-
25th January 2015, 10:39 PM
#3781
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
25th January 2015 10:39 PM
# ADS
Circuit advertisement
-
25th January 2015, 10:39 PM
#3782
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
25th January 2015, 10:40 PM
#3783
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
25th January 2015, 10:41 PM
#3784
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
25th January 2015, 10:41 PM
#3785
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th January 2015, 10:44 PM
#3786
Junior Member
Veteran Hubber
COMING SOON AT KOVAI ROYAL - DAILY 4 SHOWS
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th January 2015, 10:45 PM
#3787
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th January 2015, 11:09 PM
#3788
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th January 2015, 11:19 PM
#3789
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan – Definition of Style 17
தங்கமலை ரகசியம்
ஆய்விற்கான காட்சி .. மணித்துளிகள் 2.56.14லிருந்து 2.59.54 வரை
ஸ்டைல் அல்லது தமிழில் பாணி என பொருள்படும் வகை நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம். சினிமாவைப் பொறுத்த மட்டில் ஒரு பாத்திரத்தை சித்தரிப்பதற்கு சிறந்த முறை அதனுடைய அத்தனை பரிமாணங்களையும் முதலில் நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ற நடிப்பை வழங்குவதே. இந்த அடிப்படையில் தான் நடித்த அத்தனை பாத்திரங்களையும் முழுமையாக சித்தரித்தவர் நடிகர் திலகம். நூறு சதவிகிதம் அவர் நடித்த பாத்திரங்கள் உருப்பெற்றன, முழுமை அடைந்தன. அவருடைய இந்த அணுகுமுறையை மட்டும் உணர்ந்து கொண்டால் கூட போதும், தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்தில் ஒரு நடிகனால் வெற்றி பெற முடியும்.
காட்சி விளக்கம்
தன் பெற்றோருக்காக தன் இளமையைத் தியாகம் செய்து தரவேண்டிய பாத்திரம் விஜயேந்திரன் என்ற அந்த இளவரசனுடையது. அவனிடம் இளமையை தியானம் கேட்டுப் பெற வந்த மோகினிகளிடம் அவன் மனைவி அமுதா வலியச் சென்று தன் இளமையை எடுத்துக் கொள்ளுமாறு கேட்கிறாள். அவர்கள் அதை மறுத்து, பெற்றோருக்காக தனயன் தான் தியாகம் செய்ய வேண்டும் எனக் கூறிவிடுகிறார்கள். அந்த முதுமையான உடலுடன் தங்கமலைக்குச் சென்று அங்கிருக்கும் ஓர் மந்திரக்கோலினைக் கொண்டு வந்து பெற்றோர்கள் மேல் தடவினால் அவர்கள் குணமாகி விடுவார்கள். எனவே இளவரசன் விஜயேந்திரன் தன் இளமையை தானம் செய்து உடலால் முதியவனாகி விடுகிறான்.
தன்னுடைய தந்திரத்தால் அமுதா அந்த ரகசியத்தை இரு வீர்ர்களிடமிருந்து கேட்டறிகிறாள். அந்த மந்திரத்தை சொன்னால் உடல் கல்லாகி விடும். இளவரசன் விஜயேந்திரனோ முதுமையடைந்து விட்ட போதிலும் மனைவியை சந்தேகிக்கிறான். நீ உண்மையானவளாயிருந்தால் அந்த ரகசியத்தை சொல் என்கிறான். அவளும் அந்த ரகசியத்தைக் கூறி கல்லாகி விடுகிறாள். அவசரப்பட்டு மனைவியைக் கல்லாக விட்டு விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியில் பரதவிக்கிறான் இளவரசன்.
நடிகர் திலகம்...
ஒரு வயோதிக பாத்திரம் என்றால் மிகவும் நிதானமாக நடப்பது குரலை இழுத்து இழுத்து பேசுவது என்கிற குறுகிய இலக்கணத்தை வகுக்காமல் இந்த பாத்திரத்தை முழுமையாக வடித்திருக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பாராட்டியே ஆகவேண்டும். இதற்காக அவர் முன் இருந்திருக்கக் கூடிய சவால்கள்..
1. ஓர் இளைஞன் முதியவனாக மாறும் போது உடல் மட்டுமே மாறுகிறது. ஆனால் அந்த மனமும் குணமும் மாறவில்லை. இதனை சித்தரிக்க வேண்டும்.
2. அந்த முதியவனுக்குள் இருக்கும் இளம் வயதின் அணுகுமுறை அந்த பாத்திரத்தில் சித்தரிக்கப்படவேண்டும்.
3. முதுமை காரணமாக உடல் வலுவிழந்தாலும் தன் பெற்றோரை குணமடையச் செய்யவேண்டும் என்கின்ற அந்த இளவரசனின் லட்சிய உணர்வு வெளிப்படவேண்டும். ஓர் இளைஞன் அந்த உணர்வை எப்படி அணுகுவானோ அந்த அடிப்படையில் அந்த முதிய தோற்றத்தில் அந்த இளவரசன் அணுகவேண்டும்.
4. இது அவனுடைய நடை உடை பாவனையிலும் வெளிப்படவேண்டும்.
குறைந்த பட்சம் இந்த அளவுகோல்களையாவது நிறைவேற்றித் தான் அந்தப் பாத்திரத்தைப் படைக்கவேண்டும் சித்தரிக்கவேண்டும் என்பதே நடிகர் திலகத்தின் முன் இருந்திருக்கக்கூடிய சவால்கள்.
இப்போது காட்சிக்கு வருவோம்..
காட்சி 2.56.14ல் துவங்குகிறது. அமுதா மகிழ்ச்சி பொங்க ஓடி வருகிறாள். தங்கமலை ரகசியத்தைத் தெரிந்து கொண்டு விட்டோமே என்கிற ஆர்வம் அவளுக்குள் உற்சாகத்தைத் தருகிறது. ஆனால் இங்கோ..
விஜயேந்திரன் முதியவனாக தாயார் அருகில் அமர்ந்திருக்கிறான். அவன் முகத்தில் கோபம் தெறிக்கிறது..
--- இந்த இடத்தில் அமுதாவாக வரும் ஜமுனா ஓடி வரும் வேகத்தைப் பாருங்கள்.. அவருடைய பாத்திரமும் நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்து காட்சிக்கு உயிரூட்டத் துணை புரிகின்றன. இயக்குநருக்கும் அவருக்கும் பாராட்டுக்கள்..
விஜயேந்திர்ராக நடிகர் திலகம்... தன் கழுத்தை சற்றே திருப்பி மேலெழுந்தவாறு அவளை நேரிட்டுப் பார்க்கிறார். முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது.
எழுந்து கோபமாக அவளிடம் பேசுகிறார். அந்தக் குரலில் அந்த முதுமையை மீறி அந்த இளைஞனின் அவள் கணவனின் அந்த ஆளுமை உணர்வு பளிச்சிடுகிறது. அதுமட்டுமின்றி அந்த கோபம் நடையிலும் பிரதிபலிக்கிறது. சற்றே வேகமான நடை.
அதே சமயத்தில் உடலில் அந்த முதுமையும் அதே நேரம் தன் வேலையைக் காட்டுகிறது. முகம் ஆடுவதைப் பாருங்கள்..
கால்களின் நடையில் இளைஞனின் வேகம்.. கண்களில் இளைஞனின் சந்தேகப் பார்வை.. கழுத்தை ஆட்டும் போது உடலின் ஒத்துழையாமை.. உடல் ஆட்டம் காணுதல்..
அவள் தான் நிரபராதி, அந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ள நாடகமாடுவதாக அவள் சொன்னதும், சற்றே முகம் மலர்வதைப் பாருங்கள். அந்த ஒரு வினாடி அந்த சந்தேகம் மறைந்து சந்தோஷம் மலர்கிறது. காரணம் பெற்றோர் மேல் உள்ள பாசம், அதற்கான தீர்வு கிடைத்த மகிழ்ச்சி.. இயல்பான மனித குணம் அங்கே த்த்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
அதைச் சொன்னால் தான் கல்லாகி விடுவேன் எனக் கூறி அவள் தயங்க, கோபம் மீண்டும் தலை தூக்குகிறது. நீ களங்கமற்றவளாயிருந்தால் தெரிந்து வந்த ரகசியத்தை சொல் என்கின்றான். இந்த நேரத்தில் அவனுக்கு அவள் மனைவி என்பதையும் மீறி அந்த ரகசியத்தை சொல்ல வேண்டிய ஒரு சாதாரண பெண்ணாக தோற்றமளிக்கிறாள். சொன்னால் கல்லாகி விடுவாளே என்று அவன் மனம் யோசிக்க வில்லை.
இந்த இடத்தில் அந்தப் பாத்திரம் மிகச் சிறப்பாக சித்தரிக்கப் படுகிறது. அங்கே அந்த இளைஞனின் சுயநலம் வெளிப்படுகிறது.
இந்தக் கட்டத்தில் நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள். அந்த உடலால் முதுமையும் மனதால் இளமையும் ஒரு சேர அந்த முகத்தில் பிரதிபலிக்கும் சிறப்பைக் காணுங்கள். இதனை அவள் கன்னத்தில் அடிக்கும் யுத்தியில் நிரூபிக்கிறார். இளைஞனாயிருந்தால் கோபத்தில் கைகள் நன்கு மேலே சென்று வேகமாக அழுத்தமாக பளாரென்று கன்னத்தில் அறையும். ஆனால் இங்கோ முதுமையின் காரணமாக கை மெதுவாக அழுத்தம் குறைவாக அவள் கன்னத்தில் அறைகிறது.
அமுதா மனம் தணிந்து அந்த ரகசியத்தை சொல்ல முற்படுகிறாள். இப்போது அவர் முகத்தை கவனியுங்கள். அதில் ஆர்வம் தென்படுகிறது. காதைக் கூர்மையாகத் தீட்டி என கதைகளில் படிப்போமே .. அந்த வர்ணனையைக் கண்களால் பாருங்கள்...கவனத்தோடு அந்த மந்திரத்தைக் கேட்கிறார்.
தங்கமலை ரகசியத்தைச் சொன்னவுடன் அமுதா சிலையாகிறாள்.
இப்போது துவங்குகிறது.. நடிப்புச் சாம்ராஜ்ஜியத்தின் புதிய பரிமாணம்.
முதுமையும் இளமையும் ஓன்று சேர்ந்து ஒரே உணர்வை பிரதிபலிக்கின்றன. இரண்டுமே அமுதாவின் அந்த நிலைக்கு வருந்துகின்றன.
இந்தக் காட்சியில் அமுதாவை சற்றே மெல்ல திரும்பிப் பார்க்கிறார் முதியவரான இளவரசர். சிலையாகி விட்ட அமுதாவைக் கண்டு திடுக்கிடுகிறார். கைகளைக் காட்டியவாறே அவளுடைய நிலையை யாரிடமாவது சொல்லவேண்டும் என துடிக்கிறார். அந்த வயது முதுமை இவையெல்லாம் மனம் மறந்து அவளுக்காக அவருக்குள் ஓர் வேகத்தைத் தருகின்றன. பின்னால் நடந்து செல்கிறார், பின் தாயார் அருகில் வருகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்.
தன்னால் தான் அவளுக்கு இந்த கதி எனப் புலம்புகிறார்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அந்த முதியவர் அவள் சிலையாகி விட்டதைக் கண்டவுடன் அவள் கல்லாகி விட்ட சோகமும் தன்னுடைய அவசர புத்தியையும் தாங்க முடியாமல் அழத் துவங்குகிறார். குமுறுகிறார். துடிக்கிறார். இவையாவுமே அந்தக் குரல்களில் வெளிப்படும் சிறப்பைப் பாருங்கள், கேளுங்கள்.
இந்த இடத்தில் அந்த அமுதா என்ற ஒரு வார்த்தையை எவ்வளவு விதமாக உணர்ச்சி பூர்வமாக அழைக்கிறார் பாருங்கள்..
குரலிலேயே பாத்திரத்தை அழுத்தமாக சித்தரிக்க முடியும் என்று நிரூபித்த நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பிற்கு மற்றுமோர் சான்று இக்காட்சி.
Last edited by RAGHAVENDRA; 25th January 2015 at 11:36 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
26th January 2015, 11:05 AM
#3790
Junior Member
Senior Hubber
REPUBLIC DAY GREETINGS TO ALL OUR HUBBERS AND NT FANS.
Also advance greetings for our part 15 inaugural very soon.
like NT our NT thread will also create more records.
ramajayam
Los angeles.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks