Page 46 of 126 FirstFirst ... 3644454647485696 ... LastLast
Results 451 to 460 of 1251

Thread: UlagaNayagan KAMALHAASAN in ||"PAPANASAM"|| Directed by Jeethu Joseph

  1. #451
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2007
    Location
    Chennai,India
    Posts
    335
    Post Thanks / Like
    http://www.sify.com/movies/papanasam...nrhhjddih.html

    Verdict -->> Excellent & Flawless remake

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #452
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    good reviews so far ....
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  4. #453
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    FARIDABAD
    Posts
    0
    Post Thanks / Like


    நம்ப நடிச்ச அஞ்சு படமும் சூப்பர்.. இது சூப்பர் ஹிட்

  5. #454
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பாபநாசம் படம் எப்படி? - Vikatan

    பாபநாசத்தில் ஒரு கேபிள்டிவி ஆபரேட்டர், மனைவி மற்றும் இரண்டு பெண்குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். திடீரென அவர்கள் மிகப்பெரிய சிக்கல் ஒன்றை எதிர்கொள்கிறார்கள். சாமான்யமனிதர்கள் உடைந்து நொறுங்கிப் போய்விடுகிற அவ்வளவு பெரிய சிக்கலை அந்த எளியகுடும்பம் எவ்வாறு எதிர்கொள்கிறது? என்பதை நெஞ்சம் பதைபதைக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜீத்துஜோசப், மீண்டும் ஓர் எளியமனிதனாக வந்திருக்கிறார் கமல்.

    அந்தவேடத்துக்குரிய நியாயங்களைச் செய்திருக்கிறார். அவர் கேபிள்ஆபரேட்டர் என்பதால், எல்லாத் திரைப்படங்களையும் பார்த்துவிடுகிறார், தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னடம், இந்தின்னு எல்லா பாஷைப்படங்களையும் புரியுதோ இல்லியோ பாத்துடறீங்க என்று மனைவி கௌதமி சொல்லும்போது, சினிமாவே ஒரு பாஷைதானே என்கிறார். கேபிளில் இரவு பதினோருமணிக்கு மேலாக ஒளிபரப்பாகும் படங்களைப் பார்ப்பவர், அம்மாதிரிப்படங்களை ஒளிபரப்புகிறவர் என்றெல்லாம் சொல்லி அவரைச் சாதாரணமனிதராகக் காட்டமுயல்கிறார்கள்.
    அதோடு சாதாரணமனிதன் என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாலும், அவருடைய செயல்கள், பேச்சு ஆகியன முதிர்ந்தமனிதராகவே காட்டுகிறது. பாபநாசம் வட்டாரவழக்கையும் பொருத்தமாகப் பேசியிருக்கிறார் அவர் மட்டுமல்ல எல்லா நடிகர்களும் அதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். கமல், இயற்கைவிவசாயம், கல்விமுறை, அரசியல் என எல்லாவற்றையும் பேசுகிறார். தலைக்கு மேல் வளர்ந்த பெண்குழந்தைகளைக் கொண்டிருந்தாலும் கமல் நடிப்பதால், அவர் காதல்மன்னன்தான் என்பதற்காகவே சில காட்சிகளையும் வைத்திருக்கிறார்கள். சிரிப்பும் கிண்டலுமாக அந்தக்காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன. எப்போதும் சினிமாவையே பார்த்துக்கொண்டிருப்பதற்குத் திரைக்கதையில் நியாயம் சொல்லிவிட்டார்கள்.

    அவருடைய மனைவியாக கௌதமி, தோற்றத்தில் முதிர்ச்சி தெரிந்தாலும் கமலைப் பார்க்கும் காதல்பார்வை தேவர்மகனை நினைவுபடுத்துகிறது. திடீரென ஏற்பட்டுவிட்ட அசம்பாவிதத்தை அவர் எதிர்கொள்ளும் விதத்தில் நல்லநடிகை என்பதையும் காட்டிவிடுகிறார். கஞ்சத்தனம் மிகுந்த அப்பாவைப் பாசமிக்க பெண்குழந்தைகள் என்னவெல்லாம் செய்யுமோ அவ்வளவும் இந்தப்படத்தில் இருக்கிறது. பெரியபெண்ணாக நடித்திருக்கும் நிவேதாதாமஸூம் சிறியபெண்ணாக நடித்திருக்கும் எஸ்தரும் கமல், கௌதமி ஆகிய இருவருக்கு இணையாக நடித்திருக்கிறார்கள். காவல்துறை ஐஜியாக நடித்திருக்கும் ஆஷாசரத், மிடுக்கான நடிப்பில் யார்இவர்? என்று கேட்கவைத்திருக்கிறார்.
    எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீராம், கலாபவன்மணி, இளவரசு, அருள்தாஸ் உட்பட படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். குற்றவாளி எப்படியும் ஒரு தடயத்தை விட்டுவிட்டுச் செல்வான் என்கிற அடிப்படையை மீறாமல், எவ்வளவோ புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டாலும் கமல் மாட்டிக்கொள்ளுகிற மாதிரி திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது. காவல்துறை அத்துமீறி நடந்துகொள்ளும்போது குழந்தைகள் உண்மையைச் சொல்லிவிடுவார்களோ என்கிற பதட்டத்தை ஏற்படுத்திவிட்டார்கள். குழந்தைகள் முன்னால் பெற்றோரை அடித்துநொறுக்குவது, பெற்றோர் முன்னால் குழந்தைகளை அடிப்பதும் கொடுமையான காட்சிகள். ஜிப்ரானின் இசையில் இரண்டுபாடல்களும் கேட்கிற மாதிரி இருக்கின்றன, அந்தப்பாடல்களுக்குள்ளும் கதை சொல்லிக்கொண்டிருப்பதால் அவை தனித்துத் தெரியவில்லை.

    சுஜித்வாசுதேவின் ஒளிப்பதிவு, ஜெயமோகனின் வசனங்கள், சுகாவின் பங்களிப்பு ஆகியன படத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன. தொழில்நுட்பங்கள் அதிலும் குறிப்பாக நவீன கைபேசிகளால் நடக்கும் சிக்கலே இந்தப்படத்தின் மையச்சிக்கலுக்குக் காரணம். அதை வைத்துக்கொண்டு, இந்தநாடே நம்முடையதுதான் என்கிற எண்ணம் கொண்ட அதிகாரவர்க்கத்தினரை சாடியிருக்கிறார்கள். கடைசியில் கெளதமியிடம், பொய்யே பேசக்கூடாது என்று சொல்லி வளர்த்த என் குழந்தைகளுக்கு நானே பொய்பேசக்கற்றுக்கொடுத்துவிட்டேனே அதுவே உறுத்தலாக இருக்கிறது,
    நீ பெரியமனசு இருக்கிறதால இப்படிச் சொல்றே இதுவே உன் இடத்தில் அந்தஅம்மா இருந்தா இப்படிப் பேசியிருப்பாங்களா? என்று கமல் பேசும் வசனங்கள் மட்டுமின்றி கடைசியில், ஐஜி குடும்பத்திடம், இந்த பாபாநாசத்துல முங்கி முங்கி எங்க பாவத்த கொஞ்சங் கொஞ்சமா கழிச்சிடறோம் என்று சொல்லிக் கமல் கலங்கும் காட்சி ஆகியன பொதுஒழுங்கு, சட்டம்ஒழுங்கு ஆகிய எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குகிறது. தாங்களாக முன்வந்து எந்தத்தவறும் செய்யவில்லையென்றாலும், ஒரு மோசமான வினைக்கு எதிர்வினை ஆற்றப்போய் அல்லல்படுவோரை எண்ணிப்பார்க்கும்போது அவர்கள் செய்யும் தப்பைத் தப்பென்று சொல்லமுடியாத தர்மசங்கடமான நிலையை இந்தப்படம் ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை.

  6. #455
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    முதல் பார்வை: பாபநாசம் - மாறாத நுனி சீட் அனுபவம்!- Tamil Hindu

    மலையாளத்தில் உருவான 'த்ரிஷ்யம்' தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் ஹிட்டடித்து, தற்போது தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஹிட் படத்தின் ரீமேக், கமல் நடிப்பு என்ற இந்த காரணங்களே பாபநாசம் படத்தைப் பார்க்க வைத்தன.

    சரி, படம் எப்படி?
    மிக நீண்ட நன்றி கார்டுகளுக்குப் பிறகு படம் தொடங்குகிறது.
    போலீஸ் ஸ்டேஷனில் கமல் டிவியில் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும்போது ரசிகர்கள் அமைதி காத்தனர். விசில், கிளாப்ஸ் எதுவும் இல்லாமல் தியேட்டர் முழுக்க நிசப்தம் நிலவியது.
    ஜெயமோகன் வசனங்களுக்கு சிரிப்பு சத்தம் அதிகம் கேட்டுக்கொண்டே இருந்தது.

    கதை: டிவிக்கு கேபிள் இணைப்பு தரும் சுயம்புலிங்கத்துக்கு இரண்டு மகள்கள். மனைவி, மகள்களுடன் மிக சிக்கனமாக நேர்மையுடன் உண்மையுடன் வாழ்கிறார். மூத்த மகள் கல்விச் சுற்றுலா செல்லும்போது, அங்கு செல்போன் கேமராவில் படம் பிடிக்க முயற்சிக்கும் இளைஞனை கோபிக்கிறார். அதற்குப் பிறகு அந்த இளைஞன் கமல் மகளைப் பின் தொடர்கிறார். அதனால் எதிர்பாராத விபரீதம் நிகழ்கிறது. சுயம்புலிங்கம் குடும்பமே அந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறது. ஒரு சாமானிய குடும்பத்தினர் மிகப் பெரிய சிக்கல்களை எதிர்கொண்ட விதமே பாபநாசம்.

    ஒரு படம் ஐந்து மொழிகளில் (இந்தியிலும் த்ரிஷ்யம் ரீமேக் ஆகிறது) ரீமேக் ஆகிறது என்றால் அது சாதாரண விஷயமல்ல. அந்த அளவுக்கு கதைத் தன்மையும், திரைக்கதையும் அழுத்தமாக இருப்பதே காரணம். மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறைகள் தாண்டி, எந்தக் களத்திலும் பொருந்தக்கூடிய தன்மை நிறைந்திருப்பது மிக முக்கிய காரணம்.

    'த்ரிஷ்யம்' படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழில் 'பாபநாசம்' என்று மறு ஆக்கம் செய்ததால்தான் என்னவோ, அசல் தன்மை எந்த இடத்திலும் மிஸ் ஆகாமல் ஜீவனோடு இருக்கிறது.
    தமிழில் இப்படி ஒரு படத்தை மறு ஆக்கம் செய்ததற்காக ஜீத்து ஜோசப்பை வாழ்த்தலாம்.

    கதை, திரைக்கதையில் எந்த மாற்றமும் செய்யாமல், கதாபாத்திரத்தில் நாயக பிம்பத்தை திணிக்காமல் இயல்பான நடுத்தர குடும்பத் தலைவன் சுயம்புலிங்கமா நடித்ததற்காக, கமல்ஹாசனைப் பாராட்டியே ஆக வேண்டும்.

    ஆரம்பக் காட்சிகளில் கமலை புத்திசாலியாக காட்டவே இல்லை. கொஞ்சம் படிப்பு வாசனை இல்லாத சாமானிய மனிதர் என்றே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
    கமல் சயின்ஸ் பாடத்துல கணக்கு வராதா? என அப்பாவியாகக் கேட்பது, ரொமான்ஸ் நேரத்திலும் கார் கேட்கும் மனைவியிடம், அதுக்கு வேற ஆளைப் பாரு என வம்பு செய்வது, செகண்ட் ஹேண்ட் கார் வாங்கித் தரேன் என சமாதானம் செய்வது, சிக்கனத்தைக் கடைபிடிப்பது, எதற்காகவும் குடும்பத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பது என சாமானியனுக்கான அடையாளத்தோடு பொறுப்புள்ள அப்பாவாக நம் கண் முன் நிற்கிறார்.
    போலீஸ் விசாரணையில் என்ன நடக்கும்? என்பதை குடும்பத்தினரிடம் சொல்லிக் காட்டும்போதும், காயங்களோடு சின்ன மகளைப் பார்த்து பார்வையாலேயே செய்தியைச் சொல்ல வருவதுமாக அசத்துகிறார் நடிகர் கமல்.

