Page 258 of 400 FirstFirst ... 158208248256257258259260268308358 ... LastLast
Results 2,571 to 2,580 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2571
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி என்ற மாமனிதர்.

    ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.(இந்த விஷயத்தில் Joe கட்சிதான்).
    அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.


    ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.


    நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை ,அம்சங்களை வைத்து பாகம் 11 ஐ தொடங்குவதில் பெருமை கொள்கிறேன்.
    இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .

    செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.


    அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .

    வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.

    எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .

    கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.

    சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.


    பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.

    சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.

    நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.

    மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.

    கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.


    தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.

    பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.

    ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.

    இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.

    தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்
    .

    அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.


    நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.

    படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.

    பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.

    யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.

    தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.

    உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.


    பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.

    நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.

    தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.

    தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.

    (S.கோபால்)

  2. Thanks Russelldwp, ifohadroziza thanked for this post
    Likes ScottAlise, ifohadroziza liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2572
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    நண்பர் கோபாலின் முன்னைய பதிவு
    தேவை கருதி மீள்பதிவு

    எனக்கு ஒன்று புரிவதேயில்லை.புரியவும் இல்லை.

    நமக்குள் வரும் கருத்து மோதல்களை விடுங்கள்.தெளிவான ரசிகர்களை கொண்டதால் விளையும் முரண்,அது சார்ந்த கர்வங்கள்,மான பிரச்சினைகள்.இது குடும்பத்துள் அண்ணன் தம்பி பிரச்சினை.இது ஒரு ஆரோக்கியமான சுவாரஸ்யம் நிறைந்த செல்ல மோதல்கள்.

    ஆனால் இங்கு நம் திரிக்கு மட்டும் சந்தேகமான நபர்கள் வந்து அதை செய்,இதை செய்யாதே என்று குழப்பம் விளைவிப்பது.பல நகைப்புக்கிடமான விஷயங்கள்,மூட தனங்கள் நிறைந்த இடங்களில் யாரும் சென்று எதையும் சொல்லாத போது நமக்கு மட்டும் என் இந்த கட்டுப்பாடுகள்,சட்ட திட்டங்கள்?பதிவர்களை அவமான படுத்தி திட்டமிட்டு விரட்டுவது போன்ற திரிசம வேலைகள்?

    என்னை,ராகவேந்தரை,வாசுவை,முரளியை ,கார்த்திக்கை விடுங்கள்.நாங்கள் போட்டு கொள்ளாத சண்டைகள் இல்லை,விவாதங்கள் உண்டு.ஆனாலும் தெளிவாக சில விஷயங்கள் உண்டு.

    1)நாங்கள் அனைவருமே பங்களிப்பாளர்கள்.
    2)திரிக்கு சுவை கூட்டி,மெருகேற்றி,பார்வையாளர்களை ஈர்த்து,நடிகர்திலகத்தை பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவும் குழு.
    3)எங்கள் நோக்கம் ஒன்றே ஒன்று.-நடிகர்திலகம் மட்டுமே பிரதானம்.
    4)எங்கள் அனைவரிடமே,சொல்ல விஷயங்கள் இன்னும் உண்டு.மெருகேற்றி ,சுவையாக,creative ஆக செய்யும் திறம் உண்டு.

    இதில் எங்கே வந்தது ஆக்ரமிப்பு? எங்களுக்கு மட்டும் என் ஆயிரம் கட்டளைகள்,நிர்பந்தங்கள்?

    அதுவும் ,பங்களிப்பாளர் அல்லாத மற்றவர்களிடம் இருந்து?

    வாசு மற்றும் என் போன்றவர்கள் நொந்து வெளியேறுவதால் திரிக்கு நன்மை உண்டா?வேறு யாரேனும் எங்கள் இடத்தை எடுத்து கொண்டு பணியாற்றினால் மகிழ்ச்சியே.ஆனாலும் அதுவும் நேர்வதாக தெரியவில்லை.

    சரி.கொஞ்சம் சுவை கூட்டலாம் என்று பார்த்தால் ஒரு முக்கிய நண்பர் வந்து நாங்கள் ரசிக்கும் மனநிலையில் இல்லை என்கிறார். சிவாஜியை பற்றி சொல்வதற்கும் ,சுவைப்பதற்கும் என்னைய்யா மனநிலை?கோவிலுக்கு செல்லும் மனநிலைதானே?சுகம்,துக்கம் இரண்டிலும் ஆசுவாசம் தர கூடியதுதானே?
    மன வருத்தத்துடனே பதிவு செய்கிறேன்.

    வாசு,ராகவேந்தர்,கார்த்திக்,முரளி,சாரதி போன்றவர்கள் உடனே வருவது,நாம் கட்டி காத்த கோயில் பாழடையாமல்,திருப்பணி செய்வதற்கு ஒப்பானது.வாருங்கள்.என் அன்பு வேண்டுகோள்

  5. #2573
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    (மாலைமலர்)

  6. Thanks Russelldwp, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  7. #2574
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

  8. Thanks Russelldwp, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  9. #2575
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ரசிகர்களின் அன்புச்சிறையில்ரசிகர்களின் அன்புச்சிறையில்
    Last edited by sivaa; 3rd November 2014 at 06:39 AM.

  10. Thanks eehaiupehazij thanked for this post
    Likes ScottAlise, Russellmai liked this post
  11. #2576
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு நடிகர் 100 படங்களை நிறைவு செய்கிறார். அதுவும் கதாநாயகனாகவே நடித்து அந்த பெருமைக்குரிய மைல் கல்லை கடக்கிறார். வரலாற்றில் பொன்னெழுத்துக்களினால் பொறிக்கப்பட வேண்டிய நாள் 1964 நவம்பர் 3. அப்படிப்பட்ட பொன்னெழுத்து நாள் இன்றைய தினம் பொன் விழாவை பூர்த்தி செய்கிறது. அந்த பெருமைக்கும் விருதுக்கும் தகுதியான படம் என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிக்கிறது. அதை மக்களும் ஏற்றுக் கொண்டு படத்திற்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தனர்.
    முரளி சிறினிவாசன்





  12. Thanks Russelldwp thanked for this post
  13. #2577
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நண்பர் ரவிகிரண்சூரியாவின் முன்னைய பதிவு
    தேவை கருதி மீள்பதிவு



    (நண்பர் ரவிகிரண்சூரியா இது உங்கள் திரி எங்கே போய்விட்டீர்கள்)

    என்ன சார் நடக்குது ?

    நடிகர் திலகம் பாகம் -12 திரியை துவக்கி வைத்த திரு பார்த்த சாரதி

    திறமையான பதிவாளர்கள்
    திரு ராதாகிருஷ்ணன்
    திரு ராகுல் ராம்
    திரு கண்பத்
    திரு சின்னகண்ணன்
    திரு ரவி
    திரு கோபால் - ஆய்வாளர்

    திரிக்கு வருவதே இல்லை . ஏன் இந்த புறக்கணிப்பு ?

    ஏற்கனவே நம்முடைய ராகவேந்திரன் சார் - வாசுதேவன் சார் மனதை பன்முக பதிவாளர் ஒருவர் மனதை புண்படுத்தி திரிக்கி வரவிடாமல் செய்து விட்டார் .

    சிலை விவகாரத்தை முன்னிட்டு ஆதிராம் [எட்டில் ஒருவர்- எட்டும் அவரே ] உண்டாக்கிய குழப்பம் - உச்ச கட்டம்

    எட்டு பேர் புகழ் கார்த்திக் திரிக்கு வந்து பதிவிடவும் . மற்றவர்களும் உண்மையான அடையாளத்துடன் வந்து பதிவிடவும் .

    வீறு நடை போட்ட நம் திரி சிலரின் தவறான போக்கினால் திசை மாறி செல்வது வேதனை .

    உரிமைக்குரல் ஆசிரியர் b.s. ராஜ் அவர்களை பாருங்கள் !

    நம்முடைய கர்ணன் வெற்றியினை உருவாக்கி தந்த திரு சொக்கலிங்கத்தை, அவர் சிவாஜி ரசிகர் - கர்ணன் வெற்றி இல்லை என்று கூப்பாடு போட்டவர் இன்று நம் சிவாஜி படத்திற்கு டிவிடி தயாரித்து அமோக வியாபாரம் செய்கிறார் .

    இன்று சொக்கலிங்கத்தின் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக அவருடன் கை கோர்த்து சொக்கலிங்கத்திற்கு ஆதரவு தருகிறார் .

    மாற்றுமுகாம் சேர்ந்தவர்கள் இன்று நம்முடைய சிவாஜி புகழ் பாடும்போது இந்த முகாமில் உள்ளவர்கள் மவுனம் காப்பது ஏன் ?

  14. #2578
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Last edited by RAGHAVENDRA; 3rd November 2014 at 08:32 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Thanks Russelldwp, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  16. #2579
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Dear Ragulram,


    NT's magnus opus Navarathiri on 16.11.14 on behalf of NTFANS at Russian Centre, Kasturi Rangan Road,Chennai. If your are free make it convenient to attend the

    screening and enjoy with our starwarts.


    This invitation not only to Mr Ragulram but to all our hubbers so that they can plan their travel and watch the movie.



    Regards
    Thanks for invitation sir, But I am sorry I will not be able to come this time, I will try to come for next event sir

  17. #2580
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    தமிழ் தாயின் கலைத்தாயின் தலைமகன் நடிகர் திலகம் நடித்த 100-வது படமாம் நவராத்திரி இன்று பொன் விழா காண்கிறது. இந்த இனிய நாளில் அந்தப் படத்தை பற்றியும் அந்த படம் சம்மந்தப்பட்ட விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்ள முடிந்ததற்கு நன்றியும் மகிழ்ச்சியும்!
    அன்புடன்
    டியர் முரளி சார்,
    நவராத்திரி - பொன்விழாவையொட்டி தாங்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் அருமை.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •