Page 1 of 5 123 ... LastLast
Results 1 to 10 of 43

Thread: கடல் மைனா

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like

    கடல் மைனா

    கடல் மைனா..
    **
    சின்னக் கண்ணன்
    *
    முன்னுரை
    *
    திடுமென மனதில் ஒரு எண்ணம்.. ஏன் வெகு சிலவே பாராக்கள் கொண்ட ஆனால் இனிமையான ஒரு சரித்திரத் தொடர்கதை எழுதக் கூடாது என..உடனே செயல் படுத்தி முக நூலில் ,இரண்டு அத்தியாயங்கள் எழுதியும் விட்டேன்..பின் தான். வரலாற்றுக் களம் தேடினேன்! ..என்னசெய்வது..

    சரித்திர நாவல்களின் பகவத் கீதை போன்ற பொன்னியின் செல்வன் கண்ணில் பட்டது..முதல் அத்தியாயத்திலேயே கதாநாயகரின் பெயர். இவரை வைத்து ஏன் எழுதக்கூடாது...பின் கேட்க வேண்டுமா..அது பற்றிக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து அவரே என் நாயகர் எனத் தோன்றி எழுத ஆரம்பித்தேன்..

    நான்கு பாராக்களுக்குள்ளாக சரித்திரத் தொடர்கதை எழுதுவதென்பது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது..எனினும் விறு விறுவெனப் பல அத்தியாயங்கள் எழுதிப் பார்த்த போது நடுவில் கொஞ்சம் மனக்கலக்கம்.. முடியுமா என்ன சுவை இருக்குமா.. என நினைத்ததினலோ என்னவோ கொஞ்சம் இடைவெளி விட்டுவிட்டேன்..கிட்டத் தட்ட ஆறு மாதங்களுக்கும் மேல்..

    முடியாதென்பது இல்லை தான்..இருப்பினும் கதாநாயகரும் கதா நாயகியும் கனவில் வந்து யோவ் இப்படி எழுத ஆரம்பித்து அம்போ என விடலாமா நீ .. சரி நாலு பாரால முடிஞ்சவரைக்கும் எழுதிப்பார்..அப்படி இல்லை எனில் கொஞ்சம் நீட்டி எழுதேன்.. உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் எனச் சொன்னதால்(கொஞ்சம் வேண்டியபுத்தகங்களையும் வாங்கிப் படிப்பதால்) இப்போது மீண்டு வந்து எழுதுகிறேன்..எழுதப்போகிறேன்..முடிக்கவும் உறுதி இருக்கிறது..

    அன்புடன்
    சி.க..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடல். மைனா..

    சின்னக் கண்ணன்..

    1. பாய்ந்த அம்பு..சாய்ந்த கொடி!!

    ****

    வில்,வேல், ஈட்டி இன்னபிற கூர்மையான ஆயுதங்களை விடக் கூரிய பார்வையுடன் அந்த யெளவனப் பிராயத்தில் இருந்த அழகிய நங்கை தன்னருகே நின்ற வாலிபனிடம், “ வாலிபரே நீங்களும் கொஞ்சம் நடுத்த்ர வயது உடைய இன்னொருவரும் ஒரு நாழிகைப் போதின் முன் வந்தீர்..வந்தவர் அமர்ந்தீர்.. தந்தையைப் பற்றிக் கேட்டீர்.. ஆனால் உங்கள் இருவரையும் என்னால் தொடர்பு படுத்திக் கொள்ள முடியவில்லை.. அதனால் தான் உங்களை இங்கு அழைத்து வந்து விபரம் அறியமுற்படுகிறேன்..நில்லுங்கள்.. நீங்கள் இருவரும் எப்படி தஞ்சையிலிருந்து இந்த பள்ளி கொண்ட புரம் என அழைக்கப் படும் புன்னை பூதங்குடிக்கு வந்தீர்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டாம்..அதற்கு நான்கைந்து பக்கங்கள் தேவைப் படும்.. கொஞ்சம் சின்னதாய் விவரம் கூறலாமா” என வேகவேகமாகக் கேட்டதில் அவளது மேலாடை மேலும் கீழும் ஒரு சின்ன நடன அசைவைக் கொண்டது..

    அவளது வீட்டின் பின்புறத் தோட்டத்தில் அழகழகாய்ப் பூத்துக் குலுங்கியிருந்த செவ்வந்தி,முல்லைப் பூக்களின் மணத்தை சுவாசித்தவாறே கொஞ்சம் தள்ளி அழகாய் விரிந்து பரந்திருந்த வேப்ப மரத்தின் அடியில் ச்ற்றே ஒரு காலை மடக்கி ஒருகாலை நின்று ஊன்றியிருந்த வாலிபன் “ பெண்ணே..இவ்வளவு வேகமாகப் பேசவேண்டிய அவசியமே இல்லை.. நான் தஞ்சையில் அரண்மனையில் வேலை பார்க்கும் சாதாரணக் காவலன் தான் .. இளவரசன் என்றெல்லாம் எண்ணாதே.. கூட வந்திருப்பவர் எனது சித்தப்பா. என் பெயர் இள.. என ஆரம்பித்து விட்டு “வீரன் “ என்று வைத்துக் கொள்ளேன்” என்றான்..

    அவள் அவனையே மேலும் கூர்மையாய்ப் பார்க்க, “என்ன கோவில் அர்ச்சகர் மகளே.. இன்னும் நம்பவில்லையா..சரி என் சித்தப்பாவையே அழைக்கிறேன்” எனச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அந்த நங்கையின் கண்கள் அகல வீரிவதைக் கண்டவன் என்ன என்று கேட்குமுன் அவள் அவன் மீது பாய்ந்து தள்ளியும் விட்டாள்..

    அப்படியும் கீழே விழாமல் கொஞ்சம் சமாளித்தவன் அவனைத் தாண்டி அந்த வேப்ப மரத்தில் தைத்திருந்த அம்பைப் பார்த்து வியந்தான்.. மெல்ல அதை எடுக்கப் போகையில் அதன் நுனியில் இருந்த பொருளைக் கண்டதும் அவனது முகம் வியப்பின் எல்லைக்குச் செல்கையிலே அந்த நங்கையின் குரல் சற்றுத் தொலைவில் கேட்டது!

    தொடரும்…

  4. #3
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடல். மைனா..

    சின்னக் கண்ணன்..

    2.பள்ளத்தில் விழுந்த நிலவு!

    எதிர்பார்க்கும் சம்பவங்கள் நடக்காமல் எதிர்பாராமல் கோர்க்கப் படும் சம்பவங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை. என நினைத்துக் கொண்டான் வீரா...இன்னும் கொஞ்சம் யோசித்து வேறு எதுவும் தத்துவ்ம் கிடைககாததால் என்ன நடந்தது என யோசித்தான்.. விடுமுறையாகச் சில நாட்கள் கிடைத்ததைக் கொண்டாடிட அரண்மனையிலிருந்து குடந்தைக்குப் போவதற்காகத் தான் கிளம்பும் போது தனது சித்தப்பா இன்னொருவருடன் வந்தது, அவருடைய முகத்தில் தெரிந்த ராஜ களை,பின் அவரும் தனது நண்பர் தான் எனச் சொல்லி “வீரா.. இவரையும் சித்தப்பா என்றே அழை.. அவருக்குத் துணையாக இரு”என்று சொன்னது, அவரும் தானும் கிட்டத்தட்ட் முக்கால் நாட் பொழுது ஒன்றாக வந்தது, குடந்தை செல்லாமல் இந்தப் பள்ளி கொண்ட புரம் சாலையில்புரவியைத் திருப்பி அக்ரஹாரத்திற்கு வந்தது, வீட்டின் கதவைத் தட்டிய்தும் வெளிப்பட்ட அரதப் பழசானாலும் பொருத்தமான உவமையான வெண்ணிலவு முகம் கொண்ட இள மங்கை, அவள் தன்னை அழைத்தது..பின் இப்போது இந்த அம்பு..

    அந்த அம்பின் நுனியில் சிக்கியிருந்த அந்த ச் சின்ன மோதிரத்தை எடுத்துப் பார்த்தான் அவன்..ஒற்றை முத்தும் அதைச் சுற்றி பொன்னில் வட்டமாய் இருக்க அதைப் பார்த்தபடி இருக்கையில் உதவி” என அந்த அர்ச்சகர் பெண்ணின் சிறு குரல் கேட்கத் திகைத்துப் பார்த்தால் அவள் அங்கு இல்லை..

    ஓ.. அவள் தள்ளி விட்டதுமே அந்த அம்பை எடுத்துப் பார்ப்பதில் புத்தியைச் செலுத்திவிட்டதை எண்ணி தன்னையே கொஞ்சம் நொந்த வீரன் அவளுக்கு என்னாயிற்று என்று பார்த்த போது வியந்து போனான்..

    அந்தவேப்பமரத்தின் பின்னால் ஒருபள்ளம் இருந்திருக்க வேண்டும்..அதில் அவ்ள் விழுந்திருக்க அவளது கைகள் மட்டும் பொன்னிறமாய் வெளியில் தெரிந்தன.. கை நீட்டி அவளைத் தூக்குவ்தற்காக முயன்றவன் – – சற்று வேகமாக முயற்சித்த போது பின்னாலிருந்து யாரோ தள்ளிவிட அவனும் அந்தப் பள்ளத்தில் விழுந்திருக்க வேண்டும்.. ஆனால் விழவில்லை!

    தொடரும்

  5. #4
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடல். மைனா..
    சின்னக் கண்ணன்..

    3.எழுந்த பருவம்,! ஓடிய உருவம் !

    அவனுக்கோ நீச்சல் தெரியாது..ஆனால் திடீரென வெள்ளம் அந்த கிராமத்தில் உட்புகுந்து அடித்துச் செல்வதைக் கண்டதும் தப்பித்து தனது வீட்டின் கூரையின் மீது ஏறினான்.. நல்ல வேளை மனைவி ஊரில் இல்லை என மனதுக்குள் சொல்லிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்த பொழுது வெள்ளத்தில் தனது ஐந்து வயது மகன் சிக்கியிருப்பதைக் கண்டு எதையும் யோசிக்காமல் பாய்ந்து நீரில் விழுந்து மகனையும் இழுத்துக் கொண்டு வெள்ளத்தின் போக்கிலேயே சென்று குறுக்கே மிதந்தகட்டையைப் பிடித்துக் கொஞ்சம் அருகிருந்த வீட்டின் கூரையில் ஏறிப் பெருமூச்சு விட்டான்.. அங்கே ஏற்கெனவே இருந்த அவனது நண்பன் அவனிடம் உனக்கோ நீச்சல் தெரியாது எப்படி இப்படிச் செய்தாய் எனக் கேட்க, தெரியவில்லை, என் மகன் முழுகுகிறான் என்று பார்க்கையில் ஒரு உத்வேகம் ஏற்பட்டது, எப்படி விழுந்தேன் எப்படி எழுந்தேன் எனப் புரியவில்லை என பதிலிறுத்தான்..

    கிட்டத்தட்ட அந்தத் தந்தையின் மன நிலையில் தானிருந்தாள் பள்ளத்திலிருந்த அர்ச்சகரின் மகளும்.. தான் விழுந்த பள்ளம் தன் தோளளவே இருந்தாலும் மேலிருந்து வீரன் தன்னை இழுக்கட்டுமென்று இளமனதின் ஆவல் உந்த இருந்தவள் வீரனின் பின்னால் ஒரு கறுப்பு நிழல் விழுவதைக் கண்டதும் ச்ற்றே அச்சத்தின் வசப்பட்டாளெனினும் அதைப் பட்டென உதறி தனது காலை அகல எழுப்பி மூச்சையும் அடக்கி டபக்கென பள்ளத்தின் மேலேறி வீரனையும் பற்றிப் பிடித்தவாறே சற்றுப் புறம் தள்ளி விட்டதுமல்லாமல் அவனுடன் புரண்டும் விட்டாள்..

    ”என்னாயிற்று எனக் கேட்ட வீரனின் குரலைப் பொருட்படுத்தாமல் படுத்தவண்ணம் நோக்கிய அவள் விழிகளில் பட்டது தூரத்தே கறுப்புத் தலைப்பாகை அணிந்து ஓடிக் கொண்டிருந்த ஒரு உருவம்..பின் மெல்ல எழுந்து கொண்டிருந்த வீரனுடன் அவ்ளும் எழுந்து மறுபடியும் கேட்டாள், “ நீங்கள் யார் என்று சொல்லிவிடுங்கள் இப்பொழுதாவது”

    “நான் சொல்கிறேன் மகளே” எனக் குரல் வரப் பார்த்தால் புன்முறுவல், தாடி மீசையுடன் கம்பீரச் சித்தப்பா..

    தொடரும்

  6. #5
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடல். மைனா..
    சின்னக் கண்ணன்..

    4.இலக்கணமும் இலக்கியமும்

    நரைத்த தலை, பருத்த உடல், முகமெங்கும் நரை தாடி. பரந்து விரிந்த மார்பு, தோள்களில் தெரிந்த வாட்காயத் தழும்புகள், இவையெல்லாவற்றையும் மீறிக் கண்களில் தெரிந்த கருணை..அர்ச்சகரின் பெண் சித்தப்பாவைக் கேள்விக் குறியாகப் பார்த்துக் கொண்டிருக்க, “இவன் பெயர் பாவையே..இளவீரன்..” என்றார் அவர். அவள் விழிகளில் சீற்றம் கொண்டு “ஆமாம்..புளிமாங்காய்..” எனச் சொல்ல அவர் விழுந்து நகைத்தார்..

    “பெண்ணே.. அவனுடன் பழகுவதற்கு முன்னமேயே இப்படிச் சொல்கிறாயே..பழகியதற்குப் பின்னல்லவா நீ சொன்னது தேவைப்படும்” என மேலும் நகைக்க, “சிற்றப்பரே, நான் இலக்கணம் சொன்னேன்.. நீங்கள் என்னவென்றால் இலக்கியம் சொல்கிறீர்கள்.. இவர் பெயர் தான் இளவீரன் என ஏற்கெனவே சொல்லிவிட்டாரே..இவரை ஏன் அந்த தொண்டை மண்டல ஒற்றன் கொல்லப் பார்த்தான்” என்றாள்.

    அதுவரை மெளனமாகவும் பணிவுடனும் இருந்த வீரன் அவளிடம் “எழில்..உனக்கு எப்படித் தெரியும் இது” எனத் தோளைத் தொட்டுக் கேட்க அவள் சற்றே திமிறி,”வீரரே எதற்கெடுத்தாலும் உம்மை காப்பாற்றத் தெரிந்த எனக்கு இது தெரிவதில் வியப்பென்ன..அது ச்ரி.. என் பெயர் உமக்கெப்படித் தெரியும்” என்றாள்..

    கேள்விகள் கேள்விகள் கேள்விகள்..இவற்றைத் தவிர இந்தப் பெண் ஜென்மங்களுக்கு வேறு எதுவுமே தெரியாதோ எனத்தன்னைத் தானே நொந்து கொண்ட வீரன், “உனக்குப் போய் எழில் என்று ஏன் பெயர் வைத்தார்கள் எனப் புரியவில்லை” எனச் சொல்ல எழில் “உம்மைப் போய் இருமுறை காப்பாற்றினேனே..என்னைச் சொல்லவேண்டும்” என முறைத்தபடி சித்தப்பா என்ன செய்கிறார் எனப் பார்க்கையில் சிற்றப்பா அந்த முத்து மோதிரத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்..

    தொடரும்

  7. #6
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடல். மைனா..

    சின்னக் கண்ணன்..

    5. முத்து மோதிரம் சொன்ன கதை

    ”சொல்லுக பெண்களின் சோர்விலாத் தோற்றமதை;
    சொல்லற்க இன்ன பிற!”

    எனத் தன் சகதோழன் சேயோனின் பாடலும்,

    “ சீரிய பாம்பின் சீற்றமும் சினங்கொண்ட பெண்ணின் சீறலும் ஒன்று”
    என ஓலை நறுக்கில் எழுதிச் செருகி வைத்திருந்த தனது இல்லத்து மாட்டு வண்டியோட்டியும் வீரனின் நினைவுக்கு வந்தார்கள்.. ம்ம் பெண்களிடம் வார்த்தைகள் பேசுவதற்கே தயங்குகின்ற தான் எப்படி இந்த இளம் வாழைக்குருத்திடம் நகைச்சுவையாய்ப் பேச முற்பட்டேன் என்று எண்ணிய படி சினங்கொண்ட விழிகள் கொண்ட எழிலைப் பார்த்துப் பேச முற்பட்டான். நங்காய்.. உனது உடல் முழுமையும் அழகுக்கே அழகு செய்வது போல் அமைந்திருக்கின்றபடியால் உனக்கு எழில் என்று வைக்காமல் எண்ணவொட்டா எழில் அல்லது பேரெழில் என வைத்திருக்கலாம் எனச் சொல்லவந்தேன்” என எழிலின் சினங்கொண்ட கண்களைப் பார்த்துப் பேச எழில் சற்றே குளிர்ந்தாள்..

    பின் சிற்றப்பனை நோக்கியவள் அவர் அந்த மோதிரத்தின் பின் பக்கத்தை ஆராய்ந்து கொண்டிருப்பதைக் கண்டு வியந்தாள்..”என்ன கண்டு விட்டீர் சிற்றப்பா” என வினவவும் செய்தாள்.

    சிற்றப்பா சற்றே புன்சிரித்து கொஞ்சம் பொறு மகளே..விளக்கம் வீட்டில் சொல்கிறேன்”எனச் சொல்லி வீட்டை நோக்கி நடக்க எழிலும் வீரனும் பின் தொடர்ந்தனர்..

    எட்டுக் கட்டு வீட்டின் பின்புறக் கொல்லைப்பக்கத்தின் கதவு சற்றே திறந்தவண்ணம் இருக்க அதை மேலும் திறந்து உள் நுழைந்தவர்கள் கொஞ்சம் திடுக்கிட்டனர்…பார்த்த சிற்றப்பனுக்கு மட்டும் கொஞ்சம் புரிந்தது அது முத்து மோதிரத்தின் செயல் தானென்று..

    (தொடரும்)

  8. #7
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடல் மைனா..

    சின்னக் கண்ணன்..

    6. சிவனும் ஸ்ரீ ராமனும்

    சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பது சாலச் சிறந்த ஒன்று தான் என்றாலும் சிலவிஷயங்கள் அவ்வண்ணம் செய்ய முடிவதில்லை..உதார்ணமாக ஒருவன் ஒரு பெண்ணின் மேல் மையல் கொண்டால், அவன் அவளைப் பற்றி அறிந்து, அவளது பழக்கவழக்கங்க்ளைத் தெரிந்து, பின் மெல்ல அவளிடம் சில பல சங்கதிகள் பேச ஆரம்பித்து பின் தன் காதலைச் சொன்னால், அந்தப் பெண்ணும் அவனிடம் ஈர்ப்புகொண்டிருந்தால் அந்தக் காதல் கண்டிப்பாய் வெற்றிபெறும். அதை விடுத்து பெண்ணைப் பார்த்தமாத்திரத்திலேயே “பெண்ணே.. நான் உன்னை விரும்புகிறேன்” என ஒருவன் சொல்வானாகில் அவனது கன்னம் பழுக்க வாய்ப்புமிருக்கிறது.. எனில் வரலாற்றில் நடந்த நிகழ்வுகளைப் (?)பற்றி எழுதும் போது அதன் சுற்றுச் சூழலைப் பற்றி எழுத சரித்திர ஆசிரியனுக்கு(?!)த் தேவைப் படுகிறது.. எனில் இந்தக் கதை நிகழ்ந்த இடமான புன்னைபூதங்குடி என்றும் திருப்புள்ள் பூதங்குடி என்றும் அழைக்கப் பட்ட இடத்தைப் பற்றி அடுத்துப்பார்க்கலாம்..

    சாதாரணமான மனிதர்களுக்கு மனதை சோகம் கவ்வும் போது சோர்ந்துபடுத்து விடுவார்கள்.. அதை “அப்படியே சிவனேன்னு தூங்கிட்டேம்ப்பா எனச் சொல்வதுமுண்டு!. ஸ்ரீராமன் ஜடாயு மரணமடையக் கண்டு மிக்க சோகத்துடன் அவருக்கு உண்டான கிரியைகளைச் செய்து முடித்து பின் சிவனே என்று படுத்த ஸ்தலம் திருப்புள்ள பூதங்குடி என்று சொல்வார்கள்..வல்வில் ராமன் அனந்த் சயனத்தில் பூமாதேவியுடன் அருள் பாலிக்கும் கோவில் உள்ள இடம்..திருமங்கை ஆழ்வார் மங்களாஸாஸனம் பாடிய ஸ்த்லமான பு்ள்ள பூதங்குடி அன்றைய கால கட்டத்தில் கோவில் பிரகாரம் சற்று பெரிதாய் இருக்க அமைந்திருந்தது..

    கோவிலின் முன்புறமிருந்த தெருவில் இரண்டுபக்கமும் வ்ண்ண மலர், இன்ன பிற விற்கும் அங்காடிகள் நிறைந்திருக்க அதை அடுத்த தெருவில் தான் கோவிலின் அர்ச்சகர் வீர நாராயணரின் வீடு அமைந்திருந்தது..

    அந்த வீட்டின் பின்புறம் தான் இளவீரனும் மற்றவரும் நுழைய, உள்ளே ஏழாம் கட்டில் இருந்த ஊஞ்சலில் ஒருவர் அமர்ந்து சில ஓலைகளைப்படித்துக் கொண்டிருக்க, இவர்கள் நுழையவும் நிமிர்ந்தார். இந்த கிராமத்தில் இந்த வீட்டில் இப்படி அனைவருக்கும் அறிந்த அந்த நபர் வருவார் என எதிர்பார்க்காததால். அவர்கள் திடுக்கிட்டனர்..


    (தொடரும்)

  9. #8
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,058
    Post Thanks / Like
    கலக்குறீங்க, சி.க.! அப்படியே கல்கியையும், சாண்டில்யனையும் கலந்து கட்டி உருட்டி பக்குவமாய் சி.க.வின் முத்திரை குறும்பெனும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்த லட்டுருண்டை என்னமாய் தித்திக்கிறது! ஜமாயுங்கள்!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  10. Thanks chinnakkannan thanked for this post
  11. #9
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பி.பி க்கா மிக்க நன்றி.. இன்னும் வெகுதூரம்போக வேண்டும்..கதையில..

  12. #10
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடல் மைனா..

    சின்னக் கண்ணன்..

    7. கிருஷ்ணா, மாதவா, ராஜாதித்தா

    நட்பு என்பதை சிருஷ்டித்த கர்த்தா எதற்காக விரோதம் என்பதையும் சிருஷ்டித்திருக்க வேண்டும்.. ஒரு வேளை அது நியதியோ..பிறப்பு இறப்பு, இன்பம் துன்பம் என்பது போல.. விரோதத்தால் விளைவது பகை..பகையால் விளைவது பல தீய செயல்கள்.. அதுவே இரண்டு நாடுக்ளுக்கு நடுவில் பகை எனின் என்னாகும்.. ஏகப்பட்ட பொருட்சேதம் மற்றும் மற்றற்ற உயிர்சேதங்கள் தான்..

    அப்படி சோழ நாட்டின் முதன்மைப் பகைவனான ராஷ்டிர கூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் ஆச்சார்யரும் அவனது அரசியல் கவலைகளில் பங்கு பெறுபவரும் அவனது நம்பிக்கைக்கு மிகுந்த பாத்திரமானவரும் ருக்வேத பாஷ்யம் எனச் சிறந்த நூலொன்றை எழுதியவருமான மாதவர் தான் அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக் கொண்டிருந்தார்.. செவேலென்ற தேகத்தின் குறுக்கே முப்புரி பூணுல் வீற்றிருக்க,. பின்பக்கம் நன்றாக வாரி இழுக்கப்பட்ட குடுமியில் ஆங்காங்கே நரை தெரிந்திருக்க மிளகும் உப்பும் கலந்தாற்போன்ற நிறம் அங்கு வைக்கப் பட்டிருந்த் குத்து விளக்கின் விளக்கில் மெல்லிய காற்றால் அசைந்தாடிய ஒளியில் தெளிவாகவே தெரிந்தது. ராஷ்டிர கூட அந்தணர்களின் வழக்கப் படி ஒற்றை மஞ்சள் நிறத் திருமண்ணும் முகத்தில் அவர் அணிந்திருந்தார்..பஞ்சகச்சமாய்க் இடையில் கட்டப் பட்டிருந்த பட்டுச் சரிகை வேஷ்டியின் கீழ் தெரிந்த கால்கள் அந்த வேஷ்டி தொ\டர்ந்திருக்க அதற்கான சிவந்த கரை போலும் தெரிந்து மின்னின.

    சற்றே உற்று நோக்குகையில் கொஞ்சம் பின்னால் கை பொத்தி நின்றிருந்த வீர நாராயணரும் தெரிந்தார்.. அவரது முன்னெற்றியில் அணிந்திருந்த நாமத்தில் துளிர்த்திருந்த வியர்வைத் துளிகள் அந்த மஞ்சள் வெளிச்சத்தில் வைரத் துளிகளைப் போல் பள பளத்தன..

    ஓலைச்சுவடிகளிலிருந்து ஒரு கணம் கண்ணெடுத்துப் பார்த்து மீண்டும் அதில் கண்களைப் பதித்த வண்ணம் உள்ளே நுழைந்தவர்களிடம்- அதுவும் முதலில் நுழைந்த சிற்றப்பாவிடம், “என்ன ராஜாதித்யரே தஞ்சை அரண்மனை எதற்காக இந்தச் சிறு கிராமத்திற்கு வரவேண்டும்” எனப் புன்முறுவலுடன் கேட்க, எழில் அடிக்கடி ஏற்பட்ட அதிர்ச்சிகளை தாங்கிக்கொளவொண்ணாமல் கொஞ்சம் தலைகிறுகிறுத்த படி முன்னேறாமல் நிற்க அடுத்து சிற்றப்பாவும் வீரனும் செய்த செயல் அவளை மேலும் நிலை குலைய வைத்தது

    (தொடரும்)

Page 1 of 5 123 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •