-
12th December 2014, 02:50 PM
#3281
Junior Member
Veteran Hubber
Falling in line with Gopal Sir. Our hearty birthday wishes to Rajinikaanth, an ardent fan of NT, showing his gratitudes in his song lines glorifying NT in movie Vidudhalai!! (பார்த்ததுண்டா வீர சிவாஜியை நேரிலே ) .... நடிகர்திலகத்தின் பெருந்தன்மை மிக்க Screen presence with Rajini (in his VPKB get up with Vishnuvardhan as Jakkamma!!) as a part of his 'செஞ்சோற்றுக் கடன்' to his most loyal producer and contemporary actor K. Baalaajee!!
Last edited by sivajisenthil; 12th December 2014 at 03:00 PM.
-
12th December 2014 02:50 PM
# ADS
Circuit advertisement
-
12th December 2014, 03:01 PM
#3282
Junior Member
Newbie Hubber
நடிகர்திலகம் நடிப்பை வித விதமாக அலசி ஆகி விட்டது. ஆனாலும் புதிது புதிதாக ஏதாவது தோன்றிய படியே இருக்கும். நண்பர் வாசுதேவனுடன் ,இதை பற்றி அடிக்கடி பேசியிருக்கிறோம்.
ஒரு எதிர்பாரா தன்மை ,அல்லது அசைவுகள் அல்லது நடிப்பின் பாணி ,கதாபாத்திரத்தை ஒட்டி அமையும்.
சிறு வயதில் தீபாவளிக்கு ராக்கெட் விட்டிருக்கிறீர்களா?
நாங்கள் பால் வாங்கும் கண்ணாடி குடுவையில் வைப்போம். அதில் வித விதமாக ராக்கெட் தன்னை நிறுத்தி கொள்ளும். சில நேரம் பற்ற வைத்த பிறகும். சில நேரம் எதிர்பார்த்தது போல செங்குத்தாக மேலே. சில நேரம் பக்கத்து வீட்டு ஜன்னல். சில நேரம் ,நம் முகத்திற்கு நேரே . என்று .கிட்டத்தட்ட ,நடிகர்திலகம் இதை போல நமக்கு கடைசி நிமிட ஆச்சர்யம் தந்த படங்களுக்கு குறைவேயில்லை.
ஆரம்ப உதாரணங்கள்--
1)பராசக்தி படத்தில் பாட்டில், கட்டி அழும் போது என்று ஒருவரை கட்டி அழுவது போல பாவித்து, நைஸ் ஆக மூக்கை சிந்தி துடைப்பார்.
2)நிறை குடம் படத்தில் கண்ணொரு பக்கம் பாட்டில் ,மேலே நிற்கும் வாணிஸ்ரீயை அணுக ஒரு படிகட்டு வழியாக போவார் என்று நினைக்கும் போது ஸ்டைல் ஆக திரும்பி,இன்னொரு படிகட்டு வழி மேலேருவார்.
3)அன்னையின் ஆணை படத்தில் கட்டி போட பட்டிருக்கும் ரங்கா ராவ் ,தன்னை அவிழ்த்து விட சொல்லி ,தனிக்கு தனி மோதலாம் என்று சொல்ல ,கைகளை நெட்டி முறிக்கும் போது ,அதை ஏற்பதாக தோன்ற வைக்கும். ஆனால் அம்புகளை ,வேடம் ஏன் துறக்க வேண்டும் என்று கிண்டலாக முடிப்பார்.
4)வசந்த மாளிகை படத்தில் அருகருகே சிவாஜி முன் புறம் திரும்பியிருக்க ,வாணிஸ்ரீ பின் புறம் காட்டி நிற்க ,மயக்கமென்ன பாட்டில் , இடது கையை சிறிதே வளைத்து ,இடையை இழுப்பார்.
5)அதே படத்தில் குடிமகனே பாட்டில், கீழே கிடக்கும் சகுந்தலாவை கை கொடுத்து தூக்கு முன் ஒரு செல்ல உதை காலால்.
இன்னும் எல்லோரும் தனக்கு தெரிந்ததை எழுதுங்கள்.சுவாரச்யமாக்கும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
12th December 2014, 05:15 PM
#3283
I & Rajini lied to Sivaji - KS Ravikumar
('Justice Gopinath' was Rajini’s first film with his most adored actor and the man he calls his 'father in the film industry', Sivaji Ganesan. His proximity to the thespian grew to such an extent that Sivaji began to treat Rajinikanth like one of his sons.)
I & Rajini lied to Sivaji - KS Ravikumar
When he lights his cigarette each time, he remembers the legendary Sivaji Ganesan. KS Ravikumar takes pleasure in remembering those golden days of directing Nadigar Thilagam and Superstar for 'Padayappa'.
Many know that Sivaji Ganesan hated the sheer smell of the cigarette smoke, though he was a chain smoker initially. We have a treasured hush-hush incident that was revealed by KS Ravikumar. Being a devoted actor, Sivaji Ganesan would be on the sets from morning till the pack-up time. As our veteran actor does not like cigarette smoke, it was a tough time to control the craving for many people.
Once it happened that, KS Ravikumar went inside a room where trashes were dumped to take a puff. There he caught another person who came before him, for the same purpose and it was our Superstar. After enjoying the Cigarette both of them came out to resume the shooting; but the whiff of the cigarette did not leave them. Unfortunately Sivaji Ganesan sensed the odour and asked in a rough tone who smoked inside the set. That was enough to make them both feel offensive, but then they instantly turned naughty and blamed the make-up man who stood there. The funniest part here is that the make-up man never smokes.
Well we say, that's not a lie, it's a tactical misrepresentation. What say people?
http://www.indiaglitz.com/i--rajini-...mil-news-48882
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
12th December 2014, 05:30 PM
#3284
Originally Posted by
sivajisenthil
அன்புமிக்க முரளி சார் தங்களின் மேலான பதில் கண்ணுற்றதில் மிக்க மகிழ்ச்சி .
செந்தில்
செந்தில் சார்,
பாரதியின் பிறந்த நாளான நேற்று இளைய சகோதரர் யுகேஷ் பதிவேற்றிய நடிகர் திலகத்தின் புகைப்படம் பற்றி குறிப்பிடும்போது அது நடிகர் திலகம் எட்டயபுரத்தில் நடத்திய பாரதி விழாவாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அது எட்டயபுரத்தில் நடைபெற்ற விழாவின் புகைப்படம் அல்லவென்று அந்த விழாக்களில் கலந்துக் கொண்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த மூத்த ரசிகர் வழக்கறிஞர் திரு நடராஜன் அவர்கள் [விரைவில் இந்த மன்றத்தில் இணையவிருக்கிறார்] என்னை தொடர்பு கொண்டு சொன்னார். அந்தப் புகைப்படம் சென்னையில் நடைபெற்ற விழாவில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தெளிவுபடுத்தியதற்கு நன்றி நடராஜன் சார்!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th December 2014, 05:56 PM
#3285
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th December 2014, 05:59 PM
#3286
Junior Member
Diamond Hubber
கண்ணா நீயும் நானுமா?
வியட்நாம் வீடு சுந்தரத்தின் ‘கெளரவம்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ‘கண்ணா நீயும் நானுமா’ என்ற பாடலைப் பாட வந்த போது.
படத்தின் கதை, அந்தப் பாடலைப் பாடப் போகும் கதாபாத்திரத்தின் குண நலன்கள் மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதாபாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.
அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.
‘இன்னும் ஒரு தடவை போடுங்கள் இன்னும் ஒரு தடவை’ என்று பல தடவை திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.
ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை முடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம், நடிகர் திலகத்தின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
‘ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?
‘சுந்தரம்! டி. எம். எஸ். இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.
பல்லவியில் ஒரு விதமான பாவம் ஆக்ரோஷம்
அடுத்த சரணத்தில் இன்னொரு விதமான தொனி
மற்ற சரணத்தில் இன்னொரு பரிமாணம் என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.
ஒரே வரியையே இரண்டு இடத்தில் ‘ரிபீட்’ பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார்.
உதாரணமாக ‘நீயும் நானுமா?’ என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.
இப்படியெல்லாம்... அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுக்கா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ். என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றாராம் சிவாஜி.
நடிகர் திலகத்தின் செய் தொழில் நேர்த்திக்கும், ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும், தன்னடக்கத்திற்கும், சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் இது ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக்காட்டு.
Courtesy net
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
12th December 2014, 07:52 PM
#3287
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th December 2014, 09:22 PM
#3288
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
Gopal,S.
நடிகர்திலகம் நடிப்பை வித விதமாக அலசி ஆகி விட்டது. ஆனாலும் புதிது புதிதாக ஏதாவது தோன்றிய படியே இருக்கும். நண்பர் வாசுதேவனுடன் ,இதை பற்றி அடிக்கடி பேசியிருக்கிறோம்.
ஒரு எதிர்பாரா தன்மை ,அல்லது அசைவுகள் அல்லது நடிப்பின் பாணி ,கதாபாத்திரத்தை ஒட்டி அமையும்.
சிறு வயதில் தீபாவளிக்கு ராக்கெட் விட்டிருக்கிறீர்களா?
நாங்கள் பால் வாங்கும் கண்ணாடி குடுவையில் வைப்போம். அதில் வித விதமாக ராக்கெட் தன்னை நிறுத்தி கொள்ளும். சில நேரம் பற்ற வைத்த பிறகும். சில நேரம் எதிர்பார்த்தது போல செங்குத்தாக மேலே. சில நேரம் பக்கத்து வீட்டு ஜன்னல். சில நேரம் ,நம் முகத்திற்கு நேரே . என்று .கிட்டத்தட்ட ,நடிகர்திலகம் இதை போல நமக்கு கடைசி நிமிட ஆச்சர்யம் தந்த படங்களுக்கு குறைவேயில்லை.
ஆரம்ப உதாரணங்கள்--
1)பராசக்தி படத்தில் பாட்டில், கட்டி அழும் போது என்று ஒருவரை கட்டி அழுவது போல பாவித்து, நைஸ் ஆக மூக்கை சிந்தி துடைப்பார்.
2)நிறை குடம் படத்தில் கண்ணொரு பக்கம் பாட்டில் ,மேலே நிற்கும் வாணிஸ்ரீயை அணுக ஒரு படிகட்டு வழியாக போவார் என்று நினைக்கும் போது ஸ்டைல் ஆக திரும்பி,இன்னொரு படிகட்டு வழி மேலேருவார்.
3)அன்னையின் ஆணை படத்தில் கட்டி போட பட்டிருக்கும் ரங்கா ராவ் ,தன்னை அவிழ்த்து விட சொல்லி ,தனிக்கு தனி மோதலாம் என்று சொல்ல ,கைகளை நெட்டி முறிக்கும் போது ,அதை ஏற்பதாக தோன்ற வைக்கும். ஆனால் அம்புகளை ,வேடம் ஏன் துறக்க வேண்டும் என்று கிண்டலாக முடிப்பார்.
4)வசந்த மாளிகை படத்தில் அருகருகே சிவாஜி முன் புறம் திரும்பியிருக்க ,வாணிஸ்ரீ பின் புறம் காட்டி நிற்க ,மயக்கமென்ன பாட்டில் , இடது கையை சிறிதே வளைத்து ,இடையை இழுப்பார்.
5)அதே படத்தில் குடிமகனே பாட்டில், கீழே கிடக்கும் சகுந்தலாவை கை கொடுத்து தூக்கு முன் ஒரு செல்ல உதை காலால்.
இன்னும் எல்லோரும் தனக்கு தெரிந்ததை எழுதுங்கள்.சுவாரச்யமாக்கும்.
கோபால்
இதெல்லாம் ஒரு வரியில் எழுதக் கூடியதா என்ன.. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனி ஆய்வேடே எழுத வேண்டுமே..
இருந்தாலும் மேலே தாங்கள் குறிப்பிட்ட வகையும் Definition of Style தலைப்பில் கொண்டு வரலாம் என இருக்கிறேன்.
அடுத்த பதிவில் மேலே தாங்கள் குறிப்பிட்டதில் இன்னும் ஒன்று இடம் பெறுகிறது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th December 2014, 09:37 PM
#3289
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan - Definition of Style - 5
நண்பர் கோபால் குறிப்பிட்டுள்ளவாறு, திடீரென எதிர்பாராத உடல்மொழியில் நம்மை வியப்பில் ஆழ்த்துவதும் ஒரு தனி ஸ்டைல். இதிலும் கூட மேனரிஸம் சற்றும் இருக்காது. அந்தப் பாத்திரத்தின் இயல்பைத் தன்னுடைய நடிப்பில் வெளிக்கொணர்வதற்கு நடிகர் திலகம் பயன்படுத்தும் உத்தியும் இதில் அடங்கும். இதெல்லாம் மற்றவர்களால் சற்றும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. அவருடைய நடிப்பில், பாடல் காட்சியிலோ அல்லது வசனம் பேசும் காட்சியிலோ அல்லது மற்ற காட்சிகளிலோ எதிர்பாராத வகையில் அந்தப் பாத்திரத்தின் குணாதிசயத்தை சித்தரித்து அந்தப் பாத்திரத்தின் வலுவைக் கூட்டுவதும் நடிகர் திலகத்தின் ஸ்டைலாகும்.
நடிகர் திலகத்தின் ஸ்டைல் என்பது அவரால் மட்டுமே முடிந்த ஒன்று. அவரை உள்வாங்கி அவருடைய உடல் மொழியைத் தன்னுள் செலுத்தி தன் நடிப்பில் அதைத் தனக்கே உரிய பாணியில் செயல் படுத்தும் போது அல்லது செயல் படுத்த முடியும் போது நிச்சயம் அந்த நடிகன் வெற்றிக்கு முயற்சி மேற்கொள்ளலாம். ஆனால் இதற்கு மன உறுதி, நடிகர் திலகத்தை நூறு சதவீதம் தனக்குள் உள்வாங்குதல், அதற்கான முயற்சியில் நேர்மை இவையெல்லாம் தேவை.
இந்த அடிப்படையில் பார்த்தால் அவரை முழுதும் உள்வாங்கி தங்களுடைய பாணியில் செயல் படுத்த முயற்சிப்பவர்கள் என திரு ஒய்.ஜி.மகேந்திரா மற்றும் கமலஹாசன் இருவரையும் கூறலாம். மகேந்திரா அவர்களைப் பொறுத்த வரை இந்த உத்தியை நாடகங்களில் பயன்படுத்தி வெற்றியடைகிறார் எனலாம். உதாரணம், வியட்நாம் வீடு மற்றும் பரீட்சைக்கு நேரமாச்சு நாடகங்கள். கமலைப் பொறுத்த வரை இந்த உத்தியைப் பயன்படுத்திய படங்களெல்லாமே அவருக்கு மிகச் சிறந்த புகழை ஈட்டித் தந்துள்ளன. உதாரணங்கள் எண்ணற்றவை. தேவர் மகன், நாயகன், இவையெல்லாம் இந்த உத்தியின் பிரதிபலிப்பே.
இனி நடிகர் திலகத்தின் ஸ்டைல் என்ற பாணிக்கு வருவோம். திடீரென எதிர்பாராமல் அவர் தன் நடிப்பில் கொண்டு வரக்கூடிய நுணுக்கங்கள் அந்தந்த கதாபாத்திரங்களை உச்சாணிக்கொம்பில் கொண்டு நிறுத்துகின்றன. பெரும்பாலானோர் இந்த மாதிரி உதாரணங்களுக்கு வயதான பாத்திரங்களையே உதாரணமாய் சட்டெனச் சொல்லுவர்.
ஆனால் இந்த உத்தியில் அவர் ஒரு காதல் காட்சியில் செய்திருக்கிறார் என்பதும், தனக்குள் இருக்கும் அந்தப் பாத்திரத்தின் தன்மையின் வெளிப்பாட்டைக் கொண்டு வரும் ஆளுமையை வெளிக்காட்ட பயன் படுத்தியிருக்கிறார் என்பதும் வியப்பைத் தருகின்றன.
ஆம். சுமதி என் சுந்தரி பாடலில் வரும் ஒரு தரம் ஒரே தரம் பாடல் காட்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் புதரின் நடுவே வேகமாக நடந்து வரும் அவர் திடீரென நிற்க முற்படுகிறார். நின்று விடுகிறாரா.. இல்லை.. ஒரு காலை சற்றே தரையிலிருந்து மேலே உயர்த்தி கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று விநாடிகள் வரை அப்படியே நின்று கொண்டு மெதுவாக நளினமாக கீழே வைக்கிறார்..
This is where the word "style" is defined in perfect manner.
பாடலைப் பாருங்கள். 1.52லிருந்து 2.00 வரை கவனியங்கள் மேலே சொன்னதை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
12th December 2014, 10:04 PM
#3290
Junior Member
Veteran Hubber
....பாடல் காட்சியிலோ அல்லது வசனம் பேசும் காட்சியிலோ அல்லது மற்ற காட்சிகளிலோ எதிர்பாராத வகையில் அந்தப் பாத்திரத்தின் குணாதிசயத்தை சித்தரித்து அந்தப் பாத்திரத்தின் வலுவைக் கூட்டுவதும் நடிகர் திலகத்தின் ஸ்டைலாகும்.....
by Raghavendar Sir
அன்புள்ள ராகவேந்தர் சார். உங்களது ஸ்டைல் தொடரில் நடிகர்திலகம் அவர்கள் கௌரவம் திரைக்காவியத்தில் ஜெய்குமாரி ஆடிப்பாடும் அதிசய உலகம் காட்சியில் அரங்கத்தின் உள்ளே நுழைவது முதல் பாடல் முடிவது வரை பாரிஸ்டர் கெத்து மாறாமல் காட்டியிருக்கும் Style and Mannerisms alongside body language பற்றி உங்கள் ஸ்டைலில் விவரிப்பதை எதிர்பார்க்கிறேன்
Last edited by sivajisenthil; 12th December 2014 at 11:25 PM.
Bookmarks