Page 339 of 400 FirstFirst ... 239289329337338339340341349389 ... LastLast
Results 3,381 to 3,390 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3381
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    இன்று ஹனுமத் ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. நட்சத்திரம் அடிப்படையில் சில கோயில்களில் நாளை அனுசரிக்கப்படுகிறது.

    ஆஞ்சநேயர் அருளால் வாழ்வில் அனைவரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வேண்டுவோம்.

    இதோ ஆஞ்சநேய பக்தராக நடிகர் திலகம் முரடன் முத்து திரைக்காவியத்தில்.



    07.25லிருந்து பார்க்கவும்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks sss thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3382
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அள்ளஅள்ள குறையாத நடிப்பின் அமுதசுரபி நடிகர்திலகமே!!


    புதிய குறுந்தொடர் : படமா? பாடமா?!
    மனிதனின் பண்பாடு கலாசார நாகரிக வளர்ச்சியில் திரைப்படங்கள் வானொலி தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகள் போன்ற ஊடகங்களின் பங்கு பள்ளி கல்லூரிப் படிப்புக்குச் சற்றும் குறையாத பங்கினை வகிக்கின்றன நமது வாழ்க்கை முறையினை அடியொற்றியதே திரைப்படங்கள் என்றாலும் வணிக நோக்கு மிஞ்சி வெறும் ஒற்றைச் சாரளமான பொழுதுபோக்கு அமசங்களையே குறிவைத்து திரைப்படங்கள் நகர்ந்துகொண்டிருந்த சூழலில் நடிப்புப் புயலாக ஊடுருவி உச்சத்தை அடைந்த நடிகர்திலகம் மட்டுமே திரைப்படங்கள் வெறும் காணொளிப் படங்களாக பார்த்தவுடன் மறந்து விடக்கூடிய தன்மையின்றி காலங்கள் மாறினாலும் மக்கள் மனதில் மறக்கவொண்ணாத திரைப்பாடங்களாக நிலைபெற்று மனித வாழ்க்கை நகர்வுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

    பணம் சம்பாதிப்பது மற்றுமே குறிக்கோளாக இல்லாது நடிப்புப் பசி கொண்ட மதயானையாக திரைக்காட்டையே அவர் கலக்கி எடுத்ததால்தான் இன்று அமரகாவியங்களாக அவர் விட்டுச்சென்றிருக்கும் கர்ணன், பாசமலர், தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், நவராத்திரி, தெய்வமகன், கௌரவம் தங்கப்பதக்கம்.....ப வரிசைக்காவியங்கள்....புதிய பறவை, வீரபாண்டிய கட்டபொம்மன்.....கணக்கிலடங்காத காலத்தை வென்ற காவியங்கள் நின்று நிலைத்த திரைவழிப் 'பாடங்களாக' ரசிகர் கூட்டத்தை இன்றும் திரையரங்குகளை நோக்கித் திரளச் செய்கின்றனவே!!

    நடிகர்திலகத்தின் ஒப்புயர்வற்ற நடிப்புத் திறனால் வெறும் படங்களை அவரால் எப்படி பாடங்களாக மாற்ற முடிந்தது என்பது பற்றிய ஒரு அலசலே இக்குறுந்தொடரின்
    சிறப்பு நோக்கம்


    படம்1 : கர்ணன்

    பாடம்1:
    தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும்!


    தர்மதேவதையின் புதல்வனே ஆனாலும் செஞ்சோற்றுக்கடன் ஆற்றிட தர்மப்பாதையிலிருந்து பிரள நேர்ந்தால் அழிவையே சந்திக்க நேரிடும் என்னும் கருத்தை மக்கள் மனதில் ஆணி அடித்தாற்ப் போல் பதிய வைத்தது கர்ணனாக மனதை கொள்ளைகொண்ட நடிகர்திலகத்தின் நடிப்பாற்றலே!! வசன மழை பொழிந்திடாது மெய்சிலிர்க்க வைக்கும் முகபாவங்களாலேயே அம்புகள் தைக்கப் பட்டு மரணத்தின் விளிம்பிலும் தர்மசிந்தனையை கைவிடாது இறைவனையே ஆட்கொண்ட உச்ச நடிப்பினை வழங்கி இறைவனின் விஸ்வரூப தரிசனத்தின் முன் தனது நடிப்பின் விஸ்வரூபத்தை வெளிப்படுத்திய நடிப்புச் செம்மலே! என் வாழ்வின்அர்த்தம் உனது ரசிகனாக இருந்து உன் திரைப்பாடங்களின் கருத்துக்களை உள்வாங்கி உன்போல் உழைப்பை மட்டுமே மூலதனமாக்கி உயர்வதே !



