-
29th September 2014, 04:33 PM
#1811
Junior Member
Diamond Hubber
வாழ்க்கை என்பது எதிர்பாராத கணங்களினால் நிறைந்தது. உலகத்திலேயே ஆகச் சிறிய சிறுகதையை எழுதியவர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே. அந்தச் சின்னஞ்சிறு கதை உச்சத்தை எட்டியது அதனுடைய எதிர்பாராத முடிவினால். ஆறே ஆறு வார்த்தைகள். ‘விற்பனைக்கு. குழந்தையின் சப்பாத்து. புத்தம் புதிது. அணியப்படவேயில்லை.’
சிவாஜியும் பத்மினியும் நடித்த ’எதிர்பாராதது’ திரைப்படம் 1950-களில் வெளிவந்தது. படத்தில் சிவாஜியும் பத்மினியும் காதலர்கள். நாகையா இரண்டாம் தாரமாக பத்மினியை மணந்துகொள்கிறார். சிவாஜி நாகையாவின் மகன் என்பதால், இப்போது சிவாஜிக்கு பத்மினி சிற்றன்னை முறை ஆகிவிடுகிறார். நாகையா இறந்துபோக… ஒருநாள் சிவாஜி பத்மினியைத் தொடுகிறார். பத்மினி உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியை அடித்த அடியில் அவருடைய கன்னம் வீங்கி அவர் மூன்று நாட்களாகப் படப்பிடிப்புக்கு வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியைப் பார்க்க பத்மினி அவர் வீட்டுக்குப் போய் சமாதானம் செய்து அவருக்குப் புத்தம்புது ஃபியட் கார் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கிறார். அதுதான் சிவாஜியின் முதல் கார். எதிர்பாராத அடி; எதிர்பாராத பரிசு.
courtesy the hindu tamil
Last edited by Yukesh Babu; 29th September 2014 at 05:24 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
29th September 2014 04:33 PM
# ADS
Circuit advertisement
-
29th September 2014, 05:09 PM
#1812
Junior Member
Seasoned Hubber
Vasantha Maaligai pics are refreshing
Thank you Gopal Sir
Also Thanks for stylish pic of NT Yukesh babu sir
-
29th September 2014, 05:17 PM
#1813
Junior Member
Seasoned Hubber
It has /is been a trend to use the name of old classic for the new movies , Sathileelavathi, Billa, Naan Mahaan Alla, Kazhuku, Raja Rani, Raja, Ambikapathy , Padikaathavan
Nadigar Thilagam & MGR movies are no exceptions
சவாலே சமாளி title is kept for a movie
It might be remembered Saraswathi Sabatham title was used which was withdrawn later by following objections raised by NT fans & NT Peravai
Last edited by ragulram11; 29th September 2014 at 05:21 PM.
-
29th September 2014, 05:19 PM
#1814
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
RavikiranSurya
திரு kc சேகர் சார் அவர்களுக்கு
ஆனால் தங்களுடைய பதிலில் ஒரு மறைமுக கோபம் தெரிகிறது.
எனக்கு தெரிந்த வரையில் நடிகர் திலகம் திரைப்படம் வெளியிடும் அனைவரும் வியாபாரிகள் அல்ல !
ஓர் இருவர் இருக்கலாம்..திரு சொக்கலிங்கம் போன்றவர்கள் ..இதை தொழிலாக செய்பவர்கள். அவர்களுக்கு வியாபாரி என்ற பட்டம் பொருந்தும் என்பதை நீங்கள் அல்ல நான் அல்ல அனைவருமே அறிவார்கள்.
அதே சமயத்தில் நகரில் நடிகர் திலகம் அவர்கள் படங்கள் வரவிடாமல் பல சதிகள் திரை அரங்குகளில் நடந்தேறியபோது, அதை முறியடித்து, மறுத்த திரை அரங்குகளில் நடிகர் திலகம் திரைப்படங்களை திரை இட செய்து இப்போது தமிழகமெங்கும் அவர் படங்கள் காண்பிக்க படுகிறது என்றால் ...மக்களால் தங்களுடைய வாழ்வில் பயன்படும் அளவிற்கு கருத்துக்களை கொண்ட நடிகர் திலகம் படங்களை சமீப காலமாக பார்க்க முடிகிறது என்றால் ...இதை செய்பவர்கள் பொருத்தவரை அதுவும் ஒரு சேவை தான் சார் !
அந்த சமயத்தில் அதே ரசிகர்கள், சமூக நல பேரவை அப்போது எங்கே சென்றது ? நடிகர் திலகம் படங்கள் திரையிட என்ன செய்தார்கள் என்று வினா எழுப்பினால் அது சரியா ? முறையா ? எழுப்பதான் முடியுமா ?
ஒரு brand / society name இல்லாமல் கூட, விளம்பரம் செய்யாமல் கூட சேவைகள் செய்யலாம் என்ற கருத்து உள்ளவன் நான். இவ்வளவு ஏன்...நடிகர் திலகம் அவர்கள் கூட பல நல்ல காரியங்களை வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் என்பது போல செய்துள்ளார். அவருக்கு advertisement தேவை இல்லை மற்றும் அவருக்கு அப்படி செய்வதில் எந்த உள்நோக்கமும் இல்லை. There is no hidden agenda ....in whatever good deeds he did !!!
விளம்பரம் செய்யாமல் கூட பல நல்ல காரியங்களை செய்யலாம். அப்படி செய்யும் பல ரசிகர்களை எனக்கும் பரிச்சயம் உண்டு...எதற்கு சொல்கிறேன் என்றால்...நமக்கு தெரியாத விஷயத்தை பற்றி ஆணித்தரமாக நாம் உரைத்தல் கூடாது ! நம்முடைய எண்ணங்களை மற்றவர் மேல் திணிக்கவும் கூடாது !
அனைவரும் அறியாதது என்னவென்றால், பேரவை மற்ற நடிகர் திலக குழுக்களுடன் கலந்தாலோசனை செய்து நல்ல காரியம் செய்யும்போது எந்த banner உம் ...அதாவது "சிவாஜி சமூக நல பேரவை" ...அல்லது " இதயராஜ சிவாஜி மன்றம் " இப்படி எந்த ப்ராண்டிங்கும் இல்லாமல் " நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் பொது நல வைபோகம் " என்று இதை செய்யலாம் என்று எப்போதாவது கலந்தாலோசனைக்கு அழைத்ததுண்டா ? அல்லது மற்ற குழுக்கள் தான் தங்களிடம் அணுகினார்களா ? இரெண்டும் இல்லை ...!
Regards
rks
டியர் R .K .S சார்,
நடிகர்திலகம் செய்த, கொடுத்த நன்கொடைகளை வெளியில் தெரியாமல் செய்ததால்தான் இன்றுவரை நாம் அதனை காட்டு கத்தலாகக் கத்தி மற்றவர்களுக்குத் தெரியவைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நடிகர்திலகத்தின் புகழை, சேவைகள் பல செய்து, தனி மனிதனாக, யாருக்கும் தெரியாமல், ரகசியமாகப் பரப்புகிறேன் என்று சொல்பவதேல்லாம் இந்தக் காலத்தில் எடுபடாது. விநியோகஸ்தர்கள் எல்லாம் வியாபாரிகள் அல்ல என்றால், நஷ்டம் அடைகிறார்களா? லாபம் அடைகிறார்கள் என்றால், அவர்களே நடிகர்திலகத்தின் புகழ் காக்க ஏதாவது நிகழ்ச்சிகள் செய்யவேண்டியதுதானே? அவர்களும், ரகசியமாக நற்பணிகள் செய்கிறார்களா?
எனக்கு தங்களுடன் அறிமுகமும் இல்லை, பழக்கமும் இல்லை. தாங்கள் சென்னையில் இருப்பவர் என்றால், பிறந்தநாள், நினைவுநாளுக்கு, நடிகர்திலகத்தின் சிலைக்குக் கூட மரியாதை செலுத்தலாமே? அதையும் நான் மானசீகமாகவே செய்துகொள்வேன் என்று கூறுவீர்கள் என்று நினைக்கிறேன். Atleast இந்த நிலையிலாவது தங்களுடைய பின்னணியைச் சொன்னால், தங்களுடைய பணியைப் போற்றுவதற்கு எதுவாக இருக்கும்.
பரம ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு நடிகர்திலகத்தின் திரைப்படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்கள் பெரும்பாலும், லாபம் சம்பாதித்த பிறகு, மாற்று முகாம் படங்களை வெளியிடுவதை நாம் பார்க்கிறோம் (சொக்கலிங்கம் மட்டுமல்ல)
இன்று, பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் என்று பல தலைவர்களுக்கு புகழ் சேர்க்க, பல்வேறு பெயரில் அமைப்புகள், இயக்கங்கள் இருக்கின்றன. எனவே தனித்தனியாக அமைப்புகள் இருந்து தலைவன் புகழ் பாடுவது ஒன்றும் குற்றமல்ல. கர்ணன் திரைப்பட வெற்றிக்குப் பிறகுதான் பல தியேட்டர்கள் பழைய, குறிப்பாக நடிகர்திலகத்தின் திரைப்படங்களை வெளியிட முன்வந்தார்கள் என்பதுதான் உண்மை. இதற்காக எந்தப் பெரிய போராட்டங்களும் நடைபெறவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. தினந்தோறும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில், புத்தம் புதிய DVD க்களில், நடிகர்திலகத்தின் திரைப்படங்களைக் கண்டுகளித்துக்கொண்டிருக்கும், இன்றைய தலைமுறையினர், நவீன திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறார்களே தவிர மகாலட்சுமி திரையரங்கு போன்றவற்றில் அல்ல.
நான் எல்லாவற்றிற்கும் பதிலுக்கு பதில் சொல்பவன் அல்ல. இருந்தாலும் என்னைச் சார்ந்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்து வந்துள்ளேன். இனியும் அப்படியே.
நன்றி.
-
29th September 2014, 05:48 PM
#1815
Junior Member
Seasoned Hubber
எனக்கு பிடித்த பாடல் :
ஒரு தரம் ஒரே தரம். இது சுமதி என் சுந்தரியில் வரும் அற்புத பாடல். இந்த பாடலில் நடிகர் திலகம் ஒரு அழகு மன்மதன் ஆக இருப்பார். டுஎட்யில் கலைசெல்விய்ம் ஒரு கலக்கு கலக்கி இருப்பார். இதில் உள்ள
சிறப்பு அம்சம் என்னவென்றால் வண்ண சிலை எதிர் வந்தாலோ என்ற
வரிகளில் நடிகர் திலகத்தின் முக பாவனை அப்பப்பா வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. ஒரு வெட்டு வெட்டி ஒரு கண் அசைத்து திரும்பவும் கன்னத்தில் ஒரு பாவனை காட்டி இவன் தான்யா நடிகன்.
அதே பாடலில் ஒரு த்ரோவிங் போடுவது போன்று கட்டி ஒரு அசத்து
அசதிறுப்பர்.
இந்த பாடலை பார்ர்க்கும் போது கூர்ந்து பார்க்கவும்
Regards
-
29th September 2014, 06:20 PM
#1816
Junior Member
Veteran Hubber
Tributes to NT : on the occasion of his ensuing B'day!
A Man's look gets enhanced by the way he chooses to dress up besides his facial make-up! NT being a connoisseur of dress combinations, it had always been a visual feast to our eyes to see him in various attire irrespective of his age based get ups!! In my personal choice I prefer to enlist the top 10 best looking get-ups of our NT (in social themes only)!! Of course,opinions always differ from individuals perspectives and perseverance!!! (historic character get ups will appear in another exclusive presentation)
1. Sorkkam dreamsong 'Ponmagal Vandhal......' : he looks so handsome in that blue coat-suit ably aided by the scence setup, color and the swift dance by Vijayalalitha in an eye-catching attire!
2. Pudhiya Paravai : Paartha Gyapagam Illaiyo...song sequence : The typical blue based James Bond Tuxedo fits like a hand in glove to NT especially the way he is seated and shows the peak style of cigarette smoking and taking the glass in his hands. ( Of course, this scene is just a fabulous extension of the immortal intro scene of James Bond in DrNo!)
Last edited by sivajisenthil; 30th September 2014 at 07:26 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th September 2014, 06:36 PM
#1817
Junior Member
Veteran Hubber
3. Raajaa : the song sequence 'Kalyaana Ponnu Kadaipakkam Ponaa... :the most stylish outfit for our NT and his dance steps and mannerisms.... you cannot take out your eyes!
4. Enga Maama : Sorkkam Pakkaththil song sequence : The dress combination and his stylish dance steps always etch in our memory
5. Vasantha Maaligai: Yen...Yen song sequence : A fittingly rich costume true to the characterization of the role by NT as a misguded playboyish rich lad in his B'day wet party celebrations with chic young ladies!
Last edited by sivajisenthil; 29th September 2014 at 06:39 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th September 2014, 06:47 PM
#1818
Junior Member
Veteran Hubber
6. Ooty Varai Uravu : Poo maalayil oar malligai song sequence : very little make up or no make up with a simple T-shirt enjoy the handsome NT for his stylish movements!
7. Gowravam : Adhisaya Ulagam song in an old get up but see how that dress adds to the legacy of NT
8. Deiva Magan : the song sequence with young ladies to tease the heroine! Neat dress up!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th September 2014, 06:54 PM
#1819
Junior Member
Veteran Hubber
9. Sumathi En Sundhari : Pottu vaiththa mugamo... song sequence! His check shirt and his fantastic modification of lip movement to the new singer SPB's voice!
10. Paarthaal Pasi Theerum : Ullam enbadhu aamai! See the perfect mannerism of limping his legs in a coat-suit get up apt for a retired (due only to injury)military man!!
Last edited by sivajisenthil; 29th September 2014 at 09:54 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th September 2014, 08:09 PM
#1820
Junior Member
Veteran Hubber
Originally Posted by
kcshekar
டியர் r .k .s சார்,
நடிகர்திலகம் செய்த, கொடுத்த நன்கொடைகளை வெளியில் தெரியாமல் செய்ததால்தான் இன்றுவரை நாம் அதனை காட்டு கத்தலாகக் கத்தி மற்றவர்களுக்குத் தெரியவைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நடிகர்திலகத்தின் புகழை, சேவைகள் பல செய்து, தனி மனிதனாக, யாருக்கும் தெரியாமல், ரகசியமாகப் பரப்புகிறேன் என்று சொல்பவதேல்லாம் இந்தக் காலத்தில் எடுபடாது. விநியோகஸ்தர்கள் எல்லாம் வியாபாரிகள் அல்ல என்றால், நஷ்டம் அடைகிறார்களா? லாபம் அடைகிறார்கள் என்றால், அவர்களே நடிகர்திலகத்தின் புகழ் காக்க ஏதாவது நிகழ்ச்சிகள் செய்யவேண்டியதுதானே? அவர்களும், ரகசியமாக நற்பணிகள் செய்கிறார்களா?
எனக்கு தங்களுடன் அறிமுகமும் இல்லை, பழக்கமும் இல்லை. தாங்கள் சென்னையில் இருப்பவர் என்றால், பிறந்தநாள், நினைவுநாளுக்கு, நடிகர்திலகத்தின் சிலைக்குக் கூட மரியாதை செலுத்தலாமே? அதையும் நான் மானசீகமாகவே செய்துகொள்வேன் என்று கூறுவீர்கள் என்று நினைக்கிறேன். Atleast இந்த நிலையிலாவது தங்களுடைய பின்னணியைச் சொன்னால், தங்களுடைய பணியைப் போற்றுவதற்கு எதுவாக இருக்கும்.
பரம ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு நடிகர்திலகத்தின் திரைப்படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்கள் பெரும்பாலும், லாபம் சம்பாதித்த பிறகு, மாற்று முகாம் படங்களை வெளியிடுவதை நாம் பார்க்கிறோம் (சொக்கலிங்கம் மட்டுமல்ல)
இன்று, பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் என்று பல தலைவர்களுக்கு புகழ் சேர்க்க, பல்வேறு பெயரில் அமைப்புகள், இயக்கங்கள் இருக்கின்றன. எனவே தனித்தனியாக அமைப்புகள் இருந்து தலைவன் புகழ் பாடுவது ஒன்றும் குற்றமல்ல. கர்ணன் திரைப்பட வெற்றிக்குப் பிறகுதான் பல தியேட்டர்கள் பழைய, குறிப்பாக நடிகர்திலகத்தின் திரைப்படங்களை வெளியிட முன்வந்தார்கள் என்பதுதான் உண்மை. இதற்காக எந்தப் பெரிய போராட்டங்களும் நடைபெறவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. தினந்தோறும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில், புத்தம் புதிய dvd க்களில், நடிகர்திலகத்தின் திரைப்படங்களைக் கண்டுகளித்துக்கொண்டிருக்கும், இன்றைய தலைமுறையினர், நவீன திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறார்களே தவிர மகாலட்சுமி திரையரங்கு போன்றவற்றில் அல்ல.
நான் எல்லாவற்றிற்கும் பதிலுக்கு பதில் சொல்பவன் அல்ல. இருந்தாலும் என்னைச் சார்ந்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்து வந்துள்ளேன். இனியும் அப்படியே.
நன்றி.
திரு சேகர் அவர்களுக்கு
உங்களுடன் நான் ஒரு சொற்போரில் ஈடுபடுவதற்கு இங்கு பதிவை பதியவில்லை. உங்களுக்கு நான் அனுப்பிய கோரிக்கைக்கு உங்கள் பதில் மையத்தில் பகிரங்கமாக நீங்கள் கேள்வியுடன் பதிவிட்டதால் தான் நான் இங்கு பதில் பதிவு செய்தேன்.
இந்த காலத்தில் எது எடுபடும் எது எடுபடாது என்ற கேள்விக்கே முதற்க்கண் இங்கு இடமில்லை. ஒருவர் செய்யும் நல்ல காரியங்கள் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்வதாகும். நீங்கள் விளம்பரபடுத்தி செய்யும் விருப்பம் கொண்டவர் என்றால் அதே போல எல்லாவரும் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
ஒரு நல்ல காரியம் செய்ய என்னுடைய புகைப்படத்தை, பெயரை போட்டுகொண்டு செய்யவேண்டும் என்ற நிர்பந்தம், நான் செய்கிறேன், நான் தொடங்கிய இயக்கம் செய்கிறது என்ற எதிர்பார்ப்பு, எனக்கில்லை. அதே போல மற்றவர்களும் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கவும் இல்லை.
மற்றவர்கள் அதை எதிர்பார்த்தால் அது அவர்கள் தவறு. I dont need any publicity to do a good cause !
விநியோகஸ்தர்கள் எல்லாம் நஷ்டம் அடைவதில்லை என்று கூற ஏதாவது ஆதாரம் உள்ளதா ? அல்லது அவர்கள் திரைப்படங்களை ஓசியில், நன்கொடையில் வாங்குகிறார்கள், வாங்கி திரையிட்டு அந்த பணத்தில் நகரத்தில் அரை கிரௌண்ட் நிலம் வாங்கி போடுகிறார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்களா அப்படியென்றால் ?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய பிறந்த நாள், நினைவு நாள், திருமணநாள் இதை முன்னிட்டு திரைப்படம் தங்கள் சொந்த சம்பளத்தில் வாங்கி திரையிடும் ரசிகர்கள் என்னென்ன நன்கொடைகள் பெயர் போடாமல், விளம்பரம் செய்யாமல் இதயவேந்தன் நற்பணி மன்றத்திர்ற்கு நன்கொடை செய்துள்ளார்கள் என்று திரு.கேசவனிடம் கேட்டு நீங்கள் முதலில் தெரிந்துகொள்ளுங்கள் !
லாபம் சம்பாதித்து மாற்று முகாம் படங்களை யார் வெளியிடுகிறார்களோ அவர்கள் யார் என்று தெரியபடுத்துங்கள் தகுந்த ஆதாரங்களோடு. அதைவிடுத்து எல்லோரும் திரு வேலுமணி, பந்துலு, நாகராஜன் ஆகிவிடமாட்டார்கள் என்பதே உண்மை !
நடிகர் திலகம் படங்கள் எத்துனை சத்யம் வளாகத்தில் வந்துள்ளது சேகர் சார் ? கர்ணனுக்கு முன்பு ? இல்லை எத்துனை படங்கள் மகாலட்சுமி, பிராட்வே, கோவை delite , கோவை ராயல், மதுரை சென்ட்ரல், திருச்சி கெஇடீ, திருநெல்வேலி சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் கர்ணன் வருவதற்கு முன் வந்துள்ளது என்று பட்டியல் இடுங்கள் முடிந்தால் பார்க்கலாம்.
அல்லது மேற்கூறிய திரை அரங்குதான் நடிகர் திலகம் படங்களை மாதம் ஒருமுறை திரயிட்டுளதா?
திரை அரங்குகளில் என்ன அரசியல் நடக்கிறது, என்ன நடந்தது என்று உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் தெரியுமா ?
இருக்கையில் அமர்ந்து யார் வேண்டுமானாலும் அறிவுரை, சொற்பொழிவு நடத்தலாம். நானும் அதை செவ்வன செய்வேன்.
மகாலட்சுமி போன்ற திரையரங்கில் வருபவர்கள் ஆதிகால மனிதர்கள் மட்டும் அல்ல திரு சந்திரசேகர் அவர்களே...கணிசமான அளவில் இந்த கால இளைஞர்களும் தான் வருகிறார்கள். நீங்கள் மகாலச்மிக்கு வந்துதான் ஆகவேண்டும் என்று யாரும் உங்களை, மற்றவர்களை கட்டாயபடுத்தவில்லையே !
போராட்டம் என்று நான் கூறியது ...உப்பு சத்யக்ரகம் போன்ற போராட்டம் அல்ல. ...கஷ்டப்பட்டு என்பதன் பொருள் பட போராட்டம் என்பார்கள். அதனை எப்படி போராட்டம் அவசியம் இல்லை என்று நீங்கள் கூறலாம் ? எப்படி நீங்கள் அவசியம் இல்லை என்கிறீர்களோ அதே போல
ஒரு நல்ல காரியம் நடிகர் திலகம் பிறந்த, நினைவு மற்றும் மண நாளில் செய்திட போஸ்டர், அரசியல் தலைவர்கள் அதுவும் ஊழல் கட்சிகளின் இன்றைய அரசியல்வாதிகள் விழாவை தலைமை தாங்குவதும் அப்படி பார்த்தால் மிகவும் தேவையில்லாத தகுதியில்லாத ஒன்றே !
இதுமட்டுமல்லாது, அதில் தமது படத்தை, பெயரை போட்டுகொண்டு, அமைப்பின் ஆட்கள் பெயர்களை போடுவது தேவையில்லாத ஒன்று. இவ்வளவு பேசும்போது, செய்யும் நல்லகாரியத்துக்கு விளம்பரம் தேவையா அல்லது செய்பவர்களுக்கு விளம்பரம் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது ?
நான் சென்னையில் இருந்தவன் தான். இருக்கும் வரை சிலைக்கு மாலை அணிவித்தவன் தான். அன்னை இல்லத்திற்கு காலை 10 மணிக்கு சென்று மரியாதை செய்தவன் தான். நான் சென்னையில் இப்போது இல்லாததால் மதியம் அவருக்காக உணவு அருந்தாமல் விரதம் இருப்பவன் கூட...
இதை எல்லாம் நான் வீடியோ பதிவு செய்தோ போஸ்டர் அடித்தோ விளம்பரமா செய்ய முடியும் ? என்னை பொருத்தவரை எனக்கு விளம்பரம் தேவை இல்லை ! அவர் நினைவு நாளில் நான் செய்யும் நல்ல காரியங்கள் எனக்கு அந்த ஆன்மாவுக்கு தெரிந்தால் போதும்.
போஸ்டர் அடித்து என் பெயரை கொட்டை எழுத்தில் போட்டு இந்தகால போலி அரசியல்வாதி அழைத்து புப்ளிசிட்டி செய்யும் வழக்கம் தேயவில்லாத ஒன்று !
செய்யும் நல்லகாரியத்துக்கு விளம்பரம் தேவை என்றால் ..நடிகர் திலகம் பிறந்தநாளில் ...அவர் பிறந்த நாளை முன்னிட்டு ...இந்த இடத்தில் ...இந்த தேதியில் ...நலிவடைந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும்....உதவிகளுக்கு நன்கொடை - நடிகர் திலகம் ரசிகர்கள் மற்றும் மக்கள் நலம் பற்றி சிந்தனை உள்ள நல் உள்ளங்கள் என்று மட்டும் கொட்டை எழுத்தில் போஸ்டர் அடிக்கலாமே..?
அதை விடுத்து தன்னுடைய புகைப்படம் மற்றும் கொட்டை எழுத்தில் பெயர் எதற்கு அமைப்பை சேர்ந்தவர்கள் போட்டுகொள்கிறார்கள்?
காரணம், நான் செய்தேன், நான் செய்தேன் என்று விளம்பரம் தேடுவதற்கு தான்.
அரசியல் உள்நோக்கம் சிறிதும் இல்லை பொதுநலம் ஒன்றே கருத்தில் கொண்டு செய்யும் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு விளம்பரம் தேவையில்லை. நான் சொல்வதன் பொருள் இன்று உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது காரணம் என்ன என்று உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்...காலம் வரும்போது அது அனைவருக்கும் புரியும் !
ஆகவே ..வாய் புளித்ததோ ..மாங்காய் புளித்ததோ என்று தயவு செய்து எழுதாதீர்கள் ! சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறன். நினைப்பது தவறு என்றால் மன்னிக்கவும்...
Rks
Last edited by RavikiranSurya; 29th September 2014 at 08:35 PM.
Bookmarks