Page 338 of 400 FirstFirst ... 238288328336337338339340348388 ... LastLast
Results 3,371 to 3,380 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3371
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like



    விகடன் குழும நிறுவனங்களின் சேர்மன் திரு எஸ்.பாலசுப்ரமணியன் (79), 19.12.2014, வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு காலமானார். சிறிதுகாலமாக உடல் நலிவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், மாரடைப்பால் காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழ்த் திரையுலகிலும், பத்திரிகையுலகிலும் முடிசூடா சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த திரு எஸ்.எஸ். வாசன் அவர்களின் தவப்புதல்வனான திரு எஸ்.பாலசுப்ரமணியன், தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் வகித்து வந்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

    ஆனந்த விகடனை தமது சீரிய சிந்தனையாலும் நுட்பமான செயல்திறனாலும் இன்னும் இன்னும் வளர்த்து, மேலே உயரே உயர்த்தி தமிழ்ப் பத்திரிகையுலகில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையாக உச்சம் தொடவைத்தவர் ’எம்.டி.’ என்றும் ‘சேர்மன்’ என்றும் அன்புடன் அழைக்கப்படும் திரு எஸ்.பாலசுப்ரமணியன், தன் அப்பாவைப் போன்று சினிமா உலகிலும் நுழைந்து, வெற்றிப் படங்களை இயக்கியவர். பிறகு, இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய விரும்பாமல், ஆனந்த விகடன் மீது மட்டுமே தன் அத்தனை கவனத்தையும் செலுத்தியவர்.

    50 ஆண்டு கால தமிழ் இதழியலின் பிதாமகனாகத் திகழ்ந்த திரு எஸ்.பாலசுப்ரமணியன், தமிழ்ப் பத்திரிகையுலகுக்கு செய்த பங்களிப்புகள் ஈடு இணையற்றவை. புலனாய்வு இதழியலின் முன்னோடியான 'ஜூனியர் விகடன்' பத்திரிகையும், ஊடகத் துறைக்குக் கொடையான மாணவப் பத்திரிகையாளர் திட்டமும் இவர் நனவாக்கிய நல்ல கனவுகள். சமூகநலக் காரியங்களுக்காக லட்சக்கணக்கான வாசகர்களை ஒன்று திரட்டி, நிறைய நல்ல விஷயங்களை நிகழ்த்திக் காட்டிய சமூக நல நிர்வாகி.

    பாசத்துக்குரிய பண்பாளரை, மிகச்சிறந்த பத்திரிகையாளரை, எங்களின் வழிகாட்டியை இழந்து தவிக்கிறோம்.

    அனைவரின் கவனத்துக்கு...

    மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தன்னுடைய உடலை தானம் தரவேண்டும் என்பதே சேர்மனின் விருப்பம். அதற்கான பணிகள் நடக்கின்றன.

    அதனால், வரும் திங்கள் கிழமை 22.12.2014 அன்று காலை 6 மணி முதல் இறுதி அஞ்சலிக்காக அவருடைய உடல் போயஸ் தோட்டத்து இல்லத்தில் வைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    முகவரி: ஏ1 டிவோலி அப்பார்ட்மென்ட், எண். 11, கஸ்தூரி எஸ்டேட், போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை-18

    -விகடன் குழும ஊழியர்கள்
    Reproduced from Vikatan Facebook Page

    காலத்தின் கையிலும் காலனின் கையிலும் உள்ள அதிகாரம் யாராலும் பறிக்க முடியாது. இதிலிருந்து யாராலும் தப்ப முடியாது.

    என்றாலும் இயற்கையின் அழைப்பு சில சமயம் நம் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி விடுவது மறுக்க முடியாத உண்மை.

    விகடன் பாலுவின் மரணமும் அவ்வாறே.

    அவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அவர் முழுதும் ஈடுபட்டு தயாரித்த நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான விளையாட்டுப் பிள்ளை படத்திலிருந்து இப்பாடலை அவருக்கு அஞ்சலியாக செலுத்துவோம்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3372
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Heartfelt condolences for the sudden demise of Vikatan Balasubramaniam.

  5. #3373
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Fine Senthil for your interest and active participation.

    Well, let's wait for some more responses...

    Of course, the answer will be a pleasant surprise...
    Dear Raghavendar sir. In starnostar.com a voting for Sivaji Ganesan Vs Omar Shariff appears. I just voted.

    I also guess ur answer may be related to the consideration of NT for the Arab King role in David Lean's Lawrence of Arabia alongside Omar Shariff?

    Anyway thanks for keeping me thrilled!! Hope we can rope in our fellow hubbers gradually into such thought provoking programmes as part of glorifying NT.
    Last edited by sivajisenthil; 21st December 2014 at 07:22 AM.

  6. #3374
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Dear raghavendra sir,
    i think his hairstyle matches with that of nt's in vasanthamaaligai
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  7. #3375
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    விகடன் குழும நிர்வாக இயக்குனரும், ஜெமினி ஸ்டுடியோ முன்னாள் அதிபரும், ஆனந்த விகடன் முன்னாள் ஆசிரியரும், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும் அனைத்திற்கும் மேலாக நமது அருமை நண்பர் கோபால் அவர்களின் நெருங்கிய உறவினருமான [அத்தையின் கணவர்] திரு. எஸ். பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவிற்கு நமது திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

    Rip

  8. #3376
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Senthil (Harish) and (Sivaji)

    Happy that a curiosity has developed and thank you for the interest in the quiz... I am also optimistic that sharing trivia in an interesting format like quiz will evince keen interest amongst us. Already one such has been commenced in the Kannukkulle Unnai Paaru thread as a visual quiz. Here other such trivia can be shared.

    Keep guessing please and wait. Hope someone else comes with the answer.

    Of course let me reveal it asap.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #3377
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உண்மைதான். நேற்று முதல் மனதை ஒரு துயரம் அரிக்கிறது. அவர் என்னுடைய சொந்த அத்தை கணவர் என்ற போதிலும் அவர் பிஸி ஆக இருக்கும் நாட்களில் அவரை ரொம்ப அரிதாகவே சந்தித்துள்ளேன். பிறகு கொஞ்ச காலம் எனது விமரிசனத்திற்கும் ஆளானார்.

    ஆனால் அவர் எத்தகைய அற்புத மனிதர் என்பது அவருடன் ஓரளவு நன்கு பழகிய கடந்த இருபது வருடங்களில் அறிய,உணர,அதிசயிக்க,இதம் தரும் இணைப்பானது உணர்த்தியது.

    நான் முதல் முதலில் சென்னையில் டி.வீ. வந்த போது (1975) ,சுமார் ஒரு வருடம் அவர் வீட்டிற்கு அடிக்கடி செல்வேன்.ஆனால் ஹாஸ்டல் சேர்ந்த பிறகு 1976 முதல் 1981 வரை மிக அரிதான உபசார நோக்கு வருகை புரிவேன்.ஆனால் அத்தனை புது படங்களும் ரிலீஸ் ஆகு முன்பே ஜெமினி லேப் projection போது பார்த்து விடுவேன்.


    என் அப்பா பயங்கர நேர்மை ,சுயம் கொண்டவராதலால் தான் எந்த உதவியும் இந்த உறவில் பெறாததோடு,எங்களையும் அவ்வாறே வளர்த்தார்.அதனால் எங்கள் உறவு சம அந்தஸ்துடன் ஆரோக்யமாகவே திகழ்ந்தது.

    வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் தானே சமையல் செய்து எங்களுக்கு பரிமாறி மகிழ்வார். பிறகு ,பல மணிநேரங்கள் நேரம் போதாமல் பல விஷயங்கள் பேசுவார். ஒரு மேதையின் மகனல்லவா? விவசாயம்(Farming ) பற்றி நிறைய பேசுவார்.பலவித விதவிதமான காய்களை ,பழங்களை தானே உருவாக்கி எங்களுக்கு படப்பையிலிருந்து அடிக்கடி அனுப்புவார். நான் ஒரு விலங்கு நேசம் என்பதால்,என்னை பறவை பண்ணைக்கு அழைத்து சென்று விளக்குவார்.(அவர் ஒரு ornithologist என்பதற்கு மேலே Avi -culturist )எழுத்து,தயாரிப்பு,இயக்கம் என பல்துறை விற்பன்னர். ஆனால் தனது passion என படும் விருப்பங்களை வியாபாரம் சார்ந்து மட்டும் இயக்காமல் பலமுனைகளில் deviant ஆக அவர் இருந்ததால், தந்தை வாசன் விட்டு சென்ற பலவற்றை தொடர முடியாமல் (கால மாற்றமும்) சிறிதே சரிவையும் சந்தித்தார்.

    தனது ஊழியர்களால் மிக சிறந்த மனிதாபியாக அறிய பட்டவர். நானே பல முறை கண்டுள்ளேன். பீ.எச்.பாண்டியனால் வானளாவிய அதிகாரம் கொண்டு ,ஒரு கார்டூன் ஒன்றிற்காக (படுதலம் சுகுமாரன்) சிறை சென்ற போது ,அவர் காட்டிய நெஞ்சுரம் சொல்லி மாளாது.(இத்தனைக்கும் தங்க தட்டில் பிறந்தவர்) ஸ்டுடியோ ,லேப் ,தயாரிப்பு என்பதில் கோட்டை விட்டாலும் விகடன் குழுமத்தில் முனைந்து பல புதுமை சாதனைகள் செய்தார். investigative &Watchdog journalism என்பதற்கு இன்றும் முன்னதாரணமான ஜூனியர் விகடன், விகடன் பிரசுரத்தின் வேறு பட்ட வெளியீடுகள் இவர் மூளையிலிருந்து வேர் விட்டு பயிரானவை.

    இறந்த பிறகும் ,ஒரு பெரிய பகுத்தறிவு தலைவர்கள் என்று பீற்றி கொள்பவர்கள் கூட செய்ய தயங்கியதை செய்துள்ளார். தன ஈம சடங்குகளை வைதீக முறையில் செய்ய விடாமல் ,உடலை,கண்களை தானமளித்து விட்டார்.

    எனது மாமா என்ற ஞான முன்னோடியே, எளிமை கொண்ட மனிதாபிமானியே,பல்துறை விற்பன்னரே,உங்களை இந்த ஆண்டு ,ஒரு முறை கண்டு விட்ட பிறகு இது நேர்ந்திருக்கலாமே? ஏதோ குறை வைத்து வானுலகம் சென்று விட்டீர்களே?

    சம்பிரதாயமாக அமரர் ஆனவர்களை ,குறிப்பிடும் வார்த்தையை மனபூர்வமாக சொல்கிறேன். உங்களின் ஆன்மா எங்களை வழி நடத்தட்டும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Likes KCSHEKAR, sss, Russellpei liked this post
  11. #3378
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 10

    நடிகர் திலகம் என்னும் அட்சய பாத்திரம் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் மட்டுமல்ல அந்த உணவு நம் விருப்பத்தையும் நிறைவேற்ற வல்லதாகத் தருவதும் கூட என்ற உண்மையை யார் உணர்ந்திருந்தார்களோ இல்லையோ, அமரர் எஸ்.எஸ்.வாசன் மிக நன்றாக உணர்ந்திருந்தார். பரஸ்பரம் இணக்கமான சூழல் அல்லாதிருந்தாலும் நடிகர் திலகம் அதனைத் தொழிலில் புகுத்தாமல் வேறு படுத்தும் பண்பைக் கொண்டிருந்ததால் மேலும் மேலும் உயரப் பறந்து கொண்டிருந்தார். இப்படிப்பட்ட ஒரு சூழலில் உருவானதே இரும்புத் திரை, திரைக்காவியம்.

    ஒவ்வொரு காட்சியிலும் அந்தக் கதாபாத்திரத்தின் இயல்பு கெடாமல் பார்த்துப் பார்த்து செதுக்கியிருப்பார் நடிகர் திலகம். ஒரு படித்த தொழிலாளிக்கும் படிக்காத தொழிலாளிக்கும் வேறுபாட்டைக் காட்ட அவரால் முடிந்தது. இந்த முதலாம் வகைத் தொழிலாளியை இரும்புத் திரை திரைப்படத்தில் மிகச் சிறப்பாக வடித்திருப்பார்.

    காதல் காட்சிகளைக் காமமாக சித்தரிக்கும் படங்களிலிருந்து மாறுபட்டு மிக இயல்பான ஒரு காதல் காட்சியை இரும்புத் திரை திரைப்படத்தில் வடித்திருப்பார்கள் நடிகர் திலகம்-வாசன்-வைஜெயந்திமாலா கூட்டணி.

    இந்தக் கூட்டணியின் இந்தக் காட்சி இன்றைக்கும் நெஞ்சில் பசுமையாய் நிழலாடுகிறது என்றால் அதற்கு பெரும் பங்கு நடிகர் திலகத்திற்கும், உடன் நடித்த வைஜெந்திமாலா அவர்களுக்கும், மிகச் சிறப்பான பின்னணி இசையை வழங்கிய எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்களுக்கும் ஒளிப்பதிவாளருக்கும் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு காவியமாய் நிறைவடையச் செய்த வாசன் அவர்களுக்கும் சாரும்.

    இனி காட்சிக்கு வருவோம்.

    துவக்கத்தில் வரும் பின்னணி இசையே பாடலின் Moodஐ அருமையாய்க் கொண்டு வரும். ஒரு சிறிய கல் மேல் அமர்ந்தவாறு ஒவ்வொரு கல்லாய் தண்ணீரில் வீசும் போதே, தான் வெகு நேரமாய் காத்திருக்கிறோம் என்பதை விளக்கி விடுகிறார் நடிகர் திலகம். மேற்சட்டையின் கைகளில் பாதிக்கு மடித்து வைத்திருக்கும் போதே அவர் ஒரு தொழிலாளி என்பதை உணர்த்தி விடுகிறார். வைஜெயந்தி வந்தவுடன் பதில் வணக்கம் தரும் போது கைகளைக் கூப்பிச் செலுத்தும் நேர்த்தி கண்களைக் கவர்கிறது, பெண்மைக்குத் தரும் மரியாதையை நிலைநிறுத்துகிறது.

    அமர்ந்தவுடன் ஒரு சில விநாடிகள் மௌனம். கதைகளில் கதாசிரியர் மௌனம் என்று சுலபமாக எழுதி விடுவார். அதைத் திரையில் வடிக்கும் போது அதற்கு ஒரு நடிகன் எப்படி உயிர் தரவேண்டும்.

    இங்கே மௌனமே மொழி பேசுகிறது..

    இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்ல சிரிப்பது...

    பின்னணியில் புல்லாங்குழலை வாசித்தபடி ஒரு மேய்ப்பன் வருகிறான்.

    நாயகன் அந்தப் புல்லாங்குழல் வரும் திசையைப் பார்க்க, நாயகியோ அவனைப் பார்க்கிறாள்.

    அவன் அந்தப் புல்லாங்குழல் ஓசையை ரசித்துக் கொண்டிருக்க, இவளோ அவனை ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

    அவன் அந்தப் புல்லாங்குழல் ஓசையை சிலாகிக்க, இவளோ எது என வினவுகிறாள் ஒன்றுமே தெரியாதவளைப் போன்ற குறும்புமிக்க புன்னகையுடன்..

    அவன் சங்கீதத்தைப் பற்றி அவள் கூற அவனோ ஒன்றுமே தெரியாததைப் போல கூற, ஒரு குறும்பு செய்யவேண்டி அந்தப் புல்லாங்குழலை மேய்ப்பனிடமிருந்து வாங்கி முதலில் வாசிக்கிறான். ஒலி எதுவும் வரவில்லை. காற்று மட்டுமே ...

    ஒரு சிறிய குறும்பிற்குப் பின்னர் இனிமையான இசை இவன் வாசிப்பில் அப்புல்லாங்குழலிலிருந்து வெளிப்படுகிறது.

    இந்த இடத்தில் "ம்ம்.. ஏதாவது ராகம் " என அவள் சொன்னதை வேண்டுமென்றே குறும்பாக கிண்டல் செய்து இரண்டு முறை சொல்வது ஒரு உரிமை அவர்களுக்குள் இருப்பதை நிலைநாட்டுகிறது.

    அந்த ஏதாவது என்ற வார்த்தைக்குள்ளும் இசையைக் கொண்டு வரும் நேர்த்தி..

    இந்த இசை முடிந்தவுடனும் அதிலிருந்து அவளால் மீளமுடியவில்லை..

    அவளால் மட்டுமா..

    நம்மாலும் தான்.

    இந்தக் காட்சியில் வெளிப்பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு..

    வேறு யாராலும் பின்பற்ற முடியாத கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அற்புத ஸ்டைல்...

    இது இவரால் மட்டுமே முடிந்த ஒன்றாகும்..



    இந்தக் காட்சியில் காதல் வசனங்கள் ஏதுமில்லை... ஆனால் அதற்கான Buildup இருக்கிறது. இதுவே இப்படத்திற்கு உயிர்நாடியான காட்சி.

    இக்காட்சியைத் தரவேற்றிய நம் அன்புமிக்க வாசு சாருக்கும் யூட்யூப் இணையதளத்திற்கும் உளமார்ந்த நன்றி

    ஒரு காதல் பாடல் எப்படிப் படமாக்கப் படவேண்டும், அதில் நாயக நாயகியின் நடிப்பு எப்படி இருக்க வேண்டும்.. இதோ ஓர் இலக்கண நூல்..

    ஆஹா.. அந்த மந்தகாசப்புன்னகை வீசும் அந்த திராவிட மன்மதனின் முகம்... பெண்மையின் இலக்கணமாய் ஒளிவீசும் கண்களுடன் வைஜெயந்தி... நாடி நரம்புகளையெல்லாம் மீட்டும் மென்மையான இசை, காதல் உணர்வை அற்புதமாய் சித்தரிக்கும் பாடகர் திலகம் மற்றும் பி.லீலாவின் குரல்கள்...



    அமரராகி தந்தையுடன் சேர்ந்து விட்ட பாலு சாருக்கு இப்பதிவினை சமர்ப்பணம் செய்கிறேன்.
    Last edited by RAGHAVENDRA; 20th December 2014 at 11:14 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks eehaiupehazij thanked for this post
  13. #3379
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Omar Shariff and NT..

    The Egyptian Connection..

    At the Afro Asian Film Festival it was Omar Shariff who compered and announced the name of NT as the best actor.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes kalnayak liked this post
  15. #3380
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Omar Shariff and NT..

    The Egyptian Connection..

    At the Afro Asian Film Festival it was Omar Shariff who compered and announced the name of NT as the best actor.

    Thanks a lot Raghavendar Sir. Such Titbits or Trivia type of data or information on our beloved NT will always get embedded in the viewer's mind like the two line Thirukkural. Further interactions and deliberations will certainly help create a data base for explorers of NT like me in refining and perfecting contributions to this thread.

    Keep up irrigating this thread for creating our own greenery so that our concentrations will always be on imploring the sustained growth of this thread.

    regards, senthil

    P.S.
    kindly peruse starnostar.com for voting Sivaji Ganesan Vs Omarshariff
    Last edited by sivajisenthil; 21st December 2014 at 07:21 AM.

  16. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •