-
6th September 2014, 08:45 AM
#1911
Junior Member
Platinum Hubber
KUMUDHAM - 1969 - TITBITS
-
6th September 2014 08:45 AM
# ADS
Circuit advertisement
-
6th September 2014, 08:45 AM
#1912
Junior Member
Platinum Hubber
1969- KUMUDHAM
-
6th September 2014, 08:46 AM
#1913
Junior Member
Platinum Hubber
-
6th September 2014, 08:49 AM
#1914
Junior Member
Platinum Hubber
-
6th September 2014, 08:49 AM
#1915
Junior Member
Platinum Hubber
-
6th September 2014, 08:53 AM
#1916
Junior Member
Platinum Hubber
-
6th September 2014, 08:54 AM
#1917
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th September 2014, 09:38 AM
#1918
Senior Member
Diamond Hubber
வினோத் சார்,
சுனாமி. சினிமா சம்பந்தப்பட்ட பழைய ஆவணங்கள் அல்லோலகல்லோலம். கலக்குங்கள்.
-
6th September 2014, 09:50 AM
#1919
Senior Member
Diamond Hubber
//கிருஷ்ணா சார்,
தாங்கள் அளித்துள்ள 'ஹிந்து' நாளிதழின் நடிகை குமுதினி பற்றிய பதிவை ரசித்து படித்தேன்.
அதில் ஒரு சிறு திருத்தம். 'சிவந்த மண்' திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் அம்மாவாக வருபவர் நடிகை சாந்த குமாரி. முத்துராமன் அம்மாவாக வருபவரே குமுதினி.//
'சிவந்த மண்' படத்தில் டி .வி.குமுதினி முத்துராமனின் தாயாக.
Last edited by vasudevan31355; 6th September 2014 at 09:52 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
6th September 2014, 10:21 AM
#1920
Senior Member
Senior Hubber
கே எஸ் ராஜாவின் பதிவை கண்டவுடன்
நான் சமீபத்தில் முகனூலில் எழுதிய குரலால் தமிழ் வளர்த்தவர்கள் என்ற பதிவை இங்கே மீள் பதிவாக இடுகிறேன்.
குரலால் தமிழ் வளர்த்தவர்கள்
எனது சிறு வயதில் 2 இன் 1 வானொலியில் அதிகம் கேட்டது இலங்கை
ஒலிபரப்பு கூட்டுத்தாபனம். ஆம பழைய பாடல்களை பல அபூர்வ பாடல்களையும் அதைப்பற்றிய விபரங்களையும் கூறுவதில் இந்த வானொலிக்கு நிகரேதுமில்லை.
முக்கிய காரணம் அதன் அறிவிப்பாளர்கள். இலங்கை ஒலிபரப்பு
கூட்டுத்தாபனத்தின் முதல் தமிழ் அறிவிப்பாளர் மரியாதைக்குறிய திரு எஸ்.பி.மயில்வாகனம் ஐயா அவர்கள். குரலாலேயே மக்களை கட்டிப்போட்டவர் இவர். பாடல் ஒலிபரப்பு, பேட்டி என எதுவாக இருந்தாலும் அழகான தமிழில் அதுவும் இலங்கை தமிழில் பேசிய அழகு அடேயப்பா.
இந்த குரலுக்கு சொந்தக்காரரை நேரில் ஒரு முறையாவது பார்த்துவிடமாட்டோமா என ஏங்கிய ரசிகர்கள் உண்டு.
இவரத்தொடர்ந்து பாடல்கள் ஒலிபரப்புவதில் மிகவும் புகழ்பெற்றவர்
திருமதி ராஜேஸ்வரி சண்முகம்.. இனிய குரலில் இவர் பாடல்களைப்பற்றி
சொல்லும் விதமே அலாதி.. அதே போல் திரு கே.எஸ்.ராஜா .. இந்த மூன்று
பெயரும் அறிவிப்பாளர்களில் ஜாம்பவான்கள் எனலாம். இவரைத்தொடர்ந்து இன்றும் நம்மிடையே தன் கம்பீர குரலால் தமிழை வளர்த்து கொண்டிருப்பவர் திரு.பி.எச்.அப்துல் ஹமீது அவர்கள். இவர் வானொலி,தொலைக்காட்சி,மேடை நிகழ்ச்சிகள் என பலவற்றிலும் தன் தமிழால் அழகுக்கு அழகு சேர்ப்பவர். இவர் இருக்கிறார் என்று தெரிந்தே சில மேடை நிகழ்ச்சிகளை மக்கள் பார்ப்பதுண்டு. அவ்வளவு புகழுண்டு காரணம் இவரது குரலும் தமிழும்.
இலங்கை வானொலியைப்போலவே அகில பாரத வானொலியிலும் சில குரல்கள் நம்மை ஈர்த்ததுண்டு. குறிப்பாக செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி .. இந்த குரலில் செய்திகளை கேட்கவே அதிக ரசிகர்கள் உண்டு அந்த காலத்தில். இவரைப்போலவே செய்திகள் வாசிப்பது ராமனாதன்(சரத்குமாரின் தந்தை). இந்த இருவரும் நேர்த்தியாக வானொலிப்
பெட்டியின் வழியாக மக்களின் மனதில் புகுந்தவர்கள். பல வருடங்களுக்கு பின்னே அந்த குரலுக்கான முகம் எது என்பதை விகடன் வாயிலாக தெரிந்துகொண்டேன்.. இப்படி குரலாலேயே தமிழை வளர்த்து நம்மையும் கவர்ந்தவர்கள் இவர்கள்
தமிழ் நாட்டிற்கு தொலைக்காட்சி வந்தபோது தூர்தர்ஷனில் செய்திகளை வித்தியாசமாக வாசித்தவர்கள் ஷோபனா ரவி,சந்தியா ராஜகோபால் மற்றும் பாத்திமா பாபு. இவர்களும் அழகாகவும் அன்றை சூழலுக்கு ஏற்றவாறு செய்திகளை நேர்த்தியாக வாசித்தனர்.
இவர்கள் எல்லோரும் அவர்களை அறியாமலே தமிழுக்கு ஆற்றியிருக்கும் தொண்டு அளப்பறியது..
குறிப்பாக இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள்.
இன்றைய அறிவிப்பாளார்கள் எல்லாம் நுனி நாக்கு ஆங்கிலமும் அலங்கார உடையுமன்றி நல்ல தமிழோ செய்திகளை நேர்த்தியாகவோ வாசிப்பதில் ஆர்வம் துளி கூட இல்லை. அன்றைய அறிவிப்பாளார்களை இன்றும் நினைவு கூர்கிறோம் என்றால் அவர்களின் தமிழாற்றல் அதன் கூட சேர்ந்த அவர்களது உழைப்பு என்று எல்லாமும் சேர்ந்தே.
இது போன்ற அறிவிப்பாளர்கள் இனி கிடைப்பார்களா.. ஹுஹூம் சந்தேகமே..
- ராஜேஷ்(@Rajesh venkatasubramanian)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks