-
16th August 2014, 04:40 AM
#181
Junior Member
Newbie Hubber
Originally Posted by
vasudevan31355
ஒளிச்சி ஒளிச்சி வச்சிருந்த பாட்டை ஆருயிர் நண்பருக்காக கொடுத்திடுவோம்.
பாட்டு இல்லேஜி. என் உயிர். என் வேதம். இதன் மூலமான பெங்காலி வெர்ஷனும் அருமை. இந்தப் பாடல் உங்களுக்காக. உங்களுக்காக மட்டுமே. என் உயிரையே உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். பத்திரம்.
வாசு,
சஜ்னா என் உயிரும் கூட. அதை நீ வைத்திருக்காமல் ,உரியவரிடம்
சேர்ப்பித்ததற்கு நன்றி.
-
16th August 2014 04:40 AM
# ADS
Circuit advertisement
-
16th August 2014, 05:14 AM
#182
Junior Member
Newbie Hubber
இந்த திரியில் எனக்கு பிடித்த,கவர்ந்த அம்சமே உற்சாகம்,நட்பான சூழ்நிலை. எந்த நடிகரையோ அல்லது இசையமைப்பாளர்,பாடகரை,மொழியையோ சாராமல் எல்லோரை பற்றியும் பேசும் வாய்ப்பு.
ஆரம்பித்த வாசுவிற்கு முதல் நன்றி.
நிறைய பேர் திரியை ஆரம்பித்து ,ஒரு பக்கத்தில் அம்போ என்று விட்டு விடுவார்கள். அப்படி பண்ணாமல் எல்லோரையும் அரவணைத்து கூட்டி சென்று ,வெற்றிக்காக,பார்வையாளர்களுக்காக,பதிவாளர்களுக் காக இரவு பகல் பாராமல் உழைத்த வாசுவிற்கே இரண்டாம் நன்றியும்.(உன்னை பாராட்டுவது சுய பாராட்டு என்பதால் சந்தடி சாக்கில் இரண்டு முறை)
இந்த திரியின் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாஜி ,திரி விசையுறு பந்து போல உயிர்ப்பித்து நின்றதன் தலையாய நாயகன்.நன்றி கிருஷ்ணாஜி.
கார்த்திக்- நான் திரிக்கு வரும் போது ,இவரை,முரளியை மனதில் வைத்தே வந்தேன்.அப்படியே தோளில் கை போட்டு அரவணைக்கும் இதத்தை ஒவ்வொருவருக்கும் தருவார். தென்றலாக,வாடையாக,புயலாக,ஈர காற்றாக என்று இவர் ஏற்காத பணியே திரியில் இல்லை.நான் திரியின் உள்ளே வரும் போதே இவர் இல்லாதது பெரும் குறை.
ராகவேந்தர்- நாங்கள் எல்லோரும் தலைமை பீடமாக மானசீகமாக ஒப்பு கொள்ளும் ஸ்வாமிகள்.அவ்வப்போது மோதினாலும்,என்னுடைய மதிப்பு எக்காலமும் சிதிலமாகாது.உங்களின் பாடல் இல்லாத நாள் வீண் நாளே.
ராஜேஷ்- வெறும் தங்க நகையாக மிளிர்ந்ததை, வைரமாக வந்து அதை வைர நகையாக புது அந்தஸ்து கொடுத்து ,ஜொலிக்க வைத்தவர் நீங்கள்.Hats off . அப்படியே எங்களை addict ஆக்கி, வாசுவின் நட்பை உன் பக்கம் திருப்பி விட்டாய்.(பொறாமை எல்லாம் இல்லேப்பா)
மது- வைரம் பதியும் முன் பட்டை தீட்டி polish கொடுத்த புண்ணியவான். என்ன பாடலுக்கு நாங்கள் திணறினாலும் ,அப்படியே கொண்டு கொட்டும் ,அதிசய பாடல் சுரங்கம் .நிஜமாகவே எங்களை குதுகலத்தில் ஆழ்த்திய பங்களிப்பு.
venkki ram - நீங்கள் எதை சார்ந்திருந்தாலும், நான் உங்கள் கருத்தை சாரா விட்டாலும், உங்களை ,நீங்கள் சொல்லும் முறையை ,வெளியிடும் திறமையை சார்ந்தே இருப்பேன். உங்களின் ஓங்கிய குரலுடன் கூடிய கருத்துக்கள் ,திரியின் உயரத்தை கூட்டவே செய்தது.நன்றி.
சின்ன கண்ணா- நீ என் செல்ல கண்ணன். என்ன ஒரு நகைச்சுவை. non -linear எழுத்து முறை. உன் பணி ,சுவாரஸ்யத்தை,ஆச்சர்யத்தை கூட்டி கொண்டே இருக்கிறது.
எஸ் வீ- உங்களின் அபூர்வ ஆவணங்கள் திரியின் நண்பர்களை அதிசயிக்க வைத்தது. பம்மலார் இல்லாத குறையை ஓரளவு
போக்கினீர்கள். நன்றி.(வாசுவின் வேண்டுகோளை ஏற்று, என்னை வேறிடத்தில் திட்டியதற்கும் சேர்த்தே நன்றி)
முரளி- நான் மதிக்கும் தமிழ் -ஆங்கில எழுத்து சித்தனே?உன் பங்களிப்பு வெகுவாக குறைந்து விட்டது பணி சுமைகளினால்.(moderator பணியும் சேர்த்து).ஆனாலும் அது கூட சுவைதான்.என்னதான் அமிர்தம் என்றாலும் ,அதை பெரிய வாளியில் வைத்து டம்ளர் டம்ளர் ஆக தந்து கொண்டிருந்தால் ,அது பானகமாகி விட வாய்ப்புள்ளதே?அதனால் நீ அபூர்வமாக வருவதே கூட உன் அருமையை இன்னும் உணர்த்துவதாகவே உள்ளது.
சாரதி -எங்கே கலிங்கன் என்று அன்னையின் ஆணை சிவாஜி தேடுவது போல ,எங்கே சாரதி என்று தேடி கொண்டுள்ளோம். உங்களுக்கு நன்றி சொல்லும் அளவு ஒன்றுமே தேறவில்லை சமீப நாட்களில். நன்றியை reserve செய்து வைக்கிறேன்.
முகம் தெரியா நண்பர்களே- இணை-எதிர்-புதிர் கருத்துக்கள் எதுவானாலும் இந்த திரி வரவேற்க காத்துள்ளது. பங்களிப்பு நிகழ்த்தி ,உயரம் கூட்டுங்கள்.மௌன பார்வையாளர்களுக்கும் நன்றி.
உங்கள் அனைவருடனும் உரையாடுவது,நெகிழ்வது, உரிமையாக சண்டை பிடிப்பது,பகிர்வது,எல்லாமே பள்ளி நண்பர்களுடன் உரையாடும் உச்ச பட்ச மகிழ்வுக்கு இணையானது.
Last edited by Gopal.s; 16th August 2014 at 05:25 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
16th August 2014, 05:38 AM
#183
Senior Member
Diamond Hubber
அம்மாடியோ.. கொஞ்சம் தாமதமாய் வந்தாலும் போச்சு... பக்கம் பக்கமாய் போயே போச்... படித்து முடிக்கும் முன் ( அங்கங்கே பதியப்பட்ட பாடல்களைக் கேட்க ஆரம்பிச்சா இன்னும் லேட் ) அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகுதே.. ( ஓ..கொஞ்சம் மாத்திக்குவோம். சின்ன அண்ணாமலை அவர்களிடம் ஒருவர் ஒரு முறை அமரர் கல்கியின் நாவல் நீண்டு கொண்டே போகிறதே என்றபோது அவர் பதிலாக குரங்குக்குத்தான் வால் நீண்டு போகக் கூடாது. மயிலுக்கு தோகை நீண்டால் என்ன என்று கேட்டாராம் )
நம்ம திரி ஒரு மயில் அதனால் தோகை நீஈஈஈஈளலாம்.
செல்லப் பெண் பாடல்கள் சுபர்ப். இன்னும் "அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க" என்று நம்ம சிக்காவுக்காகவே ஒரு பாட்டு உண்டு.
எல்.ஆர். ஈஸ்வரி பற்றிய பதிவுகள் குறைந்து போனதால் அவர் பாடிய "மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ" பாட்டை நண்பர்கள் அலசுமாறு வேண்டிக் கொள்கிறேன். ( அடுத்தடுத்த வரிகளை எழுதாமல் விட்டுவிட்டேன்.. அலசுறவங்க அலசிக்கலாம் )
இன்னும் பார்க்க வேண்டியவை இருக்கு. அப்புறம் வர்ர்ர்ரேன்.
-
16th August 2014, 05:48 AM
#184
Junior Member
Newbie Hubber
Originally Posted by
madhu
அம்மாடியோ.. கொஞ்சம் தாமதமாய் வந்தாலும் போச்சு... பக்கம் பக்கமாய் போயே போச்... படித்து முடிக்கும் முன் ( அங்கங்கே பதியப்பட்ட பாடல்களைக் கேட்க ஆரம்பிச்சா இன்னும் லேட் ) அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகுதே.. ( ஓ..கொஞ்சம் மாத்திக்குவோம். சின்ன அண்ணாமலை அவர்களிடம் ஒருவர் ஒரு முறை அமரர் கல்கியின் நாவல் நீண்டு கொண்டே போகிறதே என்றபோது அவர் பதிலாக குரங்குக்குத்தான் வால் நீண்டு போகக் கூடாது. மயிலுக்கு தோகை நீண்டால் என்ன என்று கேட்டாராம் )
நம்ம திரி ஒரு மயில் அதனால் தோகை நீஈஈஈஈளலாம்.
செல்லப் பெண் பாடல்கள் சுபர்ப். இன்னும் "அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க" என்று நம்ம சிக்காவுக்காகவே ஒரு பாட்டு உண்டு.
எல்.ஆர். ஈஸ்வரி பற்றிய பதிவுகள் குறைந்து போனதால் அவர் பாடிய "மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ" பாட்டை நண்பர்கள் அலசுமாறு வேண்டிக் கொள்கிறேன். ( அடுத்தடுத்த வரிகளை எழுதாமல் விட்டுவிட்டேன்.. அலசுறவங்க அலசிக்கலாம் )
இன்னும் பார்க்க வேண்டியவை இருக்கு. அப்புறம் வர்ர்ர்ரேன்.
மது கண்ணா,
சிலதெல்லாம் நீள நீளத்தான் வேலையும் நடக்கும்.சுகமும் கிடைக்கும்.
உனக்கு தெரியாததா?
-
16th August 2014, 06:27 AM
#185
Junior Member
Seasoned Hubber
On the eve of Krishna Janmashtami beautiful song from Vanambadi for the benefit of fans of
Devika
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2014, 06:58 AM
#186
Senior Member
Diamond Hubber
Originally Posted by
madhu
எல்.ஆர். ஈஸ்வரி பற்றிய பதிவுகள் குறைந்து போனதால் அவர் பாடிய "மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ" பாட்டை நண்பர்கள் அலசுமாறு வேண்டிக் கொள்கிறேன். ( அடுத்தடுத்த வரிகளை எழுதாமல் விட்டுவிட்டேன்.. அலசுறவங்க அலசிக்கலாம் )
இன்னும் பார்க்க வேண்டியவை இருக்கு. அப்புறம் வர்ர்ர்ரேன்.
ரொம்ப கஷ்டமான பாடம் கொடுக்குற வாத்தியார். மார்க்கே எடுக்க முடியாது போல இருக்கே!
-
16th August 2014, 07:07 AM
#187
Originally Posted by
madhu
நம்ம திரி ஒரு மயில் அதனால் தோகை நீஈஈஈஈளலாம்.
செல்லப் பெண் பாடல்கள் சுபர்ப். இன்னும் "அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க" என்று நம்ம சிக்காவுக்காகவே ஒரு பாட்டு உண்டு.
உங்கள் மயில் தொகை உவமை அருமை
செல்ல பெண் 'அம்மா சொன்னது போலவே' ராஜேஸ்வரி (MS ) தானே
மிக அருமையான பாடல் .
இந்த படத்தில் உள்ள இன்னொரு பாடலை முதல் பாகத்தில்
குறிப்பிட்டு உள்ளோம் (கண்ணே கொஞ்சம் பாரு )
இந்த படத்திற்கு இசை யாரு ? v குமார் ஆ அல்லது பாண்டுரங்கன் ஆ
அல்லது வேறு யாருமா ?
-
16th August 2014, 07:14 AM
#188
Senior Member
Senior Hubber
செல்லப்பெண் படத்திற்கு இசை பி.ஏ.சிதம்பரநாதன்
மலையாள படங்களுக்கு நிறைய இசையமைத்துள்ளார்.
இசையரசியின் குரலில் தூங்கவைக்கும் இரவெல்லாம் பாடல் மிக அருமையாக இருக்கும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2014, 07:18 AM
#189
Senior Member
Senior Hubber
கோபால் ஜி ,
அடேயப்பா கொஞ்சம் கொஞ்சமாக தலையை காட்டிவிட்டு இன்று திரியின் அசுர வளர்ச்சியையும் அதன் பங்களிப்பாளர்களையும் பற்றிய உங்கள் பதிவு அருமை அருமை .
ஒவ்வொருவரையும் அழகாக நினைவு கூர்ந்து அருமையாக பாராட்டியுள்ளீர்கள் . குறிப்பாக சின்னக்கண்ணன் செல்ல கண்ணனின் பாராட்டு அற்புதம்..
வாழ்த்துக்கள் ஜி, நீங்கள் சொன்ன அனைவரும் தவிற உங்களுக்கும் அதில் சிறப்பான பங்குண்டு என்பதை நாங்கள் மறக்கவில்லை.
-
16th August 2014, 07:20 AM
#190
Senior Member
Senior Hubber
கிருஷ்ணா ஜி, கோபால் ஜி நீங்களெல்லாம் பங்கேற்ற நீயா நானா ஒளிபரப்பாகிவிட்டதா?
Bookmarks