தாங்கள் புதிதாக துவங்கியிருக்கும் பாடல் திரி ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. சற்றே மறந்திருந்த அருமையான பாடல்களை மீண்டும் நினைவூட்டி புத்துணர்வு பெற வைக்கிறது.
நல்ல துவக்கம். தொடர்ந்து பயணித்து திரி பெரிய வெற்றிகளை ஈட்ட வாழ்த்துக்கள். பாடல் வீடியோவை வெறுமனே தராமல் அழகிய முன்னுரை மற்றும் காட்சியமைப்பு, பாடல் வரிகள் என்று தந்து அசத்துவது தங்களுக்கு கைவந்த கலை. ஒரு சகோதரி கேட்டார் என்பதற்காக சூரியகாந்தி பாடலைப் பற்றி அத்தனை விவரங்களையும் காணொளியோடு தந்து, அவர் பொருட்டு எங்களையும் பார்த்து ரசிக்க வைத்து விட்டீர்கள்.
அதே போல் தொட்டதெல்லாம் பொன்னாகும் திரைபடத்தில்
இன்னொரு பாடல் பாலா சுசீலா combination விஜய பாஸ்கர் மியூசிக்
ஜெய் ஜெயசித்ரா ஜோடி
பாடல் தான் யார் என்று தெரியவில்லை
இந்த கால கட்டத்தில் நிறைய பாடல் பஞ்சு அருணாசலம் எழுதினர் என்று கேள்வி
"பனி மழை மேகங்கள் பொழிகின்ற குளிரினால் திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புது குரல் or குறள் கொடுக்கட்டுமா "
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா கெட்டது
டியர் கிருஷ்ணாஜி,
தேனில் நனைத்த பலாச்சுளை இந்தப்பாடல். என்னவொரு மனதை வருடும் மேலோடி. எப்போது கேட்டாலும் கிறங்கடிக்கும் பாடல். வாலி எழுதினாரென்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை.
எம்.எஸ்.வி., கே.வி.எம்., இளையராஜா ஆகிய சுனாமிகளில் சிக்கி சங்கர்-கணேஷ், வி.குமார், விஜயபாஸ்கர் போன்றோரின் நல்ல படைப்புக்கள் காணாமல் போயிருந்தன.
நல்லவேளையாக தொலைக்காட்சிகளில் பழைய பாடல்கள் ஒளிபரப்ப துவங்கியதால் இதுபோன்ற அற்புத படைப்புக்கள் வெளிச்சத்தைக் காண்கின்றன.
எவ்வளவு அருமையான பாடல்களையெல்லாம் நினைவு கூர்ந்து வருகிறீர்கள். பாராட்டுக்கள் கிருஷ்ணாஜி.
நன்றியுரைக்க சற்று தாமதமாகி விட்டது. நான் சற்றும் எதிர்பாராதவகையில் என் அபிமானப் பாடகியின் 'மிஸ்டர் சம்பத்' பாடலான 'அன்பான ரசிகர் என்னோடு இருக்க... எந்நாளும் நான் ஒரு மகராணி' பாடலை அளித்து ஒருவழி பண்ணி விட்டீர்கள். ஆஹா! என்ன ஒரு டேஸ்ட் சார் உங்களுக்கும், கிருஷ்ணா சாருக்கும். இந்த மாதிரிப் பாடல்களையெல்லாம் நான் மட்டுமே ரசிக்க முடியும் என்ற மமதை கூட என்னிடம் குடிகொண்டிருந்தது. அதையெல்லாம் நீங்களும், கிருஷ்ணா சாரும், சுக்ரவதநீ அன்பர்களும் உடைத்து தூள்தூளாக்கி விட்டீர்கள். அதில் எனக்கு மிகப் பெருமையே! என்ன மாதிரி ரசிகர்கள்! எப்படிப்பட்ட ஞாபக சக்தி! என்ன ஒரு ரசனை! நீங்கள், வினோத் சார், கிருஷ்ணா சார், கார்த்திக் சார், ரவி சார், ஸ்டெல்லா அவர்கள் மற்றும் கோபால் சார் அனைவரும் புகுந்து விளையாட திரி களை கட்டி விட்டது. நிஜமாகவே மனதில் சந்தோஷ ஊற்று பெருக்கெடுத்து ஓடுகிறது. கிருஷ்ணா சார் அலைபேசியில் தொடர்பு கொண்டு இத்திரியைப் பற்றி பேசி மகிழ்ந்ததை மறக்க முடியாது. அவருக்கும் என் நன்றி!
அருமை கார்த்திக் சார் வேறு வந்து விட்டார். நீங்களும், கார்த்திக் சாரும் இருக்க இனி கொஞ்ச நஞ்சம் இருந்த பயமும் தீர்ந்து விட்டது. இனி பாடல்கள், படங்கள் சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்கள் திரியில் அணிவகுத்து வரப்போகின்றன. மகிழ்ச்சிகரமான துவக்கம்.
கோபால் வேறு அவர் பாணியில் பின்னி எடுப்பதாகக் கூறியிருக்கிறார்.
புதிய அங்கத்தினரான ஸ்டெல்லா அவர்கள் பழைய பாடல்கள், படங்கள் பற்றி தெரிந்து கொள்வதில் வெகு ஆர்வமாய் இருக்கிறார். அவருக்கும் என் நன்றி!
நமது இந்தத் திரி ஜாம்பவான்களின் துணையினால் சரித்திரம் படைக்கப் போவது உறுதி.
சார்,
'மிஸ்டர் சம்பத்' பற்றி, அப்படத்தின் பலாச்சுளை பாடல்கள் பற்றி விரிவாக எழுத ஆசை. அதற்குள் கார்த்திக் சார் முந்திக் கொண்டு விடுவார் என்று நினைக்கிறேன்..... முந்திக் கொள்ள வேண்டும்... அதை விட வேறு என்ன இன்பம் இருக்கப் போகிறது நமக்கு? நேற்று 'கண்ணம்மா' படிக்க வைத்து, பின் படத்தையும் பார்க்க வைத்து தூக்கத்தை தொலைக்க வைத்தவராயிற்றே பல திரையுலக விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் இந்த அதிசய மனிதர் கார்த்திக்!
Last edited by vasudevan31355; 10th June 2014 at 03:17 PM.
வருக! வருக! என்று தங்களை இதயம் நிறைந்த மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். நீங்கள் இத்திரிக்கு வந்து பங்களிப்பது யானை பலம் கிடைத்தது போல எங்களுக்கு.
யானையின் பலம் எதிலே
நம்பிக்கையிலே
திரியோட பலம் எதிலே
(கார்திக்)திறமைசாலிகளிடத்தே
நடிகர் திலகம் மற்றும் அவர் படங்கள் பற்றிய விவரங்களா...
தியேட்டர் அனுபவங்களா..
தியேட்டர்கள் விவரங்களா...
படங்கள் ஓடிய நாட்களின் புள்ளிவிவரங்களா...
நடிகர் நடிகைகளுடனான நேரிடை அனுபவங்களா...
பழையபாடல்களா... அது பற்றிய விவரங்களா...
படங்களின் விமர்சனங்களா...
முத்துராமனா, ஜெய்சங்கரா, ரவிச்சந்திரனா, வேறு நடிகர்களா... அவர்களைப் பற்றிய விவரங்களா...
நடிகைகளைப் பற்றிய பல்வேறு சுவையான விஷயங்களா....
கூப்பிடுங்கள் எங்கள் கார்த்திக்கை.
என்று பெருமைபிடிபட நாங்கள் அழைக்கத் தகுதியானவர் தாங்கள் அல்லவோ!
தாங்கள் இத்திரியில் பங்களிக்க வந்தது எங்கள் பாக்கியமே!
இனி தர வேண்டிய பொறுப்பு தங்களுடையது
அதைப் பெற்று பேரின்பமடைய வேண்டிய வேலை எங்களுடையது.
'கண்ணம்மா'வை படைத்து கன்னம் வைத்த கள்வரே!
இனி உங்கள் பாடு.
கலக்குங்கள்.
நன்றி கலந்த மகிழ்ச்சியுடன்
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 10th June 2014 at 03:47 PM.
டியர் வாசு சார்
நீங்கள் சொன்னது போல் பெரிய பெரிய திமிங்கலங்கள் முன்னிலையில்
விஜயபாஸ்கர் போன்ற சின்ன மீன்கள் காணமல் தான் போவர்கள்
அதில் சந்தேகமே இல்லை
முரசு sunlife இரண்டும் சில நல்ல நல்ல பாடல்களை ஒளிபரப்பி கொண்டு இருக்கிறார்கள்
சமீபத்தில் "mayor மீனாக்ஷி" படத்தில் இருந்து "கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் (accordinan இசை )
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகள் மணமகன் மணவறை கோலமே " பாட்டை கேட்டேன்
கே.ர.விஜய புடவை கட்டு சூப்பர் அதை விட ஜெயின் ஹேர் ஸ்டைல்
சூப்பர் சூப்பர்
என்ன கொஞ்சம் விஜயா உடம்பு பூசின உடம்பு ஜெயக்கு அக்கா மாதிரி இருக்கிறார்
beautiful மெலடி .அண்ட் யூத்புல் சாங்
அந்த படம் ரொம்ப நாள் ஆக மியூசிக் ஷங்கர் கணேஷ் அல்லது வ.குமார் என்று நினைத்து கொண்டு இருந்தேன் பிறகுதான் தெரிந்தது விச்சு என்று .
பாலா என்ன ஒரு இளமையான் குரல்
"நான் கண்ணாடி பார்த்தால் என்ன "
"அதை கன்னத்தில் பார்த்தால் என்ன"
"நெஞ்சத்தை பார்த்தால் என்ன"
"அதை மஞ்சத்தில் பார்த்தால் என்ன"
பாட்டு பூராவும் அக்கார்டியன் இசை குற்றால சாரல் ஆக தவழும்
டியர் வாசு சார்
நீங்கள் சொன்னது போல் பெரிய பெரிய திமிங்கலங்கள் முன்னிலையில்
விஜயபாஸ்கர் போன்ற சின்ன மீன்கள் காணமல் தான் போவர்கள்
அதில் சந்தேகமே இல்லை
முரசு sunlife இரண்டும் சில நல்ல நல்ல பாடல்களை ஒளிபரப்பி கொண்டு இருக்கிறார்கள்
சமீபத்தில் "mayor மீனாக்ஷி" படத்தில் இருந்து "கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் (accordinan இசை )
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகள் மணமகன் மணவறை கோலமே " பாட்டை கேட்டேன்
கே.ர.விஜய புடவை கட்டு சூப்பர் அதை விட ஜெயின் ஹேர் ஸ்டைல்
சூப்பர் சூப்பர்
என்ன கொஞ்சம் விஜயா உடம்பு பூசின உடம்பு ஜெயக்கு அக்கா மாதிரி இருக்கிறார்
beautiful மெலடி .அண்ட் யூத்புல் சாங்
அந்த படம் ரொம்ப நாள் ஆக மியூசிக் ஷங்கர் கணேஷ் அல்லது வ.குமார் என்று நினைத்து கொண்டு இருந்தேன் பிறகுதான் தெரிந்தது விச்சு என்று .
பாலா என்ன ஒரு இளமையான் குரல்
"நான் கண்ணாடி பார்த்தால் என்ன "
"அதை கன்னத்தில் பார்த்தால் என்ன"
"நெஞ்சத்தை பார்த்தால் என்ன"
"அதை மஞ்சத்தில் பார்த்தால் என்ன"
பாட்டு பூராவும் அக்கார்டியன் இசை குற்றால சாரல் ஆக தவழும்
In Mr. Sampath, one duet by SPB and S. Janaki - Poonkodiyae Poonkodiyae Poo irundhaal tharuvaayo" is a good duet.
Regards,
R. Parthasarathy
பார்த்தசாரதி சார்
வாருங்கள். நீங்கள் குறிப்பிட்ட 'பூங்கொடியே... பூங்கொடியே' பாடல் 'ஸ்கூல் மாஸ்டர்' படத்தில் ஒலிப்பது. 'மிஸ்டர் சம்பத்தில் 'ஆரம்பம் யாரிடம் உன்னிடம்தான்' பாடல் பாலாவும், சுசீலாவும் தூள் கிளப்புவது.
Last edited by vasudevan31355; 10th June 2014 at 05:08 PM.
1976-இல் இந்தப் படம் வரும் போது எனக்கு வயது 15. ஆனால் அப்போது இப்படத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் 'கண்டேன், கல்யாணப் பெண் போன்ற மேகம்' பாடலென்றால் அப்படி ஒரு பைத்தியம்.
என் வாய் அப்போதும் சரி இப்போதும் சரி இப்பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்.
ஆனால் படத்தில் இந்தப் பாடல் யாருக்கு என்று தெரியாமலேயே இருந்தது. மிக கிளாஸான ஒரு பாடல். பாலா, சுசீலா அம்மா இருவரும் சேர்ந்து கொடுத்த ஹிட்ஸ் எண்ணிலடங்காது. அதில் இப்பாடல் ஒரு மணிமகுடம் என்றே சொல்லுவேன் இல்லை இல்லை சொல்லுவோம்.
இப்பாடலின் இரண்டாவது சரணத்தை பலர் கேட்டோ அறிந்தோ இருக்க அதிகம் வாய்ப்பில்லை. அதை இப்போது தருகிறேன்
இதழின் மீதாக வளையும் வண்ணங்கள் இளமைப் பூப்பந்தலோ
இலையும் மூடாமல் தலையும் வாராமல் அசையும் பொன்பூக்களோ
நடையில் அன்னங்கள் அடையும் இல்லங்கள் இடையில் வைத்தார்களோ
நளினப் பொன்மேனி சுவையைப் பாரென்று உனக்கே தந்தார்களோ
சுகம் ஒன்றாக வைத்தார்களோ
நம்மை ஒன்றாக்க வைத்தார்களோ
கண் பார்க்க வைத்தார்களோ
உன்னை பெண் பார்க்க வைத்தார்களோ
இந்தப் பாடலை படத்தில் இளம் நாயகன் நாயகிக்கு தந்திருப்பார்கள் (அதாவது விஜயகுமாருக்கும், ஸ்ரீபிரியாவிற்கும் அதுவும் விதவிதமான மாடர்ன் டிரெஸ்சில் ) என்று மனதிலேயே ஒரு கற்பனை வளர்த்து வைத்திருந்தேன். நல்ல ஆக்டிவான பாடல் வேறு அல்லவா! ஆனால் அவர்களுக்கு எதிர்பாராத விதமாக 'திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி' வாய்த்தது.
படத்தை பார்க்கும் சந்தர்ப்பமும் உடனடியாக ஏற்படவில்லை.
பின்னாட்களில் தொலைக்காட்சியில் இப்பாடலின் காட்சியைக் கண்ட போது எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. ஜெய்சங்கரும், கே.ஆர். விஜயாவும் இந்த டூயட்டிற்கு ஆடிப் பாடியபோது என் கற்பனைக் கோட்டை சிதைந்தது.
குப்பத்து விஜயாவும், குடிகாரன் வேடம் ஏற்ற ஜெய்யும் ஏனோதானோவென்று ஆடிப் பாடி நடித்து இப்பாடலை வதம் செய்து விட்டார்கள்.
நீங்கள் சொன்னது போல் வரிசைப் பல்முத்து இருந்தும் பருத்த விஜயா பார்க்க முடியாதபடி இருந்தார். ('நல்ல நேரத்'தில் எத்தனை யானைகள்? என்ற கேள்விதான் நினைவுக்கு வரும்) விஜயா சேலையை வாயில் கடித்து முறுக்கும்போது ஆரம்பிக்கும் அகார்டியன் ஓசை எம்.எஸ்.வியின் ஆத்திரம் தீர்ந்தபின்தான் அடங்கும்.
ரெக்கார்டிங் முழுதும் அகார்டியன்தான் போல. (மனிதர் பின்னியெடுத்து விடுவார்)
(நீங்கள் விஜயாவின் சேலைக்கட்டு பற்றி வேறு கூறி மீண்டும் இப்பாடலைப் பார்க்க வைத்து விட்டீர்கள். ம்ம் பிடியுங்கள் சாபம்) எம்.எஸ். வியின் உழைப்பு அபாரம். குதூகலமான உற்சாகக் குரலில் பாலா என்ற ஆண் குயிலும், சுசீலா என்ற பெண் குயிலும் இனிமையான இப்பாடலைப் பாட, இப்பாடல் ஜென்மத்திற்கும் மறக்க முடியாத பாடலாகிப் போனது உண்மைதான்.
இப்பாடல் மட்டுமா?...
குடிகார ஜெயய்யைத் திருத்த விஜயா அக்கா வாணியின் குரலில் (எல்லாத்துக்கும் இந்த கிருஷ்ணா சார்தான் காரணம்) பாடும் 'இருந்தா நல்லா இரு....('அடச் சீ... கம்முன்னு கெட' என்கிறீர்களா) அட்வைஸ் பாடலில்
ஜெய்க்கு குரல் தரும் விஸ்வரூப விஸ்வநாதன்
நிறைய தண்ணி போட்ட போதும்
நி தானம் மட்டும் மாறாது
நெருப்புப் பெட்டி எங்கே வச்சேன்?
அதுதான் கொஞ்சம் புரியாது
(நிதானம் தவறாத இந்த நல்ல குடிகாரர் பீடிக்கு நெருப்புப் பொட்டியை அணிந்திருக்கும் உடையில் மறந்து வைத்து விட்டுத் தேடுவாராம். என்ன சுவையான கற்பனை!)
என்று பீடி குடிக்க நெருப்புப் பெட்டி தேடியபடி (அதில் இயலாமையை மறைக்கும் சிரிப்பு வேற) கேட்கும் அழகை என்னத்தத் சொல்ல!
வாசு சார் உங்களை போல் நானும் இந்த படத்தை முதல் ரிலீஸ் பார்க்காமல் பாட்டை மட்டும் சிலோன் ரேடியோவில் கேட்டு மகிழ்ந்து கொண்டு இருந்தேன் படம் rerelease கூட கிடையாது ஒரு தடவை பொதிகை டிவியில் (அப்போது அதற்கு பெயர் பொதிகை என்று கிடையாது ) ஒலியும் ஒளியில் பார்த்து வெறுத்து விட்டேன் . விஜயகுமார் ஸ்ரீப்ரிய combination "திரு முருகன் அருகினிலே வள்ளி குறத்தி" excellant .
நீங்கள் சொன்ன இரண்டாவது சரணம் கேட்டதே இல்லை. என்கிட்டே இந்த பாட்டுM P 3 downloading செய்ததில் நீங்கள் சொன்ன சரணம் இல்லை
வாசு சார் இந்த நகைச்சுவை எங்கே கற்று கொண்டீர்கள்
உங்கள் ப்ளாக் படிக்க எவ்வளுவு நேரம் வேனும்னாலும் காத்து கிடக்கலாம் சுயம்பு (குசும்பு) யா நீங்கள்
Bookmarks