Page 302 of 400 FirstFirst ... 202252292300301302303304312352 ... LastLast
Results 3,011 to 3,020 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3011
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    This song sivaji manerisams copied by rajinikanth and one more song oonjalukku poo sudi song also rajini copied sivaji manerisms
    by Thiru. Yukesh Babu.
    One more "Pandora's Box" getting opened ?!

    Dear Yokesh Babu Sir. Thank you for your good intentions in projecting NT as a role model to Rajini or for that matter any other generations' actors. At the outset it is apparently true that Nadigar Thilagam Sivaji Ganesan, hailed as the 'Suymbulingam' of acting could shape up and refine his acting career by trial and error process without copying any other actor in this world be it his contemporaries like Marlon Brando or Charlton Heston...like that. However, NT had resorted to give life to his characterization by way of getting inspired by some people in real life whom he admired, like the Kaanchi Periyavar for his role in Thiruvarutchelvar, TVS Krishna (?) for his Gowravam Barister Rajinikanth role... like that. In Pudhiya Paravai too NT's Paarththa Gyaapagam illayo intro scene is an inspiration from Bond/Connery's intro DrNo tuxedo get-up and cigarette/drinks handling styles. ...Inspiration is little bit different from xeroxing!

    (RKS Sir had already posted in this thread some comparative photograph gallery corroborating NT's inspiration and character polishing approach)

    As far Tamil Cinema is concerned, NT has made such a terrible impact as the dictionary of acting for the successive generations of actors to follow his foot prints. That is why any actor when he performs in an exemplary way, it appears to our eyes that this actor tries to copy NT. Kamal Haassan or Rajini Kanth are no exceptions, even though they have reached their present day ultimatum by way of their hard work stemming as inspiration from NT's guidelines.

    What you feel may be correct as regards the initial years of Kamal and Rajini's attempts to establish their image in the minds of people. Kamal got inspired both by NT and GG while Rajini totally by NT, but as an inevitable starting trouble for them to anchor their roots in Tamil Cinema.But over years, both of them could come out of the shadows of NT and now they have their own originality to be emulated by their next generation, acting traits by Kamal in the NT pattern and style patents with punch dialogues by Rajini in the mould of sheer MGR pattern entertainment arena!

    Let us say, Rajini or Kamal had been impressed by NT's acting school of thought and inspired by his immortal acting presentations, rather than merely 'copying' NT!!! But Mu.Ka. Muthu an ardent follower of MGR at that time simply resorted to copying his icon's mannerisms!!!

    But Mu.Ka. Muthu, the then upcoming youngster star also has contributed some pleasing and energetic song sequences, though he failed to anchor his roots in the minds of movie goers!(Stars inspired by NTcould reach their top while a mere copying MGR youngster could not make it!)






    Dear Yukesh Babu sir, inspiration is the polished usage of words rather than copying, in my opinion!! Rajini's style base is derived as an inspiration from Uththamapuththiran's Yaaraadi Nee Mohini mannerisms of NT (and to some extent the dancing style movements of Ravichandran too! For cigarette handling style Rajini's inspiration was Shatrughan Sinha who only first introdured that style of spinning cigarette to reach lips!!) and his do-gooder image from MGR formula inspired by Errol Flynn's Robin Hood type roles!!For Kamal, needless to say as all NT movies are inspirational guides to him Legends always live and guide us even as generations are consistently changing.

    My humble request Yukesh Bab(y)u sir. Let us not hurt the feelings of our youner generation Rajini and Kamal fans as we already had some surges regarding such 'Pandora's Box opening' issues.
    Last edited by sivajisenthil; 24th November 2014 at 07:42 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3012
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தை சந்தித்த அனுபவம் :

    எனது கல்லூரி நாட்களில் சென்னையில் சிவாஜி மன்றம் நடத்திய பிரம்மாண்டமான மாநாடு நடந்தது. அந்த ஊர்வலத்தை மயிலை
    நவசக்தி விநாயகர் கோவில் அருகே நடிகர்திலகம் திரு குண்டு ராவ் அவர்களுடன் பார்வையிட்டு கொண்டு இருந்தார்.

    அந்த ஊர்வலம் மாநாடு நடந்த இடமான ராஜா அண்ணாமலைபுரம் அடைந்த போதும் அது துவங்கிய இடமான தீவு திடல் அருகே இன்னும் ரசிகர்கள் வந்து கொண்டு இருந்தார்கள்.

    நான் மைலாப்பூர் நவசக்தி விநாயகர் கோவிலருகே ஒரு ஓரத்தில் நின்று கொண்டு
    நடிகர்திலகத்தை கண்டு கிளம்பி சென்றேன்.

    சென்னை மாநகரம் அது போன்று ஒரு ஊர்வலத்தை இன்று வரை கண்டது இல்லை இனிமேலும் காண போவதும் இல்லை.


    Regards

  4. #3013
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Female singers who helped glorify NT's movies and his stardom!! :

    Part 4 : நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் மின்னும் பாடகியர் ரத்தினம் ! :: திரை கானங்களின் Sparrows and Parrots இசைக்குயில்கள் P. லீலா, ஜமுனாராணி மற்றும் M.S. ராஜேசுவரி


    இசைக்குயில்கள் P. லீலா, ஜமுனாராணி மற்றும் M.S. ராஜேசுவரி ஆகியோரும் குறிப்பிடத்தக்க பாடல்கள் பங்களிப்பினை நடிகர்திலகத்தின் சாதனைப் பாதையில்
    மலர்படுக்கைப் பூக்களாக சமர்ப்பித்து மணம் பெறச் செய்தவர்களே! (ராஜேசுவரியும் ஜமுனாராணியும் தங்கள் தனித்துவமிக்க 'மழலை' குரலாலும் புகழ் பெற்றவர்கள் !) நம் நன்றிகளுக்கும் வணக்கங்களுக்கும் உரியவர்களே

    1. P. லீலா :
    நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த காதல் காட்சியமைப்பினை நல்கிய இரும்புத்திரையில் வைஜயந்தியின் கரும்புக்குரல்...பி லீலா !



    நடிகர்திலகத்தின் இரட்டை வேட கல்வெட்டான உத்தமபுத்திரனில்.....குரலினிமையின் தேன்சிட்டு....பி லீலா !




    2. ஜமுனாராணி

    நடிகர்திலகத்தின் பாசமலரின் நறுமணம் நம் மனதை விட்டகலாத ஜமுனாராணியின் பரவசமான பாடல் !



    3. M.S. ராஜேசுவரி

    நடிகர்த்திலகப்புயலின் முதல் பிரவேசத்திலேயே அவரது முதல் நாயகி பண்டரிபாயின் தென்றல் குரல் ராஜேசுவரி !





    நாம் ரசிக்கும் சாதனைச் சீமானின் ரசனையை சிலாகித்த குமாரி கமலாவின் சாகச குரல் பனிக்குழைவு ராஜேசுவரி !



    தூக்குதூக்கியில் கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த ராஜேசுவரியின் கானம் !



    NT comes back for a thanks giving to KBS (கொடுமுடி கோகிலம் K.B. சுந்தராம்பாள் ) for her immortal contributions in Thiruvilayaadal to epitomize NT as Sivaperumaan, the original!
    Last edited by sivajisenthil; 23rd November 2014 at 12:56 PM.

  5. Thanks AREGU thanked for this post
    Likes kalnayak, Russellmai liked this post
  6. #3014
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    சிவாஜி செந்தில் சார்,

    நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் எஸ்.ஜானகி பங்களிப்பு நல்ல தொகுப்பு. இன்னுமொரு சூப்பர் ஹிட் பாடல், எம்.எஸ்.வி. இசையில் நெஞ்சிருக்கும் வரை படத்தில் இடம்பெற்ற

    நினைத்தால் போதும் பாடுவேன்
    அணைத்தால் கையில் ஆடுவேன்
    சலங்கை துள்ளும் ஓசையில்
    கலங்கும் கண்ணை மாற்றுவேன்

  7. Thanks eehaiupehazij thanked for this post
  8. #3015
    Junior Member Junior Hubber AREGU's Avatar
    Join Date
    Nov 2007
    Location
    TRICHY
    Posts
    19
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    நடிகர்திலகத்தை சந்தித்த அனுபவம் :
    தரிசித்த அனுபவம் என்று குறிப்பிட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்குமோ..?
    எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!

  9. #3016
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Female singers who helped glorify NT's movies and his stardom!! :

    Part 5 : நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் மின்னும் பாடகியர் ரத்தினம் ! :: கொடுமுடி கோகிலம் என்று அறியப்பட்ட வெண்கலக்குரல் K.B. சுந்தராம்பாள் !

    நடிகர்திலகத்தின் திருவிளையாடல் படத்தின் வெற்றிக்கு ஆணிவேரான பாடல்களை பங்களித்தவர் கந்தன் கருணை மற்றும் மகாகவி காளிதாஸ் படங்களிலிருந்தும் அவரது பங்களிப்பின் ஆழத்தை உணர முடியும். நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்அம்மையீர் !
    அவ்வையார் படத்திற்கு சாதனையாக உயரிய சம்பளத்தைப் பெற்றதோடல்லாமல் வரும் காலங்களிலும் திரையில் அவ்வை முத்திரையைப் பதித்த பெருமாட்டியின் என்றும் வாழும் பாடல்கள் இன்றும் இனியும் நம்நெஞ்சங்களை விட்டு நீங்காது


    திருவிளையாடலின் முத்திரைப் பாடல் பழம் நீயப்பா !



    ஞானப்பழத்தை பிழிந்து ....




    காலத்தில் அழியாத நடிகர்திலகத்திற்கு விடையளிக்கிறார் சுந்தராம்பாள்







    Courtesy Nostalgia on KBS who graced NT's movies :

    (FROM THE PAST K. B. Sundarambal, M. K. Radha, L. Narayana Rao, T. V. Kumudhini, M. S. Sundari Bai, Gemini Ganesan, ‘Baby’ Sachhu, Kushalakumari, K. Balaji,

    One of the classics the Indian movie mogul S. S. Vasan produced was Avvaiyar (1953). Only a fistful of folks are aware Vasan had this project on his mind even when he established the Gemini Studios way back in 1941...

    Vasan decided that the only actor who could portray the role of Avvaiyar with conviction would be the celebrated stage and film actor, Carnatic musician K. B. Sundarambal. It is interesting to note that Sundarambal more or less matched the image of what was in the public eye about the poet! This masterstroke of casting by Vasan helped him and the movie in great measure.) Ref : Wikipedia

    NT returns to honor his male playback singers Chidhambram Jayaraman, TMS, Jesudas, SPB, Malaysia Vasudeven....AMRaja and PBS...and Seerkaazhi Govindharajan..!!
    Last edited by sivajisenthil; 24th November 2014 at 05:29 AM.

  10. Likes kalnayak, Russellmai liked this post
  11. #3017
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Mr Neyveli Vasudevan

    மெனக்கெடல் : பாபு, தெய்வமகன், தங்கமலை ரகசியம், திருவருட்செல்வர் 'அப்பர், (அப்பருக்கு நான்கு மணிநேர ஒப்பனை சற்றும் செயற்கைத்தனங்கள் இல்லாத இயற்கையான வயதான ஒப்பனை) 'பாபு'வில் வயதான வேடத்திற்காக ஒப்பனைக்குப் பட்ட நரகவேதனை.(எந்த வசதிகளும் இல்லாத காலகட்டத்தில். ஸ்பெஷல் டாக்டர்கள் முன்னிலையில் ஊசிகள் மூலமாக முகத்தில் தைத்து ரண வேதனைகளுடன் சுருக்கங்களை வரவைத்ததாக அப்போதைய ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன்) 'சவாலே சமாளி'யில் தந்தையாக நடித்த வி.எஸ்.ராகவனிடம் காட்சியின் தத்ரூபத்திற்காக வேண்டி நிஜமாகவே சாட்டையடிபட்டு ஒருநாள் முழுக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிஜ அர்ப்பணிப்பு...
    (வெளிவராத உண்மைகள்) என்று எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம்.

    தரமான நடிப்பு: இதற்கு விளக்கம். தேவையா?

    தொழில்நுட்பத் திறன்: காமெராவைக் கையில் தூக்கிக்கொண்டு, டைரக்டர் விசிலை வாயில் வைத்துக் கொண்டு, 'டிராலி பேக்' என்று கத்திக் கொண்டு முதன் முதல் அந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது. இந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது... இதுவரையில் வராத புதுமை சவுண்ட் டிராக்.... ஒரிஜினலாக புதுக்கார்கள் ரெண்டை வாங்கி வெடிக்க வைத்து ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டது.... என்பதெல்லாம் இல்லாமல் காமெராவுக்கு முன்னால் (எது தேவையோ அது) எப்படி அற்புதமாகச் செயல்படுவது என்பது நடிகர் திலகத்திற்கு தெரிந்த அளவிற்கு வேறு யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பழுத்துக் கொட்டை போட்ட பல காமெரா மேதைகள் கூறியிருக்கிறார்கள். தான் நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடன் நடிக்கும் மற்றவர்களையும் காமிராவுக்கு தக்கபடி வளைத்துக் கொண்டு வந்து நிற்க, குறிப்பாக நடிக்க வைப்பதில் அவர் பலே கில்லாடி! அதே போல நிறைய பிலிம் ரோல்களை விழுங்கியவர் நடிகர் திலகம். என்ன ஆச்சர்யமாக உள்ளதா? மற்றவர்களைப் போல நடிக்கத் தெரியாமல் அல்ல. தன்னுடைய நடிப்பில் மெய்மறந்து காமிராவை நிறுத்தாமல் ஓடவிட்டு தன்னையே, தன் நடிப்பையே வாய்பிளந்து பார்க்கும் காமெராமேனை சத்தம் கொடுத்து, "ஷாட் முடிந்து விட்டது. என்ன தூங்கி விட்டாயா? காமிராவை முதலில் அணை" என்று நடிகர் திலகம் கூக்குரலிட்ட பிறகே பல ஒளிப்பதிவாளர்கள் சுயநினைவுக்கு வந்தது நாடறிந்ததே! உலகில் வேறு யாருக்கும் இந்தப் பெருமை இருந்ததாக இருப்பதாகத் தெரியவில்லை

    அதே போல 'புதிய பறவை'யின் "எங்கே நிம்மதி?' பாடலில் அவர் காட்டிய அசாத்திய திறமை. நான் சொல்வது நடிப்பில் அல்ல. தொழில் நுட்பத்தில். காமிராக் கோணங்கள்... லைட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ், காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்த இலைகளற்ற பட்ட மரங்கள், சப்பாத்தி,கள்ளிச் செடிகள் அனைத்தும் நடிகர் திலகத்தின் கற்பனை வளத்தில் உருவானதுதான். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை. ஆனால் பின்னாட்களில் அவருடன் பழகியவர்கள் இந்தக் கருத்துக்களையெல்லாம் தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் தாங்களே மனமுவந்து மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்கள்.

    பன்மொழி ஆற்றல்: மிக அழகாக ராகவேந்திரன் சார் இதற்கு விளக்கமளித்திருக்கிறார். மனோகரா இந்தியில் 'மனோகர்' என்று நேரிடையாக எடுக்கப்பட்டபோது அவர் இந்தியில் மிக அற்புதமாகப் பேசி ஆச்சர்ய அலைகளை உருவாக்கினார். (இயக்குனர் திரு எல்வி. பிரசாத் இதை ஒருமுறை பத்திரிகை பேட்டி ஒன்றில் சிலாகித்துக் கூறியிருந்தார்) ஆனால் என்ன காரணத்தினாலோ படத்தில் அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கப்பட்டது. 'ஸ்கூல் மாஸ்டர்" கன்னடத்தில் அருமையாக கன்னடம் பேசியும் அசத்தியிருப்பார். அதே படம் இந்தியில் வந்த போது சொந்தக் குரலில் அசத்தியிருப்பார்.

    நடிகர் திலகத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் அவர் ஒரு பிறவி மேதை. நல்லதொரு குடும்பத்திற்குக் கூட அவர் குடும்பத்தைத்தான் அனைவரும் உதாரணமாகக் கூறுவார்கள்.

    இறுதியாக ஒன்றை குறிப்பிடுகிறேன்.

    உலகத்தின் சிறந்த ஒரு அரசியல்வாதியை விடவும் வேறு ஒருவர் உருவாகி விட முடியும் .

    ஒரு கிரிக்கெட் வீரரின் சாதனையை இன்னொரு கிரிக்கெட் வீரர் முறியடித்து விட முடியும்.

    ஒரு இலக்கியவாதியை விட வேறொரு இலக்கியவாதி வந்து ஜொலிக்க முடியும்.

    ஒரு எழுத்தாளனை பீட் செய்ய பல எழுத்தாளர்கள் வருவார்கள். வந்திருக்கிறார்கள்.

    ஒரு விஞ்ஞானியின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளி அடுத்த விஞ்ஞானி அவதாரம் எடுக்கக் கூடும்.

    ஒரு நல்ல தலைவரை விடவும் வேறு சிறந்த தலைவன் உருவாகி உலகை வழிநடத்தவும் முடியும்.

    ஒரு இசை மேதையின் புகழை விடவும் வேறொரு இசை மேதை புகழ் பெறக்கூடும்

    இவ்வளவு ஏன்?... உலகில் எவரை மாதிரியும், எவரும் உருவாக முடியும். எவரையும் உருவாக்கவும் முடியும்...ஒருவரின் சாதனையை ஒருவர் விஞ்ச முடியும்.... வெல்ல முடியும். ஆனால் ஒரே ஒரு சாதனையாளரைத் தவிர....

    'சிவாஜி' என்ற அந்த மகா கலைஞனை கடந்த காலங்களிலும் சரி! அவருடைய சம காலங்களிலும் சரி! நடந்து கொண்டிருக்கும் காலங்களிலும் சரி! நடக்கப் போகும் காலங்களிலும் சரி!

    இனி ஒருவர் விஞ்சவோ, மிஞ்சவோ, முந்தவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

    அந்தப் பெருமை நடிகர் திலகத்துக்கு மட்டுமே!

    அதனால் பெருமை சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே!

    கமல் சொன்னது போல அந்த chair இனி நிரந்தரமாக காலி chair தான். அதன் காலடியைத் தொட்டு வணங்கி, அதன் கீழே அமர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்பதே மற்ற கலைஞர்களுக்கு என்றும் மாறாத பெருமை.

    உலகில் யாருக்குமே வாய்க்காத பெருமையை எங்களுக்கு தேடித்தந்த நடிகர் திலகமே! நல்லவர்க்குத் திலகமே!

    உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கடவுள் உண்டோ!

    கோபால் சார் மிக அழகாகக் கூறியிருந்தார்.

    "இன்னொரு கடவுளோ, தேவ தூதனோ உலகில் மீண்டும் தோன்ற வாய்ப்புண்டு. இன்னொரு நடிகர்திலகம், தோன்ற வாய்ப்பே இல்லை"

    (பொன்னெழுத்துக்களில் பொறித்து ஒவ்வொரு நடிகனும் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டிய டாலர்)

    ஒவ்வொரு வினாடியும் உன் திறமையில் பிரமித்துப் போய் நிற்கும் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவனான

    நெய்வேலி வாசுதேவன்.

  12. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak, sss, AREGU liked this post
  13. #3018
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் இன்று அண்ணனுக்கு அமோக வரவேற்பு.

    இன்று மாலைக் காட்சி எப்படி களை கட்டப்போகிறது என்பதன் அறிகுறி மதியக் காட்சியிலே தெரிந்து விட்டதாம். மதியக் காட்சிக்கு நல்ல கூட்டம் என்றால் மாலைக் காட்சி அமர்களப்படுத்தி விட்டதாம். பால்கனி ஹவுஸ் புல். இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் புஃல். முதல் வகுப்பு கிட்டத்தட்ட நிறைந்து விட்டனவாம். டிலைட் அரங்கில் வெகு நாட்களுக்கு பிறகு ஹை கிளாஸ் பால்கனி டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகி இருக்கிறது. ஒரே காட்சிக்கு பால்கனியும் இரண்டாம் வகுப்பும் நிறைவது வெகு நாட்களுக்கு பிறகு நடக்கிறதாம். இன்றைய மாலைக் காட்சிக்கு மட்டும் 30 சதவீதம் பெண்கள் வந்திருக்கின்றனர். அதில் முக்கால்வாசிப் பேர் family audience. முதல் இரண்டு நாட்களில் மொத்தம் எத்தனை பேர் பார்த்தார்களோ அதையும் தாண்டிய எண்ணிக்கையில் இன்றைய தினம் audience வந்திருக்கிறார்கள்.

    மிகவும் சந்தோஷம் அடைந்துள்ள அரங்கத்தை லீசிற்கு எடுத்து நடத்துபவர் இப்போது அனைத்து அரங்க உரிமையாளர்களும் சொல்லும் அதே வார்த்தையான அடுத்த மாதம் இன்னொரு சிவாஜி படத்தை திரையிடுங்கள் என்று படத்தை வெளியிட்டவரிடம் சொல்லியிருக்கிறார்.

    சென்னை திருச்சியை தொடர்ந்து இப்போது கோவையிலும் சாதனை படைத்திருக்கிறார் Dr. ரமேஷ். அவரின் திக்விஜயம் மேலும் தொடரும்.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

    இன்று கிடைத்த தகவல்படி வரும் டிசம்பர் 5 வெள்ளி முதல் நெல்லைக்கு சிபிஐ ஆபீசர் ராஜன் விஜயம் செய்கிறார். ஆம், நெல்லை சென்ட்ரலில் தங்கசுரங்கம் வெளியாகிறது.

  14. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  15. #3019
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  16. #3020
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Mr Neyveli Vasudevan

    நம் ராஜா நடித்த 'ராஜா' கடலூர் நியூசினிமாவில் வெளியானது. அண்ணா மேம்பாலத்திற்குக் கீழே அதாவது கடிலம் ஆற்றுப் பாலத்தின் இறககத்தில் அமைந்துள்ள பழமையான அரங்கு நியூசினிமா. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'ராஜா' ரிலீஸுக்கு முன்னால் வரை நியூசினிமா திரை அரங்கில் தரை மற்றும் பெஞ்ச் டிக்கெட் எடுக்க கவுண்டர்கள் ஓப்பனாக இருக்கும். வெயில்,மழை இவற்றை பொருட்படுத்தாமல் வெட்டவெளியில் மணிக்கணக்கில் கியூவில் நின்றுதான் டிக்கெட் எடுக்க வேண்டும். அரங்கு நிறைந்து விட்டால் அடுத்த ஷோவிற்கு கூட்டம் எங்கும் போகாமல் அப்படியே நின்றவாக்கிலேயே தொடரும். ஒருவரையொருவர் விடாமல் கைகளோடு அணைத்துக் கொண்டு மற்றவர்கள் குறுக்கே நுழைந்துவிடாத வகையில் நிற்பார்கள். தரை டிக்கெட் ஐம்பது காசுகள். பெஞ்ச் டிக்கெட் ரூபாய் 1.10. தியேட்டரின் மெயின் கேட்டிற்கு உள்ள நுழைந்தால் அங்கு first class மற்றும் செகண்ட் கிளாஸ் டிக்கெட் கவுண்ட்டர்கள் இருக்கும். அங்கு நமக்கு வேலையே இல்லை. அதனால் தியேட்டர் நிர்வாகம் தரை பெஞ்ச் டிக்கெட் வாங்குபவர்களுக்காக வேண்டி roof உடன் கூடிய நீண்ட கவுண்டர் சுவர்களை 'ராஜா' படத்திற்காகவே புதிதாக ஸ்பெஷலாகக் கட்டியது. ராஜாவின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டவுடன் பரபரப்பு மிக அதிகமாக எல்லோரையும் தொற்றிக்கொள்ள அதிகமாக பரபரப்பானது தியேட்டர் நிர்வாகம். கடலூர் முனிசிபாலிட்டி சேர்மன் தங்கராஜ் முதலியார் அவர்களின் கைவசம் தியேட்டர் இருந்தது. ராஜாவிற்காக திரையரங்கு ஓரளவிற்கு புதுப்பிக்கப்பட்டது. அதில் முக்கியமானது நான் மேலே குறிப்பிட்ட தரை டிக்கெட், மற்றும் பெஞ்ச் டிக்கெட் எடுப்பதற்கான புது கவுண்ட்டர்கள் கட்டப்பட்டதுதான். தரை டிக்கெட் கவுண்டர்களை இரண்டு வளைவுகளாகச் சென்று திரும்பி டிக்கெட் எடுக்கும்படி கட்டியிருந்தார்கள். 26.01.1972 அன்று 'ராஜா' ரிலீஸ்.

    ஆனால் கடலூர் சில விஷயங்களில் சாதனை படைத்தது. 'ராஜா' தமிழ்நாடெங்கும் 1972 குடியரசு தினத்தன்று ரிலீஸ் என்றால் எங்கள் கடலூரில் 25-1-1972 அன்று அதாவது ஒரு தினம் முன்னதாகவே ரிலீஸ் ஆகி விட்டது. (இது போல எனக்குத் தெரிந்து கௌரவம்,வெள்ளை ரோஜா இரு படங்களும் ரிலீஸுக்கு முந்தின நாளே கடலூரில் வெளியாகி விட்டன. இதில் விசேஷம் என்னவென்றால் நான் குறிப்பிட்ட மூன்று படங்களும் கடலூர் நியூசினிமாவில்தான் ரிலீஸ் ஆயின) 'ராஜா' 25-1-1972 இரவு சிறப்பு ரசிகர் காட்சியாகத் திரையிடப்பட்டு விட்டது. அதனால் ரசிகர் மன்றத்தினர் அனைவரும் முன்தினம் இரவே ராஜாவைக் கண்டு களித்து விட்டனர். படத்தின் ரிசல்ட் 'ஓகோ'வென இருந்தது. ராமாபுரத்தில் இருந்து ரசிகர்கள் பலர் சைக்கிளில் கடலூர் சென்று ரசிகர் ஷோ பார்த்து விட்டு திரும்பி படத்தின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அடுத்த நாள் (26.01.1972) காலை நான் அம்மாவுடன் பஸ்ஸில் கடலூர் நியூசினிமா சென்று விட்டேன். முதல் நான்கு நாட்களுக்கு ஐந்து காட்சிகள் என்று ஞாபகம். முன்தினம் பார்த்த ரசிகர்கள் அடுத்தநாளும் கடலூர் நோக்கி படையெடுத்தனர். படம் பிரம்மாண்ட வெற்றி என்ற செய்தி வேறு பரவி விட்டது. சென்னை சாந்தி தியேட்டரில் அனைவரையும் வசீகரித்த அதே தலைவரின் ஸ்டைல் கட் அவுட் தியேட்டரின் மெயின் கேட்டிற்கு மேலே ஏற்றப் பட்டிருந்தது. பிரம்மாண்டமான பஞ்சு மாலைகள் தலைவரின் கழுத்தை அலங்கரித்தன. தலைவரின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த ஸ்கார்ப் அப்படியே தத்ரூபமாக காற்றில் பறப்பது போன்றே இருந்தது. கடலூர் மெயின் சாலையில் தியேட்டர் அமைந்திருந்ததால் அனைவர் கண்களும் ராஜாவின் மீது. கட்டுக்கடங்காத கூட்டம். ஜனம் அலைமோதுகிறது. டிக்கெட் கிடைக்குமா கிடைக்காதா என்ற குரல்கள்தான் எங்கும் எதிரொலிக்கின்றன. அன்று ஐந்து காட்சிகள். அப்போதெல்லாம் காலை ஒன்பது மணி காட்சிக்கு பெண்கள் அதிகமாக வரவே மாட்டார்கள். ஒரு பத்து பதினைந்து பெண்கள்தாம். அதனால் டிக்கெட் கண்டிப்பாகக் கிடைத்துவிடும். பெண்கள் டிக்கெட் ஆண்களுக்கு செல்லாது. சிறுவர்களுக்கு செல்லும். பெண்கள் டிக்கெட் கொடுத்து முடிந்ததும் சிறிது நேரம் வெயிட் செய்து பார்த்து விட்டு பின் மீதி டிக்கெட்களை ஆண்களுக்கு கொடுத்து விடுவார்கள். நான் அம்மாவுடன் பெண்கள் கவுண்ட்டரில் நின்று நடப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் கவனித்துக் கொண்டிருந்தேன். அரங்கின் வெளியே முழுக்க கொடிகளும், தோரணங்களுமாகவே தெரிந்தன. போலீஸ்காரர்கள் மூன்று நான்கு பேர் இருக்கும். சமுத்திரம் போன்ற கட்டுக்கடங்காத ரசிகர்களை கட்டுப்படுத்த பிரம்மப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். ரசிகர்களின் உற்சாகம் எல்லை மீறத் துவங்கியது. மணி சரியாக எட்டு இருக்கும்.

    திடீரென்று ஒரே மேளதாள சப்தம். கூடவே வானவேடிக்கை வேறு. வெடிச் சப்தங்கள் காதைக் கிழிக்க ஒரு இளைஞர் பட்டாளம் தியேட்டரில் புயலெனப் புகுந்தது. ஒரு ஐம்பது பேருக்கு மேல் இருக்கும். ஒரு வண்டியில் மூட்டைகளாக அடுக்கப்பட்டு அதன் பின்னாலே சிலர் வந்தனர், பின் மூட்டைகளை இறக்கி அவிழ்த்தனர். பார்த்தால் அவ்வளவு ஆப்பிள் பழங்கள். வந்த கோஷ்டி சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தது. சிலர் கோணி ஊசிகளை எடுத்து ஆப்பிளின் உள்ளே செருக, சிலர் சணல் கொண்டு தைத்து ஆப்பிள்களை மிகப் பெரிய மாலையாக அரைமணி நேரத்தில் தொடுத்து விட்டனர். இப்போது பிரம்மாண்டமான ராட்சஷ ஆப்பிள் மாலை தயார். அதிர்வேட்டுகள் முழங்க தலைவரின் கட்-அவுட்டிற்கு ஆப்பிள் மாலை சாத்தப்பட்டது. அப்போது இந்த அலங்காரமாலை எல்லோருக்கும் ரொம்பப் புதுசு. "ஆப்பிள் மாலை டோய்" என்று பலர் அதிசயத்தில் வாயைப் பிளந்தனர். கொஞ்ச நேரத்தில் அந்த ஆப்பிள் மாலை அனைவரையும் கவர்ந்து விட்டது. தலைவரின் கட்-அவுட் மேலும் அழகுடன் பரிமளித்தது.

    முதன் முதலில் ஒரு கட் அவுட்டிற்கு ஆப்பிள் மாலை சாத்தப்பட்ட பெருமையை ராஜா பெற்றார். (இது கடலூர் சினிமா ரசிகர்கள் இன்றளவும் பெருமையாக பேசி மகிழும் விஷயம்) பின் ஒரே கூச்சலும் குழப்புமாகவே இருந்தது. நான் அம்மாவை விட்டு விட்டு வந்து இந்த வேடிக்கை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவோ என்னை விட வில்லை. கூட்டத்தில் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயம் அவர்களுக்கு. நான் ஒரு ஓரமாக நின்று பார்த்து விட்டு வருகிறேன் என்று அடம் பிடித்து வந்து ஒரு இடத்தில் safe ஆக நின்று கொண்டேன்.

    சரியாக ஒன்பதரை மணிக்கெல்லாம் டிக்கெட் கொடுப்பதற்கான பெல் கொடுத்து விட்டார்கள். அவ்வளவுதான். கூட்டம் நிலைதடுமாற ஆரம்பித்தது. அதுவரை ஓரளவிற்கு கட்டுக்கோப்பாக நின்றிருந்த கியூ கண்மண் தெரியாமல் சிதறியது. ஒருவர் மேல் ஒருவர் ஏறிக் குதித்து டிக்கெட் கவுண்ட்டரை நெருங்க முண்டியடித்தனர். போலீஸ்கார்களால் சமாளிக்க முடியாமல் லத்தியைக் கையில் எடுத்து கண்ட மேனிக்கு சுழற்ற ஆரம்பித்து விட்டனர். ஒரே அடிதடி. துணி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் டிக்கெட் எடுக்க சில பேர் தாவிக் குதித்தனர். நிற்பவர்கள் தலை மேல் கால்வைத்து பலர் ஓடினர். கீழே இருப்பவர்கள் வலி தாங்காமல் அவர்களைத் திட்டித் தீர்த்தனர்.

    அப்போதுதான் கட்டியிருந்த புதிய கவுண்ட்டர் சுவர் சரியாகக் காயாமல் வேறு இருந்ததால் நெரிசலின் காரணமாக அப்படியே பெயர்த்துக் கொண்டு இடிந்து விழுந்தது. சிலருக்கு நல்ல காயம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டம் நெருக்கித் தள்ளியது. இதையெல்லாம் கண்டு மிரண்டு போன நான் பயந்து போய் அம்மாவிடம் ஓடி வந்து விட்டேன். அம்மா அதற்குள் டிக்கெட் எடுத்து விட்டார்கள். பெண்கள் கவுண்ட்டரை சுற்றி பயங்கரமான ஆண்கள் கூட்டம் டிக்கெட்டுக்காக வெயிட் செய்தது. (கவுண்ட்டர் சுவர் முதன் முதல் கூட்ட நெரிசலால் இடிந்து உடைந்து விழுந்த பெருமையும் ராஜாவிற்கே சொந்தம்)

    இதற்குள் டிக்கெட் எடுக்காத ஒரு கூட்டம் மெயின் கேட்டின் மேல் ஏறித் தாவி குதிக்க வேறு ஆரம்பித்து விட்டது. தியேட்டர் ஊழியர்கள் ஆளுக்கொரு கழியை எடுத்துக் கொண்டு இரும்பு கேட்டின் மேல் ஏறிக் குதிப்பவர்களை வாங்கு வாங்குவென்று வாங்கினர். அதில் சிலர் அவர்களிடமிருந்தே கழியைப் பிடுங்கி தியேட்டர் சிப்பந்திகளை பதம் பார்த்தனர். யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மா மிகவும் மிரண்டு போய் என் கையை பத்திரமாகப் பிடித்துக் கொண்டு பெண்கள் அமரும் இருக்கைக்கு சென்று விட்டார்கள். அதற்குப் பிறகு வெளியே என்ன நடந்தது என்று தெரியாது. டிக்கெட் கிடைத்த சந்தோஷத்தில் கூக்குரலிட்டு விசிலடித்தபடி பலர் தரை டிக்கெட்டுக்கான சாயும் வசதிகள் இல்லாத மூட்டைப் பூச்சிகளின் மூர்க்கத்தனமான கடிகள் கொண்ட மொட்டை பெஞ்ச்களில் தங்கள் நண்பர்களுக்காக துண்டுகளை விரித்து இடம் போட்டனர். வேறு யாராவது வந்து உட்கார்ந்தால் மவன் தொலைந்தான்.

    படம் போட்டதும் கடலின் பேரிரைச்சல் போல அப்படி ஒரு இரைச்சல். தலைவரின் அறிமுகக் காட்சியில் ஆர்ப்பாட்டம். ஆரவாரம். கூடை கூடையாய் பூக்களின் உதிரிகள் பறக்கின்றன. விசில் ஒலிகளும், கைத்தட்டல்களும் காதைக் கிழித்தன. தியேட்டர் முழுதும் ஒரே ஜனக்கடலாகக் காட்சியளித்தது. உட்கார்ந்து பார்த்தவர்கள் அளவிற்கு நின்றவாறே பலர் நம் ராஜாவின் ஸ்டைல் ரகளைகளைக் கண்டு மகிழ்ச்சித் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக ரந்தாவாவுடனான அந்த ஈடுஇணையில்லாத சண்டைக்காட்சியின் போது முன் இருக்கைகளை எட்டி உதைத்து சிதைத்து ரசிகர்கள் காட்டிய உற்சாக மிகுதியின் மகிழ்வான உணர்வுகளின் வெளிப்பாட்டை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது தலைவரின் நடிப்பைப் போல. அதற்குப் பிறகு உள்ளே நடந்த அமர்க்களத்தை சொல்லவும் வேண்டுமா?! படம் பார்த்தவர்களில் பாதி பேருக்கு மேல் ஆளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வழங்கப்பட்டது. (இதுவும் ஒரு சாதனை) காலை ஒன்பது மணி காட்சி முடிந்து திரும்பும்போது நண்பகல் 12 மணி காட்சிக்கு காலையில் இருந்தது போல இருமடங்கு கூட்டம் அலைமோதிக் கொண்டு நின்றது.

    கடலூர் நியூசினிமாவில் ஒரு மாதத்துக்கு ஓடி வசூலில் தன்னிகரில்லா சாதனையைப் படைத்தார் ராஜா. பிறகு மறு வெளியீடுகளிலும் கடலூரில் ராஜாவின் சாதனை எவரும் விஞ்ச முடியாதது.

  17. Thanks kalnayak, eehaiupehazij thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •