-
11th September 2014, 09:51 AM
#2151
Senior Member
Senior Hubber
காலை வணக்கம் அன்பு நெஞ்சங்களே
எங்கே ராகவ் ஜி, பொங்கும் பூம்புனல் காணவில்லையே
கிருஷ்ணா ஜி நானும் உங்க பேச்சு எப்பவுமே பழம் தான்
இதோ இன்றைய பாடல் வாசு ஜி கேட்டு மகிழுங்கள்
கேண்டூரா என்ற ஹிந்தி திரையில் வன்ராஜ் பாட்டியாவின் இசையில் இசையரசி இசைத்த கீதம்
-
11th September 2014 09:51 AM
# ADS
Circuit advertisement
-
11th September 2014, 10:02 AM
#2152
Senior Member
Senior Hubber
மதுண்ணா
ஜனனி பாடலில் இசையரசியின் குரல் மட்டும் , மிகவும் மெல்லிய இசை.. ஆஹா ஆஹா .. என் நினைவும் உன் நினைவும்
-
11th September 2014, 10:05 AM
#2153
Originally Posted by
madhu
இரட்டைக் குழல் குழந்தைகள் சின்னம் கொண்ட ஜெமினியின் பிற்காலத் தயாரிப்பான "ஜனனி" என்ற படம் அதிகமாக பேசப்படவில்லை என்றே நினைக்கிறேன்.
ஆனாலும் அந்தப் படத்தில் இரண்டு வெர்ஷன்களாக எம்.எஸ்.வி.யின் இசையில் ஒலித்த "மன்னிக்க மாட்டாயா" என்ற பாடல் மனதைக் கவர்ந்த பாடல்களின் வரிசையில் சேர்ந்து கொண்டது.
சுசீலா, ஜேசுதாஸ் இருவராலும் தனித்தனியே பாடப்பட்டாலும் இரண்டுமே மெல்லிய சோகப் பின்னணியில் இரக்கம் வேண்டுவதாக எழுதப் பட்டதால் அதற்கேற்ப மிக மென்மையான இசையுடன் உருவாக்கப் பட்டன.
இதோ ஜேசுதாஸ் வெர்ஷன். ( யாரு அந்த ஹீரோ ? மலையாளப் பட நடிகர் (?) உதய குமாரா ? )
சுசீலா வெர்ஷன்
மன்னிக்க மாட்டாயா உன்மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை போதும்
போதும்
மன்னிக்க மாட்டாயா
(மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி)
என் விழிகள் தீபங்களாய்
உனக்கென ஏற்றிவைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன்
தரிசனம் பார்த்து வந்தேன்
உன்னடிமை உன்னருளை
பெற ஒரு வழி இல்லையா
உன்னருகில் வாழ உந்தன்
நிழலுக்கு இடமில்லையா
(மன்னிக்கமாட்டாயா)
என் மனதில்
நாள் முழுதும் இருப்பது நீயல்லவா
என் குரலில்
ராகங்களாய் ஒலிப்பதும் மூச்சல்லவா
என் இதயம் உன் உடமை
உனக்கது புரியாதா
இன்னுமதை நீ மிதித்தால்
உனக்கது வலிக்காதா
( மன்னிக்க மாட்டாயா)
பாடல் வரிகளும் குரலும் இசையும் சிறிது நேரம் சூழலையே மறக்கடித்துப் போகிறது பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
மனதை கொள்ளைகொள்ளும் K J யேஸுதாஸின் இனிய குரலில் அழகான பாடல் ஒன்று. சுசீலா அம்மா குரலிலும் இதே பாடல் சிறிது மாற்றிய கவிதை வரிகளுடன்.
yes madhu sir udayakumar and bhavya
நேதாஜி என்று ஸ்தாபன காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் (நினைவு) இயக்கிய படம் இந்த பாடல் கூட அவர் எழுதியதுதான் என்று நினைக்கிறன்
RV udayakumar ஜனனி" படத்திற்கு ஆசோசியேட் டைரக்டராகவும், தயாரிப்பு மேற்பார்வையாளராகவும் பணிசெய்தார்.
Last edited by gkrishna; 11th September 2014 at 10:24 AM.
gkrishna
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
madhu thanked for this post
-
11th September 2014, 10:09 AM
#2154
-
11th September 2014, 10:11 AM
#2155
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் கிருஷ்ணா ஜி, கோபால் சார், மதுண்ணா,ராஜேஷ் ஜி வரப்போகும் கார்த்திக் சார் வாசு சார்..
கார்த்திக் சார், கிருஷ்ணா ஜி - எம்.கே.டி பற்றிய விளக்கப் பதிவுகள் அருமை..எல்லாமே காலம் செய்த கோலம் தான்..
மதுண்ணா ஜனனி சாங்க் மன்னிக்க மாட்டாயா பிடிக்கும் நன்றி.. ராஜேஷ் ஹிந்தி ப்பாடலுக்கு வழக்கம் போலத் தாங்க்ஸ்..
பாரதியார் சுட்டும் விழிச்சுடர்தான் பாடலிட்டமைக்கு நன்றி கிருஷ்ணா சார்..
-
11th September 2014, 10:16 AM
#2156
Senior Member
Senior Hubber
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882
பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார். .
பாரதியாரின் திருமண வாழ்க்கை
பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
பாரதியாரின் இலக்கிய பணி
‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இறப்பு
1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்
எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.
நன்றி- கல்ச்சுரல் இந்தியா
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
11th September 2014, 10:22 AM
#2157
Senior Member
Senior Hubber
ஒரே பாட்டு தான்..திருமால் பெருமையில் பி.சுசீலா.. ஏழாவது மனிதனில் கே.ஜே.ஜேசுதாஸ்..
சுசீலாம்மா உருக்கம் என்றால் ஜேசுதாஸ் இன்னொரு வித உருக்கம்..
**
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
நந்தலாலா... நந்தலாலா...
**
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th September 2014, 10:23 AM
#2158
ஏற்கனவே திரு கோபால் அவர்களும் கார்த்திக சார் அவர்களும் இந்த பாடலை பற்றி எழுதி விட்டார்கள். இது நண்பர் தமிழ் இசை பா பார்வையில்
சிலரைப் பார்த்து நாம் வாய் கூசாமல், நீ அடுத்த பிறவியில் மிருகமாய் பறவையாய் பாம்பாய் பிறந்திடுவாய் என்று திட்டி விடுகிறோம். அப்போது அவர்களுடைய மனது மிகவும் வேதனைப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்தப் பிறவியிலேயே சிலர் மிருகமாய் பறவையாய் பாம்பாய்த் திகழ்வதை நாம் காண முடிகிறது. மனிதன் இப்பிறவியில் எப்படி, எப்போது ஐந்தறிவுப் பிராணியாக மாறுகிறான் என்பதற்கு மகாகவி பாரதியார் விளக்கம் தந்திருக்கிறார்.
*வஞ்சனையால் சமய சந்தர்பத்திற்குத் தகுந்தபடி கபடங்கள் செய்து வாழ்பவன் நரி.
* உற்சாகமில்லாமல் சோர்வாய், சுறுசுறுப்பைத் தொலைத்துவிட்டு உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு.
*மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு.
*அற்ப சுகத்தில் ஆழ்ந்து கிடப்பவன் பன்றி.
*பிறருக்குப் பிரியமாய் நடந்து, அவர்கள் கொடுப்பதை உண்டு வாழ்பவன் நாய்.
*கண்ட கண்ட விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுபவன்வேட்டைநாய்.
*தேடலினால் அறிவைச் சேர்க்காமல், பிறர் சொன்னதைச் சொல்லித் திரிபவன் கிளிப்பிள்ளை.
* மற்றவர்கள் மரியாதை இல்லாமல் நடத்தினாலும் பொறுத்துப் போகிறவன் கழுதை.
*வீண் ஆடம்பரத்தில் படோடோபமாக வாழ்பவன் வான்கோழி.
*தான் சம்பாதிக்காமல் பிறர் சொத்தை அபகரிப்பவன் கழுகு.
*மாற்றங்களை அங்கீகரிக்க மறுப்பவன் ஆந்தை.
படம்: பாரதி
பாடலாசிரியர்: மகாகவி சி.சுப்ரமணிய பாரதியார்
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா
************************************
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
(நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே..)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014, 10:27 AM
#2159
Junior Member
Newbie Hubber
Thirumal perumai- Sulamangalam rajalakshmi not suseela.
-
11th September 2014, 10:27 AM
#2160
சுட்டும் விழிச்சுடர் தான், - கண்ணம்மா! சுசீலா குரலில் கங்கை அமரன் இசையில் கூட பாடிய நினைவு சி கே சார்
Bookmarks