்திரங்கள் இருந்தால் கட்டாயம் ஷெனாய் இசை இருக்கும்.உதாரணம்-சாதனை/சகலகலாவல்லவன்.

    மகிழ்ச்சிக்கும் வாசிக்கப்பட்டிருக்கிறது.”கண்ணன் பிறந்தான்”படம்: பெற்றால்தான் பிள்ளையா-1966(எம்.எஸ்.விஸ்வநாதன்)."நிலவே என்னிடம் நெருங்காதே”(சோகம்)-ராமு-1966.காதலுக்கும் வாசிக்கப்பட்டிருக்கிறது.

    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.....

    பிரமீளாவே வருத்தமாக மாமனாரிடம் புலம்புகிறார். பின்னணியில் ஷெனாய் அதை சோகத்தில் பிழிந்து வடிக்கட்டுகிறது.சூப்பர் சோக effect கொடுக்கிறது ஷெனாய்.கொடுத்தவர் எம்.எஸ்.வி.
    Shehnai-1Thangapathakkam-74-sodhanaimelsodhanai.mp3


    ஷெனாய் கலைஞர் பண்டிட் பாலேஷ்.இளையராஜாவிற்கு வாசிப்பவர்

    இளையராஜா அவர்கள் இதை எப்படி கையாண்டிருக்கிறார்?இவருக்கு எல்லாமே இசைதானே.இதையும் ”ஒரு காட்டு காட்டி” இருக்கிறார்.எப்படி?

    வழக்கமான மேதமை+ஆத்மா+புத்திசாலித்தனம்+பல பரிமாணம்+இனிமை




    எல்லா வித உணர்ச்சிகளுக்கும் இதை முயற்ச்சித்திருக்கிறார்.இதை நாதஸ்வரத்திற்கு camouflageஆக சில இடங்களில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.அதாவது இதன் நாதம் நாதஸ்வரமாக ”காட்டப்பட்டிருக்கிறது”.

    மேஸ்ட்ரோ மற்ற இசைச் சரங்களை இதனுடன் தொடுப்பதால் உணர்ச்சிகள் மாறுகிறது. நிறைய பாடல்களில் ஷெனாயுடன் புல்லாங்குழலை தொடுக்கிறார்.

    சில இசைத்துளிகள் ஷெனாய்தான் என்ற யூகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.

    அதன் இயல்பான எமோஷனான சோகத்திலேயே முதல் பாட்டை ஆரம்பிப்போம்:

    மூன்று ஷெனாய் மூன்று வித உணர்ச்சிகளில் வாசிக்கப்படுகிறது.0.06-0.15, 0.43-0.56, 1.06-1.08. கடைசி ஷெனாயை நெருங்கும் திகில் வயலின்(செல்லோ) அருமை.
    Shehnai-1Mann Vaasanai-Pothivacha-83-SAD.mp3

    இதில் தனி ஸ்டைல்.0.33ல் கோரஸ் வயலின் ஷெனாயின் மொழியை அப்படியே ராயலாக வாரியிறைப்பது அருமை.கடைசியிலும் ஸ்டைல் அருமை.
    Shehnai-Alaioosai84-Neeya Azhaithathu.mp3

    Fast beat. 0.13-0.26 அட்டகாசம்.ஷெனாயுடன் அதே வேகத்தில் அதே மாதிரி இன்னொரு இசைநாதமும் வருகிறது.அது என்ன?
    Shehnai-Rakshasadu-86-Giliga Gili Giliga.mp3

    இதன் இசை உணர்ச்சிகள் படுத்தும்.ராஜாவின் இசையில் ஒரு மைல் கல். முடிந்தால் முழுப் பாட்டையும் கேட்கவும்.
    Shehnai-Enakkaka Kathiru-81-Panimazhai Vizhum.mp3

    வயலின் சுனாமிகளுக்கிடையே மாட்டிக்கொண்ட ஷெனாயின் கதறல் அருமை.stunning emotions!
    Shehnai-Panner Pushpangal-81-Anantha raagam ketkum.mp3

    கன்னிப் பெண்ணின் குஷி
    Shehnai-KungumaChimizh-85-Poongatre.mp3

    00.10 -0.25 ஷெனாயிக்கு முன் வாசிக்கப்படும் தாளம் ஆத்மாவை வருடும்.
    Shehnai-1Manassinakkare-03- Marakkudayal.mp3

    வித்தியாசமான தாளக்கட்டுடன் ஷெனாய் நாதம் அருமை.கொண்டாட்ட மன நிலை.
    Shehnai-Ninaivellam -82-Nithya-Kanniponnu.mp3

    வித்தியாசமானது.புல்லாங்குழல்-ஷெனாய் உரையாடல் அருமை.
    Shehnai-Ponvaanam-83-Indru Nee Naalai Naan.mp3

    0.00-0.10 கிடார்- ஷெனாய் கலவை புதுசு.
    Shehnai-My Dear Kutti-84-Chellakuzhandhaikale.mp3

    வயலின் - ஷெனாய் உக்கிர உரையாடல்.மேஸ்ட்ரோவைத் தவிர யாரால் போட முடியும்.
    Shehnai-Vaidheki Kathirunthaal-84-AzhaguMalar.mp3

    மிருதங்கம்-ஷெனாய்
    Shehnai-Paayum83Puli-Pothukittu.mp3

    Shehnai-Mudhal-86-Vasantham-Aaru Athu.mp3

    எனக்கு மிகவும் பிடித்த பழைய ஷெனாய் இசைப் பாடல் பற்றி:
    இரண்டுமே ஆபோகி ராகத்தில் இசைக்கப்பட்டது.
    இரண்டிலும் ஷெனாய் வாசிக்கப்பட்டுள்ளது
    கலைக்குயில்(முழு) பாடல் ஓடும் நேரம் 3.33.காலை நேர(முழு) பாடல் ஓடும் நேரம் 4.49. ஷெனாய் முடிந்தவுடன் ராஜா இசைக்கோர்ப்பை சற்று நீளமாக(இயல்பான rich orchestration) இழுக்கிறார்.ஆனால் எம் எஸ்வி சுருக்கமாக முடிக்கிறார்.
    கலைக்கோயில்-1964 ” தங்கரதம் வந்தது”-விஸ்வநாதன் - ராமமூர்த்தி(சுசீலா-பாலமுரளிகிருஷ்ணா)

    ஷெனாய் அருமை.ஷெனாயின் பின் வரும் தாளத்தை கவனியுங்கள்.stunning!இதிலும் பு.குழல்/வீணை/வயலின் எல்லாம் உண்டு.
    Shehnai2-Kalaikkovil-64-ThangarathamVanthathu.mp3

    அம்மன் கோவில் கிழக்காலே-1986 "காலை நேர பூங்குயில்” finishing touch அருமை.
    Shehnai2Amman Kovil Kizha-86-KalaiNera(Janaki).mp3

    Shehnai-Dharmakshetrami92-Are Inka Jankai.mp3



    Shehnai-Oru Oodai Nathi-83-Thendral Ennai.mp3

    0.26-0.45 கருணை/சுய இரக்கம்/ஆசிர்வதிக்கப்பட்ட தருணம்?
    0.50-1.00(தி.ஜானகிராமன்தான் வர்ணிக்க வேண்டும்)
    Shehnai-BGM-92Devar Magan.mp3

    0.12-0.23 புல்லாங்குழல்-ஷெனாய் உரையாடல் அட்டகாசம். இந்த மாதிரி காம்பினேஷன் எப்படி யோசிக்க முடிகிறது.
    Shehnai-Kakki Chattai-85-KanmaniyePesu.mp3

    Shehnai-1Sadhanai-86-EngeNaan.mp3

    Shehnai-1Puthumai Penn-79-Kasthuri Maane.mp3

    Shehnai-Yathra-85-Yamune Ninnude.mp3

    பல வித கலவைகளில் ஷெனாய் கொடுக்கப்படுகிறது.
    Shehnai-82-Sakalakala Vallavan-Nethu Rathri.mp3

    Shehnai-Pacha Kuthira -06-Oru Thottavaadi.mp3

    ஹம்மிங்கோடு கலந்துக்கொடுக்கப்படுகிறது.
    Shehnai-Walter93Vetrivel-Chinna Rasaave Chitharembu.mp3

    Shehnai-Ellame En Raasathan-Azhagana.mp3


    வாலிபமே வா வா-ராதா-கார்த்திக்
    வாலிபமே வா வா-1982-பொன்வான பூங்காவில்
    29 வருடம் ஆனாலும் ஷெனாயில் வாலிபம் இருக்கிறது.
    Shehnai-1Vaalibame Vaa Vaa-82- Pon Vaana.mp3




    Shehnai-BGM-Nayagan.mp3

    Shehnai-How to Name-DoAnything.mp3

    Shehnai-BGM-Thooral Ninnu Pochu-82 -Sogam.mp3

    0.03-0.10 சிம்பிளாக எதனுடனோ உரையாடுகிறது ஷெனாய்.
    Shehnai-Ejamaan-93-AalappoolVelappool.mp3

    Shehnai-Jyothi-83-SirichaKolliMalai.mp3

    Shehnai-Mahanadhi-93-Thai Pongalum Ponguthu.mp3

    Shehnai-Mahanadhi-94-SrirangaRanga.mp3

    Shehnai-Naan Mahan Alla85-MalaiSoodum.mp3



    Shehnai-16Vayathinile-77-SenthooraPoove.mp3





    Thanks to RA

  8. #7
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையராஜா- King of Mesmerizing Musical Guitar






    கிடார் என்றால் என் மாணவ வயதில் மனதில் பதிந்த பிம்பங்கள்:
    கையில் கிடார் வைத்திருந்தால் மேலே உள்ளவர் மாதிரி நடை,உடை பாவனை இருககவேண்டும்.Hey.. you..! come to the stage yaar!sing a song with me? ஒரு மார்டன் பெண்ணைப் பார்த்து கத்த வேண்டும்(கிடாரைத் தீற்றிக்கொண்டே)
    கண்டிப்பா சுராங்கன்னிகா மாலு கண்ணா வா பாட்டுப் பாடனும்
    ஹோட்டல் காபிரே டான்ஸ் பாடல்களுக்கு இசைக்கப்படும் கருவி
    ஆங்கிலோ இந்தியர்கள்தான் இதை வாசிப்பார்கள்
    ஊட்டி பிக்னிக்கில் நெருப்புக்குப் பக்கத்தில் உட்கார்ந்து காதலியைப் பார்த்து இசைக்கவேண்டும் அல்லது டாப்லெஸ் காரில் சட்டைபோடாமல் கையில் கிடார் வைத்துக்கொண்டு கோவா செல்ல வேண்டும்
    கிடார் கிறிஸ்துவ மதத்திற்கென்று உருவான இசைக்கருவி
    முஸ்லீம் அல்லது பாலைவனம் போன்ற அரேபியன் வகை இசைக்கு உகுந்த கருவி
    திகிலுக்கு பின்னணியாக (மார்டர்ன் தியேட்டர்ஸ்/கர்ணன் படங்களில் எலெக்டிரிக் கிடார் பயன்படுத்துவார்கள்)
    ஸ்டைல் அல்லது ஜாலி என்றால் இதை கையில் பிடித்து போஸ் கொடுக்க வேண்டும்.
    சினிமா கல்லூரி விழாக்களில் கட்டாயம் இருக்கும்
    சினிமா கிடார் இசையெல்லாமே இதைச்சுற்றித்தான் இருக்கும்
    தமிழ் பண்பாட்டுக்கு ஏற்றதல்ல.
    90% பழைய சினிமா கிடார் இசையெல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுற்றி வந்தது.இந்திய கலாசாரத்திற்கு ஒவ்வாத இசைக்கருவி. அதுவும் அந்தக் கால குடும்ப செண்டிமெண்ட் படத்திற்கு கிடார் ஒத்துவராது.

    மேற்கத்திய இசையில் உபயோகிக்கப்படும் கிடாரைப் பற்றி அல்ல நான் சொல்லுவது. அது ஒரு தனி இசை உலகம்.





    (வேட்டியோட கிடார் வாசிக்கும் போஸ் கொடுத்த ஒரே ஆள் இசைஞானிதான்)

    இசைஞானி இளையராஜா தமிழ்ப் பட கிடார் சம்பிரதாயங்களை உடைத்துத் தூள் தூள் ஆக்கினார்.எல்லாவற்றையும் தலைகிழாகக் கவிழ்த்தார். கிடார் நரம்புகளை வித விதமாக அதிர வைத்தார்.

    மனிதனுக்கு பத்து விரல்கள்தான் இறைவன் கொடுத்தார்.ஒரு வேளை இருபது விரல்கள் கொடுத்திருந்தால் ராஜா என்னவெல்லாம் செய்திருப்பார்.

    நான் வீனஸ் அல்லது ஜுபிடர் கிரகத்தில் ஜாக்கிங் போவது போல் கனவு கண்டிருக்கிறேன். ஆனால் மென்மையான கிடாரில் “அதிகாலை நிலவே” மற்றும் “ ராமனின் மோகனம்” “இளைய நிலா” பாட்டினிடையே வித்தியாசமாக இசைக்க சாத்தியமுண்டு\என்று கனவு கண்டதில்லை.

    முதல் படத்திலேயே கிடாரை தைரியமாக வித்தியாசமாகப் பயன்படுத்தினார்.காரணம் இவரிடம் இருக்கும் பலவித கருவிகளின் இசை இழைகளை பிணைக்கும் திறமை.






    ஒரு அம்மா தன் குழந்தைகளைப் புரிந்து வைத்திருப்பதுப் போல இவர் எல்லா இசைக்கருவிகளையும் நுணுக்கமாகப் புரிந்துவைத்து ஆட்சி செய்திருக்கிறார்.செல்லம் கொஞ்சி இருக்கிறார்.அதில் ஒன்று கிடார்.இது நம்மூர் வீணையின் ரொம்ப தூரத்து கசின் என்று சொல்லலாம்.

    இவர் முறையான கிடாரிஸ்டும் கூட.கேட்க வேண்டுமா இசைக்கு?தந்தியின் அதிர்வுகளை inch by inch உணர்ந்திருக்கிறார்.He tamed the instrument like a circus man tamed Lion.எல்லாவிதமான மணமும் கொடுக்கிறார்.

    கிடாரில் ஒரு இண்டு இடுக்கு விடாமல் சின்ன நகத்தீற்றல் வருடலிலிருந்து எல்லா வகையான வருடல்களும் கிடார் தந்திகளில் வருடி இசையை பொழிந்திருக்கிறார்.பாட்டின் மெலடியை தனியாக திரியவிடவில்லை.

    கவுண்டர்பாயிண்ட் கவிதைகளை கிடார் நரம்பில் தீட்டி இருக்கிறார்.

    மிகைப்படுத்தவில்லை. கேட்டால் தெரியும்.பாடல்களோடு வாழவேண்டும்.

    முக்கியமாக புளித்துப்போன பிக்னிக் மற்றும் ஹோட்டல் கிளப்
    பாடல்களுக்கு ஒரு வித்தியாசமான பரிமாணம் கொடுத்தார்.உதாரணம் “வான் எங்கும்”
    (மூன்றாம் பிறை).

    கவனிக்க வேண்டியது, பொழிந்த காலம் தொழில் நுட்பம் அவ்வளவாக முன்னேறாத காலம்.லேப்-டாப்பிலிருந்து பொழியவில்லை.ஆத்மார்த்தமாக இசைக்கப்பட்டது.

    98% சதவீதம் அவர் பாடல்களில் bass guitar பாட்டின் பின் தம்புரா சுருதி போல மெதுவாக ரீங்காரம் இட்டபடி இசைத்துக்கொண்டே பின் தொடரும். கவனமாக கேட்டால் ரசிக்கலாம்.




    சதா என்கிற சதானந்த்
    இவரிடம் சதானந்த்,சந்திரசேகர்,சாய்பாபா,டேவிட் ஜெயகுமார்(ஹாரிஸ் ஜெயராஜ் தந்தை),கங்கை அமரன்,ராதா விஜயன் மற்றும் சஷி போன்றவர்கள் கிடாரிஸ்ட்டாக பணிப்புரிந்துள்ளதாக வலையில் ஒரு செய்திப் படித்தேன்.



    .
    ராதா விஜயன்

    பாட்டு அல்ல.கடைசிவரை கட்டாயம் கேளுங்கள்(இதன் ஒலிப்பதிவு சூப்பர்)
    Guitar-SPB(16 takes).mp3





    அன்னக்கிளி உன்ன தேடுதே(சோகம்-டிஎம்எஸ்) -அன்னக்கிளி-1976
    00.11-00.25 முன்னணியில் ஒரு கிடாரின் சோகமும் பின்னணியில்(bass guitar) சோகமும்.
    Guitar-AnnakiliUnnaiTMS-Sad.mp3




    Bass Guitar

    கொடியிலே மல்லியப்பூ-கடலோரக்கவிதைகள்-1986
    படத்தில் உள்ளதுதான் bass guitar இதை வைத்து முக்கால் பாட்டு இசைக்கிறார்.

    உறுத்தாமல் பாட்டில் மயிலிறாக அங்கங்கு வருடுகிறது.bass guitarக்கு என் அன்பு முத்தங்கள்.
    Guitar-Kodiyile Malliyapoo.mp3

    தத்தோம் தலாங்கு தத்தோம் - வெற்றிவிழா-1989
    கிடாரே ஆச்சரியப்பட்டிருக்கும் “ நம்மிடம் இது மாதிரி ஒசையெல்லாம் வருமா?”தோல் கருவியின் வீரியத்தோடு கிடார் இசைக்கப்படுகிறது.அட்டகாசம்
    Guitar-Thatthom Thalangu-Vetrivizha.mp3

    அரும்பும் தளிரே - சந்திரலேகா-1995
    பாட்டின் பின்னணியில் கிடாரின் நரம்புத் துடிப்புகள் அருமை.மிகவும் மென்மையான வித்தியாசமான உணர்ச்சிகள் கொண்ட பாட்டு.

    0.45-1.03 வேறு ஒரு கிரகத்து இசை.பாட்டின் அதே மூடிலேயே இசையும். 0.50-0.55 கிடாரின் உணர்ச்சிகள் அருமை.பிரமிக்க வைக்கிறார்.
    Guitar-Arumbum Thalire-Chandraleka.mp3

    உத்தமபுத்திரி நானு-குருசிஷ்யன் - 1988
    விதவிதமாக கலை உணர்வோடு மீட்டுகிறார்.வெளிப்படும் உணர்ச்சிகள் புல்லரிக்கிறது. தல ஒண்ணயும் பிரியல!
    Guitar-UthamaPuthiriNane.mp3

    Mudhi Mudhi Ittefaq Se - Paa -2009
    0.46-0.57 மேற்கத்திய ஸ்டைல் வித்தியாசமாக கொடுக்கப்படுகிறது.இது மாதிரி நாம் கிடாரின் நாதத்தை கேட்டுருக்கிறமோ?

    Guitar-Paa-MudhiMudhi-Shilpa.mp3

    ராமனின் மோகனம் -நெற்றிக்கண்-1981
    0.24-0.35 இடையில்(வேறு கருவி நாதத்திற்கு) இசைவாக மீட்டப்படுகிறது.கிட்டத்தட்ட வீணை மாதிரியே பயன்படுத்துகிறார்.சில சமயம் வீணையா கிடாரா என்று கண்டுப்பிடிப்பது கஷ்டம்.

    கிடாரயே வீணை மாதிரி பயன்படுத்துவார் நண்பர் ரவி நடராஜன் சொன்னதுண்டு.ஒன்றுக்கொன்று வித்தியாசமான இசை கருவிகளின் நாதங்களை இணைத்து ஒரு கெமிஸ்டரி உருவாக்குகிறார்.
    Guitar-RamaninMoha.mp3

    அதிகாலை நிலவே-உறுதிமொழி-1990
    கிடார் தேனாக நாதத்தை இறைத்துக்கொண்டே போக மற்ற நாதங்கள் தேனீயாக மொய்க்கின்றது.ராஜாவின் அழகுணர்ச்சி(aesthetics)கிடார் தீற்றலில் மிளிர்கிறது
    Guitar-AthikalaiNilave.mp3

    ஹே ராஜா-ஜல்லிக்கட்டு -1987
    0.32-0.43கிடாரை வீணை மாதிரி மீட்டுகிறார்.முடிவிலும் ஆனால் வேறு மாதிரி.

    தொடர்ந்து வரும் கிடார் தீற்றலில் 0.12ல் சர்ரென்று ஒரு வயலின் சரம் உருவிக்கொண்டு வந்து 0.19-0.24 கிளாசிகல் மணம் கொடுக்கிறது.Mindblowing maestro!

    Guitar-Jallikkattu-HeyRaaja.mp3



    ஒரு சிரிகண்டால்(மலையாளம்) -பொன்முடிபுழையோரத்து-2005
    முன்னணியில் வீணை நம்மை வருடுகிறது. பின்னணியில் கிடார் வீணையை வருடுகிறது.
    Guitar-OruChirikandal--Ponmudipuzhayorathu.mp3

    நிலா அது வானத்துமேலே - நாயகன் - 1987
    Guitar-Nila Athu Vanathu.mp3


    ஆட்டுக்குட்டி முட்டையிட்டு - 16 வயதினிலே-1978
    Guitar-Aatukuttimuttai.mp3

    சிந்துநதிக் கரையோரம்-நல்லதோர் குடும்பம் -1979
    Guitar-SindhunadhiKaraioram.mp3




    குதிக்கிர குதிக்கிர - அழகர்சாமியின் குதிரை (ரிலிஸ்???)
    Guitar-Kuthikkira Kuthikkira-Azhakarsamiyin.mp3

    ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம்-1978
    0.03-0.08 கவுண்டர் பாயிண்ட்(பு.குழல்-கிடார்).0.17-0.25 இரண்டு கிடார் நாதங்கள் கேட்கிறது.ஏதோ வித்தியாசமாக முயற்சித்திருக்கிறார்.

    Guitar-OruVaanavilPole-Katrinile Varum.mp3

    மஞ்சள் அரைக்கும்போது -ஆளுக்கொரு ஆசை -1977
    Guitar-AalukuOruAasai-Manjal.mp3

    ஏஞ்சல் -கவரிமான்-1979
    Guitar-KavariMaan-Angel.mp3

    அழகான பூக்கள் - அன்பே ஓடி வா -1984
    Guitar-Anbe Odi Vaa-AzhagaanaPookal.mp3

    ராஜராஜ சோழன் - ரெட்டை வால் குருவி -1987
    மேஸ்ட்ரோவின் மாஸ்டர் பீஸ்.00.23பாடல் ஆரம்பிக்கும் போது plainஆக கிடாரை தீற்றியபடி ஆரம்பிக்காமல் வரவேற்பில் தலையில் பன்னீர் தெளிப்பது மாதிரி ஒரு அழகுணர்ச்சி.

    0.47-0.57 இடையில் கிடாரின் உரையாடல் டச்சிங்.இரண்டாவது 0.52கிடாரின் (சிந்த்?)நாதம் அப்படியே பேசுகிறது.Highly divine and soulful.
    Guitar-RajaRajaChozhan.mp3

    கவுண்டர்பாயிண்ட் கிடார் கவிதைகள்:
    (ஒரே சமயத்தில் இரு வேறு மெட்டுக்களை இசைப்பது.கேட்பதற்கு ஒன்றுபோல் தோன்றும்)

    கவிதை-1

    பூந்தளிர் ஆட - பன்னீர்புஷ்பங்கள்-1981





    நிஜங்களின் நடனத்தில் இணையாக நிழல்கள் இசைக்கும் கவிதை
    (கிடார் vs கிடார் மற்றும் ஹம்மிங் vs கிடார் )
    ஹம்மிங்கிற்கு இசைவாக கிடார் தீற்றல் வளமான கற்பனை.
    Guitar-Poonthaliraada.mp3

    கவிதை-2
    தேன்பூவே பூ -அன்புள்ள ரஜினிகாந்த்-1984
    புல்லாங்குழலும் கிடாரும் தேன் பூவில் ரீங்காரமிட்டபடி ரொமாண்டிக் கவுண்டர்பாயிண்ட் அதில் தளும்பும் இசையின் அழகு.
    Guitar-TheanPoove.mp3

    மலையோரம் வீசும் -பாடு நிலாவே-1987
    சோகத்திற்கு கிடார் மாற்றப்படுகிறது.
    Guitar-Paadu Nilave-Malaiyoram.mp3

    மயிலே மயிலே - ருசி கண்ட பூனை-1978
    0.08-0.16 புல்லாங்குழலுக்கு தாளமாக கிடார்.0.44-0.54 ஹம்சத்வனி ராக சாயலில் நாதம். இந்தப்பாடலே ஹம்சத்வனி ராகம் என்று யூகிக்கிறேன்.
    Guitar-MayileMayile.mp3


    உனக்கெனதானே இன்னேரமா-பொண்ணுக்கு ஊரு புதுசு-1979
    Guitar-Unakenethaane Innerama.mp3

    வானெங்கும் தங்க வீண் மீன்கள்- மூன்றாம் பிறை-1982
    ஜானகி ஒன்றை ஹம் செய்ய பாஸ் கிடார் வேறொன்று ஹம் செய்கிறது.

    Guitar-Moondram PiraiVaanengum.mp3

    ஓ மானே மானே - வெள்ளைரோஜா -1983
    Guitar-Oh Mane Mane.mp3
    கிடார் விட்டு விட்டு சினனதாக வித்தியாசமாக தீற்றப்படுகிறது.0.27-0.35 கிடார் -புல்லாங்குழல் பேச்சு அருமை.முதலில்0.08-0.20 வயலினோடு உரையாடுகிறது.
    Guitar-Oh Mane Mane.mp3

    பிறையே பிறையே - பிதாமகன் -2004
    Guitar-PirayeaPirayea.mp3

    சினோ ரீட்டா -ஜானி-1980
    Guitar-Sinorita I love Johnny.mp3

    என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி-1993
    Raja is the King of Romanticization.பாடல்களை ஓவராக romanticize செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு இவர் மேல்.நல்லதானே இருக்கு.
    Guitar-EnnulleEnnulle.mp3

    என்னம்மா கண்ணு-மிஸ்டர் பாரத்-1986
    0.25 வரை முனகிக்கொண்டே வரும்Bass Guitar பின்னால் வேறுவிதமாக இசைக்கப்படுகிறது
    Guitar-YennammaKannu-MrBharath.mp3

    அந்திவரும் நேரம் - முந்தானை முடிச்சு-1983
    கிடாரை ஜாலிக் கருவி என்று நினைக்கிறோம் இதில் வயலின் போல் இசைக்கப்படுகிறது.சூப்பர்.அதுவே ஒரு கலவையுடன் கொடுக்கப்படுகிறது. உற்றுக்கேளுங்கள்.
    Guitar-AndhivarumNeram.mp3

    எங்கெங்கோ செல்லும் - பட்டாகத்தி பைரவன் -1979
    Guitar-Engekengosellem.mp3

    என்னடி மீனாட்சி -இளமை ஊஞ்சலாடுகிறது-1978
    சொன்னது என்னாச்சு?மீனாட்சி மேல் கிடாருக்குக் கோபமோ?
    Guitar-YeenadiMeenaakshi.mp3

    அழகே உன்னை -அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்-1979
    Guitar-AzhageunnaiAradhanai.mp3

    மாமன் மச்சான் - முரட்டுக்காளை-1980
    Guitar-MamanMachan.mp3

    பழமுதிர்சோலை - வருஷம் 16 -1989

    Guitar-Varusham16-Pazhamuthir.mp3

    மனதில் என்ன நினைவுகளோ-பூந்தளிர்-1979
    Guitar-ManathilEnnaNinaivugalo-Poonthalir.mp3

    ஊமை நெஞ்சின் சொந்தம்- மனிதனின் மறுபக்கம்-1986
    Guitar-Oomai Nenjin-Manithanin Marupakkam.mp3

    ரோஜாவைத் தாலாட்டும் - நினைவெல்லாம் நித்யா-1982
    0.16-0.17 மற்றும் 0.28-0.29 சிக்கலானச் சின்னத்திற்றலில் இசையைக் கோர்க்கிறார். இதைக் காப்பி அடிப்பது கூட ரொம்ப கஷ்டம் என்று யூகிக்கிறேன்.
    Guitar-RojaveThalaatum.mp3

    யார் யாரோ எனக்கு -செல்வி-1985
    Guitar-Selvi-YaarYaaroi.mp3

    மண்ணில் இந்த காதல் - கேளடி கண்மணி-1990
    Guitar-MannilIndha.mp3

    வனிதா மணி - விக்ரம் - 1986
    எனக்குப்பிடித்தமான ஒன்று. இதில் 0.12-0.16 ஒரு அதட்டல் தொனியை உணர்வேன்.0.18-0.27 பிரமிக்க வைக்கும் இசைத் துளி. இதனிடையில் ஒவ்வொரு தீற்றலுக்குப் பிறகும் வரும் ஒவ்வொரு(18/20/22/24/27) சின்ன நாதமும் அருமை.ஆச்சரியப்படுத்தும் கற்பனை.மிஸ் செய்யாதீர்கள்.
    Guitar-VanithaMani.mp3

    காதல் மகராணி - காதல் பரிசு-1987
    0.12-0.14 அருமை.
    Guitar-Kaathal Maharani-KaathalParisu.mp3

    ஆடும் நேரம் இதுதான் - சூரசம்ஹாரம்-1988
    GuitarAadumNeram.mp3

    சங்கீத மேகம் - உதய கீதம் -1985
    என்ன ஒரு வித்தியாசம்.

    Guitar-Sangeetha Megam.mp3

    காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு-1984




    கிடாரில் ஒரு கவிதை.ரொம்ப அழகாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.ரஜினி ரொம்ப ஸ்மார்ட்.
    Guitar-Kadhalin Deepam.mp3

    பூவே செம்பூவே - சொல்லத் துடிக்குது மனசு-1988
    கிட்டத்தட்ட 22 வருடமாக இந்த இசைப் பகுதியை ரூம் போட்டு பிரமித்துக்கொண்டிருக்கிறேன்.இவ்வளவு ரகளையில் இசை நாதங்கள் இருந்தாலும் மெலடி மற்றும் ஆத்மாவை மெயிண்டெய்ன் செய்கிறார். GuitarPooveSempoove.mp3

    பூவாடைக் காற்று - கோபுரங்கள் சாய்வதில்லை-1983
    Guitar-Gopurangal Saiva-Poovaadikaatru.mp3

    காதில் கேட்டது - அன்பே ஓடி வா -1984
    Guitar-KathilKettathu-Anbe Odi Vaa.mp3


    செந்தூராப்பூவே - 16 வயதினிலே -1978
    Guitar-SenthooraPoove.mp3

    சுந்தரி நீயும் - மைக்கேல் மதனகாமராஜன் - 1990
    Guitar-SundariNeeyum.mp3


    ”இளையநிலா”ஆவணப்படுத்த வேண்டிய ஒரு இசைக்கோர்ப்பு.


    Thanks to RA

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •