-
16th September 2014, 11:05 AM
#2371
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
'நித்திரையில் ஒரு ராத்திரி' என்ற மலையாளப் படத்தில் கபில் தேவ். கிறித்துவப் பாதிரியாராக வந்து இளம் பெண்களைக் கெடுத்து கொலை செய்வார்.
அதைத்தான் நீங்கள் அதிசய மனிதன் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
-
16th September 2014 11:05 AM
# ADS
Circuit advertisement
-
16th September 2014, 11:10 AM
#2372
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
தீராத விளையாட்டுப் பிள்ளை முன்னால் பார்த்திருக்கிறேன் மதுண்ணா.. ஃபார் ஒன்லி பூர்ணிமா ஜெயராம்..அந்தப் பாடல் நினைவில்லை..
இன்னொரு படம் கூட உண்டு..மோகன் “நடித்த” படம் அந்த சில நாட்கள்..அதிலும் பூர்ணிக்க்யூட்டி தான்..
வந்துட்டேன் க்ருஷ்ணா ஜி.. வென்ணிலா பத்தி எழுதலாம்னு நினச்சு பாசுரம் எழுதிட்டேன்..ம்ம் கொஞ்சம் கொஞ்சம் கோபால் சார் போஸ்டிங்க்ஸ்
படிச்சதுனால் வந்த விளைவாக் கூட இருக்கலாம் அதுபத்தி அப்புறம்..
வாசு சார் எதிர்பார்தேன் இளங்கிளியக் காணலியே நல்ல பாட்டு..எனக்கு ப்பிடிக்கும்.. அப்புறம் ஸ்டண்ட் மேன் அண்ட்ஸ்டண்ட் காட்சிகள்
கொஞ்சம் வேகமாப் படிச்சேன்..வெரி நைஸ் நன்றி.. அப்புறம் நிதானமா படிக்கறேன் (கொஞ்சம் வேலை ஜாஸ்தி உள்ற வரமுடியலை)
மதுண்ணா நேத்திக்கு இந்த கிச்சா வயுசு 16 பாட்டு நினைவுக்கு வந்தது..சேனல் மாத்தறப்ப சிக்கிய ஒரே ஒரு தரம் கேட்டு மனதில் நின்ற பாட்டு..
மறுபடி கேட்க வைத்தமைக்கு நன்றி..(ஜெய் ஆகாஷ்னு தெரியுது படம் தான் தெரியலை..ஈவன் சிம்ரனும் நினைவுக்குவரலை..)
ஆர் சுந்தர்ராஜன் - தூங்காத கண்ணின்று ஒன்று - கொஞ்சம் நல்ல பாடல்கள் கொண்ட படம்.. நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம் என ரயிலில்
ஹீரோ பாட வேஸ்டாக அம்பிகாவின் மானபங்கக் காட்சி இன்னொரு பக்கம் ஓடும்.. மழையெனும் ..ஸ்வரங்களை நினைத்தே ஜொலிக்குது
என்பது போல் வரும் ஒரு வேகப் பாடல் நன்றாக இருக்கும்.. நான்பாடும் பாடலில் பாடும் வானம்பாடி அப்புறம் பாடவா உன் பாடலை,
பாட்டுக்கள்..அந்தப் படம் இண்டர் வெல் வரைக்கும் ரொம்ப நேச்சுரலாக அவரால் எடுக்கப் பட்டு இருக்கும்..அந்தக்காலத்திலேயே
சிலாகித்ததாக நினைவு.. நன்றி கிருஷ்ணா ஜி
//வாசு ,இத்திரியை தொடங்கிய நோக்கம் வேறு. நான் அளிக்க நினைத்த பங்களிப்பு வேறு.
(நாங்கள் பேசியுள்ளோம்)கடைசியில் வாசு playing to the gallery(எல்லோரையும் அணைத்து செல்வது.) .
70 இன் இசை மட்டும் கேட்டு வளர்ந்த ,அதற்கு மேல் வளராத சிலரால்,
விஜய பாஸ்கர்,சங்கர்-கணேஷ் தாண்டி செல்லாமல் தவிக்கிறது.
சில சமயம் ஒரு படத்தில் 1 வினாடி தலை காட்டிய எக்ஸ்ட்ரா நடிகைகளுக்கு 8 பக்கம்,
ராகத்தை ,சங்க நாட்களில் இருந்து அலசினால், பெப்பே, கொஞ்சம் உள்நுழைந்தால் ஊஹும்
என்று ஆகி விட்டது. சொன்னாலும் வெட்கமடா ,சொல்லா விட்டால் துக்கமடா என்ற நிலையே. // நன்றி கோபால் சார்
//இதையும் மீறி என்னை இங்கு செலுத்துபவர்களில் தலையாய பங்கு வாசு,ராகவேந்தர்,கார்த்திக்,முரளி,
வெங்கிராம்,P oem போன்ற சிலரே.இதையும் மீறி இசையின் பரிமாணங்கள் அலச படும்.
அதற்கு, நிச்சயம் தகுதியுள்ள நபர்கள் இங்கு உண்டு.// மிக்க நன்றி கோபால் சார்..
மீண்டும் வருவேன் உஷார்..
-
16th September 2014, 11:20 AM
#2373
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
நீங்கள் கேட்டிருந்த நடிகை ரத்னா (தொழிலாளி, இதயக்கனி) படம் தேடினேன். என்னிடம் இருந்த 'பேசும் படம்' ஒன்றில் இருந்தது. இது பிரத்யோகமாக உங்களுக்காகவே ஸ்கேன் செய்தேன். என்ஜாய்.
-
16th September 2014, 11:21 AM
#2374
Senior Member
Diamond Hubber
இது ஞான ஒளி 'அலேக்' விஜயநிர்மலா ரசிகர்களுக்காக.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th September 2014, 11:51 AM
#2375
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்
ரொம்ப எளிதாக 'ராஜா' படத்தில் ராஜாவுடனான கண்ணன் சண்டைக்காட்சியை அருமையாக விளக்கி விட்டீர்கள்.
-
16th September 2014, 11:54 AM
#2376
Senior Member
Diamond Hubber
'நெஞ்சமெல்லாம் நீயே' திரைப்படத்தில் நம் எல்லோர் நெஞ்சிலும் நிறைந்த பாடல். வாணியின் மயக்கும் குரலில். ராதா நடிப்பில்.
சங்கர் கணேஷ் இரட்டையரின் அற்புதமான இசையமைப்பில்
'யாரது.... சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது'...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th September 2014, 12:00 PM
#2377
எதிர்பாராத அதிர்ச்சி (இன்ப) வாசு சார்
-
16th September 2014, 12:09 PM
#2378
வாசு சார்
வாணியின் நாத ஒலியை எழுப்பி விட்டீர்கள் .70 களுக்கு பிறகு சங்கர் கணேஷ் இல்லை. அருமையான பாடல் படம் வெளிவந்த ஆண்டு 1983
இந்த நேரத்தில் வைரமுத்து வாணி உரையாடல்
குயிலின் கூட்டில் கொஞ்சநேரம்
- கவிஞர் வைரமுத்து
வெயிலின் நிறம் மஞ்சளுக்கு மாறிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரம்.
திருமதி வாணி ஜெயராம் அவர்களின் வீட்டு வெளிச்சுவர் தனது நெந்றியில் ''மயூரப்பிரியா'' என்று எழுதி வைத்திருக்கிறது.
மயூரம் என்றால் மயில் என்று பொருள்.
தன் வீட்டுக்கு மயில் என்று பெயர் வைத்திருக்கிறதே ஒரு குயில் என்று மனதுக்குள் ரசித்துக் கொள்கிறேன்.
திரு. ஜெயராம் அவர்களும், திருமதி வாணி ஜெயராம் அவர்களும் புன்னகை ராகம் பாடி வரவேற்கிறார்கள்.
அந்த வரவேற்பறையின் அமைதி சுமந்த அழகு, வெயிலோடு அழைத்து வந்த வெப்பத்தையெல்லாம் வெளியே அனுப்பிவிடுகிறது.
விருதுகளை எல்லாம் கண்ணாடிச் சுவர்களுக்குள் அடுக்கி வைத்திருக்கும் அழகு..
தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி வைத்த அமரர் வசந்த்தேசாயின் படத்திற்கு மாலையிட்டு வைத்திருக்கும் மாண்பு...
சுவரில் வழியில் வர்ணக் கலவைகளால் நதியின் திருப்பத்தில் நகரும் ஒரு படகு...
அந்த அறையெங்கும் தூய்மைக்கு அங்குலம் அங்குலமாக அலங்காரம் செய்து வைத்திருக்கும் அந்தப் பாங்கு...
இவையெல்லாம் அந்தக் கோடை வேளையில் மனசுக்குள் மெல்லிய மல்லிகைக் காற்றாய் வீசின.
''உங்களுடைய மூலப்பெயருக்கு ஏற்றவாறே வீட்டை வைத்திருக்கிறீர்கள்?'' என்று வியந்து போகிறேன். (அவருடைய மூலப்பெயர் கலைவாணி)
எனது பொய்யில்லாத புகழ்ச்சியை அவர் தனது புன்னகையால் அங்கீகரித்துக் கொள்கிறார்.
வீட்டைச் சுற்றிக் காட்டுகிறார்.
ஒவ்வோர் அறையிலும் தூய்மையும் அழகும் அரசோச்சுகின்றன.
அங்கே ஆடம்பரத்தின் விசுவருபமில்லை.
அழகு அடக்கமாக இருக்கிறது.
வீட்டை கட்டியதிலும் அதைக் கட்டிக் காப்பதிலும் உள்ள பெருமை தன் கணவரையே சாரும் என்று பெருமை நுரைக்கப் பேசுகிறார்.
திரு. ஜெயராம் அவர்களின் கலை உள்ளத்தை வணங்கி வாழ்த்துகிறேன்.
அவர்கள் வீட்டுச் சமையலறைகூட அப்போதுதான் துடைத்து வைத்த ஆப்பிள் போலப் பளபளப்பாய் இருக்கிறது.
''உங்கள் வீட்டு ஸ்டவைக்கூட யாரோ கொடுத்த அவார்டைப் போலல்லவா அழுக்குப் படாமல் வைத்திருக்கிறீர்கள்! சமைக்கிறீர்களா இல்லையா?'' என்று சந்தேகத்தோடு கேட்டேன்.
சிரிப்பை அடக்க முடியாமல், அன்று சமையல் நடந்தற்கான சாட்சிகளைக் காட்டினார்.
மாடி அறையில் ஒரு பெரிய சுவரோவியம் ஒட்டப்பட்டிருந்தது.
அது, ஒரு பெரிய வனாந்தரத்தை வரைந்து காட்டியிருந்தது.
அதைப் பார்த்த உடனே மனசு அதற்குள் ஓடி விழுந்து உட்கார்ந்து கொண்டது.
தாகூர் சொன்னதைச் சொன்னேன்.
''எந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தவுடன் நமக்கு அந்த இடத்திற்குப் போய் உட்கார வேண்டும் என்று தோன்றுகிறதோ அதுதான் சிறந்த ஓவியம்.
எனக்கு இப்போது இந்த ஓவியத்தில் இருக்கிற இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு எழுத வேண்டும் போலிருக்கிறது'' என்றேன். ஜெயராம் சிரித்தார்.
மீண்டும் வரவேற்பறைக்கு வந்து அமர்ந்தோம்.
வாணி ஜெயராம் : நேற்று சிலோன் ரேடியோவில் 'ஒரு இந்தியக் கனவு' படத்தில் நீங்கள் எழுதிய 'என் பெயரே எனக்கு மறந்து போன' பாடலைக் கேட்டேன்.
சமீபகாலத்துல ரசிக்கற மாதிரி வந்திருக்கும் பாடல்கள்ல இதுவும் ஒன்று.''
நான் : எனக்கும் ரொம்பப் பிடித்த பாட்டு அது. முதன் முதலில் புத்தகத்துக்குள்ளிலிருந்து எடுத்து இசையமைக்கப்பட்ட முதல் புதுக்கவிதைங்கற அந்தஸ்து அந்தப் பாட்டுக்கு உண்டு. எம்.எஸ்.வி. ரொம்ப நல்லா இசையமைச்சிருக்கார். நீங்களும், எஸ்.பி.பியும் ரொம்ப அழகாப் பாடியிருக்கீங்க.''
வாணி ஜெயராம் : ''உங்களுடைய முதல் பாடலே 'இது ஒரு பொன்மாலைப் பொழுது''தானா?
நான் : ''ஆமாம். நான் எழுதி நீங்கள் பாடின முதல் பாட்டு எது தெரியுமா?''
கொஞ்சநேரம் யோசித்துவிட்டு கணவர் ஜெயராமைப் பார்க்கிறார். அவர் என்னைப் பார்க்கிறார்.
நான் : ''மேகமே மேகமே'' தான்.''
ஆச்சரியத்தால் இருவரின் விழிகளும் குரல்களும் உயர்கின்றன.
வாணி ஜெயராம் : ''அப்படியா! அதற்கு முன்பு உங்கள் பாடலை நான் பாடியதேயில்லையா?''
நான் : ''இல்லை. அப்போதுதான் நான் திரையுலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். அந்தப் பாடல், எண்ணிக்கையில் எனது எட்டாவது பாடலாகவோ அல்லது ஒன்பதாவது பாடலாகவோ இருக்கக்கூடும். உங்களுக்கு 'கஜல்' தெரியும் என்பதால் அந்தப் பாடலைச் சிங்காரித்துவிட்டீர்கள் என்று இசையமைப்பாளர் திரு. சங்கர் (கணேஷ்) என்னிடத்தில் பாராட்டியிருக்கிறார்.''
வாணி ஜெயராம் : ''நம்மைவிட நமது இசைக்கு ஆயுள் அதிகம். இந்த மாதிரி ஜீவனுள்ள பாடல்கள்தான் காலத்தைக் கடந்து நிற்கும்.
நான் : ''மல்லிகை என் மன்னன் மயங்கும்', 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்', 'மேகமே.. மேகமே' போன்ற பாடல்களைப் பாடிவிட்டு எப்போதாவது நீங்க கிளப் டான்ஸ் பாட்டுப் பாடுவது மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு மேடம். குத்துவிளக்குல சிகரெட் பற்ற வைக்கற மாதிரி இருக்கு.''
தான் அமர்ந்திருந்த சோஃபா அதிரச் சிரிக்கிறார்.
இன்றைய இசையுலகத்தைப் பற்றிய சின்னச் சின்னச் சர்ச்சைகள், அங்கங்கே சில ஆதங்கங்கள், மற்றவர்களைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயங்கள், 'நெஞ்சமெல்லாம் நீயே' படத்தில் வரும் 'யாரது' என்ற பாடலைப் பற்றிய சிலாகிப்புகள், இவற்றோடு அந்தத் தாயுள்ளத்தின் அன்பையும், உபசரிப்பையும் ஏற்றுக் கொண்டு விடைபெற்றேன்.
திரும்பி வரும்போது அநத்ச் சகோதரியின் குரல் என்கூடவே வந்து கொண்டிருக்கிறது.
- கவிஞர் வைரமுத்து (உடனிருந்து கேட்டு உரையாடலை எழுதியவர் : சுதா முருகேசன்)
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
sss thanked for this post
-
16th September 2014, 12:25 PM
#2379
Senior Member
Diamond Hubber
Originally Posted by
gkrishna
தேங்க்ஸ் மது சார்
என் ஜீவன் பாடுது னு ஒரு படம் சுந்தர்ராஜன் இயக்கம்
இதிலும் கபில்தேவ் வருவார் என்று நினைவு
பல நல்ல பாடல்கள் நிறைந்த ராஜாவின் இசை
70 களில் வந்த படம் அல்ல
86-87 காலகட்டத்தில் வந்த படம் என்று நினைவு
இதோ மனோவின் குரலில் மௌனம் ஏன் மௌனமே... என் ஜீவன் பாடுது படத்தில்
கபில்தேவ், கார்த்திக், சரண்யா நடித்த பாடல் காட்சி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th September 2014, 12:53 PM
#2380
யு ட்டுயுப் வலையை கலைத்து தேடி களைத்து ஓய்ந்து இருந்த நேரத்தில் உங்கள் கண்ணில் மாட்டும் பாடல்கள்
m for magic madhu
thanks with wishes
gk
Bookmarks