Page 325 of 400 FirstFirst ... 225275315323324325326327335375 ... LastLast
Results 3,241 to 3,250 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3241
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெள்ளக்காரதுரை
    விக்ரம்பிரபு நடித்திருக்கும் இப்படத்தில்
    நடிகர்திலகம் எனத் தொடங்கும் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
    பாடல் முழுவதும் நடிகர்திலகத்தின் படங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது
    அவருடைய புகழ் பாடும் பாடலாக
    அமைந்துள்ளது.வேறு எந்த படங்களிலும் ஒரு நடிகரின் இவ்வளவு படப்பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்று தெரியவில்லை

  2. Likes KCSHEKAR, RAGHAVENDRA, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3242
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி
    திரு.SIVVA
    அவர்களுக்குm
    போட்டோ அப்லோட செயவது எப்படி
    என்று குறிப்புகள் கொடுத்தமைக்கு...

  5. #3243
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    Thanks for uploading this rare photograph of NT, Mr. Yukesh.
    Any supporting lines or background information on this occasion....my curiosity rises ..for the benefit of all NT fans.

    regards, senthil
    செந்தில் சார்,

    நடிகர் திலகம் ஒவ்வொரு வருடமும் பாரதி விழாவை எட்டயபுரத்தில் வைத்து சிறப்பாக கொண்டாடுவார். அதற்கு பல கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் கலந்து கொள்வது வழக்கம்.

    இளைய சகோதரர் யுகேஷ் அவர்கள் தரவேற்றியிருக்கும் புகைப்படமும் அப்படி நடத்தப்பட்ட ஒரு விழாவில் எடுத்த படமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். நடிகர் திலகத்துடன் மெல்லிசை மன்னர், டி.எம்.எஸ் மற்றும் சி.சுப்பிரமணியம் ஆகியோர் காட்சியளிக்கும் இந்தப் புகைப்படம் அபூர்வமானதே!

    அன்புடன்

  6. #3244
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    செந்தில் சார்,

    நடிகர் திலகம் ஒவ்வொரு வருடமும் பாரதி விழாவை எட்டயபுரத்தில் வைத்து சிறப்பாக கொண்டாடுவார். அதற்கு பல கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் கலந்து கொள்வது வழக்கம்.

    இளைய சகோதரர் யுகேஷ் அவர்கள் தரவேற்றியிருக்கும் புகைப்படமும் அப்படி நடத்தப்பட்ட ஒரு விழாவில் எடுத்த படமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். நடிகர் திலகத்துடன் மெல்லிசை மன்னர், டி.எம்.எஸ் மற்றும் சி.சுப்பிரமணியம் ஆகியோர் காட்சியளிக்கும் இந்தப் புகைப்படம் அபூர்வமானதே!

    அன்புடன்
    அன்புமிக்க முரளி சார் தங்களின் மேலான பதில் கண்ணுற்றதில் மிக்க மகிழ்ச்சி .
    செந்தில்

  7. #3245
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    nt rises back to view his flamboyant flora !

    நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!


    கதாநாயகரின் கதாநாயகியர்

    மயில்கொன்றை மலர்மாலை 16 மாலினி

    நடிகர்திலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட எல்லா மலர்களும் மணம் வீசும் மலர்களே! எதுவுமே காகிதப் பூக்கள் கிடையாது. அந்த வகையில் தோகை விரித்த மயில் போல ஒயிலாக துள்ளி வரும் ஒருபட ஆச்சர்யமான சபாஷ் மீனா நாயகி மாலினி அவர்கள் மனதை ஈர்க்கும் மயில்கொன்றை மலரே! Our Hearty thanks for this one film wonder adding (peacock) feather to the success cap of NT!

    The Signature song for Maalini from Sabaash Meena!

    காவியங்கள் படைப்பதில் மட்டுமின்றி ஓவியம் தீட்டுவதிலும் தான் மன்னனே என்று மாலினியின் கண்கள் பேசும் சித்திரத்தில் இரண்டு கோடுகள் மட்டும் ஸ்டைலாக போட்டு நிரூபிக்கிறாரோ நடிக மேதை ! சபாஷ் மன்னா!!



    The Significant song for Maalini from Sabaash Meena!!

    மழையில் நனையும் ஆர்வம் நம்மையும் தொற்றிக் கொள்கிறதே...காணா இன்பம் கனியும் போது! நடிகர்திலகத்தின் சற்றே வித்தியாசமான பின்னணிக் குரல் டி ஏ மோதி அவர்கள்



    Last edited by sivajisenthil; 11th December 2014 at 12:47 AM.

  8. Likes KCSHEKAR, kalnayak, Russellmai liked this post
  9. #3246
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நீல வானம்(10/12/1965)

    கோபால்,

    இன்றைய தினம் நீலவானம் தினம். பிரபல காவியப் படங்களுக்கு பொன் விழாவை நினைவில் வைத்து கொண்டாட பல பேர் இருப்பார்கள். ஆனால் அற்புதமான இந்தப் படத்தின் பொன் விழாவை நினைவில் வைத்து அதைப் பற்றிய உரையாடலை துவக்க இந்தப் படத்தின் உண்மையான ரசிகர்களால்தான் முடியும்.

    நீலவானம் பற்றி அண்மையில் நிறையப் பேசினோம். இரண்டு மாதங்களுக்கு முன்னால் நீங்கள் நீலவானம் பற்றிய என பழைய விமர்சனத்தை மீள் பதிவு செய்து ஒரு பதிவிட்டீர்கள். பின்பு filmography திரியில் ராகவேந்தர் சார் நீலவானம பற்றிய செய்திகளை பகிர்ந்திருந்தார். எத்தனை முறை பார்த்தாலும் பேசினாலும் அலுக்காத படம் நீலவானம். மனதிற்கு மிக நெருக்கமான படங்களில் ஒன்று. ஆண்டவன் கட்டளை, நீலவானம், நெஞ்சிருக்கும் வரை மற்றும் இரு மலர்கள் இவையெல்லாம் அலுத்ததே இல்லை. இதில் இரு மலர்கள் தவிர மற்ற மூன்றும் அந்த நூறு நாட்கள் கோட்டை தொட முடியாமல் போனதில் எனக்கு மிக மிக வருத்தம் உண்டு.

    முதல் வெளியீட்டு சமயத்தில் மிகவும் சிறுவன். ஆகவே பார்க்கவில்லை. பின் பலர் சொல்லி சொல்லி அதிலும் குறிப்பாக ஒரு நெருங்கிய நண்பன் படத்தை அவ்வளவு ரசித்து புகழ்வதை கேட்டு மதுரையில் பழங்கால திரையரங்குகளில் ஒன்றான சிட்டி சினிமாவில் ஒரு மதியக் காட்சி பார்த்தேன். அதன் பின் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது.

    என் விமர்சனத்தில் இந்தப் படத்தின் பல்வேறு சிறப்புக் காட்சிகளை அவற்றில் நடிகர் திலகத்தின் நடிப்பை சிலாகித்திருக்கிறேன். இருந்தும் ஒரு சில காட்சிகளை மறக்கவே முடியாது. அதையெல்லாம் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் இயல்பான நகைச்சுவை உணர்வு பல இடங்களில் வெளிப்படுத்தியிருப்பார். பாம்பு வரும் என்று சொன்னவுடன் பயந்து போகும் தேவிகாவிடம் அது பாட்டுக்கு வந்துட்டு போயிடும். ஒண்ணும் செய்யாது என்பது. ஒண்டு குடித்தன அறையில் கூட தங்கியிருக்கும் நண்பன் ISR-யிடம் வேலை கிடைத்து விட்டது மாசம் இவ்வளவு சம்பளம் என்று ஜம்பம் பேசி விட்டு உடைந்த ஈஸிசேரில் மறந்து போய் பந்தாவாக உட்கார்ந்து கிழே விழுவது, நீங்கள் குறிப்பிட்ட குச்சி ஐஸ் கிரீம் காட்சியில் அந்த குழந்தையையிடம் அசடு வழிவது என்று கிளப்பியிருப்பார். முதலிரவு காட்சியில் கூட தேவிகா பிறக்கிற குழந்தைக்கு உங்க அப்பா பெயரை வைக்கணும் அவர் பெயர் என்ன என்று கேட்க பிச்சைக்கண்ணு என்று சொல்லிவிட்டு பெயர் நல்லாயில்லேல? என்று சொல்லும் காட்சி. பின் கிராமத்து பெயர்களாக சொல்லும் அந்த குறும்புத்தனம். பீச்சுக்கு போகணும் சினிமா போகணும் நிறைய கடலை உருண்டை சாப்பிடனும்னு சொன்னவுடன் அந்த முகத்தில் ஒரு reaction காட்டுவார். கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு அதே டயலாக்கை சந்தோஷமாக சொல்ல முயற்சித்து முடியாமல் குமுறுவாரே அந்த கட்டங்களிளெல்லாம் எங்கேயோ போய் விடுவார்.

    ஒ லிட்டில் பிளவர் பாடலும் ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே பாடல் காட்சியும் சரி ஸ்டைல் statements. நமது NT FAnS அமைப்பின் சார்பாக இந்தப் படத்தை திரையிட்டபோது கூட இந்த பாடல் காட்சிகளுக்கு அப்ளாஸ் காதை கிழித்தது.

    உணர்வுப்பூர்வமான காட்சிகள் நாம் சொல்லவே வேண்டாம். வேலை கொடுத்த முதலாளி தன்னிடம் கேட்கும் அந்த வரத்தை கொடுக்க முடியாமல் தவிக்கும் அந்த கட்டம், மனசார காதலித்த பெண்ணை விட்டு விட்டு நிர்பந்தத்தின் காரணமாக மனசு மாறும் அந்த கட்டத்தை வெகு இயல்பாக கையாண்டிருப்பார் நடிகர் திலகம். இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் இது போன்ற கட்டங்களில் நாயகனுக்கு ஒரு சூழ்நிலை நிர்பந்தம் இருக்கும். தங்கையின் திருமணம்,தாயாரின் உடல்நிலை தந்தைக்கு ஒரு பிரச்சனை ஆகவே நாயகன் வேறு வழியின்றி இந்த முடிவு எடுக்கிறான் என்று நியாயப்படுத்துவார்கள். ஆனால் இதில் அது போல் இல்லாமல் தங்களின் உண்மை சூழலை கூறி என் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என கேட்கும் தந்தை அதை மறுக்க முடியாமல் ஏற்றுக் கொள்ளும் நாயகன். என்னை நம்பின பெண்ணுக்கு நான் துரோகம் செய்யற மாதிரி ஆயிடும் என்று சொல்லும்போது பாபு துரோகம்கிற வார்த்தையை நீ நினைச்சா தியாகம்ங்கிற வார்த்தைக்கே அர்த்தமில்லாம போயிடும் என்று சகஸ்ரநாமம் பதில் சொல்லும் இடமெல்லாம் அவ்வளவு இயல்போ இயல்பு.இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    படத்தின் முதல் வெளியீட்டு சமயத்தில் இதற்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்ற குற்ற உணர்வால் தமிழக மக்கள் பின்னாட்களில் இந்தப் படம் எப்போதெல்லாம் மறு வெளியீடுகள் கண்டதோ அப்போதெல்லாம் அமோக வரவேற்பளித்தனர். சென்னை மதுரை கோவை திருச்சி சேலம் நெல்லை என்று அனைத்து ஊர்களிலும் இதே நிலைமைதான். குறிப்பாக சுமார் 20 அல்லது 22 வருடங்களுக்கு முன்பு சென்னை மேகலா திரையரங்கில் நீலவானம் திரையிடப்பட்டபோது 7 நாட்களில் 21 காட்சிகளும் ஹவுஸ் புல். சில வாரங்களுக்கு முன்பு சென்னை மகாலட்சுமியில் விளையாட்டுப் பிள்ளை படத்தை திரையிட்ட JRL movies திரு.ரகுபதி அவர்கள்தான் நீலவானம் படத்தை திரையிட்டார். அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்த அந்த அரிய நிகழ்வை கொண்டாட திருமதி தேவிகா அவர்களை திரையரங்கிற்கு அழைத்து நினைவு பரிசு வழங்கி பெருமைப்படுத்தினார்.

    இப்போதும் நீலவானம் படத்தின் சென்னை உரிமையை கையில் வைத்திருக்கும் திரு ரகுபதி மீண்டும் இந்தப் படத்தை அரங்குகளில் திரையிட முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக ஒரு நல்ல பிரிண்ட்டை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு ஒரு வேண்டுகோளையும் வைத்தேன். நல்ல பிரிண்ட் கிடைத்து மீண்டும் திரையிடும்போது நல்ல ஒரு திரையரங்கில் படத்தை திரையிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். இரு மலர்கள் திரைப்படத்தின் சென்னை உரிமையையும் திரு ரகுபதி அவர்களிடம்தான் இருக்கிறது. என் வேண்டுகோள் இரண்டு படங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதையும் சொல்லியிருக்கிறேன்.

    வேறு ஒரு எழுத்து வேலையில் ஈடுபட்டிருந்த என்னை இழுத்துக் கொண்டு வந்துவிட்டது நீலவானம். அந்த வேலை பாதியில் நின்றாலும் இதை எழுத முடிந்ததில் சந்தோஷமே!

    அன்புடன்

    கோபால், உங்கள் பதிவிற்கு ஒரு சின்ன அலங்காரம் உங்கள் பதிவிற்குள்ளேயே செய்திருக்கிறேன்.

  10. #3247
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks Vasu.

    எனக்கு நடிகர் திலகம் நடிக்கும் போது பக்கத்தில் யார் நின்றாலும் கண்களுக்குத் தெரியாது. ஒரு இருபது முப்பது தரம் நடிகர் திலகத்தின் முகபாவங்களையும், உடல் மொழிகளையும் பார்த்த பின் தான் அடுத்தவர்களுக்கு போனால் போகுது என்று சான்ஸ்.

    'இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று'

    ஆயிரம் கண்களிலும் சுண்ணாம்பா இல்லை வெண்ணையா? நீரே சொல்லும் துரை.

    http://i1087.photobucket.com/albums/...0-2/sivaji.jpg


    நடிகர் திலகத்தின் கோபக்காட்சிகள் பற்றிய தொகுப்பும், வர்ணனையும் கலக்கல். உமக்கு ஒன்றும் எழுதத் தெரியாது... நீர் சிறுவன்... குட்டியூண்டு ரசிகன்... அதை நாங்கள் நம்ப வேண்டும்.... அப்படித்தானே!

    கோபக் காட்சிகள் எழுதும் போதே உமது கோபமும் புரிகிறது.


    கிண்டி விட்டு விட்டீர்.

    நடிகர் திலகத்தின் கோபம் பிற்காலப் படங்களில் பின்னி எடுக்கும்.

    உதாரணத்திற்கு 'நீதிபதி'.

    வில்லன்கள் பேச்சை கேட்டு நீதிபதியை பெயர் சொல்லி 'ஜஸ்டிஸ் ராஜா' என்று அழைக்கும் மருமகன் விஜயகுமார். நீதிபதியின் மகளை வாழாவெட்டியாக்கி வீட்டுக்கு கொண்டு வந்து வாய்க்கு வந்தபடி பேசும் மருமகனுக்கு பதிலடி கொடுக்கும் நீதிபதி நடிகர் திலகம். சும்மா தியேட்டரே கிடுகிடுக்கும் அந்த சிம்மக் குரலில்

    மருமகன் விஜயகுமார் குற்றவாளி ஜகன்நாத்தை நிரபராதி என்று கூறி கோர்ட்டில் தீர்ப்பு கூற வேண்டும் என்று நடிகர் திலகத்திடம் சொல்ல, 'இல்லைன்னா?' என்று நடிகர் திலகம் திரும்பக் கேட்க, 'உங்கள் மகள் (மேனகா) வாழாவெட்டியாகிவிடுவாள்' என்று விஜி பயமுறுத்த, (அப்போது விஜி டர்ன்)

    வருவார் பாருங்கள் கோபத்தோடு. கையில் பைப் வேறு. கேக்கணுமா? மன்னவன் பின்னி விடுவார் பின்னி. (இப்போது சிங்கத்தின் டர்ன்)

    நேரே விஜயகுமாரிடம் வந்து,

    'எய்தவன் எவனோ?... விஷ அம்பா என் நெஞ்சில குத்தற?'

    என்று கர்ஜிக்க ஆரம்பிப்பார். சும்மா வசனம் வீடு கட்டி விளையாடும். கோபமாக பேசிக் கொண்டே வருவார்.

    'என்னைப் படைச்ச ஆண்டவணானாலும் சரி! எனக்கு வேலை கொடுத்த அரசாங்கமா இருந்தாலும் சரி! ரெண்டு பெரும் சேர்ந்து கோர்ட்டுக்கு வந்தாலும் நீதிக்குத்தான் மதிப்பு கொடுப்பேனே தவிர வேற எந்த நாய்க்கும் மதிப்பு கொடுக்க மாட்டான் இந்த ஜஸ்டிஸ் ராஜா"



    அடுத்து பின்னல் நிற்கும் மருமகன் விஜயகுமாரை அழைப்பதை கவனியுங்கள்.

    'ஏய் ரமேஷ்!

    பார்க்காமலேயே பின் பக்கம் வலது கையை உயர்த்தி ஆட்காட்டி விரலால் கூப்பிடுவார். இடது கையில் பைப் புகையும்.

    'என் மகளுடைய புருஷன் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக உன்னை மரியாதையா போகச் சொல்றேன். போடா.. சீ! சீ!... போடா"

    என்று முகத்தில் கோபமும், கடுப்பும், ஆத்திரமும், வேதனையும், விரக்தியும், வேதனையும் ஒன்று கலந்து ஒரு சேர அரை நொடியில் காட்டுவாரே.

    அடப் போங்கப்பா! தலைவர் கோபத்தைப் பத்தி எழுதி கொலை வெறியை ஏத்தி விடறீங்க.
    Last edited by Gopal.s; 11th December 2014 at 07:42 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak liked this post
  12. #3248
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, kalnayak liked this post
  14. #3249
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style - 1

    Style என்கிற வார்த்தை இடத்திற்கு இடம் Contextஐப் பொறுத்து பல்வேறு விதமான Interpretationகளில் அர்த்தம் செய்து கொள்ளப்படுகிறது. சரியாக சொன்னோமானால் BAணி என்பதைக் கொள்ளலாம். ஆனால் நடிப்பைப் பொறுத்தவரையில் நடிகர் திலகம் தனக்கென எந்த ஒரு பாணியும் கடைப்பிடிக்கவில்லை. தொலைக்காட்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் செய்யப்படும் மிமிக்ரியில் நடிகர் திலகத்தைப் போல் செய்ய முயன்று தோல்வி கண்டவர்களே அதிகம். வெற்றி பெற்றோர் ஒருவர் கூட இல்லை என்பதே உண்மை. அதிக பட்சம் அவருடைய குரலை வேண்டுமானால் செய்திருக்கலாம்.

    இவ்வாறு யாராலும் கடைப்பிடிக்க முடியாத ஸ்டைலை செய்ததினால் தான் இன்று வரை அவர் இமயமாய் உயர்ந்திருக்கிறார்.

    அவருடைய உடல் மொழியில் அவர் செய்து காட்டும் ஒய்யாரங்கள் மக்களிடம் மிகப் பெரிய ஈர்ப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அவரைப் போல் உடையலங்காரம், நடை, பார்வை கையசைவு போன்றவை அவருடைய ரசிகர்களால் இன்றளவும் பின்பற்றப்படுகின்றன. இதை மிமிக்ரி என கொச்சையாகக் கொள்ள முடியாது. அவருடைய பாதிப்பின் விளைவே இதைப் போன்ற செய்கைகளில் ரசிகர்களின் ஈடுபாடு.

    இந்த உடல் மொழியில் அவருடைய ஒய்யாரங்களே மக்களிடம் சிவாஜி ஸ்டைல் என்று மிகப் பரவலாக சென்றடைந்து, கலாச்சாரத்தின் இலக்கணமாகவே மாறியுள்ளன என்றால் மிகையில்லை.

    இந்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்திய அவரது ஒய்யாரமான உடல் மொழிகளடங்கிய காட்சிகள், குறிப்பாக பாடல் காட்சிகளை இத்தொடரில் நாம் கண்டு மகிழலாம். ரசிக்கலாம்... மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம்.

    மங்களமான குங்குமத்துடன் துவங்குவோமே...

    அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை எந்தக் காலமானாலும் சரி, இரு கைகளையும் பாக்கெட்டுகளில் நுழைத்து வைத்துக் கொண்டு ஒய்யாரமாய் நடந்து வந்தால் பாருய்யா, சிவாஜியாட்டம் ஸ்டைல் காட்டுகிறார் என்று கமெண்ட் வருவது சகஜம். இந்த ஸ்டைலை அவர் தன் முதல் படத்திலேயே காட்டி விட்டார். என்றாலும் இது மிக மிக பிரபலமானது இந்தப் பாடலுக்குப் பிறகு தான்.
    பருத்திக் காட்டில் பழம் கிடைக்கும் பசி தீரும் என்று எண்ணி... இந்த வரிகளில் அவர் காட்டும் ஸ்டைல் இருக்கிறதே.. இன்றும் தியேட்டர் இரண்டு படும் அளவிற்கு அளப்பரை எழும். ஸ்டைல் என்றால் சிவாஜி என்பதற்கு இன்னொரு உதாரணமாய்த் திகழும் இப்பாடலை என்றும் ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பார்கள்..
    சூப்பர் ஸ்டைல் மன்னன். நடையைப் பாருங்களேன்.. கண்ணடிப்பதும் தலையை ஒய்யாரமாய் ஆட்டி வருவதும்..
    வர்ணித்துக் கொண்டே இருக்கலாம்.. பார்த்து மகிழுங்கள்..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. #3250
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style - 2

    ஸ்டைல்.. இது உருவத்தில் மட்டுமல்ல... உடல் மொழியில் மட்டுமல்ல. தன் குரலிலும் கூடகொண்டு வர முடியும் என்பதற்கு ஒரு சான்று.. இப்பாடல் காட்சிக்கு முன் வரும் உரையாடலைக் கேளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள்.. கேட்கும் போதே மனம் நெகிழும் காதல் உணர்வு... இதுவும் யாராலும் இமிடேட் செய்ய முடியாத அசல் ஸ்டைல்... அந்த முகத்திலுள்ள வசீகரம்... அந்த முகத்திற்கு ஈடு செய்யும் அந்த நாயகியின் Reciprocation...அந்த உடையலங்காரம் அந்த சூழலை மிகவும் தத்ரூபமாக பிரதிபலிப்பதும் ஒரு ஸ்டைல் தான்.. The body language is reflective of the inner self...இரு கைகளையும் இருபுறமும் விரித்து அனாயாசமாக அந்த சூழலை அனுபவித்து ஒரு காதலின் மனோநிலையை அருமையாக பிரதிபலிக்கும் இந்த ஸ்டைல்.. காதலர்களின் அடையாளச் சின்னமாக இப்பாடலை காட்டுகின்றன.

    ஆஹா... எங்கள் தேவிகா அண்ணிக்குப் பிறகு ரசிகர்களின் நெஞ்சில் கூடாரம் போட்டு அமர்ந்து மற்றவர்கள் அனைவரையும் துரத்தியடித்து விட்ட நாயகி வாணிஸ்ரீ..

    அது என்னமோ சிவாஜி வாணி என்றாலே எனக்கு முதலில் பிடித்தது சிவகாமியின் செல்வன் தான்.. மாளிகை அப்புறம் தான்..

    போதும் போதும் என்கிறீர்களா..

    பார்த்து மகிழுங்கள் பாடல் முழுதும் ஸ்டைலின் இலக்கணத்தை..



    முக்கியமான பின்குறிப்பு..

    வழக்கமான ஸ்டைலான நடை பற்றி நாம் சிலாகித்து எழுதக் கூடிய பாடல்களுக்கான தொடரல்ல இது ... நடிகர் திலகத்தின் நடிப்பில் அமைந்துள்ள பல்வேறு பாத்திரங்கள் அவற்றின் குணாதிசயங்கள் அவற்றில் அவர் பிரயோகித்துள்ள ஸ்டைலையே இது குறிக்க உள்ளது. எனவே பாப்புலரான பாடல்களை அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •