Page 67 of 401 FirstFirst ... 1757656667686977117167 ... LastLast
Results 661 to 670 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #661
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இந்த மறக்க முடியுமா படம் தேவிகா நடித்தும் நான் பார்த்திராத ஒரு படம்..காகித ஓடம் கடலலை மீது – கேட்டிராதவர் யாரும் உண்டோ..என்னவோ அழுகை என்று யாரோ சொன்னதினால் பார்த்ததில்லை..பட்
    இசைக்களஞ்சியத்தின் தயவில் கேட்டிருக்கும் இந்தப் பாட்டு உணர்வை உருக்கும்.. கேட்டும் ரொம்ப நாளாச்சு..சுசீலாம்மாவின் உருக்கும்குரல்..ஜேசுதாஸ்.. பாடல் எழுதியது யாரெனப் பார்த்தால்..உவமைக் கவிஞர் சுரதா..இசை..டி.கே.ராமமூர்த்தி..

    *

    வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ
    வைகை பெருகி வருமோ, குறை தீருமோ

    ஆசை அரும்பு மலராகி, நெஞ்சில்
    ஆடும் நினைவு கனியாகி
    மடி மீதிலே விளையாடவே
    கொடி போலவே உறவாடவே
    எனையே தேடி...


    வீணை இருந்தும் பயனேது, வந்து
    மீட்டும் வரையில் இசையேது
    ஹாஹா ஹாஹா ஹா ஹா
    வீணை இருந்தும் பயனேது, வந்து
    மீட்டும் வரையில் இசையேதுகுயில் கூவுமோ மழை நாளிலே
    கயல் நீந்துமோ சுடும் நீரிலே
    எனையே தேடி...

    *

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #662
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    இந்த மறக்க முடியுமா படம் தேவிகா நடித்தும் நான் பார்த்திராத ஒரு படம்..காகித ஓடம் கடலலை மீது – கேட்டிராதவர் யாரும் உண்டோ..என்னவோ அழுகை என்று யாரோ சொன்னதினால் பார்த்ததில்லை..பட்
    இசைக்களஞ்சியத்தின் தயவில் கேட்டிருக்கும் இந்தப் பாட்டு உணர்வை உருக்கும்.. கேட்டும் ரொம்ப நாளாச்சு..சுசீலாம்மாவின் உருக்கும்குரல்..ஜேசுதாஸ்.. பாடல் எழுதியது யாரெனப் பார்த்தால்..உவமைக் கவிஞர் சுரதா..இசை..டி.கே.ராமமூர்த்தி..

    *
    சி.க.,

    போட்டாச்சுப்பா. ம.கீ-1.பக்கம்-106,பதிவு-1059.(வீடியோ இல்லை)ஒரு தடம் சிரமம் இல்லையென்றால் பாகம்-1 ஐ புரட்டி பாத்துடேன். இதை பற்றி ஏழு எட்டு இடங்களில் விவரிக்க பட்டுள்ளது.இந்த பாகம்-2 இல் டி.கே.ஆர் சிறந்த 20 இலும்.எல்லோரும் படிக்கவே மாட்டேன்னு அடம் புடிச்சா? நாங்கள் சொந்த கவிதை முதற்கொண்டு எல்லாத்தையும் படிக்கிரோமுல்ல ?

    Last edited by Gopal.s; 21st August 2014 at 03:00 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. Thanks chinnakkannan thanked for this post
  5. #663
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷலாக வாசு ஜி நீங்கள் அளித்த அடுத்த வீட்டு பெண் பாடல் அபாரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று .

    1953’ல் தெலுங்கில் பக்கிண்டி அம்மாயி வெளியானது .. இதிலும் இசையரசி தான் பாடல்கள். அஞ்சலிக்கு ரேலங்கி ஜோடி .. அருமையாக செய்திருந்தார்கள்
    அதையே அடுத்த வீட்டு பெண் என்று தமிழில் வடிவம் பெற ரேலங்கி பாத்திரத்தை டி.ஆர்.ராமச்ச்சந்திரன் செய்தார்.

    டி.ஆர்.எம் அடிக்கும் லூட்டி, அஞ்சலியின் ஃப்யூட்டி, தங்கவேலு சரோஜாவின் காமெடி ஃட்யூட்டி என ஏக அமர்க்களம்..

    இதில் தான் முதன் முதலாக ஒருவர் பாடுவது போல பாவனை செய்ய படத்திற்குள்ளேயே இன்னொருவர் பாடுவதாக அமைந்த காட்சி ..

    ஆதி நாராயணராவ்..ஜீனியஸ் .. என்னமாய் இசையமைப்பார் இவர் .. ஒவ்வொரு டியூனும் வித்தியாசம்

    மன்னவா வா துள்ளலுடன் இசையரசி பாடும் விதமே அழகு.. கொஞ்சும் கண்களுடன் அஞ்சலி அழகோ அழகு

    மலர்க்கொடி நானே மகிழ்ந்திடுவேனே

    பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து..
    பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் மாலையில் மலர்ச்சோலையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் (கண்ணாலே பாடலையே போட்டு போட்டு தேய்ப்பார்கள்)

    அதேபோல் சீர்காழியாரும் லோகனாதனுன் இசைத்த கண்களும் கவி பாடுதே இன்றும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

    மொத்தத்தில் அடுத்த வீட்டு பெண் .. நம்ம் மனத்தில் குடி கொண்ட பெண் .. பாடல்கள் நம் நெஞ்சத்தில் குடி கொண்டன

  6. #664
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    யாராவது சிரமம் பார்க்காமல் index செய்தால் ,அப்பாவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.(Young thread started only on 8th June!!!!)

    நாளன்னிக்கே சின்ன கண்ணன் ,எப்போதோ சிலோன் ரேடியோவில் 1969 இல் கேட்டது பட்டம் விட்டது போலே (Full பாட்டு வேறு எழுதி விடுவார் )
    Last edited by Gopal.s; 21st August 2014 at 03:50 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #665
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (58)

    'இன்றைய ஸ்பெஷல்' பாடல் 'கண்டதை சொல்லுகிறேன்'.சில நேரங்களில் சில மனிதர்கள்.படத்திலிருந்து. பாடலை 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களே பாடியிருப்பார் அவருக்கே உரித்தான அந்த தனி ஸ்டைலில்.





    லஷ்மி, ஸ்ரீகாந்த், சுந்தரிபாய், நாகேஷ், ஒய்.ஜி.பி, ராஜசுலோச்சனா ஆகியோர் நடித்த இப்படத்தை இயக்கியவர் பீம்சிங்.

    ஜெயகாந்தனின் அருமையான வரிகள் இந்த ஆர்ட் பிலிமிற்கு அருமையாய் அமைந்தது. எழுத்தாளர் நாகேஷ் கண்ணில் படும் அனுபவங்கள் அவருடைய எண்ணத்தில் பின்னணியில் ஒலிக்கும் பாடலாய் இப்பாடல் வரும்.

    பாரதியார் போல சில வரிகளை அமைத்திருப்பார் ஜெயகாந்தன்.

    'இதற்கெனை கொல்வதும் கொன்று
    கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
    உம்முடன் கூடி இருப்பதுண்டோ
    கூடி இருப்பதுண்டோ'

    நடைபாதைகளில், சாலைகளில் மக்களோடு மக்களாக சர்வசாதாரணமாக நாகேஷ் ஜோல்னாப் பையுடன் நடந்து செல்ல பின்னணியில் இப்பாடல் அற்புதமாய் ஒலிக்கும்.

    'என்னை நம்பவும் நம்பி
    அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
    எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ
    ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ'

    என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. சமூகத்தின் அவலங்களைப் பார்த்து அதைச் சாடி 'மனிதர்களே நீங்கள் திருந்தவே மாட்டீர்களா? என்று கேவிக்கணை தொடுத்து 'அதனால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை' என்று அர்த்தம் தொனிக்க வரும் இப்பாடல் மிகச் சிறந்த தமிழ்ப்பாடல்களில் ஒன்றாகும்.

    சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஜெயகாந்தனின் அருமையான நாவல் அழகான காவியப் படமானது.



    1975-ன் சிறந்த தேசிய நடிகையாக லஷ்மி இப்படத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டார்.

    இன்றுவரை தமிழில் ஒரு சிறந்த ஆர்ட் பிலிம் என்ற அந்தஸ்தை இப்படம் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.



    கண்டதை சொல்லுகிறேன்
    உங்கள் கதையை சொல்லுகிறேன்
    கண்டதை சொல்லுகிறேன்
    உங்கள் கதையை சொல்லுகிறேன்

    இதைக் காணவும் கண்டு நாணவும்
    உமக்கு காரணம் உண்டென்றால்
    அவமானம் எனக்குண்டோ

    கண்டதை சொல்லுகிறேன்
    உங்கள் கதையை சொல்லுகிறேன்

    நல்லதை சொல்லுகிறேன்
    இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
    நல்லதை சொல்லுகிறேன்
    இங்கு நடந்ததை சொல்லுகிறேன்

    இதற்கெனை கொல்வதும் கொன்று
    கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
    உம்முடன் கூடி இருப்பதுண்டோ
    கூடி இருப்பதுண்டோ

    கண்டதை சொல்லுகிறேன்
    உங்கள் கதையை சொல்லுகிறேன்
    இதைக் காணவும் கண்டு நாணவும்
    உமக்கு காரணம் உண்டென்றால்
    அவமானம் எனக்குண்டோ

    வாழ்ந்திட சொல்லுகிறேன்
    நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
    வாழ்ந்திட சொல்லுகிறேன்
    நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
    இங்கு தாழ்வதும் தாழ்ந்து
    வீழ்வதும் உமக்கு தலை எழுத்தென்றால்
    உம்மை தாங்கிட நாதியுண்டோ
    தாங்கிட நாதியுண்டோ

    கண்டதை சொல்லுகிறேன்
    உங்கள் கதையை சொல்லுகிறேன்
    இதைக் காணவும் கண்டு நாணவும்
    உமக்கு காரணம் உண்டென்றால்
    அவமானம் எனக்குண்டோ

    கும்பிட சொல்லுகிறேன்
    உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
    கும்பிட சொல்லுகிறேன்
    உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
    என்னை நம்பவும் நம்பி
    அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
    எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ
    ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ

    கண்டதை சொல்லுகிறேன்
    உங்கள் கதையை சொல்லுகிறேன்
    இதை காணவும் கண்டு நாணவும்
    உமக்கு காரணம் உண்டென்றால்
    அவமானம் எனக்குண்டோ...ஓ..ஓ

    நடிகர் திலகமே தெய்வம்

  8. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  9. #666
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,

    கண்டதை சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள். நன்றி. விசு நன்றாகவே பாடி, களை கட்ட .வைப்பார்.

    சி.நே.சி.ம ஆர்ட் பிலிம் கிடையாது. off beat (அ ) compromise parallel cinema ரகம்.

    இப்போது அந்த மாதிரி வித்தியாசத்தை யாரும் லட்சியம் செய்வது கிடையாது.

    ஆர்ட் பிலிம் என்றால், ஒரு கால கட்டம் ,அது சார்ந்த பிரச்சினையை எடுத்து ,பார்வையாளர்களுக்கு,இயக்குனர் கோணத்தில் ,பார்வையில் ,கதாபாத்திரங்களின் அந்த கண மனநிலை ,உணர்வு ரீதியில் உணர்த்த பட வேண்டும். உதாரணம்... சராசரி வாழ்க்கையில் ஒரு போர் அடிக்கும் ஒருவன் மனநிலை சொல்ல ,நிறைய அடிகளில் அதை எடுத்து, அதை உணர்வு ரீதியில் தானும் அனுபவிக்க வேண்டும். மொத்த தொகுப்பில் நோக்கம், தெரிய வேண்டும் போலி தனம் இல்லாமல்.ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கிட்டத்தட்ட கிட்ட வரும்.

    off beat என்றால், வழக்கமான பாத்திரங்கள்,பழக்க பட்ட திரைகதை,என்று இல்லாமல் சற்றே புதுமையாய் ,ரசிகர்களுக்கு nerrative surprise கொடுப்பது.உ.ம் -அரங்கேற்றம்,அவள் ஒரு தொடர்கதை,சில நேரங்களில் சில மனிதர்கள்,அபூர்வ ராகங்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #667
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்

    சில நேரங்களில் சில மனிதர்கள் - அருமையான பாடல் . நாகேஷின் நடிப்பு அபாரம் . மெல்லிசை மன்னரின் பாடல்
    என்றென்றும் நினைவில் நிற்கும் என்பதை இந்த பாடல் மூலம் அறியலாம் .

  11. #668
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால் ஜி
    அருமை... விஸ்வரூபம் பாடலைப் பற்றிய தங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்தேன்.. ஏமாற்றவில்லை..
    உண்மையிலேயே தமிழ்த் திரையுலக இசை வரலாற்றில் இப்பாடலுக்குத் தனியிடம் என்றும் உண்டு.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #669
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    ஒவ்வொரு நாளும் ஸ்பெஷலே தாங்கள் தரும் பாடலாலே அமைகிறது. தொடர்ந்து தாருங்கள்..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. #670
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    அன்னம் போலே அன்னை அருகில் வைத்தாள் உன்னை..

    இசையரசியின் இனிமையான குரலில் மெதுவாக தென்றல் தாலாட்டும் உணர்வைத் தரும் இந்தப் பாடல்

    1961ல் வெளியான அன்பு மகன் திரைப்படத்திலிருந்து... இசை டி.சலபதி ராவ்..

    http://www.inbaminge.com/t/a/Anbu%20Magan%201961/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •