Page 315 of 400 FirstFirst ... 215265305313314315316317325365 ... LastLast
Results 3,141 to 3,150 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3141
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    NT rises back to see his flora !

    நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!


    கதாநாயகரின் கதாநாயகியர்

    கனகாம்பர மலர் மாலை 4 தேவிகா

    நடிகர்திலகத்தின் புகழ் மகுடத்தில் மாணிக்கமாய் ஒளிர்ந்து அவருக்கு மிகவும் பொருத்தமான கதாநாயகி என்று ஒப்புக்கொள்ளப்பட்டவர். 'ஜாடிக்கேற்ற மூடி' ஜோடியான (கரகாட்டக்) கனகா(வின் அம்மா)ம்பர மலர்மாலையாக இன்று வழிபாட்டுக்கு வந்திருக்கும் தேவிகா அவர்கள். நடிகர்திலகத்தின் திரைவாழ்வின் உச்சமான கர்ணன் கதாநாயகி, பலே பாண்டியா, நீலவானம்,அன்புக்கரங்கள், முரடன் முத்து திரைப்படங்களில் நடிகர்திலகத்திற்கு ஈடுகொடுத்து பெருமை சேர்த்தவர், ஆண்டவன் கட்டளை இவர் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல். தனிப்பட்டமுறையில் நெஞ்சம் மறப்பதில்லை நெஞ்சில் ஓர் ஆலயம் வானம்பாடி மறக்க முடியாதவை
    கிளாமரைஅடக்கமானஆடை அலங்காரத்திலேயே அம்சமாக வெளிக்கொணர்ந்தவர். இன்றும் நடிகர்திலகத்துடன் அவர் தோன்றும் திரைப்பாடல் காட்சிகள் ரம்மியமானவையே ! எமது வணக்கங்கள் !

    காலத்தால் அழியாத கல்வெட்டு காவியம் கர்ணனில் அலங்காரக் கோலமான பாடல்!


    நடிகர்திலகம் அமைதியான நதியாய் வழிந்தோடும்போது அலைகளைக் கண்டிராத ஓடம் தேவிகா !




    More on Devika :

    Devika or Prameela Devi (25 April 1943 – 25 April 2002) was a Tamil and Telugu actress. She is regarded as a versatile and graceful heroine of her era. She was known for her natural beauty which was the key in her casting in mythological films like Karnan, thiruvilaiyadal. Her notable films are Sumaithangi, Nenjil oru Aalayam and Marakka Mudiyuma. She started acting at the age of 12. Her spectacular performances made a heart throbe of many people in those days as expressed by Tamil writer Sujatha in one of his old essays.

    Neela vanam was one of the best movies for her excellent performance. This movie is always memorable and enjoyable her role with Nadigar Thilakam. Devika also made an indelible mark in family drama, the genre that easily wins the hearts of the audience, both urban and rural. With producers churning out such films, some tear-jerkers and others light, and no dearth of heroines, it was due to her talent and charm that Devika got the opportunity to play memorable roles in films like Vanambadi, Vazhkai Padagu and Nenjam Marappadhillai. If the song Sonnathu needhana... in C.V.Sridhar\'s Nenjil Or Aalayam attained immortality the credit for making it visually poignant goes to Devika, who rendered it in the landmark film. She had carved a niche for herself with her grace and beauty at a time when other heroines vied for the top slot. She did total justice to whatever character she portrayed never failing to give a wholesome performance. She was a blend of grace and charm, a versatile actress Devika acted in about 150 films in Tamil, Telugu and Malayalam.

    . Sivaji and Devika figured in some memorable movies like Karnan, that powerful mythological, and the hilarious Bale Pandiya and Kulamagal Radhai, Neelavanam, annai Illam, Pavamanippu among the best

    courtesy : wiki and You Tube

    But, Devika's signature song :

    நெஞ்சம் மறக்கவொன்னாத சுசீலாம்மாவின் தேனிசைக் குரல் குழைவில் தேவிகாவின் சிறப்பான நடிப்பில்..



    NT returns for his reminiscence with Sowkaar Jaanaki, the Lotus flower that emerged elegantly from the pool to worship our Acting Sooriyan!
    Last edited by sivajisenthil; 5th December 2014 at 08:01 AM.

  2. Likes kalnayak, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3142
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    NIce videos Senthil sir ,
    Last edited by ragulram11; 4th December 2014 at 08:07 PM.

  5. Thanks eehaiupehazij thanked for this post
  6. #3143
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like

    ஒரு கலை ரசிகனின் காத்திருப்பு

    இணைய நண்பர் திரு சிவாஜி ரசிகன் என்னும் திரு ராஜ்குமார் (சேலம்) அவர்களின் கருத்து :

    ஒரு கலை ரசிகனின் காத்திருப்பு


    நட்சத்திரங்கள் இடையே
    அபூர்வமாக தோன்றிய
    துருவ நட்சத்திரம் நீ...

    அரிதாரம் பூசவே
    அவதாரம் எடுத்தாயோ நீ ?

    உண்மை.... உண்மை....
    அவதாரங்கள்
    அரிதாய் தான் நிகழ்கின்றன !

    அரிதாய் நிகழ்ந்த இந்த அவதாரம் எடுக்க
    எத்துனை நாட்கள் தவம இருந்தாய் ?
    யாரிடம் பெற்று வந்தாய் இந்த வரத்தை ?

    நடிகனாய் நீ அவதரித்ததால்
    பல அவதாரங்கள் மீண்டும் அவதரித்தன -
    வெண் திரையில்....

    பட்டியல் இட்டால் பக்கம் போதாது..

    கதாபாத்திரங்களின் தன்மையை
    உன் நடையிலேயே காட்டியவன் அல்லவா நீ ?
    நடிப்பால் நவரசங்களை காட்டியவனே...
    துடிக்கும் உன் கண்னசைவும்
    எங்களுக்கு
    ஓராயிரம் கதை சொல்லுமே ...

    எங்கே சென்றன அந்த கண்கள் இன்று ?

    இன்னும் ஓராயிரம் அவதாரங்களை
    உன் மூலம் தரிசிக்க காத்திருந்தோமே ...
    அதற்குள் ஏன் சிறகுகள் விரித்துப் பறந்தாய் ?

    சூரக்கோட்டை சிங்கமே !
    உன்
    நடிப்பு பசிக்கு தீனி போட
    இளம் இயக்குனர்கள் பலர்
    இங்கு
    விருந்தோடு காத்திருக்கிறார்கள்...
    நீ
    எப்போது வரப்போகிறாய் ?
    எப்படி அவதரிக்க போகிறாய் ?

    திலகம் இழந்த வெள்ளித்திரை
    இன்னும் அப்படியே தான்
    இருக்கிறது...

    நீ விட்டு சென்ற
    சிம்மாசனம் இன்னும்
    காலியாகத்தான் இருக்கிறது...
    நீ
    எப்போது வரப்போகிறாய் ?
    எப்படி அவதரிக்க போகிறாய் ?

    காத்திருக்கிறேன்...


    - சிவாஜி ரசிகன் என்னும் ராஜ்குமார்


    அன்பு சிவாஜி நெஞ்சங்களே, ரத்த சம்பந்தமில்லாத எண்ணிவிடக்கூடிய இழப்புகளில் மிகவும் வருத்தப்பட வைத்த இழப்பு இவருடையது. அவர் இறந்தபோது ஒரு வாரம் 'சன்' டிவியில் அவரின் படங்களை கொத்தாக தினமும் போட்டபோது, ஒரு வாரம் வேலைபோனாலும் பரவாயில்லை என்று கருதி விடுப்பு எடுத்து பார்த்தது நினைவுக்கு வருகிறது. சிறுவயதில் எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருந்து இவரின் நடிப்பால், என் உறவினர் ஒருவரால் மாற்றப்பட்டேன். நான் மிக அதிகமாக ரசித்துப்பார்த்த படம் "உத்தமபுத்திரன்" - எத்தனை முறை பார்த்தேன் என்று நினைவில் இல்லை. எனக்குத் தெரிந்து இவர் ஒருவர்தான் இரு வேடங்களில் தனித்தனியான தன்மை கொண்டு இரு பரிமாணங்களை கொடுத்தவர். இப்போது இரு வேடங்களில் நடிப்போர் ஒருவர் பேண்டும், வேட்டியும் கட்டி வித்தியாசப்படுத்துகிறார்கள்.

    ஏற்கனவே பல இழைகளில் கொடுத்திருந்தாலும், பார்க்க பார்க சலிக்காத அவரின் நடிப்பாற்றலால் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தை மீண்டும் உங்களுக்கு இதோ, ஒரே நேர்கோட்டில் புகைப்படக்கருவி மாறாத காட்சியை பாருங்கள், :




    அவர் இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டி (ஏற்கனவே கொடுத்ததுதான்)





    யார் இப்பொழுது தமிழை இவர்போல் துல்லியமாக உச்சரிக்கிறார்கள்? அவர் காலத்திலேயே வாழ்ந்து, ரசிக்கவைத்த ஆண்டவனுக்கு நன்றி.

  7. Likes kalnayak, eehaiupehazij, Russellmai liked this post
  8. #3144
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்தது -49

    வெகு நாட்களுக்கு எழுதுவதில் மகிழ்ச்சி . பார்த்த படங்களை அதாவது அதிகம் தெரிந்த படங்களை பற்றி எழுதாமல் , அதிகம் அறிய படாத படங்களை பற்றி எழுதுவதில் ஒரு வித ஈடுபாடு , சில நடிகர் திலகத்தின் படங்களின் பெயர்களை மட்டுமே கேட்டு உள்ளேன் , படத்தை dvd அல்லது தொலைகாட்சியில் பார்த்தது இல்லை , அப்படி பட்ட படங்களை பற்றி தான் இனிமேல் வர போகும் சில பதிவுகள்

    அந்த வரிசையில் முதல் படமாக நான் எழுத இருப்பது தாம்பத்யம்

    இப்படி ஒரு படம் வந்தது பல நண்பர்களுக்கு தெரிந்து இருக்காது , எனக்கும் தெரியாமல் இருந்தது , ஆனால் திரு வாசுதேவன் சார் இந்த படத்தை பற்றி அழகாக எழுதி இருந்தார் அதை படித்ததில் இருந்து படத்தை பார்க்க வேண்டும் என்று ஒரே ஆசை , தேடுதல் அதிகமாக படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது ,கூடவே இன்னும் ஒரு ஆச்சர்யம் அது இந்த பதிவின் கடைசியில் சொல்லி விடுகிறேன்

    முதலில் படத்தை பற்றி :
    1980 க்கு பிறகு நடிகர் திலகத்தின் படங்களை பற்றி காரசாரமான விவாதங்களை இன்றும் பலர் சொல்லி கேட்டு இருக்கிறோம் , 1980க்கு பிறகும் நிறைய நல்ல படங்களை கொடுத்து இருக்கிறார் , துணை , அனந்த கண்ணீர் , வா கண்ணா வா என்று பல படங்கள்

    சில படங்கள் கவனிக்க படாமல் போவது உண்டு , அதில் சில மிகவும் அருமையாக இருக்க 50 % வாய்ப்பு இருக்கும் , அப்படி பட்ட ரத்தினம் தான் இந்த தாம்பத்யம் .
    Last edited by ragulram11; 4th December 2014 at 08:11 PM.

  9. Likes kalnayak liked this post
  10. #3145
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    படத்தின் கதை விரிவாக :

    பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சத்தியமூர்த்தி (சிவாஜி) தன் மனைவி (அம்பிகா) மற்றும் தன்னுடைய மகள்கள் (நல்லவனுக்கு நல்லவன் துளசி, கலைச்செல்வி), மாமனார் VKR இவர்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

    மனைவி மேல் உயிரை வைத்து இருக்கும் சத்தியமூர்த்தி தன் மனைவியின் முன்கோப குணத்தை பொருது கொண்டு , அதே சமயம் அதை ஒரு குறையாக சுட்டி காட்டமல் அழகாக குடும்பத்தை அனுசரித்து சந்தோசமாக வாழுகிறார்

    துடுகுதனமான தன் மகள் துளசி , ஒரு போலீஸ் அதிகாரியை காதலிக்க , கலைச்செல்வி ஒரு வக்கீலையும் காதலிக்க , காதலுக்கு பச்சை கோடி காட்ட , நிச்சியதார்த்தம் நடக்கும் என்று எதிர்பார்க்க , படத்தில் மிக பெரிய திருப்பம் வருகிறது

    தன் அக்கா டாக்டர் லதாவை (ராதா) கொலை செய்தவனை கண்டு பிடித்து தண்டிப்பதை லட்சியமாக வைத்து இருக்கிறார் , இன்ஸ்பெக்டர்

    திருமணத்துக்கு துணி எடுக்க போகும் பொது ஒரு தாடிக்காரன் , சத்தியமூர்த்தியை blackmail செய்கிறான் , சத்தியமூர்த்தி அவனுக்கு பணம் தந்து கொண்டே இருக்கிறார் , இதை அறிந்து கொள்ளும் துளசி தன் வருங்கால கணவரிடம் இதை சொல்ல , அவர் புலனாய்வு செய்து அந்த போட்டோவை வைத்து சத்தியமூர்த்தி கொலை செய்து விட்டதாக குற்றம் சாடுகிறார் இன்ஸ்பெக்டர் , சத்தியமூர்த்தி அதை மறுக்காமல் குற்றத்தை ஏற்று கொண்டு சிறைக்கு செல்லுகிறார் , கல்யாணம் நின்று விடுகிறது

    ஜானகி ஜெயிலுக்கு சென்று கணவனிடம் நடந்ததை சொல்லுமாறு வற்புறுத்துகிறாள். சூழ்நிலை காரணமாகத்தான் அந்தக் கொலையை செய்ததாக கூறுகிறார் சத்தியமூர்த்தி.இதை கேட்டு ஜானகியின் இதயம் பலவீனம் அடைய , ஜானகியின் தந்தை சிறைக்கு வந்து , ஜானகியின் உடல் நலம் பற்றி குறிபிடுகிறார் , அதை அறிந்து ஜானகிக்கு அறுவை சிகிச்சை செய்ய சிறையில் இருந்து தப்பி விடுகிறார் ,

    தந்தையை கண்டதும் அவரை கடுமையான வார்த்தைகளால் தாகுகிறார் அருணா (துளசி ), அதை பொறுக்க முடியாமல் நடந்த உண்மையை சொல்ல துவங்குகிறார் சத்தியமூர்த்தி.
    Last edited by ragulram11; 4th December 2014 at 08:12 PM.

  11. #3146
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மருத்துவ கல்லூரியில் research scholar ஆக வேலை செய்கிறார் சத்தியமூர்த்தி., அதே கல்லூரியில் பணிபுரியும் லதா அவரை ஒருதலையாக காதலிக்கிறார் ஆனால் சத்தியமூர்த்தி.அவரிடம் ஆழமான நட்பை மட்டும் வெளிபடுத்துகிறார் , ஹவுஸ் owner மகள் ஜானகி இவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார் , ஒரு கட்டத்தில் சத்தியமூர்த்தி அந்த காதலை ஏற்று கொள்ளுகிறார் , இந்த நேரத்தில் VKR யின் நண்பரின் மகன் (இப்போது தாடிக்காரன் black மெயில் செய்த நபர் )


    VKR தன் மகளின் காதலை ஏற்று சத்தியமூர்த்தி ஜானகி திருமணத்தை நடத்தி வைக்கிறார் , இது தெரியாமல் மீண்டும் ஜானகியை பெண் கேட்டு வந்து ஜானகிக்கு கல்யாணம் நடந்த விஷயம் அறிந்து அவரை பழி தீர்க்க எண்ணுகிறார்

    சத்தியமூர்த்தி ஜானகி வாழ்கை இனிமையாக செல்ல சில வருடங்கள் கழித்து குழந்தை பிறக்கிறது , ஒரு நாள் எதிர்பாராமல் ஜானகி விபத்தில் சிக்கி சுய நினைவை இழக்கிறார் . அவரை வீட்டில் வைத்து குண படுத்த நினைக்கும் சத்தியமூர்த்தி மருத்துவரை தேட அவருடன் படித்த , நன்கு பரிச்சயமான லதாவை தன் மனைவியின் சிகிச்சைக்காக அணுகுகிறார்

    லதா சிசைகை அளிக்க தொடங்குகிறார் , ஜானகி குழந்தையை வைத்து விளையாடு கொண்டு இருக்க , லதா அதை தடுக்கிறார் , ஆத்திரம் அடையும் ஜானகி கையில் கிடைத்ததை எடுத்து வீசும் பொது , கத்தியையும் வீச லதாவின் வயிற்றில் கத்திக்குத்து பட்டு லதா உயிருக்குப் போராடுகிறாள். அந்த சம்பவத்தைப் பார்க்கும் ஜானகி அதிர்ச்சியில் மயக்கமாகிறாள். வயிற்றில் கத்தி செருகப்பட்டிருக்கும் நிலையில் துடிக்கும் லதாவைக் காப்பாற்ற அவள் வயிற்றிலிருந்து கத்தியை சத்தியமூர்த்தி எடுக்கப் போக, சரியான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த ஜக்கு அதைப் படம் பிடித்து விட்டு ஓடி விடுகிறான்.(ஜக்கு என்பவர் தான் black மெயில் ஆசாமி , பல மலையாள படத்தில் சிறந்த குணசித்திர , வில்லன் வேடங்களில் நடித்தவர் ) லதா உயிரை விடப் போகும் நிலையில் தனக்கிருந்த சத்தியமூர்த்தி மீதான காதலை அவரிடம் சொல்கிறாள். லதா ஜானகி தன் மீது கத்தி வீசியதைப் பார்த்து அதிர்ச்சியில் மயக்கமுற்றதால் அந்த அதிர்ச்சியே அவளை பழைய நிலைக்குத் திரும்ப குணப்படுத்தி இருக்கக் கூடும் என்றும், அப்படி பழைய மாதிரி அவளுக்கு நினைவு திரும்பியிருந்தால் தற்போது நடந்த எந்த நிகழ்வையும் அவளிடத்தில் சொல்லக் கூடாது... அப்படிச் சொன்னால் தான் ஒரு கொலைகாரி என்ற குற்ற உணர்வே அவளைக் கொன்று விடும் என்று கூறி அதைக் கூறாமல் ஜானகியைப் பார்த்துக் கொள்ளும்படி கூறி இறந்துவிடுகிறார்

    உண்மையை அறியும் அருணா தன் தங்கை , தாத்தா(VKR )அனைவரிடம் சொல்ல அனைவரும் ஜானகிக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு + ஒத்துழைப்பு செய்கிறார்கள் , மகள்கள் இருவரும் போலீஸ் கெடுபிடிகளை சமாளிக்க ,அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக முடித்து போலீசில் surrender ஆகிறார் சத்தியமூர்த்தி

    கோர்ட் அவருக்கு மாதம் 2 நாட்கள் ஜெயிலுக்கு வந்து கைதிகளுக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று தண்டனை வழங்குகிறது

    தடைபட்ட திருமணம் நடக்க , தன்னை ஒரு தலையாக காதலித்து ,தன் மனைவிக்காக உயிரை விட்ட லதாவின் தம்பியை மருமகனாக அடைந்து , சத்தியமூர்த்தி நிம்மதியாக , அதே சமயம் மனைவி , மக்களுடன் சந்தோசமாக வாழுகிறார் .

  12. #3147
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்களின் பங்களிப்பு :

    நடிகர் திலகத்தின் பாத்திரம் பற்றி சற்று விரிவாக எழுத இருப்பதால் அதை கடைசியாக எழுதி உள்ளேன்

    அம்பிகா :

    ரஜினி , கமல் உடன் 80 ல் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார் , வாழ்கை படத்தில் நடிகர் திலகம் படம் முழுவதும் வயசான getup ல் வரும் பொது இவரும் old மேக் up ல் graceful தோற்றதில் இருப்பார் , இந்த படத்திலும் வயசான தோற்றம் தான் , கொஞ்சம் dominant கேரக்டர் , தான் சொல்வது தான் சரி என்று நினைப்பவள் , முன்கோபம் ஜாஸ்தி , ஆனால் கணவனே கண் கண்ட தெய்வம் , தன் கணவர் கொலை செய்தது போல் இருக்கும் படத்தை பார்த்த பிறகும் கூட ஒரு துளி சந்தேகம் இல்லாமல் தன் மகளிடம் வாகளது வாங்கும் காட்சியில் அவருக்கு ஒரு சபாஷ் .

    தான் ஏமாற்ற பட்டு விட்டதாக நினைத்து மருகும் காட்சியும் , அதை exhibit செய்யும் காட்சியும் அருமை ,அதே போல் flash back காட்சிகளில் நடிகர் திலகத்தை விரட்டி , விரட்டி காதலிக்கும் காட்சிகள் light hearted moments . அதுவும் பெண் பார்க்க ஜக்கு வரும் பொது , அம்பிகா , சிவாஜி சார் பேசும் வசனங்கள் , பரிமாறி கொள்ளும் முக பாவங்கள் , signs சிரிப்பை வரவவைபவை .
    கண்ணனே! மன்னனே பாடலில் அவர் steps , expressions டாப்.



    ராதா :

    இந்த படத்தில் கௌரவ வேடம் ஏற்று 20 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் மனதில் இடம் பிடித்து விடுகிறார் . இவருக்கு இன்னும் சில காட்சிகள் கொடுத்து இவரின் நடிப்பை இன்னும் உபயோக படுத்தி இருக்கலாம் , காரணம் இவர் சிவாஜி சாரை என் காதலிக்கிறார் என்பது அழுத்தமாக சொல்லும் காட்சிகள் இல்லை என்பது படத்தின் பெரிய குறை , ஆனால் glamour heroine என்று அறிய பட்ட ராதா குணசித்திர நடிப்பிலும் தன்னை நிருபித்து விட்டார் .

    VKR , மூர்த்தி :

    படத்தில் சில காட்சிகளே வந்தாலும் இவர்கள் சிரிக்க வைக்க முயற்சிகிறார்கள் , VKR க்கு இந்த படத்தில் வேலை கொஞ்சம் அதிகம் , தன் மருமகனை மகனாக நினைக்கும் பாத்திரம் , தன் மகள் ஏமாற்று பட்டு விட்டால் என்று நினைத்து இவர் கலங்கும் காட்சியும் , உண்மை தெரிந்து மருமகனிடம் மனிப்பு கேட்கும் காட்சியும் நெகிழ்ச்சி

    பாண்டியன் , துளசி , மற்றும் சிலர் , கட்சிதமாக பாத்திரத்தில் பொருந்தி உள்ளார்கள்
    இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்தவர் குரலில் ஹிந்தி வாடை .

  13. Likes kalnayak, Russellmai liked this post
  14. #3148
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி :

    இந்த படத்திலும் இவர் தான் தூண் , 1987 ல் அதாவது நடிக்க வந்து 30 வருடங்கள் கடந்தும் இந்த படத்திலும் நம்மை நடிப்பால் அசரவைக்கிறார் , இந்த மாதிரி கதை உள்ள பல படங்களில் அதாவது குடும்பத்துக்காக தியாகம் பண்ணும் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் , ஆனால் ஒரு படத்தில் கூட பழைய படத்தின் பாத்திரத்தை மீண்டும் நடித்து இல்லை (CLICHE statement தான் ஆனால் இதை எழுதி தான் வேண்டும் )
    இந்த படத்தில் அவர் சற்று வயதான பாத்திரம் , மனதில் என்றும் 16 தான் , இதை முதல் காட்சியிலே அழகாக காட்சிபடுத்தி இருப்பார் , முதல் காட்சியில் அவர் சூட்கேஸுடன் நடந்து வரும் போதும் , Flower vase ல் ரோஜா பூ வைக்க அவர் சொல்லும் வசனம் Rose - ரொமாண்டிக் பிலோவேர்-செம்பருத்தி சாமிக்குப் போடுற பூ, கிழவிகளுக்குதான் பிடிக்கும்
    அதே மாதிரி நம் நடிகர் திலகத்துக்கு இயல்பிலே இருக்கும் நகைச்சுவை உணர்வை அழகாக இந்த படத்தில் காண்பித்து இருப்பார்கள் , VK ராமசாமியிடம் கல்யாணியைப் பிடிக்கலன்னா பண்டரிபாய்கிட்ட சொல்லுங்க... இல்ல மைனாவதிகிட்ட சொல்லி பாட வைங்க", என்று நன்றாக அவருக்கே உரித்தான பாணியில் கூறும் பொது சிரிக்காமல் இருக்க முடியாது , மனைவியின் சுபாவம் அறிந்து அவரை சீண்டி வேடிக்கை பார்த்து ரசிக்கும் காட்சி , அவள் போக்கில் போய் அவருக்கு வேண்டிய முடிவை எடுக்கும் சாதுர்யம் நாம் கற்று கொள்ள வேண்டியது

    குடிக்காமல் இருந்தவர் தனக்கு நடந்த பாராட்டு விழாவில் சுற்றி இருந்தவர் கேலி செய்யவே குடித்து விட்டு பண்ணும் கலாட்டா குபீர் சிரிப்பு ரகம். வீட்டுக்கு வந்த உடன் மப்பில் ஒன்றும் புரியாமல் முழிப்பதும் , பிறகு கொஞ்சம் சுதாரித்து , நடக்கும் பொது , கால் அவரை வேறு பக்கமாக அழைத்து செல்வதும் , இவர் வீடு ஆடுது என்று உளறுவதும் , அம்பிகா வர , , அது வரை hen pecked husband என்று அறிய பட்ட நபர் மனைவியைஅவரை கழுதை என்று திட்டுவதும் வீரமாக நான் குடிச்சேன் , குடித்து கொண்டே இருப்பேன் என்று கத்துவதும் அடி குரலில் ஹிந்தி பாடல் பாடுவதும் , சிகரெட்டே பற்ற வைப்பதும் , போதையை தெளியவைக்க மோர் குடியிங்க என்று சொல்ல NO MORE என்று பேசும் நச் வசனம் மேலும்

    மாமனார் VKR இங்கே வாட சின்ன பயலே என்று அழைப்பதும் ரணகளம் . அடுத்த நாள் இவர் படும் பாடு !

    இந்த காட்சி சிரிப்பு என்றால் , தன்னை blackmail செய்த உடன் இவர் முகம் சுருங்கி போவதும் மனைவியை திட்ட அவர் யோசிக்காமல் திட்டுவதும் , அவர் மனைவி அவரை பாவமாக பார்க்கும் போதும் அவர் முகத்தில் ஒரு cold reaction காட்டி விட்டு சிகரெட்டே பிடிப்பதும் , அழகு , அதே காட்சியில் அவர் கோபத்துடன் பார்க்கும் பார்வை , உட்காரும் posture அனைத்தும் டாப்

    இது வீட்டில் இருக்கும் சத்தியமூர்த்தி

    வீட்டில் சாதுவாக இருக்கும் மணித்தார் , வெளியே விஷயங்களை handle பண்ணும் பாணி அலாதி , மகளை போலீஸ் ஸ்டேஷன் ல் இருப்பதாக சொல்லும் பொது அவர் அதை எடுத்து கொள்ளும் விதம் பொறுமையின் சிகரம் , மனைவி ஆஸ்பத்திரியில் வந்து நோயாளியிடம் கோப படும் பொது , இவர் கத்தி சீன் create பண்ணாமல் , அழகாக தன் மனைவியை handle பண்ணும் பாங்கு கிளாஸ்

    அதே போல் போலீஸ் இன்ஸ்பெக்டர் உண்மை , நேர்மை என்று பேசும் பொது அவரை தட்டி கொடுத்து , பாராட்டி , heated situation என்ற சூழ்நிலையை அழகாக சமாளித்து விடுகிறார்

    அதே போல் தன் மகள்கள் இருவரும் காதளிகிரர்கள் என்பதை இந்த அளவிற்கு சாதரணமாக எடுத்து கொண்டு , தீர விசாரித்து காதலுக்கு பச்சை கோடி காட்டும் காட்சி எனக்கு மிகவும் பிடித்தது



    flashback காட்சிகளில் நம்மவர் research scholar பாத்திரத்தில் சில காட்சிகளில் பொருந்தி உள்ளார் , சில காட்சிகளில் continuity தவறி இருக்கிறது , காலேஜ் ல் இருக்கும் professor வேடத்தில் இவர் அணியும் உடைகள் கண்களை உறுத்தாமல் , அழகாக பொருந்துகிறது .

    இயக்கம் விஜயன் , இசை மனோஜ் கியான் பாடல்கள் இனிமை . இந்த படம் பெரிய திருப்புபங்கள் நிறைந்த படம் அல்ல , மனதை வருடும் மயில் இறகு , படம் வெற்றியடையாமல் போன காரணத்துக்கு , வழக்கம் போல் விடை தெரியாமல் இருக்கிறேன்

    சரி படத்தை பற்றி எழுதி விட்டேன் , அந்த suspense விஷயத்தை சொல்லி விடுகிறேன்

    வம்சவிலக்கு தான் நான் அடுத்து எழுத போகும் படம்

  15. Thanks Gopal.s thanked for this post
    Likes kalnayak, eehaiupehazij, Harrietlgy liked this post
  16. #3149
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    NT rises back to see his flora !

    நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!


    கதாநாயகரின் கதாநாயகியர்

    செந்தாமரை மலர் 5 சௌகார் ஜானகி

    சௌகார் ஜானகியின் வளர்ச்சியில் திருப்பம் ஏற்பட்டது நடிகர்திலகத்தின் வாழ்நாள் உச்சகட்ட நடிப்பின் சாதனைப் படமான புதிய பறவை மூலமே அதுவரை ராஜம்மாவின் நேரடி வாரிசாக படிக்காத மேதை பாக்கியலட்சுமி பார்த்தால் பசிதீரும் …………என்று அழுதுகொண்டும் மயங்கிவிழுந்து கொண்டும் நம்மை ஒருவிதமான டென்ஷனிலேயே வதைத்துக் கொண்டிருந்தவர் சூரியனைக் கண்டதும் நீர்ப்பரப்புக்கு மேலே தலை உயர்த்தி மலரும் செந்தாமரை போல புத்துணர்வுடன் கவர்ச்சி அவதாரம் எடுத்து ரசிகர்களை பிரமிக்க வைத்தார். நடிகர்திலகத்தின் யானைப்பசிக்கு ஒரு கரும்புக்காட்டையே நடிப்புத்தீனியாகப் போட புதியபறவையில் அவரது ஆழமான சரோஜாதேவியையும் மிஞ்சிய ஆளுமை மிக்க நடிப்பும் ஒரு காரணம். உயர்ந்தமனிதனில் நடிகர்திலகத்தையே தன் மிடுக்கான நடிப்பால் கட்டிப்போட்டார். பார் மகளே பார் மற்றும் மோட்டார் சுந்தரம் பிள்ளை இவரது நடிப்பின் மேன்மையை உறுதிபடுத்தியவை. தனிப்பட்ட முறையில் பாக்கியலட்சுமி, இரு கோடுகள், காவியத்தலைவி, ஒளிவிளக்கு, நீதி, பாபு திரைப்படங்கள் அவர் திறமையை வலுப்படுத்தின.

    பார் மகளே பார் நடிப்புப் பகலவனுக்கு சற்றே எதிர்மறை குணம் கொண்ட நாயகன் பாத்திரம் பணக்கார மமதை தூக்கிஎறிந்து பேசும் அலட்சியப் போக்கு .....ஆனாலும் தனது உண்மையான மகள் யார் வளர்ப்புமகள் யார் என்ற குழப்பத்தில் அவரது சீற்றங்கள் சௌகார் ஜானகிக்கு அடிக்கடி அழுது மயங்கிவிழும்
    'முத்திரை' நடிப்புக்கு பஞ்சம் வைக்காத படம். கோபச்சிங்கம் இந்தப் பாடல் காட்சியில் மட்டுமே விசிலெல்லாம் ஹம்மிங் பண்ணி சாந்தசிங்கமாக இருக்கும்! அப்புறம் படம் முடியும்வரை MGM கர்ஜனைதான்!! அல்லாடும் ஜானகிதான் மருண்டு நிற்கும் மான்!!!



    படிக்காத மேதை ரங்கனுக்கு பதமான பாடல் வரிகளால் நம்பிக்கையும் புத்துணர்வும் ஊட்டும் தாமரை மலர்முகமாக சௌகார்! படிக்காத மேதையாக நடிப்பின்
    இலக்கணத்தை உலகுக்கே வரையறுத்த நடிகமேதையுடன் நடிப்பில் மிளிர்கிறார் மயக்க மேதை சௌகார்!!



    மாலை பொழுதின் மயக்கத்தில் மயங்கி விழாமல் காதல் மன்னரின் மனதை மயக்கி அமர வைத்த காலத்தை வென்ற கானம் சௌகாரின் மனதை ஈர்க்கும் பாக்கியலட்சுமி நடிப்பில் !



    More about Sowkaar ....

    Sankaramanchi Janaki (born December 12, 1931), popularly known as Sowcar Janaki, is a south-Indian actress who has acted in over 385 Tamil, Telugu, Kannada, Hindi and Malayalam films. She also performed on stage in over 300 shows and was a radio artist during her earlier years. She became a popular actress with hits such as Sowcar (Telugu), Pudhiya Paravai (Tamil) and Iru Kodugal (Tamil). She worked with famous directors such as Dada Mirasee and K Balachandar

    Ref : wiki and You Tube

    Signature song of Sowkaar Jaanaki

    இந்தமுறை கவர்ச்சி டோஸ் தாங்காமல் மயங்கி விழுந்தது ரசிகர்களாகிய நாமே! நடிகர்திலகமே ஞாபகம் இழந்து கிறங்கிப்போன சௌகாரின் அதிரடி!புதியபறவை



    NT comes back to get an orderly glimpse of the Semparuthi malar Vaanishree, Saamanthippoo Usha Nandhini, Sun Flower Jayalalitha, Dream flower Kalar Kaanchanaa, Shenbagam Vaijayanthi, Kurinji malar Bhanumathi and the Manoranjitham flower Saaviththiri!!
    Last edited by sivajisenthil; 5th December 2014 at 06:20 PM.

  17. Likes kalnayak liked this post
  18. #3150
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜியை ” யானைத் தமிழன் “ என அழைப்பது பொருத்தம்தானோ என இப்போது..இந்தச் செய்தியைப் படிக்கும்போது தோன்றுகிறது...
    எத்தனை கோவில்கள்..எத்தனை யானைகள்...!!!
    இதோ..அந்த மஹா பெரிய ..பழைய செய்தி...
    ‘நீதானே சிவாஜி கணேசன்?‘..-இப்படிக் கேட்டது காஞ்சிப் பெரியவர்...
    ‘ஆமாங்கய்யா! நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாராம் சிவாஜி...!!!
    காஞ்சிப்பெரியவர் – சிவாஜி சந்திப்பில் ...அப்புறம் நடந்ததை சிவாஜியே சொல்கிறார்...
    காஞ்சிப் பெரியவர் சொன்னாராம்... , “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது? என்றேன். ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள். திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது? என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள்.
    தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது ?’ என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். ..யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார். அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ? எத்தனை அனுக்கிரஹம்! எண்ணிப் பாருங்கள்.”-
    -இப்படி பக்திப் பரவசத்தோடு சொல்லியிருக்கிறார் சிவாஜி..!
    # ஆம்...எண்ணிப் பார்க்கிறேன்.....
    சிவாஜி......தமிழ் சினிமாவுக்கு எத்தனை பெரிய அனுக்கிரஹம்!


    courtesy net

  19. Thanks Russellbpw, eehaiupehazij thanked for this post
    Likes sss, kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •