-
9th November 2014, 11:33 PM
#2741
Junior Member
Veteran Hubber
ஒவ்வொரு சுகமான குட்டிச் சுறா அல்லது சுமையான திமிங்கிலம் பற்றி விவாதிக்கும் போதும் ஒரே யொரு காணொளி போதுமல்லவா.. ஒரு பானைக்கு ஒரு சோறு போதுமே... தேர்ந்தெடுக்கும் அந்த ஒரு பாட்டு அல்லது காட்சியில் அந்த குட்டிச் சுறா அல்லது திமிங்கிலத்தின் பங்கு பற்று விரிவாக எழுதலாமே...
by raghavendar sir.
அன்பு நண்பர் திரு.ராகவேந்தர். அள்ளித்தெளித்த கோலமாகி விடக்கூடாது என்ற கோணத்தில் தங்களது கருத்தை உணர்கிறேன். நடிகர்திலகம் என்னும் கடலை அலசுவது குருடன் யானையை புரிந்துகொள்வது போன்றதே. ஊக்கம் தந்தமைக்கு நன்றி. வழிகாட்டுதல்படி அடுத்த அடிகளை வைக்கிறேன். செந்தில்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th November 2014 11:33 PM
# ADS
Circuit advertisement
-
9th November 2014, 11:42 PM
#2742
''An apostle of art, a paragon of virtue, and a master of craft- all put into one is Dr. Sivaji .'' -
By Dr.Rajkumar ( இந்திய நடிகர்களில் முதன் முறையாக டாக்டர் பட்டம் பெற்ற முதல் நடிகர் ராஜ்குமார் அவர்கள் நமது நடிகர் திலகம் பற்றி கூறியது)
Last edited by sss; 9th November 2014 at 11:45 PM.
-
10th November 2014, 01:09 AM
#2743
Dear Gopal Sir,
Better late than Never!!! Even though belated, very sincere and warm wishes for your Birth Day on 07 November.
Anand
-
10th November 2014, 04:23 AM
#2744
Junior Member
Newbie Hubber
கலை வேந்தன்,
சக்கையை சுமந்து சாறை வெளிஏற்றும் கலை எனக்கு தெரியாது.
பெரியாரின் மனித சமத்துவம்,பெண் சமத்துவம் என்ற இரு கொள்கைகள்தான் முக்கியம்.பெரியாரே அவர் சொன்னதை அப்படியே சிந்திக்காமல் செய்வோரை விரும்பியதில்லை.அவர் எல்லாவற்றையும் உரக்க சொன்னது ,அன்றைய நாட்களின் காலத்தின் கட்டாயம்.தேவை.
தினமும் குளித்தாலோ,பெண்கள் கர்ப்ப பை சுமந்தாலோ ,பெரியாரை தொடரவில்லை என்று அர்த்த படுத்தும் போக்கு உமக்குள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பில்,ஜாதிக்கு ஏற்ப ,சமூக உரிமைகள் வழங்குவதை பேசி,எந்த சாதி பிற்படுத்தியதோ,அதே அமைப்பு உரிமையும் வழங்க கேடயமாகும் காலம். இன்றைக்கு சாதி ஒழிப்பை பற்றி பேசாமல், அவற்றை அங்கீகரித்து ,சமத்துவம் பேசுவதே சாத்தியமான ,நியாயமான நிலைப்பாடு. இனியாவது,என் கொள்கைகள் சார் விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். வீண் துதி பாடிகளை விட நான் எல்லாவற்றிலும் தெளிவானவன்.
அத்தோடு என்னை கவராத,எனக்கு பிடிக்காத மனிதர்களின் நற்செயல்களை புறம்தள்ளும் வழக்கம் எனக்கு இல்லை.அவசர கோலத்தில் வந்ததெனினும் 68%நற்செயலே. அதை விட நற்செயல் ,அதற்கு முன் க்ரீமி லேயர் ஒதுக்கி,வருமான வரம்பு வைத்து,இட ஒதுக்கீட்டு மாற்றம். வெற்றி பெறாமல் போனாலும் நன் முயற்சி.
ஓரளவு பெரியார்-மார்க்ஸ் இணைப்பு முயற்சி.
உங்களோடு உரையாடுவது சுவாரஸ்யமாக இருந்தாலும்,நீங்கள் தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய நடிகர்திலகத்தின் மீது காட்டும் அனாவசிய காழ்ப்புணர்ச்சி. சிறு வயதில் ,சில mono -theist மதங்கள் ,மற்ற மதத்தினரின் மீது காழ்புணர்ச்சி காட்டியது போல நடந்த மூளை சலவை.சிறு வயதில் கேட்டு வளர்ந்த பொய்கள். நிலைமை மாற்றி ,கண்டு,கேட்டு,உண்டு,உயிர்த்து உங்கள் கலையுணர்வை வளர்க்கவேனும் ,சிறிதே என் எழுத்துக்களுக்கு செவி தாருங்கள்.இதை திறந்த மனதுடன் அணுகுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.பொய்த்தாலும் ,நஷ்டம் எனக்கில்லை.
Last edited by Gopal.s; 10th November 2014 at 12:15 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th November 2014, 07:09 AM
#2745
Junior Member
Veteran Hubber
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
Part 2 : வலிமை மிகுந்த பளுவான நடிப்புச் சுறாக்கள் !(ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
10. திருமிகு.டி ஆர் ராமச்சந்திரன் :
நடிகர்திலகத்தின் ஆரம்பகால படங்கள் பலவற்றில் இணைகதாநாயகனாக வலம் வந்தவர். வாழ்க்கை படத்தில் வைஜயந்தி இணை. சபாபதி திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் 'எட்டி கான்டர்' பாணியில் நகைச்சுவை கதாநாயகனாக மிளிர்ந்தவர். நடிகர்திலகத்துடன் கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி, விடிவெள்ளி, கள்வனின் காதலி (சதாரம் நாடகமேடை ஆடல் பாடலில் நடிகர்திலகத்துடன் அடிக்கும் கூத்து இன்றும் ரசிக்கப்படுகிறது). தில்லானா மோகனாம்பாள் முக்கிய குணசித்திர வேடத்தில் தன் மதிப்பைக் கூட்டினார். நடிகர்திலகம் புகழேணியில் ஏறிட உடனிருந்தவருக்கு நன்றியும் வணக்கங்களும் !!
Observe NT's tonal adjustments to suit Chandrababu singing for him. Also, the way he lifts 'alek' TRR reminds us the Paarthal Pasi Theerum song " Pillaikku Thanthai Oruvan' wherein he lifts boy Kamal like this only!! Younger days of NT to be cherished in the good company of equal acting weight 'payilvaans' like TRR!
நடிப்புத் திமிங்கிலம் ஒரு பாத்திரப் படைப்பை உள்வாங்கி நடிக்கும்போது உடல்மொழியில் கண்கள் புருவங்கள் கன்னங்கள் தாடை முதல் பாதம் வரை காமெராமேனுக்கு சவால் வைப்பார். இம்மாதிரி அதிக அளவு அங்க ஆற்றலை வெளிப்படுத்த வேண்டிய பாடலுக்கேற்ற இசைக்கு இசைந்த ஆடல் அசைவுகளிலுமா ? அப்போதுதான் பிறந்த ஆட்டுக்குட்டி போல குதித்துக்கொண்டே இருக்கும் கால்கள்......இந்தப் புத்துணர்ச்சி அதன்பிறகு அவர் வெளிக்கொணரவேயில்லையே ! இக்காட்சி நடிகர்திலகத்தின் உத்தமபுத்திரன் மிகவேக ஒரிஜினல் குதிரை சவாரிக்கு நிகரான அதிகபட்ச ஆற்றல் வெளியீட்டின் சாட்சி!.ஜாடிக்கு ஏற்ற மூடியாக TRRன் trade mark சேஷ்டைகள்.....though not colorful like the contemporary Hollywood dancing demigods Gene Kelly and Fred Astaire, it is a 'salt and pepper' feast to the eyes!
The End of this part of write-up related to senior artists to NT. These tit-bits type of write-ups are just like a teaser trailer for a movie. Next part I intend to cover up on the contemporaries of NT like SSR, Muthuraaman, Asokan,Nambiar, Nagesh, Chandrababu, Manorama....and all his heroines.....like that. Later, depending on the reception, I may like to present some in depth analysis on all these actors who were part and parcel of NT's career, one by one, as suggested by our respected Raghavendra Sir.
Senthil
Last edited by sivajisenthil; 10th November 2014 at 02:36 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th November 2014, 07:23 AM
#2746
Senior Member
Seasoned Hubber
மிக்க நன்றி சிவாஜி செந்தில் சார்...
இன்னும் தங்கள் தொடரில் இடம் பெற வேண்டியவர்கள் ஏராளம்... தொடருங்கள் தங்கள் ஆய்வை... படிக்கக் காத்திருக்கிறோம்...அவர் ஒவ்வொரு தலைமுறைக் கலைஞர்களுக்குள்ளும் இது போன்ற பல கலைஞர்களை ஊக்குவித்து வந்திருக்கிறார். அதில் நடிகர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பத் துறையில் ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், என ஒவ்வொருவருக்கும் சவால் விடும் வகையில் தங்கள் பங்களிப்பினைத் தந்துள்ளார். அவருடைய காட்சிகளைத் தொகுத்தவர்களும் எதை விடுப்பது, எதை வைத்துக்கொள்வது எனத் திணறியிருக்கிறார்கள். அதே போல ஒளிப்பதிவாளர்களும் படப்பிடிப்பின் போது காமிரா இயக்குவதை கூட மறந்து அவருடைய நடிப்பில் லயித்திருக்கிறார்கள்...
இது போன்ற பல கோணங்களில் தங்களுடைய ஆய்வினைத் தொடர வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th November 2014, 07:40 AM
#2747
Junior Member
Veteran Hubber
Originally Posted by
RAGHAVENDRA
மிக்க நன்றி சிவாஜி செந்தில் சார்...
இன்னும் தங்கள் தொடரில் இடம் பெற வேண்டியவர்கள் ஏராளம்... தொடருங்கள் தங்கள் ஆய்வை... படிக்கக் காத்திருக்கிறோம்...அவர் ஒவ்வொரு தலைமுறைக் கலைஞர்களுக்குள்ளும் இது போன்ற பல கலைஞர்களை ஊக்குவித்து வந்திருக்கிறார். அதில் நடிகர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பத் துறையில் ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், என ஒவ்வொருவருக்கும் சவால் விடும் வகையில் தங்கள் பங்களிப்பினைத் தந்துள்ளார். அவருடைய காட்சிகளைத் தொகுத்தவர்களும் எதை விடுப்பது, எதை வைத்துக்கொள்வது எனத் திணறியிருக்கிறார்கள். அதே போல ஒளிப்பதிவாளர்களும் படப்பிடிப்பின் போது காமிரா இயக்குவதை கூட மறந்து அவருடைய நடிப்பில் லயித்திருக்கிறார்கள்...
இது போன்ற பல கோணங்களில் தங்களுடைய ஆய்வினைத் தொடர வேண்டுகிறேன்.
நன்றி நண்பர் ராகவேந்தர் அவர்களே நீங்கள் குறிப்பிட்டது போல நடிகர்திலகம் புகழுக்குப் பின் எத்தனையோ உழைப்பாளிகள் வகைப்படுத்திக்கொண்டு கிரியா ஊக்கியாக தங்களின் மேலான கருத்துப்பகிர்தல்களுடன் ஏனைய அன்பு நண்பர்களின் ஆக்கம் தரும் ஊக்கங்களுடன் தொடர்கிறேன். சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை. அதே சமயம் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுபபாரில்லானும் தானே கெடும் என்னும் எச்சரிக்கை உணர்வையும் அகத்தே இருத்தி நேர்மறை எண்ணங்களுடன் செயலாற்றவே ஆசைப்படுகிறேன், திரியின் மாண்பு பங்கப்படாத வண்ணம் எனது பங்களிப்புகளுடன்.விழைவதெல்லாம் நடிகர்திலகத்தின் புகழ்பரப்பி நெஞ்சம் நிறைவதே!
Last edited by sivajisenthil; 10th November 2014 at 02:28 PM.
-
10th November 2014, 09:24 AM
#2748
Junior Member
Newbie Hubber
நடிகர்திலகம்- கலை மரபின் நீட்சி -திசை மரபின் எழுச்சி.- பகுதி-1
என் பிறந்த நாள் அன்று,என் பிறப்பிற்கு ஒரு சிறந்த அர்த்தம் அளித்த என் மண்ணின் அசல் வித்து, உலகதிறமைகளின் மொத்த உறைவிடம்,அங்கீகாரம் பெறாத சரஸ்வதி மைந்தன் ,என் கலைஞானத்தை முழுமை பெற செய்த தெய்வ மகன், திறமை தவிர வேறு கண்டிலா உத்தம புத்திரன் பற்றி ஒரு ஆய்வு கட்டுரை தொடங்கும் உத்தேசம் இருந்தது.சரியான பொருட் தேர்வு ஏற்கெனவே செய்து முடித்தது. ஆய்வு தொடங்க இதுவே தருணம். விஷயங்கள் அறிந்திருந்தாலும் , சரி பார்க்க தொகுக்க நேரம் செலவாகும்.(இங்கே உள்ள அங்கத்தினர்களிடம் நான் எதிர்பார்த்த எண்ண எழுச்சி இருக்குமா என்பது சந்தேகம்). ஆனால் ஒரு முரளி,ஒரு ராகவேந்தர்,ஒரு கார்த்திக்,ஒரு வாசு ,ஒரு சாரதி, ஒரு வெங்கி ,ஒரு சி.க,ஒரு கல்நாயக்,ஒரு ஆதிராம்,ஒரு கலைவேந்தன் ,மற்றும் முகம் தெரியா பல அறிவு ஜீவிகள் (PM )இருக்கும் தைரியத்தில் துவங்குகிறேன்.
எந்த ஒரு கலையும் எக்காலத்திலும் முழுமை கண்டதில்லை. நாளும் வளரும், தேயும்,தேய்ந்து வளரும்,மாறும்,புதுப்பிக்கும், எல்லா திசையிலும் உள்ள அம்சங்கள் கவர்ந்து புதுமை காணும்,விஞ்ஞானத்தின் கூறுகளால் அக-புற மாறுதல்கள் எய்தும் ,மனித வாழ்க்கையின் வளர்ச்சிகளால் புற மாறுதல்கள் காணும்,இயல்பு கொண்டது.எந்த புள்ளியிலும் தொடங்கி,எங்கும் முடிவெய்துவதல்ல. அதே போல முழுதும் ஓர் இரவில் மாற்றம் காண்பதல்ல. ஒரு மனிதர்,ஒரு நிகழ்வு,என்று இதனை நிகழ்த்தி விட முடியாது. இது ஒரு பிரத்யேக குழு சார்ந்த எண்ண எழுச்சி,பொழுது போக்கு,கலாச்சாரம்,நுண்ணரசியல்,அயல் நுழைவுகளை அங்கீகரிக்கும் போக்கு இவை சார்ந்து குறுகிய வட்டத்தில் நிகழ்பவை. மொழி சாரா கலைகள் நீட்சி பெரும் கூறுகள் ,அங்கீகாரம் பெரும் சாத்தியங்கள் அதிகம்.(ஓவியம்,சிற்பங்கள் போன்றவை).மொழி சார் கலைகளோ பிரத்யேக குழுவின் அங்கீகாரம் வேண்டுபவை.
இதில் மனிதனின் அறிவின் நீட்சியை,புதுமை வேகத்தை புது திசையில் செலுத்தும் உயர்-ரக கலை முயற்சிகள், மற்ற பொதுமை சார் கற்பனை வளமற்ற கீழ்மை கலைகளால் நசுக்க பட்டு,புரிந்து கொள்ள படாமல் அல்லது வாழும் காலத்தில் அங்கீகாரம் பெறாமல்,காலத்தை மீறி நிற்கும் தன்மை பெறும். இதனை நிகழ்த்தும் அற்புத கலைஞர்கள் மற்றும் கிரியா ஊக்கிகள் , வாழும் காலத்தில் கீழ்நிலை மனிதர்களின் நுண்ணரசியல்,கீழ்தர வியாபார தந்திரம் இவற்றால் பாதிக்க பட்டு துன்புறுதல், காலம் தோறும் நாம் காணும் நிகழ்வுகள்.
இதனால் மொழி-சார் கலைகளில் ,அற்புதம் நிகழ்த்தும் படைப்பாளிகள்,மற்றும் படைப்புகளின் உள்வட்டம் வாழும் காலங்களில் சுருங்கியே நிற்கும்.ஆனால் பிற்காலத்தில் சிலாகிக்க பட்டு அமரத்துவம் பெறும்.
இதனை செலுத்தி,மக்களை ஒரு படி மேற்செலுத்தி செல்லும் கலைஞர்கள்,காலத்தை மீறி நிற்பார்கள்.நினைக்க படுவார்கள்.அறிச்டோபானஸ் ,இப்சென்,லியனார்டோ டா வின்சி ,வாத்ஸ்யாயன் ,மாக்கிய வில் ,ஷேக்ஸ்பியர்,கம்பன்,சாத்தர்,விட்டோரியோ டிசிகா,பிகாசோ,மொசார்ட் ,சிவாஜி கணேசன் போன்ற மேதைகள் ,தான் வாழும் காலத்தை மீறி ,கலைகளை முன்னெடுத்து சென்ற பிறவி மேதைகள்.
கலைகளின் கூறுகள் மாறி கொண்டே இருக்கும். ஓவியர்களின் நிகழ் பட வரைவு(மனிதர்,சுற்று பொருட்கள்),இயற்கை காட்சிகள், புகை பட கலையினால் தேய்வு கண்ட போது ,ஓவியன் தன்னை pointilism ,sur realism ,impressionism ,expressionism ,cubism என்று தன்னை புதுப்பித்து மாற்றம் கண்டு ஜீவித்தது.performing arts என நிகழ் கலைகளோ , கூத்து,பண் ,நாடகம்,திரைப்படம் என வெவ்வேறு வடிவெடுத்து ,அக-புற மாற்றங்கள்,சாத்திய கூறுகள் சார் வடிவ அக-புற மாற்றங்கள்,வியாபார வீச்சுக்கள் சார்ந்த பொருட்புழக்கம்,அந்தந்த கால மக்களின் அறிவு நிலை,எண்ண எழுச்சிகள்,மாற்றம் தேடும் விழைவு, அரசியல்-கலாச்சார நிகழ்வுகள்,வாழ்வு நிலை மாற்றங்கள் இவை சார்ந்து தன்னை இறுக்கி,நெகிழ்த்தி,மாற்றி,நிலையாமையே நிலையாய் கொண்டு மாற்றமே மாற்ற இயலா விழைவாய் கொண்டு , உயிர்பித்து வாழ்வதுமல்லாமல், மற்ற மாற்று கலைகளுடன் போராடி வெல்ல வேண்டிய அவசியமும்,அவசரமும் கொண்டது.
இதனை நிகழ்த்தி காட்டுவோரையே ,சமுகம்,பெருமையுடன் நினைவு கூற கடன் பட்டது. நான் இப்போது, நாடக திரை கலையில் பெரும் மாற்றத்தை நடிப்பு கலையில் நிகழ்த்தி காலத்தை வென்று நிற்கும் சிவாஜி என்ற அற்புத கலைஞன் ,அதனை மரபின் நீட்சியுடன்,திசைகளின் புது வரவின் எழுச்சியை இணைத்து சாதித்த அதிசயத்தை விஸ்தாரமாக எழுத உள்ளேன்.
இது சார்ந்து உங்கள் எண்ணங்களை முன்னோட்டமாக வரவேற்கிறேன்.
(தொடரும்)
Last edited by Gopal.s; 10th November 2014 at 02:08 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
10th November 2014, 11:57 AM
#2749
Junior Member
Seasoned Hubber
நடிகர்திலகத்தை நான் சந்தித்த அனுபவம்:
------------------------------------------------------------------
ஒரு முறை நாங்கள் குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள திருமண
மண்டபத்திற்கு நடிகர்திலகம் வருகை புரிந்தார். அது கவிஞர்
இளந்தேவன் நடத்திய ஒரு இலக்கிய விழா. இந்த விழா சைதை அரசு
குடியிருப்பில் உள்ள மேற் கூறிய ஒரு இடத்தில் நடந்தது. நான்
அங்கு வசித்த காரணத்தால் மிக மகிழ்ச்சி அடைந்தேன். எனது மாலை
வகுப்பு முடித்து கொண்டு ஒரு மாலை வாங்கி கொண்டு அந்த இடத்தை
நோக்கி விரைந்தேன்..
நேராக மேடையில் அமர்ந்திருந்த நடிகர்திலகத்தின் அருகே சென்று
அந்த மாலையை போட்டு அவரது கன்னத்தில் ஒரு முத்தம்
கொடுத்தேன். அவரும் புன்முறுவலுடன் அதை ஏற்று கொண்டு
அமைதியாக அமர்ந்திருந்தார். நானும் எனது நண்பனும் ஒரு
புகைப்படம் எடுக்க ஆசை பட்டு அங்கு உள்ள புகைப்படக்காரர்idam
கூறி அவரும் படம் எடுத்தார். இங்கு தான் விதி விளையாடிவிட்டது.
நானும் எனது நண்பனும் நேராக பார்த்திருக்க நடிகர்திலகம் படம்
எடுத்த நேரத்தில் பக்கவாட்டில் பார்த்திருந்தார்.
இந்த விஷயம் படம் வாங்கும் போது தெரிந்து அதை வாங்க
விருப்பமில்லாமல் அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டேன்.
அதன்பிறகு அது போன்ற சந்தர்பம் அமையவில்லை.
இதை இபபோது நினைத்தாலும் மனதுக்குள் ஒரு சிறிய வலி இருந்து
கொண்டே இருக்கும்.
Regards
-
10th November 2014, 12:11 PM
#2750
Junior Member
Newbie Hubber
வாசு,
இப்போது இந்த பதிவுக்கு என்ன தேவை வந்தது? ஒரு பதிவு போட்டு எதிர்-வினை கேட்டிருந்தால், இப்படி ஒரு மக்குத் தனமான பதிவை போட்டால், உழைப்பை கோரும் பதிவுகளை யார் போட விழைவார்கள்?
நீங்கள் ,எந்த பதிவையும் சுவாரஸ்யமாகக இயலாததெனினும், மற்ற பதிவுகளை மதித்து எதிர்-வினை புரியலாமே?
ஏன்தான் இப்படி இருக்கிறீர்களோ?உங்களுடையதை பிறகு போட்டு கொள்ளலாம்.
Bookmarks