-
17th June 2014, 04:29 PM
#431
கார்த்திக் சார்
நீங்கள் சொன்னது போல் முரசு மற்றும் சன் லைப் இரண்டுமே
4 அல்லது 5 cd களை வைத்து கொண்டு பஜனை செய்து கொண்டு இருக்கிறார்கள் . உண்மையில் பாடல்களில் இண்டரெஸ்ட் உள்ளர்வர்கள் யாரவது விடியோ ஜாக்கி ஆகவோ அல்லது நிகழ்ச்சி தொகுப்பளராகவோ
வந்தால் தான் ரசிக்கும் போல் இருக்கும்
-
17th June 2014 04:29 PM
# ADS
Circuit advertisement
-
17th June 2014, 04:43 PM
#432
எங்கம்மா மகாராணி என்று ஒரு மொக்கை படம்
டைரக்டர் m a காஜா என்று நினவு
விஜய் பாபு,ரூபா நடித்து இருப்பார்கள்
ஷங்கர் கணேஷ் மியூசிக்
"மாலையில் பூத்த மல்லிகை பூக்களே "
பாலா வாணியின் சந்தோஷ குரலை இந்த பாடலில் காணலாம்
violin இசை interlude ஆக வரும்
-
17th June 2014, 05:30 PM
#433
Senior Member
Senior Hubber
க்ருஷ்ணா சார்..ஏண்டி முத்தம்மா பாட்டு.. பைரவி தேவிதியேட்டர் பொங்கல் என நினைவு.. அந்தப் பாட்டில் அப்போதுகேட்ட வரி இன்னும் நினைவில்.. சுடச் சுடக் காளைப் பசு மேயலாமா.. ஹையாங்க்..இன்னும் எனக்கு அர்த்தம் புரியலை
-
17th June 2014, 06:15 PM
#434
Senior Member
Seasoned Hubber
அம்மம்மா ... என்ன வேகம் .... யாருக்கு பதில் சொல்றதுன்னு தெரியலியே..
எல்லோருக்கும் பொதுவாக பாராட்டுக்கள்...
நீங்கள் எல்லோருமே இந்தப் பாட்டைக் கேட்டு விட்டு இந்த பல்லவியைப் பாடுவீர்கள் என்று நிச்சயம் எனக்குத் தெரியும்..
என்னதான் சொல்லுங்கள்.. மெல்லிசை மன்னரின் இசையே தனிதான்...
என்ன நான் சொல்லுறது..
இதைத் தான் ரொம்ப ரசிச்சேன்... எங்க ஊர் கண்ணகி...
http://www.inbaminge.com/t/e/Enga%20Oor%20Kannagi/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th June 2014, 06:24 PM
#435
Senior Member
Seasoned Hubber
1970களின் இறுதியில்தொடங்கப் பட்டு 80ல் வெளிவந்த பம்பாய் மெயில் 109 படத்தின் இந்தப் பாடல் காலம் காலமாக என்னைக் கட்டி வைத்த பாடல். சுசீலாவின் குரலில் மெய் மறக்கச் செய்யும் பாடல். முன்னொரு முறை ரவிச்சந்திரனுக்கான திரியில் பகிரந்து கொள்ளப் பட்டுள்ளது. வித்தியாசமான தாளக் கட்டில் பாங்கோஸ் அமர்க்களமாக உடன் வர வயலின் புல்லாங்குழல் என இசைக் கருவிகள் நம்மைக் கட்டிப் போட...
கட்டுவேன் பாட்டில் உன்னை என்று மெல்லிசை மன்னர் சொன்ன பாடல்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th June 2014, 07:13 PM
#436
Senior Member
Veteran Hubber
பம்பாய் மெயில் பாடலில் ரவிச்சந்திரன் சங்கீதா ஜோடியைப்பார்த்ததும், ஜெய்சங்கர் சங்கீதா நடித்த 'நெஞ்சுக்கு நீதி' நினைவுக்கு வந்து விட்டது. இதுவும் அலங்காரில் காலைக்காட்சியில்தான். (நண்பகல் காட்சியில் ரஜினியின் பிரியா ஓடிக்கொண்டிருந்தது).
சங்கர் கணேஷின் இசையில் "சோழனின் மகளே வா.. சுந்தரத்தமிழே வா" என்ற பாடலில் ஜெய்யும் சங்கீதாவும் ராஜாராணி உடையில். டி.எம்.எஸ். - வாணிஜெயராம். 'இது நீரிலாடும் மீனும் இல்லையே' வரியில் வாணி கொஞ்சுவார்.
இன்னொன்று கட்சிப்பாட்டு. எல்லோருக்கும் பிடிக்காது.
-
17th June 2014, 07:37 PM
#437
வேந்தர் சார்
நீங்கள் வந்தால் தான் சபை களை கட்டுகிறது
கார்த்திக் சார் சொன்னது போல் சங்கீதா ஜெய் ஜோடி, சங்கீதா ரவி ஜோடி,
சங்கீதா ரஜினி ஜோடி, சங்கீதா கமல் ஜோடி என்று ஒரு ரவுண்டு சங்கீதா வந்தார்கள் . ஆனால் பிற்காலத்தில் ராஜேந்தர் படத்தில் அவர்களை வில்லியாக பார்க்கும் போது சற்று மனம் கஷ்டப்பட்டது
எங்க ஊர் கண்ணகி பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சார்
"இதை இதை தான் எதிர்பார்த்தேன் உங்களிடம் இருந்து "
-
17th June 2014, 07:51 PM
#438
1979 கால கட்டத்தில் மகாலட்சுமி என்று ஒரு திரைப்படம் நினவு
ஜெய் சங்கீதா ஜோடி பட்டாபிராமன் direction விச்சு மியூசிக்
சுசீலாவின் ஒரு சாங் உண்டு சார்
"ஆகாய குளத்தில் தாமரை மலரும் காலையிலே அதிகாலையிலே"
இந்த படம் ஒரு ஹிட் தெலுகு படத்தின் தமிழ் ரீமேக்
"முத்தியால முக்கு " என்று நினவு
-
18th June 2014, 05:26 AM
#439
Junior Member
Newbie Hubber
பாகேஸ்வரி(பாகேஸ்ரீ?)
எனக்கு சிறு வயதில் ஒரு obsession உண்டு.(இன்றும்).நான் விரும்பும் பொருளையோ,ரசிக்கும் விஷயங்களையோ,நண்பிகளையோ இன்னொருவர் விரும்பினாலே பொத்து கொண்டு வரும்.அந்த ஒரு குறிப்பிட்ட பாடலில் எனக்கு அப்படி ஒரு மோகம். அந்த பாடலில் வேறு ஒருவன் துர்பாக்ய நிலையை உணர்த்த அதிகபட்சமாய் நிகழ்ந்திருக்க கூடிய சாத்திய கூறு ஒன்று அழகாக வரைய பட்டிருக்கும்.அந்த வைர வரிகள் "அமைதியில்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் எனையே படைத்து விட்டான்". இந்த பாடல் என்னவோ எனக்கே சொந்தம் என்று நினைத்து கொண்டாடி கொண்டிருந்தேன், இன்று எந்த டி.வீ யை பார்த்தாலும் தெரிகிறது தமிழ்நாடே இன்றும் கொண்டாடி களிக்கும் பாடல் என்று.
என் மகன் ஒரு பாடலை கேட்டு பாடகருக்கு ரசிகனாகி ,எனக்கு அவரை தெரியும் என்று கண்டு,சென்னை வரும் போது நேரம் ஒதுக்கி என்னை கூட்டி அவரை பார்க்க ,அப்போது இடி படாத உட்லண்ட்ஸ் drive -in சென்றோம். பீ.பீ.எஸ் அவர்களை கண்டு சுமார் இரு மணிநேர அரட்டை.12 வயது பையனிடம் அந்த 80 வயது மனிதர் பேசிய குதூகல பேச்சு. (நிலவே என்னிடம் நெருங்காதே)
பாக்யஸ்ரீ ராகத்தில் அமைந்த இப்பாடல் "ராமு" ராகம் என்றே குறிக்க படுவதாக எம்.எஸ்.வீ என்னிடம் குறிப்பிட்டார்.எல்லாமே சரியாக அமைந்த classic இன்று வரை தமிழறிந்த எந்த குடிமகன் எந்த வயதில் இருந்தாலும் ஈர்ப்பதில் அதிசயம் என்ன? இந்த ராகம் உங்கள் மனதில் உங்களாலேயே அறிய படாத இடத்தை போய் நிரப்பி ,வருடும் சுகத்தை வார்த்தைகளில் வர்ணிக்க இயலுமா?
இந்த ராகத்தில் அமைந்த மற்ற பாடல்கள்.
காணா இன்பம் கனிந்ததேனோ?- சபாஷ் மீனா.
கலையே என் வாழ்க்கையை திசை மாற்றினாய்-மீண்ட சொர்க்கம்.
பொன்னெழில் பூத்தது புது வானில்- கலங்கரை விளக்கம்.
மழை வருது மழை வருது- ராஜா கைய வச்சா
Last edited by Gopal.s; 5th July 2014 at 08:45 AM.
-
18th June 2014, 06:12 AM
#440
Junior Member
Platinum Hubber
போலீஸ்காரன் மகள் படத்தில் இடம் பெற்ற நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - இந்த பாடலில் பாடகரின் இனிய குரலும் மெல்லிசைமன்னர்களின் இசையும் பாடலில் நடித்த பாலாஜி - புஷப்லதா நடிப்பும் ரசிகர்களின் உள்ளங்களை
கொள்ளை கொண்ட மதுர கானமாகும் .
Bookmarks