    தன் வீட்டு முன் ஊரும், போலீஸூம் குழுமிக் கிடக்க, எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று போலீஸ் கைவிரிக்கும் சமயத்தில் கமல் காட்டும் ரியாக்*ஷன்... சான்ஸே இல்ல!
    ரீ என்ட்ரி ஆகியிருக்கும் கௌதமி இரு மகள்களின் அம்மாவாக இயல்பாக எந்த உறுத்தலும், நெருடலும் இல்லாமல் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார். பரபரப்பும் படபடப்புமாக மகள்கள் குறித்து கவலைப்படும்போது மனதில் நிற்கிறார்.

    கமலின் மகள்களாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ், பேபி எஸ்தர் ஆகிய இருவரும் பொருத்தமான தேர்வு. அழுகை, பதற்றம், பயம் என்று கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார் நிவேதா. பேபி எஸ்தர் மிக முக்கியமான கதாபாத்திரம். எந்த குறையும் இல்லாமல் நடிப்பில் மின்னியிருக்கிறார்.

    ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஆஷா சரத்தும், அவரது கணவராக நடித்திருக்கும் ஆனந்த் மகாதேவனும் இயல்பான நடிப்பில் ஈர்க்கிறார்கள்.
    பொறுப்பான அதிகாரியாக ஆதாரம் தேடும் போதும், மகனுக்காக தவிக்கும்போதும் ஆஷா சரத் அட போட வைக்கிறார். எஸ்.ஐ அருள்தாஸ், கான்ஸ்டபிள் கலாபவன் மணி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், டெல்லி கணேஷ், பசங்க ஸ்ரீராம் ஆகியோர் கேரக்டருக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

    ஜிப்ரான் இசையில் இரண்டு பாடல்களும் இதம். சுஜித் வாசுதேவின் கேமரா இயற்கை அழகையும், பசுமையையும் அள்ளிக் காட்டுகிறது.
    போலீஸ் விசாரணை, கமல் சொல்லும் பதில்கள், கிளைமாக்ஸ் என்று எல்லா இடங்களிலும் கை தட்டல்கள் அதிகம் கிடைத்தன. சமீபத்தில் வெளியான படங்களில் இடைவேளைக்குப் பிறகு அதிக கிளாப்ஸ் 'பாபநாசம்' படத்துக்குதான் கிடைத்திருக்கும் போல.

    கமலை நெல்லை வட்டார வழக்கில் பேச வைத்திருக்கிறார் சுகா. அது எந்த விதத்திலும் குறையாகத் தோன்றவில்லை. மூன்று மணி நேரப் படம்தான் என்றாலும், அசலைப் போலவே அப்படியே சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் பரபரப்பு அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்கு கடத்தியிருக்கிறது 'பாபநாசம்'.

    குடும்பப் பின்னணியில் டிராமா த்ரில்லரை இவ்வளவு நேர்த்தியாக, இயல்பாக காட்சியப்படுத்தியதை ரசிகர்கள் வரவேற்றனர். படம் முடிந்து வெளியே வந்ததும் சூப்பர், எக்ஸ்ட்ரா ஆர்டினரி, எக்ஸலண்ட் வீடியோ பைட் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    கமல் இந்த மாதிரி நடிச்சா போதும். பார்த்துக்கிட்டே இருக்கலாம் என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். இதை யாராவது கமலுக்கு கொண்டு போய் சேர்க்கக் கடவது!

  7. #456
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangalore
    Posts
    0
    Post Thanks / Like


    Best video review so far.

  8. #457
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangalore
    Posts
    0
    Post Thanks / Like
    Lot of people praising the BGM. I didn't hear anything. My BP got shoot up and I was feeling like being in interrogation room.

    Should check these tomorrow.

  9. #458
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Ajay Devgan is doing the Hindi version suthum !
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  10. #459
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangalore
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by PARAMASHIVAN View Post
    Ajay Devgan is doing the Hindi version suthum !
    Who is that guy? Has he done any realistic movie like Mahanadhi or like one of the masala Khans.

  11. #460
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by nsv View Post
    Who is that guy? Has he done any realistic movie like Mahanadhi or like one of the masala Khans.
    https://en.wikipedia.org/wiki/Ajay_Devgan

    He has done many "Intelligent " films like "SINGAM", "SINGAM2", choosing him to do a role which Mohan Lal, and Kamal would be a great insult !
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

Page 46 of 126 FirstFirst ... 3644454647485696 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •