-
15th September 2014, 05:48 PM
#1601
Junior Member
Regular Hubber
Sigaram thodu flex
Covai
Arcana group
http://s1055.photobucket.com/
-
15th September 2014 05:48 PM
# ADS
Circuit advertisement
-
15th September 2014, 06:01 PM
#1602
Junior Member
Newbie Hubber
First in collection and going strong. Vikram Prabhu has done it for the fourth time in Row. Congratulations. we are proud of you.
CHENNAI BOX OFFICE
Home > Chennai Box Office Rankings
1. SIGARAM THODU
Previous
Movie
Sigaram Thodu
Ranking based on Chennai Box Office Collections from Sep 08th 2014 to Sep 14th 2014
Week : 1
Total collections in Chennai : Rs. 77,60,475
Verdict: Good Opening
No. Shows in Chennai (Weekend): 189
Average Theatre Occupancy (Weekend): 75%
Collection in Chennai (Weekend): Rs. 77,60,475
CAST AND CREW
Production: UTV Motion Pictures
Cast: Monal Gajjar, Sathyaraj, Vikram Prabhu
Direction: Gaurav
Screenplay: Gaurav
Story: Gaurav
Music: Imman
Background score: Imman
Cinematography: Vijay Ulaganathan
Dialogues: Gaurav
Editing: Praveen K.L
Stunt choreography: Billa Jagan, Dilip Subbarayan
Dance choreography: Radhika, Raju Sundaram
PRO: Nikkil
Distribution: UTV Motion Pictures
Sigaram Thodu has been received with good reviews all around and looks like another success for the hunky Vikram Prabhu.
From January 2014's releases, the rankings will be based on box-office collections only from theaters in the Chennai City trade area:
Theaters which fall under the Chennai City trade area are - Udhayam complex, Kamala complex, PVR Multiplex, Inox Multiplex Mylapore, Escape Cinemas, Sathyam Cinemas, Devi Cineplex, Shanti complex, Anna, Pilot, Woodlands complex, Casino, Albert complex, Abirami Mega Mall, Motcham complex, Sangam Cinemas, Ega Cinemas, Bharath, Maharani, Agasthya, IDream, AVM Rajeswari, Sri Brindha, S2 Perambur, Ganapathyram and MM
Box office collection is calculated taking into account the number of shows and theater occupancy in theaters falling under the Chennai City trade area. These are details not shared by the producers, distributors or theater owners who cannot be held responsible for the collection figures listed. There might be variations from the exact collection details.
-
15th September 2014, 06:04 PM
#1603
Junior Member
Newbie Hubber
SIGARAM THODU MOVIE REVIEW
Release Date : Sep 12,2014
Home > Tamil Movie Reviews
Sigaram Thodu (aka) Sigaramthodu review
Review by : Behindwoods Review Board
CAST AND CREW
Production: UTV Motion Pictures
Cast: Monal Gajjar, Sathyaraj, Vikram Prabhu
Direction: Gaurav
Screenplay: Gaurav
Story: Gaurav
Music: Imman
Background score: Imman
Cinematography: Vijay Ulaganathan
Dialogues: Gaurav
Editing: Praveen K.L
Stunt choreography: Billa Jagan, Dilip Subbarayan
Dance choreography: Radhika, Raju Sundaram
PRO: Nikkil
Distribution: UTV Motion Pictures
Sigaram Thodu deals with a father-son relationship. The story revolves around the dream of a father to make his son a police officer and how the son reacts to the dream with few twists in the screenplay.
Director Gaurav has chosen a script that warrants a lot of intelligence both in the screenplay and in the crime techniques associated, around which the movie travels.
Vikram Prabhu’s appearance as a police officer is justifying and the actor seems to be making it a point to choose the scripts that matches his physical appearance aptly. Sathyaraj is respectful as a sincere police officer.
Monal Gajjar, the female lead in the movie, plays the role of a doctor and also Vikram Prabhu’s love interest. Although her part in the movie is very brief, involving the song sequences and a few love portions in the first half, it is her character’s adamant nature that pushes the story into an important twist after which the movie paces to its climax.
Subtle graphics like Sathyaraj imagining his baby dressed in police uniform and the CG involved in the ‘takkunu’ song are interesting elements that adds to the visual appeal of the movie.
Sathyaraj’s character has been etched out well and the director has been keen on pointing out things as tiny as him paying money at a tea stall, in spite of being a police officer. The process involved in the ‘money refilling’ in ATMs, have been shot in a very intriguing manner and the portrayal of how money is being stolen from ATMs are good examples of the intelligence in the script.
Praveen KL’s editing definitely needs a special mention in the movie as the cuts and transitions are extremely pleasing, playing a very important aspect in the racy second half. The editing has been neatly complemented with some interesting point of view camera (POV) angles that have been used in abundance in the movie.
The transition that portrays Sathyaraj lifting Vikram Prabhu and swirling him around dissolving into sugar being mixed in a coffee cup is one instance of where the editing and POV camera shot has worked hand in hand to bring out an interesting visual.
Imman’s background music plays a neat role in the script, especially during the pre climax action sequence.
Although the movie has been interestingly scripted and the central actors have done their parts well, the ‘not-very-interesting’ comedy, the unconvincing romance portions and the song placements in the first half lets the movie down. Humour doesn’t work as the director intended it to be and one might get the feeling that major segments of the first half could have been written better.
Produced by Siddharth Roy Kapur under the banner UTV Motion Pictures, Sigaram Thodu can be watched for its racy second half.
Verdict: An enjoyable thriller .
Last edited by Gopal.s; 15th September 2014 at 06:13 PM.
-
15th September 2014, 07:41 PM
#1604
நேர்மையான போலீஸ் அதிகாரியான சத்யராஜ் ஒரு கலவரத்தின்போது அரிவாளால் வெட்டப்பட்டு தனது ஒரு காலை இழக்கிறார். இப்போது குற்ற ஆவணக் காப்பகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது ஒரே மகன் விக்ரம் பிரபு. இவரை எப்படியாவது தன்னை போலவே ஒரு சிறந்த போலீஸ் ஆபிஸராக உருவாக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார் சத்யராஜ்.
ஆனால் மகன் விக்ரம்பிரபுவுக்கோ ஏதாவது ஒரு வங்கியில் தலைவர் பதவிவரையிலும் எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்று மனம் நிறைய ஆசை. ஆனாலும் அப்பாவை இப்போதைக்கு ஏமாற்ற விரும்பாமல் ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பை டிரெயின் செய்து வருகிறார்.
இந்த நேரத்தில் பக்கத்து வீட்டு தாத்தா வட நாட்டு சுற்றுலாவுக்கு போகும்போது துணைக்கு விக்ரம் பிரபுவையும் அழைத்துச் செல்கிறார். அப்போது அதே டூரில் வரும் ஹீரோயின் மோனலை பார்த்தவுடன் பிரபுவுக்கு காதல் பிறக்கிறது.. துவக்கத்தில் வரும் ஒரு சின்ன சண்டைக்கு பின்பு, சமாதானக் கொடியையெல்லாம் பறக்கவிட்டு கடைசியில் அது காதலில் போய் முடிகிறது.
மோனலுக்கு போலீஸ் வேலையே பிடிக்காது.. போலீஸ் மாப்பிள்ளையே வேண்டாம் என்று நினைப்பவர். தானும் போலீஸ் வேலைக்கு போகப் போவதில்லை.. ஆக இந்த காதல் கன்பார்ம் என்று நினைத்து விக்ரம் பிரபு மகிழ்ச்சியிருக்கும் இருக்கும் நேரத்தில் போலீஸ் வேலை கன்பார்மாகி டிரெயினிங்கிற்கு அழைப்பு கடிதம் வருகிறது..
மோனலிடம் பொய் சொல்லிவிட்டு டிரெயினிங்கிற்கு செல்கிறார். எப்பாடுபட்டாவது நிறைய சொதப்பல்களில் ஈடுபட்டால் தன்னை வெளியே அனுப்பி விடுவார்கள் என்று நினைக்கிறார் பிரபு. ஆனால் காலேஜ் பிரின்ஸிபால் மோனலின் அப்பா என்பது பின்புதான் பிரபுவுக்கே தெரிகிறது..
“1 மாசம் டைம் தரேன்.. ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல டிரெயினிங் எஸ்.ஐ.யா சேர்ந்து வேலைய பாரு.. ஒரு மாசம் கழிச்சும் வேலை பிடிக்கலைன்னா சொல்லு.. நான் உன்னை விட்டுடறேன். என் பொண்ணையும் உனக்குக் கட்டித் தரேன்…” என்கிறார் மோனலின் அப்பா.
அவர் சொல்படியே ஒட்டேரி காவல் நிலையத்தில் பயிற்சி எஸ்.ஐ.யாக சேர்கிறார் பிரபு. அப்போதுதான் சென்னையின் புறநகர்ப் பகுதிகளின் ஏடிஎம்களில் போலி கார்டுகளை பயன்படுத்தி பணம் கொள்ளையடிப்பது அதிகமாகி வருகிறது.
சரியாக ஒரு மாதம் முடிய இருக்கும் நாளில் அந்தக் கொள்ளையர்கள் சத்யராஜின் கண் பார்வையில் படுகிறார்கள். அவர்களுடன் சண்டையிட்டு பக்கத்தில் இருப்பவர்கள் துணையுடன் அவர்களைப் பிடிக்கிறார் சத்யராஜ்.இப்போது இவர்களை விசாரிக்க வேண்டிய பொறுப்பும், காலையில் கோர்ட்டுக்கு அழைத்துப் போய் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் பிரபுவுக்கு இருக்க.. இன்னொரு பக்கம் வழக்கமான சினிமா ஹீரோயினை போல மோனல் “சினிமா தியேட்டருக்கு வர முடியுமா? முடியாதா?” என்று வெறுப்பேற்றுகிறார்.
பிரபு காதலியைத் தேடி சினிமாவுக்குச் செல்ல.. இங்கே கிடைத்த சந்தர்ப்பத்தில் குற்றவாளிகள் இருவரும் தப்பித்துச் செல்கிறார்கள். போகும்போது சத்யராஜ் எதேச்சையாக அங்கே வந்துவிட அவரை சுட்டுவிட்டு தப்பிக்கிறார்கள்..
இப்போது பிரபுவின் மன நிலைமை மாறுகிறது.. போலீஸ் வேலையே வேண்டாம் என்பவர் தன்னுடைய தந்தையை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை பிடிக்க வேண்டி வெறியாகிறார். பிடித்தாரா..? இல்லையா..? எப்படி பிடித்தார் என்பதுதான் இந்த திரில்லர் கதையின் முடிவு.
‘அரிமா நம்பி’யின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றிப் படம் விக்ரம் பிரபுவிற்கு.. நடிப்பும் கொஞ்சம் கூடியிருக்கிறது..! இன்னமும் டயலாக் டெலிவரியை மட்டும் ஷார்ப்பாக்கிக் கொண்டால் போதும்.. பிரபுவிட்ட இடத்தை இந்த இளைய பிரபு தொடரலாம்..!
வெகு நாட்களுக்கு பிறகு சத்யராஜுக்கு ஒரு சிறப்பான வேடம்.. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேசும்போதே தனது கேரக்டர் ஸ்கெட்ச்சை வெளிப்படுத்தும் விதமாக பொறுப்பாக பேசும்விதமும், தனது மகன் மீது அவர் வைத்திருக்கும் அந்த பாசத்தையும், நம்பிக்கையையும் காட்டும்விதமும் அழகாக பதிவாகியிருக்கிறது..!
மோனல் கஜ்ஜார்.. ஒரு பக்கம் பார்த்தால் பிடிக்காததுபோலத்தான் தோன்றுகிறது.. ‘டக்கு டக்கு’ பாடலின்போது மட்டும் பிடித்திருக்கிறது. அதிகமான, அழுத்தமான காட்சிகள் இல்லை என்பதால் நிறைய ஸ்கோர் செய்யவில்லை.
இவர்களையும் தாண்டி பாராட்டுக்குரியவர் மோனலின் தந்தையாக போலீஸ் டிரெயினிங் காலேஜ் பிரின்ஸிபாலாக நடித்திருப்பவர். அழுத்தம், திருத்தமாக வசனங்களை உச்சரித்து அதற்கேற்ற மரியாதையையும் கொடுத்து அவர் வருகின்ற காட்சிகளை அழுத்தமாக கவனிக்க வைத்திருக்கிறார்.. நன்று..!
ஏடிஎம் கொள்ளை எப்படி நடக்கிறது என்பதை இன்றைக்கு தமிழகமே இந்த ஒரு திரைப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு டீடெயிலாக இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர் கெளரவ். “ஆறு மாதங்களாக ரிசர்ச் செய்துதான் இதன் கதையையும், திரைக்கதையையும் தயார் செய்தேன்…” என்றார் இயக்குநர். பாராட்டுக்கள்.
ஏடிஎம் கார்டை பயன்படுத்துபவர்கள் ஒரு முறையாவது பாஸ்வேர்டை மாத்திரலாமா என்று யோசிக்கும் அளவுக்கு காட்சிகளை தந்திருக்கிறார். திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல இதுவும் வேறு வேறு வடிவத்தில் வரத்தான் செய்யும்.
கிளைமாக்ஸில் வேகம் கூடி எப்படித்தான் பிடிக்கப் போகிறார்கள் என்கிற ஒரு ஆர்வத்தை உருவாக்கியதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் கெளரவ். அந்த திரில்லிங் அனுபவம் நிசமாகவே தியேட்டரில் கிடைத்தது.
இத்தனை பெரிய கேஸ் என்று தெரிந்தும் காதலி அழைக்கிறாள் என்று சொல்லி சினிமா தியேட்டருக்கு போகும்போதே பிரபு மீது ஒரு பார்வையாளர்களுக்கு ஒருவித கடுப்பு வருகிறது.. அதை சரி செய்யும்விதமாக சத்யராஜ் மருத்துவமனையில் இருக்கும்போது “இனி நீ என்ன சொன்னாலும் நான் அதை ஒத்துக்குறேன்…” என்று சொல்லி சமாளித்திருக்கிறார் இயக்குநர்.
ஆனால் நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.. இத்தனை மாதங்களாக தேடி வரும் கொள்ளையர்களை அவ்வளவு அலட்சியமாக லாக்கப்பில் சும்மாவே அமர வைத்துவிடுவார்களா..? போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டமே இந்நேரம் அந்த ஸ்டேஷனை மொய்த்திருக்காதா..? போலீஸ் கமிஷனர் வெறுமனே போனில் பேசி பாராட்டுகிறார் என்பதோடு கதையை முடித்துவிட்டார் இயக்குநர்.
போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே துப்பாக்கிச் சூடு எனில் போலீஸ் உயரதிகாரிகளும் சும்மா விட்டுவிடுவார்களா..? தனியே பயிற்சி எஸ்.ஐ.யை மட்டுமே இந்த கேஸை ஹேண்டில் செய்ய அனுமதிப்பார்களா..? ஆள் யாரென்று தெரிந்தவுடன் அவர்களே போயிருக்க மாட்டார்கள்..?
ஒட்டு மொத்த போலீஸ் டீமையும் களத்தில் குதிக்க வைத்து ஒரு நிமிடத்தில் பிடிக்க வேண்டியதை ஹீரோயிஸ கதை என்பதால் ஹீரோவுக்காக காத்திருந்து அவருடைய இன்ஸ்ட்ரக்சன்படியே நடந்து பிடிப்பதுபோல ஆக்கியிருக்கிறார்கள் என்று தியேட்டரில் இருந்து சிறிய முணுமுணுப்பு எழத்தான் செய்தது.. வழக்கம்போல இதை இயக்குநருக்கு பாஸ் செய்துவிடுவோம்.. இதில் கதைதான் ஹீரோ.. ஹீரோ இல்லை என்பதை இயக்குநர் ஏன் கடைசியில் மறந்து போனார்..?
விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.. இதைவிட பிரவினின் எடிட்டிங் மகா கச்சிதம். படத்தின் பிற்பாதியில் எடிட்டரின் உதவியால் படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்கள்.. இமானின் இசையில் ‘டக்கு டக்கு’, ‘சீனு சீனு’ பாடல்கள் ஓகே ரகம். பாடல்களைவிடவும் படமாக்கியவிதமும் அழகாகவும், அருமையாகவும் இருக்கிறது. ‘அன்புள்ள அப்பா’ பாடல் எதிர்பாராத ஒன்று..! அந்த இடத்தில் பாடல் தேவையா ஸார்..?
தனக்கென்று வந்த பின்புதான் ஒவ்வொருத்தனும் பொது நலத்தை பற்றி சந்திக்கிறான் என்பதை இந்த பிரபு கேரக்டர் மூலமாக
இயக்குநர் மறைமுகமாக நமக்கு உணர்த்தியிருக்கிறார். நன்றி..!
சில விதிமீறல்கள் இருப்பினும் தியேட்டருக்குள் இருக்கும்போது அது பற்றியே நினைக்க வைக்காமல், திரையை மட்டுமே பார்க்க வைத்து அனுப்பிய இயக்குநரின் இயக்கத் திறமைக்கு நமது பாராட்டுக்கள்..!
‘சிகரம் தொடு’ ஒரு சிறந்த முயற்சி.
நன்றி உண்மை தமிழன்
Last edited by gkrishna; 15th September 2014 at 07:43 PM.
gkrishna
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th September 2014, 10:26 PM
#1605
Senior Member
Seasoned Hubber
யூ.ஏ.ஏ.வின் சிறந்த நாடகங்களுள் ஒன்றும் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களில் இடம் பெற்றதுமான பரீட்சைக்கு நேரமாச்சு, மீண்டும் நாடகமாக ஒய்.ஜி.மகேந்திராவின் யூ.ஏ.ஏ.குழுவினரால் நேற்று அரங்கேற்றப் பட்டுள்ளது. நாளை 16.09.2014 மாலை 6.45 மணி காட்சிக்கு நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் உறுப்பினர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. உறுப்பினர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இடம் வாணி மகால் மினி ஹால், ஜி.என்.செட்டி சாலை, தியாகராயநகர், சென்னை-17.
Our sincere wishes for the success of this venture
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th September 2014, 11:55 PM
#1606
-
16th September 2014, 02:24 AM
#1607
Junior Member
Veteran Hubber
ராஜா: the visual feast!
தோற்ற மிடுக்கு (Smartness) என்பது 'ஆள் பாதி ஆடை பாதி ' கதைதான். தோற்றத்தைப் பொருத்தவரை நடிகர்திலகம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக transformations காட்டியிருக்கிறார். அந்த ஆரம்பகால slim stature திடீரென்று shapeless ஆக உருமாற்றம் பெற்ற போது கூட மாறாத தன் நடிப்புத்திறமையை மட்டுமே மூலதனமாக்கி (Never cared for a six pack or six bag structure!) பல வெற்றிப்படங்களை அளித்திருக்கிறார். பின்னொரு காலகட்டத்தில் நம் கண்களே நம்பமுடியாத வண்ணம் பழைய மெலிந்த தேகத்துடன் இளமை முறுக்கைக் கொணர்ந்து பிரமிக்க வைத்தார். எங்க மாமா, சுமதி என் சுந்தரி, தெய்வமகன், கலாட்டா கல்யாணம், திருடன் தங்கசுரங்கம், சிவந்த மண் போன்ற படங்கள் நமக்கு அவர்தம் dress sense laden தோற்றப்பொலிவில் மனமகிழ்ச்சி தந்தன. ஆனாலும் உருவ அமைப்பிலும் உடைத்தேர்விலும் இளமைத்துள்ளலிலும், குன்றாத மிடுக்கு நடிப்பிலும் சிகரம் தொட்ட படம் 'ராஜா'தான். இமை மூட மறந்து இதயத்தில் சிம்மாசனமிட்ட இனிமையான இரு பாடல்காட்சிகளின் காணொளி ஒரு visual feast!
Last edited by sivajisenthil; 16th September 2014 at 06:35 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th September 2014, 10:50 AM
#1608
Junior Member
Seasoned Hubber
Courtesy: From the old posting of Saradha Madam
மெழுகு வர்த்தி எரிகின்றது' (கௌரவம்)
ஒரு திரைப்படத்தில் சில பாடல்கள் ஓகோவென்று உச்சத்திற்குப் போகும்போது, மற்ற பாடல்கள் பின்தங்கி, அவற்றுள் சில நல்ல பாடல்கள் நிழலுக்குள் தள்ளப்படுவதுண்டு. நடிப்புச்சக்கரவர்த்தியின் கௌரவம் படத்தில் அப்படி, மற்றவர்களால் போதிய அளவு சிலாகிக்கப்படாத ஒரு பாடல்தான் 'மெழுகு வர்த்தி எரிகின்றது' பாடல்.
பெரியவரின் இரண்டு பாடல்களான 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடலும், 'நீயும் நானுமா கண்ணா' பாடலும் ரசிகர்களின் மனதில் டாப்பில் போய் அமர்ந்துகொண்டன. இப்படத்தின் பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுவோர் யாவரும் இவ்விரண்டு பாடல்களையே குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம். அதையடுத்து சின்னவரான கண்ணனின் பாடல்களில் கூட சட்டென்று யாவரும் நினைவில் கொண்டுவருவது, அவருக்கும் ராதாவுக்கும் (உஷா நந்தினி) ஒரே டூயட் பாடலான 'யமுனா நதியிங்கே ராதை முகமிங்கே' பாடல்தான். அதற்கு அடுத்த இடத்தைப்பிடிப்பது கூட, மெல்லிசை மன்னர் தன் இசையால் டாமினேஷன் செய்த 'அதிசய உலகம் ரகசிய இதயம்' பாடல்தான். ஐந்தாவது இடம் போனால் போகிறதென்று 'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடலுக்கு.
ஆனால் பெரியவரின் இரண்டு ஆக்ரோஷமான பாடலுக்கும், சின்னவரின் நளினமான டூயட் பாடலுக்கும், ஈஸ்வரியின் துள்ளல் பாடலுக்கும் இடையே... மனதை வருடும் அமைதியான பாடலாக அமைந்தது மெழுகுவர்த்தி பாடல்தான்.
இதற்கு முன் எத்தனையோ பாடல்களில் பியானோ வாசிப்பவராக நடித்திருக்கிறார் நடிகர்திலகம். பாசமலர், புதிய பறவை, எங்க மாமா இப்படி நிறைய. ஆனால் அவைகளிலெல்லாம் முடிந்த வரையில் தன் உடல் மொழியால் ஸ்டைல் காட்டுவார். ஆனால் இப்பாடலில் அப்படி எந்த ஸ்டைலும் உற்சாகத்துள்ளலும் இல்லாமல் மிக அமைதியாக வாசித்திருப்பார். காரணம் கதைப்படி தொழிலில் கருத்து வேறுபாடால் தன் உயிருக்குயிரான பெரியபாவையும் பெரியம்மாவையும் பிரிந்து ஓட்டலில் தங்கியிருக்கிறார். இருப்பினும் காதலியின் பிறந்தநாளின்போது பாட வேண்டிய சூழல். அப்படிப்பட்ட நிலையில் ஸ்டைல் காட்டினால் அது அபத்தமாக அல்லவா ஆகிவிடும். அதை உணர்ந்தே காதலிக்கு வெளிக்காட்டாமல் மனதில் சோகத்தை அடக்கிக்கொண்டு ரொம்பவே இயல்பான பெர்பார்மென்ஸை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார்.
ஒருபக்கம் காதலி கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடும்போது, இவர் லேசாக திரும்பிப் பார்த்தபடி, கருமமே கண்ணாக பாடிக்கொண்டிருப்பதும், தனக்கு கேக் ஊட்ட வரும் காதலியின் கையைப்பிடித்து அவளுக்கே ஊட்டி விடுவதும், அந்த நேரத்தில் கூட அளவுக்கதிகமாக சிரித்து விடாமல் அடக்கி வாசித்திருப்பதுமாக நம மனதை அப்படியே உருக வைப்பார்.
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது
புதுவேகம் எழுகின்றது பூஞ்சோலை அசைகின்றது
கவியரசரின் என்ன அழகான வரிகள், மெல்லிசை மன்னரின் எவ்வளவு இனிமையாக மனதை வருடும் மென்மையான இசை, இவரா பெரியவருக்கு அவ்வளவு ஆக்ரோஷமாகப்பாடினார் என்று வியக்க வைக்கும் வண்ணம் டி.எம்.எஸ்ஸின் அமைதியான குரல், அமைதி தோய்ந்த முகத்தோடு பாடிக்கொண்டிருக்கும் நடிகர்திலகம், அவர் பாடுவதை முகத்தில் ஆவலும் கனிவும் பொங்க பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் உஷா நந்தினி, இந்தக்கூட்டத்தின் நடுவே கேக் தின்னுவதும், பரிசுப்பொருளைத் திருடுவதுமாக சேட்டை செய்துகொண்டிருக்கும் நாகேஷ், இப்படி பலதரப்பட்ட விஷயங்களுடன் பாடல் தொடர்ந்து கொண்டிருக்கும்....
அன்பு என்னும் கோயில்தன்னிலே
பாசம் என்னும் தீபம் தன்னிலே
உள்ளம் ஒன்று மயங்குகின்றது
தன்னை எண்ணி கலங்குகின்றது
தன்னை எண்ணி கலங்குகின்றது
இது ஒன்றும் வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட பாடல் அல்ல, ஒரு வீட்டின் நடுக்கூடத்தில் படமாக்கப்பட்டதுதான். ஆனாலும் கூட தன்னுடைய கேமராவை லாவகமாக அங்குமிங்கும் சுழற்றி அந்த இடத்தை அங்குலம் அங்குலமாக கவர் செய்திருக்கும் ஒளிப்பதிவு இயக்குனர் வின்சென்ட், பியானோ பாடல்கள் என்றாலே சிறப்பு கவனம் செலுத்தும் மெல்லிசை மன்னர், இவர்களை ஒருங்கிணைத்து பாடலை அழகுற பாடமாக்கியிருக்கும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம், இப்படி எல்லோரது கூட்டு முயற்சியில் பாடல் வெகு சூப்பராக அமைந்து விட்டது.
வழக்கமாக கூடத்தின் நடுவே இருக்கும் பெரிய பியானோ, அதனைத் திறந்து வைத்து ஒரு கோலால் முட்டுக்கொடுக்கப்பட்டிருக்கும் டாப் என்றில்லாமல் சுவரோடு ஒட்டிய அடக்கமான பியானோ, அதன் முன்னே எந்த பந்தாவான உடையும் இல்லாமல் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேண்ட், வெளிர் ரோஸ் நிற அரைக்கை சட்டையணிந்து சிம்பிளாகக் காட்சி தரும் நடிகர்திலகம் என எல்லாம் ஒருங்கிணைந்து நம் மனதைக் கவர்ந்த பாடலாக இப்பாடல் காட்சி அமைந்து விட்டது.
என் மனதைக்கவர்ந்த 'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடல் காட்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
Attached Images Attached Images
File Type: jpg G1b.jpg (47.2 KB, 5 views)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th September 2014, 11:12 AM
#1609
Junior Member
Seasoned Hubber
From the old posting of Mr Partha Sarathy
நடிகர் திலகத்தின் படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)
என்னடா இது இந்தக் கட்டுரையை இன்னும் முடிக்கலையா இந்த ஆள் என்று யோசிக்க வேண்டாம்! அலுவலக நிமித்தமாக இடைவிடாது வேலைகள் இருந்து கொண்டே இருந்ததால், இடையே சிறிது இடைவெளி. இன்னும் இரண்டு படங்களைப் பற்றி எழுதி விட்டால், இந்தக் கட்டுரையை முடித்து அடுத்த கட்டுரையைத் துவங்கி விடுவேன். (அடப்பாவி! விட மாட்டானோ?)
9. தங்கப்பதக்கம் (1974) / கொன்ட வீட்டி சிம்ஹம் (1980) தெலுங்கு / ஷக்தி (1981) ஹிந்தி
இயக்குனர் மகேந்திரன் கதை வசனம் எழுதி செந்தாமரை அவர்களால் "இரண்டில் ஒன்று" என்ற பெயரில் நாடகமாக நடிக்கப்பட்டு வந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு, பார்த்து, அந்த நாடகத்தை இன்னும் மெருகேற்றி, தங்கப்பதக்கம் என்ற பெயரில், சிவாஜி நாடக மன்றத்தின் மூலம், நாடகமாகவே சில காலம் நடத்தி/நடித்து, பின் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில், அதே பெயரில், திரு. மாதவனை வைத்து, திரைப்படமாக்கினார். வசூல் சாதனை செய்து (தமிழகம் மட்டுமல்லாது, பெங்களூரு போன்ற மற்ற நகரங்களிலும் கூட) வெள்ளி விழாக் கொண்டாடிய படம். நடிகர் திலகம் மறுபடியும், தொடர்ந்து, இருபத்தியிரண்டாம் வருடத்தில், நான் ஒரே நேரத்தில், அற்புத நடிகன் மற்றும் மிக மிக வெற்றிகரமான நட்சத்திரம் என்பதை நிரூபித்த படம்! அதாவது, பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லாமல், கதை, களம், நல்ல இயக்கம், நடிப்பு போன்ற அம்சங்களை வைத்தே, மறுபடியும், வெற்றிக்கொடி நாட்டிய படம்.
இந்தப் படத்தைப் பற்றியும் பக்கம் பக்கமாக நாட்கணக்கில் அலச முடியும்.
இந்தப் படத்தைப் பற்றிப் பேசினால், கீழ்க் காணும் விஷயங்களைக் குறிப்பிட்டு விட்டுத்தான் படத்துக்குச் செல்ல முடியும்.
ஒன்று, அவரது ஒப்பனை மற்றும் நடை, உடை, பாவனை. குறிப்பாக, அந்த சிகை அலங்காரம் மற்றும் மீசை. இப்போதெல்லாம், ஆளாளுக்கு, தடுக்கி விழுந்தால், அதுவும் நடிக்க வந்த புதிதிலேயே, காவல் துறை அதிகாரி பாத்திரத்தை ஏற்கிறார்கள். ஆனால், நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்து, 22 வருடங்கள் வித விதமான பாத்திரங்களை ஏற்று நடித்து, பின்னரே, ஒரு முழு நீள காவல் துறை அதிகாரி பாத்திரத்தை ஏற்றார். இதற்கு முன்னர், ஸ்கூல் மாஸ்டர் (மூன்று மொழிகளில், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி) படத்தில் கௌரவ வேடத்திலும், ராஜாவில், ஒரு ஐந்து நிமிடங்களும் மட்டும் போலீஸ்காரர் வேடத்தில் வருவார். அந்தப் படங்களிலும், அந்த அர்பணிப்பையும் சிரத்தையையும் காணலாம். சிலர் நடிப்பது போல், எக்கச்சக்க தலை முடி, ஸ்டெப் கட் மற்றும் அடர்த்தியான பெரிய கிருதா இல்லாமல், ஓட்ட வெட்டிய கிராப்பு, மற்றும் மீசையுடன் வருவார். நடிகர் திலகம் ஒரு நாளும் வியாபார காரணங்களுக்காக, கலைத்தன்மையை இழந்ததில்லை. இந்தப் படம் வந்து சில மாதங்களில் வெளியான, என் மகன் படத்தில், வேறு மாதிரியான போலீஸ் கார ஒப்பனையில் வந்து, வித்தியாசமாக நடித்திருந்தார். இதற்கு முந்தைய பதிவில் குறிப்பிட்ட வெள்ளை ரோஜாவில், வேறு கெட்டப் நடிப்பு, தீர்ப்பு படத்தில், வேறு விதம், திருப்பத்தில் வேறு விதம், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!
நான் பல நாட்களுக்கு முன் படித்த செய்தி - இந்தப் படத்தின் பிரத்தியேகக் காட்சிக்கு, நடிகர் திலகம் அப்போதைய தமிழகத் தலைமைக் காவல் அதிகாரி திரு. I.G. அருள் அவர்களையும் இன்னும் சில மூத்த காவல் அதிகாரிகளையும் அழைத்திருந்தார். படம் முடிந்தவுடன், திரு. அருள் அவர்கள், "தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து காவல் துறை அதிகாரிகளும், அலுவலர்களும், இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார். இது ஒன்று போதும், நடிகர் திலகத்தின் அற்பணிப்பைப் பறை சாற்ற.
பின்னர், திரு. தேவாரம் அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நடிகர் திலகம், நான் இந்த சௌத்ரி பாத்திரத்திற்கு, தற்போது இருக்கும் ஒரு அதிகாரியை தான் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டேன். உங்களால் அது யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள் என்று சொல்ல, அவரும் தெரியாது என்று சொல்ல, பின்னர், நடிகர் திலகம், இது உங்களை வைத்துதான் என்றாராம் - அதாவது, அந்த சிகை அலங்காரம், மீசை மற்றும் சில உடல் மொழிகள். தேவாரம் வாயடைத்துப் போனாராம். நடிகர் திலகம் இத்தனைக்கும் அவரை பல வருடங்களுக்கு முன்னர் ஒரே ஒரு தடவை தான் சில நிமிடங்கள் பார்த்திருக்கிறார். அதாவது, ரொம்ப நாட்களுக்கு முன், ஊட்டியில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது, நடிகர் திலகத்தைக் காணப் பெருங்கூட்டம் கூடி விட, கூட்டத்தைக் கட்டுப்படுத்த அப்போது அங்கு உயர் காவல் துறை அதிகாரியாக இருந்த தேவாரம் அவர்கள், ஜீப்பில் இருந்து இறங்கிக் கூட்டத்தை அவருடைய பாணியில் கட்டுப்படுத்தி விட்டு, நடிகர் திலகத்துடன் அமர்ந்து சில நிமிடங்கள் பேசி விட்டுச் சென்றாராம். அந்த சில நிமிட நேரத்தில், தேவாரம் அவர்களின் உடல் மொழி மற்றும் ஒப்பனையை வழக்கம் போல், நடிகர் திலகம் கூர்ந்து கவனித்து, பின்னாளில், அதை தங்கப்பதக்கம் படத்தின் எஸ்.பி.சௌத்ரி பாத்திரத்திற்குப் பல வருடங்கள் கழித்து பயன்படுத்திக்கொண்டதை அறிந்து, தேவாரம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தாராம்! (தேவாரம் மட்டுமா?)
இயக்குனர் மகேந்திரன் அவர்கள் நடிகர் திலகம் மறைந்த சில நாட்களில், சென்னை தூர்தர்ஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், நடிகர் திலகத்தைப் பற்றியும், அவரோடு, தங்கப்பதக்கத்தில் பணிபுரிந்த அனுபவங்களைப் பற்றியும் உணர்வுபூர்வமாகக் கூறினார். ஒரு முறை, மகேந்திரன் நடிகர் திலகத்திடம், அது எப்படி, நேரில், சாதாரண உயரமாய் இருக்கும் நீங்கள், திரையில், மிக உயரமாகத் தெரிகிறீர்கள் என்று வினவினாராம். அதற்கு நடிகர் திலகம் சிரித்துக் கொண்டே, அதெல்லாம் ஒன்றுமில்லை, ஒரு பாத்திரத்தை நான் ஏற்று நடிக்கும்போது, அந்தப் பாத்திரத்தை உணர்வு பூர்வமாய் சித்தரிக்கிறேன். ஆனால், பார்க்கும் நீங்கள் என்னை அந்தப் பாத்திரமாகத்தான் பார்க்கிறீர்கள். நீங்கள், கெளரவம் படத்தைப் பார்க்கும் போது, பாரிஸ்டர் பாத்திரத்தில் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி சுய மரியாதை நிரம்பியவராய் நடித்ததால், அந்தப் பாத்திரத்தில், நான் எல்லோருக்கும் உயரமாகத் தான் தெரிவேன். இப்போதும், அப்படித்தான் என்று சாதாரணமாய்க் கூறினாராம். மகேந்திரனும், "மீண்டும் நாடகம் ஆரம்பித்தது. நாங்கள் மறுபடியும் எஸ்.பி. சௌத்ரியைப் பார்க்கும்போது திரும்பவும் அவர் உயரமாகத் தான் தெரிந்தார். இது கண் கட்டு வித்தையோ? என்று மறுபடியும் வியந்தோம். இன்றும் வியந்து கொண்டு தான் இருக்கிறோம்" என்று கூறினார்.
அதாவது, அவர் ஒரு பாத்திரத்தை மனதில் வாங்கி, அதை அப்படியே internalise செய்து ஒரு கதாசிரியன் எந்த கற்பனையோடு எழுதினானோ, அதை அப்படியே நூறு பங்கு, வடித்து, சாரி, நடித்து, மக்களிடம் அந்தப் பாத்திரத்தை எடுத்துச் செல்லும் விதம். இந்த விஷயத்தைப் பல வருடங்கள், மிக வெற்றிகரமாகச் செய்ததனால் தான் அவர் நடிகர் திலகமாகிறார். யுகக் கலைஞனாகிறார்.
தங்கப்பதக்கம் ... தொடரும்,
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th September 2014, 11:13 AM
#1610
Junior Member
Seasoned Hubber
நடிகர் திலகம் நடித்த படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)
9. தங்கப்பதக்கம் (தொடர்ச்சி...)
இந்தப் படமும், ஓரிரு காமெடி காட்சிகள் தவிர, பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல் நேராக சொல்லப்பட்ட நடிகர் திலகத்தின் ஏராளமான வெற்றிப்படங்களில் ஒன்று. சோ அவர்கள் காமெடி கூட படத்தை அந்த அளவுக்கு பாதிக்காது. ஏனென்றால், அவரது இரட்டை வேடங்களில் ஒன்று, ஹெட் கான்ஸ்டபிள் வேடம்.
ரௌடியாக வரும் மேஜரை அவரது குடிசைக்கே சென்று மடக்கிக் கைது செய்து அழைத்துச் செல்லும் கட்டம் (இது தான் படத்தில் நடிகர் திலகத்தின் அறிமுகக் காட்சி).
ஆரம்பத்தில், ஜகன் - அதாவது, அவரது மகன் ஸ்ரீகாந்தை பம்பாய்க்கு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி விட்டு, அவரது மனைவி அதாவது கே.ஆர்.விஜயாவிடம், நாம் ஜெகனை பம்பாய்க்கு சென்று பார்க்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறும் கட்டத்தில், படிப்படியாக, ஆரம்பித்து, கோபத்தின் உச்சிக்கே சென்று, "என் மகனை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்" என்று சொல்லும் கட்டம்.
ஆர்.எஸ்.மனோகரை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து, லாகவமாக உரையாடி அவரைக் கைது செய்து அழைத்துச் சென்று, வெளியில், அவரது ஆட்களுடன் மோதி தன்னுடைய போலீஸ் லட்டியாலேயே ஒரு அசல் போலீஸ்காரர் போல் சமாளித்து சண்டையிடும் கட்டம்.
அவரும் விகேயாரும் சந்திக்கும் சில காட்சிகள் கலகலப்பானவை (என்னடா எல்லா கெழவனும் சேர்ந்து என்னை கிழவன்றீங்க?...)
என்னதான் பெரிய காவல் துறை அதிகாரியாய் இருந்தாலும், பட்டாசு வெடிக்க பயப்படும் போது காட்டும் நகைச்சுவை கலந்த குழந்தைத் தனம்; மகனை ஒவ்வொரு முறையும் “twinkle twinkle little star” என்று பாடி (ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பாணியில் பாடுவார்) தூங்கவைக்கும் கட்டங்கள்;
மகன் ஸ்ரீகாந்த் பல நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்தபிறகு, ஆசையுடன், அவரைக் கட்டித் தழுவப் போகும்போது, ஸ்ரீகாந்த் அவரை உதாசீனம் செய்யும்போது, மருகும் கட்டம்;
மனைவி, மகளுடன் பூர்ணம் விஸ்வநாதன் வீட்டிற்குப் பெண்ண கேட்கச் சென்று அவமானப்படும் கட்டம்;
“நல்லதொரு குடும்பம்” பாடலில், காட்டும் அந்த கௌரவமான மற்றும் நேர்த்தியான நடன அசைவுகள் - குறிப்பாக, "அந்தப் பிள்ளை செய்யும் லீலை நான் அறிவேன்" என்று பாடும்போது காட்டும் அந்தக் குறிப்பான பாவம் - அவரது மனைவியைக் கிண்டல் செய்து பாடும் கட்டங்களில் கூட அந்தப் பாத்திரத்தின் கௌரவத்தை maintain செய்வது; கைத் தட்டும் ஸ்டைல் - அடடா இந்தக் கைதட்டலுக்கும், "யாரடி நீ மோகினி" பாடலில் கைத் தட்டுவதற்கும் தான் என்னவொரு வித்தியாசம்!
பாடல், முடிந்தவுடன், திடீரென்று மறைந்து விட்டு (இதை படம் பார்ப்பவர்களும், படத்தில் நடிப்பவர்களும் கூட உணரா வண்ணம் அற்புதமாக எடுத்திருப்பார்கள்.) எல்லோரும் அதிர்ச்சியடையும் வண்ணம், போலீஸ் உடையில் மெதுவாக மாடியில் இருந்து இறங்கி வந்து, மகன் ஸ்ரீகாந்தைக் கைது செய்யும்படி அங்கிருக்கும் கான்ஸ்டபிள்களை உத்தரவிடும் கட்டம் அதிரடியாக இருக்கும்! அதைவிட, ஸ்ரீகாந்திடம், அவரை வலையில் விழ வைக்கக் கையாண்ட தந்திரங்களைக் கூறி, மாறு வேடத்தில் வந்த ஒவ்வொரு போலீஸ் காரரையும் அறிமுகப் படுத்தும் கட்டம் மேலும் அதிரடி. ஒரு வகையில், ஸ்ரீகாந்துடன் சேர்ந்து நமக்கும், நடிகர் திலகம் மீது கோபம் வரும்! இருந்தாலும், அந்தப் பாத்திரத்தின் கடமை உணர்ச்சி மெய் சிலிர்க்க வைக்கும்!!
இதற்குப் பிறகு, மனைவிக்கு ஒரு கை, ஒரு கால் செயலிழந்து சக்கர நாற்காலியில் நடமாடும் நிலை வந்தவுடன், அவருக்கு ஆதரவாக ஒரு அன்பான கணவனாக அவருக்குப் பணிவிடை செய்யும் கட்டங்கள்; குறிப்பாக, "சுமைதாங்கி சாய்ந்தால்" பாடலில், அவருக்கு தலை சீவி, பொட்டு வைத்து விடும்போது, பார்க்கும் அத்தனை தாய்மார்களையும் கலங்க வைத்து விடுவார்/ ஏங்க வைத்தும் விடுவார் - இது போல், ஒரு கணவன் இருக்கக் கூடாதா என்று!
பின்னர், அலுவலகத்தில், அவரது உயர் அதிகாரியிடம் (இயக்குனர் கே.விஜயன்) பாராட்டை வாங்கி அந்த மகிழ்ச்சியை அளவோடு வெளிப்படுத்தி; உடனே, மனைவி கே.ஆர்.விஜயா இறந்ததாக செய்தி வந்தவுடன் இலேசாக தடுமாறி உடன் சமாளித்து, அந்தப் போலீஸ் நடையை நடக்கும் கட்டம் (அரங்கம் அதிரும் கட்டமாயிற்றே!)
உடனே, வீட்டிற்கு வந்து, அந்த முண்டா பனியனுடன் (படிக்காத மேதையிலும் இதே முண்டா பனியன் தான் – ஆனாலும் என்னவொரு வித்தியாசம்!) மாடி ஏறி வந்து, மனைவியின் சடலத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்து, மொத்தமாக உடைந்து அழும் கட்டம். (இயக்குனர் மகேந்திரன் அவர்களை மட்டுமல்ல; பார்த்த எல்லோரையுமே கலங்க வைத்த நடிப்பு.)
உடனே, மகன் ஸ்ரீகாந்த்தின் வீட்டிற்க்குச் சென்று, அவரைத் தாயின் சிதைக்குக் கொள்ளி வைக்க அழைத்து, அவரால் அவமானப் படும் கட்டம். தாங்க முடியாத சோகத்தை வெளிப்படுத்தும் விதம் (குடையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டு பின் மெதுவாக வெளியேறும் விதம்!).
"சோதனை மேல் சோதனை" பாடலின் இரண்டாவது சரணம் - மிகச் சரியாக, பிரமீளா அந்தப் புகழ் மிக்க வசனத்தைப் பேசி முடித்தபின் துவங்கும் - "நான் ஆடவில்லையம்மா சதை ஆடுது" என்று கூறிக்கொண்டே தன் இரண்டு கைகளைக் காட்டும் போது - ஒட்டு மொத்த அரங்கமும் அதிரும்.
ஸ்ரீகாந்திடம் வாதிடும் ஒவ்வொரு கட்டமும் தீப்பொறி பறக்கும் கட்டங்கள். குறிப்பாக, பின் பாதியில், “now, let me talk like a policeman”, என்று துவங்கி, கோபத்தை வெளிப்படுத்தும் கட்டம் புகழ் பெற்றது.
கடைசியில், தாய் நாட்டுக்கே துரோகம் செய்யத் துணியும் தன் மகனையே சுட்டுத் தள்ளி விட்டு அவனை மடியில் கிடத்தி "twinkle twinkle little star” என்று கதறும் கட்டம் அதுவும் "Like a diamond in the sky" அதாவது "வானத்தில் வைரமாய் தன் மகன் மின்னுவான்" என்று நினைத்து இப்படி ஆகி விட்டானே என்று கதறும் போது - இதை எழுதும் எனக்கே மயிர்க் கூச்செரிகிறதே, பார்த்த ஒவ்வொருவருக்கும் எப்படி இருந்திருக்கும்? அதுவும் முதல் முறை 1974- இல்).
தங்கப்பதக்கம், வந்தபோதே, தெலுங்கில், "பங்காரு பதக்கம்" என்ற பெயரில், டப்பிங் செய்யப்பட்டு, பெரும் வெற்றி பெற்றது. இருந்தாலும், அந்தக் கதைக்கு இருந்த தாக்கத்தால், என்.டி. ராமா ராவ் அதை மறுபடியும், நேரிடையாக தந்தை மகன் இரண்டு வேடங்களிலும் நடித்து "கொன்ட வீட்டி சிம்ஹம்" என்ற பெயரில் எடுத்து, அதுவும் வெள்ளி விழா வரை ஓடியது. இருந்தாலும், மகன் வேடத்திலும் அவரே நடித்து ஸ்ரீதேவியுடன் டூயட் எல்லாம் பாடி, சில பல பொழுதுபோக்கு அம்சங்களை நுழைத்து அசலைக் கொஞ்சமாக சிதைத்திருந்தார். நடிகர் திலகம் அளவுக்கு, காவல் துறை அதிகாரி பாத்திரத்தில் என்.டி. ராமாராவால் சோபிக்கவும் முடியவில்லை.
ஆனால், தங்கப் பதக்கம் ஹிந்தியில், 1981 -இல், திலீப் குமாரும் அமிதாபும் நடித்து "ஷக்தி" என்ற பெயரில் வெளி வந்த போது, தெலுங்கு அளவிற்கு, வியாபார சமரசங்கள் பெரிதாக செய்யாமல் தான் எடுக்கப் பட்டது. திலீப் குமார், அளவோடு நடித்து பெயர் வாங்கியிருந்தாலும், அப்போது புகழின் உச்சியில் இருந்த அமிதாப் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்ததால், படம் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போனது.
இந்த இரண்டு மொழிகளிலுமே, மகன் ஸ்ரீகாந்த்தின் பாத்திரத்தை தமிழ் அளவுக்கு எதிர்மறையாகத் தராமல், இலேசாக மாற்றியிருந்தனர். தமிழில் மட்டும் எப்படி முடிந்தது? புகழ் அனைத்தும் நடிகர் திலகத்துக்கே சாரும்! இமேஜ் என்ற வட்டத்துக்குள் சிக்கி சுழலாமல், எந்த சூழ்நிலையிலும், எல்லா விதமான பாத்திரங்களையும் ஏற்று நடித்து, வியாபார சமரசங்கள் செய்யாமல், அத்தனை நல்ல படங்களையும் பெரிய அளவில் வெற்றி பெறச் செய்ய முடிந்ததால்! நடிகர் திலகம் என்ற அற்புதக் கலைஞனின் திறமை மேல் அன்றிருந்த விநியோகஸ்தர்கள் முதல் இயக்குனர்கள் வரை அத்தனை பேருக்கும் நம்பிக்கை இருந்ததால்! எந்தவொரு விஷப் பரீட்ஷையையும் நடிகர் திலகம் என்ற ஒரு அட்சய பாத்திரத்தை வைத்து எடுக்கலாம் என்ற நம்பிக்கை இருந்ததால்!! ஒரு புதிய நடிகரைப் போட்டு அவரையும் பெரிய அளவில் நடிக்க வைத்து அதை மக்களும் ஏற்கும் வண்ணம் செய்து, படத்தை வியாபார ரீதியாக வெற்றி பெறச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நடிகர் திலகத்தை வைத்து இருந்ததால்!!! இந்த நம்பிக்கை அவருக்குப் பின் எந்தவொரு நடிகர் மேலும் இது வரை வந்ததில்லை! இனி வரப்போவதுமில்லை!! இதில், ஸ்ரீகாந்த்தின் அருமையான நடிப்பையும் குறிப்பிட வேண்டும். அவரை ஏற்கனவே, மக்கள் நிறைய எதிர்மறையான வேடங்களில் பார்த்து விட்டிருந்ததால், இதில், அவரை அந்தப் பாத்திரத்தில் மக்கள், ஏற்றுக் கொண்டார்கள். தெலுங்கில், அவ்வாறு இன்னொரு நடிகரைப் போட்டு எடுக்க, அப்போதிருந்த, சூழ்நிலை என்டியாருக்கு இடம் கொடுக்க வில்லை. ஹிந்தியில், 1981 -இல், திலீப் குமாருக்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் இல்லை. அதனால், மகன் வேடத்திற்கு, அமிதாபையும் போட்டு, அந்தப் பாத்திரத்தையும் கூடியமட்டும் சிதைத்தும் விட்டிருந்தனர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks