-
14th September 2014, 11:20 PM
#2291
Senior Member
Senior Hubber
//குதிரை போட்ட குங்குமம் பத்திரிகை பற்றி ஒரு காட்சி வருமே அது நூறாவது நாளா //அதேதான்
//மோகன் தன மார்கெட் இழக்கும் நேரத்தில் இதே போல் ஒரு பேய் படம் செய்த நினைவு. மேக் up இல்லாமலேயே பேய் போல் தான் இருக்கிறார் என்று குமுதம் அல்லது தினத்தந்தி என்று படித்த நினைவு// உருவம்
நன்றி க்ருஷ்ணாசார்..
-
14th September 2014 11:20 PM
# ADS
Circuit advertisement
-
15th September 2014, 12:41 AM
#2292
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th September 2014, 07:58 AM
#2293
Senior Member
Diamond Hubber
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.
அனைவரையும் சந்தித்து சற்று இடைவெளி ஆகிவிட்டது. ஒன்றுமில்லை. சிஸ்டம் அவுட். மதர் போர்டு காலி. எல்லாம் சரிபண்ண ஒருவாரம் ஆகிவிட்டது.
அதற்குள் பார்த்தால் அற்புதமான பதிவுகள். கிருஷ்ணா சாரின் வழக்கமான அசத்தல்கள், அழகுத் தமிழில் பீடு நடை போட்டு தன் சொந்தக் கவிதைகளோடு திரைப் பாடல்களை சாமர்த்தியமாக நுழைத்துத் தரும் சின்னக் கண்ணன் சார் பதிவுகள், எனக்கு ரொம்பப் பிடித்தமான சின்ன சின்ன மேகம் பாடல் தந்த மது அண்ணா, கன்னடப் பாடல்களை, மலையாளப் பாடல்களை, இசை இளவரசி சொர்ணலதா பாடல்கள் என்று தனக்கே உரிய பாணியில் அசத்தி வரும் ராஜேஷ் சாரின் பதிவுகள், அந்தக் கால நிகழ்வுகளை இங்கே படமாகப் போட்டு நம்மை டைம் மிஷினில் ஏற்றிவிடும் வினோத் சார் பதிவுகள், மேலதிக விவரங்களைத் தந்து ஒவ்வொருவருவர் பதிவுகளையும் சுவை கூட்ட வைக்கும் எங்கள் அருமை கார்த்திக் சார் பதிவுகள், அபூர்வ பாடல்களை தரும் எஸ்.எஸ்.எஸ்.சார் பதிவுகள், கோபாலின் மெல்லிசை மன்னர் புகழ் பாடும் தொடர், சித்தூர் வாசுதேவன், பொங்கும் பூம்புனல் தந்து நம் உள்ளங்கள பூரிக்க வைக்கும் நமது ராகவேந்திரன் சார் பதிவுகள், சந்தேகங்களை எழுப்பி விடை கண்டு திரிக்கு உற்சாகமூட்டும் வெங்கிராம் சார் பதிவுகள், ராஜ் ராஜ் சார் பதிவுகள், கோபு சரின் பதிவுகள் என்று களைகட்டி திரி உயரத்தில் பறக்கிறதே. அனைவருக்கும், விட்டுப் போன அனைத்து நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
Last edited by vasudevan31355; 15th September 2014 at 08:01 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
15th September 2014, 08:03 AM
#2294
Senior Member
Diamond Hubber
டியர் சின்னக் கண்ணன் சார்,
தங்களது பொன்னான 5000 பதிவுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் அழகுத் தமிழ் பதிவுகள் இன்னும் ஆயிரம் ஆயிரமாகப் பெருகட்டும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th September 2014, 08:04 AM
#2295
Senior Member
Diamond Hubber
வினோத் சார்,
நாகிரெட்டியுடன் இளமையாக நிற்கும் என் இதய தெய்வத்தின் போட்டோவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
-
15th September 2014, 08:06 AM
#2296
Senior Member
Diamond Hubber
கோபால்,
மெல்லிசை மன்னர் பற்றிய தொடரை மிகவும் ரசித்துப் படித்து வருகிறேன். அவருடைய திறமைகளை நீங்கள் வரிசைப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. நன்றி!
-
15th September 2014, 09:13 AM
#2297
Senior Member
Senior Hubber
-
15th September 2014, 09:38 AM
#2298
Senior Member
Senior Hubber
வாசு ஜி
இன்று ரொம்ப நாட்கள் கழித்து தரிசனம் தந்த உங்களுக்கு இரண்டு இசையரசி பாடல்கள்
முதலில் நியாயவே தேவரு படத்தில் அற்புத பாடல் ( எப்பொழுதும் நீங்கள் சகாமயிருங்கள் என்னை மறந்து செளக்கியாமாக இருங்கள்)
அடுத்து நமது ஒரே ஒரு ஊரிலே கன்னட வடிவம் .
-
15th September 2014, 09:45 AM
#2299
Junior Member
Newbie Hubber
ராஜேஷ்,
நானும் இசையரசியின் மிக பெரிய ரசிகனே. ஆனாலும்,நீங்கள் ரொம்பவே,obsession கொண்டு, அதையே பிடித்து தொங்குகிறீர்கள். இது கொஞ்சம் மற்றவர்களை உறுத்தும். எவ்வளவோ இருக்கிறதே ,இசையில்? நீங்கள் இன்னும் கொஞ்சம் மனக்கதவை விசாலமாக்கி ,இன்னும் ரசிக்க தக்க பதிவுகளை இடலாமே?
-
15th September 2014, 09:48 AM
#2300
Senior Member
Diamond Hubber
கோபால்,
நமது திரியில் விவாதங்கள் வரலாம். ஆனால் சர்ச்சைகள் வேண்டாமே! கிருஷ்ணா சாரை நீங்கள் புண்படுத்தி இருக்க வேண்டாம். அவர் மிக மிக மிருதுவான ஒரு நல்ல மனிதர். அவருடைய பதிவுகளில் தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அதை அவருக்கு நீங்கள் பி.எம். மூலம் தெரியப் படுத்தலாமே!
இன்னொன்று. மற்றவருடைய சுதந்திரங்களில் நீங்கள் தலையிடுவது உங்களுக்கு இருக்கும் மிகப் பெரிய மைனஸ் பாய்ன்ட். எல்லோருக்கும் அவரவர்கள் கருத்துக்களை பதிவிட உரிமை இருக்கிறது எல்லை மீறாமல். மற்றவர்களை இப்படி செய் அப்படி செய் என்று உத்தரவு போடாமல் அடுத்தவர்களை நிம்மதியாகப் பதிவு போட விடுங்கள். மற்றவர்கள் சொன்னால் நீங்கள் கேட்பதில்லையே! அதையே மற்றவர்களிடம் நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை.
இங்கு போடும் பதிவுகளை ஒன்றயணாப் பதிவுகள் என்று கேலி செய்து இருக்கிறீர்கள். அதையும் நான் அதை ஸ்போர்ட்டிவாகத்தான் எடுத்துக் கொண்டேன். சுயநலம் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். வார்த்தைகள் மிகத் தடிப்பாக வந்து விழுகின்றன. உங்களுக்கு உங்களைவிட பதிலை மட்டமாக எழுத பல ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். கவனம் தேவை.
நீங்கள் முந்தாநாள் கிருஷ்ணாவுக்கு எழுதி உடனே நீக்கிவிட்ட ஒரு மோசமான பதிவு இங்கு பல பேரிடம் பதிவாய் இருக்கிறது. அது இங்கே வரவிடாமல் நான் தடுத்துள்ளேன். அது பதிவானால் உங்கள் கதி அதோகதிதான்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எழுதி விடுவது.... அதற்கு கண்டனம் வந்தால் உடனே சரணாகதி அடைவது உங்கள் தொழிலாகப் போய்விட்டது. அப்புறம் வேதாளம் கதை. முன்னுக்குப் பின் முரண். நீங்கள் கட் பேஸ்ட் போடும்போது யாராவது கேட்டார்களா?
அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் திரியில் இந்த மாதிரி வாக்குவாதப் பதிவுகள் வேண்டாம் என்பது எங்கள் எண்ணம். உங்கள் ஒண்ணே காலணா தெரு குழாயடி சண்டையை அங்கேயே வைத்துக் கொள்ளுங்கள். அதைவிட சீதாவும், நவக்கிரகமும் எவ்வளவோ மேல். அதை இங்கே கொண்டுவந்து அசிங்கப்படுத்த வேண்டாம். உங்கள் அற்புத அறிவாற்றலை விசுவாமித்திரன் அறிவில்லாமல் அவசரப்பட்டு பொங்கி எழுந்து தவ ஆற்றலை இழந்து விடுவது போல இப்படிப்பட்ட பதிவுகள் இட்டு இழந்து விட வேண்டாம். தங்கள் அற்புத பங்களிப்புகளை மட்டும் தொடருங்கள். அதுவே அனைவரது விருப்பமும்.
தங்கள் மேல் உள்ள நல்ல எண்ணத்தினால்தான் சொல்கிறேன்.
புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்
உங்கள் உயிர் நண்பன்
.
Bookmarks