Page 294 of 400 FirstFirst ... 194244284292293294295296304344394 ... LastLast
Results 2,931 to 2,940 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2931
    Junior Member Junior Hubber AREGU's Avatar
    Join Date
    Nov 2007
    Location
    TRICHY
    Posts
    19
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    நடிகர்திலகத்தை யார் யார் தரக்குறைவாக இங்கு விமர்சித்தார்கள் என்பதை ராகவேந்தர் வெளிப்படையாக அவர்கள் பெயர்சொல்லியே பதிவிடுவது நல்லது. அப்படி செய்தால் தேவையற்ற யூகங்கலுக்கு இடமளிக்காது.

    நமது திரியில் நடிகர்திலகத்தை விமர்சித்தால்தான் கோபப்படுவேன், வருத்தப்படுவேனே தவிர மாற்றுத்திரியில் நடிகர்திலகத்தை எப்படி தரக்குறைவாக எழுதினாலும் அதைப்பற்றி வருத்தப்படவோ கண்டுகொள்ளவோ மாட்டேன் என்ற ராகவேந்தர் அவர்களின் நிலைப்பாடு ஆச்சரியமும் திகைப்பும் அளிக்கிறது.
    அதில் வியப்படையவோ, திகைப்புறவோ ஏதுமில்லை என்பது என் தாழ்மையான கருத்து..

    நாம் வாழும் நம் வீடு தேவையற்ற குப்பைகள் சேராமல் சுத்தமாக இருக்கவேண்டும் என எண்ணுவது இயல்பே.. பிறர் மனை குறித்து அவ்வளவு அக்கறை பொதுவாக நமக்கு இருப்பதில்லை.. புறம்கூறும் தன்மைகொண்டோருக்கு அது சுபாவம்.. அதை மாற்ற எண்ணுவது வீண்வேலை. ஆனால் நம் குடும்பத்தினரே ஒருவர் இன்னொருவருக்குள் குறைகூறித் திரிந்தால் வருத்தம் கொள்வதை புரிந்துகொள்ளமுடிகிறது..
    எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!

  2. Thanks RAGHAVENDRA, eehaiupehazij thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2932
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Mr Neyveli Vasudevan

    செஞ்சோற்றுக்கடன் தீர்த்தான் 'கர்ணன்' அன்று...
    செய்நன்றிக் கடன் தீர்த்தான் 'பாபு' இன்று...

    'பாபு' சொல்லும்போதே நா இனிக்கிறது. ஆனால் மனம் கனக்கிறது. கைரிக்ஷாவண்டி இழுத்த எங்கள் பாபுவை மறக்க முடியுமா?..

    தனக்கு ஒருவேளை சாப்பாடு போட்ட செய்நன்றிக்காக ஒரு நல்ல மனிதனின் குடும்பம் அத்தலைவனை இழந்து தவிக்கும் போது,அந்தக் குடும்பம் தழைக்க காலமெல்லாம் கைரிக்ஷா இழுத்து அவர் மகளை தன் மகளாக பாவித்து, அவளைப் படிக்க வைத்து உழைப்பாலும்,முதுமையாலும் உருக்குலைந்து தன்னை முழுவதுமாக அந்தப் பெண்ணின் வாழ்வுக்காகத் தியாகம் செய்து தன்மானத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் உயிர் நீக்கும் கவரிமானான எங்கள் பாச பாபுவை மறக்க முடியுமா?...

    சுட்டெரிக்கும் வெயிலிலே கால்களில் மிதியடி கூட இல்லாமல் தார் ரோடுகளில் கைரிக்ஷாவை சிரித்த இன்முகத்தோடு இழுத்துக் கொண்டு ஓடும் எங்கள் பாபுவை மறக்க முடியுமா?...

    ரிக்ஷாவில் காதலியை அமரவைத்து அழகு பார்த்து நகர்வலம் வரத்தெரியாமல் அவளிடம் தன் வயிற்றுப் பசியை மட்டும் தீர்த்துக் கொண்டு பின் அவளையும் பறிகொடுத்துவிட்டு அனாதையாக நின்ற பாபுவை எங்களால் மறக்க முடியுமா?...

    'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' என்று பாசச் சோற்றினை எங்களுக்கெல்லாம் ஊட்டி ஊட்டி வளர்த்த எங்கள் பாபுவை மறக்க முடியுமா?...

    பழுத்த முதுமை அடைந்த பின்னர் முதுகு வளைந்து கால்கள் அகன்று நொடித்து தள்ளாடிய ஓட்டமாய் இருமிக்கொண்டே தன்னை வருத்தி ,ஓடாய்த் தேய்ந்து, கைரிக்ஷாவண்டி இழுத்து உருத்தெரியாமல் போன பாபுவை எங்களால் மறக்க முடியுமா?...

    தான் வளர்த்த பெண்ணின் திருமணத்திற்கு அவளுக்குத் தெரியாமல் சென்று சாப்பாட்டுப் பந்தியில் கூட இடம் கிடைக்காமல் பிச்சைக்காரன் போல் விரட்டியடிக்கப்பட்டு சோதனைகளின் சுமைதாங்கியாய் தன் உயிரை விடும் எங்கள் பாபுவை மறக்க முடியுமா?...

    எல்லாவற்றுக்கும் மேல் உடல் வருத்தி, உச்சி வெயிலில் கைரிக்ஷா இழுத்து, முதுமைத் தோற்றத்தைக் கொண்டுவருவதற்கு கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தாடி ஒட்டி, முகம் ரணகளமாக சுருக்கங்கள் ஏற்றி ,அந்த இளம் வயதில் கண்களை ஒளி குன்றச் செய்து ஒரு அழுக்குக் கைலியையும், கிழிந்த சட்டையும் அணிந்துகொண்டு மேக்-அப் என்ற பெயரில் தன் மேனியினை நோக வைத்து (மாஸ்க் போன்ற நவீன மேக்-அப் சாதனங்கள் இல்லாமல்)அரும்பாடுபட்டும் பட்டபாட்டிற்கு பலனே இல்லாமல்,"நீ உண்மையான ரிக்ஷாக்காரன் இல்லை...உனக்கு சிறந்த நடிகர் அவார்டும் இல்லை ...உன்னைவிட சிறந்த ரிக்ஷாவாலாக்களெல்லாம் இருக்கிறார்கள்" என்று சொந்த மண்ணில் பிறந்தவர்களாலேயே நிராகரிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்ட பச்சைத் துரோகத்தைத் தான் எங்களால் மறக்க முடியுமா?...

    அத்தனை துரோகங்களையும் தாண்டி, "நீதானடா நடிகன்" என்று உலக நாடுகள் அனைத்தும் (சொந்த மண்ணைத் தவிர) உச்சி முகர்ந்து எங்கள் பாபுவைப் பாராட்டி,பாராட்டி கௌரவித்து,உயரிய உரிய பட்டங்கள் அளித்து மகிழ்ந்து, உள்ளம் குளிர்ந்து ஆனந்தக் கூத்தாடுகிறதே... அந்த ஆனந்த அங்கீகாரத்தைத்தான் எங்களால் மறக்க முடியுமா?...

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Harrietlgy liked this post
  6. #2933
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Mr Karthik


    1971 அக்டோபர் 18 - 'பாபு' நினைவலைகள்.....

    தீபாவளியன்று நடிகர்திலகத்தின் 'பாபு' படம் ரிலீஸாகிறதென்ற பெருமிதம் தீபாவளியை பன்மடங்கு உற்சாகமாக்கியது. கள்ளமறியா, கவலையில்லா பள்ளிப்பருவம். ரிலீஸுக்கு ஒருவாரம் முன்பு ரிசர்வேஷன் ஆரம்பிக்கும்போதே, அதற்காகவே சேர்த்து வைத்திருந்த பணத்தில் வடசென்னை 'கிரௌன்' திரையரங்கில் டிக்கட் ரிசர்வ் செய்து விட்டேன். (முதல் வகுப்பு டிக்கட் 2ரூ 90பை. அதற்கே அந்தப்பாடு).

    தீபாவளிக்கு முதல் நாள் கிரௌனில் சவாலே சமாளி 107 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய, மறுநாள் 'பாபு' ரிலீஸ். அதே தீபாவளிக்கு கிரௌன் தியேட்டரை அடுத்த ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் ரிக்ஷாக்காரன் 140 நாட்களில் மாற்றப்பட்டு அங்கே 'நீரும் நெருப்பும்' ரிலீஸ் ஆகிறது. மே 29-ல் ரிக்ஷாக்காரனுக்குப்பிறகு அடுத்தபடம் அக்.18-ல்தான் வெளியாகிறது. ஆனால் இங்கே ஜூலை 3-ல் சவாலே சமாளி வெளியான பின் அக் 18-க்கு முன் இரண்டு படங்கள் (தேனும் பாலும், மூன்று தெய்வங்கள்) வந்து விட்டன. மூன்றாவதாக அக்.18-ல் பாபு)

    தீபாவளிக்கு முன் டீக்கடை, பேப்பர் கடை எங்கு பார்த்தாலும் 'நீரும் நெருப்பும்' பற்றித்தான் பேச்சு. பாபு படத்தை ரசிகர்களைத்தவிர யாரும் கண்டுகொள்ளவில்லை. (இவ்விரு படங்களோடு மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் வண்ணப்படம் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை'யும், கே.எஸ்.ஜி.யின் பிரம்மாண்ட வண்ணப்படம் 'ஆதிபராசக்தி'யும் ரிலீஸ்). ஆக தீபாவளி ரேஸில் மூன்று வண்ணப்படங்களுக்கு மத்தியில் ஒரே கருப்பு வெள்ளைப்படமாக 'பாபு' மட்டுமே வந்தது. ரசிகர்களுக்கெல்லாம் ஒரே சோர்வு. நடிகர்திலகம் வேறு ஏதாவது பிரம்மாண்ட வண்ணப்படத்தை இந்த தீபாவளிக்கு வெளியிட்டிருக்கலாமே என்று ரசிகர்களுக்குள் பேச்சு. (அப்போது இரு பிரம்மாண்ட வண்ணப்படங்களாக ராஜாவும், தர்மம் எங்கேயும் தயாரிப்பில் இருந்தன).

    எதிர் அணி படத்தைப்பற்றி என்னென்னவோ பேச்சுக்கள், எதிர்பார்ப்புக்கள், இன்னொரு வெள்ளி விழாப்படம் என்ற ஆரூடங்கள், இதற்கு முந்தைய சைக்கிள் ரிக்ஷாவையே ஓட்டத்திலும் வசூலிலும் முந்தும் என்ற கணிப்புக்கள், இரட்டை வேடமாம், ஈஸ்ட்மென் கலரில் உருவாகியிருக்கிறதாம், பிரம்மாண்ட செட்டுக்களாம், ஏகப்பட்ட நடிகர்களாம், ரொம்ப நாளைக்கப்புறம் கத்திச்சண்டக்காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம், நிச்சயம் பயங்கர வெற்றிதான்.... பாவம் கணேசனின் பாபு படம் இப்போட்டியில் சிக்கி நசுங்கப்போகிறது, அதுல அந்த ஆளுக்கு சரியான ஜோடிகூட இல்லையாம், மலைநாட்டு மங்கையில் நடித்த விஜயஸ்ரீதான் ஜோடியாம் என்றெல்லாம் ஏகடியங்கள், கிண்டல்கள், கேலிப்பேச்சுக்கள். நடிகர்திலகத்தின் ரசிகர் தரப்பில் வழக்கம்போல பொறுமை காக்கப்பட்டது.

    ஆனால் எல்லா ஆர்ப்பாட்டமும் தீபாவளிக்கு படங்கள் ரிலீஸாகும் வரைதான். வெளியானதோ இல்லையோ நிலைமை தலைகீழாக மாறியது. சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் 'பாபு' வசூலில் முந்தியது. எந்தப்படம் பெரும் போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ அது பின் தங்கியது. நாட்கள் ஆக ஆக, 'பாபு'வுக்கும் ஆதிபராசக்திக்கும்தான் எல்லா ஊர்களிலும் போட்டியாக இருந்தது. மூன்றாவது இடத்தை ஜெய்சங்கரின் வீட்டுக்கு ஒரு பிள்ளை பிடிக்க, ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட 'பிரம்மாண்டம்' பின் தங்கி நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    ஓலைக்குடிசை, கைரிக்ஷா, கருப்புவெள்ளை, வெறும் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள், கிழிந்த உடைகள், தாடி மீசை இவற்றோடு நடிகர்திலகத்தின் 'பாபு' போட்ட போடில் வண்ணங்கள் வெளுத்துப்போயின, பிரம்மாண்டங்கள் சரிந்தன. பாபுவுடன் போட்டியிட வந்த படம் பிரீஸ்டீஜுக்காக 50 நாட்கள் ஓடுவதே இழுபறியாகிப்போனது. பாபுவோ சர்வ சாதாரணமாக வசூலை வாரிக்குவித்தது.

    இதில் எதிர் அணிக்கு இன்னொரு சோகம் என்னவென்றால், வழக்கமாக 'அவரது' படங்களைப்பொறுத்தவரை, ஓட்டத்தில் சுமாரான படங்களில் கூட பாடல்கள் பாப்புலராகி விடும். ஆனால் இப்போது அதுவும் பொய்த்துப்போனது. அப்படத்தின் பாடல்கள் எங்கும் பாப்புலராகவேயில்லை (இன்றுவரை). ஆனால் பாபுவின் 'வரதப்பா வரதப்பா', 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' பாடல்கள் அட்டகாசமாகப் பாப்புலராயின. வானொலிகளில் தினமும் ஒலித்தன. கேலியும் கிண்டலும் பேசிய வாய்கள் அடைத்துப்போயின. ரிலீஸுக்கு முன் சோர்வாகக்காணப்பட்ட நடிகர்திலகத்தின் ரசிகர்கள் தெம்பாக வலம் வந்தனர். 1972-ம் ஆண்டின் அட்டகாச பவனியை 1971 இறுதியில் 'பாபு' துவக்கி வைத்தது.

    அக்டோபர் 18 மாலைக்காட்சிக்கு டிக்கட் வாங்கியிருந்தேன். (தீபாவளியன்றைக்கு மாலைக்காட்சிக்கு டிக்கட் கிடைத்தால் அது எவரெஸ்ட்டில் ஏறியது போல). டிக்கட் ரிசர்வ் செய்திருந்தாலும் கரெக்டாக காட்சி நேரத்துக்குப் போவது எனக்குப்பிடிக்காது. கியூவில் நின்று டிக்கட் வாங்குபவர்களைவிட முன்னதாகவே போய் விடுவேன். அன்று மாலை மூணரைக்கெல்லாம் கிரௌன் தியேட்டர் வாசலில் ஆஜர். வழக்கம்போல ரசிகர்க மன்றங்களால் பந்தல்கள், ஏகப்பட்ட தோரணங்கள், கொடிகள், நட்சத்திரங்கள், கட்-அவுட்களுக்கு மாலைகள் என ஏக அமர்க்களங்கள் (கிரௌன், ஸ்ரீகிருஷ்ணா இரண்டு தியேட்டர்களிலும்). அதுபோல இரண்டு தியேட்டர் முன்பும் தெருவையே அடைத்து ரசிகர் கூட்டங்கள். அவ்வப்போது பட்டாசு வெடிக்கும் சத்தம் அந்த இடத்தையே இரண்டு பண்ணியது.

    ஒரு வழியாக மேட்னி ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்தது. வெளியில் நின்ற ரசிகர்கள் அவர்களை மொய்த்து ரிசல்ட் கேட்கத்துவங்கினோம். தாய்மார்கள் பெரும்பாலோர் கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தனர், ரசிகர்களும்தான். எங்களுக்குப்புரியத் தொடங்கியது. கிளைமாக்ஸ் கண்டிப்பாக சோகம் போலும். ஒரு ரசிகர் சொன்னார் 'பாசமலர், வியட்நாம் வீடு படங்களுக்குப்பிறகு இந்தப்படத்துலதான்யா நான் அழுதேன்' என்று.

    மாலைக்காட்சிக்கு கரண்ட் டிக்கட் விற்பனை துவங்கியது. அவ்வளவுதான் அதுவரை போலீஸார் கட்டுப்படுத்தி வைத்திருந்த கூட்டம் அனைத்தும் உடைபட்ட வெள்ளமென கவுண்ட்டரை நோக்கி முன்னேறியது. முன்பதிவு செய்திருந்த டிக்கட்டைக்காட்டி உள்ளே சென்றோம். விளம்பரப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் அரங்கு நிறைந்து விட்டது. ரசிகர்களின் பொறுமையை மேலும் சோதிக்காமல் உடனே நியூஸ் ரீல் போட்டு, அது முடிந்ததும் படத்தைத் துவக்கினார்கள். படம் துவங்கியது முதல் ரசிகர்களின் அலப்பறையும், விசிலும் கைதட்டலும் படத்தை களைகட்ட வைத்தன. இடைவேளை வரை படம் படு உற்சாகமாகப்போனது. அவர் ஸ்டைலாக முகத்தில் புன்சிரிப்புடன் ரிக்ஷா இழுத்துக்கொண்டு ஓடுவது, பாலாஜியின் அன்பில் நெகிழ்வது, இலையில் இருந்த கத்தரிக்காயை ஸ்ரீ தேவி எடுத்துச்சாப்பிட்டதும் பதறுவது, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பாலாஜியின் பெருந்தன்மையில் கண் கலங்குவது, அந்த சம்பவத்தை ரயில்வே ட்ராக்கில் உட்கார்ந்துகொண்டு காதலி விஜயஸ்ரீயிடம் குதூகலமாகச்சொல்வது, வரதப்பா வரதப்பா பாடலின்போது ரிக்ஷாக்கானுக்கே உரிய ஸ்டைலுடன் ஆடுவது, கீசக வதம் நாடகம், விஜயஸ்ரீயின் பரிதாப மரணம், அதைத்தொடர்ந்து நம்பிராஜனுடன் சண்டை என்று படம் படு அட்டகாசம்.

    இடைவேளைக்குப்பின்னர் நம்மை அப்படியே கதையில் ஒன்றவைத்து சோகத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றுவிடுவார். சௌகாரின் பாந்தமான நடிப்பு பெரும் துணையாக இருக்கும். பாபுவை உதாசீனமாகப்பேசும் தன் மகள் நிர்மலாவை கண்மண் தெரியாமல் அடிப்பதும், பின்னர் தான் பிச்சையெடுத்த ப்ளாஷ் பேக்கை நினைத்துப்பார்க்கும் நிர்மலா, மாமா என்று பாபுவைக் கட்டி அணைத்துக்கொண்டதும் தள்ளி நின்று பாசத்தில் கண் கலங்குவத்மாக சௌகாரும் தன் பங்கை சிறப்பாக நிறைவேற்றியிருப்பார். கடைசியில் நிர்மலாவின் திருமணத்தின்போது அவரை தனியே சந்தித்து நாய் பொம்மையை நடிகர்திலகம் நிர்மலாவுக்குப் பரிசாகக்கொடுக்கும்போது தியேட்டரே கதறி அழுதது. தன்னைச்சுற்றி அத்தனை பேரும் தன்மீது அவ்வளவு அன்பு செலுத்துவது கண்டு அவர் நெகிழ்ச்சியோடு உயிரிழப்பதோடு படம் நிறைவடைய கலங்காத கண்களும் இருக்க முடியுமா?.

    எங்கள் 'பாபு'வுக்கு இன்று 40 ஆண்டுகள் நிறைந்தன. இன்னும் பலநூறு ஆண்டுகள் ரசிகர்கள் இதயங்களில் சிரஞ்சீவியாக வாழ்வார்.

  7. #2934
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ராகவேந்தர்,


    நடிகர்திலகத்தின் பிற்கால படங்கள் அவர் தரத்திற்கு பெருமை சேர்க்கும் அளவு இல்லை. இதே வாயால் திராவிட மன்மதன் என்று சொல்லி ,அது இங்கு சரளமாக உபயோகிக்க படுவது உங்களுக்கு தெரியவில்லையா?

    அத்துடன் சமீப காலமாக உங்கள் கட்டளையை ஏற்று ,நாங்கள் ஒரு வரி கூட critical ஆக எழுதாத போது ஏன் குப்பையை கிளறி விடும் சண்டை சேவல் ஆகிறீர்கள்?

    நான் எந்த திரி நண்பர்களுடன் வாக்கு வாதம் வந்தாலும் தோன்றியதை சொல்லி எழுதி எல்லோரையும் பரிச்சயம் கொண்ட கருத்தொப்பாத நண்பர்களாகவே பார்க்கிறேன்.



    நாங்கள் எதையும் எதிர்பார்த்தோ, அல்லது அங்கீகாரம் வேண்டியோ அவர் பக்தர்களாக இல்லை. அது ஆத்மா சுத்தியுடன் நாங்கள் செய்யும் சத்திய பூஜை. உளமார கடவுளாக தொழும் வேள்வி. நீங்கள் அதற்கு வரம்பு விதிக்க வேண்டாம். ஒவ்வாதவை, ஓங்கி சொல்ல பட்டால், ச்சீ ,பொய்யுரைப்பதா என்று என் கடவுள் ,கர்ணன் அவதாரத்தில் கேட்டதையே கேட்க வேண்டி வரும்.
    Regards

    RKS
    Last edited by Murali Srinivas; 21st November 2014 at 12:39 AM.

  8. #2935
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    :-d
    are you not ashamed gopal to put a smiley...?

    Rks '

  9. #2936
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Saradha Madam

    'விஸ்வரூபம்' 100-வது நாள் வெற்றி விழா.

    நடிகர்திலகத்தின் 1980 தீபாவளி வெளியீடான விஸ்வரூபம் வெற்றிவிழாவில் கலந்து கொண்டது எதிர்பாராமல் கிடைத்த இனிய வாய்ப்பு. அந்த தீபாவளி என் பெர்சனல் வாழ்க்கையிலும் ஒரு சின்ன் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதுவரை பாவாடை தாவணியில் இருந்த நான், உடன் படித்த தோழிகளின் நச்சரிப்பு தாங்காமல், கொஞ்சம் கூட விருப்பமில்லாமல் ஜீன்ஸ், டி-ஷர்ட்டுக்கு மாறியது அப்போதுதான். (அதன்பின்னர் கல்லூரி நாட்களில் அதுவே பிடித்த உடையாகப்போனது வேறு விஷயம்).

    விஸ்வரூபம் ஓடிக்கொண்டிரும்போதே சாந்தியில் குடும்பத்தோடு ஒரு முறையும், என் பெரியப்பாமகன் ரவியோடு ஒருமுறையுமாக இரண்டு முறை அப்படத்தைப் பார்த்துவிட்டேன். ரவி அப்போதே பைக் வைத்திருந்த கல்லூரி மாணவன். பைக் வைத்திருந்தானே தவிர வேறு தப்பு தண்டாவெல்லாம் பண்ணாத சாது. என் தந்தைக்கு அடுத்து சாந்திக்கு ரெகுலாகச்சென்று வரும் வழக்கமுள்ளவன். அப்படிப்போனபோதுதான், சாந்தியில் விஸ்வரூபம் படத்தின் 100-வது நாள் விழா நடக்க இருப்பதாகவும், அந்த விழாவில் ரசிகர்களும் கலந்துகொள்ள வசதியாக, தலைமை மன்றத்தின் சார்பில் சாந்தியில் ரசிகர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டதாகவும், தான் இரண்டு டோக்கன் வாங்கியதாகவும் சொல்லி என் தந்தையிடம், 'சித்தப்பா, நாளை நாம் ரெண்டு பேரும் போவோம்' என்றான். அப்போது அப்பா, 'எனக்கும் வர ஆசைதான். ஆனால் சாரதா இதற்கெல்லாம் ரொம்ப ஆசைப்படுவாள். அவளை நீ அழைச்சிக்கிட்டு போ' அப்படீன்னு அனுமதி கொடுத்து விட்டார். எனக்கோ பிடிபடாத சந்தோஷம். கொஞ்சமும் எதிர்பாராத வாய்ப்பு அல்லவா?.

    அது காலை நேர விழா. ஞாயிற்றுக்கிழமை என்பதாக நினைவு. முதல்நாள் மாலைதான் 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தின் 100-வது நாள் விழா நடந்திருந்தது. மறுநாள் காலை விஸ்வரூபம் 100-வது நாள் விழா, அன்று மாலை ரஜினியின் 'பொல்லாதவன்' 100-வது நாள் விழா. (தீபாவளி ராசிக்காரரான மெல்லிசை மன்னருக்கு மூன்று படங்களும் வெற்றி. அடுத்த ஆண்டும் கீழ்வானம் சிவக்கும், அந்த 7 நாட்கள், தண்ணீர் தண்ணீர் என மூன்றும் 100 நாட்கள். ராணுவ வீரன் 50 நாட்களைக்கடந்தது. இத்தனைக்கும் இசைஞானி உச்சத்தில் இருந்த நேரம்).

    காலை விடிந்தது முதலே மனதில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காலையிலேயே குளித்து உணவருந்தி, ஜீன்ஸ், டி.ஷர்ட், கூலிங் கிளாஸ் சகிதம் ரவியண்ணனின் பைக்கில் தொற்றிக்கொண்டு சாந்தி போய்ச்சேர்ந்தேன். அந்தக்காலை நேரத்திலேயே சாந்தியில் கார்பார்க்கிங்கில் சரியான கூட்டம். ரவிக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் அங்கே நின்றிருக்க என்னையும் இழுத்துக்கொண்டு கூட்டத்தில் கலந்து விட்டான். அடுத்து வரவிருக்கும் 'சத்திய சுந்தரம்' படம் பற்றி பேச்சு நடந்துகொண்டிருந்தது. ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு நின்றேன். அத்துடன் அப்போது ஓடிக்கொண்டிருந்த 'மோகனப்புன்னகை' படத்தின் ரிசல்ட் அவ்வளவு திருப்தியளிக்கவில்லை என்று வருத்தத்துடன் பேசினர்.. நண்பர்களில் சிலர், 'யாருடா இது புதுசா இருக்கு?' என்று கேட்க, 'என் தங்கச்சிடா, எங்க சித்தப்பா வருவாரில்லையா?. அவர் பொண்ணு. பேரு சாரதா' என்று அறிமுகப்படுத்தினான்.

    தியேட்டருக்குள் ரசிகர்களுக்காக பால்கனி முழுவதையும் ஒதுக்கி விட்டு, கீழ்த்தளம் முழுவதையும் விருந்தினர்களுக்கு ஒதுக்கியிருந்தார்கள். திரையுலகத்தினரும், பத்திரிகையாளர்களும் கார்களில் வந்து இறங்கிய வண்ணம் இருந்தனர். படத்தில் பங்கேற்ற கலைஞர்கள் மட்டுமல்லாது திரையுலகினர் பலரும் வந்தனர். முதலில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான கிருஷ்ணா, விஜயநிர்மலா தம்பதியினர் வந்திறங்க, அவர்களை 'மாப்பிள்ளை' வேணுகோபால் வரவேற்று அழைத்துச்சென்றார். பின்னர் அவர்கள் மூவரும் பிரதான வாயிலில் நின்று, வந்த வி.ஐ.பி.க்களை வரவேற்றுக்கொண்டிருந்தனர். தயாரிப்பாளர் பி.எஸ்.வீரப்பா, நடிகை சுஜாதா போன்றோர் காரிலிருந்து இறங்கும்போதே நாலாபக்கமும் திரும்பி ரசிககளைப்பார்த்து கைகூப்பினர். நடிகர் பிரேம் ஆனந்த் காரிலிருந்து இறங்கி வந்து ரசிகர்களோடு ஒருவராக நின்று பேசிக்கொண்டிருந்தார். நடிகர் எஸ்.வி.ராமதாஸ், என்னைப்போலவே ஒரு நண்பரின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்தார்.

    இதனிடையே டோக்கன் வைத்திருந்த ரசிகர்களை பால்கனிக்கு அனுமதிக்கத்துவங்கி விட, கூட்டம் மொத்தமும் வாயிலுக்கு முன்னேறியது. 'இப்போதே போனால்தான், ஸ்டேஜ் நன்றாகத்தெரிகிற மாதிரி இடமாகப்பார்த்து உட்காரலாம், வா' என்று ரவி கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனான். டோக்கனைப்பார்த்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். முதல் வகுப்பு டிக்கட் கவுண்ட்டரைக்கடந்து மாடிப்படிக்கு திரும்பும் இடத்தில் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் நின்று நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தார். அவரை அவ்வளவு கிட்டத்தில் பார்த்தது அதுதான் முதலும் கடைசியும். மேலே போய் நல்ல இடமாகப்பார்த்து உட்கார்ந்து கொண்டோம்.

    விழாத்தலைவர் கலைஞர் கருணாநிதியும், சிறப்பு விருந்தினராக வந்திருந்த சௌகார் ஜானகியும் தியேட்டருக்குள் வந்ததும், வி.ஐ.பி.க்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு நடிகர் கிருஷ்ணா மாலைகளை அணிவித்தார். விழாவைத்தொகுத்து வழங்கிய கதை வசனகர்தா ஆரூர்தாஸ் ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்தார். கலைஞரும், நடிகர்திலகமும் சேர்ந்தே மேடைக்கு வந்தபோது ஒட்டுமொத்தக் கூட்டமும் எழுந்து நின்று விண்ணதிர கைதட்டியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 'சிறந்த ஒளிப்பதிவாளர் எம்.விஸ்வநாத் ராய், சிறந்த படத்தொகுப்பாளர் பி.கந்தசாமி' என்று ஆரூர்தாஸ் அழைத்தபோது அவ்வளவு சலசலப்பில்லாத கூட்டத்தில், 'சிறந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்' என்று அழைத்ததும் மீண்டும் பலத்த கைதட்டல் எழுந்தது. பணிவுக்குப்பேர்போன மெல்லிசை மன்னர் மேடையேறியதும் கலைஞரின் கைகளையும், நடிகர்திலகத்தின் கைகளையும் பிடித்து மரியாதை செலுத்தியவர், கூட்டத்தினரைப்பார்த்து நன்றாகப்பணிந்து கும்பிட்டு அமர்ந்தார்.

    பி.சுசீலா தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, விழா துவங்கியது. முக்தா சீனிவாசன், ஏ.வி.எம்.சரவணன் ஆகியோர் பேசினார்கள். ஒரு கட்டத்தில் சரவணன், '........இதுபோலத்தான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும்' என்று ஏதோ சொல்ல வந்தபோது கூட்டத்தினர் (குறிப்பாக பால்கனியில் இருந்த ரசிகர்கள்) பலத்த கூச்சலிட்டதால், சட்டென்று அதை நிறுத்திக்கொண்டு வேறு சப்ஜெக்ட்டுக்குத்தாவினார். மேடையில் நின்ற 'மாப்பிள்ளை' ரசிகர்களை நோக்கி, அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார்.

  10. #2937
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    விஸ்வரூபம்' 100-வது நாள் வெற்றி விழா (தொடர்ச்சி)

    அவரையடுத்துப்பேசிய முக்தா சீனிவாசன் சிறப்பாகப்பேசினார். 'நடிகர்திலகம் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அவற்றில் 100 நாட்களுக்கு மேல் ஓடியவை 100க்கு மேல் இருக்கின்றன, வெள்ளிவிழாப்படங்களும் ஏராளமாக இருக்கின்றன. மேலும், நிறுத்தவே முடியாமல் ஓடிய திரிசூலம் போன்ற படங்களும் (பலத்த கைதட்டல்) அவரது பட்டியலில் உள்ளன. அத்தகைய வெற்றிப்பட வரிசையில் இந்த (விஸ்வரூபம்) படமும் இணைவது, இன்றைய சூழ்நிலையில் மகத்தான நிகழ்வு. நடிகர்திலகத்தின் படங்களைப்பார்த்தால் அவர் முக பாவத்தைப்பார்த்தே அவரது மன உணர்வுகளைச்சொல்லிவிட முடியும். இப்போது நடிப்பவர்களெல்லாம் சோகத்திலும் அதே நடிப்பு, கோபத்திலும் அதே நடிப்பு என்று ஒரே மாதிரி செய்கிறார்கள். விஸ்வநாதன் மியூஸிக் பண்றதை வச்சுத்தான் அவன் சோகமாக நடிக்கிறானா, கோபமாக நடிக்கிறானா என்பதையே கண்டுபிடிக்க முடிகிறது' என்று சொல்லி வந்தவர், 'உங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷமான செய்தி. என்னுடைய அடுத்த படத்தில் நமது நடிகர்திலகம் கதாநாயகனாக நடிக்கிறார்' என்றதும் பலத்த கைதட்டல் எழ, 'இன்னும் பலமாக கைதட்டுங்கள்' என்று சொல்லி பேச்சை முடித்துக்கொண்டார். ('இமயம்' படத்துக்குப்பின் 'அவன்,அவள், அது', 'பொல்லாதவன்' போன்ற வெளிப்படங்களை இயக்கினார். விழாவில் அவர் குறிப்பிட்ட படம்தான் 'கீழ்வானம் சிவக்கும்' படமாக உருவானது).

    விழாவில் கலந்துகொண்டு, அனைவருக்கும் கேடயம் வழங்க வந்திருந்த சௌகார் ஜானகி, ஆங்கிலத்தில் பேசினார். அதனால் அவர் பேச்சு முழுவதற்கும் அரங்கம் அமைதியாக இருந்தது. இறுதியாக கலைஞர் கருணாநிதி பேசியபின், நடிகர்திலகம் நன்றியுரை நிக்ழத்தினார். கலைஞர் கருணாநிதி பேசத்துவங்கியபோது...

    'தம்பி ஆரூர்தாஸ் என்னைப்பேச அழைத்தபோது, சிங்கம் கர்ஜிக்கப்போகிறது என்று சொன்னார். இரண்டு சிங்கங்கள் ஒரே காட்டில் கர்ஜிப்பது (பலத்த கைதட்டல்) திரையுலக மேடையை விட அரசியல் மேடைக்கே பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்' என்று துவங்கியவர், வழக்கம்போல பராசக்தி, மனோகரா காலங்களை நினைவு கூர்ந்தார். மீண்டும் அந்தக்காலம் திரும்பி வரும் வகையில் மாடி வீட்டு ஏழை உருவாகி வருவதைக் குறிப்பிட்டார்.

    கலைஞர் பேசி முடித்ததும், படத்தில் இடம்பெற்ற கலைஞர்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது. நடிகர்திலகத்துக்கு, கலைஞர் கருணாநிதி கேடயம் வழங்கியதும், படப்பிடிப்புக்குச் செல்வதற்காக கிருஷ்ணா, அனைவரிடமும் விடைபெற்றுப் புறப்பட்டார். ஆனால் விஜயநிர்மலா விழாவில் இருந்தார். மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் நடிகை சௌகார் ஜானகி கேடயங்களை வழங்கினார்.

    நடிகர்திலகம் நன்றியுரை நிகழ்த்தினார். அவரும், தனக்கும் கலைஞருக்குமான நெடுநாளைய நட்பைப் போற்றிப்பேசினார். மற்ற கலைஞர்களையும் பாராட்டியவர், படத்தை வெற்றிப்படமாக்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    விழா முடிந்து வெளியே வருபோது பார்த்தால், போகும்போது இருந்ததைவிட நாலு மடங்கு கூட்டம் கார்பார்க்கிங் முழுவது நிறைந்து காணப்பட்டது. விழாவுக்கு அனைத்து கலைஞர்களும் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவர்கள் வெளியே போகும்போது பார்ப்பதற்காக திரளாக கூடி நின்றனர். போலீஸார் தலையிட்டு கார்கள் செல்ல வழியேற்படுத்தித் தந்தனர். சிலர், தங்கள் அபிமான கலைஞர்களின் கார்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் வண்டியேறும்போது பார்த்துவிடலாம் என்று அவர்கள் வாகனங்களின் அருகே கூட்டமாக நின்றனர். கலைஞர் கருணாநிதி வந்திருந்ததால் அவரைப்பார்க்க தி.மு.க.வினரும், நடிகர்திலகத்தைக்காண ரசிகர்களும், காங்கிரஸாரும் கூடி நிற்க, அந்த வளாகமே கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்தது. மவுண்ட் ரோட்டில் பேருந்துகளில் செல்வோர் அனைவரும் சாந்தி வளாகத்தை ஆச்சரியமாக எட்டிப்பார்த்த வண்ணம் சென்றனர்.

    ரவியண்ணனின் பைக், பார்க்கிங் நடுவில் மாட்டிக்கொண்டதால் மட்டுமல்ல, கூட்டம் அனைத்தும் செல்லும் வரை பார்த்து விட்டுப்போகலாம் என்று நாங்கள் நின்றிருக்க, அதே மனநிலையில் ரசிகர்கள் பலரும் நின்றதால், கூட்டம் கலைய வெகுநேரம் ஆனது. வீட்டுக்குத்திரும்பியதும், அனைத்து விஷயங்களையும் அப்பாவிடம் ஒன்றுவிடாமல் சொன்னபோது அவர் ரொம்பவே மகிழ்ந்தார், குறிப்பாக என் குதூகலத்தைப் பார்த்து.

    நினைத்துப்பார்க்க எவ்வளவு இனிமையான நாட்கள் அவை.

  11. #2938
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Humble request to end up the 'cold war' with verbal exchanges (undesirable records) that are sharper and more powerful than weapons!

    Is this a thread intended to glorify the name and fame of NT by way of highlighting his acting prowess and admiringg his illustrious and enviable career that is incomparable with any other actor of this world or a thread intended to defame and disgrace our own icon by way of irrelevant critical reviews and unwarranted 'clash' of the 'titans', leading to a 'stand still' situation ? Of course, NT's image can neither be shaken nor be stirred, even as attempts are made to erode the Himalayan of acting by rodents and woodpeckers who live within or come in from outside, for their own survival!Should elite balanced gentlemen and prime movers of this thread like Raghavendra or Murali or RKS, Gopal and Joe blow up this issue when our icon's image remains intact always!!

    Can we not solve this by exchange of Personal Messages rather than exposing ourselves in a public forum like this?
    We pave way for small spark to become a wild forest fire, if these glowing discussions are not dowsed!

    For Kamal and Rajini. NT is a fatherly figure and their fans too have this outlook only. These clippings explicitly show the inherent respect and reverence commanded by NT from Kamal and Rajini, who become spellbound in the dominating screen presence of the giant NT!!



    Last edited by sivajisenthil; 20th November 2014 at 01:06 PM.

  12. Thanks Russellxqa thanked for this post
    Likes Russellxqa liked this post
  13. #2939
    Regular Hubber Irene Hastings's Avatar
    Join Date
    Oct 2007
    Posts
    158
    Post Thanks / Like
    Dear All

    I feel bad in a way that may be my comments on the NPVU song might have created an unpleasantness here. I wish to offer my apologies to all if it had hurt Mr.Raghavendar . However, a true fan ( who should be bold enough to criticise the negative side of his idol ) will not wish to see such scenes . It might have looked great if our idol had done such in the 60s but not during end 70s when its very apparent.
    The movie might have become a major hit . Still it doesnt absolve our idol . Wish to sign off saying that our hero could have been choosy in picking characters . I agree which he tried to do in the later years. Movies, like Thunai, MM, Devar Magan etc. I immensely liked his character in Jalli kattu, Lakshmi vandhachu etc.

    I have more to write . Will do it.

  14. #2940
    Regular Hubber Irene Hastings's Avatar
    Join Date
    Oct 2007
    Posts
    158
    Post Thanks / Like
    Quote Originally Posted by Irene Hastings View Post
    Dear All

    I feel bad in a way that may be my comments on the NPVU song might have created an unpleasantness here. I wish to offer my apologies to all if it had hurt Mr.Raghavendar . However, a true fan ( who should be bold enough to criticise the negative side of his idol ) will not wish to see such scenes . It might have looked great if our idol had done such in the 60s but not during end 70s when its very apparent.
    The movie might have become a major hit . Still it doesnt absolve our idol . Wish to sign off saying that our hero could have been choosy in picking characters . I agree which he tried to do in the later years. Movies, like Thunai, MM, Devar Magan etc. I immensely liked his character in Jalli kattu, Lakshmi vandhachu etc.

    I have more to write . Will do it.

    Gopal Sir,

    My request to you is still pending . Navarathri - Character by character analysis pls . Only YOU can do it.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •