Page 235 of 401 FirstFirst ... 135185225233234235236237245285335 ... LastLast
Results 2,341 to 2,350 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2341
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    I SONGS REVIEW

    Review by : Behindwoods Review Board
    ( 3.5 / 5.0 )
    நேற்றுதான் ஒரு அன்பருக்கு இங்கே கட் அண்ட் காப்பி செய்யவேண்டாம் என அறிவுரை சொன்னதாக நினைவு. அது ஆறி அடங்குவதற்குள் தானாகவே அந்த வேலையை செய்துவிட்டீர்கள். இந்த முரண்தான் உங்களிடத்தில் காணப்படும் காமெடிகளில் முக்கியமான ஒன்று. இங்குள்ள பெரும்பாலோனோர்கள் இங்கே உரையாடும் பாடல்களின் காலம் மற்றும் ரசனை வேறு. ஆனால் தானும் ஒரு மெர்சலான இளைஞன் என வலிந்து நிர்ணயிப்பதாக தற்போது வந்த 'ஐ' படத்தின் பாடல் விமர்சனத்தை அதுவும் தான் கேட்காமல் மிகவும் மலிவான இசைவிமர்சனத்திற்கு பெயர்போன Behindwoods இடத்திலிருந்து அப்படியே காப்பி செய்வதன் நோக்கம்தான் என்ன? அப்படத்தை பற்றி உரையாட அதற்கென பல திரிகள் உள்ளது. அங்கே சென்று பேசலாமே? இங்கே வருகைதரும் எத்தனை நபர்கள் நீங்கள் கொடுத்த அப்பதிவினை வாசித்து உங்களுடன் உரையாடப் போகிறார்கள் என நினைக்கிறீர்கள்? ? சரி..கட் & காப்பிதான் செய்கிறீர்கள்.. முடிவாக நீங்களும் அந்தப் பாடல்களை கேட்ட பட்சத்தில் அதைப்பற்றிய உங்களின் அபிப்ராயம் என்னவென்றாவது சொல்லலாம். அதுவும் கிடையாது. நான் முன்னரே சொன்னதுபோல உங்களின் ஒவ்வொரு பதிவிலும் ஒருவித மறைபொருள் இருக்கிறது.
    Last edited by venkkiram; 15th September 2014 at 08:30 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. Likes raagadevan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2342
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ///If you return in the evening here are a few veNNila songs for you:// கண்டிப்பாக முயற்சிக்கிறேன் ராஜ்ராஜ் சார்..

    கிருஷ்ணா ஜி.. ஸ்டண்ட் மாஸ்டர் நித்யானந்தம் பதிவு நன்று.. எனக்கு டிஷ்யூமில் வரும் – பேர் பாடியுடன் ஜீவாவின் உடலை வரைய ஓவிய மாணவிகள் தயாராக நின்றிருக்க- அவர் சட்டையைக் கழட்டியதும் எல்லா மாணவ மாணவிகள் அழுவதைப்பார்த்து ஹீரோயின் சந்தியா திகைத்துத் திரும்பப்பார்த்தால் ஹீரோ ஜீவாவின் உடம்பு ரணகளமாய் – வெட்டுக்காயத் தழும்புகள் நிறைய தையல்களுடன் கொஞ்சம் ரத்தமும் வந்து இருக்கும்.. ஹீரோயின் திகைத்து என்னப்பா ஆச்சு..;ஜீவா..அய..இதுக்குப் போய் அழுவாங்களா.. இதான் என் தொழிலு..இது பாருங்க இது ரஜினியோட ஒரு ஃபைட்ல நடிச்சப்ப போட்ட தையலு – எனச் சொல்லும் காட்சி தான் நினைவுக்கு வந்தது..

    ஸ்வர்ணலதா – சுகாவின் பதிவும் ஓகே.. சுகாவின் தாயார் சன்னிதி படித்திருக்கிறீர்களா.. விகடனில் ஒரு தொடர் எழுதினார் அது என்னவோ மனதில் ஒட்டவில்லை..பட் படித்துறை படம் வரவே இயலாமல் போனது ஒரு சோகம் தான்..

    வாசு ஜி..72வது இடுகை ஞாயிறும் திங்களும் படமும்படம்பற்றிய தகவலும் பாடலும் எனக்குப் புதிது.. முதல் தடவையாகக் கேட்கிறேன் பன்னீர்ப்பூவே பாதி நிலாவே.. அவ்ளோ ஓஹோ என்று சொல்ல முடியாது..ஓ.கே தான்..ஒருவேளை நிறைய தடவை கேட்டால் பிடிக்கலாம்.. மிக்க நன்றி..இந்தப்பாடலுக்கும்.. அப்புறம் இன்னொரு நன்றி..காலையில் சொல்ல மறந்துவிட்டேன்..

    எஸ்.வி. சார் டிக்கெட்களுக்கு ஒரு தாங்க்ஸ்.. அது என்ன 3 டிக்கட்..(மதுண்ணாவும் ராஜேஷூம் சொல்லிட்டாங்களா!) அகெய்ன் உங்கள் பதிவுகளுக்கும் ஒரு ஓ..

    ஹப்பாடி.. ஒருவழியா ஹோம் ஒர்க் முடிச்சாச்சு..அடடா இல்லியே..சரி ஆரம்பிக்கிறேன்..

  5. #2343
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கிருஷ்ணா ஜி ரொம்ப நாள் ஆச்சா.. மறந்து போச்சு மறுபடியும் கேட்க வழியிருக்கான்னு பார்க்கணும் (அட உறவுகாரங்க கல்யாணத்தைச் சொன்னேங்காணும்..!)

    Quote Originally Posted by gkrishna View Post
    திருமண விசேஷங்களில் நாதஸ்வரம் வாசிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வாசிக்கப்படும் ராகங்கள் பற்றி பலருக்குத் தெரியாது. அது
    குறித்த விவரம்:
    மாப்பிள்ளை அழைப்பிற்கு: கல்யாணி, சங்கராபரணம்.
    ஜானவாச ஊர்வலத்தில்: தோடி, காம்போதி, கரகரப்பிரியா
    திருமண மண்டபத்தில் ( நிச்சயதார்த்தம் நடக்கும் போது): கானடா, அடாணா, பியாகடை.
    திருமண நாளன்று காலையில்: பூபாளம்,கேதாரம்
    முகூர்த்தத்திற்கு முன்பு: தன்யாசி, காபி நாராயணி
    முகூர்த்தம் நடக்கும் போது: நாட்டைக் குறிஞ்சி
    தாலிகட்டும் சமயத்தில்: ஆனந்தபைரவி
    ஊஞ்சல் நிகழ்ச்சியின் போது: நீலாம்பரி, ஆனந்த பைரவி, குறிஞ்சி.


  6. #2344
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Gopal sir, i've posted some LRE songs and other songs as well. my obsession with isaiyarasi is obvious and i will continue to post only her songs .. then and there i will post other songs which impressed me .

  7. Likes raagadevan liked this post
  8. #2345
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வெகு நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலில் காணொளியை யூடியூபில் கண்டேன்.
    அதைப் பகிர்ந்து கொள்ள வந்தேன்.

    சகோதர-சகோதரி பாடிய டூயட் பாடல்களில் இதற்கும் ஒரு தனி இடம் உண்டு. அந்தக் கால
    வெற்றி ஜோடி மோகன் பூர்ணிமா ஜெயராம் நடித்தும் பெரிய வெற்றி பெறாத படவரிசைகளில்
    தீராத விளையாட்டுப் பிள்ளையும் ஒன்று ( லேடஸ்டாக அதே பெயரில் விஷால் நடித்து
    வெளிவந்த படமும் பெரிசா போகவில்லையாமே )

    ஆனால் இந்தப் பாட்டும் அதன் இரண்டு வெர்ஷன்களுமே ஒரு மென்மையான சாரலாக
    எப்போதும் நனைத்துக் கொண்டே இருக்கும்

    மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி





  9. #2346
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    Gopal sir, i've posted some LRE songs and other songs as well. my obsession with isaiyarasi is obvious and i will continue to post only her songs .. then and there i will post other songs which impressed me .
    Fair Enough. But talented youngsters like you should ponder into many versatile subjects. That's why I requested.Pl.Continue as you like.I am also a devotee of Suseela.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #2347
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுஜி!

    நல்ல அரிய பாடல்களுக்கு நன்றி!

    'மலர்களே! இதோ... இதோ வருகிறாள் தலைவி' அப்படியே தாலாட்டும் சுகம்.

    அதே போலத்தான் 'நீ ஒரு ராக மாளிகை' பாடலும். ஆனால் முத்துராமனை நினைத்தால்தான் பயம்.

    இதே டைப்பில் 'எதிர்பார்த்தேன்....இளங் கிளியைக் காணலியே' என்ற பாலாவின் பாடல் ஒன்று உண்டு. 'அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை' என்ற படத்தில் வரும் இந்தப் பாடலில் பாலாவின் பல்வேறு மாயா ஜாலங்கள் நிகழ்த்தும் அந்த குரல்வளம் நம்மை சொர்க்கத்தின் விளிம்புகளுக்கு அழைத்துச் செல்கிறது. (தொடத் தொட தள்ளித் தள்ளிப் போனா அமர்க்களம் பாலா)

    வரிகளும் தேன் மதுரம். ('ஊருக்குள்ளே தீப்பிடிச்சா ஓடையும் உண்டு தீ அணைக்க... உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா உடனே வரணும் நீ அணைக்க')

    இது போன்ற நல்ல பாடல்கள் கபில்தேவ் போன்ற மண்களுக்கு அமைந்ததுதான் மிகப் பெரிய வருத்தம். பாலாவின் உழைப்பு அனைத்தும் வீணடிக்கப் பட்டிருக்கிறது இப்பாடல். சுலக்ஷணா படுத்திருப்பார். கபில்தேவ் ஒரு எங்கோ ஒரு இடத்தில் உணர்வுபூர்வமே இல்லாமல் பாடிக் கொண்டிருப்பார். அய்யகோ! கொடுமைடா சாமி. எவ்வளவு உணர்ச்சிபூர்வமான பாடல் அது!

    காதுகளுக்கு மட்டும் ஏற்படும் இனிமை காட்சிகளில் ஏற்படாதது சோகமே!

    Last edited by vasudevan31355; 16th September 2014 at 08:11 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2348
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    நேற்றுதான் ஒரு அன்பருக்கு இங்கே கட் அண்ட் காப்பி செய்யவேண்டாம் என அறிவுரை சொன்னதாக நினைவு. அது ஆறி அடங்குவதற்குள் தானாகவே அந்த வேலையை செய்துவிட்டீர்கள். இந்த முரண்தான் உங்களிடத்தில் காணப்படும் காமெடிகளில் முக்கியமான ஒன்று. இங்குள்ள பெரும்பாலோனோர்கள் இங்கே உரையாடும் பாடல்களின் காலம் மற்றும் ரசனை வேறு. ஆனால் தானும் ஒரு மெர்சலான இளைஞன் என வலிந்து நிர்ணயிப்பதாக தற்போது வந்த 'ஐ' படத்தின் பாடல் விமர்சனத்தை அதுவும் தான் கேட்காமல் மிகவும் மலிவான இசைவிமர்சனத்திற்கு பெயர்போன Behindwoods இடத்திலிருந்து அப்படியே காப்பி செய்வதன் நோக்கம்தான் என்ன? அப்படத்தை பற்றி உரையாட அதற்கென பல திரிகள் உள்ளது. அங்கே சென்று பேசலாமே? இங்கே வருகைதரும் எத்தனை நபர்கள் நீங்கள் கொடுத்த அப்பதிவினை வாசித்து உங்களுடன் உரையாடப் போகிறார்கள் என நினைக்கிறீர்கள்? ? சரி..கட் & காப்பிதான் செய்கிறீர்கள்.. முடிவாக நீங்களும் அந்தப் பாடல்களை கேட்ட பட்சத்தில் அதைப்பற்றிய உங்களின் அபிப்ராயம் என்னவென்றாவது சொல்லலாம். அதுவும் கிடையாது. நான் முன்னரே சொன்னதுபோல உங்களின் ஒவ்வொரு பதிவிலும் ஒருவித மறைபொருள் இருக்கிறது.
    வெங்கி,



    நான் மெர்சலான இளைஞன்தான். என் முக நூலில் வா புரியும்.ஐ பற்றி இன்னும் எனக்கு அபிப்ராயம் இல்லை. பிறகு எழுதுவேன். நோக்கமோ ,புண்ணாக்கோ திட்டமிடுதலோ,இல்லைப்பா. நேற்று மேயும் போது கண்ணில் பட்டது,சும்மா மியூசிக் திரிதானே என்று போட்டேன் .



    இங்கு எல்லோருமே ,பழமை வாதிகள் ,இசை அறியாதவர்கள் என்று முடிவு கட்டி விடாதே. வாசுவும் ,ராகவேந்தரும் நம்மையெல்லாம் தூக்கி சாப்பிடும் ரசனை கொண்டவர்கள்.



    வாசு ,இத்திரியை தொடங்கிய நோக்கம் வேறு. நான் அளிக்க நினைத்த பங்களிப்பு வேறு. (நாங்கள் பேசியுள்ளோம்)கடைசியில் வாசு playing to the gallery(எல்லோரையும் அணைத்து செல்வது.) .70 இன் இசை மட்டும் கேட்டு வளர்ந்த ,அதற்கு மேல் வளராத சிலரால், விஜய பாஸ்கர்,சங்கர்-கணேஷ் தாண்டி செல்லாமல் தவிக்கிறது.சில சமயம் ஒரு படத்தில் 1 வினாடி தலை காட்டிய எக்ஸ்ட்ரா நடிகைகளுக்கு 8 பக்கம்,ராகத்தை ,சங்க நாட்களில் இருந்து அலசினால், பெப்பே, கொஞ்சம் உள்நுழைந்தால் ஊஹும் என்று ஆகி விட்டது. சொன்னாலும் வெட்கமடா ,சொல்லா விட்டால் துக்கமடா என்ற நிலையே.



    இதையும் மீறி என்னை இங்கு செலுத்துபவர்களில் தலையாய பங்கு வாசு,ராகவேந்தர்,கார்த்திக்,முரளி,வெங்கிராம்,P oem போன்ற சிலரே.இதையும் மீறி இசையின் பரிமாணங்கள் அலச படும். அதற்கு, நிச்சயம் தகுதியுள்ள நபர்கள் இங்கு உண்டு.

    அந்த கால மைதானங்கள் ஞாபகம் வருகிறது. ஒரு பக்கம் கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்போம்.சிறுவர்கள் கல்பாரி விளையாடுவார்கள். சிலர் கோலி .அங்கு கில்லிதாண்டாவும் இருக்கும். கால்பந்து வேறு ஒரு குழு. அத்தனையும் அந்த குட்டி திடலில் ஒரே சமயம். கிரிக்கெட் விளையாடும் போது ,அவ்வப்பொழுது கில்லி வந்து தாக்கும்.கால் பந்து நெற்றியை பதம் பார்க்கும். திட்டுவதை தவிர வேறு வழி?



    அப்படித்தான் திரிகளும். வசீகரமும் அதுதான். வேதனையும் அதுதான்.
    Last edited by Gopal.s; 16th September 2014 at 07:57 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #2349
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    எனக்கு வேறு வழி ஏதும் தெரியல. இப்போதைக்கு இதுதான். முதல் வரியை மட்டும் புடிச்சுக்கோ. மத்த வரிகளெல்லாம் வெங்கிராம் சார் சொன்ன மாதிரி இளைஞர்களுக்கு மட்டுமே.

    நடிகர் திலகமே தெய்வம்

  13. #2350
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    beshaq mandir masjid tode, bullesha ye kahta
    beshaq mandir masjid tode, bullesha ye kahta
    par pyar bhara dil kabhi na todo is dil me dilbar rahta
    jis palde me tule mohabbat
    jis palde me tule mohabbat usme chaandi nahi taulna
    tauba meri na dholna mai ni bolna
    o nahi bolna jaa, mai nahi bolna jaa
    o mai nahi bolna jaa, dholna mai ni bolna
    tauba meri na dholna mai ni bolna

    தேவாவின் ஒரிஜினாலிட்டி டியூனுக்கு ஒரு 'ஓ'
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •