-
7th December 2014, 05:04 PM
#3191
Junior Member
Newbie Hubber
நடிகர்திலகத்தின் உடல்மொழி.
சிவந்த மண் படத்தில் ,ஒரு நாளிலே பாடல் காட்சியில் ,முதல் சரணம் முடிவில் வரும் ,வரும் நாளெல்லாம் இது போதுமே என்ற இடத்தில் ஒரு திருப்தி கலந்த கிறக்க காமத்தில் கண் மூடுவார் பாருங்கள். நான்கு வினாடி கவிதை.
சுமதி என் சுந்தரி படத்தில் திடீரென்று தடுப்பின் அந்த பக்கம் ஜெயலலிதா அழ ,கீழே மேலே என்று எதேச்சையாய் சுழன்று ,ஜெயலலிதா பக்கம் திரும்பும் அப்பாவி நகைச்சுவை.
அதே படத்தில் முதலிரவுக்காக திட்டமிடும் தங்கவேலு ,டவல் உடன் திருப்பும் ஒவ்வொரு முறையும் திரும்ப வைத்து ஏதோ சொல்ல ,நாலாவது முறை சொல்லாமலே திரும்பும் spontaneity .
துணை படத்தில் விரக்தியுடன் பிரமை பிடித்தது போல அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது , சுரேஷ் அவர் வலப்புறம் வந்து அப்பா என்று கூப்பிட ,திடீரென்று யாருப்பா என்று குரல் வராத திசைகளை நோக்கி, நிதர்சன உலகிற்கு வரும் இடம்.
பராசக்தி படத்தில் ,ஹோட்டல் ரூமில் நுழைந்து நோட்டம் விட்டு, ரூம் பாய் நோக்கி காசு சுண்டும் இடம்.
பாசமலரில், மலராத பெண்மை மலரும் காட்சியில் , தற்செயலாய் அந்த பக்கமாய் செல்லும் போது ,நாணம், பெருமிதம்,கூச்சம் கலந்த முறுவல்.
யாருக்கு மாப்பிள்ளை பாட்டில் பக்க வாட்டில் கீழே நகரும் காமிராவில், ஸ்டைல் கலந்த ,விந்திய நடையுடன் செல்ல சிரிப்புடன் உல்லாசம்.
வசந்த மாளிகையில் பிளம் கடித்து காமம் இழையோடும் காதல் வேட்கையை சொல்லி, கொள்ளி கட்டையால் சிகரெட் கொளுத்தும் இடம்.
ராஜாவில் , ஓடி போக பார்க்கும் ரந்தாவிடம், ஸ்டைல் கலந்த அலட்சியத்துடன் சிகரட்டை கீழே எறிந்து, ஒரு தீர்மானத்துடன் நசுக்கும் இடம்.
Last edited by Gopal.s; 8th December 2014 at 07:16 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
7th December 2014 05:04 PM
# ADS
Circuit advertisement
-
7th December 2014, 05:06 PM
#3192
Junior Member
Newbie Hubber
Annan oru Koil - As usual mega collection. Sivaji is not just a star for his fans. He is a Darling star for all Tamils.
Last edited by Gopal.s; 8th December 2014 at 07:10 AM.
-
7th December 2014, 07:28 PM
#3193
Junior Member
Veteran Hubber
NT rises back to view his flamboyant flora !
நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!
கதாநாயகரின் கதாநாயகியர்
செண்பகப்பூ மலர்மாலை 10 வைஜயந்திமாலா பாலி
செண்பகப்பூ நிறத்திலும் மணம் பரப்புவதிலும் தனித்துவம் வாய்ந்த பூ மார்க்கெட்டில் விலை உயர்ந்த மலர் வைஜயந்திமாலா பாலி அவர்களும் அவ்வண்ணமே
வாழ்க்கை திரைப்படத்தில் அகில பாரதப் பெண்ணாக அறிமுகமான கணம் தொட்டு மார்க்கட்டில் உச்சத்திலேயே இருந்த செண்பக மலரே ! நடிகர்திலகத்துடன் இரும்புத்திரை, சித்தூர் ராணி பத்மினி.....காதல் மன்னருடன் பெண், பார்த்திபன் கனவு, தேன் நிலவு, வஞ்சிக்கோட்டை வாலிபன்...டி ஆர் ராமசந்திரனுடன் வாழ்க்கை....ஹிந்தியில் ராஜ்கபூருடன் அசத்திய சங்கம்....குறிப்பிடத்தகுந்த படங்கள். ஒரு தலைசிறந்த பரதநாட்டிய தாரகையாக பத்மினிக்கு இணையாக மின்னியவர்...நடிகர்திலகத்தின் இரும்புத்திரையில் மிகச்சிறந்த காதல் காட்சியினை தனது நடிப்புப் பங்களிப்பால் சிறப்படையச் செய்து நடிகர்திலகத்திற்கு பெருமை சேர்த்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!
The best love song sequence for NT with Vaijayanthi in Irumbuththirai
In her debut movie Vaazhkai ! amazing dash and verve!
Vaijayanthi made the most beautiful pair with GG thru his evergreen signature song
but, Vaijayanthi's signature song is in Vanjikkottai Vaaliban alongside Padmini! (already posted in Padmini episode)
The Hindi movie Sangam with Rajkapoor catapulted Vaijayanthi skyrocketing to to cloud 9 fame!
(cannot resist comparing NT's performance with the same musical instrument in Enga Mama 'sorkkam pakkaththil... song ...refer: episode8 on Vennira Aadai Nirmala)
குடத்திலிட்ட குத்துவிளக்காக தமிழ்படங்களில் கவர்ச்சி காட்டாது கவர்ந்த வைஜயந்தி சங்கம் இந்திப்படத்தில் குன்றிலிட்ட விளக்காக எல்லை மீறாத அளவில் கவர்ச்சி காட்டி கிறங்கடித்தார் !!
வஞ்சிக்கோட்டை வாலிபனில் கவர்ச்சி காட்டுவது வைஜயந்தியா வாலிப ஜெமினியா !!
Last edited by sivajisenthil; 8th December 2014 at 06:00 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th December 2014, 10:54 PM
#3194
Junior Member
Senior Hubber
ரசிகர்கள் கூட்டத்தால் திணறிய மதுரை சென்ட்ரல் தியேட்டர் .
சந்தோஷ செய்திகள் மற்றும் புகைப்படங்கள் நாளை.
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th December 2014, 12:42 AM
#3195
இன்றைய தினம் மதுரை மாநகரில் நடிகர் திலகம் சரித்திரம் படைத்தார். ஞாயிறு மாலைக்காட்சிக்கு ரசிகர்களும் பொது மக்களும் அமோக ஆதரவளிக்க ஞாயிறு மாலைக்காட்சி பழைய படங்களின் வசூலில் மிக அதிகமாக வசூல் செய்த படம் என்ற பெருமையை அண்ணன் ஒரு கோவில் பெற்றது. பால்கனி டிக்கெட்டுகள் புல் ஆகி விட கீழேயும் சரியான கூட்டம் வந்திருக்கிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.
இது தீபாவளி அல்லது பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் வெளியாகவில்லை. அது போன்ற விடுமுறை நாட்கள் படத்திற்கு பலம் சேர்க்கும். அப்படியில்லாமல் சாதாரண நாட்களில் வெளியாகி வசூல் சாதனை புரிவது என்பது சாதாரண விஷயமில்லை. ஆனால் நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை எந்த நேரத்தில் வெளியிட்டாலும் வசூலிக்கும் என்பதுதானே உண்மை!
இரண்டாவது விஷயம் இந்த படத்தை திரையிடலாம் என்று பேசிக் கொண்டிருக்கும்போது இந்த படமா இது கிளாஸ் படம். மக்கள் வர மாட்டார்கள் வசூலாகாது என்றெல்லாம் அரங்க நிர்வாகத்தினரிடம் சில "நல்ல உள்ளம்" படைத்தோர் சென்று அவர்கள் மனதை குழப்ப, படத்தின் வெளியிட்டாளார் அரங்க நிர்வாகத்தினரிடம் சென்று நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை கிளாஸ் அல்லது மாஸ் என்ற வித்தியாசமே கிடையாது. தமிழ் சினிமாவின் 83 வருட சரித்திரத்திலேயே Class Actor அதே நேரத்தில் Mass Hero என்ற இரு வேறுபட்ட நிலைகளிலும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக பொருந்தக் கூடியவர் நடிகர் திலகம் ஒருவரே என்ற உண்மையை விளக்கியிருக்கிறார். இந்த மூன்று தினங்களில் படத்திற்கு வருகை தந்த audience-ஐயும் படத்திற்கு வசூலான தொகையையும் பார்த்து விட்டு அரங்க நிர்வாகம் தாங்களாகவே முன் வந்து படத்தின் வெளியிட்டாளரிடம் நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று சொல்லியிருக்கிறார்கள்.
மாலையில் டவுன் ஹால் ரோட்டில் ஒரே அலப்பரை என்றால் அரங்கதினுள்ளிலும் ரசிகர்கள் ஆரவாரமாக ரசித்திருக்கின்றனர். ரசிகர்களின் வேண்டுகோளுகிணங்க இடைவேளையில் மல்லிகை முல்லை பாடல் காட்சி மீண்டும் போடப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரே ஆரவார வரவேற்பு என்றால் அதற்கு பின்னால் ஆண்டவன் கட்டளையின் ட்ரைலர் காண்பிக்கப்பட ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினர் என்று செய்திகள்.
இன்றைய மாலைக்காட்சி முடிவடைந்தவுடன் தியேட்டர் வாசலில் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு நன்றி சுந்தர்!
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
8th December 2014, 05:59 AM
#3196
Junior Member
Veteran Hubber
NT rises back to view his flamboyant flora !
நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!
கதாநாயகரின் கதாநாயகியர்
குறிஞ்சி மலர்மாலை 11
பானுமதி ராமகிருஷ்ணா
male chavnism (ஆணாதிக்கம்) மேலோங்கிய தமிழ்த் திரையுலகில் கண்டிப்பும் கறாரும் நிறைந்த 'சண்டிராணி'யாக வலம்வந்து 'நடிப்புக்கு இலக்கணம்வகுத்த நடிகை' என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் சிலாகிக்கப்பட்ட அபூர்வமாக மலரும் குறிஞ்சி மலரே நடிகை இயக்குனர் பாடகி கதாசிரியர் தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட அஷ்டாவதானி பானுமதி ராமகிருஷ்ணா அவர்கள். நடிகர்திலகம் அவர்களை விட சீனியர் என்ற வகையில் மரியாதைக்குரியதூரத்திலேயே எட்டநின்று நடித்திருப்பார் NT! அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தில் MGR நெருங்கி நின்று தொட்டு நடிப்பதற்கு கூச்சம் காட்டுவது வெளிப்படையாகவே தெரியும் சிவாஜியுடன் அறிவாளி அம்பிகாபதி கள்வனின் காதலி ரங்கோன் ராதா மக்களைப்பெற்ற மகராசி ....ஜெமினியுடன் சதாரம்... MGR உடன் நாடோடி மன்னன் மதுரைவீரன்....தனிப்பட்ட முறையில் அன்னை, பத்துமாத பந்தம்.....மறக்க முடியாத நடிப்புராணி நடிகர்திலகத்துக்குப் பெருமைசேர்த்தமைக்கு நன்றிகள் !!
சண்டிராணிக்கும் சண்டியராக நடிகர்திலகம் அறிவாளிதான்!
அமராவதியின் அம்பிகாபதி
கள்வனின் காதலி வெயிலுக்கேற்ற நிழலே
அன்னை பானுமதி அமைதியும் அழுத்தமும்
Signature Song of Banumathi
முள் குத்தும் ரோஜாவான அழகான பொண்ணு....
Last edited by sivajisenthil; 8th December 2014 at 01:57 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th December 2014, 12:52 PM
#3197
Junior Member
Newbie Hubber
ராஜபார்ட் ரங்கதுரை -1973(22 nd Dec 41 Years Completed).
ராஜபார்ட் ரங்கதுரை பற்றி நிறைய முறை எழுத நினைத்து தள்ளி சென்று கொண்டிருந்தது. இப்போது வலை பூ மற்றும் ராகவேந்தர் தயவில் ஊக்கம் கிடைத்து விட்டது.
முதலில் கதை பயணிக்கும் திசைகள்......
ரங்கதுரை இளமை பருவம் ,ஆதரவற்ற நிலை (தம்பி,தங்கை),நாடக ஆசிரியர் ஆதரவு.
ரங்கதுரை நாடக நடிகன் ஆவது, சில பல நாடக காட்சி பதிவுகள்.
ரங்கதுரை திருமண பிரச்சினை ,அதை மீறி நடக்கும் திருமணம், தங்கையின் வாழ்க்கை (திருமண) அது சார்ந்த போராட்டங்கள். தம்பியின் தகுதி மீறிய ஆசை,அது சார்ந்த பொய்மை நிறைந்த பிரச்சினைகள் (நன்றி மறத்தல்).
ரங்கதுரை எதிர்கொள்ளும் எதிர்ப்புக்கள், சில பல வில்லன்கள் (கொலை வரை செல்வது)
இதில் முன் நிற்பது நடிகர்திலகம்.
அவருடைய அமெரிக்கையான நடிப்பு முறை. தொழில் சார்ந்த நடிகர்கள் யாரையும் பகைக்கவோ, யாரிடமும் குரல் உயர்த்தவோ இயலாது. அதனால் ஆதரவு வேண்டும் குரலிலேயே அவர் பாத்திர படைப்பு கையாள படும். ஒரு இறைஞ்சும் மெல்லிய குரலில். நடையிலும் ஒரு மென்மையான பெண்மை கலந்த அமெரிக்கை வெளிப்படும். அவரே பாய்ஸ் கம்பெனி நடிகர் என்பதால் இதில் போய் நடிக்கவா வேண்டும்? வாழ்ந்திருப்பார்.
ஒரு அற்புத விந்தை, அவர் எந்த இடத்திலும் உணர்ச்சிகளை ஓங்கியே வெளிபடுத்த மாட்டார். தனக்கு வசனங்கள் தேவையேயில்லை என்று பல காட்சிகளில் உணர்த்தி அதிசயம் படைப்பார். சுருங்க சொல்ல வேண்டுமென்றால் ,தன் தங்கையின் கணவன் ,இரண்டாம் திருமண காட்சி. சுமார் நான்கு நிமிடங்கள் எந்த வசன துணையுமின்றி ,அவர் பார்க்கும் பார்வை.ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும். அதில் தெரிவது விரக்தியா,இறைஞ்சலா,எதிர்பார்ப்பா,மிரட்டலா,கொந்தளிப ்பா, உதாசீனமா,தன்னிரக்கமா,தவிப்பா, ஊமை கதறலா,உண்மை பாசமா,கோழைக்கு விடுக்கும் சவாலா என்று இனம் காண முடியாத ஒரு புதிர்த்தன்மை நிறைந்த நடிப்பின் உச்ச சாதனை. ஒரு எழுத்தாளர் கூட வார்த்தை துணையுடன் ,இந்த உணர்ச்சி கொந்தளிப்பை ,குவியலை கொண்டு வருவது மகா கடினம்.
அதே போல தங்கை இறந்த செய்தி கிடைத்து, அவர் கோமாளி வேடத்தில் நடித்தே ஆக வேண்டிய இடத்தின் சிரித்தே வெளியிடும் ஊமை துயர கதறல்.
தங்கையின் கணவனை (இறந்த பிறகு)பார்த்து நீயெல்லாம் மனுஷனா ரீதியில் உதாசிக்கும் சீ போடா .
தம்பியிடம் உணர்ச்சியை வெளியிட முடியாது,தவிப்புடன் (தகிப்புடன்) பாடும் அம்மம்மா.....
நாடகம் சார்ந்த காட்சிகள் என்றால் நடிகர்திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? இதில் முக்கியமாக குறிக்க வேண்டியவை பகத் சிங். இதில் கைகள் கட்ட பட்ட நிலையில்,அதன் துணையின்றி நேர்காட்சி,பின் காட்சி,பக்க வாட்டு காட்சிகள் என உடல் மொழி,முகபாவம் ,நடை தாளம்(திமிறி) கொண்டு அவர் வெளியிடும் உசுப்பேற்றும் வீர சுதந்திர உணர்வு. (இதுதான் ஒரிஜினல் action hero .போலி சண்டை காட்சிகள் தேவையில்லை).
அவரின் ஹாம்லெட் நாடக காட்சி ,ஒரு ஷேக்ஸ்பியர் பள்ளிக்கு பாடமாக செல்ல வேண்டிய அதிசயம்.
ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.
ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.
இந்த படத்தின் பலம் சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி(எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி கொள்ளுங்கள்).அதனை தவிர இதன் நற்தன்மை,நன்னோக்கம்,கண்ணியமான படமாக்கம். ஒன்றிரண்டு பாடல்கள் அம்மம்மா, மதன மாளிகையில்.
பலவீனம் என்றால்,
அலுப்பு தட்டும் திரைக்கதை , தட்டையான பாத்திர வார்ப்புக்கள்.இதில் வரும் பாத்திரங்கள் நல்லவர்-அல்லாதவர் என்ற பகுப்பு. வாத்தியார் வீ.கே.ஆர் பாத்திரத்தில் சுத்தமாக உண்மை தன்மை இன்றி நல்லவராக மட்டும் glorify பண்ண பட்டுள்ளார்.(சிவாஜியின் கதை படிப்போருக்கு இந்த பாத்திரம் மிக தட்டையான ஒற்றை பரிமாணம்.அந்த கால படங்களின் glorification ).எல்லா பாத்திரங்களுமே உண்மை தன்மை இல்லாதது. Plastic Characters .
இதில் கூத்து கலை பற்றி,அதில் இருக்கும் நடிகர்களின் வாழ்க்கை பற்றி எந்த ஆழமான பதிவுகளும் இல்லை.
குடும்ப பிரச்சினைகளை எடுத்தாலும், ஒரு பீம்சிங் கால படங்களை போல பிரச்சினைகளில் ஒரு புத்திசாலித் தன வித்தியாச பாத்திர சிக்கல்கள் இல்லை. வெளிப்படையான ,சுவாரஸ்யமற்ற சிக்கல்கள். வெறும் உருக்கம் மட்டுமே கொண்டது.
மற்ற பாத்திரங்கள் miscast என படும் தவறான தேர்வு. முக்கியமாக உஷாநந்தினி, ஸ்ரீகாந்த். நவராத்திரி,தில்லானா எடுபட்டதென்றால் ஏ.பீ.என் , அவருடைய troupe ,சாவித்திரி போன்ற சக நடிகர்களின் பங்களிப்பு.இதில் உஷா நந்தினி போன்ற பதுமைகளோ,மாதவன் போன்ற இயக்குனரோ அந்த மாயத்தை சாதிக்க முடியவில்லை. விஸ்வ நாதனிடம் ,கே.வீ.எம் இன் authentic period music கிடைக்கவில்லை. ஆத்மார்த்தமான நிஜமான பங்களிப்பு ஏ.பீ.என்,கே.வீ.எம் கூட்டணிக்கே சாத்தியம்.
நாடக நடிகனை பற்றிய கதை,சுவையற்ற ,ஜீவனற்ற துணுக்கு கூத்துக்களை தொகுத்தளித்தாலும் ,நாடக நடிகனின் வாழ்கை பற்றி பேசவேயில்லை. மாறாக ,இதன் கதாநாயகன் எந்த தொழில் சேர்ந்தவனாக இருந்தாலும் ,இந்த கதை சொல்ல பட்டு விடலாம் என்பது முக்கிய பலவீனம். பாலமுருகன்-மாதவன் கூட்டு ,இந்த கதைக்கு வலு சேர்க்கவே இல்லை.
ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜியை மட்டுமே நம்பியது. சிவாஜியால் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு உரிய கவனம் கொடுத்து செதுக்க பட்டிருந்தால் ,மகா வெற்றி பெற்றிருக்க கூடிய சாத்தியகூறுகள் கொண்ட கரு.
Last edited by Gopal.s; 9th December 2014 at 05:14 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th December 2014, 01:56 PM
#3198
Junior Member
Veteran Hubber
NT rises back to view his flamboyant flora !
நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!
கதாநாயகரின் கதாநாயகியர்
மனோரஞ்சித மலர்மாலை 12
சாவித்திரி
நடிகர்களைப் பொறுத்த மட்டில் அடியும் முடியும் காண இயலாத விசுவரூபம் நடிகர் திலகம். இந்த ஒப்புவமைக்கு ஈடாக உலகில் வேறு எந்த நடிகநடிகையரும் இவ்வளவு வெரைட்டி தந்ததில்லை. நடிகையரில் ஒரு இமயம் என்ற அளவில் சாவித்திரி ஒரு நடிகையர் திலகமாக கருதப்பட்டார். பாசமலருக்குப் பிறகு நடிகதிலகத்துக்கு ஜோடியாக வந்த படங்களில் திருவிளையாடலும் நவராத்திரியும் நன்று. ஜெமினியுடன் மட்டுமே மனோரஞ்சிதமாக ரசிக்கத்தக்க ஜோடி நாயகி.
நடிகர்திலகத்துக்கு நல்ல நடிப்பிணையாக விளங்கிப் பெருமை சேர்த்தவருக்கு நன்றிகள் !
Signature song with NT
Signature songs with GG
All her association with NT movies were commendable as far as acting is concerned but the cult image as the "sister of NT'' prohibits me to proceed further!
Last edited by sivajisenthil; 8th December 2014 at 06:52 PM.
-
8th December 2014, 04:11 PM
#3199
Junior Member
Senior Hubber
மதுரையில் 5.12.14 வெள்ளி அன்று திரையிடப்பட்ட மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் அண்ணன் ஒரு கோயில் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஞாயிறு அன்று மாலை 6.30 மணி காட்சிக்கு ரசிகர்கள் 5.00 மணியிலிருந்தே குவிய தொடங்கினர். படத்திற்கு வைத்திருந்த வரவேற்பு வளைவுகள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து பேன்னர்கள் ரசிகர்களை மட்டுமல்லாது பொதுமக்கள் மற்றும் அனைவரையும் படத்தை பார்க்குமாறு தூண்டியதால் பெண்கள் மற்றும் பொதுமக்களும் குவிய தொடங்கியதால் தியேட்டரில் கூட்டம் அதிகமாக எப்பொழுதும் டிக்கெட் கொடுக்கும் நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே டிக்கெட் கொடுக்கப்பட்டது.
6.30 மணிக்கெல்லாம் ரசிகர்கள் கொண்டாட்டம் அதிகமானது. தலைவர் பேன்னற்கு மாலை அணிவிக்கப்பட்டது. 11 தேங்காயில் சூடம் ஏற்றி சிதறுகாய் உடைக்கப்பட்டது. வரிசையாக வைக்கப்பட்டிருந்த தலைவர் பேன்னருக்கு சிவப்பு வெள்ளை பலூன் கட்டி அலங்கரிக்கப்பட்டது.
மேலும் ரசிகர்கள் வைத்த வெடியின் சத்தம் சுற்று வட்டாரத்தையே அதிர வைத்தது. அவ்வழியே சென்றவர்கள் இது என்ன புது படமா என்று விசாரிக்கும் அளவுக்கு தியேட்டர் அமைந்திருக்கும் ரோடு முழுவதும் ரசிகர்கள் கூட்டம் அனைவரையும் வியக்க வைத்தது.
விநியோகஸ்தர்கள் சிலரும் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் கர்ணன் படத்திற்கு பிறகு இவ்வளவு ரசிகர் கூட்டம் இந்த படத்தில் தான் பார்க்கிறோம். வேறு எந்த படத்திற்கும் இவள்ளவு ரசிகர்கள் கூட்டத்தை பார்த்தது கிடையாது என்று கூறியது இன்னும் என் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் நமது ரசிகர்கள் பலபேர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டது இன்னும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது.
படத்தின் விநியோகஸ்தர் படத்திற்காக நல்ல விளம்பரம் மற்றும் வரவேற்பு வளைவுகள் அமைத்து கொடுப்பதில் தானும் பங்கு எடுத்து கொண்டது நமது படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்காக நாம் திரு வி.சந்திரசேகர் சார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வோம். மேலும் திரு.ரமேஷ்பாபு மற்றும் திரு வைகை சுந்தர் அவர்களின் பேன்னர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. சமூகநல பேரவையை சேர்ந்த திரு.பாண்டி அவர்கள் வைத்த பேனர் மற்றும் திரு.ராஜன், குமார் இருவரும் படத்திற்காக அடித்த போஸ்டர் திரு.வெங்கடேஷ் அவர்கள் எடுத்த முயற்சி ஆகிய அனைத்தும் படத்தின் வெற்றிக்கு வித்திட்டன.
படத்திற்காக உழைத்த அனைவர்க்கும் உளமார்ந்த நன்றி.
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th December 2014, 04:14 PM
#3200
Junior Member
Senior Hubber
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
Bookmarks