    பாடம் 2 :
    பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சாலவும் நன்று : கொடையில் சிறந்தது ஒரு நல்ல மாணவனை உருவாக்கிடும் கல்விக் கொடையே
    பாடம் 3
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை !
    என்னதான் தானவீரனாக இருந்தாலும் தன்னுடன் ஒட்டிப்பிறந்த உயிர்காக்கும் கவசகுண்டலங்களையே தானம் செய்யும் அளவுக்கு இந்திரனின் சூதுவலையில் தந்தை சூரியனார் எச்சரித்த பின்னும் தர்மசிந்தனையே என் கர்மபலன் என்று மனோதிடம் மாறாத கர்ணனே! சிந்தை தெளிந்து தந்தை சொல்லை மதித்திருந்தால் துன்பம் கூடாதிருந்திருக்குமே!!



    பாடம் 4
    பெத்த மனம் பித்து.... பிள்ளை மனம் கல்லு !
    தர்மரூபன் கர்ணன் விஷயத்திலோ......பிள்ளை மனம் பித்து...பெத்த மனமோ கல்லாகி மற்ற பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக ஒதுக்கித் தள்ளிய தெய்வமகனிடமே வரம் கேட்டு இறைஞ்சுமளவுக்கு!!

    குந்திதேவியே தனது அன்னை என்றறியாது அவரைப் பார்த்த கணமே உடல் குறுகி மனம் மருகி இனம் புரியாத பாசமும் மரியாதையும் கலந்த உணர்வுத் தேக்கத்துடன்
    வணங்கி வரவேற்று நெகிழும் அந்தக் கணமே உலகின் எந்த நடிப்புக் கலைஞரும் காட்ட இயலாத நுட்பமான முகபாவங்களில் எம் மனதை நொறுக்கியவரே !
    ரசிப்புத்தன்மை கெட்ட சுருட்டுக் கனவான்களிடம் உன் உலகத்திலேயே உயர்ந்த நடிப்புத் திறமைக்கு உரிய அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது இருட்டுக்குள் கறுப்புப்
    பூனையைத் தேடும் குருடனின் அவல நிலையே !!

    Last edited by sivajisenthil; 22nd December 2014 at 10:47 PM.

  5. #3383
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    NT Titbits!

    காத்தவராயன் (1958) திரைப்படத்தில் நடிகர்திலகம் வயோதிகர் கெட்டப்பில் பாடி ஆடும் ஆரியமாலா பின்னாளில் NT ராமாராவ் தனது பலே தம்முடு (1965) (remake of Shammi Kapoor's China Town) திரைப் படத்தில்KR விஜயாவுடன் ரயில் பயணத்தின் போது அதே கெட்டப் அங்க அசைவுகளுடன் நடித்திருப்பார்!





    அதே படத்தில் ராமாராவ் கிளப்பில் விஜயாவை கவர ஸ்டெப்புலு டான்ஸ் ஆடிப்பாடும் காட்சியமைப்பில் தெய்வமகன் (1969) திரைப்படத்தில் நடிகர்திலகம் சற்று மாறுபட்டு தனது ஸ்டைலில் அன்புள்ள நண்பரே பாடலில் கதாநாயகி ஜெயலலிதாவை கவர பாடி ஆடி அசத்தியிருப்பார்





    கர்ணனின் புகழுக்கு பக்கபலமாக இருந்து பெருமை சேர்த்திட்ட N.T. ராமாராவ் அவர்களுக்கு நன்றியறிதல்கள் !
    Last edited by sivajisenthil; 23rd December 2014 at 11:25 AM.

  6. #3384
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 11

    New Dimension - ஆம்... தன்னுடைய 54வது வயதில், 222வது படத்தில் தன்னுடைய நடிப்பில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்தவரை என்னவென்று சொல்வது..

    ஒரே வார்த்தையில் சொல்வதானால் ... GENIUS...

    கருடா சௌக்கியமா

    இந்தப் படத்தைப் பற்றி வாசு சார் அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டார். இதில் புதியதாக நான் சொல்ல என்ன இருக்கிறது. எந்த அம்சத்தையும் விட்டு வைக்காமல் அணு அணுவாக ரசித்து எழுதி விட்டார் வாசு சார்.

    இருந்தாலும் இப்படத்தில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறாக ஒரு காட்சியைப் பற்றி அலச விரும்புகிறேன்.

    தீனதயாளு, தான் உயிருக்குயிராக நேசித்த தன் தாய் மேரியம்மாவை ஒரு பணக்காரன் காரை ஏற்றிக் கொன்று விடுகிறான். அதோடு நிற்காமல் தீனதயாளுவைக் கொல்ல ஒரு அடியாளோடு அவர் வீட்டிற்கு வருகிறான். வந்த அடியாள் தீனதயாளுவைப் பார்த்தவுடன் தன் வேலையை விட்டு விட்டு அவருக்கு மரியாதைக்கு வணக்கம் செலுத்தி விட்டுச் சென்று விடுகிறான். இப்போது அந்தப் பணக்காரனுக்கும் தீனதயாளுவிற்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் இந்த ஸ்டைல் தொடரில் இந்த பாகத்தின் கரு.

    காட்சி 1.38.லிருந்து துவங்குகிறது.

    சிரித்தவாறே திரும்புகிறார் தீனதயாளு...அந்த சிரிப்பு, கையில் அந்த சிகரெட்டைப் பிடித்திருக்கும் லாவகம், கழுத்தை ஒரு பக்கமாய் சாய்த்து அந்தப் பணக்காரரை (சங்கிலி முருகன்) பார்க்கும் பார்வையில் வெளிப்படும் அந்த மேம்போக்குத்தனம்... இந்த ஒரு விநாடி காட்சியிலேயே ரசிகர்கள் FLAT...என் ஆளையே வைத்து என்னை மடக்கப் பார்க்கிறியா, என்ன புத்திசாலின்னு நெனப்பா.. இந்த வரிகளை அவர் சொல்லும் விதம் ...புதுமையானது.. A different perspective in voice modulation ...தான் யார், தான் செய்த காரியம் என்ன என்பதை ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே அவர் நடந்து வரும் பாணி... மிக மிக வித்தியாசமானது.. இந்த மாதிரி கோணத்தில் அவர் நடிப்பை நாம் பார்த்தது இதுவே முதன் முறை...அதாவது இந்த மாதிரி வில்லத்தனமான வசனங்களை ஒரு இளைஞனாக நடித்த போது அவர் உச்சரித்த விதமே வேறு.. உதாரணம் திரும்பிப் பார், பெண்ணின் பெருமை போன்ற படங்கள்..

    ஆனால் இதே வில்லத்தனமான நடிப்பை இந்தப் படத்தில் அந்த வயதான பாத்திரத்தில் அவர் ஏற்று நடித்திருப்பது புதுமையிலும் புதுமை.. உன் பார்ட்னரை உன்னை விட்டு விலகச் சொன்னது நான் தான் என்று சொல்லும் போது ஒரு காலைத் தூக்கி வைக்கும் அகம்பாவம்...உன் மேனேஜரை விட்டே உன்னை இங்கே கூட்டிக்கிட்டு வரச்சொன்னது நான் தான் என்று சொல்லும் போது அந்த சிகரெட்டை வருடும் ஸ்டைலைப் பாருங்கள்..

    காரணமும் நானே.. காரியமும் நானே... இதைச் சொல்லும் போது அவருடைய விழிகளைப் பாருங்கள்.. என்னை மீறி உன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறும் அந்தக் கண்களில் தெறிக்கும் கனல்...எப்படி என்னோட கீதோபதேசம் எனச் சொல்லும் போது சிரிக்கும் ஆணவச் சிரிப்பு...

    பணக்காரன் காலில் விழும் போது க்ளோஸப்பில் கண்களில் தெறிக்கும் அனல்... சிவனின் நெற்றிக்கண் தோற்றது...

    அவன் எழுந்திருக்கும் போது, அவன் சுட்டுக் கொன்றது தன் தாயைத் தான் என அவர் கூறும் போது, அந்தக் கோபத்தைத் தாண்டி சோகமும் குடி கொள்கிறது.. சோகத்திற்குள் பாசம் ஒளிந்திருக்கிறது.. அந்தப் பாசம் கோபத்தை மீண்டும் கிளறி விடுகிறது..

    எங்கம்மாவின் உயிரோட விலை பத்தாயிரம் ரூபாய் இல்லை.. எனக் கூறிக் கொண்டே வேட்டியை தூக்கிக் கட்டும் போது அதில் அந்த கோபம் வெளிப்படுவதைப் பாருங்கள்.

    என் ஆட்களை அனுப்பிச்சா ஒன்னை ஒரேயடியாக க்ளோஸ் பண்ணிடுவாங்க.. இந்த வரிகளைச் சொல்லும் போது கைகளால் சொடுக்குப் போட்டு அந்த அதிகாரத்தைக் காண்பிக்கும் பாணி..

    நீ அப்படி சாகக்கூடாது.. உன் உயிர் இருக்கும் வரை அணு அணுவா சாகணும் எனச் சொல்லும் போது அந்த விரல்களில் அந்த அணு அணுவாக என்ற வார்த்தைக்கு அர்த்தம் தருகிறார் ...

    இதையெல்லாம் சொல்லி விட்டு அத்தனை பணக்காரர்களுக்கும் இந்த தீன தயாளு விடும் எச்சரிக்கை டாய்.. என சொல்லி விட்டு

    எட்றா துண்டை என்கிறாரே பாருங்கள்... ஆஹா...

    அந்த துண்டை எடுத்து அவர் தோளில் சுற்றிப் போடும் ஸ்டைல்... முடிக்கும் போது கைகளின் உதவி இல்லாமலேயே மூக்கை உறிஞ்சும் Finishing Touch...



    A film with a different dimension of Acting by the Genius...

    There are umpteen scenes in this film.. which has to be analysed frame by frame about NT' Acting prowess.

    குறிப்பாக முத்துகிருஷ்ணா என்ற பெயரை இப்படத்தில் நடிகர் திலகம் உச்சரிக்கும் போதெல்லாம் நம் காதில் ஸ்டைல் மன்னா... என நம் மனசு கூவிக்கொண்டே இருக்கிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #3385
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Ooty Varai Uravu (Full Movie) - Watch Free Full L…:


    கோவை டிலைட்டில்
    கிறிஸ்துமஸ் முதல்


    தமிழ்நாட்டின் மாமனிதர்
    அரசியல் மேதைகளும் அஞ்சிய

    நடிகர்திலத்தின்


    ஊட்டி வரை உறவு.

  8. #3386
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    இந்திய திரையுலகின் பின்னணிப் பாடகர்களில் தனித்துவம் பெற்று ஒரு முடிசூடா மன்னராக வலம் வந்தவர் முகமது ரபி அவர்கள் இந்திமுன்னணிக்
    கதாநாயகர்கள்...குறிப்பாக ஷம்மிகபூர் அவர்களின் குரலாகவே வாழ்ந்தவர். அவரது 90வது பிறந்ததினத்தில் நினைவு கூர்வோம்.
    தமிழில் TM சவுந்திரராஜன் நடிகர்திலகத்தைப் பெருமைப்படுத்திய இரு புகழ் பெற்ற பாடல்களை இந்தியில் பாடியவர்.

    எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் எங்க மாமா



    இந்தி பிரம்மச்சாரியில் ......(Starring Shammi Kapoor)




    ஆறு மனமே ஆறு .....ஆண்டவன்கட்டளை



    இந்தியில் .....Heer Ranjhaa (Starring Raaj Kumar)

    Last edited by sivajisenthil; 23rd December 2014 at 01:07 PM.

  9. Likes sivaa, Russellmai liked this post
  10. #3387
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like

    Is the awardee honoured, or the award?



    For millions across the world, conferring of the Dadasaheb Phalke award on thespian Sivaji Ganesan could not have come a day too soon, the award acting as a salve on the collective hurt suffered by Tamilians to see this emotional powerhouse being overlooked for the national acting award time and time again.

    In contrast, the present award does not celebrate his performance in just one film -- leave that for the young and restless, or the bold and beautiful, they have miles to go -- but lauds his lifetime contribution to cinema.

    And, you can say that again. If there is one actor beyond the Vindhyas who moulded generations of actors with his manner of acting, who inspired the audience to a feeling of pride in their rich heritage simply with his dialogue delivery, who will not say die even when age and ill-health have reduced his strength, well, the selectors have chose right.

    Often is the comparison made between the other actor from Bombay, Dilip Kumar, and Sivaji Ganesan. The comparison is not only odious, but also erroneous. Certainly Dilip Kumar is an actor par excellence, but there is a crucial difference. In his heyday, and till today, Dilip Kumar had that something about him that turned women into jelly by just watching him. Sivaji too played romantic roles in his time, and to be honest well beyond it, but he never had that quality about him that made women heady; that honour went to the other Ganesan, Gemini, better known to the world as actress Rekha's father. Sivaji moved women all right; they flocked to the cinema houses to see him, but he brought in the mothers, not the daughters.

    Tamil cinema, like its Hindi counterpart, is of vintage quality, and, importantly, it was used to kindle the national spirit and, after freedom, the regional spirit. This is something critical below the Vindhyas and it is also something that those beyond the ranges cannot easily accept. For the latter, speaking as a Tamilian, I suppose it beats comprehension that before they turned this ancient land into a civilised one, there was already a large group flourishing with its own mores, language, customs and traditions, all of which survive till today.

    It is not something that the south will forget, their cinema being only one medium to articulate this pride. That the so-called secondary centre, Madras, has beaten the daylight out of the premier, Bombay, can easily be seen from the quality of films being made at the two places, and that no Hindi actor or actress today considers himself or herself as having arrived till they act in one particular Tamil director's films or from the number of Tamil films being dubbed/remade into Hindi but still failing to capture the original flavour.

    The last point, in fact, can best be illustrated with the recent Hindi hit, Virasat. The role essayed by Amrish Puri, simply another powerhouse, loses its sheen when compared against the original played by Sivaji Ganesan in Thevar Magan.

    The point I am trying to make is this: that Tamil cinema has today reached its pinnacle thanks to the efforts of stalwarts like, and particularly, Sivaji Ganesan, and that is not regional pride alone talking.

    Today, the question of a national award still eluding him does not arise; it would amount to honoring the award, and not the other way around. But it does not obliterate the fact that even as he was putting in appearances that would made a lesser actor quail, he was repeatedly overlooked for the same for just one reason: political compulsions.

    In the glory days of the Dravida movement, power flowed not from the barrel of a gun but from the playwright's pen and the actor's performance. Inside, by Annadurai, a duo emerged that set Tamil cinema first and the state next afire: M Karunanidhi as the penman and M G Ramachandran as his sword-arm. There was a third force, who stayed out of using films as a political vehicle, but still managed to play roles that roused the audience, Sivaji Ganesan.

    Among his early repertoire were films of every hue: mythological, historical and socials, but it was the historicals that still ring in one's ears. His dialogue delivery in the film Veera Pandiya Kattabomman, about a Tamil king who opposed the Brits in vain, must still be played over and over in acting schools in Madras.

    Oh, there were many more that moved one so, that very few films do today. Tamil cinema by now had been divided into two separate audiences, rooting for MGR and Sivaji Ganesan, the hero of the masses and the hero of the classes respectively. In the midst of it all was politics.

    The Dravidians had come to power, but the tension between the sword and the arm that held it soon erupted. And when MGR broke away from Karunanidhi, the central government -- no prizes for guessing who it was headed by -- conferred the national award on MGR. Have any of you seen MGR act? Oh, he could sway the crowds with his good Samaritan roles, but in the acting stakes my bathroom boiler would probably notch higher.

    It was de rigeur those days for actors to belong to political parties, and Sivaji Ganesan was a member of the Congress party, the overseer of things all over. But what must have cost him the important award, which his doorpost rival bagged so effortlessly, was the fact that he never espoused his politics through his films. And that politics, not performance, is what counts needs no illustration than the fact that the same MGR was even conferred that Bharat Ratna posthumously, by the central government headed by the same party.

    But none of Sivaji's performances were considered worthy of an award, never mind that he spawned an entire generation of actors or that even the mightily Kamal Hasan could not overhaul him when they finally starred together. Yes, to his critics Sivaji Ganesan will remain a ham, a loudmouth whose idea of emoting is to contort the face, but they are missing the woods for the trees.

    Acting, those days, hadn't come across method, and, more importantly, the only way one could come into cinema was through the stage, so an element of theatricality was bound to be there. But why would critics be there if not to criticise? They have not prevented other countries from appreciating Sivaji's contribution to cinema. And like the true artiste he is, he has not let such petty things bother him; he has continued to do what he knows best. And, whenever the history of Tamil cinema is chronicled, it will be Sivaji who will dominate the pages.

    - Saisuresh Sivaswamy
    http://www.rediff.com/news/jul/07sai.htm

  11. Thanks eehaiupehazij thanked for this post
    Likes sivaa liked this post
  12. #3388
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like

    ‘அவன் என்று வந்த இடங்களை ‘அவள்’ என்று மாற்ற

    காதலித்து மணந்த முதல் மனைவியை விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்து விட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்றுநோய் டொக்டர் தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை, அவளோடு ஏற்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்து கண்களையும் இழந்து தவிக்க, சந்தர்ப்பவசமாக முதல் மனைவியே அவருக்கு நேர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து, அவரை அவள் பால் திருப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வோக்கிங் அழைத்துப் போகும் போது, அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல். இதுதான் சிட்டுவேஷன்.

    இதற்கு பாடல் எழுதுங்கள்’ – இயக்குநர் பீம்சிங் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார். அதில் ஒன்று பிடித்துப் போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக் கொண்டிருந்த கண்ணதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் “டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துவிட்டு வா” என்றார். பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார்.

    அதைப் புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர், “இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல். இதில் ‘அவன்’ என்பதை அவள் என்று மாற்றிப் பாருங்கள் விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிட்டுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்” என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் நான் ‘அவன்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் ‘அவன்’ தந்த மொழியல்லவா இதில் ‘அவன் என்று வந்த இடங்களை ‘அவள்’ என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட, வாவ்! கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

    மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார். ‘எப்படி கவிஞரய்யா இது...?’ என்று. சொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப்போனது. கடவுளைப் பற்றி கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நேர்சாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது. என்னை யாரென்றும் எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய். இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் நான் ‘அவள்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா என்பாடல் ‘அவள்’ தந்த மொழியல்லவா

    படம் - பாலும் பழமும்



    courtesy:http://www.goldentamilcinema.net/ind...09-27-20-57-44

  13. Likes sivaa liked this post
  14. #3389
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மணிசேகரன் சாருடன் சில மணி நேரங்கள்

    மணிசேகரன் - நமது இந்த மன்றத்தில் நெடுநாள் உறுப்பினராக இருப்பவர்கள் அனைவருக்கும் அறிமுகமான பெயர். பழைய படங்கள் மற்றும் பாடல்கள் பற்றிய பல்வேறு தகவல்கள், அன்றைய நாட்களின் முன்னணி நாயகர்கள், நாயகிகள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் ஆகியோரை பேட்டிக் கண்டு அதை சுவைபட இங்கே எழுதியவர். 2008-ல் நான் தொடராக எழுதிய பாடல்கள் பலவிதம் பகுதியை முதலில் ஆரம்பித்து எழுதியவர். மலேஷியாவில் பிறந்து வளர்ந்த இவர் இப்போது ஜெனிவாவில் ஐக்கிய நாட்டு சபையின் கீழ் வரும் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணி புரிகிறார். எப்போது தமிழகத்திற்கு வந்தாலும் தகவல் சொல்லுவார். அவரை நான் சந்திப்பது வழக்கம். சென்ற வாரம் சென்னை வந்திருந்த அவரை சந்தித்தேன்.

    எப்போதும் போல் பல்வேறு விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 1970-களிலும் 80-களிலும் நடிகர் திலகத்தின் படங்களை சென்னை திரையரங்குகளில் பார்த்த அனுபவங்களை உணர்ச்சி பொங்க விவரிப்பார். முதன் முறையாக 1977 மே மாதம் கோடம்பாக்கம் லிபர்ட்டி தியேட்டரில் புனர் ஜென்மம் படத்தை பார்த்ததையும் அதில் நடிகர் திலகம் கூலிங் கிளாஸ் அணிந்து நடந்து வரும் ஸ்டைலிற்கே ரசிகர்கள் ஆர்ப்பரித்ததையும் எப்போதும் நினைவு கூறுவார் அதன் பிறகுதான் தமிழகத்திலே ரசிகர்கள் எந்தளவிற்கு நடிகர் திலகத்தின் நடிப்பின் நுணுக்கங்களை ரசிக்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டதாக சொல்வார். அதன் பிறகு ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் இது போல பழைய படங்கள் ஓடும் திரையரங்குகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

    இப்போது முன் போல் பழைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில்லை என்பதனால் கடந்த சில பல வருடங்களாக அவரால் போக முடியவில்லை. இம்முறை சென்னைக்கு வரப்போகும் தகவலை தெரிவிக்க தொடர்பு கொண்ட அவர் நடிகர் திலகத்தின் படம் ஏதேனும் ஒன்றை திரையரங்கில் பார்க்க முடியுமா என்று ஆவலோடு கேட்டார். அவரிடம் அவர் வரும் நேரமும் நமது NT FAnS அமைப்பின் சார்பில் மாதந்திர படம் திரையிடும் தேதியும் அதே சமயத்தில் அமைந்திருப்பதை தெரிவித்து விட்டு அவரை படம் பார்க்க அழைத்தேன். நடிகர் திலகத்தின் எல்லாம் உனக்காக திரையிடப்படப் போகிறோம் என்று தெரிந்ததும் மிக மிக மகிழ்ச்சியாக வருவதாக சொன்னார்.

    படம் திரையிட்ட டிசம்பர் 14 ஞாயிறு அன்று காலை உடல்நலமில்லாமல் இருக்கும் அவரது நீண்டநாள் நண்பர் ஒருவரை காண காஞ்சிபுரம் சென்ற மணி சார் அங்கிருந்த சூழல் காரணமாக உடனே திரும்ப முடியாமல் மாலை 5 மணிக்கு மேல்தான் கிளம்பியிருக்கிறார். டிராபிக் காரணம் இங்கே வந்து சேரும்போது இரவு 7.30 மணி ஆகிவிட்டபடியால அவரால் படத்திற்கு வரமுடியவில்லை. அதற்காக மிகவும் வருத்தப்பட்டார். படத்தின் முக்கிய காட்சியான முதலிரவு காட்சியில் சில நிமிட துளிகளில் நடிகர் திலகத்தின் முகம் எப்படி பல்வேறு முகபாவங்களை பிரதிபலிக்கும் என்பதை விவரித்து அதை காண முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டார்.

    இப்படி பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு ஆச்சரியமான விஷயத்தை பகிர்ந்துக் கொண்டார். ஐக்கிய நாட்டு சபையின் கீழ் வரும் அலுவலகத்தில் வேலை செய்வதால் அவருடன் பல நாட்டு மனிதர்களும் இணைந்து வேலை செய்கின்றனர். இவரிடம் நட்பாக இருக்கும் பல நாட்டவரும் இவரின் வீட்டில் வந்து இவர்களின் விருந்தோம்பலை ஏற்று போவதுண்டு. அப்படி ஒரு நாள் இவரது வீட்டிற்கு ரஷ்ய பெண்மணி ஒருவர் வருகை தந்திருக்கிறார். அவர் வரும்போது மணி சார் youtube இணையதளத்தில் பந்தா பாசம் படத்தில் வரும் நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ பாடலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த ரஷ்ய பெண்மணியும் பாடலை பார்க்க உட்கார்ந்தவர் அப்படியே பாடலில் லயித்துப் போயிருக்கிறார். குறிப்பாக நமது நடிகர் திலகத்தின் முகபாவங்களைப் பார்த்துவிட்டு வியப்பு மேலிட அந்தக் காட்சியைப் பற்றியும் படத்தின் கதையைப் பற்றியும் கேட்க மணி சார் அவர்க்கு புரிகிறார் போல் விளக்கியிருக்கிறார். குடும்ப சூழல் காரணமாக மாற்று திறனாளியான ஒரு பெண்ணிற்கு வாழ்வு கொடுக்கும் நாயகன் அந்த கல்யாணம் நடைபெறும்போது நாயகன் காதலித்த பெண்ணே தாலி எடுத்துக் கொடுப்பது அதன் பிறகு வரும் முதலிரவு காட்சி பாடலின் இறுதியில் resigned to the fate என்பது போல் ஒரு சிறு புன்முறுவல் காட்டி திரும்பும் நடிகர் திலகம், மொழியறியாமல் பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த அந்த ரஷ்ய பெண்மணி ஒரு pen drive-ல் அதை copy எடுத்துக் கொண்டு போனாராம்.

    ஒரு விதத்தில் பார்த்தால் நடிகர் திலகத்தின் நடிப்பை ரசிக்க மொழியறிவு தேவையில்லையே! ஆசிய ஆப்ரிக்க படவிழா தொடங்கி, மார்லான் பிராண்டோ, டேவிட் லீன் போன்றவர் முன்மொழிந்து பிரெஞ்சு அரசாங்கம் வழிமொழிந்த கல்வெட்டு உண்மை அல்லவா அது!

    நன்றி மணி சார்!

    அன்புடன்

  15. Thanks sivaa thanked for this post
    Likes kalnayak, sivaa liked this post
  16. #3390
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் காலமானார்


    திரைப்படம்





    ரஜினிகாந்த, கமல் ஹாசன், சுஜாதா, சரிதா, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ் நடிகர்-நடிகையரை அறிமுகப்படுத்தியதுடன் சமூக சீர்திருத்த கருத்துகளுடன் கூடிய கதையம்சத்துடன் அமைந்த பல புரட்சிப் படங்களை இயக்கியதன் மூலம் ‘இயக்குனர் சிகரம்’ என புகழப்பட்ட கே.பாலசந்தர் இன்றிரவு காலமானார்.

    தஞ்சை மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி கிராமத்தில் 9-7-1930 அன்று பிறந்த கே.பாலசந்தர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.

    இதில் கதாநாயகனாக நாகேஷ் நடித்திருந்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி போன்ற படங்கள் இவரது தனி முத்திரையை திரையுலகில் பதிவு செய்த குறிப்பிடத்தக்க படங்களில் முக்கியமானவையாக கருதப்படுகின்றது.

    தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்த இவர், 90-களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார். பாலச்சந்தரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நூற்றுக்கு நூறு தற்போது மறு தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

    மேஜர் சந்திரகாந்த், இரு கோடுகள், பூவா தலையா, பாமா விஜயம், தாமரை நெஞ்சம், நான் அவனில்லை, புன்னகை, சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை, ஜாதிமல்லி, நூற்றுக்கு நூறு, கல்கி போன்ற வெற்றிப் படங்களை தமிழில் இயக்கிய இவர் மரோசரித்ரா உள்ளிட்ட தெலுங்குப் படங்களையும் ஏக் துஜேகேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற இந்திப்படங்களையும் இயக்கியுள்ளார்.

    பல்வேறு பிலிம்பேர் விருதுகள், 1987-ல் பத்மஸ்ரீ விருது, 2010-ல் தாதாசாகேப் பால்கே விருது போன்ற சினிமாத்துறை விருதுகளை பெற்றுள்ள பாலசந்தருக்கு அண்மையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டது.

    இதையடுத்து, 84 வயதான அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்றிரவு சுமார் 7 மணியளவில் காலமானார்.

    அவரது உடலுக்கு ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    malaimalar

    ஆழ்ந்த இரங்கல்கள்..!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •