Page 241 of 401 FirstFirst ... 141191231239240241242243251291341 ... LastLast
Results 2,401 to 2,410 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2401
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சி கே சார்

    ஆட்டோ ராஜா - சங்கர் கணேஷ் இசை அமைத்து வெளிவந்த படம்
    சந்ததத்தில் பாடாத கவிதை இந்த ஒரு பாட்டு மட்டும் இளையராஜா உடையது .
    இது எப்படி சாத்தியம் ஆயிற்று என்று ஏதாவது தகவல்கள் இருந்தால் தெரிவிக்கலாம்

    heroine பேரு காயத்திரி என்று நினைவு
    பாலச்சந்தர் படத்தில் வரும் வெறும் பொம்மை போன்ற முகம்
    எப்படி செலக்ட் செய்தார்கள் என்று தெரியவில்லை
    இந்த பாட்டு பார்தீங்கன்னா கட் சாட் ஆகவே வரும்
    gkrishna

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2402
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கிருஷ்ணா ஜி..அந்த தும்பி நா தும்பக் குடத்தின் கேட்டுப் பாருங்க வெகு ஜோராக இருக்கும.. இந்தப் பாட்டுக்கு லிங்க் கொடுத்ததோட சரி..பார்க்கலை..
    அப்புறம்.. நீங்க திருநெல்வேலிக்காரவுகளா..

  5. #2403
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    ராஜேஷ் சார்

    வாங்க ரொம்ப நாளாக ஆச்சு உங்க கூட பேசி
    நேற்று உங்க face புக் படித்த நினைவு .
    தமிழ் திரை இசையில் ஆண் குரல்கள் னு ஒரு பதிவு படித்தேன்
    மிக அருமை.
    நன்றி கிருஷ்ணா ஜி. அதே போல் பெண் குர்லகள் கட்டுரையும் படிங்கோ

  6. #2404
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வானம்பாடில்ல இந்தப் பாட்டு எழுதினது யார்னு போட்டிருக்கு தெரியுமா.. சஸ்பென்ஸ்..கீழே பார்க்கவும்
    ரொம்ப எஞ்சாய் பண்றா மாதிரியான லிரிக்ஸ்..


    இந்தப் பாட்டைப் பத்தி என்னைவிட ஆதித்ய இளம்பிறையன் என்பவர் உணர்ச்சிவசப்பட்டு என்னவாக்கும் எழுதியிருக்கார்..

    ///அனிச்சத்தின் மென்மை இவள்
    அன்னத்தின் தன்மை இவள்
    செங்காந்தளை மேவிய சிவப்பு இவள்
    மரபுகளை மீறிய வார்ப்பு இவள்
    வம்புக்குள் அடங்கா வனப்பு இவள்
    வளிமண்டலத்தை மீறிய ஈர்ப்பு இவள்

    தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கோர்த்து ஆகா! அற்புதம்!! என்று உற்சாகம் கொள்ளும் வேளையில், தழைகளை தழுவிய தென்றலொன்று முன்னிரவுப் பொழுதில் என் காதோரமாய் தந்த இந்தப் பாடல் என் கர்வம் கொன்று நித்திரை தின்று ஆசை எனும் ஆண்ட வெளியில் ஆர்ப்பரித்து அடங்கச் செய்கிறது.

    இசையா! இன்பத் தமிழா!

    தெரியவில்லை. கேட்டவுடன் கிறங்கடிக்கும் இதன் இனிமையை என்னவென்று சொல்வது !! ஆசைகளிலும் நிராசைகளிலும் தொலைந்துவிட்ட வாழ்க்கையின் கணங்களை இந்தச் சின்னஞ் சிறிய பாடல் மீட்டு பூமிப்பந்தை என் கண்ணின் கருவிழிக்குள் சுழலச் செய்கிறது. கற்பனையெனும் எல்லைகளற்ற கானக வீதிகளில் நான் காணமல் போகிறேன்....

    பெண்களின் அழகை கம்பன் பாடியிருக்கான், இளங்கோ வர்ணித்திருக்கிறான்... முச்சங்கங்களில் அமர்ந்த எத்தனையோ புலவர்கள் பெண்களின் அங்கங்களை கவிதையாய் புனைந்திருக்கிறார்கள் பாடியிருக்கிறார்கள் போற்றியிருக்கிறார்கள். அழகிகளையும் பேரழகிகளையும் கண்டிருப்பார்கள் களித்திருப்பார்கள் கண்களால் பருகியதை கவிதையாய் வடித்திருப்பார்கள். ஆனால்

    எச்சொல்லுக்குள்ளும் அடக்க முடியாத அத்துமீறல் இவள் அங்க அழகு !!
    ஒரே வரி.... ஓராயிரம் சிந்தனைச் சிற்றலைகளை ஓயாது உள்ளத்தில் உரசச் செய்கிறது...// நன்றி ஆதித்ய இளம்பிறையன்..


    *

    சங்கத்தில் பாடாத கவிதை உன்
    அங்கத்தில் யார் தந்தது
    சந்தத்தில் மாறாத நடையோடு என்
    முன்னே யார் வந்தது
    தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
    அங்கத்தில் யார் தந்தது

    கையின்றே செங்காந்தள் மலரே
    நீ சொன்னால் நான் நம்பவோ
    கால் என்றே செவ்வாழை இலைகளை
    நீ சொன்னால் நான் நம்பி விடவோ
    மை கொஞ்சம்.......
    பொய் கொஞ்சம்........
    கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
    காலத்தால் மூவாத உயர் தமிழ்
    சங்கத்திலே....

    அந்திப்போர் காணாத இளமை
    ஆடட்டும் என் கைகளில்
    சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
    சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
    கொஞ்சம் தா..அ...
    கொஞ்சம் தா..ஆ..
    கண்ணுக்குள் என்னென்ன நளினம்
    காலத்தால் மூவாத உயர் தமிழ்
    சங்கத்திலே

    ஆடை ஏன் உன் மேனி அழகை
    ஆதிக்கம் செய்கின்றது
    நாளைக்கே அனந்த விடுதலை
    காணட்டும் காணாத உறவில்
    கை தொட்டு...ஆ
    மெய் தொட்டு..ஆ
    சாமத்திலே தூங்காத விழிகளில்
    சந்தித்தேன் என்னென்ன மயக்கம்
    தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
    அங்கத்தில் யார் தந்தது

    படம்: ஆட்டோ ராஜா
    இசை: இளையராஜா
    பாடல்: வாலி
    பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி

    *

    இந்த ரெண்டு பேரும் அப்படியே மயங்கி மயங்கி ப் பாடின மாதிரி இருக்கும் ம்ம்ம்ம் ஆஆ ஆ.. எல்லாம் அப்படியே அழகா இருக்கும்..இதையே இளையராஜாவோட ஒரு ஷோவில் கேட்டிருக்கிறேன்..கனடான்னு நினைவு..வீடியோவில் தான்..அதுவும் அழகு..
    Last edited by chinnakkannan; 16th September 2014 at 05:56 PM.

  7. #2405
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஆட்டோ ராஜா சங்கத்தில் பாடாத கவிதை எழுதியது வாலி ஐயா .. கங்கை அமரன் அல்ல

  8. #2406
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓ..அப்படியா..தாங்க்ஸ் ராஜேஷ்.. இது வான்ம்பாடியில் போட்டிருந்தார்கள்..

  9. #2407
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    pulamai pithan confirms that sangathil is by vaali..

  10. #2408
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஆட்டோ ராஜா என்ற கேப்டனின் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் பின்னால் ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டு. இந்தப் பாட்டு முதலில் மலையாளத்தில் வந்தது என்றும், இந்த மெட்டுக்கு சொந்தக்காரர் சங்கர்- கணேஷ் என்றும் பல கட்டுக்கதைகள் இணையத்தில் உலவுகிறது.

    இந்த மெட்டு முதலில் மூன்றாம் பிறை பிண்ணனி இசையில் ராஜா உபயோகித்தது. இதை மிகவும் ரசித்த பாலு மகேந்திரா ஓளங்கள் என்ற மலையாள படத்தில் ராஜாவை பாடலாக்க சொன்னார். தும்பி வா என எஸ்.ஜானகி தனியாக பாடிய பாடலது. அதேப் பாடலை பின் தமிழில் டூயட்டாக மாற்றினார் ராஜா. தும்பி வா பாடலின் ஸ்ருதியும் இதுவும் வேறு வேறு. இதை ராஜா தொடங்கும் போதே ஒரு காதல் ஏக்கத்தை காண்பித்திருப்பார். ஆனால் மலையாளத்தில் அப்படி இருக்காது.

    அதேப் போல இந்தப் பாடலை எழுதியது புலமைப்பித்தன் என்றும், கங்கை அமரன் என்றும் சொல்கிறார்கள். எனக்கும் சரியான தகவல் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். பாடலின் வரிகளை கவனித்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும். எனக்கு மிகவும் பிடித்த வரி. // நன்றி..பாரதி கண்ணம்மா.ப்ளாக்ஸ்பாட்.காம்..

    இன்னும் சில இடங்களில் புலமைப் பித்தன் என்றும் போட்டிருக்கிறார்கள்ராஜேஷ்..வாலி என்று உறுதியாய்த் தெரியுமா..

  11. #2409
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓ.. அகெய்ன் தாங்க்ஸ்.. ராஜேஷ்..(தீராத செண்பக்ப் பாண்டிய சி.க வின் சந்தேகத்தைத் தீர்த்த ராஜேஷீக்கு அவர் ஆஃபீஸிலே ஒரு காப்பசீனோ பார்சல் //

  12. #2410
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கிருஷ்ணா ஜி..அந்த தும்பி நா தும்பக் குடத்தின் கேட்டுப் பாருங்க வெகு ஜோராக இருக்கும.. இந்தப் பாட்டுக்கு லிங்க் கொடுத்ததோட சரி..பார்க்கலை..
    அப்புறம்.. நீங்க திருநெல்வேலிக்காரவுகளா..
    அப்பு
    பொறவு திருநெல்வேலியிலே பொறந்தா திருநெல்வேலினுதானெ சொல்லுவாக வேற என்ன சொல்லுவாக அப்பு
    அப்பு மதுரை தானே

    அந்த மலையாள பாடல் கேட்டு இருக்கிறேன் சி கே சார்
    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

    தகவலுக்கு நன்றி ராஜேஷ் சார்
    நிச்சயம் படித்து விடுகிறேன்
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •