Thank you Ragul and Ramajayam Sir for your kind complements.
All credit go to NT only.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
quoted from Silver Screen website:
Thank you Siverscreen for an indepth coverage [http://silverscreen.in/events/eterna...-celebration/]ETERNAL LOVE: SIVAJI GANESAN’S 86TH BIRTHDAY CELEBRATION
n Wednesday (October 1), the Music Academy shed its usual Margazhi ambience. Men clad in white veshti and shirts, and women in Kanchivarams alighted from private buses that arrived from several parts of Tamil Nadu.
All vehicles, though, had a singular photo on the windshield: a black and white portrait of Sivaji Ganesan.
It was the 86th birthday of the Nadigar Thilagam.
Fans of all ages thronged the auditorium to celebrate, with stars like Y Gee Mahendra, Mohan Raman, Chithra Lakshmanan, and Santhanam arriving in time too.
While the hall was filling fast, a large group of fans waited outside to receive Sivaji Ganesan’s family. Some held placards featuring a picture of Sivaji Ganesan. Some chanted slogans hailing the star. And, when actor Prabhu’s Audi arrived, the crowd went berserk. Young men tried prostrating at Prabhu’s feet. The older lot held Prabhu’s hands and ushered him into the packed auditorium. As we tried finding our way to the hall, we overheard an ecstatic fan saying, “Prabhu marave illa. Appa pola!”
After hugging his father’s fans, Prabhu went on-stage right away, where his elder brother Ramkumar awaited him.
*****
It was one of those well-arranged events.
The curtains slid smoothly, quite dramatically to the sides.
And revealed with folded hands, were Central Minister Pon. Radhakrishnan, Ramkumar, Prabhu, dancer Padma Subrahmanyam, singer Jamuna Rani, yesteryear actors VS Raghavan and CR Parthiban. When they greeted the audience, the auditorium rang with applause for several minutes.
Fans chanted the name of their beloved star. “Nadigar Thilgam vaazhga!”
*****
When the cheers died down, Ramkumar announced that the Sivaji Ganesan Memorial Foundation would honour the artistes seated on-stage. And without much ado, an AV that explained their individual achievements was played, along with a clip from the movies in which they starred with Sivaji Ganesan.
During VS Raghavan’s turn, quite fittingly, a popular scene (from 9:17) from Vasantha Maligai, in which the Man Friday wishes Sivaji Ganesan on his birthday was featured. Paavaiyin Mugathai Paarthaar Oruvar from Pasamalar, a song rendered by Jamuna Rani, was played. And the iconic scene from Veerapandiya Kattabomman, where CR Parthiban plays Jackson Durai was screened to whistles and deafening applause.
Fans struggled to contain their excitement and often interrupted the host’s speech to add more trivia about their idol. The atmosphere grew more electric when Padma Subrahmanyam, Jamuna Rani, VS Raghavan and CR Parthiban were given their certificates and cash award of Rs 50,000. The onlookers were even more pleased when Vikram Prabhu and Dushyanth Ramkumar brought the garlands and certificates to their fathers whenever an artiste was honoured. Rest of the time, the young actors stood behind the screen, watching the event with a bright smile on their faces, ready to follow their fathers’ instructions.
*****
on Radhakrishnan made an interesting observation; as to how a Sivaji Ganesan film would be used to describe emotion. “When I become emotional, my family used to say, “periya pasamalar Sivaji ivaru.” His movies have become a part of our lives, quite organically. Those days, police officers wanted to be like SP Choudhry of Thanga Pathakkam, lawyers wanted to be like Rajinikanth of Gauravam…”
Adding that he admired Sivaji Ganesan as a great villain and drag-queen too, Radhakrishnan said, “He couldn’t succeed in politics. Thiraila nadikka therinjavarukku, nijathula nadikka therila!”
*****
The actor’s birthday is celebrated by the family every year. Radhakrishnan also declared that the Tamil industry should come forward to celebrate Sivaji Ganesan’s birthday. “To honour Nadigar Thilagam, an award at a national level must be instituted in his name. Avar thaan indha thiraiulgathukku mudhalvar.”
When the curtains were drawn, Prabhu and Vikram zoomed away in their cars, as fans raced the vehicles to wave at the stars one last time.
Muruganandham, a teacher and an ardent fan, who has come all the way from Madurai and who has been attending the celebration since 2002 said, “When we sit with Sivaji’s family, when we listen to the speeches of people who have worked with him, we are reassured that he hasn’t left us yet. And we will forever be in touch with his family, for they know how much we meant to the Nadigar Thilagam.”
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Video of the function covering the speeches of Shri Prabhu, Shri Ramkumar and Shri Pon.Radhakrishnan, Hon'ble Union Minister of State (video in that order)
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Reproduced from Tamil Cine Talk website:
Courtesy: http://www.tamilcinetalk.com/central...hday-function/“நடிகர் சங்கம் சிவாஜியின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்..”-அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்..!"
[img]http://www.tamilcinetalk.com/wp-content/uploads/2014/10/375A8579.jpgp/img]
நடிகர் திலகம் சிவாஜியின் 86-வது பிறந்த நாளை வழக்கம்போல சிவாஜியின் குடும்பத்தினர் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.
அவர்களது குடும்பத்து மாப்பிள்ளையான ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் ஜெயிலில் இருப்பதால் கொஞ்சம் உற்சாகம் குறைந்த நிலையில் இருந்தனர் சிவாஜியின் குடும்பத்தினர்.
ஆனாலும் நிகழ்ச்சிகளில் குறைவில்லை. சிவாஜியின் பிள்ளைகள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் வேன்களில் வந்து குவிந்துவிட்டனர். இனி வரும் காலங்களில் காமராஜர் அரங்கத்தில் இந்த விழாவை நடத்தினால் நல்லது. இடம் தாங்கவில்லை..
வருடாவருடம் சினிமாவில் சாதனை படைத்தவர்களுக்கு சிவாஜி விருதினை வழங்குகிறார்கள் சிவாஜியின் குடும்பத்தினர். இந்த விருது 50000 ரூபாய் பரிசுத் தொகை கொண்டது.
இந்த வருடம் பாடகி ஜமுனா ராணி, நாட்டிய பேரொளி பத்மா சுப்பிரமணியம், பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த நடிகர் சி.ஆர்.பார்த்திபன் ஆகியோர் சிவாஜி விருதினை பெற்றார்கள்.
இந்த விருதுகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கி கெளரவித்தார்.
பின்பு அவர் பேசும்போது, “சிவாஜி ஒரு பல்கலைகழகம்.. அவரிடம் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக இன்றைய நடிகர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். கல்விக்கு ‘சரஸ்வதி பூஜை’ நடத்துவதைப்போல நடிப்புக்கென்று ஒரு நாளை ஒதுக்கி அன்றைக்கு ‘சிவாஜி பூஜை’ நடத்த வேண்டும்.
சிவபெருமான், முருகன், பாரதத்தாய் போன்ற கடவுள்களையும், திருவருட்செல்வர் போன்ற ஆன்மீக குருக்களையும், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளையும் நமது தலைமுறையினருக்கு அடையாளம் காட்டியவர் நமது நடிகர் திலகம்தான்..
அழுகை, சிரிப்பு, ஆடல், பாடல் என எல்லாவற்றையும் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டோம். ஒரு வழக்கறிஞர், போலீஸ் அதிகாரி, நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நடித்துக் காட்டியிருக்கிறார்.
சினிமாவில் ஜெயித்த அவரால் அரசியலில் ஜெயிக்க முடியாமல் போனதற்குக் காரணம் அவருக்கு நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியவில்லை. ஆனாலும் தமிழ் சினிமாவின் நிரந்தர முதல்வர் அவர்தான். இதில் சந்தேகமில்லை.
இந்த கலைத்துறை சிவாஜிக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பது என் ஆதங்கம். அவரது பெயரில் மிகப் பெரிய விருதுகள் வழங்கப்பட வேண்டும். சிவாஜி குடும்பம் மட்டுமே அவரது பிறந்த நாளை கொண்டாடினால் போதாது. நடிகர் சங்கம் ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டும். அதுதான் அவர்கள் சிவாஜிக்கு செய்யும் பெரிய மரியாதையாக இருக்கும். அடுத்த ஆண்டு முதலே சிவாஜியின் பிறந்த நாளை நடிகர் சங்கம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.
இதை அப்படியே நடிகர் சங்கம் பக்கம் போனீங்கன்னா அங்க இருக்குறவங்ககிட்ட சொல்லிருங்க ஐயா.. அப்பவாச்சும் கேப்பாங்களான்னு பார்க்கலாம்..?
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Today's tamil.the Hindu article by சினிமாப் பித்தன்
அரிமாவின் அரியாசனம்
ரஜினி ரஜினி தான், கமல் கமல் தான் ஆனால் இவ்விருவர்களின் விதை நம் நடிகர் திலகமே!
‘இதனினும் ஒரு மரியாதை எந்த கலைஞனின் இறுதி படைப்பிற்கு கிடைத்திருக்காது’. இவ்வாறு தான் இவ்வருடத்தில் அக்கினேனி நாகேஸ்வரராவ் நடித்த ‘மனம்’ திரைப்படம் ஆந்திரா முழுதும் பேசப்பட்டது.
நாகர்ஜுனா, அமலா, நாக சைதன்யா, அகில் இப்படி மகன், மருமகள், பேரன்கள் என நாகேஷ்வராவ்வின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து நடித்த இப்படம் ‘நாகேஷ்வரராவ்வின்’ கலைப்பயணத்தை புன்னகையுடன் வழியனுப்பி வைத்தது. படம் அற்புதமான படம் தான் இதனினும் அறிய முடிவு எந்த ஒரு கலைஞரின் கலைப்பயணத்திற்கும் கிடைத்திடாது என்று கேட்ட ஒரு வாசகம் தான் நம் நடிகர் திலகத்தின் இறுதிப்பயணங்களை கண்முன் நிறுத்தியது.
தமிழ் திரையுலகமே சிலாகித்த ஒரு நடிகர், என்றும் நடப்பில் சிம்மமாய் விளங்குபவர் நம் நடிகர் திலகம். அள்ளிஅள்ளி நடிப்பு பசியை பலருக்கும் ஊட்டிய இக்கர்ணன் நடிப்பிற்கு இலக்கணம் அமைத்த காலம் மறுத்தற்குரியதல்ல. உங்களுக்கு எப்படி சார் இவ்வளவு ஸ்டைல் வந்தது என்று கேட்டால் ‘எல்லாம் சிவாஜி சார் கிட்டேந்து கத்துகிட்டது தான் அவர் நடிச்ச புதிய பறவை, ஊட்டி வரை உறவு ஸ்டைல்லாம் தான் என்னை ஆட்பறித்தது’- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ‘நாங்கலாம் பராசக்தி வசனம் பேசி கோடம்பாக்கத்துக்கு வந்தவங்க’- உலக நாயகன் கமல்ஹாசன்.
16 வயதினிலே சப்பாணி (கமல்) வசனம் பேசி சினிமாவிற்கு வர ஆசைப்பட்டோம், அண்ணாமலையில் ரஜினி சவால் விடும் ‘அஷோக்!!’ வசனத்தை பேசி சினிமாவிற்கு வர ஆசைப்பட்டோம் என்று தற்கால நடிகர்கள் கூறுகின்றனர். உண்மையில் பார்த்தால் நம் சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் சிவாஜி எனும் ஆலமரத்தின் விழுதுகள் தானே! இன்றைய வட்டார மொழியில் கூறினால் மாஸ் அண்ட் கிளாஸ் இவ்விரண்டின் சங்கமம் தான் சிவாஜி. ஒவ்வொரு மனிதனும் தன் பயணத்தின் முடிவில் அடுத்து வருபவர்களுக்கென எதையாவது விட்டுச்செல்வது அவசியம். அதுவும் கலைஞர்க்கு வித்தை தானம் செய்வது கடமை. அப்படி இருக்கையில் நம் நடிகர் திலகம் என் கடமை அனைத்தையும் முடித்து விட்டேன் இனி நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள், உங்களால் தான் முடியும் என்று ரஜினி, கமலுக்கு பெருமிதத்துடன் தம் சிம்மாசனத்தை அளித்து திரைப்பயணத்தை முடித்துக் கொண்டது போன்று தான் இப்போது தோன்றுகிறது.
படையப்பா, தேவர் மகன் பார்க்கையில்.உச்சத்தில் ஏறி உரியடிக்கும் சூப்பர் ஸ்டார் அதை அப்படியே ஓரமாக நின்று அன்னார்ந்து ரசித்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம். கன்னத்தை அன்போடு தடவி ‘தலையை லேசாக குனித்தபடி அது நீ இந்த ஸ்டைல்லா அப்படி ஒரு சல்யுட் போடுவியே! அப்படி போடு பார்க்கலாம்’ என்று சிவாஜி கேட்க ‘உங்க முன்னாடி எப்படிப்பா..’ என்று ரஜினி தயங்க ‘அட போடு டான்னு சொல்றேன்’ என்று கட்டளையிட ‘நெற்றி முன் தலைமுடி விழ, விரல்கள் கன்னத்தை தொடும் படி ஸ்டைல்லாக ஒரு சல்யூட்டினை நம் சூப்பர் ஸ்டார் அடிக்க’, அட யாரு மகன் இவன் என்ற இறுமாப்புடன், மீசையை மடக்கி சிவாஜி நடந்து செல்லும் காட்சி; ‘எனக்கு எதுக்கப்பா சொத்து, எதுக்கு சொத்து? எனக்கிருக்கிற ஒரே சொத்து இந்த படையப்பன் தான் இனிமே அவன் பார்த்துப்பான்’ என்று சிவாஜி கூறும் வசனங்களின் குறியீடு இப்போது தான் புரிகிறது.
‘நீ முன்னாடி போப்பா, இனிமே நாங்க எல்லாரும் உனக்கு பின்னாடி தான்’ என்று சிவாஜி பேச ‘என்னிக்குமே எங்க எல்லாருக்கும் முன்னோடி நீங்க தானப்பா’ என்று ரஜினி பேசும் வசனம் எத்தனை சிறப்பு. கலைக்காக வாழ்ந்த கலைஞனுக்கு இதைவிட மரியாதை செலுத்தும் அழகிய வசனம் வேறொன்று அமையப் பெற்றிருக்குமா?
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்த அற்புதமான காட்சி ‘வீட்டிற்குள் மழை பெய்து கொண்டிருக்க அறக்கபறக்க அவசர அவசரமாக நடந்து வரும் கமல்ஹாசன். ஐய்யா என்னால இந்த காட்டு மிராண்டி கூட்டத்தோடு இருக்க முடியாது என்று கூற ‘இந்த காட்டுமிராண்டி கூட்டத்துல நானும் ஒருத்தான்ப்பு. நாம என்னிக்காவது ஒரு நாள் சாகதான் போறோம் ஆனா நம்ம சாவு அடுத்தவனுக்கு பயனுள்ளதா இருக்கணும். விதை விதைச்ச உடனே பழம் வரும்ன்னு எதிர்ப்பார்க்கலாமோ? இன்னைக்கு நீ பழம் திண்ப நாளைக்கு உன் மகன், அதுக்கு அப்புறம் அவன் மகன், ஆனா விதை நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா? கடமை. நான் என் கடமையா செஞ்சுட்டேன் நீ உன் கடமையை செய் என்று சிவாஜி கூற. ‘ஐயா நான் இந்த ஊருக்கு எதாவது நல்லது செய்வேன் ஐயா என்ன நம்புங்க’.- கமல். ‘உங்கள தான நம்பனும் இந்த வீட்டுல வேற யார் இருக்கா நம்பறதுக்கு’ என்று கண்கள் கலங்க சிவாஜி பேசும் வசனங்கள் என் கலைப் பயணம் முடியப் போகிறது, என் கடமையை உங்களுக்கு தாரை வார்த்துவிட்டேன் இனிமேல் நீங்கள் தான் நான் சுவாசித்த இந்த சினிமாவை பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று கண்ணீர் மல்க கூறுவதை போலத் தான் இப்போது தோன்றுகிறது.
வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டையுடன், முறுக்கிய மீசையுடன் ஊர்சனம் முன் சிவாஜி இருக்கையில் கமல் அமர்கின்ற காட்சி, படையப்பா’வில் சிவாஜி முதற்காட்சியில் அமர்ந்த சிகப்பு இருக்கையில் இடைவெளிக்கு பிறகு ரஜினி அமர்கின்ற காட்சி யதார்த்தமாக அமைந்த காலத்தின் கட்டாயங்கள் என்று கூற முடியுமா?
இதனினும் சிறப்பான முடிவுகள் வேறு எந்த கலைஞனின் கடைசி படத்திலாவது அமைந்திருக்குமா என்று தெரியவில்லை. என் கடமையை நான் முடிந்த வரை செய்துவிட்டேன் இனிமேல் நீங்கள் தான் தமிழ் திரையுலகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை உணர்த்தியபடியே நம் நடிகர் திலகத்தின் கலைப்பயணம் முடிந்திருக்கிறது. நடிப்பிற்காக வாழ்ந்தவரின் பயணத்திற்கு இதனினும் அழகிய முற்றுப்புள்ளி கிடைக்குமா என்பதும் சிவாஜி போல் ஒரு நடிகர் இனிமேல் கிடைப்பாரா? என்பதும் கேள்விக்குறியான் விஷயங்கள் தான்.
ரஜினி ரஜினி தான், கமல் கமல் தான் ஆனால் இவ்விருவர்களின் விதை நம் நடிகர் திலகமே!
Congratulations Mr. Ragavendar sir. For the NT award.
to attend this function contact Kurinji Balaji at 9444031360
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks