Page 335 of 400 FirstFirst ... 235285325333334335336337345385 ... LastLast
Results 3,341 to 3,350 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3341
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Congratulation to Mr ESVEE Sir for reaching another milestone.



    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3342
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    The Gambia
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைய தினமலரில் நடிகர் திலகத்தின் சிறப்பு மிக்க நடிப்பாற்றலை வெளிப்படுத்திய நவராத்திரி படத்தை பற்றிய ஒரு சிறப்புச் செய்தி : -


    http://cinema.dinamalar.com/tamil-ne...hiri-movie.htm

  4. Thanks eehaiupehazij, JamesFague thanked for this post
  5. #3343
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு வாசுதேவன் சார்

    உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .

  6. #3344
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 8

    Theme : NT's Energy Emission in Song Sequences!

    Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

    ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
    ஆற்றல் பகிர்வு தரவரிசை 8 : 5 HP திருவிளையாடல்

    நாம் கடவுளைக் கண்டது கிடையாது ஆனால் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளாக நம் உள்ளுணர்வு வாயிலாக உணர்ந்திருக்கிறோம் கடவுளுக்கும் ஒரு வடிவத்தை நிலைநிறுத்திய நடிப்புக் கடவுளின் திருவிளையாடல் திரைப்படத்தில் அப்படி ஒரு பரவச உணர்வை நம்மை அனுபவிக்க வைத்தார் கடவுள் மனிதரூபத்திலும் இப்புவிக்கு வந்தால் எப்படி இருப்பார் என்னென்ன செய்வார் தனது பக்தர்களின் நலத்தை எப்படிக் காப்பார் என்பதெற்கெல்லாம் ஒரு விடையாக இப்படம் அமைந்து வெள்ளிவிழாக் காணும் வண்ணம் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களையும் பக்தியுடன் உள்ளடக்கியிருந்தது கடவுளையும் ஆடவிட்டுப் பாடவைத்துப் பார்ப்பதில் நாம் அசகாய சூரர்களே ! அதிலும் வெவ்வேறு வகையான ஆற்றல்களை வாரி வழங்கியிருக்கிறாரே நடிகர்திலகம்

    Concept 1 Dynamics / நகர்வாற்றல் 2 HP
    மனித உடல் உயிர் நீங்கின் வெறும் கட்டையே என்பதை மட்டையடியாக என்னவொரு ஆட்டபாட்ட அபிநய ஜாலத்துடன் விவரிக்கிறார் சிவபெருமான் !



    Concept 2 Statics அமர்வாற்றல் 1 HP

    பாட்டும் அவரே பாவமும் அவரே ! ஒரு நடிகர்திலகம் ஐந்து நடிகர்திலகங்களாக Cell Division and Multiplication!! ஒவ்வொருவரும் ஒரு திறமையை ஒருசேர
    அமர்ந்து வெளிப்படுத்தும் போது நம் கண்கள் இமைக்க மறந்து நமது இயக்கமும் நின்று போகிறதே!!



    Concept 3 Mechnics / உறைவாற்றல் 1 HP
    நடிகர்திலகம் ஆடும் ருத்ரதாண்டவம் மெய்சிலிர்ர்க்க வைத்து நம்மை உறைய வைத்து விடுகிறதே !!



    Concept 4 Histrionics உடல்மொழியாற்றல் 2 HP

    ஒன்றானவன் உருவில் இரண்டானவன் பாடலிலும் ஹேமநாத பாலையா பாகவதருடன் பேச்சிலும் என்னவொரு உடல்மொழி வேடிக்கை



    Last edited by sivajisenthil; 17th December 2014 at 11:06 PM.

  7. Likes KCSHEKAR, kalnayak liked this post
  8. #3345
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.

    கடந்த பதிவின் இறுதி பகுதி


    இப்படியாக நாம் கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972 ஜூலை ஆகஸ்ட் காலகட்டம் தமிழக அரசியலிலும் சரி தமிழ் திரையுலகிலும் சரி பல்வேறு பரபரப்புகளை சந்தித்துக் கொண்டிருந்த நேரம்.

    இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

    அந்த நாள் ஞாபகம்

    சென்ற பதிவில் தமிழகத்தின் அரசியல் களத்தில் பரபரப்பான காட்சிகள் அரேங்கேறி கொண்டிருந்த நேரம் என்று குறிப்பிட்டிருந்தேன். மக்கள் மனதில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பெருந்தலைவரின் வழிகாட்டுதலை அவர் தலைமையை மீண்டும் தமிழகம் ஏற்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த மாற்றம் வருங்கால தூண்களாகிய இளைஞர் சமுதாயத்திடமிருந்து துவங்கியதுதான்.

    இப்படி சொல்வதற்கு காரணம் என்னவென்றால் அன்றைய நாள் தமிழகத்தில் [1972] செயல்பட்டுக் கொண்டிருந்த 172 கலை அறிவியல் மற்றும் சட்டக் கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தலில் 146 கல்லூரிகளில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பு மாணவர்கள் தலைவர் பதவியை கைப்பற்றினார்கள். இவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதோடு அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மற்றும் c. தண்டாயுதபாணி அவர்களின் சீரிய வழிகாட்டலில் பொறுப்பேற்ற நேரம்.

    அண்ணாமலை பல்கலைகழக மாணவர் தலைவர் உதயகுமார் வன்முறையாளர்களால் உயரிழந்தது பற்றி பேசினோம். அவர் மரணம் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டிருந்தேன். 1972 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்த வெள்ளி விழா ஆண்டு. அதை கொண்டாடும் வகையில் 1972 ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. அதன் பிறகு இரண்டு தினங்கள் கழித்து என்று நினைவு. அந்த விசாரணை கமிஷனின் அறிக்கை சட்டமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போல் யார் மீதும் குற்றமில்லை என்ற வகையில்தான் அறிக்கை அமைந்திருந்தது. ஆனால் அந்த மாணவனின் உயிர் தியாகம் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும். அந்த மாணவர் சக்தி அளவிடப்பட முடியாத சக்தியாக திகழ்ந்தது என்பதும் உண்மை. நேதாஜி, தண்டாயுதபாணி மற்றும் குடந்தை ராமலிங்கம் போன்ற மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாணவர் மற்றும் இளைஞர்களை வழி நடத்தி சென்ற முறை பாராட்டுக்குரியது. நேதாஜி போன்ற துணிவு மிக்க மாணவர் தலைவர் இருந்ததனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் அராஜக தாக்குதல்களெல்லாம் வெளி வந்தன. அது இப்போது நாம் பேசும் நிகழ்வு நடந்து முடிந்த பிறகே நடந்தது என்பதால் அதை இப்போது விட்டு விடுவோம்.

    தமிழகமெங்கும் இப்படி எழுச்சி கோலமாக நமது சக்தி ஆர்ப்பரித்து வரும் நேரம் அந்த மாணவர் சக்தியை ஒருமுகப்படுத்தி மேலும் எழுச்சி பெறும் வண்ணம் மாணவர் காங்கிரஸ் மாநாடு சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் 1972 ஆகஸ்ட் 26,27 சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இரண்டாம் நாள் மாலை நடிகர் திலகம் உரையாற்றுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனை ஒரு இமாலய சாதனையாக மாறிக் கொண்டிருந்த நேரம். அதைப் பற்றிதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

    பாபு முதல் பட்டிக்காடா பட்டணமா வரை தொடர்ந்து இமாலய வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்திற்கு கண் பட்டதோ என்று எண்ணும் வண்ணம் ஜூலையில் வெளியான தர்மம் எங்கே எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு தவப்புதல்வன் செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் திரைக்கு கொண்டு வருவதற்கு முக்தா ஸ்ரீநிவாசன் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார் என்பதை பற்றியும் வசந்த மாளிகையை பொறுத்தவரை அது நவம்பர் 4 தீபாவளியன்று வெளிவரும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்மம் எங்கே அது பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனபோது தன்னுடைய படத்தை முன்கூட்டியே வெளியிடுவதற்கு முயற்சி எடுத்த முக்தா. VC சண்முகம் அவர்களிடம் பேசி ஆகஸ்ட் 26 அன்று வெளியிடுவதற்கு சம்மதம் வாங்கி விட்டார்.தர்மம் எங்கே வெளி வந்த ஜூலை 15 தொடங்கி 6 வார இடைவெளியில் தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 அன்று வெளியாவதாக விளம்பரம் வருகிறது.

    படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னால் நடிகர் திலகத்தை ஈன்றெடுத்த அன்னை ராஜாமணி அம்மையார் உடல்நலம் குன்றுகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி வியாழன் மாலை உடல்நிலை கவலைக்கிடமான சூழலுக்கு செல்கிறது. அன்று மாலைதான் சௌகார் ஜானகி அவர்களின் மகளின் திருமண வரவேற்பு [ஆபட்ஸ்பரி அரங்கம் என்று நினைவு] நடைபெறுகிறது. சௌகார் வீட்டு திருமணம் என்பதனாலயே அதை தவிர்க்க முடியாமல் அங்கே சென்று விட்டு சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று சொல்லும் சௌகாரிடம் மட்டும் உண்மை நிலவரத்தை சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து திரும்பி வருகிறார் நடிகர் திலகம். தாயின் அறையிலேயே அவர் கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்றிரவு ராஜாமணி அம்மையாரின் உயிர் பிரிகிறது. நெஞ்சை பிளக்கும் சோகம் நடிகர் திலகத்தை தாக்குகிறது. பல முறை அவர் மூர்ச்சை ஆகி போகிறார்,

    இந்த் நிலையில் 26 ந் தேதி சனிக்கிழமையன்று தவப்புதல்வன் வெளியாகிறது. அந்த படத்தின் ரிப்போர்ட் சுட்டிக் காட்டியது என்னவென்றால் தர்மம் எங்கே மூலமாக நடுவில் ஏற்பட்டது ஒரு சின்ன தடங்கலே அது நீக்கப்பட்டு மீண்டும் வெற்றி பாதையை நமக்கு திறந்து வைக்கின்றது. ஆனால் இந்த் வெற்றியை நடிகர் திலகத்தால் முழுமையாக கொண்டாட முடியவில்லை.

    தாயார் இறந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை என்பதனால் நடிகர் திலகம் மாநாட்டிற்கு வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். அவரிடம் வருகிறீர்களா என்று கேட்க கூட யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் யாரை உயிருக்கு மேலாக மதித்தாரோ யார் பெயரால் தன் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தாரோ அந்த தாயை விட தான் சார்ந்துள்ள இயக்கம், தான் ஏற்றுக் கொண்ட தன்னலமற்ற தலைவன், தன்னை உயிரென நேசிக்கும் மாணவர் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு கொடுத்த வாக்குதான் பெரிது என்று நினைத்த நடிகர் திலகம் 27-ந் தேதி ஞாயிறு மாலை மாநாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று கொடுத்த வாக்கை காப்பாற்றியதுடன் மட்டுமல்லாமல் மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரின் இலக்கு என்ன எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார். வெள்ளமென திரண்டிருந்த வீரர் கூட்டம் அன்றைய துக்க சூழலிலும் தங்களை தேடி வந்த நடிகர் திலகத்தை ஆவேசபூர்வமாக வாழ்த்தி வரவேற்றது. இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் நிகழ்வுகள் அவை.

    இந்த விழாவின் புகைப்படங்கள் 9 மாதங்களுக்கு முன்பு நமது திரியில் பதிவிறக்கம் செய்யப்பட்டன அந்த படங்களை மீண்டும் நான் இப்போது பதிவு
    செய்திருக்கிறேன். இந்த புகைப்படங்களை 9 மாதத்திற்கு முன்பு நடிகர் திலகம் திரியில் பதிவிறக்கம் செய்த வினோத் சாருக்கு நன்றி.

    இனி தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகளை அடுத்த பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.



    (தொடரும்​)

    அன்புடன்

  9. Thanks sss thanked for this post
    Likes KCSHEKAR, kalnayak, sss liked this post
  10. #3346
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மேலே உள்ள படத்தில் பெருந்தலைவருடன் உரையாற்றிக்கொண்டிருப்பவர் குடந்தை ராமலிங்கம், கவனிப்பவர் தண்டாயுதபாணி.

    தமிழக ஸ்தாபன காங்கிரஸின் மாபெரும் தூண்கள் நேதாஜி, தண்டாயுதபாணி, குடந்தை ராமலிங்கம்... இவர்களுடன் பணியாற்றிய பெரும் பேறு அடியேனுக்குக் கிடைத்ததற்கு இறைவனுக்கு மிக்க நன்றி.

    முரளி சார் குறிப்பிட்ட இந்தக் காலகட்டத்தில் கல்லூரி படிப்பு முடித்து முழுமையாக ஸ்தாபன காங்கிரஸிலும் சிவாஜி ரசிகர் மன்றத்திலும் ஈடுபட்ட அந்நாள் நினைவுகள் வாழ்க்கையில் பசுமையானவை. மறக்க முடியாதவை.

    மிக்க நன்றி முரளி சார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes kalnayak liked this post
  12. #3347
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post

    டிசெம்பருக்கு பிறகு,தங்களுக்கு எந்த பணி சுமையும் என்னால் ஏற்படாது.

    தற்போது,மதுர கானத்தின் தொடர்பதிவுகளே, என் கடைசி மையம் பதிவுகளாக இருக்கும்.

    ஆனால் நடிகர்திலகம் ரசிகர்களே கூட என்னை புரிந்து கொண்டு,என் எழுத்துக்களை தொடர்ந்து,புரிதலை வளர்த்து கொள்ளாமல் போனது போன்ற வெறுமை உணர்வுதான் எனக்கு.

    நடிகர்திலகம் திரியில் என் கடைசி பதிவே எல்லாம் உனக்காக என்று என் நடிப்பு தெய்வத்திற்கும்,அவர் ரசிகர்களுக்கும் சமர்ப்பணம் செய்தது போல முடிந்தது ,கவிதை துவமான முடிவே.

    Gopal Sir.......

    avuuuu................!


  13. Likes eehaiupehazij, KCSHEKAR, kalnayak liked this post
  14. #3348
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    THAT's LION !!!!!


  15. Likes kalnayak liked this post
  16. #3349
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 9

    Theme : NT's Energy Emission in Song Sequences!

    Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

    ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
    ஆற்றல் பகிர்வு தரவரிசை 9 : 4 HP

    காதல் என்னும் மாய உணர்வு ஆட்கொள்ளாத மனிதருண்டோ இளம் வயதிலிருந்து முதுமை வரை காதலின் தன்மை அதன் ஆழம் மாறிக்கொண்டே வரும்.

    அந்தந்த வயதிலும் நடிகர்திலகம் மட்டுமே காதலுக்குரிய ஆற்றல் வெளிப்பாட்டை அளந்து தந்திருக்கிறார் ரசிக்கும் வண்ணம்!

    Concept 1 Dynamics நகர்வாற்றல் 2 HP

    இளமை பொங்கி வழியும் பருவத்தில் காதலியின் மனதில் இடம் பிடிக்க எத்தனை பிரயத்தனங்கள்



    Concept 2 Statics அமர்வாற்றல் 1 HP

    திருமணத்திற்கு பிறகு வாரிசு உருவாகி வரும் வேளை யில் காதல் அன்பான அரவணைப்பாக மாற வேண்டும்



    Concept 3 Mechaics உறைவாற்றல்1/2 HP

    வாலிபக் காதல் உணர்வுகள் உறையத் தொடங்கினாலும் மனைவியை நேசிப்பதே காதலின் உயர்வு



    Concept 4 Histrionics உடல்மொழியாற்றல் 1/2 HP

    வயது முதிர்ந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படினும் விழுதுகள் கைவிடினும் மனைவிஎன்னும் வேர் ஆலமரத்தை தாங்கி நிற்குமே



    The End of the penultimate Part 9. But, NT returns to the valedictory of this short series parading his energy levels in two of his life time limelight movies Sivandha Mann and Vasantha Maaligai simultaneously
    Last edited by sivajisenthil; 18th December 2014 at 02:20 PM.

  17. Likes KCSHEKAR, kalnayak liked this post
  18. #3350
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 10

    Theme : NT's Energy Emission in Song Sequences!

    Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

    ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !


    ஆற்றல் பகிர்வு தரவரிசை 10
    : 15 HP


    Concept 1 Dynamics நகர்வாற்றல் 5 HP!

    சிறுவயது மனக்கீறல்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய பக்க விளைவுகளை உண்டு பண்ணி மது போதைக்கும் மங்கையர் போகத்துக்கும் அவனை அடிமைப்படுத்தி வாழ்க்கைப் பாதையையே புரட்டிப் போட்டு விடுகின்றன என்பதைப் பொட்டிலடித்தாற் ப் போல உணர்த்திய காவியம் வசந்த மாளிகை.
    ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஆடல்பாடலில் நடிகர் திலகத்தின் ஆற்றல் வெளிப்பாடு வியப்புக்குரியது! நடன அசைவுகளில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நளினம் வேகநடை உடல் திருப்பங்கள் முகபாவங்கள் அபாரம் !



    Concept 2 Statics அமர்வாற்றல் 3 HP!

    கௌரவம் மிக்க பாரிஸ்டர் ரஜினிகாந்தாக நடிகர்திலகம் அப்பாத்திரத்தின் Turbulent Natureக்கு மாறாக அமைதியான முறையில் அமர்ந்து தனது உணர்வுகளையும்
    விருந்து நடனத்தின் ரசிப்பையும் வெளிப்படுத்தியிருக்கும் விதம் வேறு எந்த நடிகராலும் நினைத்துக் கூடப் பார்க்க இயலாது !!



    Concept 3 Mechanics 3 HP !

    தாய் மறைவின் வேதனையை மறக்க கேளிக்கை விடுதி சென்று மதுவின் மயக்கத்துக்கு உட்படும்போது பாடல் மாது சௌகார் ஜானகியின் ஆடல்பாடல் குரல்
    இனிமையில் மனதைப் பறிகொடுத்து உறைந்து அமர்ந்திருக்கும் போது விடுதியின் உல்லாச மயக்க சூழலில் நடிகர்திலகத்தின் பாவனை ஆற்றல் வெளிப்பாடுகள் நமது மனதை அவர்பால் பரிதாபத்தால் ஈர்க்கின்றன !!




    Concept 4 Histrionics உடல்மொழியாற்றல் 4 HP!

    சிவந்தமண் திரைப்படம் நடிகர்திலகத்தின் திரையுலகப் புகழேணி ஏற்றத்தில் ஒரு முக்கியமான படிக்கட்டே ! கொடுமைக்கார திவானை அழித்திட நாடக
    ஆடல்பாடல் திட்டத்தில் அரபு உடையணிந்து கையில் சவுக்கை சுழற்றி காஞ்சனாவை சுழன்றாட வைக்கும் காட்சியமைப்பு தமிழ்த் திரையில் மறக்கமுடியாத சிறப்பு நிகழ்வு. Signature song of LR Easwari adds the pep நடிகர்திலகத்தின் கூர்பார்வை சவுக்கை சொடுக்கும் ஸ்டைல்...அபாரமான உடல்மொழியாற்றல்!!




    THE END But NT promises to return for his thanks giving to his villains under a new series 'உன்மத்த முகமூடிக்குப் பின் உத்தம வில்லன்கள் ...' from January, 2015!!
    Last edited by sivajisenthil; 18th December 2014 at 02:38 PM.

  19. Likes KCSHEKAR liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •